சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல்
மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்
ஜெயலலிதவின் நண்பர் “சோ” ராமசாமி மரணம்
ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார்.
ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் சோ. ராமசாமி. அதே போல மீண்டும் சமீபத்தில் அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த, அதே அப்பல்லோ மருத்துமனையில் சோ ராமசாமி சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு நலம் பெற்ற அவர், பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருங்கிய நண்பர். “சோ. ராமசாமி என் உடன் பிறந்த அண்ணன் போன்றவர்” என்று ஜெயலலிதா சொன்னது உண்டு.
ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை சொல்பவர் சோ என்றும் சொல்லப்படுவது உண்டு.
இடையில் சசிகலாவை தனது போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரிலான சில சொத்துக்களுக்கு சோ பொறுப்பாளராக ஆனார் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் மிக மோசமானதை அறிந்த சோ.ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் மரணமடைந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சோ ராமசாமி மரணமடைந்ததாக இதற்கு முன் சில முறை தகவல் பரவியது குறிப்பிடதக்கது.
“சோ” ராமசாமி யார்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி சற்று நேரத்துக்கு முன் மறைந்தார். அவருக்கு வயது 82.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையில் சோ ராமசாமியும் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமான தகவலை அறிந்த சோவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சோ. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்துக்கு முன் மறைந்தார்.
சென்னையைச் சேர்ந்த ரா.சீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக அக்டோபர் 5, 1934 அன்று பிறந்த சோ ராமசாமியின் இயற் பெயர் ராமசாமி.
இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். , பிறகு லயோலா கல்லூரியிலும் விவேகானந்தா கல்லூயிரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டம் பெற்றார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.
சிறிது காலம், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பயின்ற சோ ராமசாமி, பிறகு டி.டி.கே நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றினார்.
இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பகீரதன் எழுதிய “தேன்மொழியாள்” என்ற நாடகத்தில் ‘சோ’ எனும் பெயரிலான பாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அது முதல் “சோ” ராமசாமி என அழைக்கப்பட்டார்.
“மு. பி. து” நாடக்ததில்..
நாடகங்களில் நடிப்பதோடு, நாடகங்கள் எழுதுவதிலும் சோ ஈடுபட்டார். “முகமது பின் துக்ளக்” உட்பட பல்வேறு நாடகங்களை எழுதி, நடித்து புகழ் பெற்றார்.
இந்நாடகம் பின்னாட்களில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார்.
14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
1970 ஆம் ஆண்டு “துக்ளக்” என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார். தனது அரசியல் கருத்துக்களை இந்த இதழில் எழுதிவந்தார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இந்திய அளவில் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர் சோ ராமசாமி. இவரது முயற்சியால் பல்வேறு அரசியல் திருப்பங்கள், ஆட்சி மாறறங்கள் ஏற்பட்டுள்ளன. மிகச் சிறந்த நகைச்சவை நடிகர், எழுத்தாளர், அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர் என்றெல்லாம் புகழப்படுபவர் சோ ராமசாமி.
அதே நேரம், “பிராமண பற்றாளரான இவர் சாதி வேறுபாடுகளை விரும்புபவர், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கருதப்பட்டும் மிடாஸ் சாராய ஆலை உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்தவர், பெண் சமத்தவத்தை விரும்பாதவர், பிரச்சினைகளை கிளறிவிடுவாரே தவிர அதற்கு தீர்வு சொல்லமாட்டார்” என்பன போன்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு.
பாராட்டும் விமர்சனமும் கலந்து இருந்தாலும், தமிழக அரசியலிலும், திரையுலக நகைச்சுவையிலும், பத்திரிகைத் துறையிலும் தவிர்க்க முடியாத நபர், சோ ராமசாமி.
முதல்வராக பொறுப்புகளைத் தொடங்குகிறார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்கவுள்ளார்.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், அவர் தனது வழக்கமான அலுவலகப் பணிகளை புதன்கிழமை (டிச.7)
முதல் தொடங்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, முக்கிய துறையான வருவாய்த் துறைக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டான்சி வழக்கில் ஜெயலலிதாவால் முதல்வராக பொறுப்பேற்க முடியாத சூழலில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.
2001-ஆம் ஆண்டில்…: அவர், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-லிருந்து, 2002 ஆம் ஆண்டு மார்ச் வரையில் தமிழக முதல்வராக பணியாற்றினார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன், மீண்டும் அவரிடமே முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார்.
2006-ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது, அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா வராத காலங்களில் அவரே கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களை வழிநடத்தினார்.
தொடர் தேர்தல் வெற்றி: 2001-இல் தொடங்கிய சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி 2011-இலிலும் நீடித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிக்கனியைப் பறித்தார். இதைத் தொடர்ந்து, அவர் நிதியமைச்சர், அவை முன்னவர் பொறுப்பை வகித்தார். சில காலங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
2014-ஆம் ஆண்டில்…2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் வகித்து வந்த முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்து ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.
2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை அதிமுக கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல்வராக பொறுப்பேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 31 பேர் அப்படியே அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பணிகளைத் தொடர்கிறார்: உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் துறைகளை ஏற்கெனவே கடந்த அக்டோபர் 11-ஆம் தேதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்தார். அப்போது முதல்வர் துறைகளை மட்டுமே கவனித்து வந்த அவர் இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடந்தன. இதையடுத்து தனது அலுவல் பணிகளை அவர் புதன்கிழமை (டிச.7) முதல் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் முதல் பேச்சு
எனக்கு பின்னும் அ.தி.மு.க., ஜெ., உருக்கம்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு
2. திண்டுக்கல் சீனிவாசன் – வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ – கூட்டுறவுத் துறை
4. தங்க மணி – மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி – நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் – மீன்வளத் துறை
7.சண்முகம் – சட்டத்துறை
8.அன்பழகன் – உயர்கல்வி துறை
9.சரோஜா – சமூக நலன், சத்துணவுத் துறை
10. எம்.சி. சம்பத் – தொழில் துறை
12காமராஜ் – உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் – கைத்தறித் துறை
14. உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி வாரியத் துறை
15. விஜய பாஸ்கர் – சுகாதாரத் துறை
16. துரைகண்ணு – வேளாண் துறை
17. கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
18. ஆர்.பி. உதயகுமார் – வருவாய் துறை
19. வேலுமணி – நகர வளர்ச்சி துறை
20. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா துறை
22. ராஜேந்திர பாலாஜி – பால்வளத் துறை
23. பென்ஜமின் – ஊரக வளர்ச்சி துறை
24. விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
25. நிலோபர் கபில் – தொழிலாளர் நலத் துறை
26. மணிகண்டன் – தகவல் தொடர்பு துறை
27. ராஜலெட்சுமி – ஆதி திராவிடர் நலத் துறை
28. பாஸ்கர் – கதர் துறை
29. வீரமணி – வணிக வரித் துறை
30. சேவூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத் துறை
32. பால கிருஷண ரெட்டி – கால்நடை துறை
7 நாள் அரசு முறை துக்கம்: மாநில அரசு அறிவுப்பு
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவு: தலைவர்கள் அஞ்சலி!
பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.
தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்: தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கருணாநிதி: அ.தி.மு.க.,வினர் மனதில் ஜெ., நீடித்து வாழ்வார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மத்திய அமைச்ச நிர்மலா சீத்தாராமன்: விடாமுயற்சியும் திடமான மனமும் கொண்ட பயணமாக ஜெயலலிதாவின் வாழ்க்கை இருந்தது.
சசிதரூர்: ஜெயலலிதா அசாதாரண பெண். வெற்றிகரமான மக்கள் தலைவராக விளங்கினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி: ஒரு சிறந்த நிர்வாகியை, பிரபலமான அரசியல்வாதியை தமிழ்நாடு இழந்து விட்டது.
விஜயகாந்த்: ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
கனிமொழி: திறமை மற்றும் தனித்துவம் மிக்க தலைவரை இழந்து விட்டோம்.
லாலு பிரசாத் யாதவ்: நாடு உறுதியான தைரியமான தலைவரை இழந்து விட்டது.
பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி இரங்கல்
Deeply saddened at the passing away of Selvi Jayalalithaa. Her demise has left a huge void in Indian politics.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
Jayalalithaa ji’s connect with citizens, concern for welfare of the poor, the women & marginalized will always be a source of inspiration.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
Jayalalithaa ji’s connect with citizens, concern for welfare of the poor, the women & marginalized will always be a source of inspiration.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
My thoughts and prayers are with the people of Tamil Nadu in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
May the Almighty grant them the strength to bear this irreparable loss with courage and fortitude.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
I will always cherish the innumerable occasions when I had the opportunity to interact with Jayalalithaa ji. May her soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) December 5, 2016
முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் என்று அவர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா: டிசம்பர் துயரங்கள்
அரசியல் ஆசானுக்கும் அவர் வழி நடந்த சிஷ்யைக்குமான ஒற்றுமை இது.

