Home Blog Page 6261

இன்று ஹோலிப் பண்டிகை: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.  

போகோஹராம் பயங்கரவாதிகளால் நைஜீரியாவில் 45 பேர் படுகொலை

bogo-haramமைடுகுரி (நைஜீரியா): போகோ ஹராம் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை நைஜீரியாவில் 45க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என கருதப் படும் சிலர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். அங்குள்ள ஜபா என்ற கிராமத்துக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், கிராமத்து வீடுகளை நோக்கி கண் மூடித்தனமாகச் சுட்டனர். பின்னர் அந்தக் கிராமத்துக்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய கிராமத்தினர் தெரிவித்தனர். மாகாணத் தலைநகரான மைடுகுரியிலிருந்து 100 கி.மீ.க்குத் தெற்கில் ஜபா கிராமம் அமைந்துள்ளது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதி என்பதால், தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்தத் தகவல் வெளியுலகுக்குத் தெரியவந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளுர் நேரப்படி அதிகாலை 5.30க்கு இந்தத் தாக்குதல் நடந்ததாக மைடுகுரி பகுதியில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இஸ்லாமிய அரசை உருவாக்கும் முயற்சியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆயிரக் கணக்கான மக்களை இந்த அமைப்பு கொலை செய்து வருகிறது. ஆண்களையும் ஆண் குழந்தைகளையுமே குறிவைத்து அவர்கள் கொன்று வருவதாக ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்: karnataka-high-court தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயல்லலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவிடம் இருந்து மற்றவர்களுக்கு பணம் சென்றதற்கு நேரடி ஆதாரம் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைமுகமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடுத்தனர். அவர்கள் எனக்குக் கொடுக்கும் ஆவணங்களைக் கொண்டே என்னால் வாதிட முடியும் என்றார். இதையடுத்து பவானி சிங், சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை மதிப்பீடு செய்த பொறியாளர் கோவிந்தன் அளித்த அரசுத் தரப்பு சாட்சியத்தை வாசித்தார். அதில், 1993-ல் பையனூரில் சசிகலா இரண்டடுக்கு பங்களா கட்டினார். பிறகு அந்தக் கட்டடம் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய சலவைக் கற்கள் பதிக்கப்பட்டன. இதற்காக மும்பையில் இருந்து இத்தாலி சலவைக் கல், வெள்ளை சலவைக் கல் என பல வகை விலை உயர்ந்த சலவைக் க‌ற்கள் வாங்கப்பட்டன. பையனூர் பங்களாவின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என்றார் அவர். அப்போது குறுக்கிட்ட சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், பையனூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள கட்டடங்களின் மொத்த மதிப்பு ரூ.29 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளனர். அங்கு சுமார் ரூ.100, 150 விலையுள்ள சலவை கற்களை எல்லாம் ரூ.5,919 என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர் என்றார். அதற்கு பவானி சிங், இவ்வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை. கட்டடம், நிலத்தை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர்களது மதிப்பீட்டை ஏற்காமல் 20 சதவீதம் சலுகை கொடுத்தது. வழக்கைப் பதிவு செய்துவிட்டு குற்றச்சாட்டை தேடியுள்ளனர் என்றார். உடனே நீதிபதி குமாரசாமி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்தை அழைத்து, எதன் அடிப்படையில் சொத்துகளை மதிப்பீடு செய்தீர்கள். கட்டடங்களை மதிப்பிட்ட பொறியாளர்களில் 2 பேரை வருகிற 9-ம் தேதி நீதிமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எதற்காக ஜெயலலிதா தரப்புக்கு மதிப்பீட்டில் 20% சலுகை அளித்தது? 50% முதல் 60% வரை தந்திருக்கலாமே? என்றார். இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங், இவ்வழக்கில் சாட்சியம் அளித்துள்ள பொறியாளர்களின் வாக்குமூலம் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை எல்லாம் படித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தத்தை படிக்க வைத்தார். இதன் பின்னர், ஜெயலலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்யும் படி, நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் படும்?

agri-krishnamurthyசென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப் படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இதனை வைத்து எந்த நேரத்திலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி திருமால்நகரைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர், திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறையில் செயற் பொறியாளர் பதவியைக் கூடுதலாக வகித்து வந்தார். இவர் நெல்லை மாவட்ட வேளாண் துறையில் காலியாக இருந்த 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய குழுவை நியமித்தார். ஆனால் சென்னையிலிருந்து அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறி, சிலர் தாங்கள் சொல்பவருக்கே இப் பதவியைக் கொடுக்கவேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளனர். பலத்த நெருக்கடி ஏற்பட்டதால், சென்னை சென்று மருத்துவ விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அங்கிருதவர்கள் ஓட்டுநர் பணியிடம் நியமிப்பவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர். இதனால் தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் மேலும் பணம் தர வேண்டும் என தொடர் நெருக்கடி கொடுக்கப் படவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலைக்குக் காரணம் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார். மேலும், கம்யூநிஸ்டுகளும் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்ததால், இந்த விவகாரத்தில் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் கட்டமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர் திட்டம்: சீனாவுக்கு திடீர் தடை!

colombo-harbourகொழும்பு: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு ‘சீன நிறுவனம் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை’ என்ற காரணம் கூறி, இலங்கை இதனை திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுக நகர செயல் திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைப்படி, துறைமுக நகர வளர்ச்சிப் பணிகளை மறு அறிவிப்பு வரும் வரை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்தது. இதனை வெளியுறவு அமைச்சர் அஜித். பீ. பெரேரா கூறியுள்ளார். கொழும்பு துறைமுக நகர செயல் திட்டம் துவங்குவதற்கு முன், தொடர்புடைய சீன நிறுவனம் முறையாக அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. இதனை இந்த செயல்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அளித்ததாக அமைச்சர் அஜித் .பீ. பெரேரா தெரிவித்தார். அதன்படியே இதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில், துறைமுக நகர செயல் திட்டத்தைத் துவங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்களை இரண்டு வார காலத்துக்குள் அரசிடம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திடம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தெரிவித்த அஜித் பெரேரா, இவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்ட பிறகே, கொழும்பு துறைமுக நகர செயல்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார். இந்நிலையில், கொழும்பு துறைமுக செயல் திட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய செயல்பாட்டாளர் ரவீந்திர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கையில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரி தமது அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான்ஸானியாவில் வெள்ளத்துக்கு 38 பேர் பலி: சாலைகள் முற்றிலும் சேதம்

தர் எஸ் சலாம்: புதன்கிழமை அன்று ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் வடமேற்குப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப் பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சின்யங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு குறைந்தது 82 பேர் படு காயம் அடைந்தனர். இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஜகாயா கிக்வெட்ஸ் அலுவலகம் அறிக்கை அளித்தது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால், பல கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாக தான்சானியா அதிபர் மாளிகை தெரிவித்தது. இந்த மழை வெள்ளத்தால் பல இடங்களில் பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளன. தான்சானியாவில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழைக்காலம். அதன் தொடக்கத்திலேயே மழை வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில், வர்த்தகத் தலைநகரான தார் எஸ் சலாமில் இருந்து 1000 கி.மீ. தொலைவு வரை விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர் என்று செய்தி வெளியானது.

அரியலூர் அருகே பள்ளி வேன்- லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

அரியலூர்: அரியலூர் புறவழிச் சாலையில் தனியார் பள்ளி வேன்- லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கல்லங்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளி வேனுடன் டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டுக் கொண்டு விடச் சென்ற போது, பள்ளி வேன் விபத்தில் சிக்கியது. இதில், பள்ளிக் குழந்தைகள் சூர்யா, காஞ்சனாதேவி, வேன் ஓட்டுனர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பாகச் சென்ற பணியாளர் வாசுகி என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். பள்ளி வேன் விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா திங்களன்று அறிமுகம்: வெங்கய்ய நாயுடு

நிலம் கையகப்படுத்தல் திருத்த மசோதா வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, ”நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்களுடன் பேசி வருகிறோம். எதிர்க் கட்சிகளின் ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள ஆலோசனைகளை ஏற்று அவற்றை திருத்த மசோதாவில் சேர்க்க அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை மற்ற கட்சிகளும் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்’” ‘என்று கூறினார்.

தேர்தலின்போது அதிக ஊழல் நடப்பது தமிழகத்தில்தான்!: முறியடிக்க தயாராகுமாறு அமித் ஷா அறைகூவல்

Amith-Shah கோவை: தேர்தல் காலங்களில், நம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழகத்தின் கோவைக்கு வந்திருந்த அமித் ஷா, இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது… பாஜக., உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தேசிய அளவில் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதில் 6.20 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இது திட்டமிடப்பட்டதில் 60 சதவீதம். மீதமுள்ள 40 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு 53 ஆயிரம் விண்ணப்பப் புத்தகங்களை வினியோகித்தோம். அதில் 12 ஆயிரம் புத்தகங்கள் உறுப்பினர் சேர்க்கப்பட்டு திரும்ப வந்துள்ளது. மீதியுள்ள புத்தகங்களையும் நிரப்பி உறுப்பினர்களைச் சேர்த்து அனுப்ப வேண்டுகிறேன். உறுப்பினர் சேர்க்கை என்பதை தீவிர உறுப்பினர் சேர்க்கையாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் 100 புதிய உறுப்பினர்களை இந்த மாதத்துக்குள் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் இலக்கை எளிதில் எட்டலாம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 19 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். வரும் 31-ஆம் தேதிக்குள் 24 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 6.20 கோடி உறுப்பினர்களில் 8 முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் கொடுத்து தானாக முன்வந்து சேர்ந்துள்ளனர். எனவே 24 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது எளிதானதுதான். தமிழகத்தில் பாஜக.,வை வலிமையாக்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் பார்த்ததில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடக்கிறது. இதனை முறியடிக்க பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும். நாம் 31-ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்ட வேண்டும். இதற்காக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்… என்றார் அமித் ஷா.

அழைத்தது ரஜினியை : அமித் ஷா முன்னிலையில் இணைந்தவர் சம்பந்தி

கோயமுத்தூர்:kasthuri-raja தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜகவினர் தூது விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் பிடிகொடுத்த பாடில்லை. அவருக்காக நரேந்திர மோடியே சென்னை வந்திருந்தபோது, ரஜினி வீட்டுக்குச் சென்று அழைத்துப் பார்த்தார் இந்நிலையில், அவருக்கு பதிலாக அவருடைய சம்பந்தி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து செல்கிறார். இந்நிலையில் இன்று கோவை வந்த அமித் ஷாவின் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார் தனுஷின் தந்தையும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா.