Home Blog Page 5945

வெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா

 

 

1.bp.blogspot.com 8bt39AnQFjw VXQwQDsqiCI AAAAAAAAEfg ruP52IMHcUE s400 1bacd083ec517693c0098a3d140f597bf082490d - 2026

சுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன் மக்கள் தொகையும் சேர்ந்துள்ளது.
 
மனித சரித்திரத்தில் முன் எப்போதும் இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மனிதன் காலத்தை கணக்கிடத் தொடங்கிய கி.பி. முதல் வருடத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடிதான்.
 
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து கி.பி.1000-ம் ஆண்டில் 31 கோடியாக உயர்ந்தது. ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 11 கோடிதான் அதிகரித்தது. உலக மக்கள் தொகை 100 கோடியை  எட்டியது 1820-ல் தான்.
 
2.bp.blogspot.com m4Mulu8JYBk VXQwvobFv6I AAAAAAAAEgE Qp5fDwA6O7k s640 population india - 2026
 
மனிதன் பூமியில் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டால் இது மிக நீண்ட காலம். இந்த 100 கோடி என்ற அளவை எட்ட மனிதனுக்கு ஒன்றரைக்கோடி வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் மக்கள் தொகை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
 
நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டுள்ளன. மக்கள் தொகை 700 கோடியை தொட்டது 2011-ம் ஆண்டில். இன்றைய நிலவரப் படி உலகின் மக்கள் தொகை 732 கோடி. 2024-ம் ஆண்டில் இது 800 கோடியைக் கடந்து விடும்.
 
4.bp.blogspot.com - 2026
 
மக்கள்தொகை வளர்ச்சி இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மளமளவென்று உயர்வதற்கு காரணம் மருத்துவத் துறையின் வியத்தகு வளர்ச்சிதான். மனித சரித்திரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போனதற்கு போர்களோ, யுத்தங்களோ காரணம் அல்ல. நோய்கள்தான் காரணம்.
 
காலரா, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் போதும், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்கள் செத்துமடிவார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவப் புரட்சி, நோய்களால் மக்கள் இறந்து போவதை குறைத்தது. எந்த வகையான நோயானாலும் உடலைவிட்டு விரட்டியடித்தது. உயிரைப் பிடித்து வைக்கும் மருத்துவம் மனிதனை காப்பாற்றியது. மனித ஆயுளும் நீண்டது.
 
1950-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 40 வயதாகவும், பெண்களின் வயது 38 ஆகவும் இருந்தது. 2001-ல் ஆண்களின் ஆயுட்காலம் 63 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 65 ஆகவும் உயர்ந்தது. 2010-ல் ஆண், பெண் இருவரது சராசரி ஆயுட்காலமும் 75 ஆண்டாக உயர்ந்துள்ளது.
 
ஆயுள் நீண்டதால் உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை கூடியது. இறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது. இப்போதைய கணக்குப்படி உலகில் வருடத்திற்கு 20 கோடி பிறப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இறப்பு என்பது வெறும் 8 கோடிதான். இதனால்தான் ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.
 
இதே வேகத்தில் மக்கள் பெருக்கம் இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1,200 கோடியைக் கடந்து விடும். எல்லா உயர்வுக்குமே ஒரு உச்சம் இருப்பதுபோல் இதற்கும் உச்சம் இருக்கிறது. அதைக் கடந்து செல்ல முடியாது. மக்கள் தொகையும் அப்படிதான்..!
 
இந்த உலகம் 1,400 கோடி மக்களைத்தான் தாங்கும். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. அந்த தாக்குப் பிடிக்க முடியாத அளவை நோக்கித்தான் உலகம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அபாயமும் இந்தியாவிற்குத்தான் மிக அதிகம். 2028-ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கள்தொகையில் முதல் நாடக முன்னுக்கு வந்துவிடும்.
 
அபாயம் அதுவல்ல..! வேறு..!
 
நமது உடலில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி சீராக வளர்ந்தால் அது வளர்ச்சி. ஒரு இடம் மட்டும் அபரிவிதமாக வளர்ந்தால் அதற்கு பெயர் கட்டி.  எப்போது வேண்டுமானாலும் கட்டி உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் பெருக்கமும் அப்படிதான்.
 
2.bp.blogspot.com YfsdKPfPw1c VXQwWNFwZlI AAAAAAAAEfs 3WbR9IOhaLQ s320 11slide2 - 2026
 
அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது உள்ள மக்கள்தொகையே 2050-லும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யாவில் 12 % மக்கள் தொகை குறையும். அப்படியானால், ஆபத்தான மக்கள்தொகை பெருகி வெடிக்கப் போவது இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில். 
 
வீக்கம் என்பது இந்தியாவிலும் இந்தியாவைச் சுற்றியும் மட்டுமே நிகழ்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்குப்படி உலகின் மக்கள்தொகை 700 கோடி. இந்தியாவில் 121 கோடியே 7 லட்சம் (121,01,93,422), தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் (7,21,38,958) என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2028-ல் 145 கோடி என்ற இலக்கை எட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும்.
 
உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.5 % தான். ஆனால் மக்கள்தொகையிலோ உலக மக்களில் 16 % மக்களை தன்னோடு வைத்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் மக்கள்தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் சராசரியாக 52 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் 382 பேர், தமிழ்நாட்டில் 555 பேர், அதுவே சென்னையில் என்றால் ஒரு ச.கி.மீ. 27,000 பேர் வசிக்கிறார்கள். அடர்த்தி இந்தியாவிதான் அதிகம். 
 
2.bp.blogspot.com kuYVYO8oCzU VXQw9aZ wwI AAAAAAAAEgU MIO0Mu5nLHw s640 mass vs class - 2026
 
இப்போதே இந்தியாவின் மக்கள் நிலை படுமோசம். நாட்டில் வாழும் பாதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. உணவு, மருந்து, வீடு, சுகாதாரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலக வங்கி அறிவித்திருக்கும் புதிய மதிப்பீட்டின்படி சர்வதேச வறுமை கோட்டிற்கு  கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் கூட வருமானம் இல்லாதவர்கள். உலக ஏழைகளில் 33 % பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். அதாவது உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 
 
2050-ல் இந்தப் பற்றாக்குறை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தனைக்கும் இந்தியாதான் உலகில் முதன் முதலாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறையை கொண்டுவந்த நாடு.  
 
1952-ல் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. அன்றைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரித்கவுர் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைப் பிறப்பை தடுப்பது அன்று கொடும் பாவமாகக் கருதப்பட்டது. 
 
4.bp.blogspot.com jfPJRo9whs VXQwnWRUlbI AAAAAAAAEf8 iQV3tJbJgFY s320 india population 1978 - 2026
 
அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேச்சுதான் இந்திய அரசையே உலுக்கிப் போட்டது. 
 
“குழந்தைகளை, பெண்களின் கர்ப்பப்பைக்கு கடவுள்தான் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் குறுக்கிட நமக்கு என்ன உரிமையுள்ளது? என்று சிலர் கேட்கிறார்கள். குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள்தான் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குத்தான் அறிவு. எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவை பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்.” என்றார். 
 
இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய பேச்சு அது! உடனே நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் நேரு தீர்மானித்தார். இதற்காக 65 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை இந்தியா தொடங்கியது. 
 
3.bp.blogspot.com ObQyYig AQc VXQw2GQTt8I AAAAAAAAEgM mSQbuNeHgPU s640 18top3 - 2026
 
அரசின் இந்த முயற்சியால் ஆறேழு குழந்தைகளை பெற்றெடுத்த இந்தியர்கள் ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார்கள். அப்படியிருந்துமே 1947-ல் வெறும் 30 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 121 கோடியைத் தாண்டிவிட்டது. ஒருவேளை பிறப்பை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் இந்தியாவின் நிலை, நினைத்தாலே தலை சுற்றுகிறது…!  
 
 
1.bp.blogspot.com evOtkM4OW4s VXQzenVL - 2026

உயரத்தில் ஓர் உலா

 

 

3.bp.blogspot.com DWsSRNSp9Wo VXkXbGM8UFI AAAAAAAAEg0 32DyUn1lEVE s640 lujiazui pedestrian bridge 3%255B5%255D - 2026

ஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.

இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

1.bp.blogspot.com LTyCbZE7Lt8 VXkXzE1Iv4I AAAAAAAAEhQ a3rKHFWerL0 s640 shanghai china lujiazui bridge woe6 - 2026

அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.

நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.

3.bp.blogspot.com hgRkzBLmrsw VXkX4CxUCCI AAAAAAAAEhY DR1rwbxhD2U s640 Shanghai Lu Jia Zui circular Pedestrian Bridge 2 - 2026

சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.

ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.

3.bp.blogspot.com UG805PbwmPk VXkXttCowoI AAAAAAAAEhI PFyFViid pQ s640 blogger image 1933125647 - 2026
நடைப்பாலத்தின் மேலே
4.bp.blogspot.com lCn6EIwWHGQ VXkXpjVBXQI AAAAAAAAEhA OdHLoYthWa8 s640 Kruglyy most Luczyaczuy angl Lujiazui Circular Pedestrian Bridge - 2026
நடைப்பாலத்தின் கீழே

 

ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.

 

 
 
ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.
 
இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. 
 

1.bp.blogspot.com mGhzqmuEqyE VXu92flry3I AAAAAAAAEkU Ta5hRI UHss s400 20mp AVM1 jpg 1118442g - 2026

ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் ‘ஏவி அண்டு சன்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர்.

1.bp.blogspot.com nqFFhzCTW9I VXvCNs8AgsI AAAAAAAAElU VNVYYsuq 14 s400 28sld9 - 2026

அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை விரிவு படுத்தினார். 
 
அந்த காலத்தில் கிராமபோன் இசைத் தட்டுக்களில் கர்னாடக இசைப் பாடல்கள் மட்டுமே வெளிவரும். அதில், ‘வண்ணான் வந்தானே…’ போன்ற கிராமியப் பாடல்களை முதன் முதலில் இசைத்தட்டாக வெளியிட்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். அந்த பாடல் வரலாறு காணாத விற்பனை தொட்டது. 
 
அந்த வெற்றி தந்த தெம்பில் 1935-ல் ‘சரஸ்வதி சவுண்ட் புரொடக்க்ஷன்’ என்ற சினிமா கம்பெனியை தொடங்கினார்கள். ‘அல்லி அர்ஜுனா’, ‘ரத்னாவளி’ என்ற இரண்டு படங்களை இப்படி எடுத்தார்கள். இரண்டுமே செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை.

4.bp.blogspot.com jROqG5Iplv4 VXu Pq6tqfI AAAAAAAAEko FN2bHPfe9t0 s1600 001 Alli Arjuna - 2026
அல்லி அர்ஜுனா 1935
சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இல்லாததால் தரமற்ற கேமராவைக் கொண்டு படங்கள் எடுப்பதால், படங்களின் தரம் குறைகிறது என்று எண்ணிய அவர், இந்த இரண்டு படங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சொந்த ஸ்டுடியோ உருவாக்கம் எண்ணத்தை தோற்றுவித்தது. 
 
சொந்த ஸ்டுடியோவிற்காக சென்னையில் இடம் தேடினார்கள். மைலாப்பூர் கபாலி டாக்கிஸ் அருகில் ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதன் உள்ளே விஜயநகர மகாராஜா என்ற மாளிகை ஒன்று இருந்தது. அதில் பேய்கள் நடமாடுவதாக பேச்சு. அதனால் அந்த பகுதியில் யாரும் நடமாட மாட்டார்கள்.

பேய், பிசாசுப் பற்றி கவலைப் படாத செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் அந்த மாளிகையை வாடகைக்கு எடுத்தார்கள். மாதம் 325 ரூபாய் வாடகை. அரண்மனை மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியது. முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தை தயாரித்தார்கள்.

அன்றைக்கெல்லாம் நடிகர்களுக்கு மாத சம்பளம்தான். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் 67 ரூபாய் 8 அணா. 1941-ல் ‘சபாபதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார் மெய்யப்ப செட்டியார். அதன்பின் 1945-ல் ‘ஸ்ரீவள்ளி’ படத்தை  பிரகதி ஸ்டுடியோவில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், ருக்மணி நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

2.bp.blogspot.com FwJ92w7GBpc VXu jSMJtkI AAAAAAAAEkw bkZZUBCCFyM s320 hqdefault - 2026
ஸ்ரீவள்ளி 1940

1934-ல் இருந்து 1940 வரை சினிமா துறையில் நஷ்டத்தையே சந்தித்து வந்த செட்டியாருக்கு ‘சபாபதி’ சிறிய ஏற்றத்தை தந்தது. ‘ஸ்ரீவள்ளி’யோ உச்சத்திற்கு கொண்டு போனது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட காஷ்மீர் சென்று வந்தார்.

சென்னை திரும்பிய செட்டியாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரின் பங்குதாரர்கள் வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்திருந்தார்கள். பேய் பங்களாவாக இருந்த மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியப் பின் செல்வாக்கு கூடியது. அதனால், அதை 7 லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டார்கள்.

செட்டியாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக தயாரித்த ‘ஸ்ரீவள்ளி’ வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. இனி கூட்டு சேராமல் தனியாக தொழில் செய்வது என்று செட்டியார் தீர்மானித்தார்.

ஆனால், அப்போது உலக யுத்தம் தொடங்கி இருந்த நேரம். பிலிம் இறக்குமதியில்லை. இருந்தாலும் பிலிமுக்கு ஆர்டர் கொடுத்தார். யுத்தம் முடிந்ததும் அனுப்பி வைக்கச் சொன்னார். யுத்தம் முடிந்தது. பிலிம் மட்டுமல்லாமல் கேமரா, ஒலிப்பதிவு கருவி ஆகியவற்றை வாங்கினார்.

எல்லாம் வந்து விட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் இல்லை. யுத்தம் காரணமாக அமலில் இருந்த மின்வெட்டு நீக்கப் படாமலே இருந்தது. தொடர்ந்து இருளில் இருக்கும் சென்னையில் ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த செட்டியார் சொந்த ஊரான காரைக்குடியில் புதிய ஸ்டுடியோவை தொடங்க நினைத்தார்.

காரைக்குடிக்கு வந்த செட்டியாருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது மின்சாரம்தான். இப்போது போல் அந்த காலத்தில் மின்சாரம் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. காரைக்குடி பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து கொண்டிருந்த ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்பரேஷன்’ என்ற நிறுவனம் 50 கிலோவாட் மின்சாரம் தருவதாக உறுதி தந்தது. அதுவும் நகருக்கு வெளியேதான் தர முடியும் என்றது.

1.bp.blogspot.com NVwU029F03I VXu92mtSJhI AAAAAAAAEkg cS tbm0kuz0 s400 dsc00886copy146205 - 2026

செட்டியார் காரைக்குடிக்கு வெளியே இடம் தேடினார். தேவகோட்டை ரஸ்தா அருகே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. அதை தேவகோட்டை ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் கட்டியிருந்தார். அந்த நாடகக் கொட்டகைக்கு ரூ.2,000-மும், சுற்றிலும் இருக்கும் வெறும் காலி இடத்திற்கு ரூ.1,000-மும் என மாத வாடகைக்கு அந்த இடத்தை பேசி முடித்தார், செட்டியார்.

இதுதான் ஏ.வி.எம்.மின் முதல் ஸ்டுடியோ. நாடகக் கொட்டகைதான் படப்பிடிப்பு தளம். சுற்றிலும் இருந்த வேற்று இடங்களில் சின்ன சின்ன குடிசைகள் அமைக்கப்பட்டன. அதில்தான் நடிகர், நடிகைகள் தனித்தனியாக தங்கிக் கொண்டார்கள். அங்கு மேகப் செய்வதற்கும், ஒத்திகைப் பார்ப்பதற்கும் தனித்தனி குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன.

3.bp.blogspot.com MFBNb - 2026
‘நாம் இருவர்’. 1947

இங்கு முதன் முதலாக எடுத்தப் படம் ‘நாம் இருவர்’. 1947-ம் வருடம் பொங்கலன்று மதுரையில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துதான் (மார்ச்) சென்னையில் வெளியானது. படம் மாபெரும் வெற்றி. மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடல்களை முதன் முதலாக  சினிமாவில் பாடலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான். விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இந்த பாடல்கள் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன.

1.bp.blogspot.com 4jASlkhHMGg VXvAV3VtbMI AAAAAAAAElA lwFvbyesuY8 s400 Naam Iruvar %2528We Two%2529 poster - 2026
நாம் இருவர் போஸ்டர்

அடுத்த ஆண்டே ‘வேதாள உலகம்’  வெளிவந்தது. இந்த படமும் பிரமாண்டமான வெற்றி. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் செட்டியாருக்கு சினிமா உலகில் மதிப்பும் மரியாதையும் கூடியது.

தனது நாடகக் கொட்டகையில் எடுத்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிக் குவிப்பதைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தாருக்கு மனம் மாறியது. 300 ரூபாய்க்குக் கூட பெறுமானம் இல்லாத அந்த இடத்திற்கு செட்டியார் 3,000 ரூபாய் வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது தனக்கு 10,000 ரூபாய் வாடகை வேண்டும் என்றார். இது மாபெரும் கொள்ளை என்று நினைத்த செட்டியார் மீண்டும் சென்னைக்கே தனது ஸ்டுடியோவை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

அதற்காக சென்னையில் இடம் தேடினார். அப்போது எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டுடியோவை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி செட்டியாரிடம் கூறினார். “உங்கள் ஸ்டுடியோவோ மவுண்ட் ரோட்டில் நல்ல இடத்தில் இருக்கிறது. ஏராளமான பொருட்களும் இருக்கின்றன. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கேமரா, ரெக்கார்டிங் மெஷின் எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதால் எனக்கு காலி இடம் மட்டும் போதும்.” என்றார்.

வடபழனி கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு முஸ்லிம், தோல் கிடங்கு ஒன்றை வைத்திருந்தார். அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம். நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் வாழப் பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் தோல்ஷாப் சாயபு. அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அகதி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரஜையாக மாறிவிட்ட தோல்ஷாப் சாயபுவின் 10 ஏக்கர் நிலத்தை ரூ.37,500-க்கு வாங்கினார். சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ உதயமானது. தேவகோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோ இருந்த போது தொடங்கிய பட வேலைகளை மீண்டும் சென்னையில் தொடங்கி படத்தை வெளியிட்டார், செட்டியார். படத்தின் பெயர் ‘வாழ்க்கை’

ஜமீன்தாரின் பணத்தாசை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒருவேளை காரைக்குடியும் தேவகோட்டையும் மிகப் பெரிய திரைப்பட நகரங்களாக கூட மாறியிருக்கலாம்.

யார் கண்டது..?!

3.bp.blogspot.com OSM8L2bj1Ck VXvBCvF ycI AAAAAAAAElI KcH5UmTvgX8 s640 22THRAMAN 761494f - 2026
சிதிலமடைந்த நிலையில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவின் உட்பகுதி

இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?

 

 
 
 
news sri lankan navy personnel allegedly attacks five fishermen from rameswaram when they were fishing near katchatheevu 1 35372 35372 srilanka india flag - 2026
 
ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு தமிழக மீனவர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. ஏன் இப்படி மீனவர்கள் இரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகிறார்கள்?
 
ராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவதும், தடிகளைக் கொண்டு அடிப்பதும், கற்களை வீசுவதும், மீன்கள் மற்றும் வலைகளை பறித்துக்கொண்டு செல்வதும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. 
 
உண்மையில் கடலுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் கூட்டமை’ப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸை சந்தித்தேன்.
 
2.bp.blogspot.com 4ezr0YqQP4g VX2E1C c2GI AAAAAAAAEmo LGfncJys7nU s200 nj%2Bbose%25281%2529 - 2026
என்.ஜே.போஸ்
“மீனவர்களாகிய நாங்கள் முன்பெல்லாம் இலங்கை, இந்தியா என்ற தேச எல்லைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். நாங்கள் கடலில் மீன் பிடிக்கும் போது படகில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அருகில் இருக்கும் இலங்கைக்கு சென்று சரிசெய்து கொள்வோம்.
 
கடல் சீற்றம் ஏற்படும் போது வலை காணமல் போனாலோ, மீனவர்கள் வழிதவறி சென்று விட்டாலோ இலங்கை கடற்படையினர் அவர்களை பத்திரமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். நாங்கள் இலங்கை சென்று திரும்புவதும், இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் வந்துவிட்டு போவதும் எங்களுக்குள் சகஜமாக இருந்தது. 
 
கடல் எல்லைகள் எங்களை எப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. எங்களுக்குள் நிறைய அன்னியோன்யம் இருந்தது. நாங்கள் கையோடு எடுத்துச்செல்லும் பழைய சோற்றையும் கருவாட்டுக் குழம்பையும் சாப்பிட நடுக் கடலில் காத்துக்கிடப்பார்கள் இலங்கைக் கடற்படையினர். எங்களுக்கு அவர்கள் சாப்பிட வைத்திருக்கும் பிரெட்டையும், ரொட்டிகளையும் தருவார்கள். அந்த மேற்கத்திய உணவு எங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எங்களின் சாப்பாடு பிடிக்கும். இப்படி எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தோம். 
 
இந்த நிலையில் 1983-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்கள். எங்களின் எல்லா நட்பும் தடம் தெரியாமல் மாறத்தொடங்கியது.எங்களுக்குள் திடீரென்று தேச எல்லைகள் முளைத்தன. சிநேகம் காட்டிய சிங்களர்கள் சீறத் தொடங்கினார்கள். 
 
4.bp.blogspot.com 7qV54oCT82U VX2E6TazRuI AAAAAAAAEmw SnJwACF2vQ0 s640 SL Navy Arrests 14 Ind Fishermen - 2026
இலங்கைக் கடற்படையினர்
கடலில் எல்லை கடந்தவர்களை சுட்டுத் தள்ளினார்கள். இதுவரை 350 மீனவர்களை துப்பாக்கி சூட்டில் இழந்திருக்கிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து ஊனமாகியிருக்கிறார்கள். படகுகள், வலைகள், மீன்கள் என்று கோடிக்கணக்கான எங்களின் உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் களவாடப்பட்டன. 
 
4.bp.blogspot.com - 2026
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் 
சரி, விடுதலைப்புலிகள் பிரச்னை இருக்கும் வரை நமக்கு இதுதான் விதியென்று பொறுமை காத்தோம். விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்த காலமும் வந்தது. மீண்டும் 1983-க்கு முந்தைய வசந்த காலம் திரும்பும் என்று நினைத்திருந்தோம். 
 
2.bp.blogspot.com - 2026
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்
ஆனால், நிலைமை முன்பைவிட மோசமானது. இப்போது சிங்களர்கள் மட்டுமல்ல, சீன ராணுவத்தினரும் சேர்ந்துகொண்டு எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்து வருகிறோம். மீன் பிடிக்கும் தொழிலே எங்களுக்கு வாழ்வா..? சாவா..? என்ற போராட்டமாக மாறியுள்ளது.”
 
4.bp.blogspot.com DQf44gFAQE4 VX2Epi5sgoI AAAAAAAAEmQ C3z3WI hsp0 s640 FISHERMEN 1543989f - 2026
விடுதலையாகி நாடு திரும்பும் மீனவர்
“கடல் எல்லையை கடப்பதால்தானே இத்தனை பிரச்னையும், இந்திய கடல் எல்லைக்குள்ளே மீன் பிடிக்கலாமே..? மீனவர்களுக்கு கடல் எல்லை தெரியாதா..?”
 
“தெரியும்! மீனவர்களுக்கு நன்றாக கடல் எல்லைகள் தெரியும். ஆனாலும் எல்லை கடந்து சென்று மீன் பிடிப்பது என்பதை நாங்கள் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். இது பாரம்பரியமாக வந்த பழக்கம். அதை விட முடியவில்லை. 
 
அது மட்டுமல்ல. மீன் பிடிப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இழு வலை முறை. மற்றொன்று தள்ளு வலை முறை. இந்திய மீனவர்கள் பயன்படுத்துவது இழுவலை முறையை. இலங்கை மீனவர்கள் உபயோகிப்பது தள்ளு வலை முறையை. 
 
இழுவலையில் சில வகை மீன்களும், தள்ளு வலையில் சில வகை மீன்களும் தான் சிக்கும். இயற்கையின் வினோதம் என்னவென்றால், நமக்குத் தேவையான மீன்கள் இலங்கைக் கடற்பகுதியிலும், அவர்களுக்கு தேவையான மீன்கள் இந்திய கடற்பகுதியிலும் இருப்பதுதான். 
 
3.bp.blogspot.com w3UdhmKJzhY VX2EiTt7IgI AAAAAAAAEl4 LqoqufualhY s640 29MAY RNJWSHI MA 2422044f - 2026
மீன்பிடிக்க புறப்படும் மீனவர்கள்
ஒரு இந்திய மீனவன் இந்திய கடற்பகுதியில் மட்டும் மீன் பிடித்து திரும்பினால் அவன் நஷ்டத்தோடுதான் வீடு திரும்புவான். அவன் குடும்பம் பட்டினியோடுதான் போராடவேண்டும். 
 
மீனவன் ஒருமுறை கடலுக்கு போய்வர 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதைவிட அதிகமான மீன்களைப் பிடித்து கரைக்கு திரும்பினால்தான் லாபம். 
 
காலை 6 மணிக்கு கடலுக்குப் போய் மறுநாள் காலை 10 மணிக்கு கரை திரும்புவார்கள். ஒருதடவை போய்வர 200 முதல் 300 லிட்டர் வரை டீசல் தேவை. வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் மாதத்திற்கு 12 முறை கடலுக்குள் போய்வருவோம். 
2.bp.blogspot.com WSKQO3qtaBI VX2Eiyee5yI AAAAAAAAEmA LtpNK0 pYYQ s640 2111RameswaramFishingPort - 2026
மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள்
அதற்காக அரசு மானிய விலையில் 15,000 லிட்டர் டீசலை வருடத்திற்கு தருகிறது. இது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. வருடத்தில் 10 மாதமும் கடலுக்குள் செல்வதால் 30,000 லிட்டர் டீசல் மானியத்துடன் அரசு கொடுத்தால் நல்லது. 
 
1983-ல் ராமேஸ்வரத்தில் வெறும் 200 படகுகள் தான் இருந்தன. இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவற்றில் சில படகுகளில் அனுமதிக்கப்பட்ட திறனைவிட கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துகிறார்கள். 
 
அதிலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, சுருக்கு மடிவலை முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் கடலின் மொத்த வளமும் சுரண்டப் படுகின்றன. 
 
சாதாரண படகின் மூலம் 12,000 ரூபாய்க்கு மீன் பிடித்து திரும்புவதே பெருங்காரியமாக இருக்கும்போது, தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு, அதிக சக்தி வாய்ந்த படகுகள் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் மீன்களை பிடித்து வந்து விடுகிறார்கள். 
 
இதேநிலை நீடித்தால் நமது சந்ததிக்கு மீன் கிடைக்காது. வருமானம் முக்கியம்தான். அதைவிட வருங்காலம் மிக முக்கியம். வருங்கால சந்ததியை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.
 
கடலில் மீன் வளத்தை அதிகரிக்க 2 முதல் 3 வருடங்கள் எடுத்துக் கொள்ளாம். அந்த காலங்களில் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இப்படி 3 வருடங்கள் மீன் பிடிக்காமல் பொறுத்திருந்தால் கடலில் ஏராளமான மீன்கள் பெருகும். வருங்காலத்தையும் கடல் வளத்தையும் காக்க முடியும். 
 
மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மீனவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. உண்மையான அக்கறையோடு அரசு செயல் பட்டால் மீனவர்கள் வாழ்வு உயரும்.” என்று உணர்வு பொங்க கூறி முடித்தார் என்.ஜே.போஸ்.

2.bp.blogspot.com KHrjdu26iXc VX2MXbcnEdI AAAAAAAAEnU DpkLu5NQ5Qo s640 01 fisherman throws his fishing net 600 - 2026

இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!

 

 
வாட்சப்பில் வந்த தகவல் நல்லதாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன். பதிவெழுத நேரம் இல்லாததும் ஒரு காரணம்தான். 
 
4.bp.blogspot.com LjB nBA0moM VYmX1kW - 2026

 
 
ஐயா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள், மன்னிக்கவும் யாரும் உண்ணவேண்டாம் மன்னிக்கவும்! sugar disease is a slow poison இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி!
 
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
 
1.bp.blogspot.com - 2026
 
இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
 
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
 
1.bp.blogspot.com YeRvVUZbHcU VYmX OPiA2I AAAAAAAAEpE 5uroGJm50oQ s640 11 shocking facts about sugar that you didnt know - 2026

 
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

 
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
 
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
 
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
 
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
 
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
 
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
 
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
 
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
 
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
 
4.bp.blogspot.com - 2026

ராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

 

 

3.bp.blogspot.com HqqI4i33tRw VYr eHJrILI AAAAAAAAEpk PIR4bCItlt0 s400 00201 174898 - 2026
குலும்பன், குலும்பி தம்பதி
 
பட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.
 
தமிழ்நாடு – கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.
 
18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்
 
1.bp.blogspot.com FZHIF5Bnhn8 VYr kQTQoLI AAAAAAAAEpw 4XpTdnrvngI s400 1430127642 Ramakkalmedu wind farm - 2026
 
அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.
 
நம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம். 
 
1.bp.blogspot.com LsV7zQn1Yo VYr fjzjkkI AAAAAAAAEp0 kXFtA gOg1U s400 ramakkalmedu19 - 2026

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.  
 
குளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..!!! 
 
3.bp.blogspot.com er6qZz53zF8 VYr vQSdFYI AAAAAAAAEqA h0VqJyremKQ s640 Ramakkalmedu - 2026

கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!

 

 
4.bp.blogspot.com lIsUJ0bDgis VY2oz36dTTI AAAAAAAAEqo iqeLomJLOCc s400 uterus 1 - 2026
 
நடுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். 
 
மனித உடலில் வேறு எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை. 
 
ஆனால், பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பிறக்கும் வரைதான் அது முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்னையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.
 
இந்த பெருமையான கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை என்கிறார் கர்ப்பப்பை அகற்றப்பட்ட 200 பெண்களை ஆய்வு செய்த அமிர்தம்.
 
மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது ஆய்வு பட்டத்துக்காக இந்த சப்ஜெட்டை கையில் எடுத்தார், அமிர்தம். அப்போதுதான் கர்ப்பப்பையை இழந்த பெண்களின் துயரம் அவருக்கு புரிந்தது. 
 
அன்று முதல் தேவையில்லாமல் கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் அறியாமையை போக்குவதையே தனது நோக்கமாகக் கொண்டார். இதற்காக கிராமங்கள் தோறும் முகாம்களை அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரை சந்தித்த போது…
 
“இன்று ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம். 
 
கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000-ல் இருந்து 50,000 வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். காரணம் அவர்களில் 65 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பையை அகற்றப்படமலேயே சரி செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் என்பதுதான். 
 
கர்ப்பப்பையை எடுத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (உதாரணமாக கர்ப்பப்பை புற்றுநோயை சொல்லலாம்) இல்லையென்றால் எடுக்கக் கூடாது. நிறைய பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்றவற்றிற்கு கூட எடுத்துவிடுகிறார்கள்.      
 
இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்..! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்பார்கள். எவ்வளவு கொடுமை! பெண்களுக்கு அவ்வளவு இம்சையையா கொடுக்கிறது உயிரை உருவாக்கும் புனிதமான அந்த கர்ப்பப்பை.

 
1.bp.blogspot.com EtdCeT8XIeM VY20TJuKEOI AAAAAAAAEq0 PHkXsPK8LmQ s400 4b2d803f682bf16f703f09d087205b5b77141ba3 - 2026

ஒருபோதும் இல்லை. மாறாக, கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவிதத்தினர் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகிறது. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.” என்கிறார் அமிர்தம். 
 
இதை ஆமோதிக்கும் விதமாக ஒத்தக்கடையை சேர்ந்த லிங்குசாமியும் அவரது மனைவி அழகுராணியும் தொடர்கிறார்கள். 
 
“உண்மைதான், என்னுடைய அம்மா, இரண்டு அக்காக்கள் என்று மூன்று பேருமே கர்ப்பப்பையை எடுத்தவர்கள் தான். அதனால் அவர்கள் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். கர்ப்பப்பை இருந்த போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும் துள்ளலும் எடுத்த பின் அவர்களிடம் சுத்தமாக காணாமல் போய் விட்டது. எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்தும் குணமாகவில்லை. 
 
அவர்களால் தண்ணீர் குடத்தை தூக்க முடியாது. கொஞ்சம் தூரம் கூட நடக்க முடியாது. எதிப்பு சக்தியும் குறைந்தது. எப்போதும் நோயோடு வாழ்பவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். 
 
இதையெல்லாம் நேரடியாக பார்த்ததால்தான் என் மனைவிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அதை தவிர்த்தேன். மாற்று மருத்துவத்திற்கு மாறினேன். இன்று என் மனைவி கர்ப்பப்பையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்.” என்று கூறுகிறார். 
 
லிங்குசாமியின் மனைவி அழகுராணியிடம் பேசிய போது, “எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த சில நாட்களிலேயே என்னுடைய ஃபெலோபியன் டியூப்பில் கட்டி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆபரேஷன் மூலம் அதை சரி செய்தோம். 
 
மறுபடியும் அடுத்த பக்கத்தில் இருக்கும் மற்றொரு டியூப்பில் கட்டி இருப்பதாக சொன்னார்கள். இந்த கட்டி தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு தீர்வு, கர்ப்பப்பையை எடுத்துவிடுவதுதான் என்றும் சொன்னார்கள். 
 
கர்ப்பப்பையை எடுத்துவிட்டு தினம் தினம் செத்துப் பிழைக்கும் எனது மாமியார் மற்றும் மதினிமார்களின் அனுபவங்களை கேட்டபின் எனது கர்ப்பப்பையை இழக்க நான் விரும்பவில்லை. எனது கணவருக்கும் அதில் உடன்பாடில்லை. 
 
அதனால் கட்டியை கரைக்க தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டேன். எந்தப் பலனும் இல்லை. வயிறு ஊத்தம் கொடுத்தது. கை, கால்களில் எல்லாம் தாங்க முடியாத வலி இருந்து கொண்டே இருந்தது. பீரியட்ஸும் சரியாக இல்லை. பசி எடுக்கவில்லை. 
 
யாரைப் பார்த்தாலும் எரிச்சலும் கோபமும் வந்தது. அப்போதுதான் ஆங்கில மருத்துவத்தில் இருந்து விலகி வந்தோம். மாற்று மருத்துவத்தில் இதற்கான தீர்வு இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அக்குபங்க்சர் மருத்துவம் எடுத்துக் கொண்டேன். பூரணமாக குணமானது. 
 
இப்போது ஐந்து வருடம் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லா தொந்தரவுகளும் சரியாகிவிட்டது. கட்டியும் கரைந்து விட்டது. என் கர்ப்பப்பையை இழக்காமலே என் ஆரோக்கியத்தை மீட்டுவிட்டேன்.” என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அழகுராணி. 
 
“அவசரப்பட்டு எடுத்திருந்தால் அழகுராணியும் ஒரு நிரந்தர நோயாளியாக மாறியிருப்பார். எங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களிடம் உயிருக்கு ஆபத்து இருக்கும் பெண்களை தவிர மற்ற பெண்களை சித்தா, அக்குபங்க்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க சொன்னோம். நல்ல பலன் கிடைத்தது. இப்போது அனைவருமே நன்றாக இருக்கிறார்கள். 
 
கர்ப்பப்பை பாதிப்புகளில் சில வெறும் கால்சியம் மாத்திரைக்கு கூட சரியாகிவிடும் தன்மை கொண்டது. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு பல மருத்துவர்கள் ஒன்றும் இல்லாத காரணத்துக்கு கூட கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள். 
 
ஒரு சாதாரண புடவை எடுப்பதற்கே ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், தங்கள் உடலின் ஒரு பகுதியான பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 
 
கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள். 
 
தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் நல்லது.” என்று தீர்க்கமாக சொல்லி முடிக்கிறார், அமிர்தம்.
 
குழந்தையைப் பெற்றுத் தருவதோடு கர்ப்பப்பையின் வேலை முடிந்துவிடுவதில்லை. பெண்மையை வளப்படுத்துவதிலும் அது முக்கியப் பங்கு வகுக்கிறது. அதை பெண்கள் புரிந்து கொண்டு, பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.    

தியானத்துக்காக ஒரு சுற்றுலா

 

 
2.bp.blogspot.com - 2026
ஸ்வஸ்வரா

தியானம் செய்வதற்கு அமைதியான இடமும் அழகான இயற்கை சூழலும் இருந்தால் போதும் என்பதைத்தான் நாம் இதுவரை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அது மட்டும் போதாது, பர்ஸ் நிறைய பணம் வேண்டும் என்கிறது ஸ்வஸ்வரா..!

பெங்களூரிலிருந்து 480 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, கோகர்ணா என்ற இடம். அங்கிருக்கும் ஓம் கடற்கரையில் ஸ்வஸ்வரா ரிஸார்ட் அமைந்திருக்கிறது. இந்த இடத்திற்கு சாலையில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம். சாலையின் இருபக்கமும் இயற்கை ஓவியன் கொட்டி தீர்த்த வண்ணங்கள் பசுமை வனமாகவும்  நீலக் கடலாகவும் மாறி அழகு சேர்கின்றன.

1.bp.blogspot.com Mn7 - 2026

பசுமை நிறைந்த இந்த இடம் சொக்க வைக்கும் அழகுக்கு சொந்தக்காரன். காலை நேரத்தில் தியானம் செய்வதற்கு இதை விட சிறந்த இடம் தேடினாலும் கிடைக்காது.

1.bp.blogspot.com jimwrzApVgU VUNIGm4sZhI AAAAAAAAD68 eB4BSW9YIwE s640 SwaSwara Om Beach - 2026

அலைகளின் இதமான தாலாட்டில் யோகா, தியானம், ஸ்பா போன்றவற்றிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடம் இது. இங்கு பரிமாறப்படும் உணவு முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை.

1.bp.blogspot.com bvnKgPBC2HE VUNI5h2rMNI AAAAAAAAD7U EvrNOuXosUg s640 abhyangam 3 - 2026

இந்த இடத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. பறவைகளின் ஒலியும், பட்டாம் பூச்சிகளின் வண்ணமும் நம்மை மேலும் சிலிர்படைய செய்யும்.

3.bp.blogspot.com - 2026

மலையேற்றமும் கடற்கரையில் உலாவுவதும் ஆனந்தமமான அனுபவம். இந்த கடற்கரையில் மண்ணால் ஆன பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை பார்வையிடுவதும் தனி அழகு.

4.bp.blogspot.com FPYTrfa6QXQ VUNIqDmbs0I AAAAAAAAD7M GEACEMF7mo8 s640 swaswara gokarna karnataka - 2026

ஸ்வஸ்வரா உணவு சிறப்பு மிக்கது. அதனால் இங்கு செல்பவர்கள் அதிகாலையில் கிளம்பி மதிய உணவுக்கு அங்கு சென்று விடுவது நல்லது. அருகில் உள்ள விமான நிலையம் கோவா. இது 170 கி.மீ. தொலைவில் உள்ளது.

3.bp.blogspot.com YSc55lAWOHk VUNJKNFmsQI AAAAAAAAD7c gNKI3cRFKN0 s640 swa swara7 - 2026

ஸ்வஸ்வரா தியானத்திற்காக உருவாக்கப்பட்டதால் இங்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் தங்க வேண்டும். 5 நபர்கள் கொண்ட ஒரு குழு 5 இரவுகள் தங்குவதற்கு ரூ.55,000 கட்டணமாக பெறப்படுகிறது.

1.bp.blogspot.com lupCSEjwlTU VUNJY LLftI AAAAAAAAD7k Lyqqd1ulDNY s640 swa swara4 - 2026

ஐந்து நாட்கள் கடந்து வீடு திரும்பும்போது மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விடுமுறையை புத்துணர்ச்சியோடு கொண்டாடுங்கள். புத்துணர்ச்சிக்கு 08386-257132 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

2.bp.blogspot.com kPA1CplpuC4 VUNJsG9bKeI AAAAAAAAD7s fuT8e1HyPVQ s640 SwaSwara%2B %2BGokarna%2BGoa - 2026

புதிதாக உருவாகும் பிரமாண்டமான கோயில்கள்

 

4.bp.blogspot.com duXl3SV4mlQ VURgYHLKB I AAAAAAAAD8E tZRh4dKl40A s640 Vrindavan Chandrodaya Mandir Aerial View - 2026
விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர் வளாகம்

சுற்றுலாவில் பெரும் பங்கை ஆன்மிகம் சம்பந்தமான இடங்களே பெற்றுள்ளன. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்ஹாக்கள், புனித யாத்திரை போன்றவைக்காக சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 70 % சுற்றுலா ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.

சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், மொத்த சுற்றுலாவும் படுத்துவிடும்.

தற்போது பழமையான கோயில்களுக்கு இணையாக புதிதாக கட்டிய கோயில்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டெல்லி அக்ஷர்தம், வேலூர் தங்கக் கோயில் போன்றவற்றை இதற்கு உதரணமாக சொல்லலாம்.

அந்த வகையில் மிகப் பிரமாண்டமான மூன்று கோயில்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில் இந்தக் கோவில்கள் சுற்றுலாவின் மைல் கல்லாக திகழும் என்பது நிச்சயமே!

1. விராட் ராமாயண் மந்திர் – பிஹார் 

கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயம் முதலில் இந்துக் கோவிலாக கட்டப்பட்டது. தற்போது அது புத்தக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் விதமாக 2006-ம் ஆண்டு அதே வடிவமைப்பில் விராட் அங்கோர்வாட் என்ற ஆலயத்தை இந்தியாவில் உருவாகக் நினைத்தனர். இதற்கு கம்போடியா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் இந்த கோயிலின் வடிவமைப்பை சற்று மாற்றினர். புதிதாக வடிவமைப்பை நிர்மாணித்தனர்.

3.bp.blogspot.com - 2026
விராட் ராமாயண் மந்திர் மாதிரி தோற்றம்

அதன்படி அங்கோர்வாட் கோயிலைவிட உயரமாக இது கட்டப்படுகிறது. 161 ஏக்கர் நிலப்பரப்பில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும் 405 அடி உயரமும் கொண்ட இந்த கோயில் கட்டி முடிக்கப் பட்டப்பின் இதுதான் உலகின் மிகப்பெரிய மத வழிப்பாட்டு தலமாக மாறும். இந்தக் கோயில் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து வழிபடலாம்.

இந்தக் கோயில் அங்கோர்வாட், மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் கோயில்களின் பாணியை பின்பற்றி கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2012-ல் தொடங்கியது. பட்ஜெட் ரூ.500 கோடி. எதிர்காலத்தில் இதுதான் உலகின் மிகப் பெரிய கோயிலாக இருக்கும்.

பிஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கேசரியா என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்று இப்போதே உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

2. ஓம் ஆஷ்ரம் – ராஜஸ்தான்

 
2.bp.blogspot.com oGFvlIIsq6s VURlPTiD9uI AAAAAAAAD8Y tiMGZHojSvU s640 om 027 print%2B1 - 2026
ஓம் அஷ்ரமத்தின் முன் பகுதி

‘ஓம்’ என்ற சமஸ்கிருத எழுத்து வடிவில் ஒரு கோயில் உருவாகி வருகிறது. இது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜடன் என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. 250 ஏக்கர் நிலப்பரப்பின் மையத்தில் காட்டப்படும் இந்த கோயில்தான் மனிதன் உருவாக்கிய எழுத்து வடிவிலான கட்டுமானங்களில் மிகப் பெரியது.

 
4.bp.blogspot.com xfLSTyT uHY VURljMPWluI AAAAAAAAD8g AuBwbiH0Qq4 s640 om building bez neba - 2026
சம்ஸ்கிருத ‘ஓம்’ எழுத்து வடிவில் ஆஷ்ரம்

இதில் பெரிய கோபுரம் 108 அடி உயரம் கொண்டது. இந்த கட்டுமானத்தில் 12 கோயில்கள் உள்ளன. அவற்றின் கோபுரங்கள் 90 அடி உயரம் கொண்டது. இதில் 108 குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுகிறது.

1.bp.blogspot.com 2s3OgeB698k VURmkzFdIEI AAAAAAAAD9A b71Hu4A4 S4 s640 OM Ashram%2B temple DSCN4781 1280 960 - 2026
கட்டுமானத்தில் ஓம் ஆஷ்ரம் 

3. விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர் – 
     உத்தர பிரதேசம் 

2.bp.blogspot.com 3td6Xf8IR I VURl1 eDFXI AAAAAAAAD8o 6fBTUd zwAM s640 vrindavan chandrodaya temple 1 - 2026
விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர்

உலகிலேயே மிக உயரமான கோயிலைக் கட்டி வருகிறது இஸ்கான் அமைப்பு. கிருஷ்ணர் பிறந்த மதுரவில்தான் இது நடைபெறுகிறது. 700 அடி உயரம் கொண்ட கோபுரத்தை கட்டி வருகிறது. 62 ஏக்கர் நிலப்பகுதியில் 12 ஏக்கர் அளவுக்கு ஒரு ஹெலிப்பெடும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் இருக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்படுகிறது.  26 ஏக்கர் பரப்பில் 12 வகையான  தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

3.bp.blogspot.com AA0FkVwmejM VURmBVzjNyI AAAAAAAAD8w 5nsma2z5Vzk s640 DE17 PG5 2 COL DE 1792334e - 2026
உலகிலேயே உயரமான 700 அடி கோபுரம்

இதன் மதிப்பு ரூ.300 கோடி. கட்டுமானப் பணிகள் முடிந்து 2019-ல் பக்கதர்கள் இந்த கோயிலை தரிசனம் செய்யலாம்.

1.bp.blogspot.com uw1qwv5ODgU VURmP4cMPpI AAAAAAAAD84 tplEJVFGK6I s640 BN CA742 ivrind G 20140321091128 - 2026
முன் பகுதியில் உருவாகி வரும் பூங்கா 

 

கேமரா கவிதை – சித்திரை திருவிழா

 

தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது. 
 
நண்பர் குணா அமுதனின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் கவிதை. அந்த கவிதையை கொண்டு படங்களுடன் கூடிய சிறிய திருவிழா பதிவு இது. 
 
சித்திரை திருவிழாவின் முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் இங்கே படங்களுடன்.
 

கொடியேற்றம்

திருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக உணர்த்துவதே கொடியேற்றத்தின் நோக்கமாகும். உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் ஆயத்தமாக இருப்பதையும் கொடியேற்றம் அறிவிக்கிறது.
 
3.bp.blogspot.com 4MoTLkHwSGE VUYLNYK7MXI AAAAAAAAD9k uay2LPU7UTw s640 kodi - 2026

முதல் நாள்
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம் 

3.bp.blogspot.com GtVdn9ZBQTo VUZtwg W3jI AAAAAAAAD 8 63ONl7 pyhQ s640 first%2Bday.3 - 2026

சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம்

1.bp.blogspot.com GRdh9IqYoCo VUYLniAC 5I AAAAAAAAD9s A0cQd33tacA s640 first - 2026

சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு…

2.bp.blogspot.com OwMkdNsBBqg VUYL - 2026

யானை முகன் முன்னே போக…

1.bp.blogspot.com Rch sWd9BWw VUYMPN775TI AAAAAAAAD98 qbD8QPk ALA s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.9 - 2026

காமதேனு பின் தொடர்கிறாள்!

2.bp.blogspot.com cPKce3oMwCQ VUYMZztc8QI AAAAAAAAD E V6gFwvj25U s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.6 - 2026

சிறுமிகளின் கோலாட்டம்..

4.bp.blogspot.com An5GitmZSg0 VUYMnct0S4I AAAAAAAAD M MAh92V7RGz4 s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.7 - 2026

இசைப் பாடலுடன் இளம் பெண்கள்…

3.bp.blogspot.com 1I3lRDD1LnE VUYM4RpR8bI AAAAAAAAD U TsOErn8TKwI s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.5 - 2026

இது பெண்களின் தாண்டியா…

2.bp.blogspot.com M0dEKQH709A VUYNLCNaDBI AAAAAAAAD c vstUMac q3Q s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.4 - 2026

கள்ளர் வேடமிட்ட பக்தர்கள்

1.bp.blogspot.com McJwvOmrDq8 VUYNYi0EkfI AAAAAAAAD k a22NS4iIX1A s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.3 - 2026

 சிம்ம வாகனத்தில் மீனாட்சி

1.bp.blogspot.com 5vJbUwUvYo VUYNn6ov9VI AAAAAAAAD s uLD9IihgBvE s640 first%2Bday%2Bmasi%2Bveethi%2Bvalam.2 - 2026

கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை

1.bp.blogspot.com 8zM4ITEf72g VUZt2k9DFlI AAAAAAAAD E 6WYd8VZqjJ4 s640 first%2Bday.1 - 2026

நோக்கம்
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.

இரண்டாம் நாள்
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்

4.bp.blogspot.com FGci1E7rYlM VUZvsfo v I AAAAAAAAD w tTYEEaSHX0g s640 second%2Bday.4 - 2026

மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா

 
3.bp.blogspot.com Th4CDDjC97w VUZvoURvdpI AAAAAAAAD o yW96zru15Vs s640 second%2Bday.3 - 2026

கரகாட்டம்..

1.bp.blogspot.com - 2026

கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண்

4.bp.blogspot.com cIqrsfOJlpw VUZv7k2li I AAAAAAAAEAQ gI2m4zPainQ s640 second%2Bday.5 - 2026

அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா..

3.bp.blogspot.com 8W MVhGJkI VUZvlOvbXJI AAAAAAAAD g GnEu6umQ5f0 s640 second%2Bday.2 - 2026
2.bp.blogspot.com BS Fe3kPPfA VUZve1aVYKI AAAAAAAAD Y VyuHzmvaRyc s640 second%2Bday.1 - 2026

சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம்

2.bp.blogspot.com - 2026

 

 தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர்

 

2.bp.blogspot.com tZJ2TTsvAOk VUZv2gZfuLI AAAAAAAAEAA mEDJSh72Zyk s640 second%2Bday.7 - 2026
 

சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது

3.bp.blogspot.com RaZmTyLmy8Q VUZvyKujySI AAAAAAAAD 4 yQIpR05MRoU s640 second%2Bday - 2026

நோக்கம்
ஐந்து பூதங்களையும் மனிதன் அடக்கி வாழ்வில் முத்தி பெற வேண்டும் என்பதற்காக அய்யன் பூத வாகனத்திலும், நீரும் பாலும் கலந்திருந்தாலும் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல் நல்லதும் கேட்டதும் கலந்திருக்கும் இந்த உலகில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வருவதாக ஐதீகம். 
 

மூன்றாம் நாள் 
ராவண கைலாச பர்வதம் – கேட்டதை தரும் காமதேனு

2.bp.blogspot.com oSorD4m6IY0 VUc9eqzA83I AAAAAAAAEAo UazRHckoS1k s640 3rd%2Bday.4 - 2026

சப்பர உலா!

3.bp.blogspot.com - 2026

புறப்பாடு

4.bp.blogspot.com JZRyojG5vYU VUc9lVy1tPI AAAAAAAAEA4 na3UB9PbPJo s640 3rd%2Bday.2 - 2026

ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்..

4.bp.blogspot.com Vth 0kyyucU VUc9nZPG3FI AAAAAAAAEBA Vz XGsNuTrE s640 3rd%2Bday.1 - 2026

காமதேனு வாகனத்தில் மீனாட்சி

4.bp.blogspot.com M wp3 F sYY VUc9p4KD7RI AAAAAAAAEBI PBbACpEDpic s640 3rd%2Bday.5 - 2026
1.bp.blogspot.com - 2026

இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா…

நான்காம் நாள்
தங்கப் பல்லக்கில் பவனி 

1.bp.blogspot.com zOXgP4fxTXI VUdA8pQgDMI AAAAAAAAEBc TyYP ywE3DU s640 4th%2Bday.2 - 2026

நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்..

3.bp.blogspot.com - 2026

3.bp.blogspot.com 3yfF2fnN7 Y VUdBabU1B5I AAAAAAAAEBs fsRv043n4LQ s640 4th%2Bday.1 - 2026

வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சி

3.bp.blogspot.com t6BPr7m 1kU VUdELkZXunI AAAAAAAAEB4 dQ4eIdlWAco s640 4th%2Bday - 2026

4.bp.blogspot.com UpQoY spc5I VUdEgp8BktI AAAAAAAAECA FutwT EhXR0 s640 4th%2Bday.5 - 2026

3.bp.blogspot.com - 2026
 
 
 
2.bp.blogspot.com vkCWHsY3zM4 VUdb1HUhRjI AAAAAAAAECY cONGO4B8oIc s640 4th%2Bday.7 - 2026

தங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ….

4.bp.blogspot.com wGz K1cPehI VUdeaI2 - 2026

2.bp.blogspot.com HNnww2 - 2026

1.bp.blogspot.com itDkwLtsfEM VUde 67twTI AAAAAAAAEC0 gsGRgTgrRn0 s640 4th%2Bday.6 - 2026
 
தங்கப்பல்லக்கு உலா… மக்கள் வெள்ளத்தில் !
 
4.bp.blogspot.com bFDqLPo9oDA VUdfNfiF4lI AAAAAAAAEC8 7cW DsqWme4 s640 4th%2Bday.10 - 2026

உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை.

நோக்கம்

இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..

 
ஐந்தாம் நாள்
குதிரை வாகனம் 

சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாக கொண்ட வேடர் பரிலீலை நடைபெறுகிறது. 
 
1.bp.blogspot.com AAodJp CrDk VUkAgNbyO2I AAAAAAAAEDQ 63YUKo 2 4k s640 5th%2Bday.1 - 2026

மீனாட்சியும், சொக்கரும் குதிரை வாகனத்தில் வீதி உலா..

3.bp.blogspot.com vUZvd4Vq7zs VUkAtaDZfII AAAAAAAAEDw XR Ho4v1 io s640 5th%2Bday - 2026

கம்பீரமான தங்க குதிரை

1.bp.blogspot.com I5W0KJirOSI VUkApqoqwhI AAAAAAAAEDo 831Dsc96Tzs s640 5th%2Bday.4 - 2026

மதுரையின் அரசி.

1.bp.blogspot.com OdypRN9FJQE VUkAmAr5uHI AAAAAAAAEDg C8MlSWqQK8M s640 5th%2Bday.3 - 2026

தாயை கண்ட மகிழ்ச்சி மழலையிடம்…

 

4.bp.blogspot.com - 2026

மக்கள் வெள்ளத்தை கடக்கும் மகேசன்..

நோக்கம்
அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதுதான் இதன் தத்துவம்.

ஆறாம் நாள்
ரிஷப வாகனம்

4.bp.blogspot.com mjV lYaSWjs VUkENjkcfkI AAAAAAAAEEE L 473sZlMXQ s640 6th.2 - 2026

ஆறாம் நாள் வீதி உலா கோலாட்டத்துடன் ஆரம்பம்..

2.bp.blogspot.com a6aON6ldUi4 VUkEg7e37mI AAAAAAAAEEw s1AmfaocoaM s640 6th.7 - 2026

ஆன்மிகத்தை வளர்த்தவர்கள்

2.bp.blogspot.com Rde6O48BVGc VUkEYqwQvvI AAAAAAAAEEc eGuKzadn8eI s640 6th.5 - 2026
1.bp.blogspot.com MmlsrulJh9o VUkEkaJp8YI AAAAAAAAEE0 6EY1864KIF8 s640 6th.8 - 2026
2.bp.blogspot.com udDLFr2NLIY VUkEq25Q9EI AAAAAAAAEFE n94JoSWSyhc s640 6th - 2026
3.bp.blogspot.com kIkQb5QEAuE VUkEKpuhCOI AAAAAAAAED8 jBtkGC4rJLM s640 6th.1 - 2026

தர்மம் என்ற அறத்தினை நான்கு கால்களாகக் கொண்டு, எவ்வித மாசுமற்ற வெள்ளை நிறமுடைய ரிஷப வாகனத்தில் சொக்கர் – மீனாட்சி மாசி வீதி உலா…

1.bp.blogspot.com - 2026

சிவனாக சிறுவன்

4.bp.blogspot.com N8iBZWfRN8 VUkEb0eSY5I AAAAAAAAEEk z HUX8dFLDw s640 6th.6 - 2026

வாள் பிடித்த சிறுவன்

1.bp.blogspot.com WUwzmVz0J5Y VUkEU3JfIvI AAAAAAAAEEU lQERpoT75U0 s640 6th.4 - 2026

கடவுளர்கள் வேடத்தில் சிறுமிகள்

நோக்கம்

ரிஷபம் என்பது காளையை குறிக்கும். அது தர்மத்தின் வாகனம் என்பது நம்பிக்கை. காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமை தாங்கும் காளை போல தன்னம்பிக்கை, மனிதர்களுக்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறைவனின் நாமத்தையும், கண்கள் நல்ல காட்சியையும் கண்டு உணர்தலே இந்த வாகன உலாவின் பொருள். 

 
ஏழாம் நாள் 
யாழி, நந்தி வாகனம்
 
4.bp.blogspot.com QKcmN8 oLL4 VUpN Pcz2AI AAAAAAAAEFY WQBf0AcJ4K0 s640 7th - 2026

 

அம்மனை தரிசிக்க அம்மன் வேடத்தில் ஒரு சிறுமி

2.bp.blogspot.com zPX5YJo2Ejg VUpORKDubgI AAAAAAAAEGY WW2Ij3YkL5A s640 7th.8 - 2026

உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடும் சிறுமியர்

4.bp.blogspot.com dtZvSEXECS8 VUpOTe0MsgI AAAAAAAAEGg P y4 FSSS5M s640 7th.9 - 2026

பக்த்தர்களின் நேர்த்திக்கடன்

3.bp.blogspot.com MtHewQ6Dbmw VUpOM7 6GqI AAAAAAAAEGM 2v0kpCNFFaY s640 7th.6 - 2026

முன்னே செல்லும் யானை

1.bp.blogspot.com - 2026

யாழி மற்றும் நந்தி வாகனத்தில் பவனி

1.bp.blogspot.com Tsl1GIVQ7 0 VUpOOrHk3tI AAAAAAAAEGU FdQK9OYN8pk s640 7th.7 - 2026

காவடி சுழற்றும் பக்த்தர்

1.bp.blogspot.com roG0bXbU6Rg VUpOBA4 2YI AAAAAAAAEFk bL zTfWqnfE s640 7th.1 - 2026

நந்தி வாகனம்

1.bp.blogspot.com - 2026

யாழி வாகனம்

1.bp.blogspot.com npJpTgqij 4 VUpOHSP9iJI AAAAAAAAEF4 BlH0oEZAcaQ s640 7th.4 - 2026

யாழிமீது அன்னை மீனாட்சி  

1.bp.blogspot.com mjIW kZrRw8 VUpOXL - 2026
சொக்கரும் மீனாட்சியும்

நோக்கம் 
அன்னை மீனாட்சி பவனி வரும் யாழி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம். ஆணவம் கொண்ட மனிதன் அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே நோக்கம்.

 
எட்டாம் நாள்
ஊடல் உற்சவம் – மீனாட்சி பட்டாபிஷேகம்

4.bp.blogspot.com - 2026

ஊடல் உற்சவம்

 

1.bp.blogspot.com - 2026

மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும். அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும். மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கீரிடத்திற்கும் அபிஷேகம் நடைபெறும். கழுத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்களின் மலரான வேப்பம்பூவை சிறப்பிக்கும் வகையில் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்படும். இன்றிலிருந்து சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். மதுரையின் அரசி.

1.bp.blogspot.com nppmRVar18k VUrJ03IK2jI AAAAAAAAEHA yWd44 NMQIk s640 8.2 - 2026

பட்டாபிஷேகம் முடிந்ததும் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் மதுரைக்கரசி.

 

 ஒன்பதாம் நாள் – மீனாட்சி திருக்கல்யாணம்

திக் விஜயம் – இந்திர வாகன விமானம்

 

 மீனாட்சியம்மன் இந்திர விமானத்தில் திக் விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த நாலாபுறம் படையெடுத்துச் செல்வது போல், பட்டாபிஷேகம் நடந்த மறுநாள் மீனாட்சி அம்மன் இனி இங்கு தன்னுடைய ஆட்சி என்பதை பக்தர்களுக்கு அறிவிக்கவே இந்த பவனி.

 

2.bp.blogspot.com - 2026

திக்விஜயம் தொடக்கம்

2.bp.blogspot.com IqjXnOsseqQ VU5HB tMl I AAAAAAAAEHs OMrV0tLtU4A s640 9 - 2026

பாலகர்களின் போர்

2.bp.blogspot.com HrH3u6aIaws VU5J8XirEQI AAAAAAAAEI4 YuHHOKReFBA s640 9.9 - 2026

அம்பு எய்த படுகிறது

4.bp.blogspot.com N7nb4tNa7ko VU5J X2GlyI AAAAAAAAEJA atX9XXX38k8 s640 9.10 - 2026

வில் விடுபடுகிறது

மீனாட்சி திக்விஜயம் என்பது எட்டு திக்கும் உள்ள பாலகர்கள் எட்டு பேரையும் வெற்றி கொள்ளும் நிகழ்ச்சி. அதன்படி கீழமாசி வீதியில் இந்திரனையும், விளக்குத்தூண் அருகில் அக்னியையும், தெற்குமாசி வீதியில் எமனையும், தெற்குமாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியும், மேலமாசி வீதியில் வருணனையும், மேலமாசி வீதி – வடக்கு மாசி வீதி சந்திப்பில் வாயுவையும், வடக்குமாசி வீதியில் குபேரனையும், வடக்குமாசி வீதி – கிழக்குமாசி சந்திப்பில் ஈசானையும் வெற்றி கொண்டப் பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.

இறுதியாக சொக்கநாதர் போருக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனாட்சி நாணம் கொள்கிறாள். உடனே அவரின் மூன்றாவது மார்பகம் மறைந்து போக ஸ்ரீ ரெங்கச்சந்திரத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2.bp.blogspot.com A6NQpbZ2jf4 VU5J5P QyRI AAAAAAAAEI0 tzrajlgW3pY s640 9.8 - 2026

திருக்கல்யாண விருந்து ஏற்பாடு

 

3.bp.blogspot.com - 2026

சமையலில் உதவும் பக்த்தர்கள்

1.bp.blogspot.com vgh6ARjr5bs VU5HHlTTEuI AAAAAAAAEIA GdDHab49IJM s640 9.2 - 2026

விடிய விடிய விருந்து தயாராகிறது

பத்தாம் நாள்
திருக்கல்யாணம் – பூப்பல்லக்கு உலா

உலகை வென்ற மீனாட்சி அம்மன் இறுதியாய் இறைவனையும் வென்றாள்.அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குலசேகரப் பட்டர் வழிவந்த சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரரகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு மாலை மாற்றி கொண்டபின் மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் ப்ரியா விடை அம்மனுக்கு பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறுகிறது.

3.bp.blogspot.com DPkSmchDE9A VU5SE5TieSI AAAAAAAAEJ8 k6V G22CkR8 s640 10.5 - 2026
படம்: பரத் கார்லோஸ்
4.bp.blogspot.com - 2026
படம்: காளிமுத்து 
4.bp.blogspot.com 3CJ FaEmvY4 VU5HPBMO rI AAAAAAAAEIM - 2026
படம்: காளிமுத்து 
2.bp.blogspot.com 4LH3Yy2Upjs VU5HSXzho5I AAAAAAAAEIU v2Zq707UUQM s640 9.5 - 2026
படம்: பரத் கார்லோஸ்
1.bp.blogspot.com guFMn4mR7 w VU5HVALs21I AAAAAAAAEIc bXjk rtUiu4 s640 9.6 - 2026
படம்: பரத் கார்லோஸ்
4.bp.blogspot.com q56NanLPTcA VU5HZcblOuI AAAAAAAAEIk jc9aabYKaEo s640 9.7 - 2026
படம்: பரத் கார்லோஸ்
1.bp.blogspot.com SEVXBrZ3F1k VU5PLgDU4uI AAAAAAAAEJQ kQj1mw5p27s s640 10 - 2026

பூப்பல்லக்கில் அன்னை மீனாட்சி

3.bp.blogspot.com tZ3X20 cGsY VU5PVVDjaNI AAAAAAAAEJY Pg9sNqYsGDA s640 10.1 - 2026

3.bp.blogspot.com - 2026
2.bp.blogspot.com KkmFi2KQLkw VU5PbgtyOvI AAAAAAAAEJo vGceCFQ6elk s320 10.3 - 2026

 

கடந்த வருட பூப்பல்லக்கில் நான் எடுத்த படங்கள். கடைசி மூன்று படங்களில் பூப்பல்லக்கை காணலாம்.

2.bp.blogspot.com H2bzh 7UAV4 VU5T4Hbi8gI AAAAAAAAEKE CauWQ pEkXs s640 IMG 2396 - 2026
3.bp.blogspot.com FQ9VjAAMwlI VU5T6UcJmFI AAAAAAAAEKM qayb3pPLoFE s640 IMG 2398 - 2026
1.bp.blogspot.com EK N5cFasgU VU5T9HtmNbI AAAAAAAAEKU 439989H9PZ0 s640 IMG 2402 - 2026
4.bp.blogspot.com 6mlg u HP s VU5T 8yYLSI AAAAAAAAEKc pt66ZfGHtB0 s640 IMG 2401 - 2026
1.bp.blogspot.com - 2026
2.bp.blogspot.com IXVPW9QgHOA VU5UF6PWLjI AAAAAAAAEKs hM2mXH rA8s s640 IMG 2409 - 2026
4.bp.blogspot.com hJ9OYzsbENw VU5UIIe1DAI AAAAAAAAEK0 GOmMMjFr5M0 s640 IMG 2410 - 2026

படங்கள்: குணா அமுதன், காளிமுத்து, பரத் கார்லோஸ், எஸ்.பி.செந்தில்குமார்.