Home Blog Page 5899

கவர்னர் சதாசிவத்தை தடுத்த நிறுத்திய கொச்சி விமான நிலைய ஊழியர்கள்

 
கொச்சி விமான நிலைய ஊழியர்கள் கேரள கவர்னர் சதாசிவம் காலதாமதமாக சென்றதால் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரள கவர்னர் சதாசிவம் நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். விமான நிலையத்திற்கு வர காலதாமதம் ஆகிவிட்டதால் விமான நிலையம் வந்திருந்த கவர்னர் சதாசிவத்தை விமான நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
 
இதனால் சிறிது நேரம் அங்கு தங்கி விட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சதாசிவம் திருச்சூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து விட்டு வர காலதாமதமாகிவிட்டதாக கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது :-
 
கேரள கவர்னர் சதாசிவம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்காக இரவு 9.20 மணிக்கு வருவதாக தெரிவித்தனர். ஆனால் 11.40 வரை வராத காரணத்தினால் விமானம் எடுக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது என்று கூறினர்.
 
தமிழகத்தை சேர்ந்த கவர்னர் சதாசிவம் ஏப்ரல் மாதம் 2014-ம் ஆண்டு கேரள கவர்னராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
 
கொச்சி விமான நிலையத்தில் கவர்னர் சதாசிவத்தை விமான ஊழியர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:
தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள். அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானோர் பாடப் புத்தகங்களையும் நோட்டுகளையும் மழையால் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக புத்தகம் நோட்டு முதலானவைகளை அளிப்பதாக அறிவித்திருந்தது. இதுநாள் வரை முழுமையாக அம்மாணவர்களை அவை போய் சேரவில்லை. பள்ளி திறந்து ஒருவாரம் ஆன நிலையில் இதன் காரணமாக பாடங்கள் எதுவும் நடத்த இயலவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாத காலமாக விடுமுறையில் இருந்ததால் மாணவர்களிடைய கல்வி பயில்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கிற நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக மற்ற மாவட்ட மாணவர்களுக்கு இணையாக தேர்ச்சி பெற வைக்க முடியும்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவையற்ற வீணான விடுமுறையை திணிக்கிறது. வருகின்ற டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 3ம்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வம் குறைந்து எதிர்காலத்தில் இம்மாணவர்களின் வாழ்வில் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழர் பண்டிகையாம் பொங்கலின்போது தேர்வை அறிவித்திருக்கிறது. போகி பண்டிகையன்றும் காணும் பொங்கலுக்கு மறுநாளும் பொதுத் தேர்வு நடத்து இருக்கின்றனர். இதுவும் மாணவர்களின் ஆர்வத்தை பெரிதும் பாதிக்கும்.
பொங்கல் பண்டிகையின் இடையில் தேர்வை வைப்பதை தவிர்க்க இந்துமுன்னணி பள்ளிக் கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது.

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழகஅரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது.
அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண்(Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.
தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10&15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது.
இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்.

நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

சென்னை:
கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உடமைகளையும், பயிர்களையும் இழந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியமும் பாரபட்சமும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரழிவை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு பதிலாக, நிவாரண உதவி வழங்குவதிலும் ஊழல் செய்ய ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்டமும் ஒன்றாகும். மூன்று கட்டங்களாக பெரும் மழை பெய்த நிலையில் அனைத்துக் கட்டங்களில் பாதிக்கப் பட்டது கடலூர் மாவட்டம் தான். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் கவுரவமாக வாழ்வதற்கான எந்த ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரவில்லை. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை மற்றும் பணப் பயிர்கள் மழை&வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் இந்த வெள்ள பாதிப்பை சமாளிக்க முடியாது.
இத்தகைய சூழலில் தமிழக அரசு வழங்கும் நிவாரண உதவியை வைத்து தான் நிலைமையை ஓரளவாவது சமாளிக்க முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நெல்லுக்கு விவசாயிகள் ரூ.25,000 இழப்பீடு கோரியிருந்த நிலையில், தமிழக அரசோ ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு அறிவித்திருக்கிறது. மற்ற பயிர்களுக்கான இழப்பீடும் கூட விவசாயிகள் கோரியதில் பத்தில் ஒரு மடங்கு என்ற அளவில் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இழப்பீட்டைக்கூட முறையாக வழங்க தமிழக அரசு தயாராக இல்லை.
கடலூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் வெறும் பதராக மாறிவிட்டன. அவை எதற்கும் பயன்படாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பதராக மாறிய நெல்லை சேதமடைந்தவையாக பதிவு செய்ய மறுக்கின்றனர். அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான பயிர்களும், அவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்களின் பயிர்களும் வெள்ளத்தில் சேதமடைந்து விட்டதாக பதிவு செய்யும் அதிகாரிகள், உண்மையாகவே சேதமடைந்த பயிர்களை பதிவு செய்ய மறுக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் கிராமம், கிராமமாக அழித்தது. அப்படியானால் ஒரு ஊரில் ஒருவருக்கு சொந்தமான பயிர் அழிந்திருந்தால், அவ்வூரைச் சேர்ந்த மற்றவர்களின் பயிர்களும் அழிந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினர் கூறும் வயல்களில் மட்டுமே பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், மற்றவர்களின் வயல்களில் இருந்த பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் பதிவு செய்வது எந்த வகையில் சரியானதாக இருக்கும் என்பது புரியவில்லை.
காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய நான்கு ஒன்றியங்களில் பழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடலூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனராக பணியாற்றி வரும் இளங்கோவன் தான் அனைத்து குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணம் என உழவர்கள் குற்றஞ்சாற்றியுள்ளனர். இவரைக் கண்டித்து அவரது அலுவலகத்தை உழவர்கள் முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று கூட நிவாரண உதவி வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து காட்டுமன்னார்கோயில் லால்பேட்டையில் உழவர்கள் போராட்டம் நடத்தினர். வேளாண்துறை துணை இயக்குனராக பணியாற்றும் இளங்கோவன் கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதவியாளராக இருந்தவர். அந்த அடிப்படையில், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு, திமுகவுக்கு ஆதரவாக தேவையில்லாத குழப்பங்களை இவர் உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கு உரிய நிவாரணம் வழங்குவது தான் அறம் ஆகும். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், நீண்ட கால பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற மக்களுக்கும் அவர்களின் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தேவையற்ற குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமான கடலூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அனிருத் என் மானசீக ஹீரோ: கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்

 

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் சுரண்டுகிறார்கள், பாவப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடுகிரார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ‘சாய்ந்தாடு’ படத்தில், இந்திய – மலேசிய கூட்டுத் தயாரிப்பான மனீஷா கௌர் என்ற அழகி நடித்து, அராபிய வகைப் பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியிருக்கிறார். அவரின் நடனத்தையும், உடல் வனப்பையும் கண்டு இப்பவே தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு வருகிறார்கள். தமிழ்சினிமாவை பற்றியும், ரசிகர்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த பஞ்சாபி பெண்ணிடம் பேசிய போது-

உங்களைப் பற்றி…?

நான் பஞ்சாபி மலேயா பெண். நடனம் எனது பேஷன்.

‘சாய்ந்தாடு’ படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது…?

‘சாய்ந்தாடு’ படத்தில் ஒரு அராபிக் டைப் கிளப் பாடலுக்கு மலேசியாவில் டான்ஸ் ஆடவும், மலேசியா போர்ஷனில் நடிக்கவும் டைரக்டர் கஸாலி ஆள் தேடுவதாகக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டேன். ஆடிஷனில் என் நடனத் திறமை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதுபோக, ‘அரபுக்குதிரை நீதானோ..’ என்ற பெப் பாடல் மிக அற்புதமாக இருந்தது. சினிமாவுக்காகக் காத்திருந்த எனக்கு ‘சாய்ந்தாடு’ படமும், ‘அரபுக்குதிரை..’ பாடலும் மிக அருமையான சந்தர்ப்பம் என்றே கருதுகிறேன். மேலும், ‘அரபுக்குதிரை’ பாட்டுக்கு நான் போட்டிருக்கிற குத்தாட்டத்துக்கு கூடிய சீக்கிரம் தமிழ்நாடே என்னோட சேர்ந்து ஆடினாலும் ஆச்சர்யமில்ல..

இதுவரை எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்?

தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ‘சாய்ந்தாடு’ படம் முழுவதுமாக முடிந்து விட்டது. கூடிய விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படம் வெளிவந்தபின் தமிழில் குத்தாட்டத்துக்கு எனக்கென்று தனியிடம் இருக்கும். இப்பவே என்னுடைய புகைப்படங்கள் எப்படி லீக் ஆனதோ தெரியவில்லை. குத்தாட்டம் போட கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் சாய்ந்தாடு வரட்டும். ஏனென்றால் அதில் நான் வெறும் குத்தாட்டம் மட்டும் போடவில்லை. படத்தின் முக்கியமான சில காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

இனிவரும் படங்களிலும் குத்தாட்டம் போடுவதுதான் எண்ணமா?

என் உடல்வாகுக்கு ஏற்பதான் எனக்கு ரோல் கொடுப்பார்கள். அதனால் நான் நம்புவது குத்தாட்டத்தைதான்.

தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்?

தனிப்பட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. அஜீத், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா! அதற்கப்புறம் அனிருத்தை ரொம்ப பிடிக்கும். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது தோற்றம், உடல்வாகு, சில ஆல்பங்களில் அவரது பிரசன்டேஷன்… ரியலி ஹீ இஸ் வெரி நைஸ் & ஹீ இஸ் மை சாய்ஸ்.

உங்க முதல் படமான ‘சாய்ந்தாடு’ பற்றி?

மெடிக்கல் கிரைம் கதை. சில காட்சிகளைக் கண்டேன். சூப்பர். கிராஃபிக்ஸ் நிறைய இருக்கு. ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்தான்.

‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ் & அனு கிருஷ்ணா நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சுப்பு பஞ்சு, மனீஷாவோடு ரிமாலா பல்லன் என்ற மலேசிய பெண்மணி, கிரேன் மனோகர், காதல் சுகுமார், பாவா லக்‌ஷ்மணன், அல்வா வாசு, நெல்லைசிவா, கிங்காங் மற்றும் ஆங்கிலேயர்கள் & ஆப்பிரிக்கர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

பீப் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன்?

பீப் பாடலை வெளியிட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று தகவல் பரவியுள்ளது. விளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு என்று பரவலாக பேசப்படுகிறது.

விளையாட்டாக நினைத்து பீப் பாடலை இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதுவே தற்போது அவருக்கு வினையாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ‘பீப்’ பற்றிய புதிய சர்ச்சைப் பாடலை விளையாட்டாக நினைத்து அவர் தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார். அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்குதான் இந்தப் பாடலை முதலில் பகிர்ந்துள்ளார். அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் இணையதளத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்; அந்த நண்பர்களில் ஒருவர் இணையத்தில் பொதுவில் ஏற்றியுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது. நண்பர்களுக்குள் இவர்கள் பகிர்ந்து கொண்டது தற்போது வினையாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி காலமானார்

 
 
அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி (52) உடல்நலக் குறைவால் 21-12-2015 அன்று இரவு காலமானார்.
 
அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆகும். ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரமூர்த்தி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
 
தாராபுரம் தனித் தொகுதி ஈரோடு மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது, 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கதர் மற்றும் கிராமத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.
 

 

சிம்புவின் பீப் பாட்டுக்கு பாட்டால் பதிலடி கொடுத்த பெண்

சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புனிதா ராஜா என்ற பெண், பொண்ணுங்கள தப்பா பேசாத என்ற தலைப்பில்  பாடலைப் பாடி இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்…

அவரது பதிலடிப் பாடல்: 

 

