Home Blog Page 5946

சினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலி  

 

பிரான்ஸ் நாட்டில் 1861-ல் பிறந்தவர் ஜார்ஜ் மிலி. அடிப்படையில் மேஜிக்
நிபுணர். மேஜிக் மட்டுமல்லாமல் கதை, கவிதை, பாடல், இசை, நடனம் என அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்றவர். தனது மேஜிக் நிகழ்ச்சி மக்களை சலிப்படைய வைத்தால் அவர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தவர். அதனால் இவரது மேஜிக் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நாட்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்தது. மக்கள் மனதில் ஏற்பட்ட இந்த மனநிலைக்கு காரணம் லூமியர்களின் கண்டுபிடிப்பான சினிமா. ஜார்ஜ் மிலியும் தனது தொழிலை கெடுக்க வந்த சினிமா என்ற கடுங்கோபத்தில் தான் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தார்.
 
1.bp.blogspot.com 4IMHpfCVvYU VVKtfnkNM I AAAAAAAAELQ iaMIXsSLtSw s400 Georges%2BMilies - 2026
ஜார்ஜ் மிலி
படம் முடிந்து வெளியே வந்த போது அவர் முற்றிலும் வேறு மனிதராக மாறி இருந்தார். மூளைக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் தவித்தார். சினிமா அவரது உறக்கத்தை கலைத்துப் போட்டிருந்தது. லூமியர்கள் போல் தானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று 10 ஆயிரம் பிராங் பணத்தை எடுத்துக் கொண்டு லூமியரை சந்திக்கச் சென்றார்.
 
லூமியர் சகோதரர்கள் திமிர்த்தனத்துடன் அலட்சியமாக சிரித்து, மிலியை
அவமானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தார்கள். மிலியால் அந்த வலியை தாங்க முடியவில்லை. சினிமாவில் வெற்றி பெற்று லூமியர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று அப்போதே சபதம் எடுத்துக் கொண்டார். சினிமாட்டோகிராப் என்ற புரொஜக்டர் ஒன்றை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். சொந்தமாக தாமாகவே ஒரு அரைகுறை கேமராவையும் வடிவமைத்தார். அந்த கேமரா தானாக நின்று விடும்.தலையில் தட்டினால் மீண்டும் ஓடும்.
 
ஒருநாள் சுரங்கப்பாதையில் இருந்து வெளிவரும் பஸ் ஒன்றை படம் பிடித்தார். வழக்கம் போல் கேமரா பாதியில் நின்று விட்டது. மிலி அதன் தலையில் இரண்டு முறை தட்ட கேமரா மீண்டும் ஓடியது. இப்போது சுரங்கப்பாதை முன்பு ஒரு சவஊர்வலம் சென்றதை படம் பிடித்தது. லேப்பில் டெவலப் செய்து பார்த்த மிலிக்கு பெரிய ஆச்சரியம். சுரங்கப்பாதையில் இருந்து பஸ் வந்தவுடன் அந்த இடத்தில் சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. இந்த காட்சி மாற்றத்தின் இடையே ஒரு கதை ஒளிந்திருப்பதை கண்டுப்பிடித்தார். பஸ்ஸில் பயணம் செய்யும் ஒருவன் பின் அவனே சவ ஊர்வலமாக வருவதாக பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளும்
சாத்தியம் உண்டு என்ற முடிவுக்கு வந்தார்.
 
அதுவரை ஒரு நிகழ்வை மட்டும் டாக்குமென்ட்ரியாக சொல்லும் விதமாகத்தான் சினிமாப் படங்கள் இருந்தன. கதை சொல்லும் உத்வேகம் மிகுந்த மிலி, துண்டு துண்டு காட்சிகளை ஓட வைத்து அதற்கு குரல் வழியாக பின்னணியில் கதை சொல்லத் தொடங்கினார். இது பார்வையாளர்களை கவர்ந்தது.
 
4.bp.blogspot.com TOLpEC9ykfk VVKtmDTBPhI AAAAAAAAELg jMElX1ltBUE s400 cinderla - 2026
சின்ட்ரல்லா’ (1899)
மிலி தனது வீட்டை இடித்து சிறிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கினார். துண்டு துண்டு காட்சிகளாக கேமராவை ஒரே இடத்தில் அசையாமல் நிறுத்தி நாடகத்தை போல கதைகளை படமாக்கினார். கதை ஓரிடத்தில் முடிந்து வேறிடத்தில் தொடர்வதை ‘ஃபேட் இன்’, ‘ஃபேட் அவுட்’ தொழில்நுட்பம் மூலம் இணைத்தார். ‘கட்-டூ-கட்’, ‘சூப்பர் இம்போஸ்’, ‘ஸ்டாப் மோஷன்’, ‘ஓவர்லேப்’, ‘டிஸ்ஸால்வ்’ போன்ற இன்றைய டெக்னிக்குகள் அனைத்தையும் உருவாக்கியவர் ஜார்ஜ்மிலி தான்.
 
2.bp.blogspot.com CN3LUrkgm8w VVKti0N1EMI AAAAAAAAELY 5A1ciBFYHK0 s400 moon - 2026
‘தி ட்ரிப் டூ மூன்’ (1902)
‘சின்ட்ரல்லா’ (1899), ‘தி ட்ரிப் டூ மூன்’ (1902), ‘தி பேலஸ் ஆப் அரேபியன்
நைட்ஸ்’ (1905) ஆகிய படங்கள் மிலியின் மைல் கல். மிலியின் புதிய
வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் பழைய முறையிலேயே வழக்கம் போல் வெறும் நிகழ்ச்சி பதிவுகளை எடுத்து வந்த லூமியர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் சினிமாவை விட்டே விலகினார்.
 

‘சபதத்தை சாதித்து காட்டினார், ஜார்ஜ்மிலி’!

உதய்பூர் – பிசோலா ஏரி அரண்மனை

 

1.bp.blogspot.com h4L8w6qlfyU VVqd7RfrPrI AAAAAAAAEMg jpNgqwasL I s640 Udaipur lake palace - 2026
மாலை நேரத்தில் ஏரி அரண்மனை 

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக நீரில் வலம் வர உன்னதமான இடம் பிசோலா ஏரி. ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட அழகிய ஏரி இது. இந்த ஏரி சிறிய கால்வாய் மூலம் ஃபதே சாஹர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏரிகளுமே கோடை சுற்றுலாவின் சொர்க்கம்.

ஏரியின் மையத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு அரண்மனை அமைந்திருக்கிறது. இதை ஏரி அரண்மனை என்கிறார்கள். முன்பு ‘ஜஹ் நிவாஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த  அழகு அரண்மனை பொக்கிஷம், தற்போது 83 அறைகளை கொண்ட ஆடம்பர ஹோட்டலாக மாறியுள்ளது. ‘தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ்’ என்ற நிறுவனம் 1971-ல் இருந்து இதனை ஆடம்பர ஹோட்டலாக நடத்தி வருகிறது.

2.bp.blogspot.com jtvpX6WoWxc VVqeSoPbrlI AAAAAAAAENY GKya5C930x4 s640 27642314 L1 SEN 0252 w - 2026
படகில் பயணம்
2.bp.blogspot.com CdV6z6RE594 VVqeOA Y4lI AAAAAAAAENQ 0yiSGlDa00A s640 dd590532cd3c4201c3c3abd96d4336b3b9bdb468 m - 2026
அரண்மனை நுழைவாயில்

சிட்டி அரண்மனையில் உள்ள தோட்டத்தில் இருந்து படகுப் பயணத்தை தொடங்கலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.25. அதன்பின் படகில் ஒரு மணி நேரம் சுற்றி வர ரூ.300 கட்டணம். அதுவே சூரியன் அஸ்தமிக்கும் அந்தி நேரம் என்றால் ரூ.500. இதுபோக மோட்டார் போட், பெடல் போட், துடுப்பு போட் போன்றவையும் நமது விருப்பத்திற்கு வாடகைக்கு கிடைக்கிறது. சிட்டி அரண்மனையை ஏரிக்குள் இருந்து பார்க்கும்போது அது நீரில் மிதப்பது போலவே தோன்றும். பிசோலா ஏரியில் படகில் பயணம் செய்வது ஓர் அருமையான அனுபவமாக இருக்கும்.

1.bp.blogspot.com KLBk85mT6A0 VVqd q1jJcI AAAAAAAAEMo YNCn7HI0sig s640 Taj Lake Palace Udaipur - 2026
நீச்சல் குளம்
3.bp.blogspot.com eq1iIcRYQvw VVqeCXoCzFI AAAAAAAAEMw pXCQTWSWaR4 s640 taj lake place 02 - 2026
அரண்மனை முற்றம்
4.bp.blogspot.com GH 2CVHBkOA VVqeIjeGUsI AAAAAAAAENA axUnttOtLC0 s640 lake palace post - 2026
சூரியக் குளியல்

சென்னையிலிருந்து உதய்பூருக்கு விமான சேவை உண்டு. ஜெட் ஏர்வேஸில் ரூ.17,666 கட்டணம். 5 மணி நேர பயணம். சென்னை சென்ட்ரலில் இருந்து உதய்பூருக்கு நேரடி ரயில் சேவை இல்லை. மும்பை சென்று மாறிப் போகலாம். 2662 கி.மீ. தொலைவை 47 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது.

4.bp.blogspot.com 6cONGoO1m80 VVqeFrcvC2I AAAAAAAAEM4 qmfyDUMCUnA s640 M Id 434895 Taj Lake Palace Udaipur - 2026

ஏரி அரண்மனையில் உள்ள தாஜ் ஹோட்டலே தாங்கும் இடம்தான். குறைந்தபட்சம் இரண்டு நாட்டகள் தங்க வேண்டும். இருவர் ஓர் இரவு  தங்குவதற்கு ரூ.67,000 கட்டணமாக பெறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ரூ.1,35,000 ஆகும்.

இந்த கோடையை குளுகுளுவென்று கழிப்பதற்கு ஏற்ற இடம்.

2.bp.blogspot.com 8ktsgZNLtUw VVqeWLCgPdI AAAAAAAAENg bdClcoVU6Fg s640 121324 - 2026
அறையின் உட்தோற்றம்
4.bp.blogspot.com lCdjr6nXlKw VVqg4FXyh5I AAAAAAAAEN8 5ARM4k7Wfzo s640 3 - 2026
உணவகம்

அருணா ஷான்பாக் – கருணையைக் கொல்ல முடியுமா..?

 

 
 
 
3.bp.blogspot.com DbTmhM5IXvk VVuiAc5Z3dI AAAAAAAAEPM opLg6vfoNfc s400 Thumbnails - 2026
அருணா ஷான்பாக்

‘கருணை..!’

அப்படிதான் அருணா ஷான்பாக்கை அந்த மருத்துவமனையில் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு கருணையாலும் பாசத்தாலும் கட்டிப்போட்டவர் அருணா.

38 வருடங்களாக ‘கோமா’வில் வீழ்ந்துகிடக்கும் ஒருவரை, எந்தவொரு முகச்சுளிப்பும் இல்லாமல் கவனித்துக் கொள்ள பெரிய மனது வேண்டும். அது அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இருக்கிறது.

