இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி பெரிய கோயிலில் செவ்வாய் கிழமை நடந்த காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஒருவரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் புராண சிறப்புமிக்க நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு காவலாளிகள் பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கொலையாளிகள் கோயிலில் இருந்த சில சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவுகளையும் எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 6தனிப்படை அமைத்து தேடி வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் கூறினார். மேலும் எஸ்பி அளித்த பேட்டியில், “முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் குற்றவாளிகள் என அடையாளம் தெரியவந்துள்ளது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்றார்.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் நடந்த கோயில் பகுதிக்கு அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது கோயில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் விசாரித்த போது தானும் இப் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரும் சேர்ந்து கோவிலில் உண்டியல் கொள்ளையடிக்க வந்தபோது கோயில் காவலாளிகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கோவிலில் உண்டியல் கொள்ளையடித்த பொருட்களை தேவதானம் அருகே கல்லணை பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாக போலீசாரிடம் நாகராஜ் கூறியதையடுத்து போலீசார் அவரை அப்பகுதிக்கு அழைத்து சென்றனர். ஒளித்து வைத்திருந்த பொருட்களை நாகராஜ் எடுத்த போது அவர் கொலை செய்ய பயன்படுத்தி அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டை சாமியை வெட்டியுள்ளார். உடன் அவர் தப்பித்து சென்றதால் போலீசார் நாகராஜ்யை காலில் சுட்டு பிடித்துள்ளனர். தற்போது இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு குற்றவாளி தப்ப முயன்றபோது. உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது .
குற்றவாளி நாகராஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயில் முன் பொதுமக்களுடன் சேர்ந்து கொலைக் குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோயில் காவலர்கள் கொலை சம்பவம் குறித்து அறிந்தது செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான பொது மக்கள் கோயில் முன் திரண்டனர். பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளி நாகராஜ் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போலிசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான நபர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாரை ஏமாற்ற முயன்று உள்ளார்.கொலை வழக்கில் கைதான நாகராஜ் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளி வந்ததும், சிசிடிவி காட்சிகளில் அவரது உருவம் தெரிந்ததை வைத்து போலீஸார் நாகராஜை கைது செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கொலையாளி அப்பாவி போல் நடித்தது போலீசார் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளி, தேவசேனா ஸமேத ஸ்ரீஷண்முக சுப்பிரமணியர் ஸ்வாமி சன்னதி முன்பு வைத்து வைத்து நகர இந்து முன்னனி மற்றும் கந்த சஷ்டி பாராயண குழு சார்பில் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் வேடம் அணிந்து வந்த குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு நகர இந்து முன்னனி தலைவா் மாசாணம் தலைமைதாங்கினார். குழு நிர்வாகிகள் தாயின் மடியில் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன் விஸ்வகர்மன் ராஜேஷ்வரி ஆகியோர் முன்னிலைவகித்தனா் பாராயண குழு ஒருங்கிணைப்பாளா் தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து முருகன் வேடமணிந்த சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. .
முன்னதாக சண்முகசுப்பிரமணியா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது.
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எவ்வாறு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் – என உசிலம்பட்டியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்பினர் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் பஷீர் நடிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான தேசிய தலைவர் திரைப்படத்தை படக்குழுவினர், உசிலம்பட்டி பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் தலைவர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசியத் தலைவர் பட நாயகன் பஷீர், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்த ஜென்மத்திற்கான பலனை அடைந்து விட்டேன் என்றும், ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் சென்று வரும் போது எழுச்சி மிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க வாழ்க என, கை தட்டல்களும், விசில் சத்தமும் தான் கடந்த 10 நாட்களாக எனது காதுகளில் கேட்க முடிகிறது.
விஜய், ரஜினி படம் மாதிரி இருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வது போன்று தியேட்டருக்கு வருகின்றனர். ஏழாம் படை முருகனாக தேவரை சொல்வார்கள், இந்த உசிலம்பட்டிக்கு நான் வரும் போது அவர் சார்ந்த சமுதாய மக்கள் வரவேற்பது சந்தோசமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை கொண்டு சேர்ப்பதில் எனக்கும் ஒரு பங்காக மாறியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதியத் தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று சொல்லும் படம் இது. தமிழ்நாட்டிலேயே அதிகமான வரவேற்பு உசிலம்பட்டியில் தான் கிடைத்துள்ளது என , பேட்டியளித்தார்.
தொடர்ந்து, பேசிய பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி, சுதந்திர போராட்ட வீரர், மறைக்கப்பட்ட வரலாறுகளையும், எண்ணற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் யார் மனதும் புண்படாமல் எடுத்துள்ள படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பகுதியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்புகள், தேவரின் திருத்தொண்டர்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக வைக்கும் கோரிக்கை எப்படி சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
பஸ்ஸில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் வள்ளியூர் ஊருக்குள் போகாது என்று சொல்லி, அவமானப் படுத்தி, கோயில் பூஜாரியை பைபாஸ் சாலையிலேயே இறக்க முயன்ற ‘மதவாத’ அரசு பஸ் நடத்துனருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டியிட வைத்த பூஜாரியின் வீட்டுக்குச் சென்று இந்து முன்னணியினர் பாராட்டு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையைச் சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு நவ.9ம் தேதி அதிகாலை, 4:50க்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை 5 மணி அளவில் நாகர்கோவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் வள்ளியூரைச் சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில், ‘பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்’ என, நடத்துனர் அந்தோணி அடிமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், “இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லுமே. ஏன் இன்று என்னை பைபாசில் இறங்கச் சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அகம்பாவத்துடன் பதிலளித்த நடத்துனர், “பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் சென்றுவர முடியாது” என அவதுாறாக பேசியுள்ளார்.
ஆனால் பயணி சுப்பிரமணியன் பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்தார். அவரது வற்புறுத்தலால் பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கே அவரது குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காரணம் அறிந்து வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து சுப்பிரமணியன் கூறுகையில், ”பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் நடத்துனருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் பொதுவான டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். நடத்துனரும் என்னை அவதுாறாகப் பேசினார். இதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்” என்றார்.
இதனிடையே, இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி நடப்பதாகவும், ஆக.31ம் தேதி இதே பஸ் வள்ளியூருக்குள் செல்லாததால் பஸ்ஸின் நடத்துனரும் ஓட்டுனரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது பேரவைத்தலைவர் அப்பாவு தொகுதி.
திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், ‘ஒன் டூ ஒன்’ பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.
இத்தகைய பின்னணியில், பயணியிடம் மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட நடத்துனர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பூசாரி சுப்பிரமணியனை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பாராட்டிய இந்து முன்னணி அமைப்பினர், அவருக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம், நெல்லை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம். பொருளாளர் துணைத்தலைவர் ஜெயக்கிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் பரமசிவம், களக்காடு ஒன்றிய தலைவர் கணபதிராமன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், “நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் சர்ச்சில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு ஏற முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற கோவில் பூசாரியை நடத்துனர் அந்தோணிஅடிமை, ‘இது நாலுமாவடி சர்சில் இருந்து வரும் பேருந்து. ஆட்களை ஏற்ற முடியாது’ என தகராறு செய்து, பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளதோடு, பூசாரி தோற்றத்தில் இருந்தவரை ஏளனமாக மனதில் வைத்து பேசியுள்ளார்.
பூசாரி பாலசுப்ரமணியன் தனது மனைவி குழந்தையோடு போராடி பேருந்தில் ஏறிய பின்பும் பேருந்தில் இருந்த சில பயணிகள் மற்றும் நடத்துனரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்து செல்லாது என பயணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வள்ளியூரில் பொதுமக்கள் போராடியுள்ளனர். நடத்துனரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத வன்மத்தோடு செயல்பட்ட நடத்துனர் அந்தோணிஅடிமையை தனிநபராய் எதிர்த்து உரிமையை நிலைநாட்டிய பூசாரி பாலசுப்ரமணியன் அவர்களை வள்ளியூர் பொத்தையடியில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம். தனிமனிதனாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் இந்துக்கள் அனைவரிடத்திலும் உருவாக வேண்டும் என பாராட்டி, வாழ்த்தினோம்” என்றார்.
