Home Blog Page 5944

பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்

 

சட்டமன்ற தேர்தலுக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, வரும், ஜனவரியில் வெளியிடப்படும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாய் போதாதது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுனாமி, தானே புயல்களால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, தி.மு.க.,அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

தேசிய அளவில் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதும், தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதற்கு, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள்தான் காரணம். மாநில அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னையில் அம்மா படகு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என, தமிழக அரசுக்கு யோசனையாகவே சொல்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் எளிதாக மற்ற நீதிமன்றங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை, உயர்நீதிமன்ற நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மணல் கொள்ளை குறித்து பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளையை கண்டுகொள்ளவில்லை. பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்க மாட்டோம். அதை நீதிமன்றங்கள் பார்த்து கொள்ளும். வரும் ஜனவரியில், பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வாஜ்பாய், மன்மோகன்சிங் பிரதமராக, பா.ம.க ஆதரவு அளித்த போது, குறைந்தப்பட்ச செயல் திட்டம் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வுடன் வைத்தது தொகுதி உடன்பாடு தான். அது முடிந்து விட்டது. பா.ம.க ,வோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகள் குறித்து, தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாய்ப்பால் ஏன் அவசியம்?

 

 
 
னது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக, முதலவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுர ஊரும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். 
 
அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகிறார்கள். 
 
வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள் அது குழந்தையாய் இருக்கும் போது  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் போதும். இப்போது இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அனைத்தையும் விட வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் மெனக்கெட மறந்தது தாய்ப்பாலைதான்.
 
3.bp.blogspot.com J4F9BbW1vF8 Vbypl9H elI AAAAAAAAFL0 vDAYuQwc9DI s640 breast feeding - 2026
 
எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான் தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்த கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை. மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். 
 
பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பெண்கள் பால் சுரப்பதில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் மனமே காரணம். 
 
‘என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்’ என்று மனதார நினைத்தாலே போதும். பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
 
சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்தப்பின் பால் கொடுக்காலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும்.

 
2.bp.blogspot.com e wQ9IpB0QA VbyufMve7yI AAAAAAAAFMM IlFvSmKaAtc s640 BLT.13.021113 Fb - 2026
 
குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும். பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது.  எளிதில் ஜீரணமாகக்கூடியது.
 
குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்றக்கூடிய அருமருந்து. தாய்ப்பால் கொடுப்பதால் உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வை கோளாறு ஏற்படாது. 
 
2.bp.blogspot.com g0wllbYE70U VbypnekoKqI AAAAAAAAFL8 NsAoYT9i e0 s640 philippines breastfeeding 000 Hkg9124641 20131024 - 2026
 
அதில் வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் ‘ரிக்கட்ஸ்’ எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்சேரும். 
 
தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது. பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். 
 
எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். அது பெண்கள் கையில்தான் இருக்கிறது.
 
 
 
படங்கள் : கூகுள் இமேஜ்.

1945 ஆகஸ்ட் 6 காலை 8:15 – உலகின் முதல் அணுகுண்டு!

 

 
1945 ஆகஸ்ட் 6 காலை 8:15

இப்படியொரு கொடூரமான நாளை சந்திப்போம் என்று எந்தவொரு ஜப்பானியரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் அந்த கொடூரம் நடந்தது. 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நரக அனுபவத்தை அந்த நகரம் பெற்றது. அந்த நகரத்தின் பெயர் ஹிரோஷிமா. அணுகுண்டை வீசிய நாடுஅமேரிக்கா. அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.

2.bp.blogspot.com t9rxWz7HrKM VdISOku6t8I AAAAAAAAFpk noHMPiigVng s640 little boy 3 - 2026
‘லிட்டில் பாய்’ அணுகுண்டு போர் விமானத்தில் பொருத்துதல்

என்ன நடந்தது? என்று சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்விட்டிருந்தார்கள். கணக்கில்லாதவர்கள் சட்டென்று ஊனமானார்கள். இன்னமும் கூட குழந்தைகள் அங்கு ஊனமாக பிறப்பதை மாற்றமுடியவில்லை. மிகப் பெரிய இந்த கொடூர நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் அனுபவங்களை ஒன்றாக திரட்டியுள்ளார் பேராசிரியர் அரடா ஒசர்டா என்பவர். அந்த தொகுப்பிலிருந்து சில பகுதிகள்…

கிய்கேர் சகசி 
(1945-ல் 6 வயதுக் குழந்தை)

“காதைப் பிளக்கும் அந்த ஓசை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு வயதான மனிதர் தாங்க முடியாத வேதனையோடு ஓலைமிட்டவரே ஓடிவந்தார். அணுகுண்டால் ஹிரோஷிமா நகரமே முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் எனது பாட்டியால் வீட்டில் இருக்க முடியவில்லை. தலையில் அடித்தவாறு அழுதுகொண்டே ஹிரோஷிமாவை நோக்கி வேகமாக ஓடினாள்.

 
1.bp.blogspot.com AamNVMMaaCQ VdIToWCtMuI AAAAAAAAFp0 8572DZBEzXI s640 Hiroshima - 2026

போன பாட்டி திரும்பி வரவில்லை. ஒரு வாரம் கழித்து வந்தாள்.

“அம்மா எங்கே?” என்றேன்.

“அவளை என் முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்.” என்றாள் என் பாட்டி.

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உற்சாகமாக கூச்சலிட்டேன்.

“அம்..மா..!”

கத்திக்கொண்டே என் பாட்டியின் பின்னால் சென்று பார்த்தேன்.

அம்மா இல்லை..!

ஒரு டிராவல் பேக் மட்டும் பாட்டியின் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது.

“அம்மா எங்கே பாட்டி..?!”

நான் ஏமாற்றமடைந்தேன்.

எனது அக்காவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் வாய்விட்டு கதறி அழுதார்கள்.

“ஏன் அழுகிறார்கள்..?”

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாட்டி கண்ணீரோடு அந்தப் பையை கீழே வைத்தாள். அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து எல்லோரிடமும் காட்டினாள். அதில் எனது அம்மாவின் தங்கப்பல்லும் அவருடைய கை எலும்புகளும் இருந்தன. எல்லோரும் குலுங்கி குலுங்கி கதறி அழுதார்கள்.

அப்போதும் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!”

கிமிகோ தகாய்
(1945-ல் 5 வயது சிறுமி)

அந்த நாளை நினைத்தால் இன்னமும் என் மனம் பதறுகிறது. அன்று நான் என் தோழி தாத்சுகோவுடன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விமானம் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.

“ஏய்.. ஏரோப்ளேன்..!” கத்திக்கொண்டே பார்க்க வெளியே ஓடினேன்.

3.bp.blogspot.com 7fF5ReEuVIE VdIU2EhuwjI AAAAAAAAFqA P32yBdlZVQg s640 Hiroshima bombing Enola Gay - 2026

அந்த நொடியில் இடி இடித்து மின்னலடித்தது போல் ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. பயந்துபோன நான் பக்கத்து வீட்டுக்குள் ஓடிப்போய் என் தோழியின் அம்மா பின்னால் பதுங்கிக்கொண்டேன். அவரும் பயத்தில் நடுங்கிகொண்டிருந்தார். என்னை உதறி விட்டு தனது கணவனை கட்டிக்கொண்டார்.

நீளமான ஒரு துணியை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் கணவருடன் வீட்டை விட்டு ஓடினார்.

