Home Blog Page 5950

திருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்

 

 
கன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். படகுத் துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும் கடலின் மத்தியில் எழுந்து நிற்கும் அழகும் நமக்குள் இனம்புரியா ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். இவ்வளவு பெரிய சிலையை இங்கு வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் மனதில் எழும்.

3.bp.blogspot.com - 2026
படகு துறையிலிருந்து திருவள்ளுவர் சிலை 

திருவள்ளுவர் என்ற உடனே வரலாற்று ஆய்வாளரும் ‘ஆய்வுக் களஞ்சியம்’ மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன் என் நினைவில் வந்து நின்றார். திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளுவரைக் குறித்து கேட்டதுமே “வாங்க வள்ளுவர் பிறந்த ஊரைப் பார்த்து வருவோம்” என்று அவரது ஸ்கார்பியோவில் அழைத்துச் சென்றார்.

3.bp.blogspot.com tPyjUkoPtM VRQPwvmA4zI AAAAAAAADe4 JDfP3Yp3T3U s1600 IMG 0746 - 2026
கரை கண்டேஸ்வரர் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் அந்தக் கிராமம் இருந்தது. அதன் பெயர் திருநாயனார்குறிச்சி. எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருந்தது.  அங்கிருக்கும் கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன் எங்களது கார் நின்றது.

 

“இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்” என்றார்.

 

வள்ளுவர் பிறந்த அந்த புனிதமான மண்ணில் கால் பதிக்கிறோம். மனதுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு முழுவதுமாக ஆட்கொள்கிறது. பின் காலாற கிராமத்து தெருக்களில் நடந்தோம். பசுமை பூத்துக் குலுங்கும் வயல்களுக்குள் உலாவினோம். மனம் முழுவதும்  வள்ளுவர் பற்றிய பெருமிதம் தொற்றிக் கொண்டிருந்த நேரம்.  அதே வேளை என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியையும் பத்மநாபன் சாரிடம் நேரடியாகவே கேட்டேன்.

 
2.bp.blogspot.com FCuOMECRM2A VRQP3uylDDI AAAAAAAADfM Uy5uRiCNBU4 s1600 IMG 2721 - 2026
பளிங்கினால் ஆனா யானை சிற்பம் – விவேகனத்தர் பாறை 

“வள்ளுவர் இங்குதான் பிறந்தார்! என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ” என்று கேட்டேன்.

“நிறைய ஆதாரங்கள் இருந்ததால்தான் மூன்று முதல்வர்களிடம் இதைப்பற்றி என்னால் பேசமுடிந்தது.  எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் எனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது ‘திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்’  என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன்.  பின் அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது.  ஆதாரங்களோடு நான் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம்  தங்கி, மயிலாப்பூர் சென்று மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்கள் உள்ளன. ‘இன்னைக்கு ஒரே மடியா இருக்கு’ என்பது சாதாரண பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான்  கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும் வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.  மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள்.  குமரி மாவட்டத்தில்வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்.’ அப்பா வரும்’, ‘அம்மா பேசும்’, ‘மாமா முடிக்கும்’ இப்படி பல. இதை  அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்’  இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன்  என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றது.

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி  உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர் ‘நொடி புழுதி கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்’ என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை‘வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று’ என்று குறிப்பிடுகிறார். இத்தகைய  தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றையெல்லாம்விட ஓர் அரிய சான்றினை கூறுகிறேன்.  இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. ‘வரைவின் மகளிர்’ என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார்.  ‘பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று’ என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி” என்றார் உறுதியான குரலில் பத்மநாபன்.

4.bp.blogspot.com PGvWXIEbkbM VRQPqWCUmcI AAAAAAAADew BkBgUR38104 s1600 IMG 0800 - 2026
 வள்ளுவன் கல் பொற்றை

திருநாயனார் குறிச்சியை வலம் வந்த நாங்கள் அடுத்து சென்றது, வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு.எங்களுடன் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.  தடிக்காரங்கோணம்  அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி இளைப்பாறிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

1.bp.blogspot.com 9SUL 1DRFRg VRQbeKz 5AI AAAAAAAADhI CikBGiiKWR8 s1600 payanm - 2026
வள்ளுவன் கல் பொற்றையில் டாக்டர் பத்மநாபன், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோருடன் நான்

சிறிய மலையின் மீது ஏறிய எங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. எங்களுக்கு எதிரில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருந்தது. “அதுதான் வள்ளுவன் கல்பொற்றை”  என்றார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் ‘வள்ளுவர் பாதம்’ என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். திருவள்ளுவர் சிலை இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்லி முடித்தார்.

திருவள்ளுவர் பிறந்த ஊரான திருநாயனார் குறிச்சியும், அவர் மலைவாழ் மக்களோடு ஓய்வெடுத்த வள்ளுவன் கல் பொற்றை இரண்டு இடங்களையும் பத்மநாபன் சாரின் துணையோடு பார்த்தப்பின் எனது பயணம் கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.

4.bp.blogspot.com bFZZO9w47h4 VRQQL0OSj5I AAAAAAAADgE w d6Fyk7wD4 s1600 IMG 2771 - 2026
விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரி என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது விவேகானந்தர் பாறை.  இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறிய பாறைத் தீவில் விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டுள்ளது.  1892-ல் சுவாமி விவேகானந்தர் இங்கு நீந்தி வந்து தவம் புரிந்திருக்கிறார் என்றும்,  அதன் நினைவாகவே விவேகானந்தர் பாறை உருவாகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மிகப் பெரிய தேசிய சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை ஏக்நாத் ரானடே என்ற தனி மனிதரின் தன்னிகரில்லா உழைப்பின் வெளிப்பாடு.  முதலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலை நடைபெறும் போதே பிரச்சினை கிளம்பியது. கிறிஸ்துவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குமரியில் புனித சவேரியருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதற்காக மிகப் பெரிய சிலுவை ஒன்றைக் கொண்டு போய் அங்கு  வைத்தார்கள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது. அதில் இந்தப் பாறை விவேகானந்தர்  பாறைதான் என்று தீர்ப்பு வந்தது.  இரவோடு இரவாக சிலுவையை எடுத்துச் சென்றனர். அதே வேளையில் கலவர சூழ்நிலை உருவானது. அதன்பின் பாறை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் நுழை முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.

3.bp.blogspot.com rbXPkLtyy0c VRQP GifgkI AAAAAAAADfg 99O4kWY5gRw s1600 IMG 2739 - 2026
தியான மண்டபம்

1963ல் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் சிறிய நினைவகம் கட்டுவதற்கு அனுமதி தந்தார். மத்திய அரசின் பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து ஹூமாயூன் கபீர் நினைவுச் சின்னம் அமைத்தால் பாறையின் இயற்கை அழகு போய்விடும் என்று அனுமதி மறுத்தார். இனி வேறு வழியில்லை, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தால் மட்டுமே நினைவகம் எழுப்ப முடியும் என்ற நிலை.

டெல்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டு 323 எம்பிக்களின் கையெழுத்தை விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக வாங்கினார் ஏக்னாத்.  ஆனால் 15 அடிக்கு 15 அடி என்ற மிகக் சிறிய அளவில் கட்டுவதற்கு மட்டுமே பக்தவச்சலம் அனுமதி தந்தார்.  அதையும் கடந்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிதி, பொதுமக்களின் நிதியோடு கட்டுமானப் பணியைத் தொடங்கியது.  6 வருடங்களாக உருவான நினைவகம் 1970-ல் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

3.bp.blogspot.com wp3TKOb7GKY VRQQNgG7XMI AAAAAAAADgQ b9FELfQQyp4 s1600 IMG 2772 - 2026

ஆறு அறைகள் கொண்ட தியான மண்டபம் ஒன்றும், விவேகானந்தர் நின்ற நிலையில் ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்ட சபா மண்டபமும், முக மண்டபமும் அமைக்கப்பட்டன.  இந்தப் பாறையில் குமரி பகவதியம்மன் ஒற்றைகாலில் நின்று தவம் செய்ததாக ஒரு ஐதீகம்  உண்டு. அந்த பாதச் சுவடு பாறையில் இருப்பதால் அதற்கென்று ஸ்ரீ பாத மண்டபம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.

1.bp.blogspot.com guF9atX58us VRQcmAk EvI AAAAAAAADhU P aQ9DmLAkU s1600 IMG 2789 - 2026

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து உண்டு. தமிழ்நாடு அரசு பூம்புகார் போக்குவரத்துக் கழகம் இவற்றை இயக்கி வருகிறது. இதற்கு இரண்டு வித கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.  சாதாரணக் கட்டணம் ரூ.34. (சிறப்புக் கட்டணம் ரூ.169). இதில் ரூ.29 படகுக்கான கட்டணமாகவும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கான கட்டணமாகவும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள். இதுபோக விவேகானந்தர் பாறைக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 விவேகானந்தா கேந்தரா மூலம் வசூலிக்கப்படுகிறது.

1970ல் செப்டம்பர் 2-ல் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி இதனை திறந்து வைத்தார்.  5 வருடம் கழித்து 1975ல் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கும் பெரிய பாறைக்கு அருகில் உள்ள சிறிய பாறையில் 8  அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை எழுப்ப வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஏக்நாத் ரானடே ஒரு கடிதம் எழுதினார்.  1976ல் சட்டமன்றத்தில் திருவள்ளுவருக்கு 30 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.  1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார்.  அதன்பின் எந்த வேலையும் நடைபெறவில்லை. மீண்டும் 1990-ல் பணி தொடங்கப்பட்டது. 10 வருடமாக கட்டுமானப் பணி முடிந்து 1.1.2000-த்தில் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.

3.bp.blogspot.com qB9Kymr dIc VRQQFhqb bI AAAAAAAADf4 623mrV0IgY8 s1600 IMG 2756 - 2026

திருவள்ளுவர் சிலை செய்யும் பணி கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கராபுரம் ஆகிய  மூன்று இடங்களில் நடைபெற்றது.  அம்பாசமுத்திரத்தில் இருந்து 5,000 டன் கற்களும், சங்கராபுரத்தில் இருந்து 2,000 டன் உயர்வகை கிரானைட்  கற்களும் கொண்டு உருவாக்கப்பட்டது.   மொத்தம் 3,681 பெரிய கற்களால்  சிலை வடிவமைக்கப்பட்டது.  இதில் 15 டன் வரை கனமான கற்களும்  உள்ளன.  பெரும்பான்மையான  கற்கள்  3 முதல் 8 டன் எடை கொண்டதாக இருந்தன. கற்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 18,000 துளைகள் போடப்பட்டுள்ளன.  இது பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்றது.  உலகத்திலேயே வேறு எங்கும் இப்படியொரு கருங்கல் சிலை அமைக்கப்படவில்லை.

2.bp.blogspot.com fHZ3WePrxUw VRQQLrz YOI AAAAAAAADgA LpjIXMgb3Bo s1600 IMG 2768 - 2026

பீடம் 38 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அது திருவள்ளுவர் கூறும் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை பொருட்பால்  இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையின் மீது 133 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சிலையின் மொத்த எடை 7,000  டன், இதில் சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை 1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன், முகம் 10 அடி உயரமும், தோள்பட்டை அகலம் 30 அடியும் கொண்ட இந்த பிரமாண்ட சிலை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலை இருக்கும் சிறிய பாறைக்கும் இடையே 200 அடி இடைவெளிதான் உள்ளது. இந்த இரண்டு சிறு தீவுகளையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் நெடுநாளைய விருப்பம். இணைப்பு பாலம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து திருவள்ளுவர் பாறைக்கும் படகில் போகவேண்டியுள்ளது.

4.bp.blogspot.com Gjko13WEmFM VRQQSWj D I AAAAAAAADgg qV3KugIw1b8 s1600 IMG 2784 - 2026

தென் பகுதியில் உள்ள இந்தியாவின் கடைசி நிலத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இரண்டு தத்துவ ஞானிகளின் நினைவாக நினைவுச் சின்னங்கள் அமைந்திருப்பது நம் எல்லோருக்கும் பெருமையே…!

3.bp.blogspot.com - 2026

 

மஹாராஜாவாக வாழுங்கள்

 

 
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என்று பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும்…. ராஜாக்கள் வாழ்வே தனிதான். டாம்பீகமும், படோடபமும் நிறைந்த அந்த வாழ்வை சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே முடியாது. அதை உணரச் செய்வதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸின் நோக்கம். எட்டு நாட்கள் சுற்றுலாவில் உங்களை பாரம்பரியம் மிக்க ராஜாவின் வாழ்க்கையை நிஜத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

1.bp.blogspot.com 1jQDvD ARxc VRZpGjHCqHI AAAAAAAADiY d6vMHTi88g s1600 maharaja - 2026
இதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸ்

2010-ல் ‘இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரே­ஷனும்’, ‘காக்ஸ் அண்ட் கிங்ஸ் இந்தியா’வும் இணைந்து மேற்கொண்டதே இந்த ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சுற்றுலா. இன்றைக்கு இது உலகிலேயே மிக உயர்ந்த ஆடம்பர ரயில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ரயிலில் ‘பிரஸிடென்ஷியல் சூட்’ என்ற ஸ்டார் ஹோட்டல் சமாச்சாரங்களையெல்லாம் கொண்டு வந்தது இதில்தான்.

இந்த எக்ஸ்பிரஸில் மொத்தம் 23 கேரேஜ் இருக்கும். அதில் சுற்றுலா பயணிகளாக வரும் மஹாராஜாக்கள் தங்குவதற்கென்று 14 கேரேஜூக்கள் இருக்கின்றன. சாதாரணமாக 23 பெட்டிகள் கொண்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர் என்ற விகிதத்தில் 1,656 பேர் பயணிக்க முடியும். ஆனால் இந்த எக்ஸ்பிரசில் வெறும் 88 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இந்த 88 பேரிடம் 1656 பயணிகளின் கட்டணத்தையும் வசூலித்து விடுகிறார்கள். இப்போது புரிகிறதா இதன் பயணக்கட்டணம் ஏன் காஸ்ட்லியாக இருக்கிறது என்று. பிரஸிடென்ஷியல் சூட் டுக்காகவே தனியாக ஒரு கேரேஜ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோக டைனிங், பார், லாஞ்ச், ஜெனரேட்டர், ஸ்டோர், தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையம் என்று பலவும் மற்ற கேரேஜ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

4.bp.blogspot.com - 2026
சிவப்பு கம்பள வரவேற்பு, பிளாட்பாரத்தில் தெரிகிறதா..!

பயணிகள் தங்கும் 14 கேரேஜிலும் 43 தனித்தனி கேபின்கள் உள்ளன. இதில்தான் 88 விருந்தினர்கள் தங்குகிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அத்தனையும் இந்த நகரும் அரண்மனையில் உள்ளது.

4.bp.blogspot.com 91Y35FzqtMI VRZo JY51MI AAAAAAAADh8 O lastVCFWM s1600 23 - 2026
‘மயூர் மஹால்’

இருக்கைகள், படுக்கைகள், எல்லாமே அரண்மனை வடிவத்திலே அமைந்துள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் பற்றிய விவரங்கள் வழிகாட்டிகள் மூலம் தெளிவாக அறியலாம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளை அதிகம் கொண்ட சுற்றுலா திட்டம் இது. வனவிலங்குகளை ரசிக்க நே­னல் பார்க்குகளும் உள்ளன. உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும், இந்தியர்களின் சிறப்பு அம்சமான விருந்தோம்பலும் இந்த பயணத்தின் சிறப்பு.

