Home Blog Page 5740

பத்ம விருதுகளை மக்களே தேர்வு செய்யலாம்

புதுதில்லி:

இனி பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியால் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய அரசு 1954-ம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும். இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது.,

‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலைநாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் நிறைவடையுவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந் திருப்பதாக கூறப்படுகிறது.

என்ன குற்றம் செய்தேன்?: ஜாகிர் நாயக் கேள்வி

“பயங்கரவாதத்தைப் பரப்புபவர் என்று முத்திரை குத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்தேன்?’ என்று ஜாகிர் நாயக் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 25 ஆண்டுகளாக நான் மதபோதனை செய்து வருகிறேன். ஆனால் இப்போதுதான் என் மீது “பயங்கரவாதத்தைப் பரப்புபவர், டாக்டர் பயங்கரவாதம்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறது.
மிகத் தீவிரமாக விசாரணை செய்தும், என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மீண்டும் விசாரணை நடத்த வலியுறுத்தப்படுவது ஏன்? என்று அந்தக் கடிதத்தில் ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாகிரைப் பாதுகாப்பதற்கான லஞ்சம்: ரவி சங்கர் பிரசாத்

முந்தைய மத்திய அரசு, மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் ரூ.50 லட்சம் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: ஜாகிர் நாயக்கின் தேசவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வழங்கப்பட்ட லஞ்சத் தொகையே அந்த ரூ.50 லட்சம். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது, ஜாகிர் நாயக்கைப் பாதுகாப்பதற்காக அரசுக்குள்ளேயே ஒரு தரப்பினர் செயல்பட்டு வந்தனர். ஜாகிர் நாயக் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அரசே கவலை தெரிவித்த நிலையில், அப்போதே ஏன் அந்தத் தொகையை திருப்பி அளிக்கவில்லை?
ஜாகிர் நாயக் இஸ்லாமிய சான்றோர் எனவும், அவருக்கு அரசுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாயக்குக்கு ஆதரவாக காங்கிரஸில் பலர் பேசியுள்ளனர் என்றார் அவர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் ரூ.50 லட்சம் நன்கொடை

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தன்னார்வ அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எஃப்சிஆர்ஏ) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ராஜீவ் காந்தி நிதி அறக்கட்டளை. அந்த அமைப்புக்கு, மற்றொரு தன்னார்வ அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐஆர்எஃப் அமைப்பு, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் மாலிக் கூறியதாவது: நாங்கள் எத்தனையோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையை மட்டும் குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்புவது ஏன்? என்றார் மாலிக்.
காங்கிரஸ் விளக்கம்: இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஐஆர்எஃப் அமைப்பு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கியது. தற்போது பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாகவும், கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்படுவதையடுத்து, அந்தத் தொகை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. நன்கொடை வழங்கப்பட்டபோது மத்திய அரசின் பயங்கரவாதக் கண்காணிப்பு வளையத்துக்குள் ஜாகிர் நாயக்கும், அவரது அமைப்புகளும் கொண்டு வரப்படவில்லை என்றார் அவர்.
முன்னதாக, வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜாகிர் நாயக்கின் உரைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதையடுத்து, “அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்’ என்று பிரசாரம் மேற்கொண்டதாகவும், இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் இழுப்பதாகவும் ஜாகிர் நாயக் மீது வங்கதேச அரசு குற்றம் சாட்டியது.
வங்கதேசத்தில் பிரபலமான அவரது தொலைக்காட்சிக்கும் தடை விதித்தது. மும்பையைச் சேர்ந்த ஜாகிர் நாயக்குக்கு வங்கதேசம் மட்டுமின்றி பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

எல்லையில் ஊடுருவல்; மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

காஷ்மீரின் நவ்காம் செக்டார் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளையும் எல்லைப் பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“நவ்காம் செக்டாரில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பதைக் கண்டனர். இதை அடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிக்கு சவாலை ஏற்படுத்தினர். பயங்கரவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இச்சண்டையில் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி, வெடிப்பொருட்கள் என பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது

கேரள எல்லையில் முற்றுகைப் போராட்டம்: சுமார் 500 பேர் கைது

கோவை:

பொள்ளாச்சி அருகே வளந்தாயமரம் செக்போஸ்ட் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழ்நாடு மாணவர் மன்றம், பெ.தி.க., சார்பில், கேரள எல்லை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை வகித்து, மூன்று மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கின்றன.
விவசாயம், குடிநீர் உட்பட முக்கிய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இயற்கையாக கிடைக்கும் நீரினை யாரும் தடுத்து நிறுத்தி உரிமை கொண்டாடக் கூடாது. எனவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். பெ.தி.க., அமைப்பாளர் நாகராஜ், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் பிரபு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வளந்தாயமரம் சோதனைச் சாவடியிலிருந்து, நடைப்பயணமாக கேரள எல்லையை முற்றுகையிடச் சென்றனர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

தமிழ்நாடு மாணவர் மன்றம் அமைப்பினர், ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற, 85 பெண்கள் உட்பட 515 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்!

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

21 வயதாகும், மாரியப்பன், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கம் வென்றுள்ளார். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி பதக்கத்தை பறித்துள்ளார் மாரியப்பன். இதே பிரிவில் இந்தியாவின், விகாஸ் சிங் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் என பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த நிலையை அடைய அவர் பட்டபாடு பெரிது.

1995, ஜூன் 28ம் தேதி பிறந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவ்வாண்டு மார்ச் மாதம் துனிஷியாவில் நடந்த ஐபிஎல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 1.78 மீட்டரை தாண்டி குதித்து ரியோ பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை தங்கவேலு பெற்றார்
தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்துள்ளார் தங்கவேலு.

பெங்களூவில், சத்யநாராயணா என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றவர் தங்கவேலு. 5 வயதாக இருந்தபோது, பள்ளிக்கு சென்ற வழியில், பஸ் மோதியதால், வலது கால் உடைந்துபோனது. அதன்பிறகு 5 வயதுக்கு உரிய காலாகவே அது மாறிப்போனது. குணமடையவும் இல்லை. வளரவும் இல்லை.

paraolympic-mariappan2தங்கவேலுவின் தாயார் காய்கறி விற்பனை செய்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். தங்கவேலுவின் மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருந்தார் அவர். இன்னமும், அந்த 3 லட்சத்துக்கான, வட்டி, அசலை திருப்பி செலுத்தி வருகிறது தங்கவேலு குடும்பம்.

பள்ளி காலத்தில் வாலிபாலில் தங்கவேலு ஆர்வம் காட்டினார். ஆனால், அவரிடம், உயரம் தாண்டுதலுக்கான திறமை ஒளிந்திருந்ததை கவனித்த பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர், உயரம் தாண்ட ஊக்கம் கொடுத்தார். அவர் கூறியது பலித்தது.

பயிற்சியாளர் சத்தியநாராயணா கண்களில் தங்கவேலு கடந்த 2013ல் பட்டார். பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வந்த தங்கவேலுவை பார்த்ததும், சத்தியநாராயணாவுக்கு ஏதோ ஒரு ஸ்பார்க். உடனே பெங்களூரில் வைத்து பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

விளையாட்டு என்பது தொழிலாக மாறிவிட்டாலும், தனது தாயாரின் கஷ்டத்தை போக்க நல்ல வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். இப்போது பாரா ஒலிம்பிக்கில் சாதித்துள்ள நிலையில், சன்மானங்கள் அவரது குடும்ப வறுமையை போக்கும் என நம்பலாம்.

பேட்மின்டனுக்கு ஒரு கோபிச்சந்த் போல, உயரம் தாண்டுதலுக்கு, சத்தியநாராயணா மிகச்சிறந்த கோச்சாக உருவெடுத்து வருகிறார். 2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரிஷாவுக்கும் சத்தியநாராயணாதான் பயிற்சியாளர்.

அண்ணன் மகள் இறப்புச் செய்தி கேட்டு கண் கலங்கிய மோடி

2014 ல் பெற்ற இமாலய வெற்றி பெற்று தனது தாயிடம் ஆசி வாங்கிய போது எடுத்த படம். இந்த படத்தை அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதில் நமது பிரதமர் மற்றும் அவரது தாயாரை தவிர யாரையும் தெரியாது. இதில் வட்டம் இடப்பட்டவர் பெயர் நிகுன்ஞ்பென், இவர் பிரதமிரின் அண்ணன் பிரகலாத் மோடியின் பெண்.

துரதிஷ்டவசமாக, கடந்த வாரம், மாரடைப்பினால் உயிரிழந்தார். அவர் உடல்நலன் சரியில்லை என்ற செய்தி பிரதமர் ஜி-20 கூட்டமப்பு மாநாட்டில் இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது. ஆதாலால் நாடி திரும்பியதுடன் தனது அண்ணனுக்கு அழைத்து மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது தான் அவருடைய மகள் இறந்து ஈம சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. தனது அடுத்த அடுத்த வேலைகளினால் நேரம் ஒதுக்கி சடங்குக்கு சென்று தனது குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்லமுடியவில்லை. இந்த நிகழ்வு அரசில் உள்ள யாருக்கும் தெரியவும் இல்லை.

காஷ்மீர் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற போது பிரதமர் கண்கலங்கிய நிலையில் இருக்கிறாரே என்று விசாரித்த போது, தனது அண்ணன் மகள் இறந்தது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

நிகுன்ஞ்பென் தனது கணவருடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தார், குடும சூழல் காரணமாக தையல் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து குடும்ப பாரத்தை குறைத்தார். தற்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது சித்தப்பா பிரதமர் என்ற அதிகார தோரனையில்லாமல், சாதாரன குடிமகனை போல வாழ்ந்து வந்திருக்கின்றனர் பிரதமரின் குடும்பம். இத்தகை எளிமை தற்காலத்தில் கான்பது அரிது.

இந்த துயர் செய்தி கேட்டும், ஒருநாள் விடுப்பு எடுத்து குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், அடுத்த அடுத்த மாநாடுகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு செயலில் ஈடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்கள்.

இந்த செயலின் மூலம் நமது பிரதமரின் கடின உழைப்பும் அவரிடம் இருக்கும் உத்வேகமும் நாட்டின் நலனிலேயே இருப்பதை நாம் கான முடிகிறது. இத்தகைய மாமநிதரை நமக்கு வழங்கிய பாரத தாய்க்கு நன்றி கூறி, அவர்க்கு அந்த ஈசன் சர்வ சக்தியையும் வழங்கி அவரின் முயற்ச்சியால் நாடு வளம் பெற ஆசிகள் வழங்க வேண்டும் என பிராத்திப்போம்.

செய்தி: ஜா. ஆனந்த் பரத்வாஜ்

source: https://postcard.news/this-story-of-narendra-modi-will-wet-your-eyes/

செய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள்

செய்திச் சுருக்கம்:

♈???????????? ஹெல்மெட் போடலையா ரூபாய் 100 கொடுங்கள் விட்டுடுவாங்க ..இராயபுரம் போக்குவரத்து காவல்துறை north chennai
♈????????????வேலூர் மாவட்டம் அரக்கோணம்

மணல் லாரியில் சிக்கி 2 பேர் பலி

பனப்பாக்கத்தில் மணல் லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியதில் லாரி  டயரில்
சிக்கி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு  பெண்
பலி. நெமிலி போலீசார் விசாரணை

♈????????????இன்று புதுக்கோட்டை திருகோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இயற்க்கைஉணவுத் திருவிழா டைபெற்றது 300க்கு மேற் பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்பனர்

♈????????????முத்துநகரில் உணவுத் திருவிழா!

தூத்துக்குடியில் இன்றும் நாளையும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
முத்துநகர் கடற்கரையில் 2 நாட்களிலும் மாலை 5 முதல் 9 மணி வரை இத்திருவிழா நடைபெறும்.
தமிழகத்தின் பல்வேறு உணவு வகைகள் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளன!

♈????????????திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள SBI Mai N Branch ல் பணம் போடும் எந்திரம் பழுது பொதுமக்கள் அவதி கண்டுகொள்லாமல் தூங்கும் நிர்வாகம்

♈????????????காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்இரா.கஜலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

♈????????????ஹஜ் யாத்திரை தொடக்கம்: 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு!

சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரம் மெக்கா.
இங்கு இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது.
இதையொட்டி சவுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்கின்றனர்!

♈????????????திருச்சி:ஸ்ரீரங்கம்:
கர்நாடக அரசு காவேரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதை கண்டித்தும்,காவேரி பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் உய்யகொண்டான் வாய்க்காலில் பந்தல் போட்டு குடியோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

♈????????????*கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே ரூ.15 கோடி செலவில் 95 மீட்டர் நீளத்துக்கு புதிய நடைபாலம் அமைக்கப்படுகிறது.*

♈????????????அறந்தாங்கியில் அரசு மருத்துவமனை முன்பு நேற்று தெரித்தின கோட்டை பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி சாலை விபத்தில் இறந்து போன ேசக் அபத்துல்லா மற்றும் அவரது மனைவி அபிகாவின் உறவினர்கள் மருத்துவமனை அலட்சியத்தாலும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

♈????????????
vishwarubam9962023699
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு – ரியோ 2016 பாராலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரருக்கு பரிசு அறிவித்த முதல்வருக்கு நன்றி என மாற்றுத்திறனாளி வீரர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித் பேட்டியளித்துள்ளார். மேலும் மாரியப்பனின் தாயாரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

1] தமிழகத்தில் மீதம் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

2] மனிதர்கள் போலவே நடனமாடும் நாய் : கலக்கல் வீடீயோ -பொதுவாக சிலருக்கு நடனம் ஆடும் திறைமை இருக்கும். ஆனால், ஒரு நாய் மனிதரை போலவே நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள நாய், தன்னுடன் நாடும், தன்னுடைய பயிற்சியாளரை பார்த்து அவர் எப்படி ஆடுகிறாரோ அப்படியே அதுவும் ஆடுகிறது.

3] சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது -குஜராத், காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை அங்குள்ள மருத்துவர் ரமேஷ் பலாத்காரம் செய்துள்ளார்.

4] பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் வென்ற தக்கப் பதக்கமே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசு அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெண்கல பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர் வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது விளையாட்டுத்துறை அமைச்சகம்

5] தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சி
நம்பர் நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் பிரகாச நாயகன் நடிக்கிறார். இந்த செய்திக்குப் பின்னாலுள்ள திரைமறை விஷயங்களைத்தான் கோடம்பாக்கத்தில் கூடிக் கூடி பேசுகிறார்கள். ரௌடி படத்தின் மூலம் நம்பர் நடிகையின் காதலரான சிவனுக்கு நல்ல பிரேக் கிடைத்தது. அவர் இயக்குகிறார் என்றால் நடிக்க பலரும் தயார். ஆனால், காதலரின் விருப்பம் தலயை இயக்குவது. காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற தலயிடம் தூது அனுப்பியிருக்கிறார் நம்பர் நடிகை. ஆனால், எதிர்தரப்பில் நோ ரெஸ்பான்ஸ் .கடைசியில் நடிகையே தலயை சந்தித்து, தனது காதலருக்கு படம் நடித்துத் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் வளைவே இல்லாத நேர்கோடாக இருக்கும் தல, அது சாத்தியமில்லை என்று காரண காரியங்களுடன் கூறியிருக்கிறார். ஏமாற்றமடைந்த நடிகை அடுத்து, பிரகாச நடிகரிடம் வந்துள்ளார்
பிரகாச நடிகர், கௌதம இயக்குனரின் படத்திலிருந்து விலகிய போது, இயக்குனரை வாலன்ட்ரியாக அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் தல. இப்போது தல ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு மறுத்துள்ளார். விடுவாரா பிரகாச நடிகர்? உடனே ஓகே சொன்னதோடு, லயன் முடிந்ததும் சிவன் படம்தான் என்று நடிகையிடம் உறுதியளித்திருக்கிறார். இந்த ஈகோ காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர், சாதிய கொம்பு சீவும் படங்களை எடுத்து வரும் இயக்குனர். அவர்தான் பிரகாச நடிகரை அடுத்து இயக்குவதாக இருந்தது. நடிகை இடையில் புகுந்ததால் அவரது படம் தள்ளிப் போயிருக்கிறது

இந்த கதை இப்படியென்றால், இரண்டு முகம் கொண்டவரின் கதை வேறு மாதிரி. அவர் நடித்த ஓரெழுத்துப் படம், பிரமாண்ட இயக்குனர் காரணமாக தறி கெட்டு ஓடியது. அதனை நடிகரின் வெற்றி என்று சொல்ல முடியாது. அடுத்து அவசர கோலத்தில் பத்து எண்றதுக்குள்ள ஒரு படத்தில் நடித்தார். படம் பப்படம். அதிகம் எதிர்பார்த்த இரண்டு முகத்துக்கும் சரியான முகவுரை எழுதவில்லை பத்திரிகைகள். நடிகர் நல்லா நடிச்சிருக்கார் என்று சர்ட்டிபிகெட் தருகிறவர்களும் படத்தின் இரண்டாம் பகுதி குறித்து எதிர்மறையாகவே எழுதியுள்ளனர்.இனி எந்த மாதிரி படத்தில் நடித்தால் எடுபடும் என்ற தீராத குழப்பத்துக்கு நடிகர் ஆளாகியிருக்கிறார். நடிக்கத் தெரிந்தவர்களின் நிலையே இப்படியென்றால்… கஷ்டம்தான் சினிமாவில் நீடிப்பது

6] சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார், கேதரின் தெரேசா

7] பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் -பெங்களூரில் பிறந்த நாள் விழா ஒன்றுக்கு சென்ற சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.

8] 104 ரூபாயும், ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை பலாத்காரம் செய்துகொள்: கொடூர தாய்! -ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.

9] ரூ.1,34,000 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் ‘ஜியோ’ உருவாக்கத்தின் பிண்ணனி என்ன??? -ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1 ரூபாய் கடன் கூட இல்லாமல் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இருப்புடன் சிறப்பான நிலையில் இருந்தது. இதனாலேயே இந்திய வர்த்தகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குத் தனி மதிப்பு இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், பாலிமர் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெலிகாம் துறையில் 1,34,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோ நிறுவனத்தை உருவாக்கியது. 2,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் செழிப்பான நிலையில் இருந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 6 வருடங்களுக்கு முன்பு இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தில் 95 சதவீத முதலீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கத் துவங்கியது. இதன் பின்னர் டெலிகாம் பிரிவிலும் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியது. கடந்த 7 வருட வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்தகளின் பங்குகள் இந்திய சந்தையில் ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகத்தில் தனது கால்தடத்தைப் பதித்தது.
ரிடைல் வர்த்தகத்தில் போதுமான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற முயற்சி செய்து வரும் சூழ்நிலையில், ரிஸ்க் என்றாலும் பாதாளத்தில் வழும் அளவிற்கு ரிஸ்க் இல்லை என்ற எண்ணத்தில் டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளது.
ஒரு நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவுகளை அதிகளவில் பிரிந்து வெற்றி பெறும்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் முதலீட்டின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பது ரிலையன்ஸ் போட்டுள்ள கணக்கு.

10] ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை அதன் தாய் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது -கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஜெய்பூரில் 4 மாத பெண் குழந்தையின் உடல் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.தடயவியல் பரிசோதனையின் மூலம் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கை நகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்

11] நடிகையை திருமணம் செய்யப்போகிறார் யுவராஜ் சிங்! -இவர் பாலிவுட் நடிகையான ஹேசல் கீச்சை வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இந்த தகவலை யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் உறுதி செய்துள்ளார். இது ஒரு காதல் திருமணம்.மேலும், யுவராஜின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் என்று ஷப்னம் சிங் கூறியுள்ளார். பில்லா, பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்தவர் ஹேசல் கீச் என்பது குறிப்பிடத்தக்கது.

12] காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

13] இனி பத்ம விருதுகளுக்கு உரியவர்களை மக்களே தேர்ந்து எடுக்கலாம்

14] சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளதாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

15] பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

16] புனித ஹஜ் பயணம் பலத்த பாதுகாப்பு ஈரான் புறக்கணிப்பு

17] * போதை அதிகமானதால் கார் ஓட்டும்போது சுயநினைவு இழந்த பெற்றோர் 4 வயது மகன் தவிப்பு* அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில்

18] கர்நாடகத்தின் வலையில் தமிழக, மத்திய அரசுகள் சிக்க கூடாது -டாக்டர் ராமதாஸ் அறிக்கை

19] திருமூர்த்தி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு ஜெயலலிதா உத்தரவு

20] ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற இடத்தில் எம்.ஐ.ஜி.ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக தப்பித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன

21] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

22] ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

23] தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணி சென்னையில் காலமானார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் திருப்பூர் மணி ஆகும்

24] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு ரூ.50000 பரிசு வழங்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

25] பதக்கம் வென்ற மாரியப்பன், வருண்சினங் பட்டிற்கும் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

26] சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளதா என திருச்சி விமான நிலையத்தில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்

27] மும்பை: மும்பையில் ராஜ் தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்கக் கோரி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் கபில் சர்மா இல்லத்தின் முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தன்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா டிவிட்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், கபில் சர்மா இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

28] காவிரி பிரச்சனை தொடர்பாக மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினால் மட்டுமே போதாது : திருமாவளவன்

29] மேற்கு வங்கத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு

இன்றைய காலை நேரச் செய்திகள் சுருக்கம்

காலை செய்திகள்

1] அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது

2] ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது.ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்துள்ளது

3] கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ -ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

4] புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது -பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர். பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.மின்னூக்கி அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சாம்சங் அறிவித்தது. மேலும், ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் ஆஸ்திரோலியா விமான நிறுவனங்களும் பயணியர் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுகொண்டுள்ளன.இந்தியாவின் தடை குறித்து, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக் கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக அது தெரிவித்திருக்கிறது.பாதுகாப்பு கவனங்களை நீக்கிவிடும் வகையில் திரும்ப பெறுகின்ற கேலக்ஸி நோட் 7-க்கு பதிலாக வழங்கும் புதிய செல்பேசிகளை இரண்டு வாரங்களில் வழங்கப் போவதாக சாம்சங் தெரிவித்திருக்கிறது.கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.இதுவரை 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகி உள்ளன.

5] சிரியாவில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் தவித்து வரும் பல லட்சக்கணக்கான மக்களை நினைத்து கவலைப்படுவதாக சிரியாவுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டி மிஸ்டுரா தனது பேச்சில் கவலையை வெளிப்படுத்தினார் -சில நாட்களில், அங்கு எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக நின்றுவிடும் என்றும், உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இதற்குமுன் இருந்த நிலையை விட மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6] திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி -சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் சாம்பந்தப்பட்டுள்ளார் எனவும் முகநூலில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன். நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது என்று கூறியபடியே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலீபன் மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7] விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்-முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

8] *பாலா இயக்கத்தில் கதாநாயகியாக உருவெடுக்கும் பாடகி * -இயக்குனர் பாலாவின் அடுத்தப் படைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் தற்போது புதுமுகங்களை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9] காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் ஏன் கை ஏந்துகிறோம்? : வைரல் வீடியோ -கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அங்கு பல கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை, தமிழகம் நீதிமன்றம் மூலம் போராடித்தான் பெற வேண்டியுளது.
இந்நிலையில், நாட்டு நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் ‘புட் சட்னி’ குழு, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அழிப்பு, மணல் கொள்ளை என காவிரி ஆறு வற்றிப் போனதற்கான அனைத்து காரணங்களையும் அலசியுள்ளனர்.
தவறுகளை நாம் செய்து விட்டு, தற்போது காவிரிக்காக, கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம் என்கிற தொனியில் விபரங்களை அடுக்குகிறார்கள்.

10] கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு -கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி, நடையனூர் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் நதி நீர் பாயவில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் அளவுக்கு அதிகமாக நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தின் அக்கறையான க.பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுத்ததால் காவிரியின் நதி நீர் அப்பகுதியில் மட்டுமே பாய்ந்து வருகின்றது. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்கு காவிரியின் நதிநீர் வரவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ள 15 ஆயிரம் டி.எம்.சி குடிநீர் தங்களுக்கு வரவேண்டுமென்றும், அதற்கு ஏற்கனவே எங்கள் பகுதியில் கொண்டு வர இருந்த அரசுப் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகள் அமைத்து அந்த மணல் திட்டை அப்புறப்படுத்துவதோடு, எங்கள் கரையோரங்களிலும், காவிரியின் நதிநீரை கொண்டு வர வேண்டுமென்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக தங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முகிலன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது.

11] தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு; தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்: கன்னட வெறியாட்டம் தொடர்கிறது! -இந்த முழு அடைப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் நாளிதழ்களை தீயிட்டு எரித்து, கன்னட அமைப்புகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், 54 தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை தமிழர்கள் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே இந்த தடைகளை செய்துள்ளனர். கர்நாடகாவில் தினத்தந்தி, தினமனி உள்ளிட்ட 5 முன்னணி தமிழ் நாளிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றை வினியோகிக்கும் ஏஜென்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. சில இடங்களில் அதிகாலையில் வினியோகிக்கப்பட்ட நாளிதழ்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.மேலும் 54 தமிழ் சேனல்கள் கர்நாடகாவில் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றின் ஒளிபரப்பை இன்று ஒரு நாள் நிறுத்த வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து கர்நாடக அரசு அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் டிவி ஒளிபரப்பை நிறுத்தும்படி, கேபிள் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

12] ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார் -தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் நடைபெற்றது. அதில் கன்னட முன்னனி நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.அந்த கண்டன கூட்டத்தில் பேசிய பலரும் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் இகழ்ந்து பேசினர். அதன்பின் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார் பேசினார். அவர் பேசும் போது “ எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் என்பவர் பெண்தான். எனவே யாரும் அவரை தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழ்நாடு வேறு நாடு இல்லை. நமது பக்கத்து மாநிலம்தான். கர்நாடகாவை போன்றே, தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர்.ஒரு விவசாயின் துயரம் மற்ற விவசாயிக்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

13] திரைப்பட கல்லூரி தலைவர் கருத்தால் ’சர்ச்சை’ -குருவைக் கொண்டாடும் குருகுல கல்வி முறையே தேவை என இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் கஜேந்திர சவுஹான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கஜேந்திர சவுஹான், “பாரத மாதாவின் முந்தைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம்பிக்கை களையுமே நாம் இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டியுள்ளது.அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுகளை கொண்ட ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது பழைய கல்வியமைப்பு முறையிலான குருகுல கல்வியமைப்பே இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும்” என தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் ஊழியரான கஜேந்திர சவுஹான், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, புனே நகரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கஜேந்திர சவுஹான் கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவின் உறுப்பினராக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு அரசியல் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த உயர் பொறுப்பிற்கு வருவதற்கு அடிப்படைத் தகுதியாக திரைப்படத் தொழிலில் 35 ஆண்டுகால அனுபவம் மற்றும் சிறந்த ஆளுமையாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய தகுதி இல்லாமலேயே இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14] லட்சம் முத்தங்கள்: பார்வையாளர்களை கிறங்கடிக்கும் பாடல்! -ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி இருப்பது ”பெக்ஃபையர்” என்ற ஹிந்தி திரைப்படம். இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இடம் பெறும் ”லாபான் கா கரோபார்” என்ற பாடல், லட்சம் முத்தங்களுடன் தயாராகி இருக்கிறது. இந்த பாடல், இளம்தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், முத்தங்கள் பற்றிய ஒரு ஆராய்சியினை இப்படத்தின் இயக்குனர் நன்கு செய்திருகிறார் என்பது இப்பாடலை பார்க்கும்போது தெரியவருகிறது. கலாச்சார காவலர்கள் இப்பாடலுக்கு தங்கள் எதிர்ப்பினையும் பதிவு செய்து வருகின்றனர்.

15] பரிதவிக்கும் சமச்சீர் கல்வி மாணவர்கள்! -மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி நீட் தேர்வு மட்டுமே. 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், 12-ம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிகமாக கேள்விக்கேட்கப்படுகிறது. அதனால், சமச்சீர் கல்வி படித்த பல மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் 12-ம் வகுப்புத் தேர்வில் 1117 மதிப்பெண்கள் எடுத்தவர். இவரும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுரேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் தருமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் மருத்துவ கனவிற்கு வழிவகுக்க, ஒன்று சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது, நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

16] ஒரிசாவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதனை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்

17] அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு -இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொன்னதால் இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

18] பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்! –
அமெரிக்க நாட்டில் இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவு மக்களிடத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம். மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம். அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம். அது பெரும்பாலம் குமிழ்வது போல் ஒரு சப்தத்தை எழுப்புமாம். இந்த செய்தியை கேட்டதில் இருந்து, ”நாம் உண்ணும் தாவரங்கள் நம்மை தாக்குமோ” என்று சைவ பிரியர்கள் பீதியில் இருக்கிறார்கள்.

19] ஒரு பிச்சைக்கார தமிழ் மாணவன் லண்டன் போன கதை! -ஜெயவேலுவின் குடும்பத்தினர் 80 களில் நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து, சென்னை வந்து வீதிகளில் பிச்சை எடுப்பதை தங்கள் தொழிலாக கொண்டனர். இவர்கள், சென்னையில் உள்ள, நடைபாதையில் தான் உறங்குவார்கள். மழை வந்தால், அருகில் இருக்கும் கடைகளில் தஞ்சம் புகுவோர்கள். அதுவும், காவல்துறையினர் அவர்களை வந்து விரட்டும் வரை தான். ஜெயவேலு சிறியவராக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு அவரின் தாய் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.
ஜெயவேலு பிச்சை எடுத்து கொண்டு வரும் பணத்தை அவர் குடித்தே அழித்தார். ஜெயவேலுவிடம் அணிவதற்கு ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அவர் பார்பதற்கு அசுத்தமாக இருந்தார். சென்னையில் தொண்டு நிறுவனம் வைத்து பொது சேவைகள் செய்யும் உமா முத்துராமனும் அவரது கணவரும் ஜெயவேலுவை பார்த்து பரிதாபப்பட்டு, பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஜெயவேல் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தார். பின் லண்டனில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்து.
தற்போது, அப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு, மேல் படிப்பிற்காக இத்தாலி செல்கிறார். அவரின் படிப்பு செலவு முழுவதையும் உமா முத்துராமன் தங்கள் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்கின்றனர்.

200 அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு அபராம் -உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்‌ஷா பந்தன் அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

21] * மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் நகைக்கடையில் துளையிட்டு 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பாராஸ் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நிகழ்ந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*

22] *குமாரபாளையம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20