இதுபோன்ற கையாலாகாத ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான திரு. பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து விரோதமும் கோயில் பராமரிப்பில் மெத்தனமுமே காரணம் என்று அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இப்படி ஒரு கொடூரக் குற்றம் நிகழ்ந்துள்ளது, ஏட்டளவில் கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில், கோவில் சிலைகள் சேதத்தில் தொடங்கி உயிரைப் பறித்து கோவில் உண்டியல் பணத்தைத் திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கையில், திமுக அரசின் தொடர் இந்து விரோதமும், கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மக்களின் மதநம்பிக்கைகளையும் சட்டம் ஒழுங்கையும் ஒரு சேரத் தாக்கிய இந்தக் கொடூரக் குற்ற வழக்கில், வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல்துறை ஈடுபடக்கூடாது. மேலும், கோவில் பணத்தைக் களவாட அப்பாவி உயிர்களைக் காவு வாங்கிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; தமிழக அரசு அலட்சியம் செய்வதை இந்து முன்னணி கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் உண்டியல் உடைத்து திருட திருடர்கள் வந்துள்ளனர். திருடர்களைத் தடுத்த இரு காவலர்களை கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்துள்ளனர். கோவிலில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கொலை செய்யும் அளவு துணிச்சல் வருவதற்கு காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவம் பெருகி வருகின்றது. மேலும் திருக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நகைகள் ஏதேனும் திருடுபோய் உள்ளதா என்பது போன்ற தகவல்களும் ஏதும் வெளிவரவில்லை.
இரவு நேரங்களில் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முறையான ரோந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட தவறுவதே காரணமாக அமைகிறது.
தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சுவாமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே திகழ்கிறது.
திருக்கோவில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து பிற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து முன்னாள் ராணுவ வீரர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
மேலும் இக்கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை விரைந்து கைது செய்திடவும், கோவிலை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த இருவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
டெல்லியில் நடந்த தீவிரவாதிகளின் அட்டாக் என்பது அவசர கதியில் டாக்டர் முஷாமில் ஷகீல் கைது ஆனதும் உடனே வேலையை காட்டி அரைகுறையாக அட்டாக் செய்யப்பட்டிருக்கலாம். ஆம் அதன் டெரர் மாட்யூல் மிகப்பெரியதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹரியானவில் கிட்டத்தட்ட 2.9 டன் அமோனியா வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகள் டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம். அதன் மூலத்தை கண்டுபிடித்த காரணமாக, அதை உடனடியாக அவசரகதியில் வெடிக்க வைத்திருக்க கூடும்.
அதுவும் அந்த காரில் மூவர் இருந்துள்ளதாக வருன் செய்திகளை பார்த்தால், தற்கொலைப்படையில் அவ்வாறு இருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் அதை டார்கெட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அது வெடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அதனை நெருங்கிய நிலையில் ரிமோட் மூலம் வேறொருவர் கூட அதை அவசரமாக வெடித்திருக்க கூடும்
அந்த வகையில் ரிமோட்டாக செயல்பட்டிருந்தால், அந்த வாகனம் கூகுள் மேப் போன்ற வழியில், வகையில் ட்ரேஸ் செய்யப்பட்டு வெடிக்க வைத்திருக்கக்கூடும்.
2014 ஆண்டு சல்மான் கான் என்பவன் அந்த Hyundai i20 (HR 26 CE 7674) காரை வாங்கியிருக்கிறான். அதை ஓலாவில் முகமது தாரிக் என்பவனிடம் விற்றதாகவும், அவனின் ஊர் புல்வாமா, இருப்பது ஃப்ரிதாபாத் (மா)வட்டம். அவனின் வாக்குமூலம் சந்தேகத்துக்கு இடமாக இருந்தகால் அவனை கைது செய்திருக்கரார்க்ள்.
அந்த கார் வந்தது புல்வாமவில் இருந்து, வந்திருக்க வேண்டும். அது பெட்ரோல், CNG கார் என்பதால், அதை அங்கே வெடிக்க திட்டமிட்டுருந்தால், அதற்கு அருகாமையில் CNG மட்டுமல்ல பெட்ரோலும் ஃபுல்லாக நிரப்பியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அதன் தாக்கம் அதிகரிக்க அது உதவும் என்பதால் அதை செய்திருக்க வேண்டும்.
இந்த வெடிகுண்டுகளை டாக்டர் முஷாமில் ஷகீல் (2,900 கிலோ) வெடிபொருள் கொண்டு வந்தவனும் புல்வாமா இப்போ இருப்பது ஃப்ரிதாபாத் என்பதால், பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் அதே வகையாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல இன்னொரு இடத்தில் முன்பு RDX கைப்பட்டப்பட்டதாக செய்தி வந்ததும் நாமும் பகிர்ந்திருந்தோம், அதுவும் இதே அமோனியா வகை வெடிபொருள் என்பதும், அதை ஏற்கனவே ட்ரிஸ்ட்ரிப்யூட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்பதும், அதில் ஒன்று வெடித்திருக்க கூடும் என்பதும் சாத்தியமாக இருக்கலாம்.
இந்த குழு ஹபி சையீத்தின் வட்டத்தில் தொடர்பில் இருப்பதாக ஆரம்ப கட்சி விசாரணைகல் கை காட்டுவதும், அது பங்ளாதேஷ் வழியாக இந்தியாவில் கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் தோராயமான விசாரணை செல்லும் திசைகளை கைகாட்டுகிறது.
எனவே மொத்தமாக பங்க்ளாதேஷில் இருந்து ஊடுறுவியவர்கள இந்தியா முழுவதும் வேட்டையாட வேண்டிய அவசியம் இப்போது இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்ரியாவின் சிலிகுறி எல்லையில் பங்க்ளாதேஷ் அதன் HQ17 வகை (அதாங்க பாகிஸ்தானில் பல்லிளித்த HQ-19 இன் குறைந்த வகைக் வான் பாதுகாப்பு சிஸ்டம்).
அத்துடன் அங்கே சீனாவுடன் 5 பில்லியன் டாலரில் நவீனப்படுத்தப்பட்ட ஏவுகணைகள், அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றவை தாக்குதலுக்கு தயாராகும் சூழலில் மட்டும் அந்த ஆயுதங்கள் அங்கே வைக்கப்படும் என்றாலும், பாகிஸ்தான் பட்ட பாட்டிற்கு பிறகு அதை பங்க்ளாதேஷ் எப்படி செய்ய முடியும்?
அதன் நோக்கம் இதன் மூலம் இந்தியா தனது கடும் நடவடிக்கைகளை பங்க்ளாதேஷுக்கு எதிராக எடுக்கும்போது அங்கே இருக்கும் அடிப்படைவாத இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு எதிராக திருப்ப முடியும் என்பதும் டீஃப் ஸ்டேட்டின் திட்டமிடலாக இருக்கும்.
இந்த நிலையில் இதுவரை BSF மூலம் மட்டும் பாதுகாக்கப்பட்ட் பங்ளாதேஷ் எல்லையில் (இந்தியாவின் அதிக 4300+ கிமீ எல்லை தூரம்) இந்தியா முதன் முதலாக மூன்று ராணுவத்தின் படைகளை, நவீன ஆயுதங்களை பெர்மெனெண்டாக நிருவியிருக்கிறது. அது சிலிகுறி என்பது பங்க்ளாதேஷ், நேபாள், சீனாவின் எல்லைகள் அருகில் உள்ள 22 கிமீ தூரம் கொண்ட ஒரு சிக்கன் நெக் என்ற பகுதி என்பதால், அதை சீனா செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இருக்கும் அவ நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் டீஃப் ஸ்டேட்டின் திட்டமிடலாக இருக்கலாம்.