எனக்கும் என் தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வேகமாக வானில் இருள் பரவியது. வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களில் மிரட்சியுடன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம்.

தாத்சுகோவின் பாட்டி அச்சத்துடன் கூவி அழைத்தார். அதனால் அவளும் என்னை விட்டு ஓடி விட்டாள். நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு அழுகை வந்தது அழத்தொடங்கினேன்.

2.bp.blogspot.com OqNXzdqQaBQ VdIVvsCl5LI AAAAAAAAFqI ZJFuV31BRuE s640 hiroshima child - 2026

அப்போது முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு பக்கத்து வீட்டுப்பெண், “அழாதே கிமிகோ! உங்க அம்மா இங்கேதான் இருக்கிறாள்.” என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓடினாள். நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.

சிறிது தூரத்தில் “கிமிகோ! கிமிகோ!” என்று என் அக்கா என்னை கூப்பிடும் குரல் கேட்டது. என் அம்மாவும் வந்துவிட்டாள். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடினோம்.

பின் நடந்தோம். நிற்காமல் போய்க்கொண்டே இருந்தோம். வழியெங்கும் வயிறு உப்பிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள். சாலையோரங்களில் ஏராளமான பிணங்கள் நிறைந்து கிடந்தன.

மற்றொரு இடத்தில் ஒரு பெண் மரத்தடியில் கால் சிக்கி, நகர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யாரும் அவரைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எனது தந்தை கோபமாக கத்தினார்.

“இங்கே ஜப்பானியர் யாருமே இல்லையா? ஒரு பெண் போராடிக்கொண்டு இருக்கும்போது ஓடுகிறீர்களே!” என்றார். சிலர் உதவிக்கு வந்தனர். அந்தப் பெண்ணை மற்றவர்களுடன் சேர்ந்து என் தந்தை விடுவித்தார்.

மற்றோரிடத்தில் உடல் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதர் சாவின் விளிம்பில் நடந்து கொண்டிருப்பதை பார்த்தோம்.

என் அம்மா தன்னால் இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது  என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார். தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிடுமாறு கூறினார். அப்படி விட்டு செல்ல அங்கு யாருக்கும் மனமில்லை.

அருகில் பிணங்கள் மிதந்துக் கொண்டிருந்த கலங்கிய ஆற்று நீரை எடுத்து அம்மாவுக்கு கொடுத்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.

நாங்கள் எங்கள் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். கிராமங்களில் நடந்து சென்றபோது விவசாயிகள் எங்களை திகைப்புடன் பார்த்தார்கள். என்ன நடந்தது? என்று கேட்டார்கள். பண்ணை வீடுகள் வழியே நடந்தபோது, அவர்கள் சோற்று உருண்டைகளை எங்களுக்கு தந்தார்கள்.

நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கினோம். நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது எனது அம்மா முதுகில் காயம்பட்டு வலிப்பதாக சொன்னார். நான் பார்த்தபோது அம்மா முதுகில் ஒரு அங்குல அகலத்துக்கு ஒன்றரை அங்குல நீளம் உடைய ஒரு கண்ணாடித் துண்டு காயப்படுத்தியிருந்தது. எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.

4.bp.blogspot.com 7aJy AcXNhw VdIXQsBUbiI AAAAAAAAFqU GTVwG2oJot8 s640 hiroshima%2B%25281%2529 - 2026

மறுநாள் எனது தந்தை எனது சகோதரியை தேடிச் சென்றார். ஹிரோஷிமா தபால் நிலையத்துக்கு அருகில்தான் குண்டு வீசப்பட்டது. அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருந்தாள். அந்த தபால் நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மட்டுமே பிழைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டவர்களின் சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்துச் சென்றார். எனது அக்காவின் சாம்பலும் அதில் இருந்தது.”

இப்படியாக உண்மைகள், உணர்வுகளை உறைய வைக்கிறது. இன்றைக்கு இருக்கும்  அணு ஆயுதங்களோடு ஒப்பிடும்போது ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட லிட்டில் பாயும் பேட் மேனும் மிக மிக சிறியவை. இதிலாவது தப்பிப்பிழைத்தவர்கள் அனுபவத்தை சொன்னார்கள். ஆனால் இப்போது உள்ள சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் வீசப்பட்டால் அனுபவத்தை சொல்ல ஒரு ஆள் கூட மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை!!!

மெல்லச் சாகுமோ இனி ஆணினம்..?!

 

 
 

 

2.bp.blogspot.com KCYzcxi0Jew VdtgZUmMd6I AAAAAAAAFt4 X4sWKooyggE s1600 man and woman holding hands looking concerned - 2026
 

 
உலகில் இருக்கும் ஒட்டுமொத்த ஆணினமும் ஆபத்தில், அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’!
 
திடீரென்று ஆணினத்துக்கு என்ன ஆனது? அவர்கள் ஏன் அழியவேண்டும்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. முதலில் சமூகக் காரணம் கூறப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆணின் உயிரணு எண்ணிக்கையில் பாதியளவு கூட இன்று இருக்கும் ஆணிடம் இல்லை. மடமடவென்று விந்தணுவின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு வேலை, டென்ஷன், உணவு முறை, சுற்றுச்சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்படியே போனால், வருங்காலத்தில் ஒரு ஆணால் இயற்கை முறையில் ஒரு பெண்ணை தாய்மையடையச் செய்ய முடியாத நிலை வந்துவிடும் என்கிறார்கள்.
 
இப்போதே ஆண் துணையின்றி பெண் மட்டுமே அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையெல்லாம் வந்துவிட்டது. பயனற்ற உயிரினம் அழியும் என்பது டார்வின் விதி. ஆணின் பிரதான வேலையான இனப்பெருக்கத்தைத் தரமுடியாமல் போகும்போது ஆணினமும் அழியத்தொடங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
மருத்துவ காரணங்கள் வேறுமாதிரியாக சொல்கின்றன. இயற்கையே ஆணை பலவீனமானவனாகத்தான் படைத்திருக்கிறது. உருவத்திலும் உடல் வலிமையிலும் வேண்டுமானால் ஆண் பெண்ணைவிட சிறந்தவனாகத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் நோய் எதிர்ப்பு திறனில் பெண் இனம் மிக வலுவுள்ள இனமாக இருக்கிறது.
 
இயற்கையே அப்படிதான் உருவாக்குகிறது. 100 பெண் சிசுக்களை பெண்கள் வயிற்றில் உருவாக்கும் அதே நேரத்தில் 140 ஆண் சிசுக்கள் அந்த பெண் சிசுக்களுக்கு இணையாக இயற்கை தோற்றுவிக்கிறது. அதாவது கருவாக உருவாகும்போதே ஆண் இனம் பெண் இனத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உருவாக்கப்படுகிறது.
 
அப்படியிருந்தும் பிறக்கும் போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் பிறக்கின்றன.  
 
கரு உருவான கணக்குப்படிப் பார்த்தால் 100 பெண் குழந்தைகளுக்கு 140 ஆண் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆனால், 34 ஆண் குழந்தைகளும் கருவிலே அழிந்துவிடுகின்றன. 
 
அதற்கு காரணம் ஆண் பலவீனன் என்பதுதான். இதில் என்னவொரு அதிசயம் என்றால் பெண் குழந்தைகள் இயற்கையான முறையில் கருவில் அழிவதேயில்லை.  கருவில் அழிவதெல்லாம் ஆண் குழந்தைகள் மாத்திரமே..!
 
1.bp.blogspot.com Jae JPRufOQ Vdtgdy7rn6I AAAAAAAAFuM pUShDoNzLXg s640 XY fertilization - 2026
சரி, பிறந்த பிறகாவது ஆண் குழந்தைகள் தாக்குப் பிடிக்கின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் பெண் குழந்தைகள்தான் ஜெயிக்கின்றன. குழந்தைகள் பிறந்த 6 மாதங்கள் முடியும் முன்பே தொற்றுநோய், சுற்றுப்புற தூய்மை கேடால் 1,000 ஆண் குழந்தைகளில் 17 குழந்தைகளும், பெண் குழந்தைகளில் 11 குழந்தைகளும் இறக்கின்றன. இதிலும் ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதமே அதிகம். 
 
பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்புத்திறனுடன் இருப்பதற்கு ‘ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்’ என்ற ஒருவகை ஹார்மோன் தான் காரணம். இது கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே போகிறது. இது ஒரு போதும் தாயிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு செல்வதில்லை. இந்த அதிசயமான போக்கு எதனால் ஏற்படுகிறது என்று மரபியல், செல்லியல், நுண் செயலியல் அறிஞர்கள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கிறார்கள், விடைதான் கிடைத்தபாடில்லை. 
 
இந்த ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடியது. அதனால்தான் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். 
 
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் அதிர்ச்சிகள், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத மருந்துகள், தீமை தரும் உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும் விளைவுகளே குழந்தைகளை பிறவி ஊனமாக மாற்றிவிடுகிறது. 
 
அதிலும் கூட ஊனமுற்ற 100 குழந்தைகளில் 70 ஆண் குழந்தைகளாகவும், 30 பெண் குழந்தைகளாகவும் இருக்கிறது. இப்படி நோய்களில் இருந்து பெண் குழந்தைகளை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவது ‘ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்’ என்ற ஹார்மோனும் ‘இம்முனோ குளோபின்’ என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதமும்தான். இது பெண்களின் ரத்தத்தில் மட்டும்தான் அதிகமாக உள்ளது.
 
இதனால்தான், பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்துவிடுகின்றன. சராசரி ஆயுளை எடுத்துக் கொண்டால் ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள். 
 
மாரடைப்பு, திக்குவாய், வலிப்பு, பைத்தியம் போன்ற எல்லாமே ஆண்களைத்தான் தாக்குகிறது. உடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்பு சக்தி வேறு, வலிமையை ஆணுக்கும், எதிர்ப்பு சக்தியை பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்த ஆணினம் இனி மெல்ல மெல்ல சாகும் என்கிறது மருத்துவதுறை. இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் முடிவு ஒட்டுமொத்த ஆணினத்தையும் ஆட்டம் காணவைத்து விட்டது. 
 
குரோமோசோம்களின் மாயாஜாலத்தால்தான் ஆண் பெண் உருவாக்கபடுகின்றன. ‘எக்ஸ்’ குரோமோசோமும் ‘ஒய்’ குரோமோசோமும் தான் இந்த மாயாஜாலம். பெண் என்றால் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்களும், ஆண் என்றால் ஒரு ‘எக்ஸ்’, ஒரு ‘ஒய்’ குரோமோசோம்களுடன்தான் இருப்பார்கள். 
 
3.bp.blogspot.com gdt3Gg4HCSs VdtgYFyVgvI AAAAAAAAFt0 g9h7iJK2PZ0 s400 image medium - 2026
‘எக்ஸ்’ குரோமோசோம்
இதில் ‘எக்ஸ்’ குரோமோசோம் முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு கருக்கூறு. ‘ஒய்’ குரோமோசோம் அப்படியல்ல. அது பாதியளவு மட்டுமே வளர்ச்சியடைந்த கருக்கூறு. அதனால்தான் மருத்துவ உலகம் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பெண்ணே ஆண் என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வு இதை மேலும் மெய்ப்பிக்கிறது.
 
கிரேவ்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண் விஞ்ஞானி இந்த அதிர்ச்சியான ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஆண் இனம் ‘ஒய்’ குரோமோசோம்களை கொண்டிருப்பதால் அது அழியத் தொடங்கியுள்ளது என்கிறார். ‘ஒய்’ குரோமோசோம் உள்ளுக்குள்ளேயே அழியும் தன்மைக் கொண்டது என்றும், அதன் அழிவால் புவியில் ஆண்களால் நிலைத்திருக்க முடியாது என்றும், கடைசியில் பூமியில் இருப்பது பெண் இனம் மட்டுமே என்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 
 
மேலும் அவர், பெண்மையின் குரோமோசோமான ‘எக்ஸ்’ குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஆணின் குரோமோசோமான ‘ஒய்’ குரோமோசோமில் வெறும் 100 ஜீன்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்தம் பெண்கள் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோமுடன் 2,000 ஜீன்கள் கொண்டவர்களாகவும், ஆண்கள் ஒரு ‘எக்ஸ்’ (1,000 ஜீன்கள்) ஒரு ‘ஒய்’ (100 ஜீன்கள்) குரோமோசோம்களைக் கொண்டு 1,100 ஜீன்கள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். 
 
ஆரம்ப காலங்களில் ஆண்களின் ‘ஒய்’ குரோமோசோமிலும் 1,000 ஜீன்கள் இருந்தனவாம், லட்சக்கணக்கான ஆண்டுகளில் ‘ஒய்’ குரோமோசோமில் இருந்த ஜீன்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த எண்ணிக்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார். 
 
1.bp.blogspot.com Le6WJZBg3X0 VdtgZ9Vtv6I AAAAAAAAFuE L 3sGOSCs - 2026
 
மேலும், ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் பெண்ணுக்கு ஜோடியாக அமைந்துள்ளதால் ஜீன்களின் பாதிப்பை அவைகள் தாங்களே சரி செய்து கொள்கிறது. ஆணிடம் குரோமோசோம்கள் ஜோடியாக இல்லாததால் ஜீன்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது சரி செய்ய முடியாமல் அழிந்து போகிறது. இப்போது ‘ஒய்’ குரோமோசோமில் உள்ள ஜீன்களும் எதற்கும் பயன்படாத குப்பைகள் என்று பயமுறுத்துகிறார், கிரேவ்ஸ்.
 
“இந்த பரிணாம வளர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் ஆணினம் அழிந்து போகும். இது ஒரு பரிதாபமான முடிவு. ஆண்கள் பரிதாபமானவர்கள்.” என்று தனது ஆய்வை முடிக்கிறார். கிரேவ்ஸ்.
 
ஆனால், இதெல்லாம் நடைபெற இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன என்று கூறி விஞ்ஞானிகள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள். ஆனாலும், மெல்லச்சாகும் ஆணினத்தை தடுக்கவே முடியாது என்று சத்தியமும் செய்கிறார்கள். 
 
வருங்காலம் ஆணுக்கு கொடூரமானதாகவே இருக்கும்!

காதலில் கசிந்துருக ஓர் இடம்  

 

2.bp.blogspot.com d9g1q189pIg VZUoqWxaSXI AAAAAAAAEt8 ahgYCB URUc s640 IMG 6069 - 2026

காதலர்களுக்கு பிடித்த மாதம் என்றால் அது ஃபிப்ரவரிதான். அந்த மாதத்தில் தான் ‘காதலர் தினம்’ வருகிறது. காதலர்களுக்கு மட்டுமல்ல புதுமண தம்பதிகளுக்கும் அதுதான் பரவசம் தரும் மாதம்! பூக்கள் பூத்து குலுங்குவது அந்த மாதத்தில்தான்…! குளிரின் தாக்கம் குறைந்து கத கதப்பான பருவத்தை காலம் எதிர் நோக்குவதும் அந்த மாதத்தில்தான்…! அதனால்தான், ஃபிப்ரவரி மாதம் காதலுக்கு ஏற்றதாக இருக்கிறது.

1.bp.blogspot.com 21drZBloRRU VZUoYCcUaiI AAAAAAAAEr0 AurlC tsemI s640 12 - 2026

புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகள் பலர் என்னிடம் ஹனிமூன் செல்ல தோதான இடம் பற்றி கேட்பார்கள். எனது வேலையே ஊர் சுற்றுவதுதான் என்பதால் இதற்கான விடையை என் மூலம்  தேடுவார்கள். நானும் முடிந்த அளவு நல்ல இடமாக சொல்வேன். அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் ஒரு இடத்திற்கு தான் இப்போது நான் போய்கொண்டிருக்கிறேன்.

4.bp.blogspot.com noteahJlAlY VZUoXrqF6TI AAAAAAAAErw AgemduGUjAk s640 10 - 2026

தேனி மாவட்டத்தில் கூடலூர் பக்கத்தில் கழுதைமேடு என்ற இடம்தான் அது. அங்குள்ள‘ஹார்வெஸ்ட் ஃபிரெஷ் ஃபார்ம்’, ஹனிமூன் ஜோடிகளுக்கு மிகச் சிறந்த இடம். இயற்கை கொஞ்சி விளையாடும் இடம். பசுமையான இயற்கைக்கு காதலை தூண்டிவிடும் தன்மை இயல்பாகவே உண்டு. அதனால்தான், காதலர்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று பசுமையும் இயற்கையும் போட்டிபோடும் பிரதேசத்துக்கு படை எடுக்கிறார்கள். இந்த இடமும் அப்படித்தான், பசுமை பரந்து கிடக்கிறது.

 
4.bp.blogspot.com 9IazsPhWK10 VZUouei8sDI AAAAAAAAEuY oBmArBL3HOU s640 IMG 6088 - 2026

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பதை ஒவ்வொரு அங்குலமும் எழிலால் நிருபிக்கின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் என்பதால் குளுமை குடிகொண்டிருக்கிறது.

கேரளா மாநிலம் எர்ணகுளத்தை சேர்ந்த குரியன் ஜோஸ் என்பவர்தான் இந்த இடத்தின் உரிமையாளர். பாழ்பட்டுக் கிடந்த 35 ஏக்கர் நிலத்தை வாங்கி அதனை பண்ணை சுற்றுலாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்திருக்கிறார்.

3.bp.blogspot.com jnawDkclBaw VZUos6czDzI AAAAAAAAEuQ 9P51rczjDAc s640 IMG 6082 - 2026
குரியன் ஜோஸ் தனது சகோதரருடன்
விவசாயத்தை விட்டு பாரம்பரிய விவசாயிகளே வெளியே வந்து கொண்டிருக்கும்போது, ‘மெரைன் கெமிக்கல்’ பட்டம் பெற்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் ஒரு தொழிலதிபர் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

3.bp.blogspot.com - 2026

நிலத்தை வாங்கிய உடனே அதை பண்ணைச் சுற்றுலாவாக மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டார் செயற்கை உரங்கள் இல்லாமல், இயற்கையில் விளையும் மாதுளைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி இருப்பதை தெரிந்து கொண்ட குரியன், தான் வாங்கிய 35 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கர் நிலத்தை மாதுளை செடிகள் வளர்ப்பதற்காக ஒதுக்கி விட்டார்.
4.bp.blogspot.com 5lbd pred8U VZUoko2juOI AAAAAAAAEtk YaosTKwoKn8 s640 IMG 6031 - 2026

இன்றைய வணிக உலகில் பெரும் ஆதரவு பெற்று வரும் ஆர்கானிக் விளைபொருட்களை மட்டுமே தனது தோட்டத்தில் விளைவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியவருக்கு, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பெரும் தெம்பைக் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்தியது.
 
மாதுளையோடு தனது விவசாய ஆசையை நிறுத்திக் கொள்ளாமல் 2,000 தென்னை மரங்கள், 1,500 தேக்கு மரங்கள், 350 தோதஹத்தி மரங்கள், 250 சந்தன மரங்கள், 100 பப்பாளி மரங்கள் என்று எல்லாவற்றையும் பயிரிட்டு அத்தனையிலும் இயற்கை முறை விவசாயத்தையே பின்பற்ற தொடங்கிவிட்டார்.

3.bp.blogspot.com - 2026

விவசாய நிலங்களில் வேறு ஏதாவது வருமானத்திற்கு வழி செய்யலாமே என்று நினைத்த போது அவர் மனதில் உருவானது தான் பண்ணைச் சுற்றுலா. இதன்மூலம் விவசாயத்தையும், நமது பாரம்பரிய முறைகளையும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தார். அதன்படியே தொடங்கி விட்டார்.
 
கம்பம் நகரில் இருந்து குமுளி போகும் பாதையில் கூடலூரை கடந்து லோயர் கேம்புக்கு சற்று முன் வலது புறத்தில் வரும் சாலையில் திரும்பி 4 கி.மீ. பயணித்தால் குரியனின் தோட்டம் வந்து விடுகிறது.
 
இந்த தோட்டத்திற்கு நேரடியாக நம்மை அவர்கள் அழைத்துச் செல்வதில்லை. தோட்டத்திற்கு 2 கி.மீ. முன்பே நமது பயணம் மாட்டு வண்டிக்கு மாறி விடுகிறது. விருந்தினர்களை தனது தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே இங்குள்ள கிராமத்தில் மாட்டு வண்டி தயாராக இருக்கிறது.

4.bp.blogspot.com bgyFmNNCgj4 VZUoYNVXqAI AAAAAAAAEr8 K0vbDvhnVso s640 13 - 2026

நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறைக்கு மாட்டு வண்டிப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
 
மாட்டு வண்டியில் வயல்வெளிகள் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை சென்று திரும்பி தோட்டத்திற்கு செல்வது மறக்க முடியாத ஒன்றாக வாழ்நாள் முழுவதும் நிலைக்கும்.

4.bp.blogspot.com A5vpV5444TA VZUoZyHRMCI AAAAAAAAEsM 2eDwtyO5uL0 s640 4 - 2026

பண்ணைக்குள் வந்த விருந்தினர்களை ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பது போல் வரவேற்கிறார்கள். மலர் மாலை அணிவித்து, ஃப்ரெஷ் ஜூஸ் கொடுத்து களைப்பைப் போக்குகிறார்கள்.
 
இது முடிந்த பின் அறைக்குள் சிறிது நேரம் ஓய்வு. விருந்தினர்கள் தங்குவதற்கென்றே மூன்று அறைகள் இங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர்களின் காலனி வீடுகளை நினைவுக்கு கொண்டு வரும் விதமாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2.bp.blogspot.com PdBhIT 8Bbc VZUoey4qhmI AAAAAAAAEsw q8 LBqhKqmE s640 IMG 5998 - 2026

குளியலறை கண்ணாடிகளால் மறைக்கப்பட்டுள்ளன. விருப்பம் இருக்கும் ஹனிமூன் ஜோடிகள் தங்கள் துணை குளிக்கும் அழகை பார்த்து ரசிக்கலாம். அத்தனை உயர் தொழில்நுட்பத்தில் பாத்ரூம், டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளன.

4.bp.blogspot.com stqqtO7V21k VZUoc101L5I AAAAAAAAEsc Gl3iCsAMVvE s640 IMG 5995 - 2026

படுக்கை விரிப்புகளும் அறையின் அலங்காரமும் ஸ்டார் ஹோட்டல் அறைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. பகல் நேரத்திலும் சரி, இரவிலும் சரி, இங்கு பறவைகளின் ஒலி, இலைகள் அசையும் ஓசை மட்டுமே கேட்கிறது. இந்த இடம் அமைதி நிரம்பிய அழகான இடம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

4.bp.blogspot.com YvNPo192bwo VZUoeARoqQI AAAAAAAAEss kzcl9ZiOUn4 s640 IMG 20141214 113441 - 2026

ஓய்வு முடிந்ததும் தோட்டத்துக்குள் ஒரு பயணம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து போகலாம், சைக்கிளில் வலம் வரலாம், இல்லை மாட்டு வண்டிதான் பிடித்திருக்கிறது என்றால் அதிலும் வலம் வரலாம்.
 
எனக்கு வழிகாட்டியாக மேலாளர் ஜான் ஜோசப் கூடவே வந்தார். விவசாயம் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் விளக்கினார்.
 
சுற்றிலும் பசுமையான மலைகள் அரண் போல நிற்க அதன் நடுவே வயல் வெளிகள் அதன் அருகே பண்ணைத் தோட்டம் எல்லாமே இயற்கையின் கொடை. நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.

2.bp.blogspot.com - 2026

மாதுளைத் தோட்டம், தென்னை மரம், பப்பாளி மரம், மூலிகைத் தோட்டம், இயற்கை உரம் தயாரிக்கும் இடம், பயோ-கேஸ், மாட்டுப்பண்ணை, வளர்ப்பு பறவைகள் என பலவற்றையும் காட்டி நமக்கு விளக்கம் கொடுக்கிறார் ஜான்.

1.bp.blogspot.com IS3t1f22bBM VZUofnxP vI AAAAAAAAEs8 7V Dhw8purg s640 IMG 6002 - 2026

இங்கு சமையல் கூட பயோ-கேஸ் மூலம் தான். காபி, டீ-க்கு பயன்படுத்தும் பாலும் கூட நாட்டு மாடுகளில் இருந்து ஆர்கானிக் முறையில் கறக்கப்படுபவைதான். அதனால் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான காற்று, அமைதியான சுற்றுச்சூழல் என்று காதலர்கள் கொண்டாட இங்கு நிறைய வி­ஷயங்கள் இருக்கின்றன.

1.bp.blogspot.com 2 XW29z6gSw VZUolZzyblI AAAAAAAAEto 0Yn4yZ1d5E8 s640 IMG 6034 - 2026

தனது தோட்டத்தில் இரண்டு காட்சி கோபுரங்களை வைத்திருக்கிறார் குரியன். அதன்மீது ஏறிப்பார்க்கும் போது கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும், தோட்டத்தின் எழிலையும் ஒரு சேர கண்டுகளிக்க முடியும்.

4.bp.blogspot.com yNw9bg8vFA VZUtSd0v22I AAAAAAAAEuk amQYVkQ3kGw s640 18 - 2026

இரவில் கேம்ப் ஃபயர், மியூஸிக்கல் டான்ஸ் போன்றவையும் உண்டு. தனிமையும் இனிமையும் ஒன்று சேருவதால் தேனிலவு தம்பதிகள் காதலில் கசிந்துருக ஏற்ற இடம் இது.
 
காதலர்களுக்கு மட்டுமல்ல. பள்ளிக்குழந்தைகள் சுற்றுலா, கார்ப்பரேட் டூர், குடும்பச் சுற்றுலா போன்ற பலவற்றுக்கும் ஏற்ற இடம் இது. ஜான் ஜோசப்பின் மொபைல் எண்: 95780 72722  தொடர்பு கொள்ளுங்கள். மறக்க முடியாத பயண அனுபவத்தைப் பெறுங்கள். 
 
4.bp.blogspot.com xdszFbNr74Q VZUoc cwvLI AAAAAAAAEsg 8Zc6Q8d0f48 s640 IMG 0297 - 2026

 

ஒரு பெண்ணுக்காக 84 கிராமங்கள் இரவோடு இரவாக..!

 

 

3.bp.blogspot.com eau1lWMaDzQ VbYmzo0JfgI AAAAAAAAFJQ 6jTMadc - 2026

ஆவிகள் உலாவும் இடங்கள் என்று வெளிநாடுகளில் ஏராளமாய் இருக்கின்றன.  அந்த ஆவிகளின் கதைகளால் அந்த  இடங்கள் சுற்றுலா அந்தஸ்தையும் பெற்றுவிடுகிறன்றன.  இந்தியாவிலும்  சில இடங்கள் அப்படி இருக்கின்றன.
 
4.bp.blogspot.com PR1LugfoYzE VbYmseIw gI AAAAAAAAFJE yZ - 2026
 
அவைகளில் ஒன்றுதான் குல்தாரா.  இது ஒரு கிராமம். ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற இடமாக விளங்கும் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது.  190 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.  ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக அவ்வளவு மக்களும் ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.
 
3.bp.blogspot.com Y4x1k86npac VbYmuqSORAI AAAAAAAAFJM r 7ke qWg s s640 Cursed Village Of Kuldhara - 2026
 
இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல. இதன் கட்டுப்பாட்டில் இருந்த 84 கிராமங்களும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு ஓடினார்கள்.  குல்தாரா மக்கள் போகும்போது இந்த கிராமத்தில் யார் தங்கினாலும் அவர்களுக்கு மரணம் நேரிடும் என்று சாபமிட்டுச் சென்றார்கள்.  அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த கிராமத்தில் வேறு யாரும் வந்து குடியேறவில்லை.
 
 
3.bp.blogspot.com 82R5W3QoMQ VbYm2qLX8dI AAAAAAAAFJk CxaxviQBcms s640 IMG 3467 c - 2026
 
1291-ம் ஆண்டு பலிவால் என்ற பிராமண மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தை நிர்மாணிக்க நினைத்தார்கள்.  அகலமான தெருக்கள், கோயில்கள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கிய கிராமம் இது.
 
தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். குறைந்த மழையும், அதிக வறட்சியும் கொண்ட இந்த இடத்தில் விவசாயத்தை பிரமாண்டமாக செய்து வந்திருக்கிறார்கள்.
 
3.bp.blogspot.com TwidRwD7pZA VbYm6Ad7rdI AAAAAAAAFJs uhjEcSZEfgQ s640 Kuldhara 10 - 2026
 
கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் இடியென வந்தவன்தான் சலீம் சிங் என்ற தலைமை மந்திரி.
 
ஒருநாள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த சலீம் சிங் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான்.  அப்போது கிராமத்து தலைவனின் மகளைப் பார்த்துவிட்டான்.  அந்தப் பெண்ணின் அழகில் மனதைப் பறிகொடுத்த சலீம் அந்த பெண்ணை தனக்கு மணம் முடித்து தரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு அதிகமான வரி விதித்துவிடுவேன் என்று மிரட்டினான்.
 
4.bp.blogspot.com f6 HkbEUgrc VbYm7fWWHqI AAAAAAAAFJ0 hptJ0JTVC E s400 IMG 9383 - 2026
 
கிராமத்து மக்களுக்கு தங்களின் தலைவர் மகளை சலீமுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. தலைவனோ தனது மக்கள் தனக்காக அதிக வரி கொடுப்பதை விரும்பவில்லை.  அதனால் 1825 ஆம் ஆண்டு இரவோடு இரவாக குல்தாரா கிராமத்தினரும் அவர்களுக்கு கீழ் இருந்த 83 கிராம மக்களும் காலி செய்துவிட்டு போனார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்றுவரை அது மர்மமாகவே இருக்கிறது.
 
குல்தாரா கிராமத்தினர் இட்ட சாபத்திற்கு பயந்து யாரும் குடியேறவில்லை. தற்போது இந்த இடம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. பாரம்பரியமிக்க இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
2.bp.blogspot.com FN6Js - 2026
 
திரும்பிய பக்கமெல்லாம் சிதலமடைந்த வீடுகளும், இடிபாடுகளும்தான் இருக்கின்றன.  வழக்கமான சுற்றுலா இடங்களை விடுத்து புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு குல்தாரா ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
 
எப்படி போவது?
 
ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ. தொலைவில் ஜெய்சால்மர் நகரம் உள்ளது.  ஜெய்சால்மருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. ஜெய்பூர் சென்று செல்லலாம்.
 
1.bp.blogspot.com AdM8XUxlPA VbYm8C1OlBI AAAAAAAAFJ8 2X1K2 5TKOw s640 Kuldhara 7 - 2026

ஹாலிவுட்டை வென்ற புருஸ்லீ

 

 

 

1.bp.blogspot.com 6h0s sBXkVQ VWyBq1rE1SI AAAAAAAAEcI HojCXlngJrI s640 lee - 2026
புருஸ்லீ
மெலிந்து போன தேகம், சராசரிக்கும் குறைவான குள்ளமான உருவம், கிட்டப் பார்வையை நிவர்த்தி செய்வதற்காக போட்டுக்கொண்ட பெரிய மூக்குக்கண்ணாடி என கோமாளி போல் பார்வைக்கு தெரியும் அந்த இளைஞனைப் பார்த்தால் எல்லோருமே சிரித்துவிடுவார்கள்.

18 வயது நிறைந்த அந்த சீன இளைஞன் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத மோகத்துடன் அமெரிக்கா வந்து இறங்கினான். அந்த இளைஞனின் பெயர்தான் புருஸ்லீ.

புருஸ்லீக்கு அடிதடி என்றால் கொல்லைப் பிரியம். ஊரில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு புருஸ்லீ தவறாமல் இருப்பார். அவரது அட்டூழியத்தை தாங்க முடியாமல் தான் அவரது பெற்றோர்கள் அவரை ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

3.bp.blogspot.com JkCmx8Qsq8s VWyF22xr JI AAAAAAAAEc8 9NpAEna7fG4 s640 Before 18 years old Bruce Lee - 2026
17 வயதில் புருஸ்லீ

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். இருந்தாலும் ஹாலிவுட்டில் பெரிய கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது வெறி. அனால் ஹாலிவுட் இவரை சீண்டக்கூட இல்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோகத்தோடு மீண்டும் ஹாங்காங் திரும்பினார்.

‘தி பிக் பாஸ்’, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ என்ற இரண்டு படங்களில் நடித்தார். பம்பரமாக சுழன்று மின்னல் வேகத்தில் இவர் போட்ட சண்டைகள் இதுவரை சினிமாவில் பார்த்திராதவை. அந்த வேகம் சீனாவை கடந்து ஆசிய நாடுகள் முழுவதும் வசூலை அள்ளிக்குவித்தன. அப்போதும் ஹாலிவுட் அலட்டிக்கொள்ளவில்லை.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், திருப்பம் நிறைந்த திரைக்கதை என்று தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்த ஹாலிவுட் இந்த படங்களை குப்பை என்று ஒதுக்கித் தள்ளியது.

4.bp.blogspot.com - 2026
‘தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன்’ 

ஆனால், புருஸ்லீ இதற்காக கவலைப்பட வில்லை. 1972-l ‘தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன்’ என்ற படத்தை எடுத்தார். சினிமாவின் நேக்குப் போக்குகளை தெரிந்து கொண்ட புருஸ்லீ இந்த சினிமாவிற்கான திரைக்கதையை தானே எழுதி இயக்கவும் செய்தார்.

இந்த முறை புருஸ்லீயின் படம் ஆசிய எல்லைகளை கடந்து அமெரிக்க இளைஞர்களையும் கவர்ந்தது. வெறித்தனமான ரசிகர்களாக அவர்களை மாற்றியது. காரணம், சினிமாவில் அவர் போடும் சண்டைகளை நிஜத்திலும் செய்துகாட்டக்கூடியவர். இந்தப் படம் கொடுத்த வெற்றியில் அடுத்த படமான ‘கேம் ஆஃப் டெத்’ ஆரம்பித்தார்.

வெகு தாமதமாக விழித்துக் கொண்ட ஹாலிவுட், புருஸ்லீயின் வீட்டு முன் வந்து நின்றது. ஹாலிவுட் படத்தில் நடிப்பதையே லட்சியமாக கொண்டிருந்த புருஸ்லீ, ‘கேம் ஆஃப் டெத்’ பட வேலைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஹாலிவுட் தயாரிப்பளர்களுக்காக ‘என்டர் தி டிராகன்’ படம் எடுத்தார். இரண்டு மாதத்தில் படத்தின் முழு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார்.

மீண்டும் தனது ‘கேம் ஆஃப் டெத்’ படத்தின் வேலைகளை தொடர்ந்தார். அப்போது மரணத்தின் விளையாட்டு நிஜமாகவே நடந்தது. யாருமே எதிர்பாராத வேளையில் புருஸ்லீ திடீரென்று இறந்து போனார். இறப்பும் மர்மமாகவே இருந்தது. பயிற்சியின் போது தொடர்ந்து தலையில் பட்ட அடிகளால் மூளை வீங்கி இறந்ததாக டாக்டர்கள் கூறினார்கள்.

1.bp.blogspot.com WKFeoNcxvE0 VWyFlqT5wxI AAAAAAAAEck wQIX6i0bR80 s640 Betty Ting Pei Bruce Lee - 2026
நடிகை பெட்டீ டிங் பெயுடன்

புருஸ்லீ இறந்தது, பெட்டீ டிங் பெய் என்ற ஒரு நடிகையின் வீட்டில். வீரியம் அதிகம் உள்ள மருத்துகளை சாப்பிட்டுவிட்டு நடிகையுடன் உடலுறவு கொண்ட நிலையில் உயிர் பிரிந்ததாக ஒரு தகவலும் உண்டு.

எது எப்படியோ தனது 33-வது வயதில் புருஸ்லீ இறந்து போனார். அவரது இறப்பை ரசிகர்கள் நம்பவே இல்லை. அதற்குப் பின் வந்த ‘என்டர் தி டிராகன்’ உலகம் முழுவதும் பட்டித்தொட்டிகளில் கூட வசூலை வாரி குவித்தது. இளைஞர்களை காரத்தே பைத்தியமாக மாற்றியது இந்த படம்தான்.

எப்படியோ ஒரு நோஞ்சான் இளைஞன் இறுதியாக ஹாலிவுட்டை வென்று விட்டான்.

3.bp.blogspot.com ZlElfb3grac VWyFl2LmskI AAAAAAAAEco 3M1N49l0j M s320 Brandon Lee and Bruce Lee Graves in Seattle - 2026
புருஸ்லீயின் கல்லறை

 

வருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம்

 

 

1.bp.blogspot.com 8Yc03S0SnOM VXJwEniE7hI AAAAAAAAEeo 5UbaX7786PU s400 IMG 0419 - 2026

கிராமத்துக் கோயில் திருவிழா என்றால் அதில் ஒரு கரகாட்டம், ஒரு நாடகம், ஒரு பாட்டுக் கச்சேரி, ஒரு ஆடல்பாடல், ஒரு பட்டிமன்றம் என்று விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் நாடகத்தை மட்டுமே திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிராமம் மதுரைக்கு அருகே இருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு நாடகங்கள் அல்ல, 100 நாடகங்கள். ஒவ்வொரு வருடமும் இந்த 100 நாட்கள் நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

அந்த கிராமத்தின் பெயர் வலையங்குளம். மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்குவழிச் சாலையில் 22-வது கி.மீ. தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது.

கிராமங்களின் அழகே திருவிழாக்களில் தான் இருக்கிறது என்பார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விலக்கல்ல. இங்கு திருவிழா 100 நாட்கள் தொடர்ந்து களைக்கட்டுகிறது. இவையெல்லாமே இங்கே குடிகொண்டிருக்கும் தானாக தோன்றிய தனிலிங்கப் பெருமாளுக்காகத்தான்.

இந்த விஞ்ஞான உலகத்தில் கூட இந்தக் கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் கோயிலுக்கு வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவது விநோதமாக தெரிகிறது. கோவிலுக்கு முன்பே நாடக மேடை அமைந்துள்ளது. இந்த மேடையே அந்த ஊர் மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பணிந்து இந்த மேடை அருகே யாரும் போக மாட்டார்கள். நாடகத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் இதில் அரங்கேற்ற முடியாது.

இப்படி நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது? என்று கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, “இந்தக் கோயிலில் இருக்கும் தனிலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் பிரியர். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே பக்தர்களின் கடமை. அதைதான் செய்கிறோம்.

பக்தர்களின் வேண்டுதலை பகவான் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக அவரவருக்குப் பிடித்த நாடகம் போடுவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது காணிக்கையாக நாடகத்தை  நடத்துகிறார்கள்.

இந்த பாரம்பரியம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியில் திருவிழா ஆரம்பமாகும். அன்று முதல் தினமும் நாடகம் நடக்கும்.

முதல் நாடகம் எப்போதும் ‘அபிமன்யு சுந்தரி’தான். 425 வருடங்களுக்கு முன்பு இந்த நாடகம் நடந்து கொண்டிருந்த போதுதான் திருமலை நாயக்கர் வந்தார். நாடகத்தை பார்த்து உள்ளம் மகிழ்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு ‘திருமலை மெச்சினார்’ என்ற பெயர் வந்தது.

இன்றைக்கும் திருவிழாவின் முதல் நாடகமான ‘அபிமன்யு சுந்தரி’யை திருமலை மெச்சினார் பரம்பரையில் வந்தவர்களே நடித்து தொடக்கி வைப்பார்கள். தினமும் ஒரு நாடகம் வீதம் 100 நாடகங்கள் நடைபெறும்.

சித்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கும் நாளான சித்ரா பௌர்ணமியில் நாடகத்தை முடிப்போம். கடைசி நாடகம் முடிந்ததும் பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்” என்றார்.

3.bp.blogspot.com 9XkZ VrSPMc VXJwqqjN9GI AAAAAAAAEe0 Ms1P6gmRnmQ s400 Evening Tamil News Paper 74204218388 - 2026

ஒவ்வொரு நாளும் நாடகம் தொடங்குவதற்கு முன் ஊர் மந்தையில் இருந்து தீப்பந்தங்களை மேளதாளத்துடன் எடுத்து வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் தீப்பந்தங்கள்தானே நாடகத்திற்கான வெளிச்சம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பிரதாயம் இன்னமும் தொடர்கிறது.

தீப்பந்தம் மேடைக்கு வந்ததும், கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதையை செய்தபின் நாடகம் தொடங்குகிறது. சரியாக இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் விடியற்காலை 5 மணிக்கு முடிகிறது. அதுவரை கோயில் நடை திறந்தே இருக்கும். நாடகத்தை கோயிலில் இருக்கும் தெய்வம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

நாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார், ‘திருமலை மெச்சினார்’ மலைச்சாமி. “ஒரு முறை இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழை வேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டுதல் வைத்தார்கள். மழை வந்தது. ஊர் செழித்தது. மக்கள் நன்றிக்கடனாக அடுத்த வருடம் நாடகத்தை நடத்தினார்கள். அன்றிலிருந்து இந்தப் பழக்கம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.” என்கிறார்.

இங்கு நாடகத்தை நேர்த்திக்கடனாக போட நினைப்பவர்கள். நினைத்தவுடன் போட்டுவிட முடியாது. அதற்கு தேதி கிடைக்காது. ஒரு வருடத்திற்கு முன்பே ரூ.100 கொடுத்து முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப் பட்ட நாளில் சம்பந்தப்பட்டவர்கள் நாடகம் நடத்திக்கொள்ளலாம்.

1.bp.blogspot.com - 2026

ஒரு நாடகம் நடத்த குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். இதுவே சினிமா நடிகர்களை வைத்து என்றால் 60,000 முதல் ஒரு லட்சம்  வரை செலவாகும். அவரவர்கள் தகுதிக்கேற்ப நாடக நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை நாடக கலைஞர்களும் இங்கு வந்து நடித்திருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட மனக்குறையோடு வந்து நின்றாலும் நாடகம் போடுவதாக தனிலிங்க பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் உடனே அது நிறைவேறிவிடுகிறது. மழலைச்செல்வம் வேண்டி சரணடையும் தம்பதிகள் அடுத்த வருடமே தங்கள் மழலையோடு வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார்கள் ஊர் மக்கள்.

வெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா

 

 

1.bp.blogspot.com 8bt39AnQFjw VXQwQDsqiCI AAAAAAAAEfg ruP52IMHcUE s400 1bacd083ec517693c0098a3d140f597bf082490d - 2026

சுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன் மக்கள் தொகையும் சேர்ந்துள்ளது.
 
மனித சரித்திரத்தில் முன் எப்போதும் இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மனிதன் காலத்தை கணக்கிடத் தொடங்கிய கி.பி. முதல் வருடத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடிதான்.
 
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து கி.பி.1000-ம் ஆண்டில் 31 கோடியாக உயர்ந்தது. ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 11 கோடிதான் அதிகரித்தது. உலக மக்கள் தொகை 100 கோடியை  எட்டியது 1820-ல் தான்.
 
2.bp.blogspot.com m4Mulu8JYBk VXQwvobFv6I AAAAAAAAEgE Qp5fDwA6O7k s640 population india - 2026
 
மனிதன் பூமியில் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டால் இது மிக நீண்ட காலம். இந்த 100 கோடி என்ற அளவை எட்ட மனிதனுக்கு ஒன்றரைக்கோடி வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் மக்கள் தொகை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
 
நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டுள்ளன. மக்கள் தொகை 700 கோடியை தொட்டது 2011-ம் ஆண்டில். இன்றைய நிலவரப் படி உலகின் மக்கள் தொகை 732 கோடி. 2024-ம் ஆண்டில் இது 800 கோடியைக் கடந்து விடும்.
 
4.bp.blogspot.com - 2026
 
மக்கள்தொகை வளர்ச்சி இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மளமளவென்று உயர்வதற்கு காரணம் மருத்துவத் துறையின் வியத்தகு வளர்ச்சிதான். மனித சரித்திரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போனதற்கு போர்களோ, யுத்தங்களோ காரணம் அல்ல. நோய்கள்தான் காரணம்.
 
காலரா, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் போதும், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்கள் செத்துமடிவார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவப் புரட்சி, நோய்களால் மக்கள் இறந்து போவதை குறைத்தது. எந்த வகையான நோயானாலும் உடலைவிட்டு விரட்டியடித்தது. உயிரைப் பிடித்து வைக்கும் மருத்துவம் மனிதனை காப்பாற்றியது. மனித ஆயுளும் நீண்டது.
 
1950-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 40 வயதாகவும், பெண்களின் வயது 38 ஆகவும் இருந்தது. 2001-ல் ஆண்களின் ஆயுட்காலம் 63 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 65 ஆகவும் உயர்ந்தது. 2010-ல் ஆண், பெண் இருவரது சராசரி ஆயுட்காலமும் 75 ஆண்டாக உயர்ந்துள்ளது.
 
ஆயுள் நீண்டதால் உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை கூடியது. இறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது. இப்போதைய கணக்குப்படி உலகில் வருடத்திற்கு 20 கோடி பிறப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இறப்பு என்பது வெறும் 8 கோடிதான். இதனால்தான் ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.
 
இதே வேகத்தில் மக்கள் பெருக்கம் இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1,200 கோடியைக் கடந்து விடும். எல்லா உயர்வுக்குமே ஒரு உச்சம் இருப்பதுபோல் இதற்கும் உச்சம் இருக்கிறது. அதைக் கடந்து செல்ல முடியாது. மக்கள் தொகையும் அப்படிதான்..!
 
இந்த உலகம் 1,400 கோடி மக்களைத்தான் தாங்கும். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. அந்த தாக்குப் பிடிக்க முடியாத அளவை நோக்கித்தான் உலகம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அபாயமும் இந்தியாவிற்குத்தான் மிக அதிகம். 2028-ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கள்தொகையில் முதல் நாடக முன்னுக்கு வந்துவிடும்.
 
அபாயம் அதுவல்ல..! வேறு..!
 
நமது உடலில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி சீராக வளர்ந்தால் அது வளர்ச்சி. ஒரு இடம் மட்டும் அபரிவிதமாக வளர்ந்தால் அதற்கு பெயர் கட்டி.  எப்போது வேண்டுமானாலும் கட்டி உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் பெருக்கமும் அப்படிதான்.
 
2.bp.blogspot.com YfsdKPfPw1c VXQwWNFwZlI AAAAAAAAEfs 3WbR9IOhaLQ s320 11slide2 - 2026
 
அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது உள்ள மக்கள்தொகையே 2050-லும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யாவில் 12 % மக்கள் தொகை குறையும். அப்படியானால், ஆபத்தான மக்கள்தொகை பெருகி வெடிக்கப் போவது இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில். 
 
வீக்கம் என்பது இந்தியாவிலும் இந்தியாவைச் சுற்றியும் மட்டுமே நிகழ்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்குப்படி உலகின் மக்கள்தொகை 700 கோடி. இந்தியாவில் 121 கோடியே 7 லட்சம் (121,01,93,422), தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் (7,21,38,958) என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2028-ல் 145 கோடி என்ற இலக்கை எட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும்.
 
உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.5 % தான். ஆனால் மக்கள்தொகையிலோ உலக மக்களில் 16 % மக்களை தன்னோடு வைத்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் மக்கள்தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் சராசரியாக 52 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் 382 பேர், தமிழ்நாட்டில் 555 பேர், அதுவே சென்னையில் என்றால் ஒரு ச.கி.மீ. 27,000 பேர் வசிக்கிறார்கள். அடர்த்தி இந்தியாவிதான் அதிகம். 
 
2.bp.blogspot.com kuYVYO8oCzU VXQw9aZ wwI AAAAAAAAEgU MIO0Mu5nLHw s640 mass vs class - 2026
 
இப்போதே இந்தியாவின் மக்கள் நிலை படுமோசம். நாட்டில் வாழும் பாதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. உணவு, மருந்து, வீடு, சுகாதாரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலக வங்கி அறிவித்திருக்கும் புதிய மதிப்பீட்டின்படி சர்வதேச வறுமை கோட்டிற்கு  கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் கூட வருமானம் இல்லாதவர்கள். உலக ஏழைகளில் 33 % பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். அதாவது உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 
 
2050-ல் இந்தப் பற்றாக்குறை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தனைக்கும் இந்தியாதான் உலகில் முதன் முதலாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறையை கொண்டுவந்த நாடு.  
 
1952-ல் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. அன்றைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரித்கவுர் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைப் பிறப்பை தடுப்பது அன்று கொடும் பாவமாகக் கருதப்பட்டது. 
 
4.bp.blogspot.com jfPJRo9whs VXQwnWRUlbI AAAAAAAAEf8 iQV3tJbJgFY s320 india population 1978 - 2026
 
அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேச்சுதான் இந்திய அரசையே உலுக்கிப் போட்டது. 
 
“குழந்தைகளை, பெண்களின் கர்ப்பப்பைக்கு கடவுள்தான் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் குறுக்கிட நமக்கு என்ன உரிமையுள்ளது? என்று சிலர் கேட்கிறார்கள். குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள்தான் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குத்தான் அறிவு. எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவை பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்.” என்றார். 
 
இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய பேச்சு அது! உடனே நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் நேரு தீர்மானித்தார். இதற்காக 65 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை இந்தியா தொடங்கியது. 
 
3.bp.blogspot.com ObQyYig AQc VXQw2GQTt8I AAAAAAAAEgM mSQbuNeHgPU s640 18top3 - 2026
 
அரசின் இந்த முயற்சியால் ஆறேழு குழந்தைகளை பெற்றெடுத்த இந்தியர்கள் ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார்கள். அப்படியிருந்துமே 1947-ல் வெறும் 30 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 121 கோடியைத் தாண்டிவிட்டது. ஒருவேளை பிறப்பை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் இந்தியாவின் நிலை, நினைத்தாலே தலை சுற்றுகிறது…!  
 
 
1.bp.blogspot.com evOtkM4OW4s VXQzenVL - 2026

உயரத்தில் ஓர் உலா

 

 

3.bp.blogspot.com DWsSRNSp9Wo VXkXbGM8UFI AAAAAAAAEg0 32DyUn1lEVE s640 lujiazui pedestrian bridge 3%255B5%255D - 2026

ஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.

இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

1.bp.blogspot.com LTyCbZE7Lt8 VXkXzE1Iv4I AAAAAAAAEhQ a3rKHFWerL0 s640 shanghai china lujiazui bridge woe6 - 2026

அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.

நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.

3.bp.blogspot.com hgRkzBLmrsw VXkX4CxUCCI AAAAAAAAEhY DR1rwbxhD2U s640 Shanghai Lu Jia Zui circular Pedestrian Bridge 2 - 2026

சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.

ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.

3.bp.blogspot.com UG805PbwmPk VXkXttCowoI AAAAAAAAEhI PFyFViid pQ s640 blogger image 1933125647 - 2026
நடைப்பாலத்தின் மேலே
4.bp.blogspot.com lCn6EIwWHGQ VXkXpjVBXQI AAAAAAAAEhA OdHLoYthWa8 s640 Kruglyy most Luczyaczuy angl Lujiazui Circular Pedestrian Bridge - 2026
நடைப்பாலத்தின் கீழே