கேள்வி: “நான் ஒரு ஹிந்து. என்னுடைய மதத்தையும் ஜாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சாமானிய மனிதனாக, அனைவருக்கும் பொதுவானவனாக, உங்கள் முன்னே நிற்கிறேன். ஜாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்வது என் நோக்கமல்ல” என்று ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவை ஒற்றை தேசமாகப் பெருவாரியான மக்கள் கருதுவதின் அடிப்படைக் காரணம், இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்று அவர்கள் நினைப்பதால் – நம் அரசியல் சட்டம் சொல்வதால் அல்ல. அந்தச் சிந்தனையை, ஹிந்துவாக இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்காவிட்டால், இந்தியா ஒரு ஹிந்து தேசமாக நீடிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறையும், அதன் தொடர்ச்சியாக இந்திய ஒருமைப்பாடும் தேயும். இன்னொன்று: ஹிந்துவாக இருக்கும் ஒரு தலைவர் – குறிப்பாக, ஒரு பிரதமரோ அல்லது முதலமைச்சரோ – தான் ஹிந்து என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, ஆனாலும் “ஜாதி, மதத்தால் அரசியல் செய்யாமல்” அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும். ஒரு பிரதமராக மோடி அதைச் செய்துவருகிறார்.
கேள்வி: அமெரிக்காவில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’அமைப்பின் நிகழ்ச்சியில் ஜூலை 6-ம் தேதி பேசிய அண்ணாமலை, “தவெக அரசு தமிழகத்தில் புதிய அரசு. ஒரு பொலிடிகல் டிசிப்ளின் என்பதாக நாம் அதற்கு ஒரு வருட காலம் சப்போர்ட் கொடுப்போம். எக்கிப் பண்ணுவோம். பெட்டர்-ஆ பெர்பார்ம் பண்ணட்டும். தவெக அரசு தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினா அதை முதல் ஆளாக நின்று வரவேற்கப் போறோம்” என்று பேசி இருக்கிறார். இது அவருடைய விசாலமான பார்வை தானே?
பதில்: ஆறு நாட்கள் கழித்துப் பொள்ளாச்சியில் ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். அப்போது, “தமிழகத்தில் 2031-ல் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026-ல் நடந்த மாதிரி, 2031-லும் 39 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள்” என்று அண்ணாமலை பேசியதைக் கேட்டபோது இரு கைகளால் பிடித்து, என் சுற்றிய தலையை நிறுத்தினேன்.
கேள்வி: மோடி, அமித் ஷாவைத் தலைவர்களாகக் கொண்ட பாஜக-விலிருந்து விலகி – அதிலும் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இந்தியாவைத் திறம்பட நிர்வகிக்கையில் பாஜக-வை விட்டுவிட்டு – அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதன் உண்மையான காரணம் என்ன?
பதில்: அது அண்ணாமலைக்கு மட்டும் தெரியும். வெளியில் அவர் தெரிவித்த காரணங்கள் எடுபடவில்லை.
ஒரு ஊகம் இது. மோடி முதலமைச்சராக இருந்து குஜராத்தை மேம்படுத்திய மாதிரி, அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, லஞ்ச ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுத்து, இந்த மாநிலத்தை முன்னேற்ற விரும்பி இருக்கலாம். அதற்கான நெஞ்சுரமும் திறமையும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஆனால் தமிழகத்தில் பாஜக தனியாகவோ, அக்கட்சி தலைமை தாங்கும் கூட்டணியாகவோ, தேர்தலில் மெஜாரிட்டி எம்.எல்.ஏ தொகுதிகளை வென்றாலும் அப்போதைய மத்திய பாஜக – அது எந்த வருடம், அந்த நேரத்தில் அங்கே யார் முக்கியத் தலைவர்களாக இருப்பார்கள் என்பதும் இப்போது தெரியாது – அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கும் என்ற நிச்சய உணர்வு அவருக்கு இல்லாமல் போகலாம். ஆகையால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க நினைத்திருக்கலாம்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.
இன்னொரு புறத்தில், திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, பாஜக-வையும் எதிர்த்து, 2026 தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரான விஜய் அவரது சினிமா வழி ஈர்ப்பால் சாதாரண மக்கள் பலரையும் தனது தவெக-வின் வாக்காளர்களாக மாற்றி இருக்கிறார். திமுக, அதிமுக (அல்லது அந்த இரு கட்சிகளின் கூட்டணி), பாஜக, அண்ணாமலை கட்சி, தவெக + காங்கிரஸ் ஆகியவை தேர்தலில் பிரிந்து போட்டியிட்டால் 2031-ல் அண்ணாமலை ஆட்சிக்கு வருவது மிகக் கடினம்.
கேள்வி: அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா? சுருக்கமாகப் பதில் சொல்லவும்.
பதில்: வேண்டும். அந்தப் பதவிக்கு அவர் மிகப் பொருத்தமானவர். ஆனால் அதன்பொருட்டு அவர் போகும் வழி, தேர்தலில் அவர் கட்சியோ அதன் கூட்டணியோ அவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு வெல்ல உதவுமா என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிச்சயமின்மைக்கு ஒரு முக்கிய காரணம், சென்ற தேர்தலில் விஜய் கட்சி தனித்து நின்று பெற்ற மகத்தான வெற்றி.
கேள்வி: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பொள்ளாச்சி மாநாட்டு மேடைக்கு வந்த அண்ணாமலை, அந்த மேடையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பார்வையாளர்களை வணங்கினாரே?
பதில்: தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியை அவர் மோடியிடம் கற்றிருக்கலாம்!
R. Veera Raghavan Advocate, Chennai Email: veera.rvr@gmail.com Blog: https://rvr-india.blogspot.com
உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : காலிறுதி ஆட்டங்கள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதி ஆட்டங்கள் 9, 10, 11 ஜூலை 2026இல் நடைபெற்றது. இன்று (14.07.2026) முதல் அரையிறுதி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. கால்பந்தாட்டத் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ள ஃபிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜெண்டைனா ஆகிய நாடுகள் அரையிறுதியில் மோதுகின்றன.
முதல் காலிறுதி ஆட்டம் ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் நடந்தது. ஃபிரான்சு, மொரோக்கோ அணிகள் மோதின. ஃபிரான்சு அணியின் எம்பாபே 60ஆவது நிமிடத்திலும் டெம்பெல்லே 66ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மொரோக்கோ அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஃபிரான்சு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இரண்டாவது ஆட்டம் ஜூலை 10இல் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கிடையே இங்க்லேவுடில் நடந்தது. ஸ்பெயின் அணியின் ஃபேபியான் 30ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பெல்ஜியம் அணியின் டி கேடேலாரே 41ஆவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். ஆட்டநேர முடிவில் 88ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மென்னோ இரண்டாவது கோலை அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
மூன்றாவது ஆட்டம் நார்வே, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மியாமியில் நடைபெற்றது. நார்வே அணி 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் பெல்லிங்ஹாம் 47ஆவது நிமிடத்திலும் 93ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் போக்கில் சில நிமிடங்கள் ஆட்டம் நின்றுபோகலாம். அதனை ஈடுசெய்வதற்காக சில நிமிடங்கள் ஆட்டம் நீட்டிக்கப்படும் அவ்வாறு நீடிக்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது கோல் அடித்தது. ஒருவேளை இந்த நேரத்திலும் இரு அணிகளும் சமமான நிலையில் இருந்தால் 30 நிமிடம் ஆட்டம் நீடிக்கப்படும். அப்போதும் கோல்கள் சம்நிலையில் இருந்தால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்படும்.
நான்காவது ஆட்டம் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையே, கன்சாஸ் நகரில் நடந்தது. அர்ஜெண்டைனாவில் மேக் அலிஸ்டார் 10ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சுவிட்சர்லாந்தின் டோயே 67ஆவது நிமிடத்தில் சமன் செய்யும் கோலை அடித்தார். அதன் பின்னர் ஆட்டநேர முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டம் 30 நிமிடம் நீட்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அர்ஜெண்டைனாவின் அல்வரஸ் 112ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் லா மார்ட்டினஸ் 121ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதனால் அர்ஜெண்டைனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.
சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்?
பெரியார் திடல், கம்யூனிஸ்ட் அலுவலகம், வழக்கறிளுர் அலுவலகம், காவல் நிலையம் ஆய இடங்களில் நடைபெறும் சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்.
சாதி மறுப்பு, சாதி கலப்பு திருமணம் செய்து தமிழக அரசிடம் சன்மானம் வாங்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் தான் வாங்க வேண்டும் என்ற அரசானை ஏதும் உள்ளதா ???..
இதற்காக போராடிய தலைவர் யாராவது உள்ளீர்களா ?????
காதல் திருமணங்களில் கூட, பிறந்த குழந்தைக்கு தந்தை சாதி இட்டு தான் சான்றிதழ் வாங்குகிறார்கள் என்பதே வழக்கத்தில் உள்ளது .. அப்படி இருக்கையில் நீங்கள் 60 ஆண்டுகளில் அதிகம் ஒழித்த சாதி எது ??? இளம் பெண்களுக்கு ஒரு தகவல் .. நீங்கள் காதல் திருமணம் செய்து கொஎ்வது, பெரும்பாலும் உங்கள் கணவரின் சாதி எண்ணிக்கையை அதிகரிக்கதானே தவிர. சமூகத்தில் சாதியை ஒழிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..
சழூக செயற்பாட்டாளர், இயக்குநர் மோகன் ஜி
கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.
சரி ஜாதி ஏற்றத்தாழ்வையாவது ஒழிக்குமா..? ஒழிக்காது. இயல்பாக நடக்கும்போது சம்பந்தப்பட்ட இரண்டு நபர்கள் நீங்கலாக அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் ஜாதி உணர்வில் இருந்து வெளியே வருவதில்லை. நாடகக் காதல், லவ் ஜிஹாத்களில் அது மேலும் ஜாதி, மத வன்மத்தை அதிகரிக்கவே செய்யும்.
ஆக, கலப்பு ஜாதித் திருமணமும் கலப்பு மத திருமணமும் பெற்றோரை வாட்டும் கல்யாணம் என்பதற்கு மேல் சமூகத்தில் எதையும் செய்வதில்லை.
இதனால்தான் தமிழகத்தில் 98% பேர் சொந்த ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். மதம் மாறினாலும் அதே மதம் மாறிய சொந்த ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஜாதிக் கலப்புத் திருமணம் கூடாது என்று சொல்பவர்கள் அருவாளை எடுத்துக் கொண்டுபோய் வெட்டிவிடுவதில்லை. கலப்புத் திருமணம் சரி என்று சொல்பவர்கள் தம் வீட்டில் நடக்கும்போது அருவாளை எடுத்துக் கொண்டுபோய் வெட்டுவதும் உண்டு.
ஆக சொல்வது அல்ல; செய்வதே பிரதானம். அதிலும் கலப்பு திருமணங்களிலும் 95% வெளிக்குத் தெரியாமல் சுமுகமாக நடந்து இரு குடும்பங்களுடைய விவகாரமாக அடங்கிவிடுகிறது. அரிதினும் அரிதாகவே மோதலாக வெடிக்கிறது.
ஆக 99% ஜாதியின் பங்களிப்பை விட விரிசலுறும் 1% மட்டுமே பூதாகரப்படுத்தப்படுகிறது. பின்னே நான் முற்போக்கு ஆகிறேனே மம்மி… பிரிட்டிஷ்- ஐரோப்பிய-அமெரிக்க எஜமானரின் தரத்துக்கு உயர்கிறேனே ப்ரோ… * உண்மையில், ஒருவேளை குழந்தைகள் அப்படி பெற்றோரை மீறித் திருமணம் செய்துகொண்டுவிட்டால், மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை மறந்துவிடுவதே பெற்றோருக்கு நல்லது. ஒன்று பட்டுத் திருந்தி வரட்டும் என்று விட்டுவிடலாம். அல்லது எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டுவிடலாம்.
பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத பாவத்துக்கான தண்டனை என்று மனம் கலங்கி ஒதுங்கிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஆனால், 99% சாமர்த்தியசாலிகளாக இருக்கும் ஒரு சமூகம் 1% அப்பாவிகளை இப்படி வேட்டையாடக்கூடாது.
இதைத் தடுக்க அரசு/அரசியல் சாசனம் ஒரு வழி கண்டுபிடித்தாகவேண்டும்.
ஆனால், அது ஜாதிக் காதல் திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத் தொகைகள் தொடங்கி அனைத்து சட்டப் பாதுகாப்பையும் தருகிறது. மதக் கலப்புக்கு இந்த சலுகைகள் கிடையாது. அங்கே சர்ச்சும் மசூதியும் சொல்வதே தீர்ப்பு.
இளிச்சவாய் இந்துவுக்குத்தான் எல்லா சீர்திருத்தங்களும் முற்போக்குகளும்.
இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சாசனத்துக்கு எதிரானது. இது இந்து பெற்றோர் அனைவரையும் டிஃபால்ட்டாக பிறவிக் குற்றவாளியாக நடத்துகிறது. காதல் ஜோடிகள் அனைவரையும் டிஃபால்டாக பிறவிப் புரட்சியாளர்களாகப் போற்றுகிறது.
இது அடிப்படை மனித உரிமை மீறல்; கெளரவ மீறல்; நன்றி கெட்ட தனத்தை ஊக்குவிக்கும் செயல்.
குழந்தைகளின் திருமணம் தொடர்பாக பெற்றோரின் சம்மதம் அவசியம்.
விவாகரத்தின் போது அந்த உறவு முறியாமல் இருக்க பல கவுன்சலிங் நடப்பதுபோல் ஓரிரு வருடங்கள் கால அவகாசம் தரவேண்டும்.
18 வயதானதும் திருமணம் என்ற விதிமுறை தவறு. 18 வயதுக்கு மேல்தான் காதல் பற்றி பெற்றோரிடம் சொல்லவே வேண்டும். அதன் பின் ஓரிரு வருடங்கள் பெற்றோரிடம் கலந்து பேசியே ஒரு இறுதி முடிவை எடுக்கவேண்டும்.
ஒரு பெண் தன் பெற்றோருடனே இருக்க முடிவெடுக்கலாம். காதலருடன் போக முடிவெடுக்கலாம். ஆனால், அது ஓரிரு ஆண்டு காலம் கலந்தாலோசித்த பின்னரே செய்யவேண்டும்.
தலாக் தலாக் தலாக் என்று சொல்வதுபோல் ஒரே நிமிடத்தில் பெற்றோரின் உறவை முறித்துவிடக்கூடாது.
ஆக, புதிதாக இது தொடர்பாக இயற்ற வேண்டிய சட்டம்:
பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் நடக்க அனுமதிக்கக்கூடாது.
ஓரிரு வருட கவுன்சிலிங் கட்டாயம்.
ஒருவேளை காதல் ஜோடி இருவருமே அல்லது காதல் ஜோடியில் ஒருவர் தன் பெற்றோரை மீறி அந்தத் திருமணம் செய்துகொள்கிறாரென்றால் அந்தப் பெற்றோருக்கு ஜீவனாம்சமாக – பெற்றோர் தட்சணையாக கணிசமான தொகையைத் தந்தாகவேண்டும்.
மனைவிக்கு கணவர் விவாகரத்தின்போது தருவதுபோல் பெற்றோருக்கு காதல் ஜோடி விவாக மீறலின்போது தரவேண்டும்.
மோகன் ஜி சொன்னதுபோல் ஒரு சில ஜாதியினரின் கட்டப்பஞ்சாயத்து, தவணைத் தொகை கோஷ்டிகளிடமிருந்து பாதுகாக்க ‘குலங் காக்கும் வழக்கறிஞர் படை’ ஒன்றை அமைக்கவேண்டும்.
கூடவே, மதம் சார்ந்த மோதல்களில் இருந்து காப்பாற்ற ’தர்மம் காக்கும் வழக்கறிஞர் படை’ ஒன்றை உருவாக்கவேண்டும்.
சமீபத்தில் ஒரு காதல் ஜோடி, பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றதும் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர்.
அதை ஜாதி ஆணவக் கொலையாக ஆக்க பல திரை மறைவு முயற்சிகள் நடந்திருக்கின்றன. பெண்ணின் அப்பா, காதலனை மிரட்டியதால் பெண்ணின் வீட்டை அடித்து உடைத்திருக்கிறார்கள்.
காதலித்த ஆணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் பல சலுகைகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
மகளை இழந்தை குடும்பத்துக்கு கொலைப்பழி வேறு.
தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவரை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியது தவறுதான். ஆனால் வெறுமனே திட்டிவிடவில்லை. 18 வயது கூட ஆகாத (ஆகியிருந்தாலும்) தன் மகளை தன் விருப்பம் இன்றி திருமணம் செய்ய வந்தவனைத் திட்டியதில் என்ன தவறு? வெறுமனே இருந்தபோது ஜாதி பார்த்துத் திட்டுவது நிச்சயம் தவறு. இப்படியான விஷயங்களில் திட்டும்போது அதற்கு கண்டனம் என்பதைத் தாண்டி எந்த தண்டனையும் கூடாது.
இந்துக்கள், இந்துத்துவர்கள், பிராமணர்கள், மேல் ஜாதியினர் எல்லாரும் எல்லாராலும் அடையாளம் சொல்லி வசைபாடத்தான் படுகிறார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் சம வாய்ப்புகள், அரசியல் சாசனத்தில் தரப்படும் இந்நாளில் ஒருவர் ஜாதி சொல்லித் திட்டியதை பெரிய பிரச்னையாகச் சொல்வது சரியல்ல.
யாராவது ஜாதி சொல்லித் திட்டினால், ஆமாம் நான் இந்த ஜாதிதான். அரசியல் சாசனம் எனக்கு இந்த ஜாதிக்கு உரிய கெளரவம் தந்திருக்கிறது. நீ பேசும் அதே தமிழ் மொழியைத்தான் பேசுகிறேன். உன்னைவிட எந்தவகையில் நான் தாழ்ந்தவன் என்று கேட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த குல தெய்வத்தின் குழந்தை நான் என்று கம்பீரமாகச் சொல்லவேண்டும். தன் குலத்தின் பெயரை வசையாக ஒருவன் சொல்லும்போது அல்ல, அதை வசையாக நீ எடுத்துக் கொள்ளும்போதுதான் அது வசையாகிறது. உன் தமிழ் குலம் பற்றி உனக்கே பெருமை இல்லையென்றால் யாரைக் குறை சொல்ல..? க்ரிப்டோ கட்டபஞ்சாயத்து கும்பலுக்கு ஜாதிப் பெருமை கிடையாது என்பதால் ஒவ்வொரு குலமும் தன் ஜாதி பற்றி ஏன் இப்படி மிகை குற்ற உணர்ச்சியும் தேவையற்ற வேதனையும் அடையவேண்டும்?
நீ பிறந்ததிலிருந்து இறப்பதுவரை கேட்கும் பாட்டைப் போட்டது என் ஜாதிக்காரர் தான் என்று பெருமையுடன் சொல்லவேண்டும்.
உண்மையில் அங்கு நடப்பது ஜாதி மோதல் அல்ல; பெண்ணைப் பறிகொடுத்த தந்தை பெண்ணைப் பறித்தவனுடன் போடும் சண்டை. அதில் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்ற உடனே ஜாதிச் சண்டையாக, கலப்பு ஜாதி என்பதால் ஜாதிப் பிரச்னையாக இதைப் பார்ப்பதே தவறு.
இருவரும் தமிழர்கள். ஒரு தமிழர் இன்னொரு தமிழரை அடிக்கிறார். திட்டுகிறார். அப்படியானால் இது பொதுவான குற்ற வழக்காகவே கருதப்படவேண்டும். அல்லது தமிழ் மொழிதான் காரணம் என்று சொல்லவேண்டும். தமிழ் குற்றம் இது. ஜாதிக் குற்றம் அல்ல.
மொழி இணைக்கிறதென்றால் ஏன் இங்கு இணைக்கவில்லை? அதோடு ஒருவர் திட்டுவதென்பது மொழியில்தான். போடா மஹர்ப்பயலே என்று திட்டினால் தமிழ் நாட்டில் தாழ்ந்த ஜாதிக்காரர் வருத்தமே படமாட்டார். ஏனென்றால் அவருக்கு மஹர் என்பதன் அர்த்தம் தெரியாது. ஆக தமிழ் மொழியில் இருக்கும் ஜாதியின் பெயரைச் சொல்வதால்தான் வருத்தம் வருகிறது. ஆக மொழிதான் இங்கு குற்றவாளி.
ஒன்று அது இருவரையும் இணைக்கவில்லை. இன்னொன்று வசையே தமிழ் மொழியில்தான் இருக்கிறது. பின் ஏன் ஜாதிமீது பழி போடப்படுகிறது?
இதில் இன்னொருமுக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு சிற்பி – ஆசாரி குலத்தைச் சேர்ந்தவர் ஒரு சிலை செதுக்கினாலோ கோவில் கட்டினாலோ அது தமிழ் பெருமையாகச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் அது அவருடைய ஜாதித் தொழில். குலத் தொழில். முழு பெருமையும் அந்த ஜாதிக்குத்தான் போகவேண்டும்.
ஆனால், ஒருவர் திட்டினாலோ அடித்தாலோ ஜாதியின் மீது பழி போடப்படும். நல்லது செய்தால் தமிழண்டா… கெட்டது செய்தால் ஜாதிச் சனியன்.
உண்மையில் தமிழகத்தில் இருக்கும் தமிழ் பெருமைகள் எதுவுமே தமிழர்களின் பொதுவான பெருமையே கிடையாது. கடல் கடந்து வாணிகம் செய்த பெருமை என்றால் அது வைசிய ஜாதியின் பெருமை.
ராஜ ராஜ சோழன் போன்ற மன்னரின் பெருமையென்றால் அது அதை குலத் தொழிலாகச் செய்த க்ஷத்ரிய வர்ணத்தின் பெருமை.
மூழ்காத கப்பல் கட்டியதென்பது அந்த ஜாதியின் பெருமை.
நல்லவற்றுக்கெல்லாம் தமிழ் ஸ்டிக்கர். பெற்றோரை மீறித் திருமணம் செய்ததை தடுத்தால் ஜாதி மீது மட்டும் பழியா..? அங்கே அவர் தமிழர் இல்லையா..?
உண்மையில் கலப்பு ஜாதித் திருமணத்தைத் தடுப்பது இந்து ஜாதிக் குலங்கள் மட்டுமல்ல; தமிழ்க் குலங்களும் தான்.
ஒரு பாதிரியும் மெளல்வியும் இந்த விஷயத்தில் தந்திரசாலிகள். முதலில் தம் மந்தை வேறு பக்கம் நகரவே விடமாட்டார்கள். அப்படியே நகர்ந்தாலும் அந்த புதிய ஆட்டை தம் கிடைக்குள் அடைக்கவே பார்ப்பார்கள். கொல்லமாட்டார்கள்.
ஆனால், இது அப்பட்டமான அடையாள அழிப்பு. ஒரு தமிழரை உன் தமிழ் மரபை விட்டுவிட்டு அரேபிய மரபுக்கு வா என்று அழைப்பது ஆளைக் கொல்வதைவிட அயோக்கியத்தனம்.
எனவே சொந்த ஜாதிக்குள் திருமணம்; அண்டை ஜாதியுடன் நட்பு.
சொந்த ஜாதிப் பெண் கழுத்தில் தாலி; அடுத்த ஜாதிப் பெண் கையால் ராக்கி.
முதலாவது ஏற்கெனவே தமிழ் மரபில் இருக்கிறது. இரண்டாவதை இனி தமிழ் மரபுக்குள் கொண்டுவரவேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு குரு பூஜை செய்து பாதம் கழுவிப் பிரார்த்தனை செய்வதுபோல் சக ஜாதி ஆண்களுக்கு சகோதரக் கயறு கட்டும் மங்கல விழாவை முன்னெடுக்கவேண்டும்.
இந்தியா -இங்கிலாந்து நான்காவது மற்றும் ஐந்தாவது டி-20 ஆட்டங்கள் இந்திய அணி தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தது
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நான்காவது டி-20 ஆட்டம் ஜூலை 9ஆம் தேதி அன்று பிரிஸ்டாலில் நடந்தது. பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா (16 ரன்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (15 ரன்) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இஷான் கிஷனும் (4 ரன்) சொறப் ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன் எடுத்தார். ஆனால் பிற வீரர்களான ஷிவம் துபே (22 ரன்), திலக் வர்மா (11 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (5 ரன்), அக்சர் படேல் (1 ரன்) ஆகியோர் சரியாக ஆடததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 158 ரன் மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (42 பந்துகளில் 59 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (35 பந்துகளில் 79 ரன்) அடித்ததால் இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது டி-20 ஆட்டம் சௌதாம்படனில் ஜூலை 11 அன்று நடந்தது.
இந்த ஆட்டத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் பூவாதலையா வென்றார். இங்கிலாந்தை மட்டையாடச் சொன்னார். அந்த அணியின் ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 131 ரன், 12 ஃபோர், 8 சிக்சர் மாற்றும் ஹாரி ப்ரூக் 45 பந்துகளில் 95 ரன், 4 ஃபோர், 8 சிக்சர் அடித்ததால் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 257 ரன் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது.
இரண்டாவதாக ஆடிய இந்திய அணியில் இந்த முறை வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 27 ரன் அடித்தார். ஆனால் அபிஷேக் ஷர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 56 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன், திலக் வர்மா 53 ரன் அடித்தனர்.
ஆனால் அதற்குப் பின்னல் வந்த ஷிவம் துபே (14 ரன்), சுயான்ஷ் ஷெட்கே (7 ரன்), அக்சர் படேல் (3 ரன்), அர்ஷதீப் சிங் (4 ரன்), பிரசித் கிருஷ்ணா (1 ரன்) சரியாக ஆடாததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் அடித்து தோல்வியைச் சந்தித்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.
உயர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நேரடியானதொரு வேண்டுகோள்!
உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!
சமீபகாலமாக, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவராக உங்களை நான் உணர்கிறேன். உங்களுடைய நேர்மையான, விவேகமான, தைரியமான நடவடிக்கைகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
உங்களைப் பிடித்த அந்த கணத்திலிருந்து, உங்களுக்கு ஆதரவாக இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் உங்கள் மேல் பற்றுக்கொண்ட ஒரு ரசிகன்!
ஆனால், சமீபத்தில் நீங்கள் விடுத்த, “ஜாதியையும் மதத்தையும் வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்” என்ற வேண்டுகோளைப் படித்தேன்.
உங்கள் உள்மனதில் என்ன நோக்கம் இருக்கிறது என்பது சாதாரண மக்களுக்கு உடனடியாகப் புரிய வாய்ப்பில்லை. அதனால், நீங்கள் விடுத்த இந்த வேண்டுகோளை அவரவர் தங்களுக்குச் சாதகமாக மாற்றி மாற்றி எழுதி வருகிறார்கள். இங்கு எல்லாமே அரசியல்தான் என்பது எங்களைப் போன்ற முதியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நம் நாட்டு சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்து, “ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று அன்று மனம் நொந்து பாடினார் மகாகவி பாரதியார்.
நாடு போகும் போக்கைப்பார்த்து மனம் வெதும்பிக் கிடந்த எங்களைப் போன்ற முதியவர்களில், சுதந்திரத்தின் மதிப்பு தெரிந்த நானும் ஒருவன்.
பாரதி பாடிய அந்த “வாராது போல் வந்த மாமணியாய்”, வெகு காலத்திற்குப் பிறகு நமக்குக் கிடைத்த பொக்கிஷமாய் உங்களை நான் நினைத்தேன்; நம் தேசத்தின் விடிவெள்ளி நீங்கள் என்று நம்பினேன். அதனால்தான், என் பாசத்தின் விளைவாக உங்களை உரிமையோடு ஆசீர்வதித்தேன்.
நீங்கள் அரசியல் செய்யுங்கள்; சாதுர்யமான அரசியல் செய்யுங்கள். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் அந்த அரசியலை நாங்களும் ரசிக்கிறோம். ஆனால், அதைச் செய்யும்போது உங்களால் மட்டுமல்ல, யாராலுமே தங்களது ஜாதியையும் மதத்தையும் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வர முடியாது என்பதே நிதர்சனம்!
ஏனென்றால், ஜாதியும் மதமும் நாம் பிறந்த பிறகு தனியே முளைத்த சட்டையோ அல்லது வேறு விதமான அணிகலன்களோ அல்ல. அவை நம்முடன் பிறந்து, நம்முடனேயே வளருகின்ற உணர்வுகள். நாம் பிறந்த பின் ஜாதியும் மதமும் பிறக்கவில்லை; நாம் தான் ஏற்கனவே இருந்த ஜாதிகளிலும் மதங்களிலும் பிறந்திருக்கிறோம்!
பழைய அரசியல்வாதிகளும் புதிய அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியான பரப்புரையைத்தான் செய்கிறார்கள். உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, எல்லா மதத்தவரும் அனைத்து ஜாதியினரும் இருந்தார்கள், பல மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள், எப்போதும் இருப்பார்கள். அதை மாற்றவே முடியாது.
அரசியலில் பேசுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் எத்தனையோ ஆக்கபூர்வமான செயல்களும், முன்னேற்றப் பாதைகளும் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் பேசாமல் விட்டுவிட்டு, எல்லோருமே ஜாதியையும் மதத்தையும் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். இந்த இரண்டையும் பிடித்துக்கொண்டுதான் அரசியலே செய்கிறார்கள். நீங்களும் அதே ஜாதி, மத, இன அரசியலைத்தான் செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.
இந்திய நாட்டிலே ஹிந்துவாகப் பிறந்து, தங்கள் குல தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து, நெற்றியில் வைத்த பொட்டை அழிக்கச் சொல்கிறார்கள்; பூணூலை அறுக்கச் சொல்கிறார்கள். மற்ற மதத்தினரைப் பார்த்து இவர்களால் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்க முடியுமா? அல்லது ஹிந்து அல்லாதோரை பொட்டு வைக்கச் சொல்லி வற்புறுத்த முடியுமா? இவர்களால் முடியாது!
ஜாதியையோ மதத்தையோ யாரும் வீட்டில் விட்டுவிட்டு வர முடியாது. ஆனால், மற்ற ஜாதியினரையும் மதத்தவரையும் அவமதிக்கும் தீய குணத்தை வேண்டுமானால் விட்டுவிட்டு வரலாம்!
மண்ணில் ஜாதி, மரத்தில் ஜாதி, கனியில் ஜாதி, பூவில் ஜாதி என்று இயற்கையே பல பிரிவுகளை (வகைகளை) உருவாக்கி வைத்திருக்கிறது. ஜாதிகளை ஒழிக்க முடியாது.
எல்லா மதத்தவரும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்; அதற்கு மதம் என்பது ஒரு கருவி, ஒரு பயண வாகனம். ஆகவே, ஜாதியையும் மதத்தையும் யாராலும் அழிக்க முடியாது.
ஆகவே, உங்களிடம் என் வேண்டுகோள் இதுதான்: அனைத்து ஜாதியினரையும் மதிக்கும் பண்பை மக்களிடம் வளர்க்கலாம்.
மதங்களையும் ஜாதிகளையும் கடந்து மனிதம் மேலோங்கச் செய்யலாம். மனிதரை மனிதராக நேசிக்கவும் மதிக்கவும் கற்றுத்தர வேண்டும்.
அப்படிப்பட்ட பொதுமையான, ஒற்றுமையான குணத்தை வளர்க்க நீங்களும் முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
எல்லாவித பேதங்களையும் மறந்து மக்கள் ஒன்றாக இணைய மனப்பக்குவம் வேண்டும்.
அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை மக்களிடம் வளர்த்தெடுங்கள். நாம் தெளிவோடு இருப்போம்; மன பேதங்களைக் களைவோம்!
ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்டவேண்டும்?
இதன் அர்த்தம் என்ன?
ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
தமிழன் என்ற அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டிவிட்டுத்தான் வெளியே வருவேன். இந்தியன் என்ற அடையாளத்தைப் பூட்டிவிட்டுத்தான் வெளியே வருவேன் என்று ஏன் சொல்லவில்லை? ஏன் சொல்ல முடியாது?
இந்து அடையாளமான திலகத்தை வெளியில் தெரியும்படி வைக்கமாட்டேன் என்று சொல்பவர்களால் வேஷ்டி கட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று சொல்ல முடியுமா? சொன்னால் சரியாக இருக்குமா?
குல்லாவோ பர்தாவோ அணிந்துகொண்டு வராதீர்கள் என்று முஸ்லிம்களுக்குச் சொல்லும் ஆலோசனையா இது. அப்படி பகிரங்கமாகச் சொல்லிவிடமுடியுமா?
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தமது கிறிஸ்தவ அடையாளத்தைத் தந்திரமாக மறைத்துக்கொண்டுதான் செயல்படுகிறார்கள்.
ஈ.வெ.ரா ஒருமுறை நாம் ஜாதிப் பெயரை நீக்கச் சொன்னது தவறாகப் போய்விட்டது. இன்று அப்படிப் பலரும் தமது பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதியை நீக்கிவிட்டதால் அவன் எந்த ஜாதி என்பது தெரியாமல் போய்விடுகிறது. இது பெரிய சிக்கலைத் தருகிறது என்பதாக ஒருமுறை புலம்பியிருந்தார். அவர் அதனால் தான் யாரைப் பார்த்தாலும் என்ன ஜாதி என்பதை கேட்டுவிட்டே பேச ஆரம்பித்தார்.
கெளரவமாக நினைப்பவர்கள் தம் அடையாளத்தை மறைக்கத் தேவையில்லை.
தந்திரவாதிகள் யாரும் சொல்லாமலே அப்படித்தான் செய்கிறார்கள்.
நாம் நம் அடையாளத்தை இழிவாக நினைக்கவேண்டியதில்லை.
கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக மறைத்துக் கொள்ளவும் தேவையில்லை.
*
இந்து மதத்தை வீட்டுக்குள் பூட்டவேண்டும் என்று சொன்னதன் அர்த்தம் அது அல்ல; அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் மதத்தைக் கலக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் சொல்லப்பட்டதாக இதை எடுத்துக்கொள்ளலாம் தான்.
ஆனால், விஷயம் என்னவென்றால் அந்த உயரிய நோக்கம் நம் அரசியல் சாசனத்துக்கே கிடையாது.
அரசியலில் மதத்தைச் சேர்க்ககூடாதென்றால் முதல் வேலையாக சிறுபான்மைச் சலுகையை மதத்தின் பெயரால் தருவதை நிறுத்தியாகவேண்டும்.
அரசியலில் மதம் கலந்திருப்பதன் அப்பட்டமான, அராஜகமான, அபாயகரமான சான்று இந்த சிறுபான்மை மதச் சலுகையே.
1947-ல் ஒரு வழிபாட்டு மையம் எப்படி இருக்கிறதோ அந்த நிலையை மாற்றாமல் தக்கவைக்கவேண்டும் என்பது ஒரு விதி. இது மதச் சமநிலையைத் தக்கவைக்க முன்னெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வழிபாட்டு மையத்துக்கு இருந்த பாதுகாப்பு இந்துக்களுக்குத் தரப்படவில்லை. அதாவது 1947-ல் ஒருவர் எந்த மதத்தவராக இருக்கிறாரோ அது அப்படியே தொடரவேண்டும் என்று எந்த சட்டமும் போடப்படவில்லை.
முதலாவதில் இந்துவுக்கு இடிக்கப்பட்ட அவர்களுடைய கோவில்களை மீட்கும் வழி மூடப்பட்டது. இரண்டாவதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு குல தெய்வக் கோவில்களை ’இடிக்கும்’ உரிமை தரப்பட்டது.
ஒரு சர்ச், மசூதி புதிதாகக் கட்டப்படுகிறதென்றால் அது ஒரு குல தெய்வக் கோவிலின் செங்கல்லை உருவித்தான் கட்டப்படுகிறது.
இந்துவுக்கு இரட்டை தூக்கு தண்டனை இந்து என்பதால் தரப்பட்டிருக்கிறது. மதம் அரசியலில் கலந்ததால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இது.
ஜாதிக் கொடுமையால்தான் மதம் மாறுகிறார் என்ற பொய்யை அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் அமலில் இருக்கும்போதும் சொல்வது மகா கேவலம். பச்சை அயோக்கியத்தனம்.
இந்தியாவில் மத மாற்றம் அதிகமாக நடந்த வடகிழக்கு மாநிலங்களில் ஜாதி – வர்ணாஸ்ரமம் கிடையாது. அது மிகுதியாக இருந்த கோ மாதா மாநிலங்களில் மத மாற்றம் மிக மிகக் குறைவு.
உண்மையில் இந்துக்கள் எல்லாரும் நாம் இந்துக்கள் என்று இந்து உணர்வு கொள்ளவேண்டிய நேரத்தில் இந்துவாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் இந்து அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டி வைப்பதென்பது இந்துவுக்கும் இந்தியாவுக்கும் செய்யும் நன்மை இல்லை.
*
அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் இந்து.
புதிது புதிதாக விளக்க உரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்துக்களை மதம் மாற்றி, இந்து மதத்தை அழிப்பதே இலக்கு என்று சொல்லும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இந்துவுக்கு எப்படிச் சமமாக இருக்க முடியும்? ஒரு இந்து எப்படி, எதனால் அவர்களைத் தனக்கு சமமாகப் பார்க்கவேண்டும்?
பசுக்களும் விலங்குதான். ஓநாயும் விலங்குதான். ஆனால், எல்லா விலங்குகளும் சமமா?
எளிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நல்லவர்கள். அடிப்படைவாதிகள் மட்டுமே கெட்டவர்கள்.
இதையாவது வெளிப்படையாகச் சொல்லலாம் அல்லவா?
மதம் மாற்றும் அயோக்கியர்களை நான் சமமாக மதிக்கமாட்டேன்; எந்த இந்துவும் அவர்களைச் சமமாக மதிக்கவும் தேவையில்லை என்றுதானே சொல்லவேண்டும்.
மலின அரசியல் பேசும்போது ஏன் ஆன்மிக, அறம் பேசுவது போன்ற தோரணை? அனைவரையும் சமமாகப் பார்ப்பது போன்ற பம்மாத்து எதற்கு?
எளிய மக்களைக் காப்பதும் கொடிய திருடர்களைத் தண்டிப்பதும் காவலரின் கடமை. எல்லாரையும் அன்பாக நடத்துவேன் என்பது திருடர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவரின் வாக்குமூலம்.
அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் கண்டிப்பேன். அப்பாவிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் அரவணைப்பேன்.
இதைச் சொல்லும் நேர்மையும் துணிச்சலும் எந்த அரசியல்வாதிக்கும் ஏன் வருவதில்லை?
அடிப்படைவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாதவர்கள் அப்படி என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும்? அப்படி அடிப்படைவாதிகளுக்குக் கூழைக் கும்பிடு போட்டு நடத்தும் அரசியல் இயக்கம் என்ன நன்மையைச் செய்துவிடமுடியும்?
மத மாற்றத்தை சரி என்று சொல்லும் பாதிரியே நம்பர் ஒன் அடிப்படைவாதி. மெளல்வியே நம்பர் டூ அடிப்படைவாதி.
இந்த இரண்டு கும்பலும் அனைவரையும் சமமாக ஒருபோதும் பார்க்காது. குறிப்பாக இந்துக்களைப் பார்க்காது. இந்து மட்டும் எதற்காக இந்த அடிப்படைவாதிகளைச் சமமாகப் பார்க்கவேண்டும்?
*
மாநாட்டில் எங்குமே காவி நிறம் இல்லை; எங்குமே பச்சையும் இல்லை; எங்குமே தேசியக் கொடியையும் காணவில்லை. எங்கு பார்த்தாலும் பாதிரிப் பிரேத வெள்ளை.
இந்தியன் என்பதில் பெருமிதம் என்ற முழக்கத்தின் அர்த்தம் என்ன..?
எந்த இந்தியா..? காவிக்கு இடமில்லாத இந்தியாவா.?
எந்த அழைப்பும் அறிவிப்பும் இன்றியே காவியைக் கைவிட்டுக் கூடியிருக்கிறார்களா அத்தனை பேரும்?
இப்படி இந்து அடையாளங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் இந்தியா, இந்துக்களுக்கு மட்டுமல்ல; யாருக்குமே நன்மை தந்துவிடமுடியாது. ஏனென்றால் இந்தியாவில் இருப்பவர்களில் தமது மதத்தை வீட்டுக்குள் பூட்டி வைக்கும் ஒரே தரப்பு இந்துத் தரப்பு மட்டுமாகவே இருக்கும்.
ஒரு முஸ்லீம் தன் அடையாளத்தை எங்கும் மறைத்துக்கொள்ளமாட்டார். ஒரு கிறிஸ்தவர் தன் அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டிவைக்கமாட்டார். தன்னுடனேதான் கொண்டு செல்வார். ஆனால், ஒளித்துக்கொள்வார்.
எனவே இந்து மட்டுமே அப்பாவியாக தன் அடையாளத்தை வீட்டுக்குள் போட்டுவிட்டு நடுத்தெருவுக்கு வருவார். இந்து அடையாளத்தைப் பூட்டி வைத்தால் அங்குதான் நிற்கவும் வேண்டிவரும்.
ஸ்டாலின், திருமாவெல்லாம் நெற்றியில் இட்டுவிடும் திருநீறை கேமராவுக்கு முன்பாக நின்று அழிப்பார்கள். வீட்டைவிட்டு வெளியே வரும்போது நானே இந்து அடையாளத்தை அழித்துவிட்டுவருவேன் என்று சொல்வது கிட்டத்தட்ட அதற்கு இணையானதுதான்.
ஒருவருக்கு பாஜகவுடன் கோபம் இருக்கலாம். காவியுடன் எதற்கு விலகல்?
*
இந்துக்களே… இந்து அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள்.
நீங்கள் இந்து என்பது உங்களைப் பார்த்தாலும் தெரியவேண்டும்; பழகினாலும் தெரியவேண்டும்.
மதத்தை அரசியலில் இருந்து நீக்கவேண்டுமென்றால் மதங்களின் பெயரிலான சிறுபான்மைச் சலுகையை இந்த நிமிடமே ரத்து செய்ய ரத்தத்தில் கையெழுத்திடுங்கள்.
இந்து அடையாளத்தை மறைத்துக் கொள்வதென்பது உயிரை மாய்த்துக் கொள்வது போன்றது.
வெள்ளை ஆடை போர்த்திய பிணமாகவேண்டாம். காவியே நம் உயிர். அதை ஒருபோதும் நாமே பறித்துக்கொள்ளவேண்டாம்.
பாரத் மாதா கி ஜே! ஜெய் ஹிந்த்! ஜெய் ஸ்ரீராம்! ஹர ஹர மஹாதேவ்! வெற்றி வேல் வீர வேல்!
இந்து இருக்கும் இடத்தில் இந்த கோஷங்கள் முழங்கியாகவேண்டும்.
பாஜகங்கற கட்சியை எனக்கு நேற்றிலிருந்துதான் தெரியும் வகையறாக்களிடம் பேச ஓர் இந்துவுக்கு என்றுமே எதுவுமே இருந்ததில்லை. மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் இந்துவாகவே இருங்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது சுமார் 1200 பட்டாசு ஆலைகளில் நான்கு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் உள்ளதா என ஆய்வு செய்ய தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் 6 குழுக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 30 நாட்களில் மட்டும் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்துள்ள இக்குழு சிறிய அளவிலான விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 82 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியும், விதிமீறல்கள் கண்டறிப்பட்ட 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!
சிவகாசி ஐயப்பன் காலனியை சேர்ந்த அச்சகம் மற்றும் அங்காடி நடத்தும் தொழிலதிபர் அரவிந்த் ராம் என்பவர் வீட்டில் கடந்த 5ம் தேதி 75 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை முகமூடி அணிந்தபடி காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துவிட்டு கொள்ளையை தடுக்க முயன்ற அரவிந்த் ராம் மற்றும் அவரது மனைவியை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்துவிட்டு காரில் தப்பியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி அபிணவ்குமார் நேரில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து சிவகாசி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் நம்பர் மற்றும் கொள்ளை நடைபெற்ற இடத்தில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் கொள்ளையடித்த நபர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், கொள்ளையடித்த கும்பல் ஏற்கெனவே பல நாட்களாக சிவகாசியில் முகாமிட்டிருந்ததும், அப்போது அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கொள்ளை சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்ததாக தூத்துக்குடி ஆசீர்வாதம் நகர் 5வது தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (24), பிரித்திவிராஜன் (28), தூத்துக்குடி அண்ணாநகர் சோமசுந்தரம்(24), தூத்துக்குடி டிஎம்பி காலனி பேச்சிமுத்து (21) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளன.
கொள்ளையர்கள் குறித்து 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.
“தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). இவர், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி. 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆழ்ந்த இரங்கல் செய்தி : பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் இணைந்து இசைக்கப்படும் போதெல்லாம், தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவத்தில் உள்ள அனைத்து ஆறு சரணங்களும் முதலில் இசைக்கப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம், ஆளுநர்களின் உரை மற்றும் பிற அதிகாரபூர்வ நிகழ்வுகள் போன்ற முக்கிய அரசு விழாக்களில் இந்த முழுமையான ஆறு சரணங்கள் கொண்ட வடிவம் பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ், குடிமை விருது வழங்கும் விழாக்கள், அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பிற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் வருகை தரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் இசைக்கப்பட வேண்டும். மேலும், அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதற்கு முன்னரும் பின்னரும், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் இது இசைக்கப்பட வேண்டும். தேசியப் பாடல் இசைக்கப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் ‘கவன நிலை’யில் (attention posture) நேராக நிற்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த 9ம் தேதியிட்ட அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிகாரபூர்வ அரசின் முக்கிய விழாக்களில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசியப் பாடலான வந்தேமாதரம் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலப் பாடல் இவற்றுடன் பாட நேர்ந்தாலும், தேசியப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதனுடன், தேசியப் பாடலையும் மாநிலப் பாடலையும் எப்படி உச்சரிக்க வேண்டும், எத்தனை கால அவகாசத்துக்குள் பாடப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிக்கையையும் அளித்துள்ளது.