அருணா – கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தில் இருக்கும் ஹல்டிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். வறுமை வாட்டி எடுக்கும் குடும்பம் அவருடையது. அந்த வறுமையிலும் நர்சிங் வரை மகளை படிக்க வைத்து விட்டார் அவரது தந்தை. படிப்பு முடிந்த இரண்டாவது வருடத்திலேயே தந்தை இறந்துவிட்டார்.

குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமும் நின்று போனது. ஒருவேளை சாப்பாட்டுக்கு நாதியற்று திண்டாடியது. அப்போதுதான் அருணா, “நான் மும்பையில் நர்ஸ் வேலைப் பார்த்து உங்கள் அனைவரையும் காப்பாற்றுகிறேன்.” என்று கூறி ரயிலேறினார்.

மும்பையில் புகழ் பெற்று விளங்கிய ‘கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை’யில் வேலை கிடைத்தது. ‘அப்பாடா..! வீட்டின் வறுமையை போக்க வழி கிடைத்துவிட்டது’ என்று நிம்மதியாக உட்காருவதற்குள்.. குடும்பத்தை காப்பாற்ற மும்பை வந்த அருணாவால்  தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனது.

4.bp.blogspot.com 1DuL05S2WIc VVuh4lYoHHI AAAAAAAAEPE nO U5wCLESw s640 Aruna Shanbaug - 2026
கோமாவில் அருணா

1973, நவம்பர் 27.

அருணா வாழ்வை தடம் தெரியாமல் உருக்குலைத்த கருப்பு நாள்.

அப்போது அருணாவுக்கு 23 வயது. அழகும் இளமையும் போட்டிப் போட்டு வார்த்தெடுத்த தங்கச்சிலையாக புன்னகையோடு வேலை செய்துவந்தார்.

அழகு எப்போதும் ஆபத்தானது தானே! அந்த ஆபத்துதான் அருணாவின் வாழ்விலும் வந்து சேர்ந்தது. அருணாவின் வசீகர அழகு அங்கு வேலைப் பார்க்கும் மோகன்லால் வால்மியின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது.

அவனின் துப்புரவு தொழிலைக்கூட மறந்தான்.  அருணாவை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் அடங்காத வெறியாக எரிந்து கொண்டே இருந்தது.

அன்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. இரவு நேர பணியில் அருணா ஈடுப்பட்டிருந்தார். காமபித்தத்துடன் வால்மியும் அங்கிருந்தான். வழக்கத்தைவிட கவர்ச்சியாக அவன் கண்களுக்கு அருணா தெரிந்தார்.

மோகம் தலைக்கேறிய அவன் நேராக அருணாவிடம் சென்று தனது ஆசையை கூறினான். எந்த பெண்தான் இதற்கு சம்மதிப்பார். அருணாவும் வசைமொழிகளால் அவனை விரட்டியடித்தார். ஆனாலும் அவன் விடுவதாக இல்லை.

தனது கையில் தயாராக வைத்திருந்த நாய்களைக் கட்டும் சங்கிலி கொண்டு அருணாவை தாக்கினான். தாக்குதலை தாங்கமுடியாத அருணா மயங்கி விழுந்தார். கற்பழிக்க முயற்சிக்கும் போதுதான் அருணா மாதவிலக்கு அடைந்திருப்பதை கண்டான். ஆனாலும் அந்த மிருகத்திற்கு விட மனமில்லை.

மயக்கம் தெளிந்துவிட்டால், எங்கே தப்பித்து விடுவாளோ..! என்ற பயத்தில் கோபமும், காமமும் தலைக்கேற நாய்ச்சங்கிலியால் கழுத்தை சுற்றி கட்டிலோடு கட்டிவிட்டான்.

தனது வெறியை முழுமையாக தீர்த்துக்கொண்ட பின்னும் அந்தச் சங்கிலியை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டான். கட்டிலோடு கழுத்து இறுக்கமாக கட்டப்பட்ட நிலையிலேயே இரவு முழுவதும் அருணா இருந்திருக்கிறார்.

மறுநாள், காலையில் தான் பணியாளர்கள் அருணாவை பார்த்தார்கள். மணிக்கணக்கில் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டது. அதனால், மூளையின் மேல்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஏற்பட்ட மயக்கம் இன்னமும் தெளியவில்லை.

3.bp.blogspot.com w 18KSATI64 VVuhqZlEKII AAAAAAAAEOk u9TLi1wbl7w s400 1431763689Aruna Shanbaug - 2026

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு வந்த அருணாவை பார்க்க அவரின் குடும்பத்தினர் ஒருவரும் வரவில்லை. குடும்பம் கைவிட்ட நிலையில், அவரை கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் அந்த மருத்துவமனை ஊழியர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

அருணாவை இந்த கதிக்கு ஆளாக்கிய காமுகனுக்கு மிகக் குறைந்த தண்டனையே கிடைத்தது. இந்த நிலையில் தான் எழுத்தாளரும் சமூகப் போராளியுமான பிங்கி விராணி என்பவர் அருணாவைப் பார்த்தார். அவரின் பரிதாபகரமான நிலையைப் பார்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

2.bp.blogspot.com MpdT7jsgTx4 VVuhjV XBuI AAAAAAAAEOU qJAF19zEw8k s400 46937989 pinkii226 - 2026
பிங்கி விராணி

அந்த மனுவில், “அருணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் கூறியப்பின், அருணாவுக்கு மூளை, தண்டுவடப் பாதிப்பு மற்றும் பிடரி எலும்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து அவரை செயலிழக்கச் செய்து கோமாவில் தள்ளி விட்டது. அவர் 37 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் கோமாவில் இருப்பதால் அருணாவின் உடல் இளைத்து துரும்பாகிவிட்டது. எலும்புகள் விரைவில் உடைந்து போகக்கூடிய தன்மையை அடைந்து விட்டது. படுக்கையிலே தொடர்ந்து இருப்பதால் உடலெல்லாம் புண் வந்து விட்டது.

எனவே, குணப்படுத்த முடியாத வகையில் நோய்வாய்ப் பட்டிருக்கும் அருணாவை ‘கருணைக் கொலை’  செய்ய அனுமதியளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

‘கருணைக் கொலை’

மகாத்மா காந்திக் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நோயால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு கன்றுக் குட்டியை காண சகிக்காது அதனை கொன்று விடும்படி சொல்லியிருக்கிறார்.

4.bp.blogspot.com 54cQby0XP9k VVuhtis1VWI AAAAAAAAEOs ULdC cVvlHw s400 aruna%2Bshanbaug 030711084414 - 2026

கருணைக் கொலை சில வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் இதற்கான சட்டம் இல்லை.இருந்தாலும் அருணாவை கொலைசெய்ய அனுமதிக்க முடியாது. அவர் வாழ வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவமனை ஊழியர்களை பாராட்டவும் தவறவில்லை.

“குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் 37 ஆண்டுகளாக தொடர்ந்து மிகுந்த அன்போடு அருணாவை பராமரித்துவரும் கே.இ.எம். மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், இப்போது உள்ள ஊழியர்களுக்கும் சரி, அருணாவுக்கு பணிவிடை செய்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் சரி, இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது.” என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பு வந்ததும் கே.இ.எம். மருத்துவமனையே கொண்டாட்டத்தில் மூழ்கியது.

“அருணா அக்கா, ரொம்ப அழகான, சுறுசுறுப்பான, கனிவான, கருணை நிரஞ்சவங்க. அவங்களை நெனைச்சா இன்னும் என் நெஞ்சடைக்குது. கண்ணீர் நிக்கல. நோயாளிகளோட நெருங்கிய உறவினர் போல பாசமா இருப்பாங்க. அவங்களோட கருணைக்கு இணைய எதையும் சொல்ல முடியாது. எத்தனையோ பேரை கருணையோடு கவனிச்சிருக்காங்க. அவங்களை கொலை செஞ்சா கருணையையே கொன்ன மாதிரிதான்.

அது எப்படி முடியும்? இப்ப மட்டுமில்ல இனி எப்பவுமே அவங்களை அக்கறையா பாதுகாக்கறது எங்களோட கடமை..!” என்று நேக்குருகிப்போகிறார், அருணாவுக்கு கீழ் வேலை பார்த்த ஜூனியர் அர்ச்சனா பூஷன்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பரபரப்பான தீர்ப்பு பற்றி எதுவும் தெரியாமல் அந்த மருத்துவமனையின் 4-வது வார்டின் ஒரு ஓரத்தில் உள்ள அறைக்குள் 37 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறார் அருணா.

அவருக்கு மிகவும் பிடித்த சிக்கன் சூப்பை அருகே கொண்டு சென்றால் கண்கள் சட்டென்று பிரகாசமடைகின்றன. அந்த சின்ன பிரகாசம்தான் எந்த நொடியிலும் நினைவு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மெலிதாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது அருணாவுக்கு 60 வயது. அவர் நன்றாக இருக்கும்போது லயித்துப் போய் பாடும் இந்திப் பாடல்கள் இப்போதும் அவரது அறையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப் பாடல்களில் எதாவது ஒன்று அவரின் ஞாபக நரம்பை மீட்டுக்கொண்டு வந்துவிடாதா..? என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை..! அது உயிர்ப்போடு இருக்கும் வரை எந்த மனிதனையும் உடலால் கொல்ல முடியாது..!

குறிப்பு:

2011-ம் ஆண்டு கருணைக் கொலை பற்றி தீர்ப்பு வந்த போது நான் எழுதிய கட்டுரை இது. நினைவு திரும்பிவிடும் என்ற அந்த மருத்துவமனையின் ஊழியர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு உடலாலும் மரணமடைந்தார் அருணா ஷான்பாக். 

இனி எந்தவொரு பெண்ணுக்கும் இந்த நிலை வரவே கூடாது..! அவரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்..! 

2.bp.blogspot.com 754DZHskL s VVuhx seOCI AAAAAAAAEO0 KOarVV2VkwE s640 aruna kem dead 759 - 2026
இறுதி ஊர்வலத்தில் அருணா ஷான்பாக்
2.bp.blogspot.com Lm93bWTVBWk VVuiHeZICXI AAAAAAAAEPU kRJnaDh07X0 s640 aruna1 - 2026

பழங்குடிகளுடன் ஒரு நாள்

 

 
 
 
 

சன்டூரி சாய் ரிஸார்ட்

4.bp.blogspot.com ID58B0T7vWs VV6idQXIPXI AAAAAAAAEQ4 oiZldJgh1Rw s640 villagelarge - 2026
ரிஸார்ட் அமைந்திருக்கும்  கெளடகுடா பழங்குடிகள் கிராமம்

ஒடிஸா பழங்குடியினரின் ஆடம்பரமான ரிஸார்ட் தான் சன்டூரி சாய். சன்டூரி என்பது மருத்துவ குணம் மிக்க மாமரத்தின் பெயர். திறந்த புல்வெளிகளுடன் இணைந்தவாறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த புல்வெளிகளில் பழங்குடிப் பெண்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.

1.bp.blogspot.com jTYFbN5rmzg VV6iwgULfmI AAAAAAAAERA lI7aXv eKY8 s400 homepagepicsmall - 2026
தங்கும் அறைகள்

3.bp.blogspot.com QgaTpQujowQ VV6i0QKeSBI AAAAAAAAERI HXytpE95Unk s640 guest living dining room - 2026
ரிசார்ட்டின் லிவ்விங் ரூம் 

 சுற்றுலா பயணிகளுக்கு மண்பாண்டம் செய்யும் தொழில் வேலைகளையும், நுணுக்கமான பயிற்சியாக இங்கு கற்றுத்தரப்படுகிறது.

