இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சனாதனத்தை அவதூறாக பேசி வரும் அமைச்சர். சேகர்பாபுவை கண்டித்து மதுரையில் பாஜக., மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் அமைச்சர் சேகர்பாபு உதயநிதி ஆகியோர் பதவி விலகk கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த போது, கைது செய்யப்பட்டனர். சனாதனத்தை பற்றி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைக் கண்டித்து, மதுரை மாவட்டம் பாஜகவினர், நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில் மதுரை எல்லீஸ் சகையில் உள்ள இந்து சமய அறநிலை ஆட்சித் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் ஈடுபட்டனர்.
அப்போது, அமைச்சர் சேகபாபு பதவி விலக வேண்டும், உதயநிதி பதவி விலக வேண்டும், சனாதனத்தை பற்றி பேசியதை கண்டித்து பாஜகவினர் கோசமிட்டனர். மதுரை நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட பாஜகவினரின் கைது செய்து, தனியார் மண்டபத்தில் சிறைப்படுத்தினர். இதனால், மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக., ஆர்ப்பாட்டம்
முன்னதாக, மதுரையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.இதனை கண்டிக்கும் வகையில் பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் என, பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரை கண்டித்தும் உடனடியாக இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாஜகவினர் நடத்திய இந்த போராட்டத்தினால் எல்லிஸ் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி விழா ஆண்டுதோறும் சமுதாய மக்களால் வெகு சீரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் இந்தாண்டு விழாவில் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது.
இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கை மேளதாளங்களுடன் வீதி உலா நடந்தது. செப்-09ஆம் தேதி மாலை 4 மணிக்கு யாதவ சமுதாய கொடியேற்றப்பட்டது.
5மணிக்கு சிவகாசி நாராணபுரம் ஸ்ரீசக்கரத்தாழ்வார் கோவில் பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. அதனைதொடா்ந்து சிறுவா் சிறுமிகள் ராதை கிருஷ்ணன் வேடமணிந்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு நடனமாடினா். பின்னா் அவர்களுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் கும்மிபாடல், கோலாட்டம் பஜனை பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக இளைஞர்களுக்கான உறியடித்தல், பானை உடைத்தல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஆரியநல்லுார் தெரு செங்கோட்டை கரையாளா்(யாதவர்) சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா்.
மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இந்தியாவுடன் இணைக்க போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
தில்லியில் ஜி20 மாநாட்டுக்கு இடையில் அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடங்கவுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டமாகும். இதன் மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும்.
இத்திட்டம் அடிப்படை கட்டமைப்பில் மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். உயர்த்தத் தரம், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், நிலையானதாகவும் யாரையும் கட்டாயப்படுத்தாத வகையிலும் இருக்கும்.
இந்த திட்டம் உலகின் 3 பிராந்தியங்களை இணைப்பதால் செழிப்பைஏற்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் அடிப்படை கட்டமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல், பாதுகாப்பின்மை குறையும். பிராந்திய இணைப்பு அதிகரிக்கவும் இது உதவும்.
இஸ்ரேல், சவுதி அரேபியா இடையே சீரான உறவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாடுகள் இடையே முறையான தூதரக உறவுகள் தொடங்கிய பிறகு இஸ்ரேலும் இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் சண்டை சச்சரவுகளை தீர்க்கவும் ஸ்திரத்தன்மை, பிராந்திய இணைப்புகளை அதிகரிக்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் அதற்கு உதவியாக இருக்கும்… என்று கூறினார் ஜான் ஃபைனர்.
சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில்ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்பி தனஞ்செயநாயுடு அளித்த நோட்டீஸில், ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்கிறார். 14 ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் சந்திரபாபு நாயுடு இருந்துள்ளார்.
மேலும் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக சேர்வது போன்றவற்றிக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்.
திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; அவரது கைது கண்டித்து, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர் பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை – சோம நாயக்கன்பட்டிக்கு இடையே சுரங்கப் பாதை பணி காரணமாக, 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு செப்.12, 13, 14, 15, 20 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16203), திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு செப்.12, 13, 14,15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (16204),
சென்னை சென்ட்ரல் – மைசூருக்கு செப்.12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் (16021), மைசூரு – சென்னை சென்ட்ரலுக்கு செப்.13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16022) உட்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இது தவிர, ஆறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு செப்.12-ம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12657) ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர, ஆறு ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்படவுள்ளன.
யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங்கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக்கொடுமையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும் கண்டனம் தெரிவித்து அக்கொடுமையை ஒழிக்கப் பாடுபடுகின்றார். இதில் அவர் சோர்வடைந்ததே இல்லை.
இந்த உணர்வின் அடிப்படையிலேதான் பாரத தேசத்தை அடிமைப்படுத்தி வறுமைக்கும், பிணிக்கும் பஞ்சத்திற்கும் உள்ளாக்கிய ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழங்கினார்; பெல்ஜிய நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார்; புதிய ருஷியாவில் கலியுகம் விழுந்து கிருதயுகம் எழுக என்று ஆசி கூறினர்.
இங்ஙனம் கண்டிப்பது மறைமுகமாக பாரத மக்களுக்கு ஆங்கிலேயர் செய்து வந்த அக்கிரமங்கள எடுத்துக்காட்டி அவர்களை எதிர்த்துப் போராடி விடுதலை பெறத்தூண்டுவதற்குப் பயன் பட்டாலும் அது ஒன்றே பாரதியாரின் நோக்கமாக இருக்கவில்லை.
பாரதியார் உலக அரசியல் நடைமுறைகளை எவ்வளவு நுட்பமாக அந்தக் காலத்திலே ஆராய்ந்து மக்களுக்குத் தமது இந்தியா வார இதழின் மூலமாக எடுத்து விளக்கினார் என்பதை நாம் காண்கிறோம்.
உலகத்து நாடுகளின் போக்கை ஒட்டியே இந்தியாவின் போக்கும் அமைய வேண்டி வரும் என்கிற உண்மையை அக்காலத்திலேயே பாரதியார் தமது தொலை நோக்கால் உணர்கின்றார்.
1921ஆம் ஆண்டு செப்டம்பரோடு பாரதியாரின் பேனா ஒய்வு பெற்று விடுகிறது, அதற்குப் பின்னால் 1921 டிசம்பரிலும் 1922 ஆம் ஆண்டு ஜனவரியிலும்தான் சத்யாக்ரஹ இயக்கம் ஆரம்பம்; நேருக்கு நேர் அந்நிய ஆட்சியோடு மோதி சுமார் முப்பதினாயிரம் பேர் சிறை சென்றார்கள்.
பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்றது. அது 1910 மார்ச்சுத் திங்களோடு நின்று விடுகிறது.
அந்தக் காலத்திலேயும் சரி, சுதேச மித்திரனில் மீண்டும் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போதும் சரி, பின்னால் அந்த நாளிதழிலேயே உதவி ஆசிரியராக இரண்டாம் முறையாக அமர்ந்த போதும் சரி உலக நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு எளிதில் விளங்குமாறு பாரதியார் எழுதுகின்றார்.
பாரசீக தேசத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி இந்தியா வார இதழில் எழுதுவார் (16 மார்ச் 1907); சீனாவிலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி எழுதுவார் (8 செப்டம்பர் 1906); ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் என்று கட்டுரை தீட்டுவார் (8 டிசம்பர் 1906): ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்று தெளிவு படுத்துவார் (10 நவம்பர் 1906); ஐர்லாந்தைப்பற்றிப் பரிவோடு எழுதுவார்; துருக்கியின் நிலையை அதே கட்டுரையில் எடுத்துக் கூறுவார் (15 நவம்பர்1920); கிரேக்க தேசத்தின் ஸ்திதியை விவரிப்பார். (19 நவம்பர் 1920).
இவ்வாறு பாரதியார் எழுதுவதைக் காணும்போது நமக்கே வியப்பாக இருக்கிறதல்லவா?
இன்று நம்மிடையே உலவிவரும் தமிழ் நாளிதழ்களைப் பாருங்கள். அநேகமாக உலக நடைமுறைகளைப் பற்றி ஒன்றுமே இராது. ஏதாவது நில நடுக்கம் அல்லது விமான விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆசிரியர் மாணவி கள்ள உறவு போன்ற செய்திகள் மட்டுமே வரும். அயல் நாடுகள் எவ்வாறு இயங்குகின்றன, அங்கு நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் கலாச்சாரம் போன்ற தகவல்களைக் காண இயலாது.
பாரதியார் அன்று உலக நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கி எழுதியது அவருடைய மனிதாபிமானம் என்ற பரந்த நோக்கிலே முக்கியமாக எழுந்ததாகும்.
லார்டு கர்ஸன் இந்திய வைஸ்ராயாக 1899 முதல் 1905 வரை இருந்தவர்; வங்காளப் பிரிவினைக்குக் காரணமாயிருந்து அதை அமல் செய்தவர்; பல அநீதிகளைச் செய்தவர்.
இவரைப் பற்றி காரசாரமாகக் கண்டித்து பாரதியார் தமது இந்தியா வார இதழிலே எழுதியிருக்கிறார். இருந்தாலும் இவருடைய மனைவியார் இறந்த காலத்தில் பாரதியார் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கத் தவற வில்லை, “லார்டு கர்ஸனும் அவரது மூன்று குழந்தைகளும் அடையக் கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாபம் அடையக் கூடும்” என்று தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார்.
‘’இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது‘’ என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார் (பார்க்க–யூகோள மஹாயுத்தம்).
‘’அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்யஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம்.
இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர, வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூ மண்டல முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.’
இவ்வாறு ஹிந்து தர்மம் என்ற கட்டுரையிலே 29 நவம்பர் 1917ல் பாரதியார் எழுதுகின்றார்.
அணுகுண்டுப் பூதம்தோன்றி மானிட இனமே அழிந்து போகுமோ என்று அஞ்சுகின்ற இந்நாளில் பாரதியாருடைய எச்சரிக்கை மிகப் பயனுடையதாகும்; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.
‘’இப்பொழுது மனிதர் ஒருவருக்கொருவர் பயப்படுவது தான் அதிகம்‘’ என்று பாரதியார் 22 செப்டம்பர் 1916-ல் எழுதினார்.
இன்று இந்த பயம் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது.
‘’உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா?’’ என்று அதே கட்டுரையில் (லோகோபகாரம்) பாரதியார் கேட்கிறார்.
எப்பேர்பட்ட தீர்க்கமான சிந்தனை…. வாழ்க நீர் எம்மான்……
ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து இன்று நிறைவு அடைந்தது. செப்.09, 10 இரு நாட்கள் தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, தீர்மானங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாரத அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. பாரதம் தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் பாரதத்திற்கு வருகை தந்தார். முன்னதாக தில்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.
தொடர்ந்து ஜி-20 மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மாநாடு நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் ரிஷி சுனக் தனது மனைவியுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் போது பருவநிலை மாற்றம் தொடர்பான ‘பசுமை பருவநிலை நிதி’ அமைப்பிற்கு இங்கிலாந்து அரசு சார்பில் 20 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்’ – பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ
தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது. பாரதம் தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.
