2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாகரிகத்திலும், பண்பாட்டிலும் சிறந்த தமிழகம் சீரழிந்து போனதற்கு திராவிட சித்தாந்தமும் மற்றும் திமுகவின் நிர்வாக திறனற்ற ஆட்சியும் தான் காரணம்.
இராமநாதபுரத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவிக்க சென்ற போது 7 மணி நேரம் அலைக்கழிக்கப் பட்டதாக வந்துள்ள செய்தியானது, திமுக ஆட்சியில் காவல்துறை மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதி படுத்துகிறது.
சமீபத்தில் விளாத்திகுளம் சிறுமி காணாமல் போனது குறித்த புகார் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டு தாமதப் படுத்தியதுதான் அந்த சிறுமியை நாசப்படுத்தி கொல்வதற்கு குற்றவாளிக்குத் தைரியம் கொடுத்துள்ளது.
பெண்கள், சிறுமிகள் மீதான குற்றங்களில் காவல்துறை மெத்தனம் போக்கிற்கு காரணம் அதில் ஈடுபடும் திமுகவினரைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்று மக்கள் பேசுகின்ற நிலை இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான வன்முறை முதல் நேற்று இராமாநாதபுரம் சிறுமி மீதான பாலியல் சீண்டல் வரை தமிழக காவல்துறை செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்க அளவில் இருக்கிறது.
ஆனால் திமுக முதல்வர் ஸ்டாலின் இவை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. சென்னை அண்ணா நகரில் நடந்த போக்சோ குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடந்தையாக உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாக சீரழிவுக்கு இதைவிட சாட்சி வேண்டுமா. கண்ணகி சிலைக்கு கண்ணீர் வடித்த திமுக ஆட்சியில் கண்ணகிக்கே நீதி கிடைக்காது என்று கூறும் அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது.
இந்த நவீன காலத்தில் இன்னமும் காவல்துறை விரைவாக செயல்படாமல் மெத்தனமாக இருப்பதும், மனிதாபிமானமற்ற முறையில் புகார் தெரிவிப்போரை அலைகழிக்கப்பதும் காவல்துறை மீதான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.
இனியும் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியம் செய்யுமேயானால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் அபாயம் உள்ளதை அரசு உணர வேண்டும்.
திமுக ஆட்சியில் சலுகைகளும், இலவசங்களும் தந்த போதிலும் பெண்களின் மீதான வன்முறை மீது தக்க நடவடிக்கை எடுக்கத் தவறி உள்ளது . அதே போல் தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் கூட போதை பொருள் பாதிப்பு இருக்கிறது. இவைகளை அடக்க முடியாமல் காவல்துறை திராணியற்று முதல்வரின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் காவல்துறையின் கைகளை கட்டி செயலற்று நிற்க வைத்த திமுக.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்பதை இந்துமுன்னணி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறது.
காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் பாமர மக்களின் புகார்களை உடன் விசாரித்து குற்றங்களைத் தடுக்க, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன நாய் இருந்தது. சொல்ல ஆரம்பித்தார்….
“என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது; நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை. நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். நான் அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றார்.
டாக்டர் நாயைக் கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு சொன்னார், “இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன்.”
அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து…அதை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல் பெல்ட்டால் அடிக்கச் சொன்னார். மருத்துவரின் உதவியாளர் இரவு முழுவதும், டாக்டர் சொன்னபடியே சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
மறுநாள் அந்த பெண்மணி வந்து கேட்டார்.
“ஐயா என் நாய்க்குட்டி எப்படி இருக்கு ?
டாக்டர் சொன்னார், “உங்கள் நாய்க்குட்டி நீங்கள் இல்லாத குறையை உணர்ந்து விட்டது என்று நம்புகிறேன்.”
டாக்டரின் உதவியாளர் நாயை அழைத்து வந்தார். நாய் அறைக்குள் வந்தவுடன்.. துள்ளிக் குதித்து மேடத்தின் மடியில் அமர்ந்து, வாலை அசைத்து, மேடத்தின் முகம், வாயை நக்க ஆரம்பித்தது.!! அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
மேடம் சொல்ல ஆரம்பித்தார்: திடீர்னு இந்த மாதிரி பாசக்காரனா மாறிட்டானே ? என்ன பண்ணீங்க சார்?
டாக்டர் கூறினார்: பெரிய ஏர் கண்டிஷனர் அறையில், தினமும் மிகவும் சுவையான உணவை சாப்பிட்டுவிட்டு, தன்னையே மாஸ்டர் என நினைத்து, தன் உரிமையாளரை மறந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும் உளவியல் மற்றும் உடல் சிகிச்சை தேவைப்பட்டது. கொடுத்தோம், இப்போது அது நலமாக உள்ளது.
சுருக்கம்:
நாட்டிற்குள்ளும் சிலருக்கு தேவை இந்த சிகிச்சை: 1) அன்னை பாரதத்தை அவமரியாதை செய்தல், 2) இந்தியாவை துண்டு துண்டுகளாக்குவோம் என்று மிரட்டுவது, 3) சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து சுதந்திரம் தேடுபவர்கள், 4) *எல்லை காக்கும் வீரர்களை அவமதிப்பு செய்தல், 5) எதிரி நாட்டை ஜிந்தாபாத் என்று அழைப்பவர்கள், அனைவருக்கும் இந்த வைத்தியம் தேவை. அப்போது தான் தில்லி மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதம், நக்சலிசம் ஒழியும்.
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களைக் காவல் துறையினர் ஒவ்வொருவராக பெயர் விவரம் கொடுத்த பிறகு தான் மலைக்கு செல்ல முடியும் என்று தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா அமைக்கப்பட்டுள்ளது. இன்று ரம்ஜானை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை செய்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் மலை மீது செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஆண்டுதோறும் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாள் அதுவும் நிறுத்தி ஒவ்வொருவராக அனுப்புவது சரியில்லை” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக, மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவே, ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் புனித ரமலான் நாள் அன்று அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மலை மேல் தொழுகைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் பதிவு செய்த பின், மலைக்கு தொழுகைக்குச் சென்றனர்.
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுவைக் கொலை செய்ய முயற்சித்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவை செக் நாட்டில் ஜுன் 30 2023 ல் அமெரிக்க FBI கைது செய்தது. மேலும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் பணி செய்யக்கூடிய விகாஸ் யாதவ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயர்களையும் அமெரிக்கா காட்சிக்குள் கொண்டு வந்தது.
உடனே இந்தியாவில் வாழக்கூடிய தேச விரோதிகள், ‘பாகிஸ்தான் என எண்ணி விட்டீர்களா, இது அமெரிக்கா! அவர்களிடம் உங்களுடைய பாச்சா பலிக்காது’ என அமெரிக்கா பற்றி பெருமை பேசிக் கொண்டார்கள். கூடவே இந்திய அரசுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வாரி வழங்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது வெளிநாட்டவர் ஏழுபேர் கைது என்ற செய்தி.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதனைச் சுற்றியுள்ள மலைப் பாங்கான இடங்களில் குக்கி இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குக்கி இன மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
மெய்தி இனம் நாங்களும் இந்த நாட்டுடைய குடிமக்கள் தான் எங்களுக்கும் சில சலுகைகள் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். பல கட்ட போராட்டங்களுக்கு பின் ஏப்ரல் 2023 உச்ச நீதிமன்றம் மெய்தி இன மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து குக்கி இன மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் குறைந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் மே 3 2023 மாபெரும் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கான மெய்தி இன மக்களைக் கொன்று குவித்தார்கள். பல ஆயிரம் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
மெய்தி இன மக்கள் கடுமையான உழைப்புடன் ஓரளவுக்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருவதால் அவர்களை கண்டு குக்கி இன மக்களுக்கு #பொறாமை ஏற்படுவதுண்டு. எனவேக் கலவரத்தை காரணமாக வைத்து மெய்தி இன மக்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.
ஒண்ட வந்த பிடாரி கதையாக இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்களை மியான்மர் நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்த மர்ம நபர்கள் கிறிஸ்தவராக மதம் மாற்றி உண்மையான மக்களை துரத்த ஆரம்பித்தார்கள். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு 40 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மணிப்பூரில் இறங்கியது.
இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசுக்கு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாக இது தெரிய ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனைக்கு பின்னால் மாபெரும் சக்திகளின் கைகள் இருக்கக் கூடும் என இந்திய அரசு உணரத் தொடங்கியது.
இந்த நேரத்தில் குக்கி இன மக்கள் 40க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்கள். சமகால சர்வதேச அரசியல் பற்றிய எதுவும் தெரியாமல் இருக்கக் கூடிய திராவிட ஸ்டாக்குகள் போன்று எந்த விதமான அறிவியல் பூர்வமான பொது அறிவும் இல்லாத மலைவாழ் மக்களிடம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன்கள் இருப்பது இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்திய அரசு இதனைப் பற்றி பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
2025 மார்ச் மாதம் மிசோரம் மாநில சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது தங்கள் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், அதில் பலர் எல்லை தாண்டி மியான்மர் நாட்டுக்குள் சென்றதாகவும் கருத்து தெரிவித்து இரூந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இரு தினம் முன் இந்திய அரசு ஒரு முக்கிய செய்தியை உலகத்திற்கு கொடுத்து இக்கின்றது. சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த சில வெளிநாட்டவர்கள் விதிமுறையை மீறியும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்றதாகவும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கைது செய்ய பட்டதாகவும் தெரிவித்தது.
சில நாடுகளிலிருந்து இந்தியா வந்த இவர்கள் பல இடங்களுக்கு தனித்தனியாக யாருக்கும் சந்தேகம் வராதபடி பிரிகின்றார்கள். பின்னர் ஒரே புள்ளியில் கூடுகின்றார்கள். தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று தங்கள் நாடுகளுக்கு புறப்பட தயாராகின்றார்கள்.
என்.ஐ.ஏ., சில திமிங்கலங்களை வேட்டையாட சரியான நேரம் பார்த்து வலை விரித்துக் காத்துக்கொண்டிருந்த அந்த வேளையும் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனை என் ஐ ஏ., கைது செய்தது. அதேபோன்று லக்னோ மற்றும் தில்லி விமான நிலையத்திலும் மொத்தம் 6 உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தது. பின்னர் தில்லியில் உள்ள #பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். இதில் முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏ உளவாளியும் son of Liberty அமைப்பின் தலைவருமான மேத்திவ் வாண்ட்கே.
இவர்கள் மொத்தமாக இந்தியாவுக்கு சுற்றுலா வந்து தனித்தனியாகப் பிரிந்து சென்று பின்னர் மிசோரம் மாநிலத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். மிசோரத்தில் உள்ள சமூக விரோதிகளின் துணையுடன் மியான்மர் நாட்டுக்கு தப்பிச் சென்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேலும் பல போர் தந்திர நெறிமுறைகளை நவீன ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிம் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து நவீன உபகரணங்கள் டிரோன்கள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இவர்களின் உரையாடல்கள் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்துமே எலன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார் லிங் செயற்கைக்கோள் இணையம் வழியாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்க உளவாளியான இவனை உளவாளி என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் உளவாளி என்பவன் உளவு மட்டுமே பார்ப்பான். ஆனால் இவன் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து அந்த அரசுகளுக்கு எதிராகவே ஆயுதம் தூக்கிப் போராடக் கூடியவன். லிபியாவில் புரட்சி நடைபெற்ற போது தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து ஆயுதம் எடுத்து லிபியா அரசுக்கு எதிராகப் போராடியவன். சிரியா நாட்டுக்குச் சென்று சிரிய நாட்டு தீவிரவாதக் குழுவுடன் இணைந்து அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராடியவன்.
தற்போது இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இப்போது கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய உளவுத்துறை இவன் முன் வைக்கக்கூடிய கேள்விகள்:
எங்கெல்லாம் சென்றார்கள் யாருடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள் என்ன திட்டத்துடன் வந்தார்கள் இவர்களுக்கு உதவி செய்த உள்ளூர் சமூக விரோதிகள் யார் இவர்களை அனுப்பி வைத்தது யார்
விஷயம் கொதிநிலையில் சென்று கொண்டிருக்கும்போது இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டு குடிமகன்களைப் பார்ப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என புகார் கூறியிருக்கிறது.
உங்கள் நாட்டு குடிமகன்களாக இருக்கலாம், தற்போது அவர்கள் இந்தியாவில் தீவிரவாதிகளாகச் செயல்பட்டுள்ளார்கள். இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எப்படி உடனடியாக அனுமதி கொடுக்க முடியும்?
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அவசரமாக இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசி இருக்கிறார். நிச்சயமாக இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிகில் குப்தா பற்றி பேசி இருக்கக்கூடும். இறுதியாக அமெரிக்கா என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவுடைய முடிவும் இருக்கும் என பேசி இருக்கக்கூடும். நாங்கள் தேடப்படும் ஒரு தீவிரவாதிக்கு எதிராக மட்டுமே செயல்பட்டோம். ஆனால் அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசி இருக்கலாம்.
RAW மீது தடை விதிக்க வேண்டும் என ஒரு தற்குறி ஆணையத்தை வைத்து அறிக்கை விட்டீர்கள். இப்பொழுது நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக CIA அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி தீர்மானம் கொண்டு வரட்டுமா? என இந்தியர்கள் கேட்கிறார்கள்.
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஏன் இந்தியாவிலுள்ள கேடுகெட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. ஆனால் அவர்கள் இந்தியத் திருநாட்டுக்கு எதிராக அந்நிய சக்திகளுடன் இணைந்து எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.
ஆயுதம் தூக்குபவன் மட்டும் தீவிரவாதி அல்ல அதற்கு துணை போகும் நபர்களும் தீவிரவாதிதான். அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . மேலும் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடம் எத்தகைய தாக்குதைலை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அன்று பஞ்சாயத்திற்காக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா அழைத்தார்கள். ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது .
இந்தியாவில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தை உலகமே ஆதரிக்கிறது என்றால் கண்டிப்பாக அதில் அந்நிய நாட்டின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் திருந்த வேண்டும். மிக நுட்பமான முறையில் சதி திட்டங்களில் ஈடுபட்ட இவர்களை கைது செய்து பல சதிகாரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இந்திய திருநாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
அனேகமாக துரந்தர் 3.0 படம் எடுக்கும் அளவிற்கு இந்த சம்பவம் இருக்கின்றது. கண்டிப்பாக இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட வேண்டும். இந்திய தேசத்திற்கு எப்படி எல்லாம் ஆபத்து வருகிறது என அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நொடியும் இந்திய தேசத்தைப் பாதுகாக்க காடுகளில் குகைகளில் பாதாள சுரங்கங்களில் அரசனாக ஆண்டியாக பிச்சைக்காரனாக பைத்தியக்காரனாக தங்கள் நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றி இந்த மண்ணைத் தங்கள் கண்களாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று கண்டிக்காத எங்களை போன்றவர்கள் மீது அவர்கள் எரிச்சல் திரும்பி உள்ளது.
அமெரிக்க சொல்லாடலில் இதை ‘வட்டமாக சுற்றி சுடுவது’ என்பார்கள். அதாவது தங்களை தாங்களே சுட்டுக் கொள்வது. இந்தியா உயர்ந்த தார்மீக பீடத்தில் ஏறிக்கொண்டு, இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவது என்று கூறி நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நான் முதலில் சில விஷயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன் : சர்வதேச சட்டங்களின்படி இந்த போரை நியாயப்படுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பிற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது ,இறையாண்மை மதிக்க வேண்டும், பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்தும் விஷயங்களுக்கு இது முரணானது . நான் ஏற்கனவே சொன்னது போல், தற்காப்பு நடவடிக்கையாக முன் கையெடுத்து தாக்குவது என்றும் இதை சொல்ல முடியாது.
ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது நாம் உடனடியாக இரங்கலை தெரிவித்தோம். அதேபோல் இப்போது ஈரானின் உச்சப்பட்ச தலைவர் கொல்லப்பட்டபோது உடனடியாக நமது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இதைச் சொல்ல எனக்கு சுதந்திரம் உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. ஆனால் , இந்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் அமைதி காப்பதை நான் கண்டனம் செய்ய மாட்டேன்.
எப்போதுமே இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் கொள்கைகளையும் நிதர்சனத்தையும் கருத்தில் கொண்டு, இரண்டையும் சமன்படுத்தும் விதமாகவே இருந்துள்ளன. ஜவஹர்லால் நேருவின் அணிசேரா கொள்கை என்பது தார்மீக நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் தவிர்த்தது அல்ல. மாறாக இரு துருவ பனிப்போரில் சிக்கிக் கொள்ளாமல் தவிப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் இருப்பையும் தக்க வைத்துக் கொண்ட சாதுர்யம்.
உலகம் இன்று பல அதிகார மையங்களை கொண்டதாக மாறியுள்ளது. எதிர் எதிரான சக்திகளுடன் ‘பல்முனை உறவை’ இந்தியா பேணி வருகிறது. நம் தேச நலனை முக்கியமாக கொண்டு சில நேரங்களில் கடுமையான நிலைப்பாட்டையும் மேற்கொள்கிறது.
குறிக்கோள் மாறாமல் இருக்கிறது :
உலகில் நீதி நியாயத்தை பேசும் அதே வேளையில் இந்தியாவின் இறையாண்மையை காத்துக் கொள்ள வேண்டும். தேசபக்தியை யாருக்கும் மொத்த குத்தகைக்கு விடவில்லை. காந்தி , நேரு சொல்லித்தந்த பண்புகளை விளக்கம் அளிக்கும் உரிமை எந்த ஒரு சாராருக்கு மட்டும் இல்லை. அவர்கள் சொன்ன குணங்களை நம் காலத்து சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தி செயல்படுவதே நாம் அவர்களது வாரிசுகள் என்பதற்கு உண்மையான அடையாளம். நம் நாட்டு நலன்களை காவு கொடுத்துவிட்டு சுயபரித்தியாகம் செய்ததாக சொல்லிக் கொள்வதில் இல்லை.
தேச நலனும் நெறி சார்ந்த விழுமியங்களும் முரண்படும்போதெல்லாம் இந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளதை இன்று விமர்சனம் செய்பவர்கள் வசதியாக மறந்து விட்டனர். 1956 இல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் அப்பட்டமான அத்துமீறலை நாம் கண்டனம் செய்யவில்லை. அதேபோல் 1968 ல் செக்கோஸ்லோவாகியாவிலும் 1979 இல் ஆப்கானிஸ்தானிலும் நடந்தபோது நாம் அமைதியாக இருந்தோம். அது ஏன் ?
ஏனெனில் நாம் தார்மீக நிலைப்பாட்டை மேற்கொண்டால் அது மாஸ்கோவுடன் நமக்கு இருக்கும் நல்லுறவை சிதைத்து விடும் என்று சரியாக கணித்தோம். சோவியத் யூனியன் நமக்கு முக்கியமான ஆயுத வியாபாரி. ராஜதந்திர நிலைப்பாடுகளில் நமக்கு கூட்டாளி. மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க சரியான மாற்று.
அமைதியாக இருந்ததன் மூலம் நாம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரித்ததாக அர்த்தம் இல்லை. எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதற்கான விலை என்ன என்பதை புரிந்து கொண்டோம். அதனால் ஆவேசமான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இன்று உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு , ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலிலும் அதே வாதத்தின் நீட்சியாக நம் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, ஈரானிய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள வளைகுடா நாடுகளிலும் நமக்கு ஏராளமான பணயம் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலருக்கு இந்த பகுதியில் நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். நமது எரிசக்தி தேவை வளைகுடா எண்ணெய் , இயற்கை எரிவாயுவை சார்ந்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் வசிக்கும் ஒன்பது மில்லியன் இந்தியர்களின் நலன் அந்த பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையது.
ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போரை தார்மீக அடிப்படையில் கண்டனம் செய்வதாக பாசாங்கு செய்தால் அவர்களுடனான நமது உறவு பாதிக்கப்படும். அது மட்டுமன்றி அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சம்பள பணம் – இதுதான் பல லட்சம் இந்திய குடும்பங்களுக்கு ஆதாரமாக உள்ளது, நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான எரிசக்தி, நம் வளர்ச்சிக்கு ஆதாரமான வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் அமைதியாக இருப்பது கோழைத்தனம் அல்ல. நம்முடைய தேச நலனும் அந்த பிராந்திய நிதர்சனங்களும் சிக்கல்களும் பின்னி பிணைந்துள்ளன என்பதை புரிந்து கொண்ட தெளிவை காட்டுகிறது.
வாஷிங்டனின் உள்ள அரசின் இயல்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா நாம் எதிர்பார்ப்பது போல சர்வதேச சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன் நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்களை விளாசத் தயங்குவதில்லை. போரானது இதுவரை நாம் மேற்கொண்ட நெறிகளுக்கு முரணாக இருக்கிறது என்றாலும் அமெரிக்காவுடன் நமக்கு இருக்கும் வேறு பல ஆதாயங்களை காவு கொடுப்பது அறிவார்ந்தது அல்ல.
சீனாவின் வளர்ச்சியினால் நமக்கு எழுந்துள்ள கவலைகள் எல்லாம் அமெரிக்காவின் ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்பக் கூட்டு, உறுதியான நட்புறவை பக்கபலமாக சார்ந்துள்ளோம். ஈரான் போரில் நெறி சார்ந்த நிலைப்பாட்டை மேற்கொண்டு அமெரிக்காவை முறைத்துக் கொண்டால் அது நம்முடைய முக்கியமான நலன்களை இழப்பதற்கு ஈடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அயலுறவு கொள்கை என்பது நம்முடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதும், நம் நலன்களை முன்னெடுத்துச் செல்வதும், அமைதியை நிலை பெற செய்வதற்குமானது.
இப்போது தார்மீக உயர்நிலைப்பாட்டை மேற்கொள்வது நம்முடைய நலன்களுக்கு உகந்தது அல்ல. அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள முடியும் என்றால் அந்த நிலையை மேற்கொள்ளலாம். ஆனால் இன்று நம்மால் அந்த நிலையை மேற்கொள்ள இயலாது.
யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடப்பது என்றால் வேறு எவரையோ பின்பற்றுவதாகாது. பல பன்னாட்டு அரங்குகளில் இந்தியா உலக நீதியை பலமுறை பேசியுள்ளது. ஆனால் எப்போது நம் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சமநிலையை பேணும் இந்த புரிதல் பொறுப்பான அரசியல் களமாடலில் அவசியம்.
ஆதாயம் அற்ற சூழ்நிலையில் அமைதியாக இருப்பது விவேகமானது. அது நம்முடைய நலன்களை பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி தேவைப்படும் போது அமைதியாக ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகும். தேவையற்ற மோதலை தவிர்த்து உரிய நேரத்தில் இரண்டு தரப்பினரிடையே பேசி அமைதி திரும்ப வழிவகை காண இயலும். அதற்கு நாம் ஊடகமாக இருக்க முடியும்.
போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று கேட்கும் இந்திய முற்போக்காளர்கள் நெறி சார்ந்த நிலைப்பாட்டை தார்மீக தைரியம் என்று தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். அயலுறவு கொள்கை என்பது வகுப்பறையில் பாடம் எடுப்பது அல்ல. இதை மறந்து விடக்கூடாது. அது அதிகாரமும் கொள்கைகளும் எதிரெதிரே நிற்கும் போட்டி அரங்கம். அந்த களத்தின் விளைவுகள் பல கோடி உயிர்களை, வாழ்க்கையை பாதிக்க கூடியவை. இதை கருத்தில் கொள்ளாமல், கண்டனம் செய் என்று அடுக்குமொழியில் அலற்றுவது பொறுப்பின்மையின் உச்சமாகும்.
நாம் தார்மீக சக்தியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று காந்தி சொல்லித் தந்துள்ளார். சர்வதேச சட்டங்கள்தான் அமைதியின் ஊற்றுக்கண் என்று நேரு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் நம் தேச நலன் முக்கியம் என்பதையும் புரிந்து கொண்டவர்கள். அவர்களது வாரிசுகள் இறுகிய பற்றாளர்கள் இல்லை. மாறாக , சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது கூற்றை நடைமுறைப்படுத்துபவர்கள்.
ஈரான் மீது நடக்கும் போரை சர்வதேச சட்டங்களால் நியாயப்படுத்த முடியாது. இந்தியா அமைதியாக இருப்பதால் போரை அது ஆதரிப்பதாக கருதக்கூடாது. நம் தேச நலனை பற்றி புரிந்து கொண்ட செயலறிவு முக்கியமே அன்றி நெறி சார்ந்த நிலைப்பாடல்ல.
இந்திய அரசுக்கு நான் ஆலோசனை கூற வேண்டுமென்றால், அது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், அடக்கி வாசியுங்கள் என்றுதான் கூறுவேன். நம்மை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருப்பதே பலம். கொள்கையையும் யதார்த்தத்தையும் சமன் செய்வதே வலிமை. நம்முடைய நலன்களை பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய விழுமியங்களை மதிப்புறச் செய்ய வேண்டும். ஆபத்தான உலகில் அறிவின் துணையுடன் பயணிக்க வேண்டுமே அன்றி போலி துணிச்சலுடன் தற்பெருமையோடு எதிர்கொள்ளக்கூடாது.
புவிசார் அரசியல் நிதர்சனங்களை புரிந்து கொண்டு , இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படும் விளைவுகளை எடை போட்ட பிறகு, விவேகமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அரசு ‘சரணாகதி அடைந்த’ அரசு அல்ல. பொறுப்பை உணர்ந்த சாதுரியமாக அரசு.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். அயலுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்.
பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர் சோதனை சாவடி பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த கார் சோதனை.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுரை–தூத்துக்குடி நெடுஞ்சாலையின் ஆவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பயணித்த கார் திடீரென நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, முதல்வரின் அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டதுடன், காரில் இருந்த சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு உறுதி செய்யும் வகையில் எந்த வாகனமும் விலக்கு இல்லாமல் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க சி ஐ ஏ ஏஜென்ட் இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் சிக்கியுள்ளான். கூட ஐந்தாறு உக்ரைன்காரர்கள் வேறு. அமெரிக்க நாட்டின் கெடுதலை நினைப்பவர்கள் பாரதத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் உலக நலனை விரும்புகிறவர்கள் அமெரிக்காவில் ஒருவர் கூட இல்லை.
நாம் நன்றாக இருக்கவேண்டுமென்றால் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதோடு அடுத்தவன் நன்றாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் உயிரோடு இருக்கவேண்டும், நாம் போடும் பிச்சைக்கு ஏங்க வேண்டும், நம்மையே முதலாளியாக எண்ணவேண்டும், நிரந்தர தாழ்வு மனப்பான்மையோடு நம்மை கடவுளுக்கு இணையாக பார்க்கவேண்டும். இந்த எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து வைத்துள்ளது அமேரிக்கா அவர்களது மக்கள் மனதில்.
இந்தியா தங்களுக்கு உதவவில்லை, போரையும் நிறுத்தவில்லை என்பதற்காக கூலிப்படைகளை அனுப்பியுள்ளது இரு நாடுகளும். இந்த இரண்டு நாடுகளிலும், பாரத நாட்டில் இருப்பது போல தங்கள் நாட்டை நேசிக்கும் தேசபக்தர்கள் எல்லாம் கிடையாது. தங்கள் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய சுகத்தை நாடு உத்தேசிப்பதால், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் கூட்டம் தங்களுக்கு பணம் தருகிறது என்பதால் நாட்டுக்காக வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான்.
சிவப்பு பயங்கரவாதத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்துவிட்டதால், மீறி வந்தால் பாரதம் உள்ளே வந்து தாக்கும் என்பதால் உள்ளே வராமல் இருக்கும் இடத்திலிருந்தே தாக்கும் டிரோன்களுக்கான பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உக்ரைன் டிரோன் விஷயத்தில் ரஷியா கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது. அதனால் இந்த பகுதியில் கிருஸ்தவ நாடு உருவாக்குவதை விட, கிறிஸ்தவம் என்ற பெயரில் சிகப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுதான் திட்டம். அங்குள்ள லூஷாய், ஹுமார், லாய், ரால்ட், மற்றும் சகமா இனங்களை தூண்டி விட்டு, போதை பொருளை ஊக்குவிப்பதே நோக்கம்.
ஏற்கனவே பாகிஸ்தானில் விளைந்துள்ள போதைப்பொருட்களை அரபிக்கடல் வழியாக கடத்த முடியவில்லை. கவனித்து பார்த்தீர்களென்றால் சமீப காலமாக கடலில் பெருமளவில் பொருள் எதுவும் சிக்கவில்லை. காரணம், இந்திய இராணுவம். மாட்டினால் தொலைந்தோம் என்று வரவில்லை. அதனால் சீனா வழியாக மியான்மார் வழியாக மிசோரம் பகுதியில் கால் பாதிக்க திட்டம்.
கில்கிட் பகுதியை பாகிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் வந்த வினை. அப்படியே நடந்து போகிறார்கள் திபெத், சீனா என்று. ஆனால் பலூச் புரட்சியாளர்கள் அடித்து நிமிர்த்துவதால், ஆப்கனிஸ்தான் இன்னொரு பக்கம் துளைத்து எடுப்பதால் நேரடியாக பாரதம் போர் என்று எதுவும் புரியாததால், பழியை பாரதத்தின் மீது போட்டுவிட்டு, பலூச்ச்சையும், ஆப்கானியர்களையும் எதுவும் செய்ய முடியாததால் இப்படி திருட்டு அடி அடிக்க வந்துவிட்டார்கள்.
இப்போது ஒரேயொரு வழி இருக்கிறது. வந்திருக்கும் அமெரிக்கனையும், உக்ரைன்காரனையும் நாம் கொல்லக்கூடாது. விசாரணை, விசாரணை என்று வைத்து அவனை வெறுப்பேற்றி, தூதரக உதவியை கோர முடியாதென்பதால், யாரையும் சந்திக்க முடியாமல் செய்து, ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரணையை பதிவு செய்து வெளியிட்டு எங்களை அனுப்பியது அமெரிக்க சி ஐ ஏ மற்றும் உக்ரைன் அரசுதான் என்று சொல்ல வைத்துவிட்டால் போதும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்துவிடலாம்.
உலக பயங்கரவாதி அமெரிக்காவுக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு மனமெல்லாம் கிடையாது என்பது ஒரு புறம். ஆனால், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் லாபி செய்து, என்ன காரணத்துக்காக உலக நன்மையை உத்தேசித்து, உழைத்து முன்னேற துடிக்கும் ஒரு நாட்டுக்கு எதிராக, பயங்கரவாதத்தை தூண்ட ஆட்களை அனுப்பினீர்கள் என்று கேட்டு இதற்கு நேரடி பொறுப்பேற்று அதிபரை ராஜினாமா செய்ய சொல்லி தூண்டலாம். அமேரிக்கா சென்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அல்லது பெரிய பத்திரிக்கைகளை இங்கு வரவழைத்து அவர்களுக்கு பேட்டி அளித்து தலைகுனிவை ஏற்படுத்தலாம்.
இதே வேலையை உக்ரைனுக்கும் செய்ய வேண்டும். நாட்டை ஒழுங்காக ஆண்டு, பக்கத்து நாடான ரஷியாவுடன் நட்பு பூணாமல் சண்டை போட்டு பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து வரும் பைத்தியம், சம்பந்தமே இல்லாத பாரதத்தில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது, போரை தூண்டுகிறது என்று கலகம் செய்யலாம்.
ஆனால், ஒன்று நிச்சயம். இவ்வளவு பலம் குறைந்த எதிரி என்று மியான்மாரை நினைக்கவே கூடாது. அப்படி நினைக்காமல் கவனமாக இருந்ததால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாமனிதர்களுக்கு நன்றி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10ம் தேதி காணாமல் போனார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் மாணவி மாயமானதாக புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்றும், மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்துப் போனதாகவும் போலீசார் கூறினர்.
கைதான தர்ம முனீஸ்வரன், 2020இல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தனது சந்தேகத்தை சமூகத் தளப் பதிவில் வெளியிட்டிருக்கிறார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவரது கேள்விகள்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin , இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சாந்திரமான ஸம்வத்ஸராதி- உகாதி (19-03-2026) வியாழன் இன்று தொடங்குகிறது.
பொதுவாக வருஷம் என்பது சாஸ்திரப்படி ஸாவனம், சௌரம், சாந்திரம், நக்ஷத்திரம், பார்ஹஸ்பத்யம் என்பதாக ஐந்து வகைப்படும். 30 நாள் கொண்டது ஒரு மாதம், 360 நாள் ஒரு வருஷம், என்று கணக்கிடுவது ஸாவன வருஷம்.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது மாதப்பிறப்பு என்று 12 மாதங்களை கணக்கிடுவது சௌரமான வருஷம். தமிழகத்தில் வசிக்கும் நாம் சௌரமானத்தையே பெரும்பாலும் பின்பற்றுகிறோம். சந்திரனின் போக்கையொட்டி (அமாவாசைக்கு மறுநாள் முதல்) கணக்கிடுவது சாந்திரமான மாதம்- வருஷம்.
நக்ஷத்ரங்களில் முதன்மையான அசுவதி நக்ஷத்ரத்தை மாதப் பிறப்பாகக் கணக்கிட்டு 27 நாட்கள் ஒரு மாதம் என்று 12 மாதங்களை கணக்கிடுவது நாக்ஷத்ரமானம். ஜோதிஷ சாஸ்திரப்படி தசைகள், புக்திகளின் அளவுகளைக் கணக்கிட இது உபயோகப்படுகிறது.
பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தின் ராசி மாறுதலை வருஷப் பிறப்பாகக் கொள்வது பார்ஹஸ்பத்ய வருஷம். ஆக இவ்வாறு ஐந்து விதமாக வருஷ ஆரம்பம் கணக்கிடப்படுகிறது.
இவற்றில் கடைசியில் கூறப்பட்ட நாக்ஷத்ரம், பார்ஹஸ்பத்யம் ஆகியவை தர்ம சாஸ்திரத்தில் உபயோகமில்லை என்பதால் மூன்றுவித வருஷங்களே வழக்கத்தில் உள்ளது.
இவற்றில் சாந்திரமான ஸம்வத்ஸரம் என்னும் வருஷம் பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமையான இன்று தொடங்குகிறது. தெலுங்கு – கன்னட – மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் – சாந்திரமான வருஷத்தை பின்பற்றும் சிலருக்கும் இன்று புதிய வருஷம் ஆரம்பம்.
ஸ்ரீராமநவமி போன்ற விரதங்கள் சாந்திரமானத்தை ஒட்டியே வருகின்றன. புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல், பஞ்சாங்க படனம் போன்ற செயல்கள் அனைத்தும் இன்று நடக்கின்றன.
யுகாதி – உகாதி
புது வருடத்தின் முதல் நாளைக் குறிப்பிடுவதில், களிதெலுங்கில் ‘உகாதி’ என்றும், கன்னடத்தில் ‘யுகாதி’ என்றும் உச்சரிப்பில் சிறிய வேறுபாடு மட்டும் உண்டு. மஹாராஷ்டிரத்திலும் கொங்கணத்திலும் இந்நாளை ‘குடி பட்வா’ என்றழைப்பார்கள். சிந்தி வகுப்பனருக்கோ இந்நாள் ‘சேத்தி சந்த்’ ஆகும். வசந்தத்தை வரவேற்கும் விதமாய் அமைந்த பொன்னாள். வசந்த நவராத்திரியின் முதல் நாளும் இதுவே.
ஒரு யுகாதி நாளில் தான் நான்முகன் படைப்புத் தொழிலையும், மஹாவிஷ்ணு காலக் கணக்கையும் தொடங்கினார்கள் என்பது ஐதீகம். அன்றுதொட்டு காலமெனும் சக்கரம் சுழன்றபடியே இருக்கிறது. இலைகள் உதிர்வதும், பின் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்குவதும் , தகிக்கும் கோடையும், பெய்யெனப் பெய்யும் மழையும், நடுக்கும் குளிரும் மாறிமாறி வருகின்றன.
உகாதியின் பொருள்:
உகாதி= உ+க+ ஆதி உ -என்பது நக்ஷத்திரம் க- என்பது கமனம் (கதி, செல்லுதல்) ஆதி என்பது நக்ஷத்திரத்தின் கதியைவைத்து கணிக்கத் தொடங்கிய நாள் என்று அனுசரிக்கப் படுவது. (அல்லது) யுகாதி=யுக+ஆதி . யுகங்களின் ஆதி முதல் கணிக்கப்படும் காலம்.
யுகாதிக்குத் தயாராக வீட்டுக்கு வெள்ளையடித்து, அன்று மாலைகளும், தோரணங்களும் கொண்டு அலங்கரிப்பார்கள். தலைக்கு எண்ணை தேய்த்துக் குளித்தபின் புத்தாடை உடுத்தி வழிபாடு செய்வார்கள்.
இந்த நாளில் படைப்பு தொடங்கப் பட்டதால் பிரம்மனுக்கு வழிபாடு பிரதானம். வீட்டு வாசலில் கோலமிட்டு ஒரு கழியையோ கொம்பையோ நிறுத்துவார்கள். அதை பிரம்மனாக பாவித்து சந்தனம், குங்குமம். மலர்களால் அலங்கரித்து தூபதீபம் காட்டி நெய்வேத்தியம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன் பின்னரே பூஜையறையில் வழிபாடு.
பூஜைக்குப் பின் அனைவருக்கும் கொஞ்சம் யுகாதி பச்சடி வழங்கப் படும். புளி, வேப்பந்தளிர் மற்றும் பூ, வெல்லம், உப்பு, மாங்காய், பச்சை மிளகாய் இவற்றால் செய்யப் பட்டதே இந்தப் பச்சடி. இனிப்பு, கசப்பு என்று அனைத்தும் கொண்டதே நம் வாழ்க்கை என்று உணர்த்தும் பச்சடி.
இதை உட்கொள்வதற்கு முன், ஒரு சிறிய சுலோகம் சொல்வது மரபு. கீழ்க்கண்ட சுலோகமே அது :-