இவையெல்லாம் ராஜாக்கள் காலத்து பழக்க வழக்கங்களாகவே உள்ளனவே. நவீன வசதிகள் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு…ஏன் இல்லை? என்ற பதிலைத்தான் மஹாராஜா எக்ஸ்பிரஸ் தருகிறது. உடைமாற்ற தாராளமான இடம், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்றபடி ஏஸியை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, இலவச வை-ஃபை, இன்டர்நெட் இணைப்பு, எலெக்ட்ரானிக் ஸ்மோக் டிடெக்ஷ­ன் சிஸ்டம், லைவ் டெலிவிஷ­ன், சிசிடிவி கேமரா, டைரக்ட் இண்டர்நே­னல் டயல் டெலிபோன், அட்டாச்டு பாத்ரூம், அவசர உதவிக்கு ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் வசதி போன்ற எல்லாமே இதில் இருக்கிறது. மஹாராஜாவில் ஏறியது முதல் பயணம் முடிந்து இறங்கும் வரை சுற்றுலாப்பயணிகளை தலைமேல் வைத்து தாங்குகிறார்கள் இதன் பொறுப்பாளர்கள்.

4.bp.blogspot.com HIbjfFNj3B8 VRZo b ImyI AAAAAAAADiA SFf54IJPw8 s1600 3 - 2026
ஓடும் ரயிலில் அரட்டை

இந்த எக்ஸ்பிரஸில் இரண்டு டைனிங் கேரேஜ்கள் உண்டு. ஒன்றின் பெயர் ‘ரங் மஹால்’. அதாவது வண்ணங்களின் அரண்மனை, மற்றொன்று ‘மயூர் மஹால்’. அதாவது மயில் அரண்மனை. இங்கு உணவும் ராஜ மரியாதையோடு பரிமாறப்படுகிறது. இந்த ரயிலில் சாகஸத்திற்கும், சீரிய பண்புகளுக்கும், காதலுக்கும் இடமுண்டு. தேனிலவு தம்பதிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் சுற்றுலா இது.

1.bp.blogspot.com - 2026
உணவகம்

மஹாராஜா எக்ஸ்பிரஸ் 5 வகையான சுற்றுலாக்களை நடத்துகிறது. அதில் முதன்மையானது ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா! 8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா மும்பையில் தொடங்கி அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரத்தம்பூர், ஆக்ரா வழியாக டெல்லியில் முடிகிறது.

4.bp.blogspot.com vzTPvVF02mI VRZpGcTG gI AAAAAAAADiU Ft RpBNgWPc s1600 presidential suite - 2026
ஒவ்வொரு ரூமுக்குமான வரவேற்பு அறை

அஜந்தா குகை, ராஜஸ்தான் அரண்மனைகள், கோட்டைகள், தாஜ்மஹால், யானைகளின் போலோ விளையாட்டு, சைட் ஸீயிங் டூர், ஸ்பா போன்றவையும் இதில் உள்ளன. மொத்தத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும், எட்டு நாட்கள் மஹாராஜா வாழ்க்கையையும் தரும் சுற்றுலா இது. வாழ்நாளில் ஒருமுறையாவது போய்வர வேண்டிய சுற்றுலா இது.

—————————————————————————————————————-
‘ஹெரிடேஜ் ஆப் இந்தியா’ என்ற இந்த எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கான கட்டணங்கள் கீழே தந்துள்ளேன்.
மொத்தம் நான்கு வகையான கட்டணங்கள் உண்டு.
—————————————————————————————————————–
டீலக்ஸ் கேபின்
 ரூ.2,00,138 (10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம்.
 இதுவே பெரிவவர்களுக்கு ரூ.4,60,276.

ஜூனியர் சூட்
ரூ.2,89,674 (குழந்தைகளுக்கு)
ரூ. 5,78,762. (பெரியவர்களுக்கு)

சூட்
 ரூ.4,03,788 (குழந்தைகளுக்கு)
ரூ.8,07,576 (பெரியவர்களுக்கு)

பிரசிடென்ஸியல்  சூட்
ரூ.6,96,388 (குழந்தைகளுக்கு)
ரூ.13,86,924. (பெரியவர்களுக்கு)

ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி

 

 
உலகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள்  வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த ‘பெண்ணின் மொழி’.

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.

4.bp.blogspot.com xxKyS2Y qKo VRg - 2026
நுஷு எழுத்துக்கள்

 சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட  தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு ‘நுஷு’ என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் ‘பெண்ணின் எழுத்து’ என்று அர்த்தம்.

தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.

3.bp.blogspot.com 3acQ8HLYro0 VRhCI3VlUCI AAAAAAAADjU S99mK3 lYlo s1600 tumblr mbotq8nQX31ryfivao1 1280 - 2026

சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ‘நுஷு’ எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.

4.bp.blogspot.com Ixo56NmW1gM VRg XkIyoeI AAAAAAAADjA cEgxef0VEzc s1600 NuShu VHC 4550 - 2026
விசிறியில் நுஷு எழுத்துக்கள்

பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.  

தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று.  யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.

பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து  ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! அதனால் தான் சீன ஒரு வித்தியாசமான நாடு.

உயிர் எங்கே..? பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

 

 
நம் காதல் காவியங்களில் எல்லாம் காதலன் காதலியிடம் நீதான் என் உயிர் என்பான். மாயஜால கதைகளில் ஏழு கடல், ஏழு மலை கடந்து தனது உயிரை கூண்டில் இருக்கும் கிளியின் உடலில் அரக்கன் வைத்திருப்பான்.

உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா? நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி வைத்துகொள்ள முடியுமா?

உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக்கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? மற்ற உயிரினங்களிடம் எங்கிருக்கிறது? என்பது சிதம்பர ரகசியம் போல் விஞ்ஞானத்துக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

சுவாசிப்பதும், இதயத் துடிப்பும்தான் உயிர் என்றால் அது தவறு. அவைகளெல்லாம் வெறும் செயல்பாடுகள் தானே தவிர உயிர் இல்லை. இதயமும் நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல்தான். சுற்ற வைப்பது எது? இதுதான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.

இதயமும் நுரையீரலும் தான் உயிர் என்றல் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வென்னீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று எதுவும் இல்லை என சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

உயிர் இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவேதான் அறிவியல் அது எங்கிருக்கிறது என்று துருவித்துருவி தேடத் தொடங்கியது. கடைசியாக உயிரின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.

2.bp.blogspot.com mspKDMmHzVE VRrg5QTrZLI AAAAAAAADj0 f2XWI6vAY64 s1600 Soul Resonance Souls - 2026

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இதுதான். உயிர் என்பது நமது உடலில் இருக்கும் செல்களில்தான் ஒளிந்திருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்கிற நீயூக்ளியசில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நீயூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த டி.என்.ஏ.-வை விரித்தால் 5 அடி நீளம் நீளும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில்தான் ஜீன்கள் உள்ளன.

ஜீன்கள்தான் நாம் கருவாக உருவாகும்போது நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கொண்டு வந்து நம்மிடம் சேர்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில்தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

‘கியூமன் ஜீனோம்’ என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களில் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாகப் பிரித்து தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்துவிடும். அப்போது உயிரை செயற்கையாகக் கூட உருவாக்கிவிடுவான்.

எனவே நமது உயிர் நமது செல்களில் உள்ள ஜீன்களில்தான் இருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான்.

அதனால் சிகரெட், மது போன்ற செல்களை பாழ்படுத்தும் பழக்கங்களை
விட்டொளிப்பதுதான் நம் உயிருக்கு நாம் செய்யும் மரியாதை..!

பசுவை காமதேனுவாக மாற்றிய போகர்

 

 
அந்த இடம் முழுவதும் கமகமவென்று வாசனை திரவியங்களின் மனத்தோடு, வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அது பிராமணர்கள் ஒன்று கூடி நடத்திக் கொண்டிருக்கும் வேத யாகம். வேதங்கள் ஓதிக் கொண்டிருக்கும் பிராமணர்களை நோக்கி பிசுக்கேறிய பரட்டைத்தலையும், குளிக்காத அழுக்கடைந்த உடலும், கோவனம் மட்டுமே உடையாக கொண்ட ஒருவர் வந்தார்.

ஊரெல்லாம் இப்படி அலைந்து திரிந்ததால் அவருக்கு நாவறண்டு தாகம் ஏற்பட்டது. தாகத்தை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு அங்கு வந்தார். வேதம் ஓதும் அவர்களை பார்த்து “அய்யா! ரொம்ப தூரம் நடந்து வந்து விட்டேன். ஒரே களைப்பாக இருக்கிறது. தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்றார்.

தோற்றத்தைக் கண்டு எடைபோடும் உலகம்தானே இது. அதற்கு அந்த பிராமணர்களும் விதிவிலக்கல்ல. “வேதம் ஓதும் எங்களைப் பார்த்து அழுக்கான உடலோடு எப்படியடா தண்ணீர் கேட்டாய்?” என்று அந்த அந்தணர்கள் அவரை விரட்டினர்.

மனம் நொந்து போன அந்த மனிதர், அந்த வழியாக சென்ற ஒரு பூனையைப் பிடித்து அதன் காதில் ஏதோ சொன்னார். உடனே அந்த பூனை ஒரு வீட்டுத்தின்னையில் அமர்ந்து , அற்புதமான குரலில் வேதம் ஓதியது. உடனே வந்தவர் யாரென்று அவர்களுக்கு புரிந்து விட்டது. ‘எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டோம்!’ என்று கூறி எல்லோரும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். “எழுந்திருங்கள்… அனைவரையும் மன்னித்தோம்!” என்றார் அவர்.

அழுக்கு உடையுடன் பரதேசி போல வந்த அவர், சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்ற போகர்.

“சுவாமி! தங்கள் சர்வ சக்தியும் பெற்ற போகர் என்பதை அறிந்தோம். தங்கள் பாதம் படவே நாங்கள் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். எங்களை கடுமையான வறுமை வாட்டி எடுக்கிறது. நாங்கள் மரணத்தை எதிர் நோக்கி இருக்கிறோம். அந்த வேதனையில் இருந்து விடுபடவே வேதம் ஓதிக் கொண்டிருக்கிறோம்!” என்றனர்.

போகர் மெலிதாக புன்னகைத்தார்.

இந்த மரணம்தான் மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது? இறவாமை என்ற ஞானம் பெற்றவர் போகர்.

“சுவாமி! தாங்கள் தான் எங்கள் வறுமையை போக்கி எங்களை உயிர்ப்பிக்க வேண்டும்” என்று கெஞ்சினர்.

அதற்கு போகரும் “அப்படியே ஆகட்டும். எல்லோரும் அவரவர் வீட்டில் இருக்கும் உலோகப் பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார்.

எல்லோரும் போகர் ஏதோ அற்புதம் நிகழ்த்த போகிறார் என்று உடனே பண்ட பாத்திரங்களையெல்லாம் கொண்டு வந்தனர். போகர் அந்த பாத்திரங்கள் மீது விராட்டிகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தார்.

சற்று நேரத்தில் பாத்திரங்கள் எல்லாம் பழுக்க காய்ந்து செங்காந்தலாய் இருந்தது. அப்போது இரும்பு கயிற்றில் தொங்கிய குப்பியில் வைத்திருந்த ஆதிரசத்தை எடுத்து சில துளிகள்  அவற்றின் மீது தெளித்தார்.

2.bp.blogspot.com gdcGp975 II VM7ob3EEWKI AAAAAAAAC9k enSep2fngLg s1600 IMG 20150202 081048 1 - 2026

என்ன ஒரு ஆச்சர்யம்..! அந்த பாத்திரங்கள் எல்லாம் சொக்கத் தங்கமாக மாறின. தங்கத்தைக் கண்ட அனைவரும் ஆனந்த கூத்தாடினர். தீராத வறுமை யெல்லாம் தீர்ந்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. பொன்னாக மாறிய பாத்திரங்களை அவர்களிடமே கொடுத்து விட்டு சென்றார் போகர்.

அகத்தியரின் முக்கியமான சீடரான போகர் இனத்தால் சீனர் என்று சொல்லப்படுகிறது. இவர் ரசகுளிகையின் மகத்துவம் தெரிந்தவர். ரசகுளிகையின் ஆற்றல் கண்டு வியந்தவர். இப்படி போற்றப் பெற்ற ஆதிரசம் பற்றி எல்லா சித்தர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

மனதில் நினைத்ததை முடிக்கும் விதமாக தன்னிடம் இருந்த குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டார். மற்றொன்றை கையில் வைத்துக் கொண்டார். ஆகாய மார்க்கமாக பறந்து சென்றார். அந்த குளிகை ஆதிரசம் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆதிரசத்தை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதை தேடி ரோமாபுரிக்கு போகர் பறந்து கொண்டிருந்தார். கடல்களைக் கடந்து ரோமாபுரி நகருக்கு வந்த போகர் தென்புறமாக இருந்த ஆதிரசக் கிணற்றைப் பார்த்தார்.

ஆதிரசக் கிணறு அற்புத சக்திகளைக் கொண்டது. அதன் ஆற்றல் தெரியாமல் அதில் இறங்கினால் அவ்வளவுதான். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் ஆதிரசத்தை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிவபெருமான் கட்டளைப்படி இரவும் பகலும் அரக்கர்கள் காவல் இருந்தனர்.

போகர் மரணத்தை வென்றவர் ஆயிற்றே..?!

தன்னிடமுள்ள ரசகுளிகையின் சக்தியால் அசுரர்கள் கண்களுக்குப் புலப்படாமல் சென்று, ஒரு தேங்காய் குடுக்கையில் ஆதிரசத்தை எடுக்க முயன்றார். அந்த ஆதிரசம் என்னவோ தேங்காய் குடுக்கையில் சிக்காமல் பின்னால் நகர்ந்து கொண்டு போனது.

உடனே போகர் தனது தாயையும் அதன் பின் சிவ பெருமானையும் தியானித்து, தம்பன மந்திரத்தை கூறினார். மந்திரம் உச்சரிக்கப்பட்டவுடனே பின்னால் நகர்ந்து கொண்டிருந்த ஆதிரசம் ஓரே இடத்தில் நின்றது. அதை தேங்காய் குடுக்கையில் முழுவதுமாக நிரப்பிக் கொண்ட போகர் மீண்டும் ஆகாய வழியே பறந்தார்.

அப்போது வானில் காவல் நின்றிருந்த அசுரர்கள் அவரைத் தடுத்தனர். போகருக்கு பொல்லாத கோபம் வந்தது. “என்னை யார் என்று நினைத்தீர்கள் ? நான் திருமூலரின் பேரன். இந்த ஆதிரசத்தை குளிகை செய்வதற்காக எடுத்துப் போகிறேன். நான் சபித்தால் நீங்கள் கல்லாய் போய்விடுவீர்கள் . ஜாக்கிரதை!” என்றார்.

அரக்கர்கள் இவரது மிரட்டலை கண்டு கொள்ளவில்லை எல்லோரும் போகரை சூழ்ந்து நின்றனர். போகர் தமது மந்திரத்தால் கொடிய அரக்கர்களை சாதுக்களாக மாற்றினார். அப்போதும் அவர்களுக்கு போகர் மீது ஒரு சந்தேகப் பார்வை இருந்து கொண்டே இருந்தது.

“போகரே, நீர் திருமூலரின் பேரன் என்றால் தங்களிடம் இருக்கும் குளிகையின் சக்தியை எங்களுக்கு காட்டுங்கள்.பார்க்கலாம்!” என்றனர்.

போகர் தனது கையில் வைத்திருந்த குளிகையை கடலில் போட்டார். குளிகை கொஞ்ச நேரத்தில் கடல் நீரை முழுவதுமாக குடித்து விட்டது. கடல் இருந்த இடம் படிகப்பொரிய பள்ளமாக காட்சி தந்தது. இதைக் கண்டதும் அவர்கள் மிரண்டு விட்டனர்.