1.bp.blogspot.com JhzCH Plrsc VV4Yk4mIfXI AAAAAAAAEP4 swPH3DJDTgo s640 Odisha Women - 2026
விவசாயத்தில் பழங்குடி இன பெண்கள்

இங்குள்ள மார்க்கெட்டுகளில் இவர்களின் பாரம்பரிய உடைகளும், அணிகலன்களும் விற்கப்படுகின்றன. சுவை மிகுந்த ஒரியா உணவு வகைகளான ‘தால்மா’ மற்றும் ‘மச்சா கன்டா’ உண்பதற்கு ஏற்றது.  இங்குள்ள ‘போராஜா’  அல்லது ‘கோன்டா’ இன பெண்களிடம் நாம் நட்புறவு கொண்டால் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகைகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுக்கும் அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள். இந்த மார்க்கெட்டில் நாம் கண்டிப்பாக வாங்கி வேண்டிய பொருள் என்றால் அது “போர்வை’ தான். அந்த அளவிற்கு வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும்.

3.bp.blogspot.com jlVYSwye2dY VV4Y6IqgfDI AAAAAAAAEQA HBfY3zNUQXU s640 kondh woman - 2026
கோன்டா’ இன பெண்

புவனேஸ்வரில் இருந்து 500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது கெளடகுடா கிராமம்.

2.bp.blogspot.com gtfRW3O1ZBo VV4ZLhrZ5QI AAAAAAAAEQI d3unu4piDxk s640 Tribal Packages Bonda tribe 1 - 2026
போண்டா பழங்குடிப் பெண்

சன்டூரி சாயில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.5,000 கட்டணமாகப் பெறப்படுகிறது.

1.bp.blogspot.com 5gH KPg7c5Y VV4Zc8z697I AAAAAAAAEQQ 7QCbNMiC3 U s640 tribal india keren su orissa india bondo woman - 2026

பராசக்தி: ‘இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி’

 

4.bp.blogspot.com vCHq7XgR4KA VV96hCOp0bI AAAAAAAAERk jMZpKcgqVv0 s400 Karunanidhi - 2026
மு.கருணாநிதி
சென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம் என்றால் கருணாநிதி என்பார்கள். ஆனால், அந்த கருணாநிதியின் பெயரையும் இருட்டடிப்பு செய்த காலம் ஒன்றுண்டு. 
 
1940-களின் மத்தியில் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரின் சினிமா தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்று வந்தன. அந்த காலத்தில் அவரின் படங்களை விநியோகம் செய்து வந்த பி.ஏ.பெருமாள் மெய்யப்பருடன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 
 
 
அதே நேரத்தில் தேவி நாடக சபா நடத்தி வந்த ‘பாரசக்தி’ நாடகம் புகழின் உச்சத்தில் இருந்தது. வசூலில் சினிமாவை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அள்ளிக் குவித்தது. இந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும், அந்த ஊரின் சினிமா வசூல் படுத்தது. 
 
இப்படி மக்கள் அலைமோதும் அளவிற்கு அந்த நாடகத்தில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளவதற்காக மெய்யப்ப செட்டியாரும் பெருமாளும் கடலூருக்கு சென்று ‘பராசக்தி’ நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் பிடித்துவிட்டது. 
 
3.bp.blogspot.com sQX2Z5hnjlg VV9 - 2026
ஏ.வி.மெய்யப்பன் செட்டியார்
உடனே, நாடகத்தை எழுதிய பாலசுந்தரத்தைப் பார்த்து விலைபேசி, நாடகத்தை வாங்கி, பெருமாளுக்கு கொடுத்தார் செட்டியார். படத்தை அண்ணாதுரை கதை எழுதிய ‘நல்லதம்பி’ திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சுவை கொண்டே ‘பாரசக்தி’ படத்தையும் இயக்கச் சொன்னார்.
 
அண்ணாதுரையைப் போலவே ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வந்த மு.கருணாநிதியை படத்துக்கு வசனம் எழுத வைப்பது என்று முடிவு செய்தனர். 
 
படத்தின் ஹீரோவாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க செட்டியார் விரும்பினார். ஆனால், பெருமாளோ வேறு விதமாக சிந்தித்தார். அவர் செட்டியாரிடம் “நாம் ஏன் ஒரு புது நடிகரை போடக்கூடாது?” என்றவர் கூடவே “வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் ‘விதி’ நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே ‘பராசக்தி’யில் ஹீரோவாக போட்டால் என்ன..!” என்றார். 
 
அப்போது ‘விதி’ நாடகம் திண்டுக்கல்லில் நடந்துக் கொண்டிருந்தது. செட்டியார் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். என்னவோ அவருக்கு புது நடிகரை நடிக்க வைப்பதில் உடன்பாடு இல்லாமலே இருந்தது. 
 
“சினிமா என்பது வேறு. நாடகத்தில் நடிப்பதென்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரை நடிக்க வைத்து படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது? இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க்?” என்றார்.
 
பெருமாள் விடுவதாக இல்லை. “ரிஸ்க் எடுப்போம்! கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்..!” என்று பிடிவாதமாக இருந்தார்.
 
செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார். 
 
‘பராசக்தி’ படபிடிப்பு தொடங்கியது. சுமார் 3,000 அடி படம் எடுத்தப் பின், அதுவரை எடுக்கப் பட்ட படத்தை செட்டியாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. 
 
படத்தைப் பார்த்த செட்டியாரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. “இந்தப் பையன் தமிழ்நாட்டுக்கே பெரும் புகழ் சேர்ப்பான். இவனே தொடர்ந்து நடிக்கட்டும்.” என்றார். 
 
3.bp.blogspot.com E6jk6rIOQ10 VV97 DJOXgI AAAAAAAAER4 ulrKQj kYfo s640 vlcsnap2011090921h09m33 - 2026
‘பராசக்தி’யில் சிவாஜி கணேசன் 
‘பராசக்தி’ 1952, அக்டோபர் 17-ல் ரிலீசானது. தமிழ் சினிமாவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக அது மாறியது. சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிப்பு சகாப்தம் உருவானது. 
 
படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் பட்டிதொட்டிகளில் எல்லாம் படு ஹிட். வசனம் என்றாலே அது கருணாநிதிதான் என்ற புது டிரெண்ட் தோன்றியது. 
 
இப்படி பெயர் பெற்ற கருணாநிதிக்கும் சினிமா துறைக்கே உள்ள இருட்டடிப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அது ‘அபிமன்யு’ படத்தின் மூலம் கிடைத்தது. 1948-ல் அந்தப் படம் ரிலீசானது. படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்தார். 
 
4.bp.blogspot.com - 2026
‘அபிமன்யு’ படத்தில் எம்.ஜி.ஆர்
தனது பெயர் வரும் என்று ஆவலோடு காத்திருந்தபோது திரைகதை, வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று வந்தது. தனது பெயருக்குப் பதில் அன்றைக்கு பிரபலமாக இருந்த ஒருவரின் பெயர் வந்திருப்பதைக் கண்டு, படத்தின் தயாரிப்பாளரான ஜுபிடர் சோமுவிடம் போய் கேட்டார். அதற்கு அவர், “உன் பெயரும் பிரபலமாகட்டும், அதுவரை பொறு!” என்றார். 
 
வசனத்திற்காகவே பின்னாளில் மிகப் பெரும் புகழ் பெற்ற கலைஞர் கருணாநிதிக்கே ஆரம்ப காலங்களில் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு சேதி! 

நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்

 

2.bp.blogspot.com tQXO0ktJBjk VWG64ZUWNHI AAAAAAAAES0 xYerR puyno s640 Comfort Woman Action Figure Comes Complete with 50 Japanese Soldiers - 2026

மனித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் சம உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், சரித்திர காலங்களில் பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் ‘கம்போர்ட் பெண்கள்’.
 

1.bp.blogspot.com KlDTpBIngdw VWHBNvPSsUI AAAAAAAAETc a0fL aWPB4o s640 image001 - 2026
போர்க்களத்தில் கம்போர்ட் பெண்
பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போது எப்படிப்பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால், 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் நம்புவது சிரமம்தான்.
 
2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து போட்டிகளை நடத்தின.
 
ஜப்பானும் தென் கொரியாவும், இந்தியா – பாகிஸ்தான் போல,  உள்ளுக்குள் பகையை வளர்த்துக் கொண்டு வெளியில் நட்பை பாராட்டிக் கொள்ளும் நாடுகள்.
 
போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரண்டு நாடுகளிலும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது தென் கொரியா தொலைக்காட்சி ஒன்று ஒரு விபரீதமான பேட்டியை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டத்தட்ட 50 வருடங்களாக அமுங்கிக்கிடந்த பிரச்சனையை, தடாலென்று விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்தது.
 
கிம் சாங் ஹீ என்ற 75 வயது பெண் கொடுத்த பேட்டி தான் கொரியர்களை கொதிக்க வைத்தது. இரண்டாம் உலகப்  போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நடந்த சம்பவம் அது.
 
அப்போது கிம் 20 வயதுகூட எட்டாத கன்னிப் பெண். சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து போர்க்களத்தில் இருந்து வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் போர் விமானங்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்போய் களைப்படைந்த ராணுவ வீரர்களுக்கு.. உடலும் மனசும் வேறொரு இன்பத்துக்காக ஏங்கியது. அதை ஏக்கம் என்று சொல்வதைவிட வெறி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது பெண்ணுக்கான ஏக்கம்.
 
மாதக் கணக்கில் பெண் வாடையே இல்லாமல் போர்க்களத்தில் போரிடும் ராணுவ வீரனுக்கு ஒரு பெண்ணை இனிமையாக அணுகத் தெரியாது. மென்மையாக அவளை இன்ப உலகத்துக்கு அழைத்து செல்ல தெரியாது. அவனுக்கு இருப்பதெல்லாம் காமவெறி ஒன்றுதான். அதனால் அவனுடன் கூடுதல் பெண்ணுக்கு வலி நிறைந்த கொடூரமாகத்தான் இருக்கும்.
 
1.bp.blogspot.com yCp zR05 Mw VWHBDyMAjDI AAAAAAAAETQ yG1f226qCiw s640 comfort women 5 - 2026
ராணுவமுகாமுக்கு செல்லும் கம்போர்ட் பெண்கள்
தொடர்ந்து போர்க்களத்திலேயே இருந்த இப்படிப்பட்ட போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்த்து வைக்க பெண்கள் தேவைப்பட்டார்கள். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு ஏற்ப விலைமாதர்களும் இல்லை. அதனால் ராணுவத்துக்கு வேறு வழி தெரியவில்லை. இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு வந்தார்கள்.
 
ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ்  நாட்டுப் பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள். இப்படி கடத்தப்பட்ட பெண்களும் ராணுவ வீரர்களைவிட குறைவாகவே இருந்தார்கள்.
 
2.bp.blogspot.com iQsF49bzkkU VWHBEJ3fh3I AAAAAAAAETM KGXd41ChXFQ s640 17213507 - 2026
ராணுவமுகாமில் கம்போர்ட் பெண்கள்
அழகான, இளமை நிறைந்த, பயந்து நடுங்கும் குடும்ப பெண்களைப் பார்த்ததும் வெறி இன்னும் உச்சத்தை அடைந்தது. பல பெண்கள் ஓய்வு இல்லாமல் வேறு வேறு ராணுவ வீரர்களுடன் உறவு கொண்டனர்.
 
3.bp.blogspot.com Vais 7l4Ih4 VWHFsqX5cVI AAAAAAAAETw A9HcaYtbj4Y s400 2502e7c4ade9e57b20f221e128415184 - 2026
அதிகாரிகளுக்கு கூடுதலாக பெண்கள்
மென்மையும், பலவீனமும் நிறைந்த பல பெண்கள் வெறித்தனமான இந்த பலாத்காரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரிழந்தனர். அப்படியும் கூட விடாமல் பிணத்தைக் கற்பழித்த கொடூரமும் நடந்திருக்கிறது. இப்படி ராணுவ வீரர்களுக்காக உடலைக் கொடுத்த பெண்களுக்கு ‘கம்போர்ட் உமன்’ என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் சொல்வதென்றால் ‘ஆறுதலளிக்கும் பெண்கள்’.
 
3.bp.blogspot.com FpgmUWBAESg VWHBD 8CJXI AAAAAAAAETE Guy6GWTPpao s640 comfort women pregnant - 2026
ராணுவத்தினரால் கர்ப்பிணியான பெண்
ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளித்த இந்த பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் என்கிறது சீன அரசு. அந்த கம்போர்ட் பெண்களில் ஒருவர்தான் கிம் சாங் ஹீ. அந்தப் பெண் தொலைக்காட்சி பேட்டியில், “எங்களின் வாழ்வை சூறையாடியதற்காக ஜப்பானிய அரசு எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும். அதுமட்டுமல்ல, ஜப்பான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
 
4.bp.blogspot.com - 2026
நிர்வாண சித்ரவதை
ஆனால், ஜப்பான் அரசு கம்போர்ட் பெண்களை ஒரு புழுவைப் போல்தான் பார்த்தது. நம்மூரில் இருப்பது போல வில்லங்கமான அரசியல்வாதிகள் ஜப்பானிலும் உண்டு. அதில் ஒரு அதிகப்பிரசங்கி அரசியல்வாதி ஒருவர் எல்லோரையும்விட ஒருபடி மேலே போய், “நான் அந்தப் பெண்ணை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் கொடுத்த சுகத்திற்கு பதிலாக உங்களுக்கு பணம் தரப்பட்டதல்லவா..! அதோடு அது உங்களுக்கும் சுகமான அனுபவம்தானே..!” என்று பொறுப்புணர்வு இல்லாமல் டி.வி.யில் பேட்டி கொடுத்துவிட.. பற்றிக்கொண்டது. 
 
கம்போர்ட் பெண்கள் கொதித்துப் போய் நடுரோட்டிற்கே வந்து போராடத் தொடங்கினார்கள். கதறி அழுதார்கள். “அன்பு, பாசம், காதல் கனிந்த கனிவான பேச்சு, இவைகள்தான் ஒரு பெண்ணுக்கு ஆணுடன் கூடும்போது இன்பத்தை தருமே தவிர, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பலாத்காரத்தில் இன்பம் இருக்காது. வேதனையே மிதமிஞ்சி இருக்கும். இதை அறியாமல் பேசும் அந்த அரசியல்வாதி ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவம்” என்று கம்போர்ட் பெண்கள் காச்சி எடுத்தார்கள். 
 
2.bp.blogspot.com - 2026
போராட்டத்தில் கம்போர்ட் பெண்கள்
தங்களை விலைமாதர்களைப் போல் குறிப்பிட்டதை கம்போர்ட் பெண்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “போர்க்களத்தில் எங்கள் உடலை சின்னாபின்னப் படுத்தினீர்கள். இப்போது 50 வருடங்கள் கழித்து எங்கள் ஆன்மாவை சிதைக்கிறீர்கள்” என்று வெடித்தார்கள். 
 
ஜப்பானிய மக்களே தங்கள் அரசு அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கான நஷ்டஈடு கொடுப்பதுதான் முறை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். 
 
மிகப் பெரும் தயக்கத்திற்குப் பிறகு ஜப்பானிய பிரதமர் அந்தப் பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். “பெண்கள் சரித்திரத்திலேயே இரண்டாம் உலகப் போர் காலக்கட்டம் தான் மிக மோசமானது. அப்போது அவர்கள் அடைந்த அவமானம்  வேறு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்றும் கூறி மனம் வருந்தினார். பின்னர் அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப் பட்டது.
 
எந்தப் பிரச்சனையுமே முழுவதுமாக மறைந்து போய்விடுவதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உலகுக்கு உணர வைத்தது இந்த கம்போர்ட் பெண்களின் போராட்டம்.

அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

 

 
3.bp.blogspot.com V MVyiU5ULM VWaq5TybRDI AAAAAAAAEVc C1JnxlkPbA8 s640 500 rupees - 2026

இந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமா? அல்லது சீரழிக்க வேண்டுமா? வேறொன்றும் செய்ய வேண்டாம், கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சடித்து மக்கள் மத்தியில் புழங்க விட்டால் போதும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு விடும். நிதிநிலை சரிந்து விடும்.

அதனால்தான் பகை நாடுகள் எதிரி நாட்டின் கரன்சியை தங்கள் நாட்டில் அச்சடித்து விநியோகிக்கின்றன. அப்படிதான் பாகிஸ்தானில் இருந்து எராளமான 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வருகின்றன.

எப்போதும் ஒரு நாட்டின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே கள்ளப் பணமாக அச்சடிக்கப் படுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறது. கள்ள நோட்டை ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அதில் நிறைய ‘ரிஸ்க்’ உள்ளது. 500 ரூபாய் என்றாலும் 50 ரூபாய் என்றாலும் ஒரே ‘ரிஸ்க்’தான்.

பெரும் தொகையுள்ள பணத்தை ரிஸ்க் எடுத்து மாற்றி விட்டால் லாபம் அதிகம். அதனால்தான் கள்ள நோட்டுகள் பெருந்தொகை உள்ளதாகவே உள்ளன.

2.bp.blogspot.com bCQ2S8P1BJk VWasNujXQyI AAAAAAAAEVs YVUQysLiZr0 s640 1000 Rupee - 2026

கள்ள நோட்டுக்கு மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்துக்கும் பெரும் மதிப்புள்ள நோட்டுக்கள் துணை போகின்றன. இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே  500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரிதாக பொருளாதரத்தில் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இன்றைக்கும் 70 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அப்படியொரு ஏழை நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும். மொத்த ரூபாய் நோட்டுக்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 76.5 % உள்ளன. இந்த நோட்டுகளில் 70% மேல் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் 350 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 100 கோடிக்கு மேல் 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது ஒரிஜினல் நோட்டுக்களின் புள்ளி விவரம். கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. அது தனி கணக்கு.

அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. என்பது பெருமைப்படக்கூடிய விஷயமில்லை. அது பயன்படும் விதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நோட்டுகளை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கும் ஏழைகள் அல்ல. இந்த நோட்டுக்கள் ஊழலுக்கு மிகவும் வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் செய்கின்றன.

கறுப்புப் பண பரிமாற்றத்துக்கும், வெளிநாடுகளுக்கு பணத்தைக் கடத்துபவர்களும் இந்த நோட்டுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதை எடுத்துச் செல்வது எளிது. அதனால்தான் இந்த நோட்டுக்களை ‘கறுப்பு பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று கூறுகிறார்கள்.

3.bp.blogspot.com u4 JMHnmB4M VWasfATauOI AAAAAAAAEV0 lNJpoB9RPEY s640 INR Bundle - 2026
இது நல்ல பணம்

உதாரணமாக ஹவாலா பணம் ஒரு கோடி ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களாக அதை எடுத்துச் சென்றால், அதன் எடை 50 கிலோ வரை இருக்கும். அதையே 500 ரூபாய் நோட்டுக்களாக கொண்டு சென்றால் வெறும் 2 கிலோதான் இருக்கும். 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றால், ஒரு கிலோவுக்கு சற்று கூடுதலாக இருக்கும்.

பெரிய மதிப்பிலான நோட்டுக்களோடு ஒப்பிடும்போது சிறிய மதிப்பிலான நோட்டுக்களை எடுத்துச் செல்வதற்கும், கண்ணில் படாமல் தப்பிப்பதற்கும் ஏற்படும் பிரச்சனைகள் மிக மிக அதிகம்.

நியாயமான முறையில் நடைபெறும் பணப் பரிமாற்றத்திற்கு பெரும்பாலானவர்கள் காசோலை, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்களும் சட்ட விரோத செயல்களை செய்பவர்களும், பினாமி பெயரில் சொத்து வாங்குபவர்களும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பணம் வழங்குவதற்குமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகிறார்கள். இதே போன்ற செயல்களுக்கு குறைந்த மதிப்பிலான நோட்டுக்களை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல் என்பது அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான் பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அரசு திரும்பப் பெறும்போது, கறுப்பு பொருளாதரத்திற்கு பெரிய அடி விழுகிறது. பெரும்பகுதி ஒழிக்கப்பட்டு விடுகிறது. வெளிநாடுகள் பலவற்றில் பெரிய மதிப்பிலான நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருகாலத்தில் 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நோட்டுகளை எல்லாம் ஒழித்துவிட்டார்கள். இப்போது 100 மதிப்புள்ள நோட்டுக்கள்தான் அங்கு அதிக மதிப்புடைய நோட்டுக்கள்.

இதனால் அந்த நாடுகளில் நிலவிவந்த சட்டவிரோதமான பணப்புழக்கம் குறைந்தது. ஆனால் நமது நாட்டில் நிலைமையே வேறு. கடந்த 10 ஆண்டுகளில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது 17 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவின் கிராமங்களில் இன்றைக்கும் 500 ரூபாய் நோட்டுக்களைப் பார்ப்பது குதிரைக்கொம்புதான். 1000 ரூபாய்க்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள்தான். ஆனால் 500 ரூபாய் தாராளமாகக் கிடைக்கும் வேளையில் சிறிய மதிப்பிலான ரூபாய்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.

3.bp.blogspot.com jsBfkuQQVog VWatV8Cz0eI AAAAAAAAEV8 fJaZzY8IstE s640 1398602260 six crore fake indian rupee seized at dhaka airport 4574743 - 2026
இது கள்ளப் பணம் மதிப்பு ரூ.6 கோடி

இப்படி அதிக மதிப்பிலான நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் இப்போது 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது நிதி அமைச்சகத்தின் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் 500 ரூபாய் நோட்டுக்களில் 60.74 சதவிகிதம் கள்ள நோட்டுகள். 1000 ரூபாய் நோட்டுகளில் 4 நோட்டில் ஒன்று கள்ள நோட்டாகும்.

கொஞ்சம் பணக்காரர்களும், நிறைய ஏழைகளும் கொண்ட ஒரு நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தேவையற்றவை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உண்மைதான். சாமான்ய மக்களைவிட கருப்பு பண முதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும், பணக்கடத்தலுக்கும்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதன் மூலம் கறுப்பு பொருளாதாரத்தையும், கள்ள நோட்டையும் ஒழித்து வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி

 

 

 
2.bp.blogspot.com O4 Y8HlNuSc VWbpUeN5oWI AAAAAAAAEWM dhUa7c3bPtI s640 IMG 0423 - 2026
குடிவாடா நாகரத்தினம் நாயுடு

ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..!  ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..!

3.bp.blogspot.com yPWO8ms0iRg VWbpZkcnpcI AAAAAAAAEWU 14SBLZzGMh4 s640 IMG 0436 - 2026
பள்ளிப் பாடமாக நாகரத்தினம்

நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார்.  திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தை சுற்றி திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு..!

செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன். நான் யாருக்காக இத்தனை கி.மீ. பயணித்து வந்தேனோ அவர்தான் கதவை திறந்தார். அந்த மாமனிதரின் பெயர்  குடிவாடா நாகரத்தினம் நாயுடு.

இந்த பெயர்தான் மதுரையிலிருந்து ஹைதராபாத் வரை என்னை அழைத்துக் கொண்டு போனது. தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீடு இருந்தது. வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன. 336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள் என்று வீடு கொள்ளா பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

1.bp.blogspot.com - 2026
தென்னாப்பிரிக்காவில் கொடுத்த விருது

என்னை வரவேற்ற அவர் முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்று தெரியவில்லை.

“வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?”

“ஒரு டாக்டரோட வீடு மாதிரி ‘ரிச்’சா இருக்கு..!”

“அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன். ஒரு விவசாயி, டாக்டர் மாதிரியோ என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது? அவர்களும் வசதியாக வாழ முடியும் என்பதுதான் எனது கான்செப்ட். இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்” என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.

அவர் சொன்ன மாதிரியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் குடி இருக்கும் கௌதம் காலனி கூட வசதியானவர்கள் வாழும் இடம் தான். மேற்கொண்டு அவர் பேசியதிலிருந்து…

 
“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில்தான். எனது தாய் தந்தையரும் விவசாயிகள்தான். பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன். அங்கு‘டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்’ படித்து முடித்தேன். அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை. என் நாட்டமெல்லாம் விவசாயமாகவே இருந்தது.
 
4.bp.blogspot.com nCtSngkecLs VWbqaBK3g8I AAAAAAAAEYE RfzIvzWX3YQ s640 IMG 0429 - 2026
மனைவி மகளுடன் நாகரத்தினம்
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன். அதற்குள் திருமணமும் முடிந்தது. கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்காரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். துணிந்து வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது. முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்கி விளைவிக்க போராடினோம்.

2.bp.blogspot.com - 2026
நாகரத்தினத்தின் பசுமையான வயல்
“நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்து தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றினோம். இப்போது எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது. அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது. விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நான் விவசாயத்திலே சம்பாதித்து, அதிலே சாப்பிட்டு, அதிலே வருமானமும் பார்க்கிறேன். நான் ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன்.

3.bp.blogspot.com 9PSXOdWGYjA VWbpe0TY00I AAAAAAAAEXI aRUtp1s32w s640 IMG 0679 - 2026
‘திருந்திய நெல் சாகுபடி’ முறையில் நெற்பயிர்கள்
2003-ம் ஆண்டு இந்தியாவில் ‘திருந்திய நெல் சாகுபடி’ முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன். இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது. என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள். இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன். வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்.

இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிஎனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார். அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார். ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை.

அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி., சி.என்.என்.தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.

3.bp.blogspot.com czs2JgaYhs4 VWbpcotGIXI AAAAAAAAEWw tbfHlLPLIMU s640 IMG 0664 - 2026

நான் வருமானத்தை சொல்லவில்லை. மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்றேன்.

அதற்கடுத்த ஆண்டு 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார். எனது விவசாய முறையை அறிந்த அவர், ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர் என்றார். என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார். ‘எனது சேவை எனது தாய் நாட்டுக்கே’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.

2.bp.blogspot.com nzN52SBXD o VWbpgB3Ze3I AAAAAAAAEXY eV9ElH15ri0 s640 IMG 0689 - 2026
இந்த அலங்கார மலர் ஒன்றின் விலை ரூ.250
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன். இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய். விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது. என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் முடியும். என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு  காரணமே, விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். திட்டமிட்டு பயிரிடுங்கள் பூமித்தாயைப்  போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை. அதற்கு நானே உதாரணம்.

1.bp.blogspot.com Aeo8mZ8cbD0 VWbpeJoyPDI AAAAAAAAEXA PFNgnYXP5Ak s640 IMG 0676 - 2026

இயற்கை ஒத்துழைத்தால் உணவு உற்பத்தி செய்வது வெகு சுலபம். பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம். அதை சரியாக செய்தாலே போதும். விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.

4.bp.blogspot.com lI Ai9kQzPA VWbpiNOgJoI AAAAAAAAEXs FHd6fj6BETE s640 IMG 0692 - 2026
வாட்டி எடுக்கும் வெயிலில் கூட காப்பி செடி
எனது நிலத்தில் இதுவரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை. அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது. எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும். விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கிறேன்.

1.bp.blogspot.com NG5aQluSppc VWbpkN GuHI AAAAAAAAEX8 65OCLswOXJ8 s640 IMG 0699 - 2026
வசதியானவர்கள் திருமணத்தில் தோரணமாக தொங்கவிடப் படும் அலங்கார மலர் 
எனது பொருட்களின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுப்பேன். இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம். நான் அதிக விலைக்கும் விற்பதில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம். ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.

 
2.bp.blogspot.com Wdxp7oAc63E VWbphLd UDI AAAAAAAAEXk whcR8ckbFU8 s640 IMG 0690 - 2026

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன். மாங்காய் மரங்களில் மட்டும் 35 வகைகள் உள்ளன. பெரிய இடத்து திருமணங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த அலங்கார மலர்களில் 40 வகையை இங்கு பயிரிட்டுள்ளேன். இந்த வகை மலர் ஒன்று ரூ.250  வரை விலை போகும். முகூர்த்த காலங்களில் இதன் விற்பனை நல்ல லாபத்தை தரும். இதுபோக மலர்களை பொக்கே செய்து அனுப்புவேன். இது சீஸன் வருமானம். தேங்காயை அப்படியே விற்றால் லாபம் குறைவு. அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து அதை விற்றால் லாபம் அதிகம். தேங்காய் நாரை உரமாக போட்டு விடுகிறேன். இதனால் இரட்டிப்பு லாபம். இது மாத வருமானம்.

எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன். எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை. இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது. பால் மூலம் தினசரி வருமானம் வரும்.

1.bp.blogspot.com fZoGgLtRi2k VWbpb3ngG5I AAAAAAAAEWo FFD3hMpOttE s640 IMG 0662 - 2026
பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நாகரத்தினம்
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.

அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.நான் வங்கிக் கடனாகவோ அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை. இது சுயமரியாதை அதிகம் கொண்ட தொழில். விவசாயி பிச்சைக்காரனில்லை. ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.

3.bp.blogspot.com wJy m0wROMY VWbpfihDIBI AAAAAAAAEXU 4HUfbkfVdOg s640 IMG 0682 - 2026
உணவு உற்பத்தியாகும் இடத்தை பார்வையிடும் மாணவிகள்
“மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன். இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் அரிசி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் சூப்பர் மார்க்கெட் என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும். வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்” என்று கூறும் நாகரத்தினம் பற்றி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஒரு பாடமாக ஆந்திர அரசு வைத்துள்ளது.

 
1.bp.blogspot.com a0IuOG0wOPs VWbpjA1BrtI AAAAAAAAEX0 ZLLp8dCkNDs s640 IMG 0695 - 2026

தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு இதைச் செய்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள். வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.

2.bp.blogspot.com HWQNfdc9H c VWbpdutOUYI AAAAAAAAEW8 rXUWMq nU7o s640 IMG 0669 - 2026
வைர வியாபாரியின் மகன் யுவேஷ்
நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி ஒருவர்தான் யுவேஷ். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவரது குடும்பத் தொழில் வைர வியாபாரம்.  இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார். அவர் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ் பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார். இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் நாயுடு இருந்து வருகிறார் என்பது விவசாயத்துக்கே பெரிய விஷ­யம்தான்.
நாகரத்தினத்தின் மார்கெட் உத்தி மிகவும் வித்தியாசமானது. தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார். அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார். வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள். இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.

 எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு. இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.

எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. “உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?” என்று கேட்டேன். “நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!” என்றார்.

இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது.

நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார். ஏனென்று கேட்டால், “அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்.” தீர்க்கதரிசியாக கூறினார்.

ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

மென்மேலும் சாதனை சிகரங்களை எட்ட நாமும் வாழ்த்துவோம்!

விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழிலேயே பதிலளிப்பார்.
 
குடிவாடா நாகரத்தினம் நாயுடு. ஹைதராபாத். கைப்பேசி எண்  : 094404-24463.

மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை

 

 

(இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..)

1.bp.blogspot.com llSeg0Vy1A0 Vkty yu2k1I AAAAAAAAGU0 P8yFTvAz8Kc s400 Kaval Kottam - 2026

அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போல்தான் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் சாகித்ய அகாடமி விருது என்ற கருத்து படைப்பாளிகள் மத்தியில் எப்போதும் இருக்கிறது. அது ஓரளவு உண்மையும்கூட.. இளம் வயதில் இந்த விருது பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த பாக்கியம் ஜெயகாந்தனுக்கு இருந்தது. அதற்கடுத்து சு.வெங்கடேசனுக்கு வாய்த்திருக்கிறது. 1973-ல் ஜெயகாந்தன் சாகித்ய அகாடமி விருது பெறும்போது அவருக்கு வயது 38. 2011-ல் வெங்கடேசனுக்கு வயது 41.

 
4.bp.blogspot.com - 2026
சு.வெங்கடேசன்
எப்போதும் ஒரு சரித்திர நாவல் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்றுவிடும். பெரும்பாலான படைப்புகள் ஒரு தனி மனிதனின் வீரத்தையோ, அல்லது அரச குடும்பத்தை மையமாக வைத்தோ படைக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரை நாவலாக படைத்திருப்பது ஆச்சரியப்படுத்தும் புதுமை. வரவேற்பும் எதிர்மறை விமர்சனங்களும் பெரும் சூறாவளியாய் சுழன்றுக் கொண்டிருக்க.. குளிர் வாட்டியெடுக்கும் மழைக்கால மாலைப் பொழுதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனை சந்தித்தேன். இந்த சரித்திர படைப்புக்காக தான் பட்டபாடுகளை பகிர்ந்து கொண்டார். இனி அவரது வார்த்தைகளில்..
 
“இந்த நாவலை நான் எழுத தொடங்கியபோது என் மகள் கைக்குழந்தை. எழுதி முடித்து வெளியே வந்தபோது அவள் என் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறாள். பத்து வருடங்கள் போனது தெரியவில்லை. ஒரு நாவலுக்காக 10 வருடங்கள் உழைத்திருப்பது அதிகமாக தெரிந்தாலும், அந்த உழைப்பு மனநிறைவை தந்திருக்கிறது. அதற்கு பரிசாக சாகித்ய அகாடமி விருது கிடைந்த்தது என் வாழ்நாள் சாதனை. 
 
மதுரை 2,500 வருடங்கள் பழமையான நகரம். உலகில் வேறு எங்கும் இவ்வளவு பழமையான நகரம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நகரங்கள்கூட அழிக்கப்பட்டு, மீண்டும் சிறிது தொலைவு தள்ளி வேறு இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது புதிதாக உருவாகியிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அழிவின்றி இருக்கும் நகரம் இந்த உலகில் மதுரை மட்டுமே! 
 
நகரம் மட்டுமல்ல, அதன் இடங்கள்கூட மாறவில்லை. தத்தனேரியில் எரியும் நெருப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு தமிழன் சிதையை பற்றவைத்த நெருப்பு. உலகில் வேறெங்கும் இத்தனை பழமையான சுடுகாட்டை அதே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியாது. 
 
வரலாற்றின் மூத்த குடிகளின் மண் இது. தமிழ் நாகரிகம் தழைத்தது இங்குதான். தமிழ் பண்பாட்டை மதுரை வரலாறு வழியாகப் பார்த்தால்தான் அதன் மேன்மை தெரியும். அதனால்தான் மதுரையை மையப்படுத்தி எழுதவேண்டும் என்று நினைத்தேன். 
 
அதற்காக 1997-ல் முதல் ஆய்வுக்கட்ட பணிகளை மேற்கொண்டேன். அதை நாவலாக எழுதுவதா? ஆய்வுக்கட்டுரைபோல் எழுதுவதா? இல்லை வரலாற்று தொகுப்பாக கொண்டுவருவதா? என்ற குழப்பம் இருந்தது. மூன்று வருடமாக எந்த முடிவுக்கும் வராமல் வெறும் ஆய்வுத் தரவுகளை மட்டும் தேடித் தேடி சேகரித்தேன். அப்போதுதான் நாவலுக்கான கருத்து அதில் இருப்பது தெரிந்தது. நாவலாக எழுதுவது என்ற முடிவை எடுத்தேன். 
 
மதுரை, சென்னை, லண்டன் ஆவணக் காப்பகங்களில் இருந்தும், பக்தி இலக்கியம், ஓலைச்சுவடிகள், தாமிர பட்டயங்கள், இஸ்லாமியர்களின் குறிப்புகள், கிறிஸ்துவ பாதிரியார்களின் டயரி குறிப்புகள் என்று அனைத்தில் இருந்தும் தகவல்களை சேகரித்தேன். வரலாறு என்பதே எழுதப்படாத தகவல்களில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் அதையும் தேடி அலைந்தேன். 
 
கிராமங்களில் சொல்லப்படும் கதைகள், வெறும் கதைகள் மட்டுமல்ல, அது வரலாற்றின் தொடர்ச்சி தொடர்ந்து வாய்வழியாக வந்த சரித்திரம். இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்த எல்லா பழைய கிராமங்களிலும் தங்கியிருந்து கதை கேட்டேன். அவற்றை இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். ‘காவல் கோட்டம்’ எழுதப்படாத வரலாறு நிறைந்த ஒன்று. யாரும் சொல்லாத கதைகள்.

நான் சந்திக்க நினைத்த, சந்தித்த பல மனிதர்கள் வயோதிகத்தின் காரணமாக சில வாரங்களுக்கு முன்பும், பின்பும் இறந்தபடியே இருந்தனர். இரண்டாவது முறை அவரிடம் பேட்டியெடுக்க போகும்போது வெள்ளை அடிக்கப்பட்ட வீட்டுச் சுவரோ, பிரிக்கப்படாமல் இருக்கும் வாசல் கொட்டகையோ தூரத்தில் இருந்தே அந்த துக்க செய்தியை சொல்லும்.

போகும் இடமெல்லாம் மரணம் சகப் பயணியாக கூடவே வந்து கொண்டிருந்தது. ‘ஒரு வாரம் முன்னால் வந்திருக்கக் கூடாதா..? இதெல்லாம் தெரிந்த மனுஷன் இப்பதானே செத்தாரு..!’ என்ற குரல் கேட்காத கிராமமே இல்லை. ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்று பொழுதெல்லாம் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் நிறைய.

அதுகூட பரவாயில்லை. இப்போது கிராமத்தில் கதையை தேடினால் கிடைக்காது. கிராமத்து சாவடிகளை டி.வி. தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது.

தாயக்கட்டங்களைப் போல் சாவடி பட்டியக்கல்லின் மேல் விரிந்துக் கிடந்த கதைகள், இப்போது தூண்களின் இடுக்குகளில் ஒளிய தொடங்கியிருக்கிறது. இப்படி எழுதப்படாத பல கதைகளை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன்.

மதுரை; இந்த நகரம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. துயரை தாங்கியிருக்கிறது. மிகப் பெரிய மனிதர்களை இடம் தெரியாமல் பந்தாடியிருக்கிறது. ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது.

3.bp.blogspot.com olQuWLD0Eog Vkx - 2026

இதுவரை ஒரு நகரை மையப்படுத்தி எந்த நாவலும் இல்லை. இதன் கதை மதுரை நகரைச் சுற்றி காட்டப்படும் கோட்டையில் இருந்து தொடங்குகிறது. கி.பி.1310-ல் அந்தக் கோட்டை கட்டப்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோயில் ஒற்றைக் கோபுரத்துடன் உயர்ந்து நிற்கிறது. அப்போது நாவல் தொடங்குகிறது.

நாவல் வளர வளர மீனாட்சியம்மன் கோயிலும் வளர்கிறது. மதுரையின் காவல் கோட்டமாக இருக்கும் இந்தக் கோட்டை தனக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் மீனாட்சியம்மன் கோயில் நான்கு ராஜகோபுரங்களுடன் உயர்ந்து நிற்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது.

3.bp.blogspot.com pu afWvPYk8 Vkx7Xwk0hPI AAAAAAAAGVc f0sVdpcxqBc s640 time to visit - 2026

கோட்டையின் அழிவை மட்டும் 40 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். மிகத்துயரமான நிகழ்வு அது. பொதுவாக கோட்டைகள் எல்லாமே வெளியில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும்தான் தாக்குதல்களை சந்தித்திருக்கும், ஆனால் மதுரைக் கோட்டை மட்டும் உள்ளுக்குள் இருந்து தன் சொந்த மக்களால் இடிக்கப்படுகிறது.

முதலில் ஒருவர் இருவராக வரத் தொடங்கியவர்கள், கடைசியில் அன்று மதுரை நகரில் வாழ்ந்த 42 ஆயிரம் மக்களும் சேர்ந்து எதிரிகளிடம் இருந்து தங்களை இவ்வளவு காலம் காத்து நின்ற கோட்டையை இடித்து தரைமட்டமாக்குகிரார்கள். அந்த சோகத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

2.bp.blogspot.com - 2026
கோட்டையின் எச்சம்

முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி விரிவாக பேசும் ஆய்வு நாவல் இதுதான். தென்னிந்தியாவை கொடூரமாகத் தாக்கிய தாது வருடப் பஞ்சம் மதுரையை மிக உக்கிரமாக தாக்கியது. அந்த பஞ்சத்தில்தான் மொத்த மக்கள்தொகையில் பாதி காணாமல் போனது. இதன்பின்தான் ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுகிறது.

இந்த நாவலில் 250 சிறுகதைகள் உள்ளன. அதில் 10 பக்கம் கொண்ட ஒரு சிறுகதைதான் ‘அரவான்’ திரைப்படம்.

1.bp.blogspot.com - 2026
அரவான்

சாகித்ய அகாடமி விருது படைப்பிலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. அது சரியான நேரத்தில் சரியான படைப்புக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது மேலும் என்னை எழுத தூண்டுகிறது.” என்று தனது நீண்ட உரையை முடித்தார் வெங்கடேசன்.

காவல் கோட்டத்தை நாவல் என்று சொல்வதைவிட வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். ஒன்றிரண்டு சம்பவங்களைத்தவிர அத்தனையும் உண்மையான பெயரில் நடந்த செய்திகளை மட்டுமே சொல்கிறது. மதுரையை பற்றிய 600 ஆண்டுக்கால வரலாற்றை முழுமையாக சொல்லும் ஆவணம் இது.

2.bp.blogspot.com - 2026

மேகமலை பயணம் 

 

 
பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை. திரும்பிய பக்கமெல்லாம் பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலைத் தோட்டங்கள். அதற்கிடையே அடைந்து கிடக்கும் நீர்த்தேக்கங்கள், இவையெல்லாம் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத இயற்கைக்குச் சொந்தமான காட்சிகள்.

2.bp.blogspot.com - 2026
சன்னாசி மொட்டை

இத்தனைக் காலம் தனியார் கைவசம் சிக்கியிருந்த இந்த அழகுப் பொக்கிஷ­த்தை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் 2009-ல் தமிழக அரசு திறந்துவிட்டது. அப்போது அறிவித்த புதிய சுற்றுலாத் தலங்களில் மேகமலையும் ஒன்று.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 29 கி.மீ. பயணித்தால் வருகிறது மேகமலை கிராமம். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி அடுத்த 20 கி.மீ. தேயிலைத் தோட்டம். இந்த மலைப் பாதையில் பயணிக்க தனி ‘தில்’ வேண்டும். குண்டும் குழியுமாய் இருக்கும் இந்தப் பாதையில் ‘காஸ்ட்லி’யான காரில் பயணம் செய்தாலும் கட்டை வண்டியில் போகும் அனுபவத்தையே கொடுக்கும். பாதையின் பெரும்பகுதி வனப் பகுதிக்குள் வளைய வருவதால், விலங்குகளின் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாதையில் புள்ளிமான் குறுக்கிட்டு மிரண்டு ஓடும். யானை மறியல் செய்து ‘சலாம்’ போடும். சிங்கவால் குரங்கு மரத்தில் தொங்கி சிரிக்கும். விலங்குகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்து திரிகிற வனப்பரப்பு இது.  சிங்கத்தைத் தவிர எல்லா விலங்குகளுமே இங்கு ஜீவனம்  செய்கின்றன.

1.bp.blogspot.com tL0P9OjQrQ0 VRv0OTJiXSI AAAAAAAADlk XekgmqIgJHM s1600 IMG 0159 - 2026
கொண்டை குருவி

600 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த வனப்பிரதேசம் மேகமலை வனச் சரணாலயமாக மாற்றம் பெற்றுள்ளது.  இதில் கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய்த் தோட்டங்கள் பரவிக் கிடக்கின்றன.
மேகமலை வெறும் மலை வாசஸ்தலம் மட்டுமல்ல. இங்கு டிரக்கிங், அனிமல் சைட்டிங் போன்ற மற்ற அம்சங்களும் ஏராளம். விலங்குகளைப் பார்ப்பதற்கு வட்டப்பாறை, போதப்புல்மேடு, சன்னாசி மொட்டை என்கிற ‘எலிபேண்ட் காரிடர்’ ஆகியவைகள் சிறந்த இடம். போதப் புல்மேட்டில் வரையாடுகள் அதிகம். ஐயப்பன் கோயில் சீஸனில் குன்னிக்காடுகளில் உள்ள யானைகள் மேகமலைப் பகுதிக்கு வந்துவிடுவதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு நிறைய யானைகளைப் பார்க்கலாம்.

4.bp.blogspot.com - 2026
தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள்

மலையேற நினைப்பவர்களுக்கு வசதியாக நிறைய டிரக்கிங் பாயிண்ட்டுகள் உள்ளன. ராஜபாளையம்-வெள்ளிமலை, ஸ்ரீவில்லி புத்தூர்-வெள்ளிமலை, மேகமலை-வெள்ளிமலை போன்ற 8 மணி நேர  மலையேற்றப் பாதைகளும், ஹைவேவீஸ்-வண்ணாத்திப்பாறை, இரவங்கலாறு-கிராஸ் ஹில் போன்ற 3 மணிநேர டிரெக்கிங்கும் உள்ளன. சாகஸப் பிரியர்களுக்கு இவையெல்லாம் சாதகமாய் உள்ளன.

மேகமலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ஹைவேவீஸ் உள்ளது.  தமிழில் இதை ‘பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். இதற்கு பசுமையான மலை என்று அர்த்தம். இங்கு இரண்டு அணைகள் உள்ளன.  இதுபோக மேலும் மூன்று அணை

2.bp.blogspot.com a qM6Qo3NnU VRv0a37ta3I AAAAAAAADl0 1 adDB DSWI s1600 IMG 0231 - 2026

களும் சேர்த்து சிறிது சிறிதாக மொத்தம் ஐந்து அணைகள் மேகமலையில் உள்ளன.  அணைகளின் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றாலும், தொலைவில் இருந்து பார்ப்பதே தனி அழகுதான். இங்குதான் மேகங்கள் நம்மை தழுவிச் செல்கின்றன. தூவாணம் கவர்ச்சிமிக்க அழகுப் பிரதேசங்களில் ஒன்று.

1.bp.blogspot.com 2 4KpHd6lhQ VRv0qlSNaqI AAAAAAAADl8 XVH 26B 928 s1600 IMG 0238 - 2026

இதனைக் கடந்து சற்று தொலைவில்
இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. அது மிக அற்புதமானது.  மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த நீரை அருந்தினால் வயிற்று வலி, தலை வலி, தலைச்சுற்றல் எல்லாம் பறந்தோடிவிடும் என்று இங்குள்ள மக்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

1.bp.blogspot.com gz2H gubqRQ VRv0sToQaTI AAAAAAAADmE sWH1rPw KBU s1600 IMG 0251 - 2026
தூவாணம் நீர்த்தேக்கம்

இரைச்சல் பாறையில் இருந்து வழியும் நீர்தான் அருவியாக கொட்டுகிறது.  இதுதான் சுருளியாறாகச் சென்று வைகை நதியில் கலக்கிறது.  மற்றொரு பகுதியில் விழும் அருவி நீர் தேக்கடி நீர்த்தேக்கத்துக்குப் போகிறது.  மேகமலையின் அழகுப் பிரதேசங்களில் இந்த அருவியும் ஒன்று. இதுபோக  ஹைவேவீஸ் டேம், பச்சைக் கூமாச்சி, தூவாணம் நீர்த்தேக்கம், மணலாறு பாலம், மணலாறு எஸ்டேட், மஹாராஜா மெட்டு, வட்டப்பாறை, போதப்புல் மேடு, கிராஸ் ஹில், சன்னாசி மொட்டை என்ற எல்லா இடங்களுமே அழகின் பொக்கிஷங்கள். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இனிய விருந்து.

2.bp.blogspot.com obZgNhPJYR0 VRv08sLHRvI AAAAAAAADmQ aSpocjbqP6M s1600 IMG 0266 - 2026
மணலாறு பாலம்

விலங்குகளைப் பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கும் பிச்சைக்கு மலையின் ஒவ்வொரு அங்குலமும் அத்துப்படி. விலங்குகள் எதிர்பட்டால்  எப்படி தப்பிக்க வேண்டும்? என்ற நுட்பத்தையும், அவற்றை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவைகளும் நம்மை ஒன்றும் செய்யாது என்றும், விலங்குகளின் மனநிலையை  கூறினார். சுற்றுலாப் பயணிகளை எல்லா இடங்களுக்கும்  அழைத்துச் சென்று விளக்கமுடன் சொல்கிறார்.

1.bp.blogspot.com hIf LrSPwPY VRv4gmS5EeI AAAAAAAADm4 PuB9YfHW2oY s1600 IMG 0287 - 2026
 பிச்சை

காடுகளுக்குள் காலாற நடக்க வேண்டும். வன விலங்குகளை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் இருந்து வந்திருந்தது ஒரு புதுமண ஜோடி ஹரிஹரன்-லாவண்யா. 10 வகையான புதிய பறவைகளை இங்கு பார்த்தோம் என்கிறார்கள். காட்டுக்குள் நடந்து போவதும் டிரக்கிங் செய்வதும் பிடித்தமானது என்கிறார் ஐடியில் வேலைப் பார்க்கும் லாவண்யா.

4.bp.blogspot.com JY541tRkZaA VRv0VPzz0HI AAAAAAAADls faX9k2yXTAc s1600 IMG 0177 - 2026
லாவண்யா – ஹரிஹரன் தம்பதி

மூன்று வருடத்திற்கு முன்புவரை இங்கு தங்குவதற்கு பயணியர் விடுதியைத் தவிர வேறு இடம் எதுவும் இல்லை.  இன்று சிவக்குமார் என்ற தனி நபரின் முயற்சியால் தகுதிக்கேற்ப தங்குமிடங்களை உருவாக்கியுள்ளார். மேகமலை அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக மாறியதில் இவரது பங்கு ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம். மேகமலை டாட் காம் மூலம் இதை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. ‘டூரிஸம் ஃபார் டுமாரோ’ என்ற அமைப்பைத் தொடங்கி வருங்கால சந்ததியினருக்கு  இயற்கையை மாசுப் படுத்தாத சுத்தமான சுற்றுலாத் தலங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார்.

4.bp.blogspot.com - 2026
மகாராஜா மெட்டு

மேகமலைக்கு தற்போது ஒரேயயாரு பாதைதான் உள்ளது. இதில் பஸ்ஸோ லாரியோ பிரேக் டவுண் ஆகி பாதியில் நின்றுவிட்டால் பாதை அடைபட்டுப் போகும். இதை நிவர்த்தி செய்ய மேகமலையில் இருந்து லோயர் கேம்ப் வரை செல்லும் பாதையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஹைவேவீஸ் சேர்மன் சுரேஷ். இந்தப் பாதையை சரிசெய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்க முடியும் என்கிறார்.
செயற்கைத்தனங்கள் நுழையாத இயற்கையை ரசிக்க விரும்புவர்களுக்கு மேகமலை மிக அற்புதமான பொக்கிஷம்!

மேகமலை பயணம் – 2

 
மேகமலைக்கு இரண்டு முறை பயணம் செய்திருக்கிறேன்.முதல் பயணம் 2009-ல். அப்போதுதான் தமிழக அரசு புதிதாக 18 சுற்றுலா தலங்களை அறிவித்திருந்தது. அதில் மேகமலையும் ஒன்று.

இந்த அறிவிப்பை பார்த்த நாளில் இருந்து அங்கு போக வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவல் தோன்றியது. மேகமலைக்கு தேனியில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. அவைகளும் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளும் என்று கேள்விப் பட்டேன். ஆக, பஸ் சரிப்பட்டு வராது.

அடுத்து என்னுடைய சாய்ஸ், டூ வீலர்தான். மதுரையிலிருந்து மேகமலை 150 கி.மீ  ஏற்கனவே கொடைக்கானலுக்கு டூ வீலரில் போன அனுபவம் இருந்ததால் தைரியமாக கிளம்பினேன். கூடவே எனது 10 வயது மகனும் இணைந்து கொண்டான்.

டூ வீலரோ காரோ எந்த வாகனமாக இருந்தாலும் நீண்ட தூரம் நானே ஓட்டிக்கொண்டு போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் காலை 5 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினோம்.

4.bp.blogspot.com - 2026
பாதையோர பசுமை 

அது அறுவடைக்கு முந்திய காலம். சாலையின் இருபக்கமும் பசுமையான வயல்கள் செழித்திருந்தன. அரும்பி நிற்கும் இளம் நெல்மணிகளின் பால் வாசம் பாதை எங்கும் பரவியிருந்தன. அதுவே எங்கள் பயணத்திற்கு புத்துணர்ச்சி தந்தது.

உசிலம்பட்டி வரை இருட்டுக்குள் பயணித்த எங்களுக்கு, அதன் பின் விடியலின் வெளிச்சமும் இதமான குளிரும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது.

1.bp.blogspot.com Q2f4QM Bzqc VSSLwVtYiLI AAAAAAAADrI BXeFLhN7odY s1600 IMG 0063 - 2026

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமை, அதன் நடுவே கருப்பு நிற தார்ச்சாலை வளைந்து நெளிந்து வசீகரமாக நீண்டு கொண்டே போனது. வாகனங்களற்ற சாலையில் பயணிப்பதும் தனி சுகம்தான். நமக்கு உணவளிக்கும் உழவர்கள் மட்டுமே காலையில் காய்கறியோடு டூ வீலரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

2.bp.blogspot.com - 2026

அடுத்ததாக  ஆண்டிப்பட்டி வந்தது. குளிரின் இதமான பிடியில் இருந்து எங்களை சற்று விலக்கிக் கொள்ள சூடான தேநீர் அருந்தினோம். மீண்டும் பயணம். தேனியை கடந்து வீரபாண்டி வந்ததும் வண்டியை நிறுத்தினோம்.

பாரதிராஜா படங்களில் அடிக்கடி தலை காட்டும் அந்த அழகிய இடம் எங்களை மேற்கொண்டு போகவிடாமல் கட்டிப் போட்டது. எத்தனை ‘லலலா..!’ பாடல்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன.

வைகையின் கிளை நதி அது. சிறிய தடுப்பணையை கடந்து நீள்வசத்தில் விழும் சிறிய நீர்வீழ்ச்சி போன்ற ரம்மியம். இளம் வெயில்… கண்ணாடி போல் தெளிந்த நீரோட்டம்… நம்மை கட்டிப் போட இயற்கைக்கு இது போதாதா..!

“சூப்பர இருக்குப்பா..! குளிக்கலாம்..!” என்றான் மகன்.

 ஆற்று நீரில் குளிப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. குளித்து முடித்தப் பின் நாம் ஓய்வெடுப்பதாக இருந்தால் தாரளமாக குளிக்கலாம். இல்லையென்றால் குளிக்க கூடாது. நம்மைப் போல் நகரத்தில் வாழும் மக்களுக்கு குளியலறையில் தண்ணீரை கண்டும் காணாமல் குளித்தே பழக்கம்.

2.bp.blogspot.com - 2026

தீடீரென்று பெரும் நீரோட்டத்தில் குளித்து முடித்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

3.bp.blogspot.com - 2026
நம்மவூரு வண்டி – சின்னமனூர் 

எனது முடிவை என் மகனும் அரை மனதுடன் ஒத்துக்கொண்டான். அடுத்து சின்னமனூர் வந்தது. காலை உணவை அங்கு முடித்துக் கொண்டோம். இனி பாதையில் எந்த பெரிய ஊரும் வராது. மலையும், மலைக் கிராமங்களும்தான் வந்து போகும்.

1.bp.blogspot.com bNy cL2YQRQ VSSdXzMXjgI AAAAAAAADt4 z2RY CrtmSc s1600 IMG 0085 - 2026
மேகமலை அடிவாரம்

3.bp.blogspot.com s4H7 72S3e0 VSSMEHhR0gI AAAAAAAADrw 1PAU55HddQQ s1600 IMG 0087 - 2026
வனத்துறை செக் போஸ்ட்

இங்கிருந்து 29 கி.மீ. பயணித்தால் மேகமலை வந்துவிடும். மலையின் அடிவாரத்தில் வனத்துறை செக் போஸ்ட் வருகிறது. அந்த இடத்தின் பெயர் தென்பழனி. அங்கு ஒரு முருகன்கோயில் உள்ளது. கட்டுச்சோறு கட்டி வருபவர்கள் இங்கு அமர்ந்து சாப்பிட நல்ல இடம்.

2.bp.blogspot.com oMQF7toBD0 VSSMJYhVfsI AAAAAAAADsA 7u8SN5x QNY s1600 IMG 0093 - 2026
தென்பழனி முருகன் கோயில்

அதனை கடந்ததும் மலைப் பாதைதான். மலை பாதையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஒரு செக் போஸ்ட் வந்தது. இது எஸ்டேட்டுக்கு சொந்தமானது. வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. கார்களுக்கு 100, டூ வீலர்களுக்கு 50 என்று கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். யார் நிர்ணயித்தது? என்ற சந்தேகம் வந்தது. அதையே அவர்களிடம் கேட்டேன். உடனே இலவசமாக என்னை அனுமதித்து விட்டார்கள். இப்போது அந்த செக் போஸ்ட் எடுக்கப்பட்டுவிட்டது.

3.bp.blogspot.com Taqfr4JyYFE VSSMNf7akOI AAAAAAAADsI PuItnfmMJzI s1600 IMG 0095 - 2026
எஸ்டேட் செக் போஸ்ட், இப்போது இல்லை

செக் போஸ்டை கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுக்கு அப்பால் பார்க்க முடியாது. அதனால் ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக திரும்ப வேண்டியிருந்தது.

4.bp.blogspot.com mJiLDfExZYE VSSMR rmwvI AAAAAAAADsU dTijEFN eMk s1600 IMG 0100 - 2026
எங்களை கடந்து சென்ற பஸ்

அப்படித்தான் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது ‘சடார்’ என்ற சத்தத்துடன் ஒரு மான் உயரத்திலிருந்து ரோட்டில் விழுந்து சரிவை நோக்கி ஓடி மறைந்தது. ஒரு எட்டடி முன்னால் வண்டி போயிருந்தால் அந்த மான் எங்கள் தலையில்தான் விழுந்திருக்கும். அப்படி நடந்திருந்தால்.. இப்படியொரு பதிவெழுத முடியாமல் போயிருக்கும்.

மனதுக்குள் லேசாக அச்சம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தோம். மற்றொரு வளைவில் திரும்பிய எங்களை மகிழ்ச்சியில் நிறுத்தி வைத்தன சிங்கவால் குரங்குகள்.

ரோட்டை மறித்து வரிசையாக அமர்ந்திருந்தன குரங்குகள். இயற்கையின் அழகிய பின்னணியில் பார்க்கும் போது அது அம்சமாக இருந்தது. வண்டியை ஓரங்கட்டி, என்ஜினை ஆப் செய்து, கேமரா பேக்கோடு குரங்குகளை நோக்கி முன்னேறினேன்.

கேமரா பேக்கை திறக்கும் சத்தம் அந்த அமைதியான இடத்தில் பெரும் ஓசையாக கேட்டது. அதுவரை எங்களை பார்க்காமல் இருந்த குரங்குகள் அந்த சத்தம் கேட்டு நொடியில் ஓடி மறைந்தன. நல்ல படம் மிஸ் ஆகிப்போனது.

1.bp.blogspot.com V7kMpd0jTzk VSSMUswXNBI AAAAAAAADsg CSqpC3bfg4o s1600 IMG 0107 - 2026
கொண்டைஊசி வளைவு 

மறுபடியும் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதுவரை நன்றாக இருந்த சாலை, இப்போது வேறு வடிவம் எடுத்திருந்தது. கற்கள் பெயர்ந்து சாலையின் மேல் துருத்திக்கொண்டு நின்றன. ஆங்காங்கே பள்ளம் வேறு. தார்ச்சாலை என்ற அடையாளத்தை அது முற்றிலுமாக இழந்திருந்தது.

செங்குத்தாக செல்லும் மேடான சாலையில் சரளைக்கற்கள் நிறைந்திருக்கும் பாதையில் பேலன்ஸ் செய்து வண்டி ஓட்டுவது சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது ஒருவித அச்சத்தை மனதில் தோற்றுவித்தது.

திடிரென்று சாலையில் யானையின் சாணம் குவியல் குவியலாக கிடந்தன. அதன் தன்மை சற்று நேரத்திற்கு முன்புதான் யானை அந்த பாதையில் நடந்து சென்றிருக்கிறது என்பதை உணர்த்தியது. அதுவும் ஒற்றை யானை.

காட்டில் சிங்கம் புலிகூட ஆபத்தான விலங்குகள் இல்லை. ஒற்றை யானை மிகவும் ஆபத்து நிறைந்தது. பேசாமல் திரும்பிவிடுவோமா..? என்ற கேள்வி எழுந்தது.

மகனோ விட்டபாடில்லை. “அப்பா! யானை எங்கேப்பா..? காணோம்..!” என்று ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நம்மூர் வீதிகளில் வலம் வரும் அமைதியான யானையைப் போலவே காட்டு யானையையும் நினைத்துக் கொண்டான்.

3.bp.blogspot.com ebh KUwb3mE VSSMX8UYG3I AAAAAAAADso DBYEsJBfa0 s1600 IMG 0140 - 2026

இது வனப் பகுதி என்பது தெரியும். ஆனால், கொடைக்கானல் போல் சாலையில் விலங்குகள் நடமாட்டம் இருக்காது என்று நம்பி மகனையும் கூட்டி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது புரிந்தது. சரி, யாரிடமாவது இதை பற்றி கேட்கலாம் என்றால் ஒரு மனித ஜாதியை கூட பார்க்க முடியவில்லை.

600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப் பிரதேசத்தை முதுமலை போல வன சரணாலயமாக மாற்றிட வேண்டும் என்ற கனவு வனத்துறைக்கு வெகு நாட்களாக இருந்தது. ஆனாலும் காலம் கை கூட வில்லை.

 
2.bp.blogspot.com coy247bjRmk VSSMRXuwuyI AAAAAAAADsQ CAIL9aY8PmE s1600 IMG 0102 - 2026
பசுமை பள்ளத்தாக்கு

அதற்குள் சுற்றுலாதுறை முந்திக்கொண்டு இந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்துவிட்டது. 600 கிலோமீட்டர் வனப்பரப்பில் கிட்டத்தட்ட 200 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய் எஸ்டேட்டுக்கள் நிறைந்திருக்கின்றன.

முன்பு ‘ப்ரூக் பாண்ட்’ நிறுவனம் தேயிலை எஸ்டேட்டுகளை நிர்வகித்து வந்தது. இப்போது உட்பிரையர் குருப், ஆனந்தா பிளான்டேஷன், பொன்சிவா பிளான்டேஷன், பீல்டுமேட் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் பொறுப்பில் இருக்கின்றன.

3.bp.blogspot.com hyLDuRKQ8qs VSSMd4QZ0iI AAAAAAAADtA OFWE8l3pf6A s1600 IMG 0204 - 2026
மழை நேரத்தில் வழுக்கும் மண் சாலை 

மேகமலை செல்லும் ரோடும் இவர்களுக்கு சொந்தமானது. ‘பரூக் பாண்ட்’ பொறுப்பில் மொத்த எஸ்டேட்டும் இருந்த போது அவர்கள் நன்றாக சாலையை பராமரித்திருக்கிறார்கள் . அதன் பின் 12 வருடமாக புதிதாக ரோடு போடவில்லை. அதனால்தான் ரோடுகள் ஜல்லிக்கற்களாக பெயர்ந்து குண்டும் குழியுமாக இருக்கின்றன.

இந்த மலைப் பாதை தனியாருக்கு சொந்தமானதல்ல. அது அரசுக்கு சொந்தமானது என்று கூறி எஸ்டேட் செக் போஸ்டை எடுக்க வைத்தவர் தேனி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் முத்துவீரன்தான்.

2.bp.blogspot.com - 2026
மேகமலை கிராமத்தில் சின்ன சர்ச்

ஒருவழியாக எங்களின் பைக் மேகமலை கிராமத்தை வந்தடைந்தது. இனி விலங்குகள் பயம் இல்லை என்று அங்கிருந்த ஒருவர் கூறினார். நான் எதிர்பார்த்தது போல் மேகமலை பெரிய ஊரக இல்லை. மிக சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய தேநீர் கடைதான் அதற்கான அடையாளமாக இருந்தது.

3.bp.blogspot.com XhgzaumK8eE VSSMftP0ewI AAAAAAAADtM aILwS JdS1A s1600 IMG 0217 - 2026
மேகமலை கிராமம்

நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம். இங்கிருந்து 12 கி.மீ. சென்றால் ஹைவேவீஸ் என்ற இடம் வருகிறது. இது ஒரு பேரூராட்சி. இங்கு ஹைவேவீஸ், கிளவுட் லேண்ட், மணலாறு என்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

1.bp.blogspot.com TCzwcnkoafo VSSMfhasH4I AAAAAAAADtI JgcFssYhqbI s1600 IMG 0218 - 2026
மேகமலை பஸ் ஸ்டாப்

இவற்றில் ஹைவேவீஸ் தான் பெரியது. இந்த இடத்தை ‘பச்சை கூமாச்சி’ என்று தமிழில் கூறுகிறார்கள். தமிழில் இதை சொன்னால் இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. இந்த பெயருக்கு பசுமையான மலை என்று பொருள். தேயிலை தோட்டம்தான் இப்படி பசுமையாக காட்சி அளிக்கிறது.

3.bp.blogspot.com KZRJ We623I VSSVQjqTRTI AAAAAAAADtg V9tgGIeq 0I s1600 IMG 0219 - 2026
மாரியம்மன் கோயில் மேகமலை

ஹைவேவீசில் இரண்டு அணைகள் உள்ளன. அவற்றை மேலணை மற்றும் கீழணை என்று அழைக்கிறார்கள். இது போக தூவாணம், மணலாறு, வெள்ளியாறு, இரவங்கலாறு என்று அடுத்தடுத்து நான்கு அணைகள் வருகின்றன.

1.bp.blogspot.com 27ZNopUaGzo VSSMYCR7L2I AAAAAAAADss gtFXiWUrb2s s1600 IMG 0189 - 2026
சாலையோரத்தில் ஒரு மலர்

இதில் விசேஷம் என்னவென்றால், அணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற வழி கிடையாது. சுற்றிலும் மலைகள், அணைகள் இருப்பதோ பள்ளத்தில்.. இதனால் தண்ணீரை அடுத்த அணைக்கு கொண்டு செல்ல, மலையை குடைந்து அதில் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். இதில் 10 கி.மீ. தூரம் தண்ணீரை கொண்டு சென்று இரவங்கலாறு அணையில் சேர்த்திருப்பது, ஒரு சாதனை! இயற்கைக்கு சவால் விடும் சிக்கலான வேலை இது.