ஆஃப்கானில் பக்ராம் விமானப்படை தளத்தை இந்தியா கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால், அதை அமெரிக்காவிற்கு கொடுக்கவோ, அது பயன்படுத்தவோ செய்த முயற்சிகளை தோற்கடித்து விட்டதாலும், அதில் இந்தியா, ரஷ்யா, சீனா ஒரே குரலில் அமெரிக்காவை எதிர்ப்பதாலும், இந்த வேலையஒ டீஃப் ஸ்டேட் செய்திருஜ்க கூடும்.
அதை பாகிஸ்தான் மூலம் செய்ய வாய்ப்புகள் குறைவான சூழலில், அப்படி செய்யும் செயல்கள் இந்தியா மீது தொடுக்கப்பட்ச போராகவே கருதுவோம் என்று அறிவிக்கப்பட்டதால், பங்ளாதேஷ் வழியாக செய்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவவின் ஆறு வடகிழக்கு மாநிலங்களை இணைத்து படா பங்க்ளாதேஷ் என்று வரைபடத்தை யூனுஸ் ராணுவ தளபதிக்கு கொடுத்தது என்று எல்லாம் பார்க்கும்போது, இந்தியா, பங்க்லாதேஷுக்கு எதிராக கடும நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் பங்ளாதேஷிகளை, திருப்பூர் உற்பட இந்தியா முழுவதும் வேட்டையாட வேண்டும். அது பல வகைகளில் இந்தியாவிற்கு உதவும். குறிப்பாகி 5 கோடி பங்க்ளாதேஷிகளும், ரோஹிங்காக்களும் இந்தியாவில் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது.
அவர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் வெறும் உடுறுவல்காரர்கள் மட்டுல்ல, அவர்கள் திரிணமுல் முதல் திமுகவின் ஓட்டு வங்கிகளாகவும் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியேற்றியாக வேண்டும்.
இரண்டாவதாக, அவர்களில் சிலர் நாசவேலையில் ஈட்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு, அவர்களை வேட்டையாட வேண்டியது மிக அவசியம். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு இங்கே ஆதார் முதல் ஓட்டுரிமம்.பெற்றித்தஙவர்கள் வரை கைது செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட மசூதிகள் சீல் வைக்கப்பட வேண்டும்.
இது தற்போதைக்கான நடவடிக்கையாக இல்லாமல், எல்லையில் ஊடுறுகிறவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் ஒழிய அந்த பயம் ஊடுறுவல்காரர்களுக்கு வராது. எனவே அதில் திருட்ட் வழியில் உள்ளே நுழைகிறவர்கள் ஆணா, பெண்ணா, குழந்தையா என்றெல்லாம் மனிதமாக பார்க்காமல், நமது எல்லைப்படையினர் தயவு தாட்சினியமின்றி சுட்டுக்கொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதுபோன்ற பலர் இருக்கக்கூடும். நம்மிடையே நட்பாக, அருகில் இருக்கிற மர்ம மனிதர்களில் கூட அவர்கள் ஒளிந்திருக்க கூடும். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்தால் அரசுக்கு தகவல் சொல்ல வேண்டியது அவசியம்.
இந்த தாக்குதலின் தொடர்புகல் எல்லாம் பங்க்ளாதேஷ் வழியாக வந்தாலும் அதன் செயல் பாகிஸ்தானில் இருந்து ஹபீஸ் சையது மற்றும் பாக் ராணுவத்தால் செய்யப்பட்டிருக்கும். இருந்தாலும் அதன் மூலம் டீஃப் ஸ்டேட் ஆந்ப் அமெரிக்கா என்பதில் சந்தேகமில்லை.
ஆரம்பத்தில் ட்ரம்ப் டீஃப் ஸ்டேட்டுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மாறி அவரும் டீஃப் ஸ்டேட்டின் கைகளுக்கு சென்றுவிட்டார். உலகில் 80% பிரச்சினைகளுக்கு மூலாதாரம் இந்த டீஃப் ஸ்டேட் என்பதனால் எப்போது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா ஒழிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த உலகில் அமைதி திரும்பும்.
அதற்கு அமெரிக்காவின் மிக பலமான ஆயுதமான டாலர் அழிக்கப்படும்வரை அதற்கான சாத்தியங்கள் குறைவு. அதற்கு காரணம் அதை எதிர்க்கும் இந்தியா முதல் சீனா வரை அதன் தொழில்களும், முதலீடுகளும் டாலரை நம்பி இருப்பதால் அது உடனே நடக்க வாய்ப்பில்லை.
ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டாலரின் ஆதிக்கம் பெருமளவில் குறையும், அதற்கு பின்பும் அமெரிக்கா தன்னை மாற்றிக்கொள்ளாவிடால் அது குப்பையாகும். அது டீஃப் ஸ்டேடின் கைகளில் இருக்கும்வரை அது மாறுவதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால், நாம் பாகிஸ்தான், பங்க்ளாதேஷை மட்டும் இப்போது வேட்டையாடி நம்மை காப்னாற்றிக்கொள்ள ஆபரேஷன் சிந்தூர் இரு நாடுகள் மீதும் டெக்டிகலாக தொடரவேண்டும்.
அதற்கு இந்த தேசத்தை நேசிக்கும் மக்களாகி நாம், அதை எதிப்பவர்களை தள்ளிவைக்க தயங்கக்கூடாது! #Indhea
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் இருந்து சாஸ்தாகோயில் செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்கிழமை காலை கோயில் திறக்க சென்றபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்து உடன் சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.கோவிலில் உண்டியல் மற்றும் சிலை கொள்ளையை தடுக்க முயன்றபோது இவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன் (65) இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை சிலைகளை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது கொள்ளையடிக்க வந்தவர்களால் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கோவில் சேத்தூர் ஜமின் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன்(65)என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன . இவைகள் மற்றும் நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியும் சாஸ்தா கோயில் செல்லும் சாலையில் ஆய்வு செய்தும் பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும் மிகப்பெரிய கோவிலை சுற்றி மிக உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளே சுவாமி சிலைகள் மூலவர் சன்னதியில் உள்ளன இந்த பழமை வாய்ந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம் இக்கோவிலில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம், நாட்டின் தில்லியில் செங்கோட்டை அருகே நடைபெற்றுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள், தற்போதைய பாஜக ஆட்சியில் இல்லை என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அதை முறியடிக்கும் வகையில் தலைநகர் தில்லியில் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லி செங்கோட்டை அருகே, திங்கள் அன்று மாலை 6:52க்கு, சிக்னலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், சுற்றிலும் தீயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சில வாகனங்கள் தீயில் நாசம் அடைந்தன. பத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கொல்லப்பட்டார்கள். அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ – ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன.
சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் அச்சத்துடன் அப்பகுதியில் இருந்து அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இது காரை வெடிக்கச் செய்து ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கூறப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக, ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியது. அதே நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த நபரின் கார், பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பயங்கரவாதிகள் நிறைந்த புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது தெரிய வந்துள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு மாறியுள்ளது.
முன்னதாக, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதே நாளில் தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை தீவிரமடைந்தது.
இந்நிலையில், தில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தில்லி போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு – காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் தில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது தில்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கலைக்கடல் சங்கமத்திலே, கலைகள் அரங்கேற்றப்பட்டன. கலைகள் ஆனந்தத்தை அளிக்கின்றன மனதை மகிழ்விக்கின்றன. ரசிகர்கள் என்ற வகையிலே நாம் அனைத்தையும் அனுபவித்தோம். எங்கே கைத்தட்ட வேண்டுமோ, அங்கே கைதட்டினோம். நாம் கவனிக்கத் தவறி இருந்தாலும் கூட, பாராட்டுங்கள் என்று உணர்த்தப்பட்டது. அப்படியும்கூட நாம் செய்தோம்.