பாரத திடமிருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பெற்றுக்கொண்டார். முன்னதாக தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இது குறித்து பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, “மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம். நான் தொழிலாளர் இயக்கத்தில் இருந்தபோது பல ஆண்டுகளாக நான் பின்பற்றிய அகிம்சை போராட்டத்திற்கு முன்மாதிரியாக விளங்கியவரும், எனது அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்தவரும் மகாத்மா காந்தி தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஞ்சலி செலுத்த கிடைத்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
ஜி-20 உச்சி மாநாடு; பாரதத்தின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்
ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, நாட்டின் பாரம்பரிய இசையை கொண்டு கச்சேரி நடத்தப்பட்டது.
இதில், 78 கலைஞர்கள் பங்கேற்று, இந்துஸ்தானி, கர்நாடக மற்றும் நாட்டுப்புற பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரிய வகை இசை கருவிகளை கொண்டு, நம்முடைய ஈடு இணையற்ற மற்றும் தனித்துவ இசை பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டது.
அந்த இசை கருவிகளில், சுர்சிங்கர், மோகன வீணா, ஜலதரங்கம், ஜோதிய பாவா, தங்காலி, தில்ருபா, சாரங்கி, கமைசா, மட்ட கோகில வீணா, நளதரங்கம், துங்புக், பகாவஜ், ரபாப், ராவண்ஹத்த, தல் டாணா, ருத்ர வீணா உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகள் இசைக்கப்பட்டன.
இவற்றில் காந்தர்வ அதோத்யம் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. இதில், நாடு முழுவதும் உள்ள இசை கருவிகள் கொண்டு இந்துஸ்தானி, கர்நாடகம், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சமகால இசை ஆகியவற்றை பாரம்பரிய கருவிகளை உபயோகித்து நடத்தி காண்பித்தனர்.
பாரதத்தின் பாரம்பரிய இசையை வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், அனைத்து மாநில முதல்-மந்திரிகள், மாநில மற்றும் மத்திய மந்திரிகள், மத்திய அரசிலுள்ள அனைத்து செயலாளர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.
நட்புறவுக்கான மையம்: மோடிக்கு ஜோ பைடன் நன்றி
தில்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அவர் மாநாட்டில் பேசும்போது, உண்மையில் இது ஒரு பெரிய விசயம். பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசி கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட என்று கூறினார்.
நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை முடித்து கொண்ட பைடன் பின்னர், வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.
கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்
தில்லியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு (ஆர்ச்டயோசீஸ்) ஒன்றின் பாதிரியாராக நிகோலஸ் டயஸ் உள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து, இறைவணக்கத்தில் ஈடுபட்டார். அதிபர் பைடன் புறப்பட்டு செல்லும் முன், கிறிஸ்தவ பாதிரியார் டயசுக்கு நாணயம் ஒன்றை பரிசளித்து உள்ளார்.
இதுபற்றி பாதிரியார் டயஸ் கூறும்போது, அதிபருடன் சேர்ந்து ஜெபம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, எனக்கு ஒரு சிறந்த தருணம். அவருக்காக வேண்டி கொண்டேன். நம்முடைய நாட்டுக்காகவும் கூட வேண்டி கொண்டேன். என்னுடைய அனுபவத்தில், அவர் சமய பற்று கொண்ட கத்தோலிக்கர். போப் பிரான்சிஸ் மற்றும் அவருடைய போதனைகளை தீவிரத்துடன் பின்பற்ற கூடியவர். அவற்றை எப்படி தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பதவியில் அமல்படுத்தலாம் என முயற்சித்து பார்க்க கூடியவர்.
அவருடைய நம்பிக்கையானது எனக்கும், என்னுடைய நம்பிக்கைக்கும் ஓர் அனுபவம். அவர் மிக பணிவானவராக வந்து சென்றார். எனக்கு அவர் நன்றிக்குரியவர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கொடுக்க கூடிய நினைவு பரிசை அவர் எனக்கு கொடுத்து சென்றார். அதனை நான் நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த நாணயத்தில் 261 என்ற எண் உள்ளது. இதற்கு முன்பு 260 பேருக்கு மட்டுமே இந்த கவுரவம் கிடைத்து உள்ளது என்பது எனக்கு தெரியும் என்றும் பாதிரியார் டயஸ் கூறியுள்ளார்.
தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. பாரதம் தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. கூட்டுப் பிரகடனத்தை ஜி20 கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் – ரஷியா போர் குறித்தும் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளை, போர் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவுக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. ரஷியா – உக்ரைன் போர் குறித்து மிகவும் மென்மையான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.
கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவின் பெயர் இடம் பெறவில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 நாடுகள் ஒன்றாக கூட்டுப்பிரகடனம் வெளியிட்டு, அதில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்காதது இதுவே முதல் முறையாகும். இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளை ஒரே கருத்தின் கீழ் கொண்டுவர பாரதம் எடுத்த முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஜி20 கூட்டமைப்பிற்கான பாரதத்தின் பிரதிநிதி அமிதாப் காந்த் தலைமையிலான பாரத தூதரக குழுவின் தீவிர முயற்சியால் ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் சாத்தியமாகியுள்ளது.
மிகவும் சிக்கலான புவிசார் அரசியல் விவகாரத்தில் (உக்ரைன் – ரஷியா போர் விவகாரத்தில்) ஜி20 மாநாட்டில் கூட்டுப்பிரகடனத்தை வெளியிட இடைவிடாது 200 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று, 300 இரு தரப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டு இறுதியில் கூட்டுப்பிரகடனம் முடிவு எட்டப்பட்டது. ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது’ என ஜி20 கூட்டமைப்பிற்கான பாரத பிரதிநிதி அமிதாப் காந்த் கூறினார்.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் பாரதத்தின் பெருமைக்குரிய தருணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அமிதாப் காந்தை டேக் செய்த சசிதரூர், மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள் அமிதாப் காந்த். நீங்கள் பாரத நிர்வாக சேவை (ஐஏஎஸ்) துறையை தேர்வு செய்தபோது ஒரு உயர் ராஜதந்திரியை பாரத வெளியுறவு சேவை இழந்துவிட்டதாக நினைத்தேன். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் குறித்து ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது என அமிதாப் காந்த் கூறியிருந்தார். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் பாரதத்தின் பெருமைக்குரிய தருணம்’ என பதிவிட்டுள்ளார்.
ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்து இடம்பெற்ற கருத்துக்கள் பின்வருமாறு:-
உக்ரைன் போரை பொறுத்தவரை, இந்தோனேசிய தலைநகர் பாலியில் (கடந்த ஆண்டு நடந்த ஜி20 மாநாடு) நடந்த விவாதத்தை நினைவுகூருகிறோம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நமது தேசிய நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாரதத்தின் ஜி-20 தலைமைத்துவ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்: நடிகர் ஷாருக் கான்
நடப்பு ஆண்டின் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை பாரதம் ஏற்று நடத்தியது. இதன்படி, தில்லியின் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறியது. வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பின்னர், வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது.
2-வது நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் பிரேசிலிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் சிறப்புகளை உலக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், சிறந்த பூமிக்காக ஜி-20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் நடைபெற்றன என பிரதமர் மோடி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இதனை டேக் செய்து, நடிகர் ஷாருக் கான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத்தின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக மற்றும் உலக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, நாடுகள் இடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு, பாரதீயரின் மனதிலும் கவுரவம் மற்றும் பெருமைக்கான உணர்வை அது கொண்டு வந்துள்ளது. உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், நாங்கள் தனித்து வளம்பெறுவது மட்டுமின்றி ஒன்றாகவும் இருப்போம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்.. என ஷாருக் கான் பதிவிட்டு உள்ளார்.
அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை ஏற்கிறது பிரேசில். பிரேசில் அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி. இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் நான்காம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அம்மன் வெள்ளி சரப வாகனத்தில் எழுந்தருள, வீதி உலா நடைபெற்றது..