“ஐயா! முனிவர் பெருமானே, உங்கள் சக்தியை அறிந்தோம். குளிகையின் மகிமையையும் அறிந்தோம். தயவு செய்து கடலை மீண்டும் உள்ளடக்கி விடுங்கள். சிவ பெருமானுக்கு இது தெரிந்தால் எங்களை பொசுக்கி விடுவார்” என்று கதறினர்.

போகரும் தன்னிடம் இருந்த இன்னொரு குளிகையைக் கயிற்றில் கட்டி சங்கிலியில் கோர்த்து குளிகையை நோக்கி எறிந்தார். உடனே அந்த குளிகை தன்னில் இருந்த கடல் நீரையெல்லாம் வெளியிட்டது. திரும்பவும் அந்த இரண்டு குளிகையும் போகரிடமே வந்து சேர்ந்தது.

சித்தர்கள் எப்போதுமே சித்தர்களையும் ரசவாதம் மற்றும் மூலிகை ரகசியங்களையும் யாருக்கும் தெரியாமல் கட்டி காக்க வேண்டும் என்பது முதன்மைச் சித்தரான சிவ பெருமானின் கட்டளை. இதை எல்லா சித்தர்களுமே கடைபிடித்து வந்தனர். ஆனால் போகர் மட்டும் இதில் விதி விலக்காக இருந்தார். அவருக்கு இந்த ரகசிய சந்தேகங்களில் எல்லாம் நம்பிக்கையில்லை சித்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக கொண்டுவர வேண்டும் என்பத போகரின் விருப்பம். அதற்கு ஏற்ப அவர் நடந்து கொண்டார்.

ஒருநாள் இப்படித்தான் போகர் பொதிகை மலைச்சாரலில் கணங்க மரத்தடியில் இருந்தார், அப்போது காட்டில் ஒரு பசு ஒன்று தனியாக மேய்ந்து கொண்டு இருந்தது, அப்போது ஒரு புலி ஒன்று அங்கு வந்தது, தனியாக மேயும் பசுவைத் பார்த்ததும் புலிக்கு பசுவை உணவாக்க வேண்டும் எண்ணம் தோன்றியது, அது ஒரு சினைப்பசு, புலி அந்த பசுவை துரத்தியது, புலிக்குப் பயந்து ஒரு மலைக்குகைக்குள் புகுந்து அங்கேயே தங்கி விட்டது.

அந்த குகையின் உள்ளே கருவீழி என்ற மூலிகை அடர்ந்து வளர்ந்து இருந்தது, பசுவுக்கு சாப்பிட சாதாரண புல் இல்லாததால் அந்த மூலிகையை மட்டுமே தினமும்  தின்று வந்தது, கருவீழி என்பது சாதாரண மூலிகை அல்ல கல்பதேக மூலிகை, அதை உண்டு வளர்ந்த பசு நல்ல தேக ஆரோக்கியம் பெற்று வந்தது, வயிற்றில் இருக்கும் கன்றுக்கும் அந்த மூலிகையில் சத்தே மேலானது, கன்று ஈன்ற பின்பு தாய்ப்பசுவும். கன்றும் கருவீழி இலையை சுவைத்து உண்ண ஆரம்பித்து விட்டன.

ஒருநாள் போக முனிவர் கருவீழி மூலிகை தேடி குகைக்கு வந்தபோது பசுவையும் கன்றையும் பார்த்து  அவற்றின் மகத்துவம் அறிந்தார், உடனே போக முனிவர் அந்த பசுவுக்கும். கன்றுக்கும் உபதேசம் செய்தார், மந்திர உபதேசம் பெற்ற இரண்டு பசுக்களும் நேரடியாக தேவலோகம் சென்று காமதேனுவாக மாறி வளர்ந்தன.

இறவாமை இல்லை என்றால் பிறவாமையும் இல்லை, இதை உணர்ந்த சித்தர்கள் இறைவனிடம் பிறவாமை வரம் வேண்டியினர்.

விதவைக்கு குழந்தை வரம் தந்த சாங்கதேவர்

 

சலனமற்று ஓடும் தபதி ஆற்றின் கரையோரத்தில் ஆசிரமம் அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, பல நூற்றாண்டுகளாக சீடர்களுக்கு உபதேசம் செய்தவர் சாங்கதேவர். யாதவ குளத்தில் அவதரித்த இவர், பண்டரீபுரத்தில் இருக்கும் பண்டரீநாதரை வணங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
யார் கண்ணுக்கும் புலப்படாதபடி தனது உடலை மறைத்து அரூபமாக சென்று பண்டரீநாதனை வழிபட்டு வந்தனர். உருவம் மறைத்தல் என்பதோடு நின்று விடாமல், சப்தம் கேளாமல் இருப்பதற்கும், ஸ்பரிசம் உணராமல் இருப்பதற்கும், மேனி கவர்ச்சி உணராத நிலைக்குமான மேன்மை அடைந்திருந்தார் அவர். எல்லா சித்தர்களும் சித்து விளையாடுவதில் கெட்டிக்காரர்கள். அதில் சாங்கதேவரும் விதிவிலக்கல்ல.
 
ஆனாலும் ஒரு மனக்குழப்பம் சாங்கதேவரை வாட்டி கொண்டே இருந்தது “இவ்வளவு ஆண்டுகளாக சீடர்களுக்கு பாடம் கற்று கொடுத்தும் மனதில் முழுமையான நிம்மதி என்பது இல்லையே…” என்று வருந்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.
 
“நிம்மதியை வேண்டி மனக்குழப்பம் கொள்ளும் சாங்கதேவா! உனக்கு நிம்மதி வேண்டுமென்றால் பண்டரீபுரத்தில் ஞானதேவ் என்ற சிறுவன் இருக்கிறான் அவனிடம் போய் ஞான உபதேசம் கேள்..! அவன் முற்றும் அறிந்த ஞானி. அதன் பின்னே நிம்மதி பெறுவாய்!” என்றது.
 
சாங்கதேவருக்கு அசரீரியின் குரல் மேலும் குழப்பத்தை தந்தது. ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பலருக்கு நாம் உபதேசம் செய்கிறோம். சித்தராகிய நான் ஒரு சிறுவனிடம் போய் உபதேசம் பெறுவதா? என்னக் கொடுமை!’ இப்படி அவரது மனதில் எண்ண ஓட்டங்கள் மேலிட்டாலும் வேறு வழியின்றி ஞானதேவை சந்திக்க முடிவு செய்தார்.
 
அதே வேளையில், ஞானதேவும் பண்டரீபுரத்திலிருந்து புறப்பட்டு ஆனந்தி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். இதை கேள்விப்பட்ட சாங்கதேவர் ஞானதேவை சந்திக்க முடிவு செய்தார். இன்றைக்கு நாம் ஒருவரை சந்திக்கும் முன் சந்திக்க விரும்பும் நபருக்கு ‘விசிட்டிங் கார்டு’ கொடுப்பது போல் சாங்கதேவரும் ஞானதேவுக்கு ஒரு ஓலையை அனுப்பினார்.
 
ஆனால் அந்த ஓலையில் துவக்கமாக என்ன எழுதுவதென்று அவருக்கு தெரியவில்லை. ‘ஞானதேவோ… வயதில் இளையவர். நாமோ அவரிடம் உபதேசம் பெறவேண்டிய மாணவர். அவரை வணங்குவதா..! ஆசீர்வதிப்பதா..!’ என்ற குழப்பத்தில் எதுவும் எழுதாமல் வெறும் ஓலையை மட்டுமே சீடனிடம் கொடுத்து அனுப்பினார். 
 
சீடனும் அந்த ஓலையை ஞானதேவிடம் கொடுத்தான். ஓலையை கைகளால் வாங்கும் முன்பே ‘என்னதான் கற்றிருந்தாலும், எழுத்துக்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும், கோபத்தை அடக்கும் வலிமை பெற்றிருந்தாலும், சித்திகள் அனைத்தும் பெற்றாலும், வாழ்க்கை வெறும் ஓலைதான் என்று சாங்கதேவர் வெறும் ஓலையை கொடுத்து அனுப்பினாரோ?’ என்று ஞானதேவ் கேட்டபோது சீடன் வெலவெலத்து போய் விட்டான்.
 
பின்னர் ”பிறவிப்பிணி நீங்க இறைவனை வழிபடுவது ஒன்றுதான் மருந்து” என்று ஓலையில் ஞானதேவ் சாங்கதேவருக்கு பதில் எழுதி அனுப்பினார். இதை வாங்கி படித்த சாங்கதேவர் தனது வலிமையையும், தவயோகத்தையும் காட்ட நினைத்து, தனது தவபலத்தால் ஒரு புலியை சிருஷ்டித்தார். அந்த புலியின் மீது கம்பீரமாக அமர்ந்தார். கையில் ஒரு கருநாகத்தை சாட்டையாக பிடித்துக் கொண்டு ஞானதேவரை சந்திக்க புறப்பட்டார். 
 
”இந்த வயதில் புலி மீது ஏறி, கருநாகத்தை கையில் பிடித்துக்கொண்டு கோபமாக போகிறாரே” என்று ஊர் முழுவதும் மக்கள் பேசினர்.
 
இப்படி மக்கள் பேச வேண்டும். இந்த பேச்சு ஞானதேவை சென்று சேர வேண்டும். தன்னை பற்றி வியப்பு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்  சாங்கதேவர் அப்படி செய்தார்.
 
கர்வம் மறைந்தது 
 
இவை எல்லாவற்றையும் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட ஞானதேவ் தனது இரண்டு தம்பிகளோடும், தங்கை முக்தா பாயுடனும் சின்னஞ் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குட்டிச் சுவரில் ஏறி அமர்ந்து மற்ற குழந்தைகளைப் போல் எந்தவித பெருமையும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததைப் பார்த்த சாங்கதேவருக்கு சாட்டையால் அடித்தது போல் இருந்தது. உடனே அவரது கர்வம் மறைந்தது.
 
அதேவேளையில் அவருடைய மாயபுலியும் கையில் பிடித்திருந்த கருநாகமும் மறைந்தது. சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஞானதேவை வணங்கினார் சாங்கதேவர்.

 
”எவ்வளவு பெரிய தவயோகி நீங்கள்? தாங்கள் என்னை வணங்கலாமா? வாருங்கள்…! என் அருகே அமருங்கள்!” என்று கூறி சாங்கதேவரை ஆழமரத்தடிக்கு அழைத்து போனார் ஞானதேவ்.
 
சிறுவனான ஞானதேவ் முன்பு முதியவரான சாங்கதேவர் வந்தமர்ந்தார். முன்னொரு காலத்தில் வாலிபரான சிவபெருமான் முன்பு பழுத்த முனிவரான சனக்காதி முனிவர் உபதேசம் பெற்றது போல் சாங்கதேவரும் ஞானதேவிடம் உபதேசம் பெற்றார். பரிபூரணமான ஞானத்தின் தன்மை பற்றியும் அதை அடையும் வழிகளையும், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணைப்பு பற்றியும், பரமாத்மாவை மறைத்துவிட்டு அதனை சூழ்ந்து நிற்கும் மாயையும், அந்த மாயையை விளக்கும் முறையையும், அப்படி அவற்றை அகற்றும் போது ஏற்படும் தெளிவை பற்றியும் ஞானதேவ் சித்தரான சாங்கதேவருக்கு எடுத்துரைத்தார்.
 
பின்னர் இருவரும் ஆசிரமம் சென்றனர். ஆசிரமத்தில் பருவ வயது பெண்ணான ஞானதேவின் சகோதரி குளித்துவிட்டு வந்திருந்தார். அவள் தனது உடையை மாற்றும் சமயம் ஞானதேவ் உள்ளே சென்றார். சாங்கதேவருக்கோ உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பருவப்பெண் ஆடை மாற்றும்போது எப்படி கூச்சம் இல்லாமல் நுழைவது? என்று எண்ணியவர் அப்படியே நின்று விட்டார். 
 
பாகவத கதையில் இதேபோல் வியாசர் முனிவருக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது.  
 
தேவகன்னியரின் நீராடல் 
 
வியாச முனிவரும்,அவரது புதல்வர் சுகப்பிரம்மரிஷியும் நீர் நிறைந்த ஒரு சோலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த நீர் நிலையில் ஏராளமான தேவகன்னியர் மேனியில் ஆடையின்றி நீராடி கொண்டிருந்தனர்.
4.bp.blogspot.com pfdsOb9dHX0 VMy5Q8v2akI AAAAAAAAC9U 7bOj4jejms0 s1600 IMG 20150131 085520 - 2026

அவர்கள் வாலிப இளைஞரான சுகப்பிரம்மரிஷி வருவதை பார்த்தும் எந்த வெட்கமும் கொள்ளாமல் தொடர்ந்து பிறந்த மேனியோடு நீராடிக்கொண்டிருந்தனர். ஆனால் முதியவரான வியாசர் வந்த போது தேவகன்னியர் உடனே உடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று உடைகளால் தங்கள் உடலை மறைத்தனர். இதை பார்த்த வியாசருக்கு வியப்பு ஏற்பட்டது. 
 
”கன்னிகளே! என் மகன் சுகப்பிரம்மம் வாலிபன், இளவயதினன், அவன் வந்தபோது சிறிதும் வெட்கம் இல்லாமல் நீராடி கொண்டிருந்தீர்கள். நானோ வயது முதிர்ந்த கிழம், என்னை பார்த்தவுடன் அவசரம் அவசரமாக உடைகளை அணிந்து கொண்டீர்களே… ஏன்?” என்று கேட்டார்.
 
தேவகன்னியரில் ஒருவரான ரம்பை, ”வியாச முனிவரே! தங்கள் மகன் சுகப்பிரம்மரிஷி முற்றும் துறந்த பிரம்மஞானி. மனம் பக்குவபட்டவன் அவருக்கு அழகிய பெண்ணின் உடலும் ஒன்றுதான், காய்ந்த மண்ணில் விழுந்து கிடக்கும் மரக்கட்டையும் ஒன்றுதான். ஆனால் தாங்கள் இன்னும் அந்த பக்குவநிலையை எய்தாகவில்லை!” என்று ரம்பை பதில் அளித்தார். 
 
அதேபோல் தான் இப்போதும் நடந்திருக்கிறது. ஞானதேவுக்கு ஏற்படாத கூச்சம் தனக்கு இப்போது ஏற்பட்டது தன் மனநிலை இன்னமும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது என்ற மன உறுத்தலுடன் ஞானதேவை பின்தொடர்ந்தார் சாங்கதேவர்.
 
ஆசிரமம் உள்ளே சென்ற ஞானதேவ், பாண்டு ரங்கன் பண்டரீநாதன் குறித்த பஜனைப் பாடல்களை பாடினார். மேலும் பல போதனைகளை சாங்கதேவருக்கு போதித்தார். அதன்மூலம் அவர், தான் மனப்பூர்வமான பக்குவத்தையும், நிம்மதியையும் பெற்றதாக உணர்ந்தார்.
 
விதவைக்கு குழந்தை ஆசி 

 
ஒருமுறை கோதாவரி நதிக்கரையில் கேசவர் கோவில் ஒன்றைக் கட்டி, அதற்கு கும்பாபிஷேகம் செய்தார் சாங்கதேவர். அவரை பார்ப்பதற்காக கோதாவரி நதியை அடுத்துள்ள கல்யாணபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு வயதான பெண்மணி தனது விதவை மருமகளை அழைத்துக் கொண்டு கேசவர் கோவிலுக்கு வந்தார். இருவரும் சாங்கதேவரை வணங்கினார்.
 
அப்போது அந்த பெண்ணின் மருமகள் அமங்கலி என்பதை அறியாத சாங்கதேவர், ”உனக்கு அறிவான மகன் பிறப்பான்..!” என்று ஆசீர்வதித்தார். இதை கேட்ட விதவை அதிர்ச்சியடைந்தாள். கண்ணீர் பெருகி நின்றாள். உடனே பெண்ணின் மாமியார், ”சுவாமி என் மகன் இறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்போது என் மருமகள் விதவை. அப்படியிருக்க தாங்கள் ஆசி எப்படி உண்மையாகும்?” என்று மனம் நொந்து கேட்டாள்.
 
”தாயே என் வாக்கு பொய் இல்லை. உனக்கு பேரன் பிறந்தே தீருவான்..!” என்றார் சாங்கதேவர். இந்த ஆசீர்வாதத்தை கேட்டு சந்தோஷப்படுவதா… சங்கடப்படுவதா… என்று புரியாமல் இரு பெண்களும் திகைத்து நின்றனர்.

     “சுவாமி! தாங்கள் கூறுவதுபோல் இறைவன் அருளால் எனது மருமகள் ஒரு மகனை பெற்றெடுத்தாலும் இந்த உலகம் அதனை ஏற்குமா?” என்று கேட்டார். சாங்கதேவர் அவர்களை சமாதானப்படுத்தினார். அவர்கள் கல்யாணபுரம் என்ற அந்த ஊரிலேயே வசிக்க ஏற்பாடு செய்தார்.

     சாங்கதேவரின் வாழ்த்துப்படியே சரியாக பத்தாம் மாதத்தில் அந்த விதவைப்பெண் ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ‘விட்டல்’ என்று பெயர் சூட்டினார் சாங்கதேவர்.

    குழந்தை வளர்ந்தது. உபநயனம் கற்கும் பருவம் வந்தது. அந்த குழந்தைக்கு உபநயனம் கற்றுத்தரும்படி அந்த ஊர் பிராமணர்களிடம் சாங்கதேவர் கேட்டார். யாரும் கற்றுத்தர முன் வரவில்லை. உபநயனம் என்பது பூனூல் அணிவித்து வேதங்கள், மந்திரங்கள் கற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் வேதமுறை. இதை நல்ல பிறப்பில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வழங்கும் வழக்கம் இருந்தது.

   “தந்தை பெயர் தெரியாத ஒரு விதவை பெற்ற குழந்தைக்கு உபநயனம் ஒன்றுதான் கேடா?” என்று ஏளனமாக மறுத்துவிட்டனர். அவர்களுக்கு பொறுமையாக பல புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருந்து உதாரணங்களை சாங்கதேவர் எடுத்துக்கூறினார். அப்படியும் யாரும் கற்றுத்தர முன்றவரல்லை. இதையெல்லாம் கண்டு மனம்நொந்தார் சாங்கதேவர்.

     “பெண்ணே! இந்த விட்டல் என் அருளால் பிறந்தவன். அவனுக்கு உபநயனம் செய்துவைக்க எந்த வைதீகருக்கும் மனம்இல்லை. இனி நாம் அனைவரும் பாண்டுரங்கனிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை. நாம் எல்லோரும் பண்டரீபுரம் செல்வோம்!” என்றார். நால்வரும் பண்டரிபுரம் கோவிலுக்கு சென்று வணங்கினர்.

     கோவிலுக்கு அருகே இருந்த பிராமணர் வீட்டில் நால்வரும் தங்கினர். அந்த பிராமணரிடமே சாங்கதேவர் விட்டலனுக்கு உபநயனம் செய்யும்படி கேட்டார். அதற்குள் அந்த பிராமணருக்கும் விட்டலனின் கதை தெரிந்துவிட்டது. அவரும் உபநயனம் செய்ய மறுத்துவிட்டார். அந்த பெண்கள் இருவரும் மனமுடைந்தனர்.

     மீண்டும் மீண்டும் இதே போன்ற புறக்கணிப்பு சாங்கதேவரின் மனதை புண்படுத்தியது. மனதுக்குள் வைராக்கியம் கண்டது. நேராக பண்டரீஸ்ரீநாதன் கோவிலுக்கு சென்றார். தன்னை மதிக்காது ஏளனம் செய்த வைதீகரர்களை பற்றி மனமுருக புலம்பி தீர்த்தார். அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்று இறைவன் சொன்னது போல் பாண்டுரங்கனும் முன் தோன்றினார்.

     “சாங்கா! கவலையை மற நாளை நானே நேரில் வந்து விட்டலனுக்கு உபநயனம் செய்கிறேன்” என்று கூறி மறைந்தார். மனதிற்குள் மகிழ்ச்சி சிறகுகள் சிறகடிக்க ஊருக்கு திரும்பினார். திரும்பிகையோடு எல்லார் வீடுகளுக்கும் சென்று “விட்டாலனுக்கு நாளை உபநயனம்;. எல்லோரும் குடும்பத்தோடு வந்துவிடுங்கள்” என்றார்.

     ஊரார்களுக்கு ஒரே ஆச்சரியம்! “ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த வைதீகரர்களான நாம் தான் அவனுக்கு உபநயனம் செய்ய மறுத்துவிட்டோமே. வேறு யார் வந்து அந்த விதவை பையனுக்கு உபநயனம் செய்யப்போகிறார்கள்?” என்று கிண்டலாக கேட்டு சிரித்தனர்.

     “பகவானே நேரில் வந்து உபநயனம் செய்வார்” என்ற போது எல்லோரின் ஏளன சிரிப்பும் எல்லை மீறி போனது. என்னதான் வேடிக்கையாக பேசினாலும் அவர்களுக்குள்ளும் ஆர்வம் இருந்தது. எல்லோரும் சாங்க தேவர் மடத்திற்கு போவதென்று முடிவுசெய்தனர். அதற்கு முன் பண்டரீபுரத்து பாண்டுரங்கன் கோவிலுக்கு சென்று பாண்டுரங்கனை வழிபடுவது, அதன்பின் மடத்திற்கு செல்வது என்று திட்டமிட்டனர். அங்கு சென்ற அவர்கள், கையெடுத்து கும்பிட்டு வணங்க முற்பட்ட போதுதான் மூலகிரகத்தில் பாண்டுரங்கன் இல்லாததை கவனித்தார்கள்.

     எல்லோரும் உடனே சாங்கதேவர் மடத்திற்கு சென்றார்கள். அவர்களை பார்த்தவுடன் “பாண்டுரங்கன் இங்கேதான் இருக்கிறார்” என்றார். எல்லோரும் பாண்டுரங்கனை தரிசித்தனர். பாண்டுரங்கன் மனையில் அமர்ந்து விட்டலை அணைத்துக்கொண்டு மந்திரோபதேசம் செய்வதை அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர்.

     மனிதர்கள் ஒரு செயலை செய்த தயங்கும் போது அங்கு இறைவன் பிரசன்னமாகி செயல்களை செய்து முடிப்பான் என்பது விதி. இங்கும் அதுதான் நடந்தது. சாங்க தேவரின் தவ வலிமையை கண்ட அனைவரும் தங்கள் தவறை உணர்ந்தனர். பாண்டுரங்கனும் அவரை எண்ணற்ற சித்து விளையாட்டுகளை ஆடச்செய்து ரசித்தார். பின் மறைந்தார்.

     சிறிது காலம் கழித்து, துவாரகை சென்று கண்ணனை தரிசிப்பதற்காக சாங்கதேவர் யாத்திரை செல்ல துவங்கினார். அப்போது ஒரு யாதவ பண்டிதர் தானும் அவருடன் சேர்ந்து யாத்திரை வருவதாக கூறி இணைந்து கொண்டார். பண்டிதரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் தனியாக இருந்தாள். அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே பண்டிதர் புறப்பட்டார்.

     இந்த தகவலை தாமதமாக தெரிந்து கொண்ட அந்த கர்ப்பிணிப் பெண் மிகவும் வேதனையுற்றாள். கணவர் இல்லாத ஊரில் ஒரு கணமும் தனித்திருக்க மாட்டேன் என்று கூறி துவாரகை நோக்கி புறப்பட்டாள். நிறை மாத கர்ப்பிணி தனியாக காட்டுப் பாதைக்குள் செல்ல வேண்டாம் என்று ஊரார்கள் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை.

     அடர்ந்த காட்டுக்குள் தனியாக சென்றாள். காட்டின் மையப்பகுதியை அடைந்ததும், அந்த பெண்ணுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மனித சஞ்சாரமே அற்ற அந்த அடர்ந்த காட்டுக்குள் பிரசவ வலி தாங்கமுடியாமல்…

     “துவாரகை கண்ணனே! என்னை காப்பாற்ற நீ வரமாட்டாயா? சாங்க தேவரே! இறைவனை நேரில் கண்டவர் நீங்கள். தாங்களாவது என்னை காப்பாற்றும்படி இறைவனிடம் சொல்லக்கூடாதா?” என்று மீண்டும் மீண்டும் வேண்டியபடி மயங்கி விழுந்தாள்.

     மயங்கிய பெண்ணை யாரோ தொடுவதுபோல் உணர்ந்தாள். அருகே ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். “பெண்ணே! என் பெயர் கிருஷ்ணாபாய். உன் கணவரின் குருவான சாங்கதேவர் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார். என் வீடு பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறது” என்று கூறி, அந்த பெண்ணின் இடுப்பில் கைவைத்து, தாங்கிப்பிடித்து, மெதுவாக அணைத்தப்படி கிராமத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

     அங்கு கர்ப்பிணிப் பெண்ணின் அழுக்கான ஆடைகளை களைந்து, நல்ல ஆடைகளை கொடுத்து, அருகே இருந்து உபசரித்தாள். சிறிது நேரத்தில் ஒரு அழகிய ஆண் குழந்தையை அந்தப்பெண் ஈன்றாள். பெற்ற தாயை காட்டிலும் பல மடங்கு பரிவோடு அந்த மூதாட்டி நடந்துகொண்டார். குழந்தையையும், தாயையும் உறக்கமில்லாமல் கவனித்தார்.

     காட்டுக்குள் தன்னந்தனியாக மயங்கிக்கிடந்த தன்னை மருத்துவச்சியாகவும், தாயாகவும் இருந்து கவனித்த கிருஷ்ணாபாயை அனுப்பிவைத்த கண்ணனை மனதார துதித்தாள்.

   அதே நேரத்தில் துவாரகையில் சாங்கதேவரும், பண்டிதரும் கோமதி நதியில் நீராடிவிட்டு கண்ணன் ஆலயத்தை அடைந்தனர். கோவிலில் கண்ணன் இல்லை. அந்த கண்ணன் தான் கிருஷ்ணாபாய் உருவில் பண்டிதர் மனைவிக்கு மருத்துவச்சியாக பணியாற்றிக்கொண்டிருப்பதை ஞானதிருஷ்டியில் கண்டார்.

     உடனே இருவரும் அந்த கிராமம் நோக்கி நடந்தனர். வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த முதிய பெண்மணி அவர்களை அன்புடன் வரவேற்றார். வீட்டுக்குள் சென்ற அமர்ந்த சாங்கதேவர் மடியில் குழந்தையை கிடத்தினார் அந்த பெண். சாங்கதேவரும் குழந்தையை ஆசிர்வதித்து திரும்பிப் பார்த்தார். அங்கே கிருஷ்ணாபாய் இல்லை. தேடினார்கள். அவர் எங்குமே இல்லை!

     சாங்கதேவர் எல்லையில்லா ஆனந்தமடைந்தார். கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது “கிருஷ்ண பரமாத்மாவே! உன் பக்தனுக்காக பிரசவம் பார்த்து, துணிதுவைத்து, மருத்துவம் செய்து, வீடு பெறுக்கி, குழந்தையை குளிப்பாட்டி, பிரசவித்த தாய்க்கு பணிவிடை செய்துள்ளாய். உன் கருணைக்கு எல்லையே இல்லையா? ஆபத்பாந்தவனே!” என்று நெக்குருகி போனார்.

     சில ஆண்டுகள் கழித்து…

     பேதரி என்ற நாட்டுக்கு சென்றார் சாங்கதேவர். பேதரியை ஒரு இஸ்லாமிய மன்னர் ஆட்சிசெய்து வந்தார். அவர் இந்துக்களை மிகவும் கொடுமைப் படுத்தினார். இதை அறியாத சாங்கதேவர் பேதரி அரண்மனை வாயிலில் நின்று பண்டரீநாதனை கீர்த்தனையால் துதித்துக்கொண்டிருந்தார்.

4.bp.blogspot.com o0yYIiNzLdc VM9pfqnQpEI AAAAAAAAC94 BjUEA9dROSo s1600 IMG 20150131 085543 - 2026

     “அய்யா! பெரியவரே, இந்த கீர்த்தனையை நிறுத்துங்கள். இந்த மன்னனைப்பற்றி உங்களுக்கு தெரியாது. இது மட்டும் மன்னன் காதுகளுக்கு எட்டினால் என்ன நடக்கும் தெரியுமா? அதோடு மன்னனின் மகள் வேறு பாம்பு கடித்து இறந்து விட்டாள். மன்னர் துக்கத்தில் இருக்கிறார். இங்கே நிற்காதீர்கள். சென்றுவிடுங்கள்.” என்று ஒரு அந்தணர் கூறினார்.

     “என்ன பாம்பு கடித்துவிட்டதா? நான் பிழைக்கச்செய்கிறேன்” என்றார் சாங்கதேவர்.

     “மன்னர் மகள் இறந்து அவளை புதைத்து மூன்று நாட்களாகிவிட்டன. பாதி மண்தின்ற உடலை பிழைக்க வைக்கிறேன் என்கிறீர்களே?!”

     “நான் உயிர்ப்பித்து தருகிறேன். மன்னரிடம் கூறுங்கள்”

     மன்னருக்கு செய்திபோனது. மன்னர் மெய்சிலிர்த்து போனார். “இது உண்மையா? நடக்குமா? சாத்தியம்தானா? அவரை உடனே அழைத்து வாருங்கள்.”

     சிறிது துளசி தீர்த்தத்தை மன்னர் கையில் கொடுத்து, மந்திரம் ஜெபித்து “அரசே! இதனை உங்கள் கையால் நான் சொல்லும் மந்திரம் ஜெபித்து, உங்கள் மகளின் உடல் மீது தெளியுங்கள்” என்றார்.

     மன்னர் மகள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த இளம்பெண்ணின் உடல் எடுக்கப்பட்டது. சாங்கதேவர் கூறியபடி மந்திரம் ஜெபித்து துளசி தீர்த்தத்தை தெளித்தார். மன்னரின் மகள் உறக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழுந்தாள். மன்னர் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் திகைத்து போயினர்.

     “சித்தர் பெறுமானே! தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன். என் மகளை எனக்கு திரும்பவும் கொடுத்துவிட்டீர்கள். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார்.

     “மன்னவா, நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். இனிமேலாவது நீ பிற மதத்தவரை துன்புறுத்தாமல், அவர்கள் மனம் நோகாமல் நடக்க வேண்டும். அவர்களும் உன் மக்கள் தான். அவர்களை காக்கும் கடமையும் உனக்குண்டு”

     “அப்படியே செய்கிறேன்” என்று மன்னர் உறுதியளித்தார். அதன்படியே ஆட்சியும் செய்தார். அதன்பின் சாங்கதேவர் இறைவனிடம் “பாண்டுரங்கா! நான் சமாதிநிலை அடைய விரும்புகிறேன். எனக்கு ஏற்ற இடத்தை சொல்வாயாக” என்று கேட்டார்.

     “கோதவரி நதிக்கரையில் உள்ள புண்ய ஸ்தம்பம் என்ற இடம் தான் உனக்கு ஏற்ற இடம்” என்று இறைவன் உத்திரவிட எல்லோரிடமும் விடைபெற்று சமாதிநிலை அடைந்தார் சாங்கதேவர்.

டாப்ஸ்லிப்-கொங்கு தேசத்தின் குட்டி ஊட்டி

 

 
இந்த முறை எனது பயணம் டாப்ஸ்லிப்பை நோக்கியிருந்தது. ஒரு நாள் யதார்த்தமாக நண்பர் கார்த்திக்கேயனிடம் டாப்ஸ்லிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் டாப்ஸிலிப் போவதாக இருந்தால், கட்டாயம் சோமண்ணாவைப் பார்க்க வேண்டும். அவர் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வார் என்று கூறி, தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

சோமண்ணாவிற்கு போன் செய்தேன். “இப்பெல்லாம் ஒரே வறட்சியா இருக்கு!  நீங்க வந்தாலும் திருப்தியா இருக்காது” என்றார். அப்படி அவர் சொன்னது ‘மே’ மாதத்தில்… மழை என்ற கொடையை 6 மாதங்களாக டாப்ஸ்லிப் அறியாது இருந்த காலம் அது.

3.bp.blogspot.com RpO75 wlfSQ VNNt7BedR9I AAAAAAAAC k Q06K4a3d7ms s1600 1617 - 2026
டாப்ஸ்லிப்

அதன்பின் டாப்ஸ்லிப்பை நானும் மறந்து போயிருந்தேன். ஒரு நாள் சோமண்ணாவிடம் இருந்து போன், “இப்ப வாங்களேன்! நல்ல சீஸன்!” என்றார். ஆமாம், மதுரை கூட மழையில் குளித்து குளிர்ந்திருந்த நேரம்.

ஒரு நாள் காலை பஸ்ஸில் பொள்ளாச்சிக்கு பயணமானேன். ஐந்து மணி நேர அலுப்பான பயணத்திற்குப் பின் பொள்ளாச்சியில் இறங்கினேன். அங்கிருந்து சேத்துமடைக்கு சிட்டி பஸ்ஸில் 45 நிமிட பயணம். அங்கு சென்று இறங்கியதும், சோமண்ணா அனுப்பி வைத்த நபர் டூ வீலரோடு தயாராக காத்து இருந்தார்.

ஒருவேளை டூவீலரில் தான் டாப்ஸ்லிப் போக வேண்டுமா! வனப்பகுதியில் டூவீலருக்கு அனுமதி கிடையாதே என்று பலவகையில் யோசித்தேன். எனது சிந்தனைக்கு பதிலளிக்கும் விதமாக அந்த புதிய நபர் பேசினார்.

“சோமண்ணா காட்டேஜ் மலை அடிவாரத்துல இருக்கு. அங்கிருந்துதான் டாப்ஸ்லிப் மலைப்பாதை ஆரம்பம்” என்றார். டாப்ஸ்லிப்பின் குளிர் அங்கேயே ஆரம்பித்து விட்டது போல் குளுமை இருந்தது.

2.bp.blogspot.com 90c8bv 2MvI VNNzQMn1wsI AAAAAAAADBQ 3am k7uO1ts s1600 IMG 5853 - 2026

பேசிக்கொண்டே நான்கு கி.மீ. வந்து விட்டோம். வழிநெடுக ‘வெஸ்டர்ன் காட்ஸ்’ என்ற வழிகாட்டுப் பலகைகள் எங்களை வரவேற்றுக் கொண்டே இருந்தன. அந்த வெஸ்டர்ன் காட்ஸ்தான் சோமண்ணாவின் ரிஸார்ட்ஸ் என்பது அங்கு போனதும் தான் எனக்கு தெரிந்தது.

4.bp.blogspot.com X73XVKaUGI VNNzRDMq2SI AAAAAAAADBY C3bOCRdac k s1600 IMG 5855 - 2026
நான் தங்கி இருந்த அறை

நல்ல பசுமையான சூழலில் எக்கோ பார்க்கில் இருப்பது போல் தூய்மையாக அந்த இடம் இருந்தது. எனக்காக ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இங்கு ஒவ்வொரு அறையும் தனித் தனியாக தள்ளித் தள்ளியிருந்தன. ஒரு பண்ணைக்குள் இருக்கும் வீடு போல் அவைகள் இருந்தன. ஸ்விம்மிங் பூல், வை-ஃபை என்று நவீன அம்சங்களும் அங்கிருந்தன. தங்குவதற்கு அருமையான இடம். மன அமைதி கிடைக்குமிடம்.

3.bp.blogspot.com T0iq EChEYQ VNNzS 5SShI AAAAAAAADBk MvltpLaTUtM s1600 IMG 5857 - 2026
நீச்சல் குளம் 

மதிய உணவு முடிந்ததும், “”கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு, மாசாணியம்மன் கோயில் போயிட்டு வந்துருங்க” டூவீலரை என் கையில் தந்து விட்டு போனார் சோமண்ணா.

ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் மாசாணியம்மன் கோயிலுக்காக பொள்ளாச்சி நோக்கி பயணம் செய்தேன். ரோட்டின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்கள், உயரத்தில் கிளைகளால் ஒன்றையொன்று தொட்டு உறவாடிக் கொண்டிருந்தன.

1.bp.blogspot.com 1S U2PZud k VNNzG0s jwI AAAAAAAADAI XI I89FotDQ s1600 IMG 5796 - 2026
மாசாணியம்மன் கோயில்

அடர்த்தியான மர நிழல் அந்த பகல் வேளையிலும் ரோட்டில் இருளைக் குவித்திருந்தது. அதில் பயணிக்கவே ரம்மியமாக இருந்தது.

நான்கு வழிச்சாலையில் நாம் இழந்தது இந்த நிழல் தரும் மரங்களையும், குளுமையையும் தான். அப்படி இழந்த குளுமை இந்தச் சாலையில் அனுபவித்தபடி பயணித்தேன்.

3.bp.blogspot.com PcTj - 2026
கோயில் கடை 

ஆனை மலை வந்ததும் மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றேன். அது ஒரு பெண்களின் கோயில். பெண் வயதுக்கு வரும்போது உடலில் ஏற்படும் பலவித  மாற்றங்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் தரும் அம்மன் இந்த மாசாணியம்மன், என்றொரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் இருக்கிறது.

ராவணன் சீதையை கவர்ந்து சென்ற பிறகு அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றதாகவும், அந்த நேரத்தில் மயானத்தில் பராசக்தியின் வடிவமாக இருந்த மாசாணியம்மனை ராமர் வழிப்பட்டதாகவும் வரலாறு இருக்கிறது. இந்த அம்மன் மயானத்தில் சயனித்த நிலையில் இருப்பதால் “மயானசயனி’ என்ற பெயர் காலப்போக்கில் “மாசாணி’ என்று மாறியது.

1.bp.blogspot.com kuIdLbhSiFI VNNzFmRzeJI AAAAAAAAC 4 C8NkIKqd9s s1600 IMG 5787 - 2026
அரைபட காத்திருக்கும் மிளகாய் 

இங்கு மிளகாய் அரைத்து அம்மனின் மீது சாந்து பூசினால் தொலைந்து போன விலையுயர்ந்த பொருட்கள் திரும்பக் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. இதற்காகவே இங்கு இருக்கும் ஆட்டுக் கல்லில் தொடர்ந்து மிளகாய் அரைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

3.bp.blogspot.com UXQPjPIR X4 VNNzGKrc1kI AAAAAAAAC 8 M9FzYH2rT4U s1600 IMG 5783 - 2026
மாசாணியம்மன் கோயில் உள்ளே 

ஆனைமலையில் பாயும் உப்பாற்றின் வடகரையில் கிடந்த நிலையில் 17 அடி நீளத்தில் மாசாணியம்மன் சிலை உள்ளது. பொதுவாக எல்லா கோயில்களிலும் தரிசனம் முடிந்த பின் வலம் வருவார்கள். மாசாணியம்மனுக்கு வலம் வந்தப்பின் தன்னை வணங்கினால்தான் பிடிக்கிறது போலும். எல்லா பக்தர்களும் முதலில் வலம் வந்து, அதன் பின்னே அம்மனை வணங்குகிறார்கள்.

அம்மன் தரிசனம் முடிந்து மீண்டும் வெஸ்டர்ன் காட்ஸூக்கு திரும்பினேன்.

“காலை ஏழு மணிக்கு டாப்ஸ்லிப்புக்கு பஸ் இருக்கிறது. காலையில் சீக்கிரமே கிளம்பிடுங்க!” என்று சோமண்ணா கூறினார்.

மறுநாள் காலை எழுந்து அவதி அவதியாக குளிரையும் பொருட்படுத்தாமல் கிளம்பி, பஸ்ஸுக்காக காத்திருந்தேன். மழைத்தூறல் போட்டுக் கொண்டே இருந்தது. ‘மிஸ்ட்’ வேறு இயற்கையை ரசிக்க முடியாமல் திரை போட்டது. இதே சூழ்நிலை நீடித்தால் என்னால் ஒரு போட்டோக் கூட எடுக்க முடியாது.

நேரம் ஏழு மணியைக் கடந்து விட்டது. இன்னமும் எனக்கான பஸ் வரவில்லை. மலைப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் செக் போஸ்டில் காத்திருந்தேன். ஏழு மணிக்குப் பிறகு தான் வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்கிறார்கள்.

3.bp.blogspot.com JmAQj8KlUx8 VNNzC52Ux9I AAAAAAAAC g AddLm2 L 4U s1600 70 Anamalai - 2026
செக் போஸ்ட்

கேரளாவிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் வந்திருந்த சுற்றுலா பஸ் ஒன்று செக் போஸ்ட் திறப்பிற்காக காத்து நின்றிருந்தது. நான்கு இளைஞர்கள் இரண்டு பைக்கில் வந்திருந்தார்கள். மலைப்பாதையில் செல்ல அனுமதி கேட்டு வனக்காவலர்களிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். விலங்குகள் நடமாடும் இடத்தில் டூவீலரில் செல்வது உயிருக்கே ஆபத்து என்று அவர்களை திருப்பி அனுப்பினர்.

டாப்ஸ்லிப்புக்கு பஸ்ஸில் போவது என்ற முடிவு அபத்தமானது. ஒரு நாளைக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் போகிறது. இந்த பஸ்களை தவறவிட்டால் போவதற்கு வேறு பஸ்கள் இல்லை. அதனால் சொந்த வாகனம் அல்லது வாடகை காரில் டாப்ஸ்லிப் போவதுதான் உத்தமம்.

சோதனைச் சாவடியில் தனியார் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மது வைத்திருக்கிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். மது முற்றிலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி இது. காரில் இசை கேட்கக் கூடாது என்ற கண்டிஷனோடு அனுமதிக்கிறார்கள்.

எனக்கான பஸ் வந்தது.

போட்டோ எடுக்க வசதியாக டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன்.  சோதனைச்சாவடி நுழைவாயிலை கடந்த உடனே மலைப்பாதை ஆரம்பித்து விடுகிறது.

4.bp.blogspot.com hxUwhBASCQA VNNt VfJuBI AAAAAAAAC 0 3uvR5JKZNLI s1600 topslip 1 - 2026
குறுகலான மலைப்பாதை

குறுகலான மலைப்பாதை, மோசமான ரோடு என்ற வகையில்தான் சாலை இருந்தது. அடர்ந்த மரங்களுக்கு இடையே சூரியன் வரலாமா என்று அனுமதி கேட்பது போல் இலைகளுக்கு இடையே எட்டிப் பார்த்து கொண்டிருந்தான்.

4.bp.blogspot.com - 2026

பறவைகள் எழுப்பும் விதவிதமான ஒலிகள் மனதுக்கு ரம்மியம் தந்தது. வனவிலங்குகள் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். திடீரென்று கூட்டம் கூட்டமாக மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

4.bp.blogspot.com NnWTf6QV1R4 VNNy9i 8lEI AAAAAAAAC I QAGYV2vN YQ s1600 108989499 - 2026

டாப் ஸ்லிப் வந்து சேர்ந்தேன். அங்கு வரையாடுகள் கண்ணில் பட்டன. டாப்ஸ்லிப்பில் யானை சஃபாரி, ஜீப் சஃபாரி எல்லாம் இருக்கிறது. நான் சென்ற நேரத்தில் மழை அதிகம் இருந்ததால் இரண்டு சஃபாரிகளுமே கேன்ஸலாகி இருந்தன.

2.bp.blogspot.com THlK Hus4Ik VNNzIZIc47I AAAAAAAADAQ J5t7c8vEP8U s1600 IMG 5800 - 2026
கேரளா எல்லை

டாப்ஸ்லிப்பை கடந்ததுமே தமிழக எல்லை முடிந்து கேரளா ஆரம்பித்து விடுகிறது. பரம்பிக்குளம் வனச்சரகம் கேரளாவின் பராமரிப்பில் இருக்கிறது. பேசாமல் தமிழக வனங்களையும் கேரளாவே பராமரித்துக் கொள்ள விட்டுவிடலாம் போல் இருக்கிறது. தமிழகத்தை விட வனங்களை கேரளாவும் கர்நாடகாவும் நன்றாக பராமரிக்கிறார்கள்.

பரம்பிக்குளம் எல்லையில் கேரளத்தின் வன சோதனை மையத்தில் எல்லா வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. வனத்திற்கு சொந்தமான வாகனங்கள், சரணாலயத்தில் தங்குபவர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

1.bp.blogspot.com - 2026
நாங்கள் பயணம் சென்ற வேன்

மற்றவர்கள் சரணாலயத்தை பார்வையிட வேண்டுமென்றால் அதற்காக வேன் சஃபாரி தயாராக இருக்கிறது. இந்த வேன் சஃபாரியில் பயணம் செய்வதற்கு 18 பேர் வேண்டும்.

பஸ்ஸில் இருந்து 4 பேர் தான் இறங்கினோம். அதிலும் நான் ஒருவன்தான் சுற்றுலா பயணி. மற்றவர்கள் உள்ளூர்வாசிகள். நான் மட்டும் ஒற்றையாளாக சஃபாரிக்கு டிக்கெட் கேட்டேன். 18 பேர் வந்தால்தான் சஃபாரி என்றார்கள் டிக்கெட் கவுண்டரில்.

“”வருவார்களா…?” என்றேன்.

“இது சீஸன் காலமில்லை. அதனால் வர மாட்டார்கள்” என்று நெற்றியில் அடித்தது போல் சொன்னார். கடைசியாக வந்ததே வேஸ்ட் என்று நினைத்து வெளியே வந்தபோது, ஒரு ஏஸி வேன் ஆடம்பரமாக வந்து நின்றது. உள்ளே இருந்து இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் இறங்கினர். டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர்.

‘இது போதாதே..!’

நினைத்து முடிப்பதற்குள் 18 டிக்கெட்டையும் மொத்தமாக வாங்கி முடித்திருந்தார்கள். கவுண்டரில் இருந்த அலுவலர் என்னையும் அவர்களோடு இணைந்து கொள்ளச் சொன்னார்.

நானும் 180 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட்டை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டேன். அந்த ஐவரோடு நானும் இணைந்து அறுவராக புறப்பட்டோம்.

முதலில் வனத்தில் விளையும் பொருட்களை விற்கும் ‘வனஸ்ரீ’ அங்காடியை அறிமுகப்படுத்தினார்கள். ‘சஃபாரி முடித்ததும் இங்கு இறக்கி விடுவோம். உங்களுக்கு வேண்டிய பொருட்களை அப்போது வாங்கிக் கொள்ளலாம்’ என்று கைடு கூறினார்.

ஊட்டி, மூணாறு போன்ற பல இடங்களில் மனித அடிமைகள் செயற்கையாக உருவாக்கிய தேயிலைத் தோட்டங்கள் தான் அழகை கூட்டுகின்றன. ஆனால், பரம்பிக்குளம், டாப்ஸ்லிப் இயற்கையான வன அழகு.

அடர்ந்த  தேக்கு மரங்கள் நிறைந்திருக்கும் இந்த வனப்பகுதியை உருவாக்கியதில் ஹ்யூகோ வுட் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு நிறைய பங்கு இருக்கிறது. அவர் இல்லையென்றால் இன்று நாம் பார்க்கும் வனம் இல்லை.

வுட் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். டாப்ஸ்லிப்பில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதுதான் அவருக்கான வேலை.

மரங்கள் மீது அளவில்லா பிரியம் கொண்ட வுட்டுக்கு ஒவ்வொரு மரத்தையும் வெட்டும் போதும் மனம் வலிக்கும். அவர்தான் மரத்தை வேரோடு அழித்து விடாமல் மண்ணில் இருந்து இரண்டடி உயரம் விட்டு வெட்டும் முறையை அறிமுகப்படுத்தினார்.

அதனால் மண் அரிப்பு தடுக்கப்பட்டது. வெட்டிய மரங்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கின. இதோடு தனது வேலையை முடித்துக் கொள்ளவில்லை. எப்போதும் அவர் தனது ‘கோட்’ பைகள் நிறைய தேக்கு விதைகளை வைத்திருப்பார்.

காட்டில் பல இடங்களில் நடந்த அவர். தான் நடக்கும் இடங்களில் எல்லாம் தனது குடை கம்பியில் நிலத்தை துளையிட்டு அதில் ஒரு தேக்கு மர விதையைப் போட்டு மூடி வைப்பார்.

காடு முழுவதும் அவர் விதைத்த விதைகள்தான் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பெரிய பெரிய அணைகளைக் கட்டிய இன்ஜினியர்கள் அவர்களின் உடலை அந்தந்த அணைகளிலேயே புதைப்பது போல் இந்தக் காட்டை உருவாக்கிய வுட்டின் விருப்பப்படி அவரது உடல் இந்த வனத்தில்தான் புதைக்கப்பட்டது.

அந்த சமாதி எங்கிருக்கிறது என்று எங்கள் கைடிடம் கேட்டேன். அப்படியொரு சம்பவத்தையே அவர் கேள்விப்பட்டதில்லை என்று சொன்னபோது எனக்கு வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சியது. எவ்வளவு சுலபமாக அந்த மாமனிதனை நாம் மறந்திருக்கிறோம்.

அந்த வனத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சமாதி தான் வளர்த்த தேக்கு மரப் பிள்ளைகளின் உதிர்ந்த சருகுகளால் மூடப்பட்டு இருக்கும். அதற்குள் அமைதியான உறக்கத்தில் வுட் இருப்பார்.

எங்கள் வேன் அடர்ந்த வனத்துக்குள் நின்றது. கீழே இறங்கினோம். எதிரே வானுயர்ந்த தேக்கு மரம் நின்றிருந்தது. ‘கன்னிமாரா’ என்ற இந்த மரம்தான் உலகிலேயே மிக வயதான தேக்கு மரம். கிட்டத்தட்ட 460 வருடங்களாக பல தலைமுறைகளைக் கடந்து நிற்கிறது.

3.bp.blogspot.com - 2026
உலகிலேயே அதிக வயதான கன்னிமாரா தேக்கு மரம் 

48.50 மீட்டர் உயரமும் 6.57 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்ட மரம் “மஹாவிருக்ஷா புரக்சார்’ விருதைப் பெற்றுள்ளது. இந்த மரத்தை வெட்டினால் ஒரு ஊருக்கே வீடு கட்டலாமே என்று வேன் கைடிடம் ஆங்கிலேயர் கேட்க, எதுவும் செய்ய முடியாது. 65 வயது கடந்த எந்த தேக்கு மரமும் உபயோகப்படாது. வெட்டினால் பொடிப்பொடியாக உதிர்ந்து விடும் என்றார்.

இந்த மரத்திற்கு அடுத்தபடியாக அதிக ஆயுள் கொண்ட உயிரினங்கள் இங்கு வாழும் ஆமைகள் என்றார். காட்டில் ஆமைகள் வாழுமா? 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள் இங்கு அதிகம். ஆச்சரியமான தகவல்.

 

மீண்டும் எங்கள் பயணம் பரம்பிக்குளம் நோக்கி நகர்ந்தது. காட்டின் பாதையில் வேன் வந்தபோது திடீரென்று டிரைவர் நிறுத்தினார். கைடு கீழே இறங்கி வேகமாக, சாலையை விட்டு கடந்து ஒரு 20 அடி சென்று எதையோ எடுத்து வந்தார்.

நாங்கள் என்னவோ ஏதோ என்று பரபரத்துப் போயிருக்க கையில் பிஸ்கட் கவரோடு வந்தார். எங்களிடம் காட்டி, “பிளாஸ்டிக்! இதை யாரோ போட்டு சென்று விட்டார்கள். விலங்குகள் சாப்பிட்டால் இறந்து விடும்” என்றார். கேரளா இந்த விஷயத்தில் முதன்மையாக இருக்கிறது.

4.bp.blogspot.com - 2026
மர வீடு

ஏரிக்கரையோரம் அழகான இரண்டு மர வீடுகள் இருக்கின்றன.இங்கு தங்கியபடி ஏரியின் அழகையும், வனத்தின் செழுமையையும் ரசிப்பது இனிமையான ரசனை.

4.bp.blogspot.com prXF20xmFXk VNNzI7QIU9I AAAAAAAADAU XElq g3iVNI s1600 IMG 5817 - 2026
தூனக்கடவு ஆணை

பரம்பிக்குளம் பகுதியில் தூனக்கடவு ஆணை, பரம்பிக்குளம் ஆணை என்று இரண்டு அணைகள் உள்ளன. இரண்டுமே காமராஜர் கட்டியது. அதிலும் ஒரு அணையிலிருந்து மற்றொரு அணைக்கு 8 கி.மீ. நீள சுரங்கப்பாதையில் தண்ணீர் செல்கிறது. இந்த அணைகள் இருப்பது கேரளாவில். ஆனால் இதன் தண்ணீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு..!

 
3.bp.blogspot.com - 2026
பரம்பிக்குளம் அணை

காமராஜர் என்ற மாமனிதருக்கு தமிழகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. நான் செல்லும் இடங்களிலெல்லாம் அவர் கட்டிய அணைகள்தான் அப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியுள்ளன.

எங்கள் கைடு 50 முறையாவது காமராஜர் பெயரை உச்சரித்திருப்பார். அந்த வெள்ளையர்கள் மனதில் கூட அவர் பெயர் ஆழமாக பதிந்து விட்டது.

1.bp.blogspot.com uGvrPBoIaLE VNNzOYM - 2026
பரம்பிக்குளம் ரவுண்டாணா

பரம்பிக்குளம் அணையையும் வளைத்துப்போட கேரளா முயன்று வருகிறது. ‘ஒரு கறிவேப்பிலையைக் கூட சுயமாய் உற்பத்தி பண்ண துப்பு இல்லாதவர்கள் மலையாளிகள்’ என்பார் மலையாள எழுத்தாளர் சக்காரியா. ஆனால், கேரளத்துக்காரர்களுக்கு தண்ணீர் மீதான காதல் மட்டும் தீர்வதேயில்லை. என்றைக்கு இதுவும் முல்லைப் பெரியாறு போல் வெடிக்கப்போகிறதோ தெரியவில்லை.

ஒருவழியாக எங்களின் சஃபாரி முடிவுக்கு வந்தது. விலங்குகளின் சரணாலயத்தில் எங்கள் கண்ணில் பட்டது மான்களும் ஒரேயொரு காட்டு யானை மட்டுமே! ஆனாலும் இயற்கை அழகு மனதை நிறைத்தது.

மீண்டும் ஏறிய இடத்துக்கே வந்து இறங்கினோம்!

 

எனக்கான பஸ் மீண்டும் மாலையில்தான் இருக்கிறது என்றார்கள். அதற்காக நான் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அந்த வெளிநாட்டினர் வந்த வேனில் 10 பேர் போகலாம். அவர்கள் நால்வர் மட்டுமே இருந்ததால் அவர்களிடம் கேட்டேன். மகிழ்ச்சியோடு அவர்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள்.

நான் தங்கியிருந்த வெஸ்டர்ன் காட்ஸில் இறக்கி விட்டார்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த வெள்ளையர்கள் மூன்று மாதமாக இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி கூறினேன். பிரமித்துப் போனார்கள். தங்கள் டூர் புரோக்கிராமில் மதுரை இல்லை. அடுத்த முறை வரும்போது மதுரையையும் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்.

நான் ‘ஹாலிடே நியூஸ்’ இதழை அவர்களிடம் கொடுத்தேன். அந்த இதழில் வேல்ஸ் நாட்டைப் பற்றிய கட்டுரை ஒன்று இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ‘என்னுடைய நாடு..!’ என்று குதூகலித்தார்கள். நானும் என் நினைவாக அந்த இதழை அவர்களுக்கே கொடுத்து விட்டேன்.

மறக்க முடியாத ஒரு பயணமாக டாப்ஸ்லிப் அமைந்திருந்தது.  

அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..!  

 

மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் கண்டுபிடிக்கும் போது அந்த கண்டுபிடிப்பாளரை உலகம் கொண்டாடும், விருது கொடுத்து கௌரவிக்கும்.

ஆனால், அந்த கண்டுபிடிப்புக்கு பின் கசப்பான உண்மைகளும், அதிர்ச்சி நிறைந்த சிலரின் பங்களிப்பும் இருக்கும். அது எந்த காலத்திலும் வெளியுலகத்திற்கு தெரியாமலே போய்விடும்..!

தெரியாமல் என்பதைவிட.. மறைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும்..!

அப்படி மறைக்கப்பட்ட  ஒரு பெண்ணின் கதைதான் இது

 அவள் பெயர் அனார்ச்சா, அவள் ஒரு அடிமைப்பெண். அடிமைகள் அவர்கள் உடல் மீது கூட ஆதிக்கம் செலுத்த முடியாத காலம் அது. அவர்கள் உடல் அவர்களுக்கு சொந்தமில்லை.

பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்த பருவப் பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் மூலம் கர்ப்பம் திணிக்கப் பட்டிருந்தது. முகம் தெரியாத அந்த ஆணின் கருவை சுமந்து கொண்டே தன் எஜமானுக்கு ஆன எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். அந்த கறுப்பின அடிமைப்பெண்.

அது கி.பி.1846-க்கும் 1849-க்கும் இடைப்பட்ட காலம். பெண்களின் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்பு பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ் என்பவர் இந்த ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் மீதும், ஏழை அயர்லாந்து பெண்கள் மீதும் இந்த கசாப்புக்கடை பாணியிலான, பயங்கர கொலைகார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

2.bp.blogspot.com Vn6HHrKR0U8 VNTG5jB 6jI AAAAAAAADCU GKmCm0uLL6w s1600 James Marion Sims - 2026
டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ்

இன்று டாக்டர் சிம்ஸ், ‘நவீன மகப்பேறு மருத்துவத்தின் தந்தை’ என்று கொண்டாடப்படுகிறார். இந்த ஆய்வுக்கு பின்னால் புறக்கணிக்கப்பட்ட.. ரணங்கள் நிறைந்த.. ரத்தம் சிந்திய பெண்களின் வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்திதான் அனார்ச்சா!

அனார்ச்சாவிற்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் அவள் சொல்லச் சொல்ல, டாக்டர் அலெக்ஸாண்ட்ரியா சிலிஞ்ச் என்பவர் ஆங்கிலத்தில் அந்த கொடூரத்தை புத்தகமாக எழுதினார். புத்தகத்தின் வரிகள் ஒவ்வொன்றும் படிப்பவர்கள் மனதை பதைபதைக்க  வைக்கும்.

பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலில்.. பருத்திச் செடியில் இருந்து பருத்திகளை பறித்துப் போடுவதுதான் கர்ப்பிணிப் பெண்ணான அனார்ச்சாவின் வேலை. தோட்ட வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தால், வீட்டில் முதலாளியின் குழந்தைகளை கவனிக்க வேண்டும். மற்றவர்களுக்கு சமைத்து போட வேண்டும்.

ஒரு நாளில் 18 மணி நேரம் தனது எஜமானருக்காக உழைத்தாள் அனார்ச்சா. ஓய்வே அறியாத உழைப்பு, உடலை மோசமான நிலைக்கு கொண்டு போனது. குச்சியாய் உடல் மெலிந்தது. எலும்புகள் எல்லாம் கொடூரமாக வலித்தன.

நிறை மாதம் வேறு… எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற மகிழ்ச்சி அவளிடம் நிரம்பி வழிந்தது.

ஒரு அடிமைப்பெண்ணின் வாழ்க்கை மிக மிக சிக்கலானதுதான், ஆனாலும் இத்தகைய அழகிய நிமிடங்கள் அந்தப் பெண்களிடம் இருந்து பறிக்கப்படாமல் இயற்கை விட்டு வைத்திருந்தது.

அன்று பின்னிரவு…

அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விடிவதற்குள் குழந்தை பிறந்து விட வேண்டும் என்று அவள் இறைவனை வேண்டினாள். விடியற்காலை அவளுக்காக பருத்திக் காட்டு வேலை காத்திருந்தது. குழந்தை பிறந்தது என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருக்க முடியாது.

இரவு முழுவதும் போனது. அவளின் வலியும் முடிவுக்கு வரவில்லை. குழந்தையும் பிறக்கவில்லை. வலியோடு வேலைக்கு சென்றாள். இப்படியே மூன்று நாட்கள் கடந்தது… அனார்ச்சாவின் நிலை கவலைக்கிடமானது.

இனி இந்த அடிமைப்பெண்ணால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது நிச்சயமாக தெரிந்தபின், மனசில்லாமல் மருத்துவமனைக்கு அனார்ச்சாவை அனுப்பிவைத்தார் அவளது முதலாளி.

மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்டாள். டாக்டர் சிம்ஸ் அந்த அறைக்குள் நுழைந்தார். மூன்று நாட்களாக குழந்தையைப் பெற்றெடுக்க அவளின் நிலையைப் பார்வையிட்டார்.

அப்போதெல்லாம் இப்படி நடந்தால், அந்த பெண்ணுக்கு மரணத்தை தவிர வேறு வழியில்லை.

டாக்டர் சிம்ஸ் கர்ப்பபையில் சிக்கியிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

உடனே அருகில் கிடந்த சுத்தப்படுத்தப்படாத, துருப் பிடித்த, ஒரு பெரிய இடுக்கியை எடுத்து அவளின் பிறப்புறுப்பில் நுழைத்து, குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்தார்.

1.bp.blogspot.com - 2026

டாக்டருக்கு குழந்தையை பத்திரமாக எடுக்க வேண்டும் என்ற அக்கறை மட்டுமே இருந்தது. அனார்ச்சாவைப் பற்றி எந்த கவலையும் அவருக்கு இல்லை. அளவுக்கு மீறிய பெரிய இடுக்கி என்பதால் அனார்ச்சாவின் பெண்ணுறுப்பில் காயங்களும், கிழிசல்களும் ஏற்பட்டன.

அடிமைப்பெண்களுக்கு என்றே மருத்துவமனையின் பின்புறம் இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கு தரையில் நீண்ட நாட்கள் பஞ்சத்தில் அடிப்பட்டது போல் பல அடிமைப்பெண்கள் படுத்துக் கிடந்தார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்த அனார்ச்சாவிற்கு தனது விதி எப்படியோ? என்ற பயம் வந்தது. இவர்களைப்போலவே தானும் வேதனையை அனுபவிக்க வேண்டிவருமோ, தன்னை யாராவது இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுவார்களா? பலவிதமாக சிந்தித்தாள்.

குழந்தையை வெளியே எடுக்க இடுக்கியை பயன்படுத்தியதால் அவளின் பெண்ணுறுப்பு கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. இந்த வேதனையில் இருந்து அந்த பெண்ணை மீட்க யாரும் நினைக்கவில்லை.

மாறாக, நாளுக்கு நாள் அவளின் பெண்ணுறுப்பிலும், கர்ப்பபையிலும் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

1.bp.blogspot.com Y3JgdCZsLA8 VNTHgLlemtI AAAAAAAADCk yd091uJG Fo s1600 the gynecological work of j marion sims - 2026

சுற்றிலும் டாக்டர் சிம்ஸின் உதவியாளர்கள், டாக்டர்கள் சூழ்ந்து நிற்க, ஒரு மேஜையின் மீது அனார்ச்சா படுக்க வைக்கப்பட்டாள். அவளின் பெண்ணுறுப்பை தெளிவாக எல்லோரும் பார்ப்பதற்காக கால்களை விரிக்கச் செய்து, இடுக்கியைப் பயன்படுத்தி விரித்து பிடித்தபடி அனார்ச்சாவின் அந்தரங்கத்தை ஆராய்ந்தனர்.

அவள் எதுவும் பேச அனுமதிக்கப் படவில்லை. எப்போதும் அவள் ஆறாத ரணங்களோடும் வலியின் வேதனையிலுமே இருந்தாள்.

அனார்ச்சாவுக்கு தன் குழந்தையுடன் சேர்ந்து வாழ ஆசை. ஆனால், அதற்கு அனுமதிக்கப்படவே இல்லை. மார்பில் கட்டியிருக்கும் பாலின் வேதனை தாங்க முடியாததாக இருந்தது.

வாரங்கள் பல கடந்தன. மருந்தும், சரியான உணவும் இல்லாமல் வலியின் ரண வேதனையை தொடர்ந்து அன்பவித்தாள்.

அங்கிருந்து வெளியேறவும் அவளால் முடியவில்லை. முன்பின் தெரியாத யார் யாரோ அவளை தேடி வருவார்கள். யார் யாரிடமெல்லாமோ தனது பெண்ணுறுப்பைக்  காட்டியபடி படுத்திருப்பாள். அவர்கள் அதை தொட்டுப் பார்த்து ஏதேதோ பேசிக்கொள்வார்கள்; குறிப்பெடுப்பார்கள்; காயங்களைப் பற்றி கவலைப் படாமல் குரடை நுழைப்பார்கள்.

பெண்மையின் உணர்வுகள் மரத்துப்போய் ஜடமாய் மற்றவர்கள் முன் அவள் கிடந்தாள்.

மூன்று வருட ஆய்வுக்குப்பின் டாக்டர் சிம்ஸ், பெண்ணின் பிறப்புறுப்பு பற்றியும், குழந்தைப் பிறப்பில் அதன் செயல்பாடு பற்றியும் முழுதாக தெரிந்துக் கொண்டார். அதைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தன. குழந்தைப் பிறப்பில் ரகசியமாக இருந்த பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. மர்மமாக இருந்த பல விஷயங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தன.

சிம்ஸ்க்கு விருதுகள் தேடி வந்தன. ‘குழந்தை பிறப்பு மருத்துவத்தின் தந்தை’ என்ற பட்டமும் வந்து சேர்ந்தது.

ஆனால், கற்பனைக்கு கூட எட்டாத கொடுமைகளை அனுபவித்து, கட்டாயப்படுத்தி தியாகம் செய்யவைக்கப்பட்ட அனார்ச்சாவை யாரும் கண்டுகொள்ள வில்லை. உலகிற்கு தெரியப்படுத்தவும் இல்லை.

ஆய்வுகள் எல்லாம் வெற்றிகரமாக முடிந்த பின் அந்த  அடிமைப்பெண்ணின் அந்தரங்கம் அவர்களுக்கு தேவைப்படவில்லை.

டாக்டர் சிம்ஸ் புகழின் உச்சியில் ஏறிகொண்டிருக்க.. எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த அனார்ச்சாவோ.. ஆடைகளற்று, அம்மணமாய் வீதியில் தூக்கி வீசப்பட்டாள்…!

வாதாபி கொண்ட அகத்தியர்

 

 
    சித்தர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் ஒன்று சேர வந்து நிற்பவர் அகத்தியர்தான். சித்தர் என்றால் அகத்தியர், அகத்தியர் என்றால் சித்தர் என்கிற அளவுக்கு சித்தர்களிலே புகழ்பெற்ற முதன்மைச் சித்தர் அகத்தியர்.

    நவீன மருத்துவ உலகம் கூட விடை காணமுடியாத பல நோய்களுக்கும், மருந்துகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான விளக்கம் கொடுத்தவர். சித்த வைத்தியத்திற்கு இவர் செய்திருக்கும் பணி செயற்கரியது.

4.bp.blogspot.com I8OKID6H5DA VNiBOTTafrI AAAAAAAADC4 PMAgIXMa5UE s1600 agathiyar - 2026

    அகத்தியரின் தோற்றம் பற்றிப் பலவிதமாகப் புராணங்கள் கூறுகின்றன. தாரகன் என்ற அரக்கர்கள் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த காலம். அவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வேட்கையில் இந்திரன், வாயு, அக்னி துணையுடன் பூமிக்கு வந்தான். இவர்களைக் கண்ட அரக்கர்கள் மனதில் அச்சம் ஏற்பட அவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். கடல்நீர் முழுவதும் வற்றச் செய்தால்தான் அரக்கர்களை பிடிக்க முடியும் என்று நினைத்த இந்திரன் தன்னுடன் வந்திருந்த அக்னிக்கு ‘கடல்நீரை வற்ற செய்!’ என்று கட்டளையிட்டான். ஆனால் அக்னி இதை ஏற்கவில்லை.

    “இந்திரனே, கடல்நீரை வற்றச் செய்துவிட்டால் உடகில் உள்ள நீர் வளங்கள் எல்லாம் வற்றிவிடும்.  பூமியில் வாழும் உயிரினங்கள் நீரின்றி மரணம் எய்தும். அதனால் கடல்நீரை வற்றவைக்க முடியாது” என்று பதிலுரைத்தார்.

    அரக்கர்களை அழிக்க முடியாமலே மேலோகம் திரும்பினர். சிறிது காலம் அமைதியாக இருந்த அரக்கர்கள் மீண்டும் தொல்லை கொடுக்க தொடங்கினர். இவர்களின் கொடூரங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் கடல்நீரை வற்றச் செய்ய வேண்டும். அன்றே இந்த கடல்நீரை வற்றிப்போகும்படி செய்திருந்தால் இன்று இத்தனை துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்த இந்திரன்.

    கோபத்துடன் அக்னி தேவனைப் பார்த்து “நீ வாயுடன் கூடி பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல்நீரையெல்லாம் குடிக்கக்கடவாய்” என்று சாபமிட்டான். அதன்படி அக்னி, வாயுடன் கூடி  பூமியில் விழுந்து அகத்தியராய் தோன்றினார். இந்திரனின் விருப்பப்படி அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்துவிட்டார். வற்றிய கடலில் ஒழிந்து கொள்ள இடமில்லாமல் அரக்கர்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தனர். அவர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தார். இப்படியாக அகத்தியர் உருவானதை ஒரு புராணம் விவரிக்கிறது.

    இன்னொரு புராணம் வேறொருவிதமாக விவரிக்கிறது.  பூமியின் கடற்கரை அருகே மித்திரனும் வருணனும் தங்கியிருந்த காலம். இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்திருந்த ஊர்வசியைப் பார்த்தனர். அவளின் அழகு அவர்களைக் கிறங்க வைத்தது. தங்கள் மனதை பறிகொடுத்தனர். இருவருக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரிடமிருந்தும் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியத்தை ஒருவர் குடத்திலிட்டார். இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.

    குடத்திலிருந்த வீரியம் அகத்தியராக உருபெற்றது. தண்ணீரில் விட்ட வீரியம் வசிஷ்டராக தோன்றியது. இப்படி ஒரு புராணம் கூறுகிறது. காவிரி புராணம் இன்னொருவிதமாக கூறுகிறது. பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தை கண்டு அவள் மீது மையல் கொண்டு, காமவயப்பட்டதும், வீரியத்தை வெளிவிட, அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாக கூறுகிறது. இப்படி அகத்தியரின் தோற்றம் பற்றி விதவிதமாக புராணக்குறிப்புகள் இருந்தாலும் சித்தர்கள் உலகில் தவிர்க்க முடியாத சித்த பெருமான் அகத்தியர்தான்.

    ராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவனுக்கு பிணந்தின்னுமாறு சபிக்கப்பட்ட சாபத்தில் இருந்து விடுதலை செய்தார். தான் வருவது தெரிந்திருந்து வணங்காமல் இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.

    நீரின் மீது படுத்து கடுந்தவம் புரிந்தார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததால் பல அரிய சக்திகளைப் பெற்றார். வடதிசையில் வாழ்ந்து வந்த அகத்தியர் தென்திசை நோக்கிவந்தார். வரும் வழியில் அவரது முன்னோர்களைச் சந்தித்தார். அவர்கள் எல்லாம் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். தனது பித்ருக்கள் இப்படி இருப்பதைக்கண்டு கவலை கொண்ட அகத்தியர் ‘எப்படி விடுவிப்பது?’” என்று கேட்டார்.

    “அகத்தியனே! உன்னைக் கண்டதும் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். நீ திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தப்பின்தான் நாங்கள் இதிலிருந்து விடுபட முடியும். அதன்பின் தான் சொர்க்கம் புக முடியம்” என்றனர்.

    அகத்தியர் எப்போதுமே கடுந்தவத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர். தவமும் இறைவனை நினைக்கும் பேரானந்தத்தைவிட வேறு எதையுமே பெரிதாக நினைக்காதவர். வேறு எதிலும் நாட்டம் கொள்ளாதவர். திருமணம், மனைவி, இல்லற வாழ்க்கை என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்காதவர்.

    ஆனால் தன் முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக “கவலைக் கொள்ளாதீர்கள்! விரைவில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்” என்று கூறி விதர்ப்ப நாட்டை நோக்கி நடந்தார்.

    அந்த நாட்டு அரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரை என்ற பெண்ணை அதிகமான பொருள் தந்து மணந்து கொண்டார். ஒரு மகனை ஈன்று முன்னோர்களின் கடனைத் தீர்த்தார்.

    தமிழுக்கு உரிய முருகக் கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு ‘அகத்தியம்’ என்ற இலக்கிய நூலை இயற்றினார்.

    ஒருமுறை சிவபெருமான் உமாதேவி திருமண வைபவம் நடைபெற இருந்தது. இறைவனின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்களும் ரிஷிகளும் இமயத்தில் ஒன்று கூடினர். உலக மக்கள் அனைவரும் அங்கு திரண்டதால் பூமியின் வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. தாழ்ந்துபோன இந்த பூமியை சரிசெய்ய அகத்தியர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று சிவபெருமான் கூறினார்.

    உடனே அகத்தியர் அழைக்கப்பட்டார். “அகத்தியரே! எமது திருமணம் காண அனைவரும் இங்கு ஒன்று கூடியதால் வடப்பகுதி தாழ்ந்துவிட்டது. இதனை சமநிலைப்படுத்த தென்திசைப் போக வேண்டும். உம் ஒருவரால்தான் இதுமுடியும்” என்று சிவபெருமான் கட்டளையிட்டார்.

    “எம்பெருமானே! உலகமே கண்டு களிக்கும் தங்களின் திருமணத்தை அடியேனும் காண ஆவல் பிறக்கிறது. திருமணத்தைப் பார்த்தபின் செல்கிறேன்” என்றார் அகத்தியர்.

    “அகத்தியரே! இது தாமதிக்கும் செயல்அல்ல. உடனே தென்திசை செல்! அங்கே உனக்கு நானும் உமாதேவியும் திருமண கோலத்தில் காட்சி தருகிறோம்” என்றார்.

    இதனைக் கேட்ட அகத்தியர் மன மகிழ்வுடன் தென் திசைக்கு பயணம் மேற்கொண்டார். தென்திசையை அடைந்ததும் உலகம் சமநிலை அடைந்தது.

    ஒரு சமயம் விந்திய மலைக்காடுகளில் வாதாபி, இல்வலன் என்ற கொடிய அரக்கர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வரும் அப்பாவி மனிதர்களைத் தந்திரமாக வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர். விருந்து நல்லதுதானே என்று நினைத்துப் போனவர்கள் மாண்டுபோனார்கள்.

    விருந்துக்கு செல்லும் மனிதர்களிடம் வாதாபியை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவர்களின் வயிறு புடைக்க கறி சமைத்து உண்ணச் செய்வான் இல்வலன். விருந்தினன் உண்டு முடித்ததும் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா!’ என்று அழைப்பான். உடனே வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான்.

    வயிறு கிழிக்கப்பட்டதால் விருந்தினன் இறந்து போவான். இறந்தவனை இரண்டு அரக்கர்களும் அறுத்துத் தின்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.

    ஒருநாள் அகத்தியரும் அந்தப் பக்கமாக நடந்துப்போய் கொண்டிருந்தார். உடனே இல்வலன் அகத்தியரை தனது இல்லத்திற்கு விருந்து உண்ண அழைத்தான். அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் அழைப்பவரின் தந்திரங்களை தெரிந்து கொண்டார். அழைப்பைத் தட்டாமல் இல்வலன் இல்லத்திற்கு சென்றார் அகத்தியர். அங்கு வழக்கம்போல் வாதாபியை ஆட்டுக்கறியாக மாற்றி சமைத்து வைத்திருந்தான். உணவை மிகவும் பணிவோடும் பாசத்தோடும் பரிமாறுவதுபோல் நாடகம் நடத்தினான் இல்வலன்.

    அகத்தியர் வயிறு நிறைந்தது. உணவு முழுவதும் வயிற்றுக்குள் போனவுடன் ‘வதாபி நீ ஜீரணமாகக் கடவாய்’ என்று கூறி வயிற்றைத் தடவினார். உடனே வாதாபி ஜீரணமானான். இதனை அறியாத சகோதரன் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா, வெளியே வா!’ என்று மீண்டும் மீண்டும் கூவி அழைத்தான். ஆனால் வாதாபி வரவேயில்லை. அகத்தியரின் தெய்வீகத்தன்மை உணர்ந்த இல்வலன் அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

    அவனை மன்னித்து அகத்தியர் அவனிடமிருந்து தனது மனைவி உலோபமுத்திரை விரும்பிய செல்வங்களை இல்வலனிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார். மனைவியுடன் சிறிது காலம் தங்கியிருந்த அகத்தியர் அதன்பின் தனது முன்னோர்களை சாபத்தில் இருந்து விடுவித்தார்.

    சில ஆண்டுகளுக்குப் பின், தமது நுற்றுக்கணக்கான சீடர்களுடன் பொதிகை மலைக்குப் புறப்பட்டார். அங்குதான் அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ்முனி என்று பல பெயர்கள் ஏற்பட்டது.

    அகத்தியர் எழுதிய நூல்களை ‘நாதரிஷி’ என்பவர் தம் விருப்பத்திற்கு மாறாக எழுதி வெளியிட்டதைக் கண்டு வெகுண்டு போன அகத்தியர் “நீ தவறான நூல்களை எழுதி வெளியிட்டதால் உனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீராமலே போகட்டும்” என்று சாபமிட்டார்.

    இதனைக்கேட்டு மனம் நொந்து போன நாதரிஷி அகத்திய முனிவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு மன்னிப்பு கொடுத்த அகத்தியர் “என்னுடைய நூல்கள் சங்கப்பலகையில் மிதந்துவரும் காலத்தில் நீ அவற்றை அடைந்து சந்தேகம் தெளிவாய்” என்று சாப விமோசனம் அருளினார்.

     இப்படியாக பல அற்புதங்களை செய்து, பல நூற்றாண்டுகள் அகத்தியர் பூமியில் வாழ்ந்தார்.

வந்தாச்சு.. 9.2 ஹோம் தியேட்டர்

 

 
ஹாலிடேயை ஜாலிடே ஆக்கும் சமாச்சரங்களில் ஒன்று மியூஸிக்! அதிலும் வீட்டில் ஹோம் தியேட்டர் ஒன்று இருந்துவிட்டால், ஜாலிக்கு கேட்கவே வேண்டாம்.
 
ஹோம் தியேட்டர்ப் பற்றி தெரிந்து கொள்வதற்கு  முன் நாம் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தாக வேண்டும். 
 
ஆரம்பத்தில் சினிமாவில் ‘ஆடியோ டிராக்’ என்பது ‘மோனோ’வாகவே இருந்தது. அந்த ஒரு டிராக்கில் தான் வசனம், பாடல், இசை என்று எல்லாமே பதிவாகி இருக்கும். திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில்தான் இவை அத்தனையும் கேக்கும். 
 
‘மோனோ’வில் உள்ள குறை இசையின் நுண்ணிய ஒலிகளை அது விழுங்கிவிடுவதுதான்.
 
70-களின் தொடக்கத்தில் ஆடியோவில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அதுதான் ‘ஸ்டீரியோ’! ஒரே டிராக்காக இருந்த ஆடியோவை வலது, இடது என இரண்டு டிராக்காகப் பிரித்தார்கள். 
 
சில இசை கருவிகளை வலது டிராக்கிலும், சிலவற்றை இடது டிராக்கிலும் பதிவு செய்தார்கள். இது இசை கேட்பதில் ஒரு சுகமான அனுபவத்தை ஏற்படுத்தி தந்தது. 
4.bp.blogspot.com XkjOfH5RvtA VNr4xRiBA7I AAAAAAAADDI n7wf5S4FV o s1600 Sholay8 - 2026
‘ஷோலே’ முதல் ஸ்டீரியோ திரைப்படம்
 

ஸ்டீரியோவில் இந்தியாவில் வெளிவந்த முதல் படம் ‘ஷோலே’! தமிழில் ‘ப்ரியா’! அப்போதெல்லாம் இந்திய ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஸ்டீரியோ ஒலிப்பதிவு கிடையாது. 
 
ஸ்டீரியோவில் ஒரு படம் பண்ண வேண்டும் என்றால், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு லண்டனுக்கு ஓடவேண்டும். மேலும், அன்றைய இசையமைப்பாளர்கள் ஸ்டீரியோ ஒலிப்பதிவில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெறவில்லை.
 
அதனால், ஸ்டீரியோ முறை சினிமாவில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. 70 எம்.எம்.-ல் எடுக்கப்படும் அரிதான சில படங்கள் மட்டுமே ஸ்டீரியோவில் வந்தன. ஆனால், காலப்போக்கில் இசைத்தட்டுக்களில் பதிவு செய்யப்படும் சினிமா பாடல்கள் எல்லாமே ஸ்டீரியோவில் பதிவு செய்யப்பட்டன. 
 
‘வாக்மேன்’ அறிமுகமான பின் ஸ்டீரியோ முறைக்கு மவுசு கூடியது. ஹெட்போன் மூலம் கேட்பது இசையில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. அதன்பின் இசைப் பதிவு முறையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.
2.bp.blogspot.com bfajou7QW1k VNr6NKWpaSI AAAAAAAADDo xd - 2026

இப்படி மந்தமாகப் போய்க்கொண்டிருந்த சினிமா ஆடியோவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது, 90-களின் தொடக்கத்தில் தான். அமெரிக்காவில் இருக்கும் ‘டால்பி லேபரட்டரி’ ஆடியோவை 5 டிராக்குகளாக பிரிக்கும் முறையை கண்டுபிடித்தது.
3.bp.blogspot.com - 2026
‘ஸ்பீட்’ டால்பி சிஸ்டத்தில் வந்த முதல் படம்
முதன் முதலில் ‘ஸ்பீட்’ என்ற ஹாலிவுட் படம் டால்பி சிஸ்டத்தில் வெளிவந்தது. தமிழில் கமலஹாசன் நடித்த ‘குருதிப்புனல்’ வந்தது.
4.bp.blogspot.com wTo1GJNEt A VNr6YgJSp I AAAAAAAADDw NzNg14zjK64 s1600 digital dts surround - 2026

டால்பி தொழில்நுட்பத்தில் ஒரு சில சின்ன மாற்றங்களை செய்து அடுத்த வருடமே டி.டி.எஸ். என்ற ‘டிஜிட்டல் தியேட்டர் சரவுண்ட் சிஸ்டம்’ முறை அறிமுகமானது. 
1.bp.blogspot.com - 2026
டி.டி.எஸ். முறையில் வெளிவந்த முதல் படம்
இந்த தொழில் நுட்பத்தில் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜுரஸிக் பார்க்’ தான் முதல் படமாக வெளிவந்தது. தமிழில் ‘கருப்பு ரோஜா’. இந்த படம் சரியாக ஓடாததால் இரண்டாவதாக வந்த ‘இந்தியன்’ படமே டி.டி.எஸ். பெருமையை எல்லோரும் அறியச் செய்தது. இந்த படம்தான் பல தியேட்டர்களை டி.டி.எஸ். சிஸ்டத்துக்கு மாற வைத்தது.
 
அப்போது சாட்டிலைட் சேனல்கள் வீட்டின் வரவேற்பறையில் புகுந்து எல்லோரையும் டி.வி.யின் முன்னே முடக்கிப் போட்டிருந்த காலம்.  
 
முடங்கிப் போயிருந்த மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு கொண்டு வருவதற்கு, இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அவசியத் தேவையாக இருந்தன. தொழில்நுட்பங்கள் ரசிகர்களுக்கு கொடுத்த திருப்தியில் சினிமாக்காரர்களின் பணப்பை நிரம்பியது.
1.bp.blogspot.com rPRF6yE15QE VNr6jw XLPI AAAAAAAADD4 Ue06foMnlbE s1600 51bwMlvn2%2BL. SY300 - 2026
 ‘ஆன்க்யோ’ ஹோம் தியேட்டர்
சினிமா தியேட்டர்களில் மட்டும் குடி கொண்டிருந்த இந்த ஆடியோ அதிசயத்தை வீட்டுக்கு கொண்டுவந்தது,  ‘ஆன்க்யோ’ என்ற ஜப்பான் நிறுவனம். இன்றைக்கும் ஹோம் தியேட்டர் தயாரிப்பில் இதுதான் முன்னணி நிறுவனம். வீட்டுக்குள் வந்த இந்த அதிசயம், வந்த வேகத்திலேயே விற்பனையில் சூடு பிடித்தது.
 
 தியேட்டரில் சென்று கூட்டத்தின் இடையே சிக்கிக்கொள்ளாமல், விசில் சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக படத்தை தியேட்டரின் தரத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹோம் தியேட்டர் வரப்பிரசாதமாக அமைந்தது.
 
மோனோவிலும் ஸ்டீரியோவிலும் இசையைக் கேட்டுகொண்டிருந்தவர்களுக்கு 5.1 ஹோம் தியேட்டர்கள் புதிய இசை அனுபவத்தை தந்தன.
 
 அது என்ன 5.1..?!
 
 ஒரு இசையை ஐந்து டிராக்குகளாகப் பிரித்து பதிவு செய்யும் முறை. சென்டர், ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட், சரவுண்ட் ரைட், சரவுண்ட் லெஃப்ட் இதுதான் அந்த ஐந்து டிராக்குகளின் அமைப்பு.
 
 இதில் சென்டர் என்பது டி.வி.க்கு பின்னால் இருக்கும் ஸ்பீக்கரை (டிராக்) குறிக்கும். இதில் வெறும் வாய்ஸ் மட்டுமே பதிவாகி இருக்கும். டி.வி.க்கு இருபக்கமும் சிறிது தூரத்தில் ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட் ஸ்பீக்கர்கள் (டிராக்குகள்) இருக்கும் இதில் இசை பதிவாகி இருக்கும். திரையின் இடது பக்கம் நடக்கும் காட்சிகளின் சிறப்பு சப்தங்கள் இடது டிராக்கிலும் வலது பக்கம் நடப்பது வலது டிராக்கிலும் பதிவு செய்திருப்பார்கள்.
 
இது படம் பார்ப்பவர்களை காட்சியோடு அப்படியே ஒன்றவைக்கும்.
 
‘சரவுண்ட் ரைட், லெஃப்ட்’ என்பது நாம் உட்காந்திருக்கும் இடத்திற்கு இடது      பக்கமும் வலது பக்கமும் அமைத்திருக்கும் ஸ்பீக்கர்களை (ட்ரக்குகள்) குறிக்கும். கூட்டத்தின் நடுவே சிக்கிகொள்வது, டிராஃபிக்கில்  மாட்டிக்கொள்வது, சண்டை காட்சிகள் போன்றவற்றில் இந்த  டிராக்குகள் இயங்கும்  மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும். இதனால் டிராஃபிக்கில் ஹீரோயின் மாட்டிக்கொண்டால்  நாம் டிராஃபிக்கில் இருப்பது போன்ற உணர்வை உண்டாகும்.இப்படியாக 5 டிராக்குகள் வேலை செய்கின்றன.
2.bp.blogspot.com bAM32lldL38 VNr6yt0awsI AAAAAAAADEA 5HIqN6 GdJg s1600 z11roomdiag - 2026

அது என்ன .1 (பாயிண்ட் ஒன்)…?
 
அந்த ஒரு டிராக்கில் வெறும் ‘லோ ஃப்ரிகுவேன்ஸி’ ஒலிகளை மட்டுமே கொடுத்திருப்பார்கள்.
 
இதுதான் பேஸ் ஒலிகளை துல்லியமாகக் கொடுத்து தியேட்டர்  அனுபவத்தை நமக்கு கொடப்பது.  இது அரைகுறையான டிராக் என்பதால் இதை முழுமையான டிராக்காக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் பாயிண்ட்  ஒன் என்று வைத்து விட்டார்கள். 
 
மற்ற டிராக் ஸ்பீக்கர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்ற வரைமுறை உண்டு. ஆனால் பாயிண்ட் ஒன் என்று அழைக்கபடுகிற சப்- ஊஃபார்களுக்கு மட்டும் இந்த வரைமுறை எல்லாம் கிடையாது. அறையில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளாம்.
 
இந்த 5.1 இசை சரவுண்ட் அனுபவத்தை தந்தாலும் நமக்கு பின்னால் இருக்கும் பகுதி இசையால்  சூழப்படாமல் வெற்றிடமாக இருப்பதாய் உணர்ந்தார்கள், இசை ஆர்வலர்கள். அதையும் சரி செய்வதற்காக பின்னால் மையமாக ஒரு டிராக்கை அமைத்தார்கள்.
 
இதை ‘ரியர் சென்டர்’ என்றழைத்தார்கள். இதற்கு  ‘6.1 டால்பி – ஈ எக்ஸ்’ என்றும்  ‘6.1 டி.டி.எஸ் – ஈ எஸ்’ என்றும் பெயரிட்டார்கள். இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று இந்த கண்டுபிடிப்பாளர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.
 
ஆனால் மனிதனின் இசைஆர்வம் அமைதியாக இல்லை. அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக ‘லூகாஸ்’ என்ற பிலிம் கம்பெனி ‘டி. ஹெச்.எக்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர். அதன்படி ‘ரியர் சென்டர்’  டிராக்கோடு நின்று போயிருந்த ஹோம் தியேட்டரில் ரியர் டிராக்கை இரண்டாகப்பிரித்து ‘ரியர் லெஃப்ட்’, ‘ரியர் ரைட்’ என்று அறிமுகபடுத்தினார்கள். 7.1 ஹோம் தியேட்டரை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான். 
 
சிலர் பேஸ் ஒலிகளை மிகவும் விரும்பி கேட்பார்கள்.அவர்களுக்கு ஒரு சப் ஊஃபர் மட்டும் போதுமானதாக இருப்பது இல்லை.அதனால் இரண்டு சப் ஊஃபர் வைக்கும் விதமாக ஒரு டிராக்கை உருவாக்கினார்கள். அதுதான் 7.2 ஹோம் தியேட்டர். 
2.bp.blogspot.com zqgkLKBFvrw VNr7EAyfmcI AAAAAAAADEI cDx5kzroRtE s1600 Home%2BTheater 1 - 2026

இதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்று நினைத்தவர்களுக்கு மேலே வெற்றிடமாகதானே இருக்கிறது. அங்கும் டிராக்குகளை வைத்தால் என்ன என்று யோசித்தார்கள்….விளைவு ரியர் லெஃப்ட், ரைட் ஸ்பீக்கர்களுக்கு  மேலே சற்று  உயரத்தில் சீலிங்கை தொட்டபடி ‘ரியர் அப்பர்-லெஃப்ட்’, ‘ரியர் அப்பர்- ரைட்’ என்று இரண்டு டிராக்குகளை புதிதாக சேர்த்து விட்டார்கள்.இப்போதைக்கு கடைசியாக இருப்பது 9.2 ஹோம் தியேட்டர் தான். 
 
இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று விஞ்ஞானத்துக்கே வெளிச்சம்! 
 
ஆனால் இந்த ஹோம் தியேட்டர்களை எல்லாம் ஒரிஜினல் சாஃப்ட்வேர் உபயோகித்து அதற்குரிய நிறுவனம் சான்றிதழ் அளித்திருந்தால் தான் கேட்பதற்கு  நன்றாக இருக்கும். இப்படி சான்றிதழ் பெற்று ஒரிஜினல் சாஃப்ட்வேரோடு கிடைக்கும் 5.1 ஹோம் தியேட்டர்களின் குறைந்தபட்ச விலை ரூ.25,000. இதுவே 7.1 என்றால் 75,000. 9.2 ஹோம் தியேட்டரின் ஆரம்ப விலை 2 லட்சம். அதிகபட்ச விலைக்கு எல்லையே இல்லை. ஏனென்றால் ஒரு ஸ்பீக்கரின் விலையே ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் இருக்கிறது.
 
பொதுவாக, ஹோம் தியேட்டர்களின் ஆம்பளிபையர்களை ரிசீவர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த ரிசீவரில் ஆடியோ-வீடியோ இன்-புட் கொடுத்து அவுட்-புட் எடுத்தால் ஒலி ஒளியின் தரம் கூடுகிறது. வீடியோவிலும் சரி ஆடியோவிலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவு ‘நாய்ஸ்’ என்பது உள்ளே புகுந்துவிடும். இது வீடியோவில் புள்ளிகளையும், ஆடியோவில் இரைச்சலையும் ஏற்படுத்தும். இதை பில்டர் செய்து தரமான துல்லியமான ஒலி ஒளிகளை அனுப்பும் வேலையை இந்த ஹோம் தியேட்டர் ரிசீவர்கள் செய்வது கூடுதல் நன்மை.
 
இப்படி எல்லாமே தரமாக அமைந்தால் சலிக்காத ஓர் இசைப் பயணத்தை நாம் பெறலாம்.