இயல்பாக, இப்போது 22 தேதியன்று, ராம்லலா அயோத்தியிலே வந்த பிறகு, இதன் விளைவாக எப்போதெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் ஜய் ஸ்ரீ ராம் கோஷம் எழுகிறது. நான்கு நாட்களில் என்னவெல்லாம் நடந்தன…… அது பற்றி விரிவாக நாம் கேட்டிருக்கிறோம்.
மிகவும் உற்சாகமாக இருந்தது ஆனந்தமாக இருந்தது. மிகவும் உத்வேகம் இருந்தது. அருமையான விஷயம். நிறைவு விழாவின் ஒரு பகுதியாக என்றால், உத்வேகத்தைத் தங்களுடைய இதயத்திலே….. பாதுகாப்பாய் வைத்து, உள்ளதைப் உரைக்க வேண்டியிருந்தது. கைதட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை நீங்கள் கைதட்ட வேண்டாம். இப்போது மனவமைதியோடு கேளுங்கள்!!
சம்ஸ்கார் பாரதி அமைப்பு ஒரு நிலைக்கு வந்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதற்கென ஒரு இடம் கலை உலகத்திலும் ஏற்பட்டு விட்டது. அதற்கென ஒரு வல்லமையும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வல்லமைக்குட்டு முன்னேற வேண்டுமென்றால், நாம் முன்னோக்கி சிந்தனை செய்ய வேண்டும். முன்னோக்கிய சிந்தனை என்பது ஒன்றும் புதிய கருத்து அல்ல. ஏனென்றால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது அதன் பின்னணியில் ஒரு இலட்சியம் இருக்கிறது. செயல் வளர்ச்சியில் பல கட்டங்களை கடக்கும் போது, அதன் போக்கின் திசையில் மாற்றம் ஏற்படுவதில்லை. செயலின் இலக்கு மாறுபடுவதில்லை. அந்த வகையிலே, அடுத்த கருத்து என்பது புதிய கருத்து அல்ல. ஒரு செயலைத் தொடங்கும் முன்பாக கருத்து கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும், ஆனால் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று கருத முடியாது. இப்படி சங்கப்பணிகளிலும் கூட நாம் பார்க்கிறோம்.
1925ஆம் ஆண்டிலே சங்கம் நிறுவப்பட்டது அதற்கு 5 ஆண்டுகள் முன்பாக, டாக்டர் ஹெட்கேவார்….. நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் அமைப்புத் தலைவராக இருந்தார். காந்தியடிகள் மாநாட்டின் தலைவராக இருந்தார். டாக்டர் ஹெட்கேவார் அப்போது விதர்பா காங்கிரஸின் உறுப்பினராகவும் இருந்தார். விவாதப்பொருளைத் தீர்மானிக்கும் குழுவில் முன்மொழிவு என்னவாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தில், அவருடைய கருத்துக்களும்….. ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவரும் இரண்டு முன்மொழிவுகளை அளித்தார். இரண்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை…. விவாதப் பொருளாக. ஆனால் அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு இருந்த கொள்கைப் போக்கினை அனுசரித்தே இருந்தது. காந்தியடிகள் தலைவராக இருந்தார் டாக்டர்ஜியின் முதல் முன்மொழிவு என்னவென்றால், முழுமையாக பசுவதைத் தடுப்பை முன்னிட்டு காங்கிரஸ் பாடுபட வேண்டும். மேலும் 2ஆவதாக, முழுமையான சுதந்திரம், என்ற இலட்சியத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் அதுவரை காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யத் தான் வேண்டும்.
லோக்மான்ய திலகர். அண்ணல் காந்தியடிகள் எல்லோரும், மனதில் இதையே இருத்திக் கொண்டு பணியாற்றினார்கள் லோல்மான்ய திலகர் கூறியும் இருந்தார், எத்தனை…. கிடைக்கிறதோ அதைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கிப் போராட வேண்டும். சுயராஜ்ஜியம் என்னுடைய பிறப்புரிமை. மனதில் இருந்ததா என்ற சந்தேகமில்லை மனதில் இருந்தது. ஆனால் உகந்த சமயத்தில் உகந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்றால் எது உகந்த சமயம்?
இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அப்போது காங்கிரஸில் இருந்த மூத்தோர் சுபாஷ் பாபு ஜவஹர்லால் நேரு. இவர்கள் அந்த நாளைய காங்கிரசின் மூத்தவர்கள். டாக்டர் ஹெட்கேவாரின் வயதை ஒத்தவர்கள். அப்போது கல்கத்தா காங்கிரசின்….. மாநாட்டிலும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார் ஆனால் 1920இலே அதற்கும் முன்பாக, டாக்டர் ஐயா கூறினார் முழுமையான சுதந்திரம், இதனை காங்கிரஸ் தனது இலட்சியமாக அறிவிக்க வேண்டும். மேலும், சுதந்திரமான பாரதம், அடிமைத்தளையில் பீடிக்கப்பட்டிருக்கும் பிற தேசங்களை விடுவிக்கும்.
இதையும் அவர் அறிவித்தார். அதாவது சங்கத்தை நிறுவும் முன்பாகவே டாக்டர் ஐயாவின் மனதிலே தீர்மானித்து விட்டார், அதிலே பாரதம் பற்றியும் சிந்தித்தார், அதோடு பாரத த்தின் தாக்கமுடைய இருப்பு உலகை எப்படிப் படைக்கும், அதற்கான வரைபடமும் அவர் மனதிலே தயாராக இருந்தது. ஆனால் இவை எதையுமே அவர் சங்கத்தை நிறுவும் காலத்திலே தெரிவிக்கவில்லை. அவர் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டும் கூறினார். செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? தினமும் ஷாகாவிற்கு வர வேண்டும்.
மோரோபந்த் பிங்க்ளே…… நம்முடைய மூத்த காரியகர்த்தர். ராம்ஜன்மபூமி இயக்கத்தினுடைய….. வழிகாட்டி அவர். அவர் ஒருமுறை பௌத்திக்கின் போது வெகுகாலம் கழித்து கூறினார், அதாவது ஷாகா செல்லும் போது தெரிய வந்திருந்தால், இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று, அப்போது ஒருவேளை நாங்கள் ஷாகா போவதையே நிறுத்தியிருப்போம். டாக்டர் ஐயா இதையெல்லாம் கூறவேயில்லை. ஒவ்வொன்றாக மெல்லமெல்ல இணைந்து கொண்டன. சக்தி அதிகரிக்கும் வேளையிலே, செயல்சக்தி அதிகரித்த போது, அப்போது இதைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. சக்தி இல்லாத போது பெரிதாகப் பேசினால், அதனால் பயனேதும் கிடையாது. தத்தோபந்த்ஜி இந்தச் செயல்பாட்டை செயல்முறையை ப்ரோக்ரெசிவ் அன்ஃபோல்ட்மெண்ட் என்று அழைக்கிறார். படிப்படியாக வெளிப்படுத்தல்.
என் கருத்துப்படி இந்த சன்ஸ்கார் பாரதி அமைப்பின் பயணத்திலே, இப்போது நம்மிடம் போதுமான சக்தி வந்து விட்டது நமக்மென ஒரு இடம் உருவாகி விட்டது, நாம் திட்டமிட்ட நீண்டதூர இலக்கு நாம் நினைக்கும் தொலைநோக்கு சிந்தனை, இதன் அடுத்த கட்டத்தை நாம் எட்ட வேண்டும் அதை நோக்கி நாம் பயணப்பட வேண்டும். சம்ஸ்கார் பாரதி, கலைத்துறையிலே, மிக முதன்மையான அமைப்பாக, ஆவது உறுதி. ஏனென்றால் நாம் எப்போதும் விரிவாக்கம் பற்றியே பேசுகிறோம். மேலும் ஆதாரபூர்வமாக கலை கலாச்சாரத்தை ஊடகங்களாக கருதி, நாட்டுநலனிலே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க, நாம் பணியாற்றி வருகிறோம். ஆகையால் நாம் முன்னேறுவோம் முதன்மை நிலை அடைவோம். இதற்காக வித்தியாசமாக எதையும் சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் ஏன் பெரிதாக வேண்டும் ஏன் முதன்மையாக வேண்டும்? ஏனென்றால் நாமனைவரும் பாரதீய கலையுலகில், பாரதீய கலை ஆய்வினை நிறுவ வேண்டும்.
நாம் கலைஞர்கள், நமது கலையினை வெளிப்படுத்துகிறோம். மற்ற கலைஞர்களின் வெளிப்பாட்டினைப் பார்க்கிறோம். ரசிகத்தன்மையோடு அதை அணுகுகிறோம். நம்முடைய கலையை மிகச் சிறப்பாக அளிக்கிறோம். வெறும் கலை பற்றி மட்டும் என்றால் இதோடு போய் விடும். ஆனால் இதற்காக ஒருங்கிணைக்க வேண்டாம் நமது கலையின் சாதனை எத்தனை சிறப்பானதோ, அந்த அளவுக்கு சிறப்பிடம் கிடைத்து விடும்.
ஆனால் கலை, நற்பண்புகளை ஏற்படுத்தவே படைக்கப்பட்டவை. சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவானவை. எப்படிப்பட்ட சமூகமென்றால், ஒட்டுமொத்த உலகத்தையுமே, ஸ்வம்ஸ்வம் சரித்ரம் சிக்சரண் ப்ருதிவ்யாம் சர்வமானவ:. நம்முடைய நற்பண்புகளை எடுத்துக்காட்டாக்கி, அதை வாழ்க்கைப் பாடமாக்க வேண்டும். அப்படிப்பட்ட மனித சமூகத்தை நம்முடைய தேசத்திலே உருவாக்கியளிக்க, பணியாற்ற வேண்டுமென்றால், இந்த கலையுலகில் சில கலைஞர்களால் மட்டுமே ஒன்றும் ஆகாது. அனைத்துக் கலையுலகத்தின் பணி இது, அனைத்துக் கலையுலகும் இந்த நோக்கோடு பயணிக்க வேண்டும்.
இன்று இந்த நிலை இல்லை. கலையின் பங்குபணி என்னவென்றால், சமூக வாழ்க்கையிலே, இந்த உணர்வோடு கலைஞர்கள் கலை சாதனையை செய்ய வேண்டும். நாம் என்னவோ செய்கிறோம் சம்ஸ்கார் பாரதியோடு தொடர்பு இருக்கிறது அவர்கள் கருத்து அளித்தார்கள். நம்மோடு தொடர்பில் இல்லை என்றாலும் அதே எண்ணப்பாடு கொண்ட பல கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர்களின் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையினர், மெய்யான சாதனை என்னவோ செய்கிறார்கள்.
ஆனால் இது வெறும் தனிப்பட்ட பயிற்சி அல்ல. நம் நாட்டிலே ஒவ்வொரு பயிற்சியும், அவை…. அவரவர் செயல்களின் மாலை, இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவே பயனாகிறது. இறைவனை எவ்வாறு வழிபடுவது? தங்களுடைய, நற்கருமங்கள் என்ற மலர்மாலையை ஏற்படுத்தி, அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது. மேலும் இறைவன், துரும்பிலும் இருப்பவன். விசாலமான விண்ணிலும் இருப்பவன். எங்கும் நீக்கமற நிறைந்தவன்.
அனைத்தும் இறைவனே. இதைத் தான் மிகச் சிறந்த பாடகர்களும் கூட, தங்கள் கலையை வெளிப்படுத்திய பிறகு கேட்க வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள். உள்ளபடியே அவர்களுடைய பாடலைக் கேட்க வந்தவர்கள், அவர்களை இறையாகப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த இறைவன், கேட்க வந்த ரசிகர்களை இறைவர்களாகப் பார்க்கிறார்.
நம்முடைய சமூகம் வழிபடக்கூடியது. இந்த சமூகத்திலே கலையுலகம் தனது பங்குபணியை ஆற்றினால், அனைத்துக் கலைஞர்களும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் இதைப் புரிந்து கொண்டு, தங்களுடைய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆக கலைபற்றிய விளக்கம் பாரதீயம் பற்றிய விளக்கமாகி விடும். அப்படி இன்று இல்லை. பாரதீய கலையின் சாராம்சம் என்ன சத்யம் சிவம் சுந்தரம். அவர் வாய்மைவழி நடக்கிறார். சத்தியத்தை அவர் மறைப்பதில்லை. ஒளித்து மறைத்து எல்லாம் அவர் பேசுவதில்லை. உள்ளதை உள்ளபடி, அப்படியே உரைக்கிறார்.
ஆனால் எந்த வகையாக உரைக்கிறார் என்றால், இதைத் தெரிந்த பிறகு, சத்தியத்தைக் கண்ட பிறகு, சிந்தனை முழுக்க சிவத்தை நோக்கித் திரும்புகின்றது. இப்போது கலையின் கண்ணோட்டம்…. சமூகத்தின்பால் இல்லை என்பதால், சில பொருளற்ற விவாதங்களில் சிக்கிக் கொள்கிறது. அல்லது, கலையின் கண்ணோட்டம், சமூகத்திலே தன்னுடைய சுயநலத்தை நிறைவு செய்வதற்காக, சமூகத்தைப் பிளவுபடுத்தவல்ல கண்ணோட்டத்தை ஏற்படுத்த திருப்பப்படுகிறது. 13.00 ஏனென்றால், உலகின் 2000 ஆண்டுக்காலக் நிலையைப் பார்த்தால், வாழ்வதற்கான போராட்டம். மேலும் பலமுடையவரின் வெற்றி. பலமுடையவரே ஆள்வார். இந்த இரண்டு தத்துவங்களை ஆதாரமாக கொண்டது.
ஆக இந்தக் கருத்தியல்படியே 2000 ஆண்டுகளாக உலகம் இயங்கி வந்திருக்கிறது. நிலையை அப்படியே வைத்திருப்பதில் யாருக்கு நன்மையாக இருக்கிறதோ, அவர்கள் சமூகத்திலே ஏதோ வகையான பிரிவினையை ஏற்படுத்தியபடி இருப்பார்கள். இதையே முயல்வார்கள். சமூகத்திலே கண்ணியமற்றவைகளை முன்னிறுத்துவார்கள். கண்ணியமற்றவை என்பது என் கற்பனையில் உதிக்கவில்லை. அனைத்து உலகமும் இந்தச் சங்கடத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது.
கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நம்முடைய வாழ்க்கையின் நலன்கள், நம்முடைய வாழ்க்கையின் அமைப்பு, நம்முடைய நடவடிக்கைகளின் ஒழுங்குமுறை, அனைத்தின் மீதும் தாக்குதலை உலகத்து மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முன்னேறிய நாடுகள். வோகிஸம், கல்சுரல் மார்க்ஸிஸம் என அநேக பெயர்களில் இவை முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை, கையளவு பேர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக, ஒரு கோட்பாட்டை….. கோட்பாடும் இல்லை, பொய்கள் புனைவுகளை உருவாக்கி, அதன் வாயிலாக, நாடுகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்துவது, இதனால் தாங்கள் சுயலாபம் அடைந்து மற்றவர்களை, நிரந்தரமாக ஆட்சி புரிவது. ஒரு பெரிய கதை உலகிலே அரங்கேறி வருகின்றது. இதன் மீது புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
அனைவருமே, இதிலிருந்து மீள்வது குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கலையின் வாயிலாக நலன்களை நிறுவக்கூடிய கலையின் வாயிலாக சமத்துவத்தை நிறுவக்கூடிய, கலையின் வாயிலாக நல்லிணக்கத்தை நிறுவக்கூடிய பார்வை. இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த பாரதம் இந்தப் பார்வையை முன்னிறுத்தி, செயலாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தக் கண்ணோட்டத்தின் பின்னே வாய்மை இருக்கிறது.
சர்வம் கலு இதம் பிரம்மம். எந்த வேற்றுமையும் பாராட்ட வேண்டிய தேவையில்லை. मातृवत् परदारेषु, परद्रव्येषु लोष्ठवत्।आत्मवत् सर्वभूतेषु. இது எதன் ஆதாரமாக விளங்குகிறதோ அந்தக் கலாச்சாரத்தைக் கலைகள் வாயிலாக வெளிப்படுத்தும் பார்வை. அது பலமடைய வேண்டும். நம் தேசம் சமூகத்திற்காக, நம்முடைய கலைகளுக்காக இறைவன் விதித்த கடமைப்படி, அதை வெற்றிபெறச் செய்ய, நாம் இதைச் செய்தாக வேண்டும். இந்த நோக்கில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அந்த வ்கையிலே சமூகத்திலே தேவைகள் இருக்கின்றன, சமூகத்திலே பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட, பிரிவினர் இருக்கின்றார்கள். அவர்கள் மனதில் வினாக்கள் இருக்கின்றன. இவற்றை மறுக்க முடியாது ஏற்க வேண்டும். இவற்றை நாம் கையாள வேண்டும். நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் இவையனைத்தும் சிவத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டும், என்றதான கண்ணோட்டத்தை நிறுவ வேண்டும். அதன் அழகினை, நம் நாட்டிலே, சிவத்துவத்தோடு மட்டும் அல்லது சத்தியத்தோடு மட்டும்,
நாம் கலைகளின் அழகை அளவீடு செய்வதில்லை. சத்தியமும் சிவமும் ஒன்றுபோலச் செல்லும் போது தான், கலையின் அழகு மெருகேறும். மேலும் சத்தியம் சிவம் சுந்தரம், நம் கலைகளின் அடையாளம். இந்தப் பணியை ஆற்ற வேண்டும். பணியாற்ற வேண்டுமென்றால், கார்யகர்த்தர்கள் வேண்டும். अधिष्ठानं, तथा कर्ता करणं च पृथग्विधम् | विविधाश्च पृथक्चेष्टा, दैवं चैवात्र पञ्चमम्.
தெய்வம் இருக்கிறது. அது சரியான காலத்தில் தான் வெளிப்படுகிறது. ஆலயத்திற்கான போராட்டம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. ஆனால் ஆலயம் இப்போது தான் உருவானது. அதனால் தியாகமோ உழைப்போ குறைவாகச் செய்தார்கள் என்பது பொருளல்ல. அனைவரும் அனைத்தையும் செய்தார்கள், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு செய்தார்கள். உயிர்த்தியாகங்களையும் புரிந்தார்கள்.
ஆனால், 100 குடம் தண்ணீரை தோட்டக்காரன் ஊற்றினாலும், பருவம் வரும் போது தான் பழம் தரும். ஆனால் மேலும்…. 5 ஆவதாக ஒன்று உண்டு தெய்வத்தோடு கூட. அதோடு. அதாவது தெய்வத்தோடு கூட மேலும் ஒன்று 5. அதற்கு முன்பாக நான்கையும் நிறைவேற்ற வேண்டும். இதிலே ஒரு கோட்பாட்டு அடிப்படை உள்ளது. பயணத்தில் நாம் கொள்ள வேண்டிய கண்ணோட்டம். அடுத்ததாக….. செயலாற்றும் முறை.
மூன்றாவதாக, அந்த செயல்முறையை வெற்றியடையச் செய்வதற்கு, அநேக வகையான, முயற்சிகளின் தேவை இருக்கிறது. ஆனால் இவையனைத்தையும் செய்பவரே கார்யகர்த்தர் அவரே கர்த்தா. எலிகளின் நாடாளுமன்றம் திடீரென…… கூடியது. கூட்டப்பட்டது. ஏன்? பூனை என்ற ஒரு விலங்கு உள்ளது. அது நம்மை வேட்டையாடிக் கொல்கிறது. அப்போது வேறேதும் இருக்கவில்லை. எலிகள் மட்டுமே இருந்தன, எலிகள் காரணமாக உலகம் பீடிக்கப்பட்டது. ஆகையால் பிரம்மன் பூனையைப் படைத்து அனுப்பி வைத்தார். பூனை சீறிப் பாய்ந்தது, அடுத்து என்ன? ஏகப்பட்ட எலிகள் இதுவோ பூனை. இதற்கு தினமும் தீபாவளி பொங்கல் தான். ஒரு கையால் ஒரு வீச்சு, 4-5 எலிகள் பிடிக்குள் வந்தன. கொன்று தின்றது. எலிகளுக்கோ பிராண சங்கடம்.
ஆகையால் நாட்டாளுமன்றம் கூட்டப்பட்டது. அனைத்து விதமான எலிகளும் கூடின. பெரியபெரிய உரைகள் ஆற்றப்பட்டன. அந்த கலந்தாய்வு முடிவில் ஒரு தீர்மானம் மேற்கொண்டன. பூனையின் கழுத்திலே ஒரு மணியைக் கட்டுவது. முன்மொழிவு நிறைவேறியது. ஓர்மனதாக. அவையில் இருந்தோருக்கெல்லாம் ஒரே ஆனந்தம் தான். பிரச்சனைக்கு முடிவு கட்டியாகி விட்டது. வழியைக் கண்டுபிடித்தாயிற்று. கிளம்பத் தொடங்கின. அப்போது வெளியேறும் வாயிலிலிருந்து ஒரு வயதான எலி வெளிப்பட்டது. கைகளை அகல விரித்து அந்த வயதான எலி, அனைவரையும் நிறுத்தியது. நல்ல வேலையை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றது, இது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்றது.
ஒரு சின்ன குறையை மட்டும் சரி செய்யுங்கள் என்றது. அது என்ன என்றன மற்றவை. மணியைக் கட்டும் எலியின் பெயரையும் இப்போதே தீர்மானம் செய்யுங்கள் என்றது. தீர்மானிக்கவே முடியவில்லை. அனைத்தும் தங்கள் கருத்தை உரைத்தன. ஆகையினாலே தான், ஏராளமான கட்டுக்கதைகள் பிரசுரிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம். ஆனால் இதுவரை பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுவது பற்றி பிரசுரிக்கப்பட்டதேயில்லை. ஏனென்றால் யார் செய்வார்கள் என்று தீர்மானிக்கப்படவில்லை என்றால் வேலை எப்படி நடக்கும்? ஆகையால் நாம் கார்யகர்த்தர்கள் ஆக வேண்டும். நாம் பணியாற்றும் போது ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கும்.
ஸ்ரீ இராமன் இலங்கை மீது மாபெரும் போரினைத் தொடுத்த பிறகு வெற்றி கொண்டார். பின்னர் தான் வெற்றி கிடைத்தது ஜயித்த பிறகு, வானர வீரர்களோடு கூட புஷ்பக விமானத்தில் அயோத்தி வந்தார். அதன் பிறகு அனைவரும் வரவேற்கப்பட்டார்கள். அவரவர்க்கு ஏற்ற வகையிலே வெகுமதிகளை வழங்கினார் பலவிதமான கௌரவங்கள்….. எத்தனை பெரிய திருவிழா அது!! அனைவருக்கும் ஆனந்தம்…. ஒருபுறம் வெற்றியின் ஆனந்தம். மறுபுறம் திருவிழா கோலாகலம். அனைவரும் அதில் லயித்தார்கள். ஆனால் அனுமனோ எங்கும் காணப்படவில்லை. அனுமன் எங்குமே தென்படவில்லை. பிராட்டி அவரைத் தேடினார் வரப்பணித்தார். அனுமனுக்கு ஒன்று தர வேண்டும் என்று அவருக்குத் தன் மாலையை அளித்தார். அனுமனோ அதில் இருக்கும் ஒவ்வொரு முத்தையும் உடைத்துப் பார்க்க ஆரம்பித்தார். ஏன் என்று மற்றவர்கள் கேட்க அவரோ, முத்துக்களுக்காக நான் சேவை செய்யவில்லை. முத்துக்கள் தாம் இருந்து விட்டுப் போகட்டும். இவற்றைக் குறைத்துச் சொல்லவில்லை. அது முத்துமாலை தான் நான் மறுக்கவில்லை. ஆனால் சேவை செய்பவர்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லை. ஒவ்வோர் முத்திலும் ராமன் இருக்கிறானா என்று பார்த்தார். அவர் இதயத்திலே இராமன் குடியிருந்தார் ஒரு நாள் அதைக் காட்டவும் செய்தார்.
வித்யாவான் குணீ அதிசாதுர. பரந்து ராமகாஜ கரிபேகோ ஆதுர. கார்யகர்த்தரின் கவனம் காரியத்தின் மீதே இருக்கிறது புகைப்படத்தின் மீது அல்ல. இப்போது பழக்கமாகி விட்டது. இதுவே ஃபேஷன். நாமோ கலையை வழிபடுவோர். கலைகளிலே அளிப்பு வெளிப்பாடு, கண்டிப்பாக வேண்டும். நிகழ்ச்சியை எப்படி அளிப்பது? இதன் நல்ல நினைவுகள், புகைப்படமாகப் பாதுகாக்க வேண்டும் இதுவும் ஒரு கலை. இவையெல்லாம் இருக்க வேண்டும்… சரிதான். ஆனால் காரியகர்த்தருக்கென ஒரு வரையறை இருக்கிறது.
அவருடைய கவனம் செயல்களின் மீதே இருக்க வேண்டும் அதாவது யார் கார்யகர்த்தா என்றால் காரியங்களைச் செய்பவரே கார்யகர்த்தா. அப்படிப்பட்ட கார்யகர்த்தர்களாக நாம் ஆக வேண்டும். கலை ஒரு சாதனை. கலை ஒரு திறமை, இறைவனளித்த கொடையாகும். அது நம்மிட த்திலே இருக்கிறது. நாம் அதை வழங்குகிறோம். அதைத் துதிக்கவும் செய்கிறோம். போற்றவும் வேண்டும். ஆனால் அந்தத் துதியை, கேட்க மட்டும் செய்தால், பரவாயில்லை, பார்க்க மட்டும் செய்தால், பரவாயில்லை. அது ஆழமாகச் சென்றுவிடக் கூடாது தலைக்கேறிவிடக் கூடாது. இதை அனைவரும், பழகிக் கொள்ள வேண்டும்.
நீங்களனைவரும் கலைஞர்கள், சமூகத்தில் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள். எங்கள் அமைப்பில் வாத்தியக்குழு பேண்டு வாத்தியம் உண்டு. சங்கத்தின் தேவைகளுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அங்கேயும் நாங்கள் பார்க்கிறோம், அதிலே எனக்கு 5 பாடங்கள் தெரியும் இல்லை 12 பாடங்கள் தெரியும் இது தொடர்பாக பரஸ்பர மிதப்பு, ஏற்பட சாத்தியமிருக்கிறது, ஏற்பட நாம் அனுமதித்தால்.
ஆகையால் நாம், ஒரு வாத்தியத்தில் ஒருவர் தேர்ச்சி பெற்று விட்டால் அவருடைய வாத்தியத்தை மாற்றி விடுகிறோம். இப்போது இந்த அனைத்துத் தடைகளும், ஏற்படுவதோடு, நல்ல திறமையாளர்களுக்கு குறிப்பாக ஏற்படுகிறது. ஆகையால் தான் நான் உங்களிடம் கூறுகிறேன். அனைத்து மனிதர்களும், இதன் காரணமாக, இந்த, அகங்காரத்தால் பீடிக்கப்பட்டாலு ம் கூட, இந்த அகங்காரம் அனைவரையும் விட்டுவிட்டாலும், திறமையாளர்களைப் பிடித்துக் கொள்கிறது. காரியகர்த்தர்கள் இதை விட்டு விலகி கருமமே கண்ணாக இருக்க வேண்டும். விடுபட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஏற்பாடுகளோடு ஒன்றிவிடக் கூடாது. அவசியமானால் அவர்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். தேவைப்படும் வரை பங்கேற்பார்கள்.
தேவை முடிவுக்கு வந்தால், பங்கேற்பும் முடிந்து விடும். அடுத்து யார் பணியாற்ற வேண்டுமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை நான் கவனிப்பேன். இதைத் தான் தொடர்ந்து பழக வேண்டும். நான் என்னுடையது என்று கிடையாது. சம்ஸ்கார் பாரதி என்ன தீர்மானிக்கிறதோ அதுதான். இடம் பெயர் புகழ் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சங்கத்திற்காக இடம் பெயர் புகழை ஏற்க வேண்டும் என்றால், அதையும் ஏற்பேன். ஆனால் அதிலிருந்து விலகி இருப்பேன். நான் விலகி இருப்பேன்.
அமைப்பு என்னை அமர வைத்திருக்கும் இடத்தில் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால், அங்கு இருப்பது, அவசியமானது என்றால், மேலும், அதைப் பொறுத்துக் கொள்வது அவசியமானது என்றால், அதை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் இது என்னுடையது இல்லை. எனக்கு அந்த முத்து தேவையில்லை. எனக்கு இராமனிடம் தான் வேலை. அப்படிப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தால், அவர் தான், கார்ய கர்த்தர் என்போம்.
மேலும் செயல்களில் தடைகள் ஏற்படுகின்றன. நான் செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே கிடைக்குமா, அப்படி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறையும் செயல்களை, புகுந்து செய்ய வேண்டுமா என்றால் அப்படியும் இல்லை. தன்னுடைய பராக்கிரமத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் விருப்பம் இருப்பவர், அவர் எங்கே நுழையத் தேவையில்லையோ அங்கேயும் நுழைந்து விடுகிறார். அல்லது ஏதோ காரணத்தால், அவருக்கு என்று ஒரு புகழ் பராக்கிரமம் கிடைத்து விட்டால், அவர் பணிய மாட்டார், உடைந்து விழுந்தாலும் கூட பணிய மாட்டார். இதற்கும் ஒரு வழக்கு உண்டு இதற்கும் ஒரு ஆதர்ஸம் உண்டு. அதுவும் கூட பின்பற்றக்கூடிய ஒரு விஷயம் தான்.
ஆனால், எப்போது என்றால், செய்யப்படும் காரியம் அவரை விட மகத்தானதாக இருக்கும் வேளையில். சிவாஜி மகராஜுக்கு தோன்றியது சுயராஜ்ஜியத்தை பெற வேண்டும் என்று சொன்னால், முதுகைக் காட்டி ஓடி ஒளிவது அவசியம் என்றால், அவர் கொஞ்சமும் கூச்சப்படவேயில்லை. சுயராஜ்ஜியத்தைப் பாதுகாக்க, நான் உங்களுடைய சேவகன் என்று ஔரங்கசேபுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றால், அப்படியொரு கடிதத்தை எழுத அவர் கூச்சப்படவில்லை. இலக்கு சிவாஜி மகராஜுக்குத் தெளிவாக இருந்தது. ஆனால் அதற்கான கொள்கை, மேற்கொண்ட காரியத்திற்குப் புகழ் சேர்க்கும் திசையில் கொண்டு செல்வது. என்னுடைய சொந்த புகழ் அதனால் அதிகமாகுமா குறையுமா, இதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
ஆகையால் இந்தக் காரணத்தால், அஃப்சல்கான் என்ற ஒரு சங்கடம் அவருக்கு ஏற்பட்ட போது, அப்போது புத்திகூர்மையோடு புரிந்து கொண்டார், களத்தில் அவனோடு மோதுவது சாத்தியமில்லை, எல்லாம் நாசமாகி விடும் என்று. சுயராஜ்ஜியம் மண்ணோடு மண்ணாகி விடும் என்று. ஆகையால் அவர் அவனை, சமவெளியிலிருந்து வெளிப்படுத்தி, மலை-காடுகளில் வரவழைத்தார், முழுமையாக அழித்தார். இதற்குள்ளாக பெரும் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. மக்கள் பலவாறாகப் பேசினார்கள் அவரும் சகித்துக் கொண்டார். ஏனென்றால், தூற்றுதலோ, போற்றுதலோ இவற்றோடு எனக்கு என்ன சம்பந்தம்?
निन्दन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु. लक्ष्मी: समाविशतु, गच्छति वा यथेष्टम् । अद्यैव वा मरणमस्तु, युगान्तरे वा, न्याय्यात्पथ: प्रविचलन्ति पदं न धीरा: ।।
சத்தியம்-நியாயத்துக்குட்பட்டு எந்தப் பாதையை ஏற்றிருக்கிறோமோ அந்தப் பாதையை விட்டு, நாம் சற்றும் விலகிச் சென்று விடக்கூடாது. இதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள், போற்றுதல் தூற்றுதல், செல்வம் ஈட்டுதல் கௌரவிக்கப்படுதல் இல்லையென்றாலும் கூட, கேடு விளைந்தாலும், பயணிக்கும் போது மரணமேற்பட்டாலும், மரணத்தையொத்த வாழ்கையை வாழ நேர்ந்தாலும், ஆனால் இவ்வாறு நடந்தால், நாம் கொண்ட பாதையிலேயே செல்லுவோம். சமநிலை, பொறுமை, உற்சாகமும் வேண்டும். உற்சாகம் இல்லாமல் பணியாற்ற முடியாது. ஆனால் உற்சாகத்திற்கும் ஒரு தேவை உண்டு, காரியம் உன்னதமாக இருக்க வேண்டும், இது தான் உற்சாகத்துக்கான தேவை. இல்லையென்றால் காத்திருக்க வேண்டியிருக்கும். இதன் பிறகும் கூட, வெற்றி தோல்விகள் பாதிக்காமல் இருக்க வேண்டும். எல்லா செயல்களும் வெற்றியிலேயே முடிவடைவதில்லை. தொடர்ந்து பணியாற்றி வர வேண்டும். ஆகையால் முழுமையாக முயற்சிகளில் கசடில்லாமல் ஈடுபட்டால், காரியம் நமது கைகளில், பலன் இறைவன் கைகளில்.
இப்படிச் செல்ல வேண்டும். லோக்மான்ய திலகர் மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் கழித்தார். திரும்பி வந்து பார்த்தால், எத்தனை விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாரோ, அத்தனையும் நீர்த்துப் போயிருந்தன, யாருமே கூட இல்லை. 28.21அடுத்த நாளே கேசரியில் அவர் கட்டுரை எழுதினார், புனஸ்ச ஹரிஓம். என்ன இது இப்படி ஆகி விட்டதே என்று, அவர் சோர்ந்து போய்விடவில்லை. இது தான் பாதை இப்படித் தான் செய்ய வேண்டும் அப்படியே செய்யவேண்டும், என்று ஆரம்பத்திலிருந்து தொடங்கினார். அப்படியே செய்தார். கார்யகர்த்தர்களும் கூட தங்கள் நோக்கத்திற்காக சாதனையில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கணமும் இதை கவனத்தில் கொண்டு நமது நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். நமது செயல்பாடுகளின் அடிப்படையில் நமது அமைப்பின் சகபயணிகளையும், நமது நடவடிக்கைகள் நட்பின் மூலமாக அவர்களையும் நம்மைப்போல மாற்றியமைக்க வேண்டும். அமைப்பினுடைய மெய்யான வலிமை, எண்ணிக்கையில் அல்ல. அதன் மற்ற குணங்களும்கூட அல்ல.
அடிப்படையில் மூன்று விஷயங்கள் தாம். கொள்கைப்பிடிப்பு. கொள்கை என்பதே பிரதானம். அதேபோலத் தான் ஒழுங்குமுறையும். என்னதான் சிறப்பாக நான் செயல்பட்டாலும், அணியில் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் நானே வருவேன் என்பதல்ல, கேப்டன் யார் என்ன செய்வார்கள் என்று கூறுவதுபடியே நடக்கும். நான் ஒழுங்குமுறைப்படி நடப்பேன் எனக்கு என்ன கூறப்படுகிறதோ, அதை ஏற்று நடப்பேன். ஆனால் இந்த ஒழுங்குமுறை எப்படிப்பட்டது? இது திணிக்கப்பட்டது இல்லை ஏனென்றால், கொள்கைப்பிடிப்புகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஒழுங்குமுறைகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஆனால் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஏன் புன்முறுவலோடு ஏற்கிறார்கள் என்றால், ஆத்மார்த்தமான ஒரு இணக்கம் ஏற்படுகிறது. இதை அனைவரும் செய்கிறார்கள், அன்போடு. நமது தொடர்புகள் ஆத்மார்த்தமாக இருக்கட்டும், பரஸ்பர அன்போடு ஒருவரோடு ஒருவர் பழகலாம், ஒருவரை ஒருவர் முன்னேற்ற செயல்களை, ஆற்றுவோம், காழ்ப்பு எரிச்சல் பொறாமை ஏதும் இல்லாமல் இருப்போம், இப்படியாகப் பழகுவோம். இதற்கு முக்கியமானதான குரல் தேவை. இதற்கான மனம் வாக்கு வேண்டும். அதனடிப்படையிலே, நமது செயல்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்றச் செய்வோம். நமது கொள்கைகளை முன்னிறுத்தி முன்னேறிச் செல்வோம்.
இது தான் நமது பலம். இந்த பலத்தின் துணையோடு நாம் பயணித்தால், வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நாம் கவலையே இல்லாமல் பயணிக்கலாம். யாருடைய தயவையும் நாடத் தேவையில்லை. இந்த வகையிலே நாம் பயணிக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்கை அடைய முடியும். நாம் இந்த பலத்தை அடையும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம். இதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே நமது சமூகத்திலே, இருக்கும் பலவகையான கலைஞர்களை, அவர்களை இணைக்க வேண்டும்.
சமூகத்திலே பலவகையான, பிரச்சனைகள் இருக்கின்றன. கலைவாயிலாக அவற்றுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும், மேலும் சமூக கண்ணோட்டம் மாற வேண்டும், அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும், நம்மைவிட்டுப் போனவர்கள் திரும்பி வர வேண்டும், இவையனைத்தும் அந்த விழிப்பின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும், அப்படிப்பட்ட விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும், இதற்கென பிரத்யேகத் திட்டங்களை நாம் கைக்கொள்ள வேண்டும். இந்த வழியில் பயணித்து நாம் முன்னேறினோம் என்று சொன்னால், கலை கலாச்சாரத் துறையினிலே, பாரதத்தின் முன்னெடுப்பு நிறுவப்பட்டு, உலகம் முழுவதற்கும், அவர்களுக்காக ஒரு புதிய முன்னெடுப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலே, ஒட்டுமொத்த உலகிலுமே, மங்கல விஷயங்களை படைத்தளிக்கும், அமுதப்பெருக்கினை உருவாக்கும்.
மனம் வாக்கு செயல்களினால், உலகம் அனைத்தும் நாகரிகம் உடையதாய் உருமாற்றும். உலக சகோதரத்துவத்தை ஏற்று பயணிப்போம், அனைவரையும் ஒன்றிணைப்போம், அனைவரையும் அரவணைத்து முன்னேறுவோம். ஆக, விஸ்வகுருவான பாரதம், அனைவரும் மகிழ்வாய் எந்த நோய்நொடியும் இல்லாமல், அனைவரும் மங்கலங்களையே காணட்டும் யாருக்கும் துக்கமே இருக்க கூடாது.
இப்படிப்பட்ட உலகத்தை நிர்மாணம் செய்யப்படுவதை, இந்த விஷயம், செய்யப்படுவதை, நடைமுறையாவதை, நாம் நம்முடைய இந்த வாழ்க்கையிலேயே கூட காண முடியும். அந்தத் திக்கில் நாம் பயணிக்க முடியும். அந்த அளவுக்கு நாம் பலமடைந்திருக்கிறோம், என்று கூறி அமைகிறேன், நன்றி வணக்கம்.