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-5

கோயில்களில் நாம் மண்டபங்களின் மேல்புறத்தில், கொடுங்கையில் வரிசையாக பொம்மைகள், உருவங்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். பூத கணங்களாக, விகார உருவங்களுடன், மோசமான செய்கைகளுடன்…
ஆனால்… அத்தகைய விகார ரூபங்களையும் கண்டு, குப்பைகளைக் கடந்து குணக்குன்றை அடைவதுபோல், அவற்றைக் கடந்து, அழுக்குகளை மனத்தில் இருந்து அகற்றி, தெள்ளிய மனத்துடன் பெருமானைக் காணச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை நல்குவர்.
அன்று அத்தகைய நிலையை என் மனதும் அனுபவித்தது. ஏகாதசி காலை நேரம் தாயார் சந்நிதியை ஒட்டிய வடக்குவாசல் பகுதிக்குச் சென்ற போது, பெரியவர்கள், வயதானவர்கள், பெண்மணிகள் என எத்தனையோ பேர் ஆயிரங்கால் மண்டபம் செல்ல வேண்டும், இது எங்கள் வழக்கமான பாதை…. என்று மன்றாடிக் கொண்டிருக்க, காவலர்கள் தடுத்து நிறுத்தி விரட்டிக் கொண்டிருந்தனர். டி.எஸ்.பி., கந்தசாமி ஒரு படி மேலே போய்… மனுசனா இருந்தா சொல்லுறது மண்டைல ஏறும்… நீங்கள்லாம் மனுசங்களா என்று கேட்ட போது… என் மண்டைக்குள்ளும் ஜிவ் என்று ஏறியது! அங்கே நின்றிருந்தவர்களில் பலர், பெரிய பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சிலர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்… அவர்கள் எவரும் குறுக்கு வழியை நாடவில்லை! பாரம்பரிய உரிமையைக் கோரினார்கள்… அவ்வளவே!
ஐயா கந்தசாமி பற்றி விசாரித்தேன் நட்பு வட்டங்களிடம்! விராலிமலை இன்ஸ்பெக்டராக இருந்து ஓரிரு பிரச்னைகளில் சிக்கி, சில இடங்களுக்கு மாற்றப்பட்டு, இப்போது தூத்துக்குடியில் டி.எஸ்.பியாக இருந்து, கோயில் பாதுகாப்புக்கென சிறப்பு பணி நிமித்தம் அனுப்பப் பட்டுள்ளார்.
எனக்கு எவர் மீதும் தனிப்பட்ட விரோதம் இருந்ததில்லை. ஸ்ரீராமானுஜ மார்க்கம் காட்டிய வழியில், மனிதர் எவரையும் நான் வெறுப்பதில்லை; அவர்களின் தனிப்பட்ட குணங்களை, செயல்களை மட்டுமே வெறுத்து அப்போதைய நிலையில் ஒதுக்கி (ஒதுங்கி) விடுவேன். பல்வேறு சூழ்நிலைகளில் எனக்கு பாதகம் செய்தவர்களே அதிகம்! ஆனாலும் அவர்கள் மீது விரோதம் பாராட்டியதில்லை; அப்போதைக்கு அதை சுட்டிக் காட்டி விமர்சித்து ஒதுங்கிவிடுவேன்! அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மாற்றிக் கொண்டால், மீண்டும் அவர்களுடன் தொடர்பு புதுப்பிக்கப்படும்!
ஆக, திருவாளர் கந்தசாமிக்கும் என் நட்பு வட்டம் மூலம் கொடுத்த செய்தி… இங்கே காட்டிய வீரத்தை ஐயா தூத்துக்குடியில் இன்னும் பல மடங்கு காட்டுங்கள் என்பதே! செத்த பாம்பை அடித்த வீரனாக, அப்பாவி மக்களை விரட்டி பேர் வாங்கிக் கொள்ளாதீர்கள் என்பதே! ஆம்பூரில் அடி வாங்குவீர்கள்; திருவரங்கத்தில் தீரம் காட்டுவீர்கள்! அதானே!
திருவரங்கம் மிகப் பெரும் கோயில். இதுவரை நெரிசல் நெருக்கடி என்று எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை! கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் மனித ம(இ)னத்தைச் சேர்ந்தவர்கள்தான் கோயிலுக்கு வருகிறார்கள். கொள்ளிடத்தைப் போல் பெரிய கோயில்! கம்பு கட்டி வரிசையாக போக ஏற்பாடு செய்து, உதவிக்கு ஒரு நூறு காவலர்கள் இருந்தாலே போதுமானது!
கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள், உள்ளூர் தொண்டர்கள் ஆகியோரை அந்த ஓரிரு நாட்களுக்கு உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். இத்தனைக் காலமும் இப்படித்தான் நடந்தது. பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த காலத்தே, இதே பாதுகாப்புப் பணியில் என்.எஸ்.எஸ் மூலம் அடியேனும் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது இருந்த பக்தர் கூட்டம் குறைவின்றி இப்போதும் இருக்கிறது. ஆனால்… கோயில் முழுமையும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஊரில் உள்ள மக்களையும் தொந்தரவு செய்து, நீ அந்த தெரு வழியே போகக் கூடாது, இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது, இங்கே செல்லக் கூடாது, இங்கே வரக்கூடாது என்று கட்டளை போட்டு… இதெல்லாம் தேவையற்றது.
***
இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கிறதே… நண்பர் இணை ஆணையர் ஐயா ஜெயராமன் எங்கிருக்கிறார் பார்ப்போமே என்று தேடிப் பார்த்தேன். ம்ஹும்.. ஆளையே காணோம்… அலுவலகம் பூட்டப் பட்டிருந்தது. வரிசையாக எல்லா அறைகளும் இழுத்து மூடப்பட்டு இருள் கவிந்து கிடந்தது. பாவம்… என்ன நெருக்கடியோ? ஏன் இந்தப் பிக்கல் பிடுங்கல் என்று மூன்று நாளாக கோயில் பக்கமே எட்டிப் பார்க்கவில்லையாம். ஒரு வேளை அவரும் வெகுஜன வேஷம் கட்டி மஃப்டியில் வந்தாரோ என்னவோ? அப்படித்தான் அடியேனும் எண்ணவோ? தெரியாது.
இந்த லட்சணத்தில் கும்பாபிஷேகத்தில் முன்னணியில் இருந்த பெரும்புள்ளி ஒருவர், ஏகாதசீ விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீஸார் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தாராம்… உள்ளூர்வாசிகள் பேசிக் கொண்டார்கள்.
***
சினிமா டிக்கெட் ப்ளாக்கில் வாங்கி கேள்விப் பட்டிருப்போம்… ரசிகர்கள் அடிதடி போட்டு முதல் நாள் முதல் ஷோவைப் பார்த்துவிட வேண்டும் என்று எவ்வளவு வேண்டுமானும் காசு கொடுத்து பார்த்துவிடுவதுபோல்!
இங்கே, “சொர்க்கத்துக்கு போக ரூ. 10 ஆயிரம்” என ஏலம் போயிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரமபத வாசல் திறப்புக்கு ரூ.3 ஆயிரம் என வசூலித்து டிக்கெட் கொடுத்து, அவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்திருந்தார்கள். ஆனால்… முன்பேயே டிக்கெட் வாங்கி வைத்து, அதை ரூ.10 ஆயிரத்துக்கு சிலர் பிளாக்கில் விற்றதாகவும், ரூ. 250 டிக்கெட்டை ரூ. 2 ஆயிரம் வரை விற்றுத் தீர்த்ததாகவும் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.
காசு கொடுத்து கடவுளை தரிசிக்கும் கொள்கைக்கு முரணானவன் என்பதால், இதன் உண்மைத் தன்மையை நேரில் அனுபவித்து உணர்ந்திலேன். முன்பெல்லாம் இவ்வாறு செல்வதை அருங்காட்சியகத்தில் காசு கொடுத்து சிலைகளை ரசித்துப் பார்க்கும் உணர்வுதான் எழுகிறது என்று குறிப்பிட்டேன்…. இப்போது ரிலீஸாகும் சினிமா ரேஞ்சுக்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது போலும்!
ஆக… இந்த கலெக்‌ஷன் எல்லாம் யார், யாருக்காக, யாரை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டது என்பது அந்த அரங்கனுக்கே வெளிச்சம்! அரங்கன் வெறுமனே துயில் கொண்டிருப்பதாக இத்தகையவர்கள் எண்ணக் கூடும். ஆனால், அவன் யாரை எப்படி எப்போது தூண்டிவிட்டு, இத்தகையவர்களுக்கு அடி கொடுப்பான் என்பது யாருக்கும் தெரியாது!
***
ஆக… திருவரங்க வைகுண்ட ஏகாதசித் திருவிழா குறித்த இந்த ஐந்து பதிவுகளின் முடிவில் எனக்குத் தோன்றுவது… நம் முக்கியப் பண்டிகைகளைக் குலைக்க சதி நடக்கிறது. கோயில்களுக்கு வெகு ஜனங்கள்/ பாமர மக்கள் வருவதைக் குறைக்க சதி நடக்கிறது. போலீஸாரைக் குவித்து கோயிலை சீல் செய்துவிட முனைப்பு காட்டுவது தெரிகிறது. இதற்கு சில பெரும் பணக்கார வர்க்க, அதிகார வர்க்கம் உடந்தையாக இருப்பது தெரிகிறது. தங்கள் சொந்தபந்தங்கள், காசு கொடுத்து கடவுளைப் பார்ப்பவர்கள் வசதிக்காக, வெகுஜனங்களை விரட்டி விடும் முனைப்பு தெரிகிறது!
கடந்த சில வருடங்களாக இதே நிலை! இது நீடித்தால்… நிச்சயம் ஓர் எழுச்சி ஏற்படும். எதற்கும் ஒரு எல்லை உண்டு; முடிவு உண்டு #மக்களே!

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-4

கருட மண்டபத்தில் பெருமானை மோஹினி அலங்காரத்தில் சேவித்ததிலும் சரி… இன்றைய தின ஆயிரங்கால் மண்டப தரிசனத்திலும் சரி… மிக மிக திருப்தியுடன் இருந்தது பெருமாளின் திவ்ய ஸேவை. உள்ளே கூட்டம் இல்லை. வெறிச்சோடி இருந்தது பல இடங்கள். பரமபத வாசல், தாயார் சந்நிதி, ஆயிரங்கால் மண்டபம் எல்லாவற்றிலு விரைவில் சென்று தரிசிக்க முடிந்தது. பெருமாளின் முத்தங்கி சேவையை தவற விட்டாயிற்று. கொடிமரத்தின் அருகிலேயே மக்களை நிறுத்தி வரிசை கட்டி, டிக்கெட்டுக்கு விட்டிருந்தார்கள்.

இவ்வளவு விரைந்து ஸேவிக்க வழி ஏற்படுத்திய காவல் துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டோ பாராட்டு அவ்ளோ பாராட்டு!!

கோயிலுக்கு வெளியிலேயே மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

செயின் பத்திரம், செல்போன் பத்திரம், கழுத்தில் கவனம் இருக்கட்டும். உங்கள் அருகிலேயே டிப் டாப் ஆசாமிகள் இருப்பர். அவர்கள் திருடனாகவோ திருடியாகவோ இருக்கலாம். பொருள் போன பிறகு அழுது பிரயோசனமில்லை. உள்ளே கூட்டம் அதிகம் உள்ளது. சொர்க்க வாசலுக்கு செல்பவர்கள் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக செல்லவும்.

ராமானுஜர் சந்நிதி வழியை அடைத்து விடுங்கள். அங்கே பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் கவனத்துக்கு.

– இப்படியாக ஓடிக் கொண்டிருந்தது அறிவிப்புகள்.

இதைக் கேட்ட உள்ளூர் அன்பர்கள் பெரும்பாலும் இந்த முறை ஓரங்கட்டி விட்டார்கள்.

காவல் துறை பாதுகாப்பு வேண்டும் தான்! ஆனால் இந்த அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ நிற்க வேண்டுமே என்று நின்று கொண்டிருந்தார்கள். பலர் செல்லில் ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள். பெண் காவலர்கள் சிலர் சாவஹாசமாக கால் நீட்டி அமர்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை இருந்தும், தங்கள் தலையிலேயே அடித்துக் கொண்டு, பக்த ஜனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டபடி, இதெல்லாம் தேவையில்ல சார் என்று கூறிய படியே புன் சிரிப்புடன் மக்களை நகர்த்திக் கொண்டிருந்த ஓரிரு காவலர்களையும் காண முடிந்தது. அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டபடியும் கட்டுப் படாத மனநிலையிலும் சிலர்….

***

உண்மையில், இத்தனை களேபரங்கள் தேவையில்லைதான்! கம்பு கட்டி விட்டிருக்கிறார்கள். வரிசையை ஒழுங்காக அமைத்து, தெற்கு, கிழக்கு, வடக்கு மூன்று வாசல்களிலும் மக்களை அனுமதித்து, அழகாக கூட்ட மேலாண்மையை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கலாம்.

பரமபத வாசலா – வடக்கு வாசல்+ தெற்கு வாசல் வழி. பெருமாள் சேவையா – தெற்கு வாசல் + வடக்கு வாசல் வழி! ஆயிரங்கால் மண்டபமா – கிழக்கு கோபுர வழி… உள்ளே நுழைந்ததும், வரிசையை இரண்டாகப் பிரித்து, பரமபத வாசல் தனி, பெருமாள் சந்நிதி தரிசன வழி தனி என்று … இத்தனை நாட்கள் இருந்த நல்ல ஏற்பாடுதான்! ஆனால் இப்போது ஓரிரு வருடங்களாக மாற்றம் ஏனோ?

எல்லாருமே தெற்கு வாசல் வழியே மட்டுமே வர வேண்டும் என்று, ஒட்டு மொத்தமாக அனுப்பி, வரிசையை வடக்கு உத்தர வீதி வரை கொண்டு சென்று…

ஏன் இப்படி? என்ன சாதித்தார்கள் போலீஸார்?

இவர்களின் செயலால் கோயிலில் கூட்டம் அதிகம் என்ற கற்பனை வெளியில் பகிரப்பட்டது. ஆனால், உள்ளே எப்படி இருந்தது என்பதற்கு சில போட்டோக்களை பகிர்கிறேன்.

ஆக… எனக்குள் எழும் சந்தேகம் நிவர்த்தியாக வேண்டுமானால்… – யார் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது என்பதை காவல் துறை உடனே கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

கூட்டம் கூட்டம் என்று பூச்சாண்டி காட்டி… உள்ளே விட மறுத்து… இவர்கள் துரோகம் செய்தது – திருச்சி நகரைச் சுற்றியுள்ள சுத்துப்பட்டு கிராமத்து ஜனங்களைத்தான்!

அவர்கள் தான் உண்மையில் அரங்கனின் மேல் உயிரையே விடுபவர்கள். எத்தனை ஆசையுடன் பஜனை, ராம நாமம், ரங்க ரங்கா கோஷம் என அவர்கள் அந்த மணல் வெளியில் பொழுதைக் கழிப்பார்கள்??? அரங்கனை விட அந்த அடியார்களின் பக்தியைக் காண்பதில்தான் என்ன வோர் ஆனந்தம் இருந்தது.

ஆனால்… எல்லாம் பாழ் ! பாவம், அவர்கள் இரவு 11 மணிக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். காசு உள்ளவன் மூவாயிரத்தையும் கூடவே எதையும் கொடுத்து தன் டாம்பீகத்தை வெளிப்படுத்தி, நானும் பெருமாளை ஸேவித்தேன் தெரியுமோ? மூவாயிரம் ரூபா டிக்கெட்டாக்கும்… என்று பீற்றிக் கொள்வான். ஆனால் அந்தப் பரிசனங்கள்…?

தரிசனம் இன்றி தவித்துப் போனார்கள். !

எங்கு நோக்கினும், காகிகள்… உள்ளே வந்த வண்டிகள் அதிமுக கொடி கட்டிய பாஸ் வைத்த வண்டீகள், மற்றும் அத்தனை காவலர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை சுமந்து வந்த காவல் வண்டிகள். கோயில் உள்ளே பிரசாதங்கள் என்ற பெயரில் தேவஸ்தான கடைகளில் விற்கப்படும் புளியோதரை, பொங்கல், தயிர்சாதம், தோசை, தேங்குழல் வகையறாக்கள் மட்டுமே இருக்க்கும். ஆனால் இப்போதோ மண்டபங்களில் போலீஸ்காரர்கள் சாம்பார் பொட்டலங்களையும் சட்னி பொட்டலங்களையும் பிரித்து அங்கங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்…

காவல் துறை அதிகாரிகளுக்கு ஸ்ரீரங்க நகர்வாசிகள் போல் நானும் சொல்லிக் கொள்வது இதுதான்…! Crowd Management முறையாகக் கையாளுங்கள். இது அரசியல் கூட்டம் அல்ல. பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே!