கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
ஹிந்து மதம், பௌத்த மதம், கிறிஸ்தவ மதம். முகம்மதிய மதம் என்று மதங்களினுடைய ஸ்தூலப் பெயர்கள் பற்பலவயிருந்தாலும், அவை எல்லாவற்றினுள்ளும் ஊடுருவிச் சென்று வியாபித்து நிற்கும் கொள்கைகள் மூன்று தன்மையனவாம்; அவையாவன:- துவைதம், விஸிஷ்டாத்வைதம், அத்வைதம்.
இவற்றினுள்ளே, விஸிஷ்டாத்வைதமானது ஞானமும், பக்தியும் நலமுறச் ஸமமாகக் கலந்துள்ள மதம் என்பதில் எள்ளளவும் ஸந்தேகமில்லை.
துவைத மத சித்தாந்தமானது வெறும் பக்தியையே ஆதாரமாகக் கொண்டது: அத்வைதமானது கேவலம் ஞானத்தையே ஆதாரமாகக் கொண்டது; ஆனால், விசிஷ்டாத்வைத மதமோ பக்தி, ஞானம் இவ்விரண்டையும் ஸமப்படுத்தி, ஹிருதய உணர்ச்சியுடனே ஆத்ம ஞானத்தையும் ஊட்டுகின்றது.
கேவலம் பக்திமாத்திரம் இருந்தால் அது வெறும் மூட பக்தியாகி, குருட்டு விஸ்வாசமாக முடிந்து, ஒரு மனிதன் ஆசையுடனே வளர்த்த கரடிக்குட்டியானது அவன் முகத்திலே ஒரு ஈ உட்கார, அவன் மீது தனக்குள்ள அன்பு மிகுதியினால் அதனை அது சகிக்காது, அந்த ஈயைக் கொல்லக் கருதி, அவன் முகத்திலே ஓங்கி ஒரு அறை அறைய, ஈயும் அவனும் ஆகிய இருவரும் இறந்துவிட்ட கதை போலாய் விடுகின்றது.
வெறும் ஞானமோ ஹிருதயத்திலே ஈரம் வளர்க்காது. அன்பு என்பதை அறியாது, கேவலம் வறட்சி பெற்ற அறிவாகி விடுகின்றது. ஆனால், பக்தியும், ஞானமும் சேர்ந்த விஸிஷ்டாத்வைதமோ இவ்விரண்டையும் ஏகோபித்து ஒரே காலத்தில் வளர்ந்து, “ஹிருதயம், மூளை ஆகிய இரண்டிலே ஒன்றைவிடஒன்று உயர்ந்ததில்லை”, என்றும் “மநுஷ்ய வர்க்கத்தின் துக்க நிவிர்த்திக்கு இவ்விரண்டும் அவசியமேயாம்”, என்றும் நிரூபிக்கின்றது. ஆகையால், விஸிஷ்டாத்வைதமே சிரேஷ்டமான மதமாகும்:
ஆகவே, அதனைப் பிரகாசப்படுத்திய ஸ்ரீ ராமானுஜர் ஓர் மஹா புருஷர் என்பதில் என்ன ஸந்தேகம்? இம் மஹானுடைய அன்புக்கும் அறிவுக்கும் இணையாக எதையும் சொல்ல முடியாது.
ஸ்ரீ ராமானுஜர் நூலின் முன்னுரையில் விடுதலைப் போராட்டத் தியாகி ஸ்ரீ சுப்ரமணிய சிவா
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம் – கொல்லம் சாலையில் புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. 8 சமுதாயத்தினர் சார்பில் சித்திரை மாதம் 11 திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெசவாளர்களால் திரிக்கப் பட்ட கொடிக் கயிறு, நேற்று இரவு பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கொடி மரம், பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டிய பிறகு, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்தில் நெற்கதிர்கள் வைத்து கட்டி, நிலை மாலை சார்த்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு தினம் ஒரு சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நடைபெற்ற பின்னர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.
அடுத்து வரும் 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் திருவிழா கொண்டாடப்பட்டது. வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரம், தண்டியல். தட்டுசப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும் .
இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏப்ரல் 30 காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துவர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கோயிலினுள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்கள் படை சூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டு பூக்குழி விழா விமரிசையாக நடைபெறும்..
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம் தேர்ந்தெடுப்போம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
வருகின்ற ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தின் திருவிழாவான இந்த தேர்தலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நமது மாநில ஆளுமையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு நாம் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நமக்கு கிடைத்தப் படிப்பினையை கவனத்தில் கொண்டு, வருங்கால ஆட்சியை நாம் தேர்ந்தெடுக்க ஜனநாயகம் தந்திருக்கும் வாக்குரிமை எனும் ஆயுதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் தாயகம் நமது தமிழ்நாடு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டது. அதற்குச் சான்றாக செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் திருக்கோவில் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. மேலும் குடவோலை முறை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதில் வேட்பாளருக்கான தகுதி மிகத் துல்லியமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவற்றை காணும்போது நவீன உலகில் வாழும் நாம் ஏன் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மகாகவி பாரதி பாடியதைப் போல நாம் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கிணங்க, உலகிலேயே இந்திய ஜனநாயகத்தில் தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாக்குரிமை எந்த வேறுபாடும் இல்லாமல் முதன்முதலில் வழங்கப்பட்டது. நமது நாடு நமக்கு அளித்த பெருமைமிகு வாக்குரிமையை நாம் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு விவசாயி நல்ல விதைகளை விதைக்க வில்லை என்றால் எப்படி அறுவடையில் முழு பலனைப் பெறாமல் போவானோ, அதுபோல இந்த தேர்தலில் நல்ல ஆளுமை இல்லாத பதர்களை தேர்வு செய்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் அனுபவிப்பது வேதனை ஆகும்.
இறைவன் நமக்கு துணை இருப்பார். போராடி நமக்கான வெற்றியை பெற வேண்டியது நமது முயற்சி ஆகும். மகாபாரதத்தில் கிருஷ்ணர் துணை இருந்தார், அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினார். போரில் வெல்ல நீதிபோதனைகளை அளித்தார். ஆனால் போராட வேண்டியது அர்ஜுனன் தான் என உணர்த்தினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் திமுக எனும் தீய சக்தி தேசத்தை அவமதிக்க துடித்தது. ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சிதைக்க செயல்பட்டது. இந்துக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணித்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றே போராடி அனுமதி வாங்க வேண்டியிருந்தது.
இந்துக்களையும் இந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் அவமதித்தது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். அதற்கெல்லாம் மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அதனை அவமதித்து.
கிறித்துவ முஸ்லிம் மதத்தலைவர்கள் திமுகவை நேரடியாக தங்களுக்கு சாதகமான கட்சி என்று தெரிவித்துள்ளனர். பகிரங்கமாக தங்களது ஆதரவை திமுகவிற்கு தெரிவித்ததை செய்திகளில் பார்க்கிறோம். இந்துக்களாகிய நாம் நமக்கு ஆதரவான கட்சியை ஆதரித்து, தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினால் அதனை மதவாதம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. நேரடி அரசியலில் ஈடுபடாது. ஆனால் அரசியலில் இந்துக்களின் நலனை எடுத்துக் கூறுவது நமது கடமை.
எனவே வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்து விரோத திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 – 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார். அதன் சாரம் இங்கே…
ஸ்பர்சம் என்ற கல்பம், கல்லைத் தொட்டால் தங்கமாகும். குரு சிஷ்யனைத் தொடாமலே தன்னைப்போல் செய்துவிடுகிறார். சந்தன மரத்தின் சேர்க்கையால் மற்ற மரங்களும் வாசனையைத் தருவதுபோல், குரு உபதேசம் பெற்ற சிஷ்யனும் உலகை மகிழ்விக்கிறான்.
உலகெல்லாம், உடலை நான் என்று எண்ணி அதற்கு வேண்டிய போஷணை, அலங்காரங்களைச் செய்கிறதே தவிர, எந்த வஸ்துவால் இந்த உடல் பிணம் ஆகாமல் நாற்றம் எடுக்காமல் இருக்கிறதோ, அதைப் பற்றி கவனிப்பதே இல்லை. ஒரு நல்ல சாமர்த்தியம் வாய்ந்த புழு, காட்டிலுள்ள முட்களால் தனக்கு ஒரு வீடு அமைத்துக்கொண்டு, ஆயுள் வரை அதில் வசிக்கிறது. அதுபோல் ஜீவன் தனது புண்ய பாப கர்மங்களால் சரீரத்தை எடுத்து, பலனை அனுபவிக்கிறான்.
புலி வேஷம் பூண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான். பெண் வேஷம் பூண்டு ஒருவன் நடிக்கிறான். புலிவேஷக்காரன் மனிதர்களையும் பசுக்களையும் அடித்துத் தின்பானா? பெண் வேஷதாரி புருஷனது காம இச்சையைப் பூர்த்தி செய்வானா? அதேபோல் ஜீவ வேஷம் பூண்ட ஆத்மா, சுக துக்கங்களை அனுபவியான்.
அழும் குழந்தையை சமாதானம் செய்ய, தாய் தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருள்களையும் அளிப்பதுபோல அனேக பிறவி வாசனையால் மோகமடைந்த மனதை நல்வழிப்படுத்த உபநிஷத் என்ற தாய் ருசியான பல உபாயங்களைக் கூறுகிறாள்.
உலகில் பிரியமான வஸ்து ஆத்மா. அதற்காக மனைவி, தனம், பிள்ளை, வீடு முதலியன பிரியமாய் இருக்கின்றன. ஒருவன் தனக்காக இவற்றை இழக்க சம்மதிப்பான். ஆனால் அந்தப் பிரிய வஸ்துவை விசாரித்து பூரண ஆனந்தம் பெற முயற்சிப்பதில்லை.
பிரும்மார்ப்பணம் என்று அளித்த தானம், மனதிலும் கோபம் இல்லாமை என்ற பொறுமை, சிரத்தை என்ற ஆஸ்திக்யம், சத்யம் இந்நான்கைக் கொண்டு, பந்தகமான சுவர்க்காதிகளைப் பெறுவதைவிட, நிஷ்காம்யமாக இவற்றையே அனுஷ்டித்து மோட்சம் அடைவோர் துர்லபம்.
தேவதைகளுக்கும் அதிதிகளுக்கும் அளித்த அன்ன சேஷம் அமிர்தம். தனக்காகச் செய்த உணவு வ்யர்த்தமானதுடன் மிருத்யுவை அளிக்கவல்லது. தான் மட்டும் உண்பவன் கேவல பாபத்தை அனுபவிப்பவன். ப்ராணாக்னிஹோத்ரம் செய்யாமல் புஜிப்பவன் நரகத்தையே அனுபவிப்பான்.
நனைந்த கட்டையில் அக்னி பற்றுவதில்லை. சூர்ய தாபத்தால் ஈரம் உலர்ந்த பிறகு சீக்கிரமாக தீ பிடிக்கும். விஷயங்களால் மனம் நனைந்தபோது ஞானம் வருவதில்லை. வைராக்யத்தினால் மனம் உலர்ந்த பிறகு ஞானம் உதயமாகும். பலவாத்யங்கள் ஏக காலத்தில் வாசிக்கப்பட்டால் தனித்தனியாக அதன் த்வனி நம் காதில் விழுவதில்லை. எல்லாம் கலந்து ஒன்றாகவே கேட்கிறது. அதேபோல் மாயையினால் சைதன்யத்தையும் ஜடவஸ்துவையும் பிரிக்க முடியாமல் உலக வியவஹாரம் நடக்கிறது.
பிரளய காலம், சுஷுப்தி, ஜீவன்முக்தி இம்மூன்றிலும் ஒரே சுகந்தான். முன்னிரண்டிலும் வாஸனை கர்மா இரண்டும் ஒழியாததால் மறுபடி துக்க அனுபவமுண்டு. பின்னதில் பிறப்பு இறப்பில்லை, பேரானந்தம் உண்டு. சுக துக்கங்களுக்குக் காரணம் என்ன என்று ஜனகர் சபையில் வாதம் நடந்தது. மித்ரர் சத்ருக்கள் காரணமில்லை; கர்மாதான் ஹேது என யாக்ஞவல்க்யர் சொன்னார். அக்கர்மா இல்லாமல் க்ஷணம்கூட மனிதன் இருப்பதில்லை என கீதாசார்யன் கூறினார்.
மரத்தை வெட்டுவது கோடரி. ஆயினும் அதை எடுத்துத்தூக்கிப் போடுபவன் ஒருவன் இருந்தால்தான் கோடரி வெட்டும். பூர்வ கர்மாவே பலனை அளிப்பது. ஆயினும் அதை அனுபவிக்க புருஷ பிரயத்னம் வேண்டும். நம் முன்னே நின்று அந்தராத்மா நம்மைத் தூண்டுகிறான். வேரில் நீர் விட்டால் கிளை, இலை, புஷ்பம், காய், கனி மகிழ்ச்சி அடைவதுபோல், வர்ணாச்ரம ஆசாரப்படி கர்மாவைச் செய்து பகவத் அர்ப்பணம் செய்துவிட்டால் எல்லா தேவர்களும் மகிழ்ந்து, கர்மபலத்தைப் பெறும்படி செய்வர். *
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை. இந்த ஸ்தோத்திரம் உருவமற்ற பரம்பொருளை வெளிக்காட்டும் ஆறு பாடல்களால் ஆனது. ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வோர் உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் இது அளிக்கும்.
நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.
ந ச ப்ராணஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு꞉ ந வா ஸப்ததா⁴துர்ன வா பஞ்சகோஶ ꞉ | ந வாக் பாணிபாதௌ³ ந சோபஸ்த²பாயூ சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 2||
நான் பிராணனும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல, நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல, நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.
ந மே த்³வேஷராகௌ³ ந மே லோப⁴மோஹௌ மதோ³ நைவ மே நைவ மாத்ஸர்யபா⁴வ꞉ | ந த⁴ர்மோ ந சார்தோ² ந காமோ ந மோக்ஷ꞉ சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 3||
என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை, எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்
எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை, எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை, நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல, நான் விழிப்புணர்வு, பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!
ந மே ம்ருʼத்யுஶங்கா ந மே ஜாதிபே⁴த³꞉ பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம | ந ப³ந்து⁴ர்ன மித்ரம்ʼ கு³ருர்னைவ ஶிஷ்ய꞉ சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 5||
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி பேதம் இல்லை, எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை, நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!
நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது, நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன், நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறை பிடிக்கப் பட்டவனாகவோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
இந்த விழாவின் சிறப்பம்சங்கள்:- கும்பகோணம் நகரில் உள்ள 12 முக்கியமான வைணவத் தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் (பெருமாள்) தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளுவார்கள். இந்த 12 பெருமாள்களும் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் (Big Bazaar Street) வரிசையாக அணிவகுத்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் காட்சியளிப்பார்கள். இதில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, வராகப் பெருமாள் உள்ளிட்ட 12 கோயில்கள் பங்கேற்றன. அட்சய திருதியை ஆன நேற்று (20/4/2026 ) பெரிய கடைத்தெருவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
குடந்தை பன்னிரு கருட சேவை வரும் அட்சயதிருதியை நாளன்று திருக்குடந்தை என்று ஆழ்வார்களால் போற்றப்பட்ட கும்பகோணத்தில், பெரிய கடைத் தெருவில் ஸ்ரீமத் அகோபில மடத்திற்கு முன் உள்ள பந்தலில் காலை 9 மணியளவில் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப்பெருமாள் அவருக்கே உரிய பெரிய கருடவாகனத்திலே முன்னே எழுந்தருளி இருப்பார். இதுவே முதல் கருட வாகனம்.
அவருக்கு வலப்புறத்தில் ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள் இரண்டாவது கருட வாகனத்தில் எழுந்தருளிப்பார். இடப்புறத்தில் ராமபிரானும் கருடவாகனத்திலே வீற்றிருப்பார். இது மூன்றாவது கருட வாகனம். இவர்களுக்குப் பின்வரிசையில் ஆதி வராகப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். (இது நான்காவது கருட வாகனம்) அவருக்குப் பின் பெரிய கடைவீதி ராஜகோபாலன் ஐந்தாவது கருடவாகனத்திலே காட்சி தருவார்.
இந்த ஐவருக்கும் பின் கொட்டையூர் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் ஆறாவது கருடவாகனத்திலும், மேலக்காவிரி வரதராஜப் பெருமாள் ஏழாவது கருட வாகனத்திலும், தோப்புத் தெரு ஸ்ரீராஜகோபாலன் எட்டாவது கருட வாகனத்திலும், பாட்ராச்சாரியார் தெரு நவநீத கிருஷ்ணன் ஒன்பதாவது கருட வாகனத்தில் ஸ்ரீமத்வர்கள் வழிபடும் பட்டாபிராமன் எழுந்தருள்வார். பத்தாவது கருட வாகனத்தில் ஐந்து பெருமாள்கள் எழுந்தருள்வர்.
இது தவிர, இவர்களை வழிபடும் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முன்னே எழுந்தருளி இருப்பார். சார்ங்கபாணி-சக்ரபாணி பெருமாள்களுக்கு முன்னே போடப்பட்டிருக்கும் சிறிய பந்தலில் சௌராஷ்ட்ரப் பெருமக்களுடைய சிறப்பான வழிபாட்டிலே உள்ள ஸ்ரீவேதநாராயணன் பதினொன்றாவது கருட வாகனத்திலும், ஸ்ரீவரதராஜன் பன்னிரெண்டாவது கருட வாகனத்திலும் எழுந்தருள்வார்.
இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத் அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு. அதனால் சில வருடங்களில் கருட சேவையின் எண்ணிக்கை பதினான்கு, பதினைந்து என்று வளர்வதும் உண்டு.
கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வழிவகை செய்த கருடனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருடா வருடம் கங்கை பூமிக்கு வந்த நாளான அட்சயதிருதியை அன்று, குடந்தையில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.
அந்த உற்சவத்தில், திருமாலைத் தன் தோளில் ஏற்றியபடி, அவரது திருவடிகளைத் தன் கையில் தாங்கிய படி வரும் கருடன், நம்மைப் பார்த்து, பக்தர்களே இதோ இந்தத் திருவடிகளைக் கழுவிய கங்கை உங்கள் சாபங்களையும் பாபங்களையும் போக்க பூமிக்கு வந்த நன்னாள் இது என்று அறிவிக்கிறார். அட்சய திருதியை தினத்திலே கங்கையில் நீராடுவது பெரும் புண்ணியம். ஆனால் கங்கைக்குச் சென்று நீராட இயலாதவர்கள், குடந்தை பன்னிரண்டு கருடசேவையைத் தரிசித்தால், கங்கையில் நீராடிய பலன் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஏன் பன்னிரு கருட சேவை கருடனுக்கும் அட்சயதிருதியைக்கும் உள்ள தொடர்பு புரிந்து விட்டது. ஆனால் குடந்தையில் அட்சயதிருதியையில் பன்னிரண்டு கருடசேவை ஏற்படக்காரணம் யாது? திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.
அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவரான நம் போல்வார் மேல் கருணை கொண்ட சார்ங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும் தரிசிப்பவர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.
என்பது பிரசித்தியான ஸ்லோகம். சாதாரண ஊர்களில் செய்த பாபங்களைப் புண்ணியத் தலங்கள் போக்கிவிடும். புண்ணியத் தலங்களில் செய்யப்பட்ட பாபங்களைக் காசி நகரம் போக்கிவிடும். காசியில் பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்திருத்தலம் போக்கும். கும்பகோணத்திலேயே ஒருவன் பாபம் செய்தால், அவன் வேறு தலத்தைத் தேடிப் போகத்தேவையில்லை, கும்பகோணமே அந்தப் பாபத்தைப் போக்கி விடும் என்பது இதன் பொருள்.
எனவே அட்சயதிருதியையில் குடந்தையில் கருடசேவையைத் தரிசிப்பவர்களுக்குக் காவிரிக் கரையிலே கங்கையில் நீராடிய பலன் கிடைப்பதோடு அவர்களின் பாபங்கள் அனைத்தும் கழிகின்றன. அமுதனுடன் ஆழ்வார்கள் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப் பெருமாளைப் பாடிய ஆழ்வார்கள் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மற்றும் திருமங்கை ஆழ்வார். இவர்களுள் ஆண்டாள் நீங்கலாக மற்றைய ஆறு ஆழ்வார்களும், ராமாநுஜரும், வேதாந்த தேசிகனும் சார்ங்கபாணிப் பெருமாளின் முன் பந்தலில் எழுந்தருள்வது வழக்கம். அவர்கள் ஆராவமுதாழ்வானைப் பற்றிப் பாடிய பாசுரங்களை அத்யாபகர்கள் பந்தலில் ஓத, ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் மரியாதை செய்யப்படும்.
தற்பொழுது திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வர் மட்டுமே பந்தலுக்கு எழுந்தருளுகின்றனர். அவர்களோடு அகோபில மடத்துத் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருள்கிறார். அட்சயதிருதியைப் பந்தலில் பன்னிரண்டு மணி வரை காட்சி தந்தருளும் பெருமாள்கள், அதன்பின் ஒருவர் பின் ஒருவராகத் தங்களது திருக்கோயில்களைச் சென்றடைகிறார்கள்.
சார்ங்கபாணிப் பெருமாள் பந்தலில் இருந்து கோயிலுக்குச் செல்லாமல், பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கோயிலுக்கு எழுந்தருள்வார். மதியம் முழுவதும் அங்கேயே பெருமாள் ஓய்வெடுப்பார். பிறகு மாலை 5 மணி அளவில், ராஜகோபாலன் கோயில் திருப்பள்ளியறையில் உள்ள மஞ்சத்துக்கு எழுந்தருளும் சார்ங்கபாணிப் பெருமாள், அமுதமணம் கமழும் சந்தனம் பூசி, அழகிய புஷ்ப மாலைகளுடன் காட்சி தருவார். அருகே மற்றொரு மஞ்சத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் சர்வாலங்கார பூஷிதனாக எழுந்தருள்வான். அதற்கருகில் ஓர் சிறிய மஞ்சத்தில் ஸ்ரீநடாதூர் அம்மாள் எழுந்தருள்வார். இரவு எட்டு மணியளவில் ராஜகோபாலன் கோயிலில் இருந்து புறப்படும் சார்ங்கபாணிப் பெருமாள், பெரிய கடைவீதி வழியாகத் தன் சந்நதியை அடைகிறார்.
இருபத்தைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 17
முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன் எடுத்தது. இந்த மொத்த ரன் கூட காமரூன் கிரீன் எடுத்த 79 ரன்னால் (55 பந்துகள், 7 ஃபோர், 4 சிக்சர்) சாத்தியமானது. அவருக்குத்து துணையாக ரோமன் போவெல் (27 ரன்) மற்றும் ரமன்தீப் சிங் (17 ரன்) சிறிது நேரம் கம்பனி கொடுத்தார்கள். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. குஜராத் அணியில் ரபாடா 3 விக்கட்டுகளும், ஷமி, அஷோக் ஷர்மா தலா இரண்டு விக்கட்டுகளும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன் எடுத்தார். இதில் 8 ஃபோர், 4 சிக்சர்கள் அடக்கம். சாய் சுதர்ஷன் 22 ரன், ஜாஸ் பட்லர் 25 ரன், வாஷிங்க்டன் சுந்தர் 13 ரன், கிளன் பிலிப்ஸ் 19 ரன் எடுத்தனர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இருபத்தியாறாவது ஆட்டம் பெங்களூரு vs டெல்லி – பெங்களூரு – ஏப்ரல் 18 முதல் ஆட்டம்
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அந்த அணியின் பில் சால்ட் (38 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. குறிப்பாக விராட் கோலி 19 ரன், தேவதத் படிக்கல் 18 ரன், ரஜத் படிதார் 8 ரன், டிம் டேவிட் 26 ரன், ஜித்தேஷ் ஷர்மா 14 ரன், க்ருணால் பாண்ட்யா 12 ரன் ஆகியொர் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி அணியில் நிகிடி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் கே,எல், ராகுல் (34 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (19 பந்துகளில் 26 ரன்), டேவிட் மில்லர் (10 பந்துகளில் 22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி அணி 179 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இருபத்தியேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs சென்னை – ஹைதராபாத் – ஏப்ரல் 18 இரண்டாவது ஆட்டம்
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (22 பந்துகள், 6 ஃபோர், 4 சிக்சர்), ஹென்றி கிளாசன் 59 ரன் (39 பந்துகள் 6 ஃபோர், 2 சிக்சர்), ட்ராவிஸ் ஹெட் 23 ரன்னும் (20 பந்துகள், 3 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். சென்னை அணியின் அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜமி ஓவர்டன் இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 30 ரன்னும் (13 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்), மேத்யூ ஷாட் 34 ரன்னும் (30 பந்துகள், 3 ஃபோர்), சர்ஃப்ராஸ் கான் 25 ரன்னும் (19 பந்துகள், 3 ஃபோர்), ஷிவம் துபே 21 ரன்னும் (16 பந்துகள் 1 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். ஆயுஷ் மாத்ரே காலில் காயம் பட்டுக்கொண்டார். இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம். சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் 7 ரன் மட்டுமே எடுத்தார். ஹைதராபாத் அணியின் ஈஷன் மலிங்கா 3 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 19
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டக்காரர்களை அணியில் வைத்திருந்தும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் 39 ரன்னும் (29 பந்துகள் 4 ஃபோர், 2 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்னும் (28 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) எடுத்தனர். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. கொல்கொத்தா அணியின் கார்த்திக் தியாகி மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். கொல்கொத்தா அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் ரன் எடுக்காமல் முத்ல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு அதிரடி வீரர் ரகுவன்ஷியால் 19 பந்துகளில் 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் காமரூன் கிரீன் (27 ரன்), ரொவ்மென் போவெல் (23 ரன்), ரிங்கு சிங் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), அங்குல் ராய் (29 ரன்) சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 20 பேர் உயிரிழப்பு 6 பேர் காயம் என முதற்கட்ட தகவல்.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை நடைபெற்ற வெடிவிபத்தில் 4அறைகள் சேதமாகின.20 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இது டி.ஆர்.ஓ.லைசன்ஸ் உடன் இயங்கி வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது. தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று வேலை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. 23 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்தனர் .
தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் மீண்டும் இரவு வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் பலர் பலத்த காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்குள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிறன்று மாலை திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் அமைச்சர்கள் சென்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்களின் உடல்கள் ஏதும் சிக்கியுள்ளதா? என பார்த்து அதை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த வேதிக் கலவையானது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், தீயணைப்பு வீரர்கள், போலீசார் சிலர் காயமடைந்தனர்.
விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 6போலீசார் காயமடைந்த தாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பலர் படுகாயம் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே வி முத்துலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சென்னை உரிமம் பெற்ற வனஜா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வெடிமருந்து இருக்கும் அறையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் 4 அறைகள் தரைமட்டமாகின.இந்த வெடி விபத்தில் முதலில் 15 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என ஜே.சி.பி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.சம்பவம் அறிந்து விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் மற்றும் சிவகாசி விருதுநகர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் உயிரிழப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது. தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று வேலை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் இன்று மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. 23பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்தனர் .
தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிலும் தொகுதி மறுவரையறுப்பு மசோதாவிலும் தோற்றது அமித் ஷாவா, இண்டி கூட்டணியா?
ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி புலம்புகிறார், “என்ன காரியம் செய்து வைத்திருக்கிறீர்கள் இண்டி கூட்டணி மக்களே? இந்த மசோதாவைத் தோற்கடித்ததால் தென் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறையப் போகிறது. பெண்களையும் கடுப்பேற்றியிருக்கிறீர்கள். இனி தொகுதி வரையறை 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நடக்கும் என்பதால் தெற்கே நாடாளுமன்ற இருக்கைகள் குறையும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
“இது புரியாமல் தென் மாநிலங்களுக்கு அதிக இடம் ஒதுக்கிய அமித் ஷாவின் மசோதாவை தோற்கடித்திருக்கிறீர்களே…! உங்களுக்கு மூளை இருக்கிறதா?” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெகன் ரெட்டி.
லோக்சத்தா கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தன் பதிவில், “நாடாளுமன்றத்தில் அமித் ஷா கொண்டு வந்த 131ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா தோற்கடிக்கப் பட்டதால், இனி தொகுதி மறுவரையறுப்பு 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடக்கும் (Delimitation Commission அதைச் செய்யும்). இதன் காரணமாக இந்த மாநிலங்கள் இழக்கப் போகும் இருக்கைகள்: தமிழகம் 10, ஆந்திரா 5, கர்னாடகா 2, கேரளா 7… அதே நேரத்தில் அதிக இருக்கைகளைப் பெறப் போகும் மாநிலங்கள்: உபி 12, பிஹார் 10, ராஜஸ்தான் 7, மத்திய பிரதேசம் 5!” என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு, “2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இருக்கைகள் திருத்தி அமைக்கப் பட்டால் அது பாஜகவுக்கே பலன் தரும்” என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
“அமித் ஷா ஸ்கெட்ச் நமக்குத் தான் போட்டிருக்கிறார். நாம் அதில் விழுந்து விட்டோம்” என்று தெரியாமல் இண்டி கூட்டணி குதித்துக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுவரையோடு பெண்கள் மசோதாவை ஏன் சேர்த்தார் அமித் ஷா? மசோதா ஜெயித்தால், “நாங்கள் தான் பெண் உரிமையை நிலைநாட்டினோம்” என்று கூறலாம். தோற்கடிக்கப் பட்டால், “தாய்க் குலமே… உங்கள் உரிமையைத் தட்டிப் பறித்து விட்டார் ஸ்டாலின், ராகுல் கூட்டணி” என்று பழியை இண்டி கூட்டணி மீது போடலாம். தலை விழுந்தாலும் பாஜகவுக்கு வெற்றி, வால் விழுந்தாலும் பாஜகவுக்கு வெற்றி.
Now that the 131st Amendment Bill failed, allocation of Lok Sabha seats will be based on 2026 census data.
As per current estimates, seven States will likely lose 35 seats: AP (-5), Telangana (-3), TN (-10), Karnataka (-2), Kerala (-7), Odisha (-4), and WB (-4).
தற்போது 131வது திருத்த மசோதா தோல்வியடைந்ததால், மக்களவை இட ஒதுக்கீடு 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் செய்யப்படும்.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, ஏழு மாநிலங்கள் 35 இடங்களை இழக்கக்கூடும்: ஆந்திரப் பிரதேசம் (-5), தெலங்கானா (-3), தமிழ்நாடு (-10), கர்நாடகா (-2), கேரளா (-7), ஒடிசா (-4) மற்றும் மேற்கு வங்காளம் (-4).
நான்கு மாநிலங்கள் 34 இடங்களைப் பெறக்கூடும்: உத்தரப் பிரதேசம் (+12), பீகார் (+10), மத்தியப் பிரதேசம் (+5) மற்றும் ராஜஸ்தான் (+7).
2026 மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடங்கள் மறுபங்கீடு செய்யப்படுவதால், பாஜக.,வே அதிகப் பயனடையும் என்று பரவலாக நம்பப்படுகிறது. தனது நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான வகையில், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் மாநிலங்களின் தற்போதைய இடப் பங்கீட்டை முடக்குவதற்கு என்டிஏ அரசு முன்வந்துள்ளது. பாஜக இத்தகைய முடக்கத்திற்கு உறுதியளிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் – கட்சியை விட தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பது, தெற்கில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு வழிவகுப்பது, அல்லது உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் தேசம் வளர்ச்சி மற்றும் செழிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, பிளவுபடுத்தும் ஒரு பிரச்சினையைத் தவிர்ப்பது போன்றவை. பாஜகவின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் தொகையில் தங்கள் பங்கை இழந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரு எதிர்பாராத பரிசு கிடைத்துள்ளது. கிடைத்த பரிசை குறை சொல்லக்கூடாது!
ஆச்சரியப்படும் விதமாக, தெற்கு மற்றும் கிழக்கில் பெரும் செல்வாக்குள்ள கட்சிகள் ஒரு அற்புதமான ‘செல்ஃப் கோல்’ அடித்துள்ளன. இது, தன் மூக்கையே வெட்டி முகத்தை சிவக்க வைப்பதற்குச் சமம்.
2001-ல், இடங்களுக்கான முடக்கம் முடிவடையும் தருவாயில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்கி வைக்குமாறு அப்போதைய வாஜ்பாய் அரசை வற்புறுத்துவதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். ஒரு சிக்கலான கூட்டணியும், பொக்ரான் குண்டுவெடிப்புக்குப் பிறகு விதிக்கப்பட்ட வெளித் தடைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சவாலும் தேசிய ஒற்றுமையைக் கோரின, அதற்கு கட்சிகள் 84-வது திருத்தத்தின் மூலம் பதிலளித்தன. இப்போது மீண்டும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு உருவானது, ஆனால் எதிர்க்கட்சியோ எந்தவிதமான வியூக சிந்தனையும் இன்றி அதை வீணடித்துவிட்டது.
அரசியல் விரோதப் போக்கு, உங்கள் சொந்த நலன்களையோ அல்லது ஒற்றுமையை வளர்ப்பது, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தில் கவனம் செலுத்துவது போன்ற பரந்த நலன்களையோ மறக்கச் செய்தால், அது செயலிழந்த அரசியலின் அறிகுறியாகும்.
மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், இட ஒதுக்கீடு என்ற சிக்கலான பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வைக் காண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசிய ஒற்றுமையும், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் செழிப்புக்கான நமது தேடலும் ஒரு நியாயமான மற்றும் விரைவான தீர்வைக் கோருகின்றன.
நீண்ட காலப் போக்கில், இடம்பெயர்வு ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யும். ஏற்கெனவே, தெற்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்களின் பொருளாதாரங்களை லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டமைத்து நிலைநிறுத்தி வருகின்றனர். அதனால்தான், குறைந்த பிறப்பு விகிதம் இருந்தபோதிலும், மகாராஷ்டிராவின் மக்கள்தொகைப் பங்கு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில், வியத்தகு உள்நாட்டு இடம்பெயர்வு, பல ஆண்டுகளாக மக்கள்தொகையியலையும் பிரதிநிதித்துவத்தையும் மாற்றியுள்ளது. வளர்ச்சி இருக்கும் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மாநிலங்களுக்கு மக்கள் சுதந்திரமாக இடம்பெயர்கின்றனர். ஒரு நூற்றாண்டில், அமெரிக்க காங்கிரஸில் புளோரிடா தனது பிரதிநிதித்துவத்தை 4-லிருந்து 28 ஆகவும், கலிபோர்னியா 11-லிருந்து 52 ஆகவும், டெக்சாஸ் 18-லிருந்து 38 ஆகவும், வாஷிங்டன் 5-லிருந்து 10 ஆகவும் அதிகரித்துள்ளன. வெளிக்குடியேற்றத்தின் காரணமாக, நியூயார்க் 43-லிருந்து 26 ஆகவும், பென்சில்வேனியா 36-லிருந்து 17 ஆகவும், இல்லினாய்ஸ் 27-லிருந்து 17 ஆகவும், ஓஹியோ 22-லிருந்து 15 ஆகவும், மிசோரி 16-லிருந்து 8 ஆகவும் இடங்களை இழந்துள்ளன.
மக்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வதை நாம் எளிதாக்க வேண்டும், மேலும் எல்லா இடங்களிலும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை அங்கீகரித்து மதிக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற வேண்டும். அது நமது மக்கள்தொகையியல் சவால்களைத் தீர்க்கும். பெரும்பாலான மாநிலங்கள் குறைந்த கருவுறுதல் விகிதத்தை எட்டியுள்ளன, மேலும் பீகார், உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலையை அடையப் போகின்றன.
நாம் ஒன்றிணைந்து வளர்ந்து வலிமை பெற, பகுத்தறிவுள்ள மற்றும் நடைமுறைக்கு உகந்த அணுகுமுறை தேவை. கட்சிகள் தூண்டிவிடும் மற்றும் பிளவுபடுத்தும் சொல்லாடல்களைக் கைவிட்டு, அனைவருக்கும் தரமான கல்வி, திறன்கள் மற்றும் வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் அவர்களை வலியுறுத்துவோம்.
எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே தீவிரமாகக் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்; தாங்கள் என்ன சாதித்திருக்கிறோம்? என்று!
ஆனால், யதார்த்தம் என்னவென்றால், தெற்கில் இந்த எண்ணிக்கை குறையும், மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது! தெற்கிற்கும் சரி, பெண்களுக்கும் சரி நீதி வழங்கப்படவில்லை!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.