ஆவணித் திருவிழா ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மேலக்கோயிலில் நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் பெருமளவில் திரண்டு, முருகப் பெருமானை தரிசித்தார்கள்.
ஆவணித் திருவிழா ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு, ஸ்வாமி வெள்ளித் தேரில் எழுந்தருளினார். அம்மன் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் பெரும் அளவில் திரண்டனர். ஸ்வாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது..
ஆவணித் திருவிழா ஏழாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டி வேர் சப்பரத்தில் சண்முகப் பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள் திரண்டு வந்து முருகப் பெருமான் தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள்.
ஆவணித் திருவிழா ஏழாம் நாள் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது. முருகப் பெருமான் சிவப்பு வண்ணப் பின்னணியில் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆவணித் திருவிழாவின் இந்த நிகழ்வின் வீடியோ தொகுப்பு…
Just as one was planning/plotting to write a piece for a web journal on the magic of G20 Summit that Bharat put up with style, substance and splendor , for all the world to see and experience – that We Have Arrived- the above invite landed with me. The name ‘Bharathi’ conjures up class . Having written a book on the anecdotal plane, ‘he’ was irresistible. Add the allure of song and dance, I landed in the Sabha, in time, without the accompaniments of Kasi Halwa, Rava Dosa and coffee of a Margazhi time canteen. The performance more than made up for the missing elements.
Humility comes easy when you think Bharathi. And when you watch a song & dance performance, not knowing the rules and nuances or the grammar, you only look for ‘janaranjakam’, beautiful to the eye and lively/lovely on the ear. Well the girls danced to the tune of Prithivi Harish and his nasal twang this day swingingly matched the multiple course cuisine, the guests were served by Bharat in Delhi. And the Bharathi word play enhanced the brilliance. Any wonder, the performers made my day, to gain at least a wee bit of the ‘beautiful knowledge’ or soak in the lilting/lifting experience.
Mahakavi Subramania Bharathi’s song Sudar Migum Arivu is a celebration of knowledge and wisdom. The song is a call to action, urging people to seek out knowledge and understanding. Bharathi believes that knowledge is the key to liberation and progress. He sees knowledge as a powerful tool that can be used to improve the world. And when the Mahakavi’s verses are sung, they are truly elevating. Prithivi Harish’s diction and pregnant pauses were spot on. He added a notch or two to his growing stature, as an upcoming singer ( or already ‘upcome’ artiste).
The Sudar Migum Arivu song begins with a description of the beauty and wonder of the world. Bharathi uses vivid imagery to paint a picture of a world full of beauty and mystery. He sees the world as a place of endless possibilities, and he urges people to explore and learn.
Bharathi then turns to the importance of knowledge. He argues that knowledge is the key to understanding the world around us. He says that knowledge can help us to solve problems, to make better decisions, and to live more fulfilling lives. And bring in knowledge from any and every direction championed Bharathi (சென்றிடுவீர் எட்டுத்திக்கும்…)Don’t ask me how the dancers portrayed his verses? I am least qualified to describe it.
Bharathi also sees knowledge as a way to connect with others. He believes that knowledge can help us to build bridges between different cultures and backgrounds. He says that knowledge can help us to create a more just and equitable world.
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் — பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்- டாமெனல் கேளீரோ?
Oh, foolish people going here and there
In search of God –can’t you hear
Myriad scriptures declaring
Knowledge alone is God!
His choice of words are simple yet stinging.The song ends with a call to action. Bharathi urges people to seek out knowledge and understanding. He says that knowledge is the key to a better future.
The song is a powerful message of hope and inspiration. It is a reminder that knowledge is a powerful force for good in the world. The song is a call to action, urging people to use their knowledge to make the world a better place. One could detect irrefutable shades of ‘Sanathan Dharma’ in Bharathi as a crafty muse, which is ‘indestructible’.
The song is also a reflection of Bharathi’s own life and work. Bharathi was a lifelong learner. He was a Sanathani, at every level. He was always seeking out new knowledge and understanding. He used his knowledge to advocate for social justice, a constitutional mandate, and to promote the Tamil language and culture, as a conscience call. Despite being born in the ‘wrong community’, according to some!
Sudar Migum Arivu is a classic Tamil song that is still relevant today. The song is a reminder of the importance of knowledge and understanding. It is a call to action, urging people to use their knowledge to make the world a better place. Bharat displayed Bharathi in all its glory, during its G20 Presidency. One Earth. One Family. One Future.
One admits to one’s smallness to review the performance. Bharathi does it to you. He hits you with his poignant poetry. You do not have any more than the limited gifts, beyond the finger on the keyboard. Did he know his ‘beautiful knowledge’ would be ‘danced’ on stage? Sung, yes. But ‘danced’?
One concedes one’s appalling inadequacy to explore the mesmerizing magnificence of Bharathi, at the deeper or philosophical or mystical plane as this Bharathi verse, picked up by the performers.
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ?மாயையே – மன திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ! – மாயையே!
Will you (Maya) be appraised by men who are aware of the eternal truth? What can be done by you to those who have the internal strength?]
And Prithivi Harish got into his element when he broke into:
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
I am in every bird that soars the skies! I am in every animal that wanders this earth! I am in the trees that grows in the wild! I am in the breeze, I am in the stream, I am in the sea!
The powerful pathos in the Bharathi verse fit Prithivi’s unique style to a tee. Prithivi and his accompanists and of course, the dancers, got a loud ( as loud a decibel as a not so full hall could rise to) applause, for their encore, from an All are Welcome performance.
Why not just let the glorious song and dance on ‘beautiful knowledge’ that Subbiah alluded to with ease, with a thillana in :
இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!
And closing with that immortal:
நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி – நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
You created me with flaming knowledge.This world should benefit from me.Otherwise I do not want to be a burden to this land where I was born.I want you to give me mind and health and life to do what I want to do.Give me the boon to sing about you even when my body is burnt.You will have no objection to grant me this.
settle in, as if on R K Laxman’s proverbial common man viz. as a ‘beautiful experience’.
(Author of Mahakavi Subramania Bharathiar (Musings, Anecdotes, Episodes), 2021, Kalaimagal Publications) Practicing advocate in the Madras High Court)
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அடுக்கடுக்காக பயனர்களுக்கு அப்டேட்களை அள்ளி தெளித்து வரும் மெட்டாவின் வாட்ஸ்அப் செயலி, சமீபத்தில் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் எனும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம், உடனடியாக 60 வினாடிகள் வரை வீடியோ செய்திகளைப் பதிவுசெய்து அனுப்பலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோ மெசேஜ்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, ஆடியோ மெசேஜ் எவ்வாறு செயல்படுகிறதோ அதேபோல தான் வீடியோ மெசேஜையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்தது.
அதன்படி, ஆடியோ மெசேஜ் பட்டனை லாங் பிரஸ் செய்தால் வீடியோ மெசேஜ்-கான ஆப்ஷன் வரும் என்ற நிலை இருந்தது.
ஆனால், ஆடியோ, வீடியோ மெசேஜ் இரண்டிற்கும் ஒரே பட்டன் என்பதால் பல பயனர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தநிலையில், இந்த ஆப்ஷனை டிஸ்ஏபிள் (Disable) செய்து கொள்ளும் வகையில் புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
அதற்கு முதலில் வாட்ஸ்அப் சென்று வலப் புறத்தில் உள்ள மூன்று புள்ளி ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன்பின் செட்டிங்ஸ்-ல் இருக்கும் ‘Chats’ ஆப்ஷனுக்கு செல்லவும்.
அதில், இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதை Disable செய்தால் எளிதாக வீடியோ மெசேஜ் மற்றும் ஆடியோ மெசேஜ் என தனித்தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம்