Home Blog Page 8

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

isreal iran war - 2026

கடன் வாங்கிய அடையாளம்!

— பல்பீர் பூஞ்ச் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

அண்மைய வரலாற்றில் இந்திய துணை கண்டத்தில் வாழும் முஸ்லிம்கள் முதல்முறையாக தங்கள் உண்மையான எதிரி யார் என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல். பலரும் வெள்ளை மாளிகையால் – காபீர்களான அமெரிக்கா, இஸ்ரேலால் – இஸ்லாமிய ஈரான் தாக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.

ஆனால் சூழ்நிலை மிகவும் சிக்கலாகி விட்டது. ஈரான் இஸ்ரேலை மட்டும் தாக்கவில்லை அமெரிக்காவின் கூட்டாளிகளான வளைகுடா நாடுகளையும் தாக்குகிறது. வளைகுடா நாடுகளில் பலவும் இஸ்லாமிய நாடுகள் என்பது மட்டுமல்ல அங்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இந்த குழப்பத்திற்கு மூல காரணமாக அமெரிக்கா வெகு தூரத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. சண்டை இப்போது ஷியா, சன்னி என்ற இரண்டு முஸ்லிம் பிரிவினர் இடையே நடப்பதாக மாறிவிட்டது. அந்த இரண்டு பிரிவினரும் பாரம்பரியமாகவே வன்முறையில் நாட்டம் கொண்டவர்கள். இரண்டு பக்கத்திலும், பாதிக்கப்பட்டவர்களும் செத்துப்போனவர்களும் முஸ்லிம்கள்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளும் இந்த மோதலினால் வெவ்வேறு அளவுகளின் பாதிக்கப்பட்டுள்ளன.

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு குழப்பமும் ஊசலாட்டமும் ஏற்பட்டுள்ளது. யாருக்கு எதிராக தங்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் எப்படி வெளிப்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படும்போது எல்லாம் அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் ஹிந்துக்கள் மீது அதை காட்டுவார்கள். (துருக்கியில்) ஓட்டமான் கலீபா முறை (கிலாபத்) சரிந்த போது இந்திய முஸ்லிம்கள் நாதியற்ற ஹிந்துக்களை தாக்கினார்கள். ஹிந்துக்களை படுகொலை செய்தனர். ஹிந்து பெண்களை கற்பழித்தனர். வீடுகளையும் உடைமைகளையும் கொளுத்தினர். அந்த வெறியாட்டத்தை மாப்ளா கலவரம் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

அந்த (கிலாபத்) இயக்கத்தின் போது மௌலானா அபுல் கலாம் ஆசாத், 1920ல் , ‘ஹிஜ்ரத் கா பத்வா’ கொடுத்தார். அதாவது இஸ்லாமிய நாடாக இல்லாத இந்தியாவிலிருந்து வெளியேறி இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு குடியேறுவது என்பது அந்த பத்வா. ஆனால் அது நடக்கவில்லை. காரணம் ஆப்கானிஸ்தான் இவர்களை ஏற்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியது. துணை கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்களில் உண்மையான விசுவாசம் தேச எல்லையை கடந்து இருப்பதை அது வெளிக் கொணர்ந்தது. தேச எல்லைகளைக் கடந்து இஸ்லாமிய அகிலம் என்ற உம்மாவை பின்பற்ற முனைவது பொருளற்றது என்பதும் தெரிய வந்தது.

காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இளைஞர்கள் வீடு வீடாக சென்று ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பொன்னும் பொருளும் சேகரித்தார்கள். இது அன்பின் வெளிப்பாடு என்று போற்றப்படுகிறது. உணர்ச்சிகளை ஓரம் வைத்து விட்டு பார்க்கும் போது நம்மை சங்கடமான கேள்வி முறைத்துப் பார்க்கிறது. இந்த பரிவுணர்ச்சி ஏன் எப்பொழுதும் குறிப்பிட்ட புவியியல் , கருத்தியல் சார்ந்ததாக இருக்கிறது ?

நம் வீட்டிற்கு அருகில் இதுபோன்ற கொடூரங்கள் நிகழும் போது இந்த உத்வேகம் எப்படி காணாமல் போகிறது ? பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது இதுபோன்ற திரள் நிதி திரட்டப்படவில்லையே ? வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்ட போது இப்படி வீடுதோறும் இவர்கள் யாரும் சென்று நிதி திரட்டி அனுப்பவில்லையே, ஏன்?

அண்மையில், தருண் என்ற ஹிந்து தலித் இளைஞன் டில்லி உத்தம் நகரில் ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடியை தூவியதற்காக முஸ்லிம்கள் கும்பலாக கூடி அவனை அடித்தே கொன்றார்கள். இதற்கு எந்த எதிர்ப்பு குரலும் இவர்கள் எழுப்பவில்லையே? இவர்களது வசதியான விவரிப்புக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே அது வலியாக, வேதனையாக தெரியும் இல்லையென்றால் கிடையாதா ?

துணைக் கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மேற்கு ஆசிய இஸ்லாமிய நாடுகளை குறிப்பாக சவுதி அரேபியாவை வழிகாட்டுதலுக்காக, குறிப்பாக மதம் சார்ந்த விஷயங்களில், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவின் மன்னராக இருக்கும் மொஹம்மத் பின் சல்மான் (எம் பி எஸ்) 2018ல் அளித்த நேர்காணலில், “வெளிநாடுகளில் உள்ள மசூதி மற்றும் மதரசாக்களில் நாங்கள் முதலீடு (நிதிவுதவி) செய்வது பனிப்போர் காலத்தில் வேர் கொண்டதொரு விஷயம். முஸ்லிம் நாடுகளில் சோவியத் யூனியன் ஊடுருவாமல் தடுக்க சவுதி அரேபியாவின் செல்வாக்கை (வஹாபியிசம்) பயன்படுத்தும்படி நமது கூட்டாளிகள் (அமெரிக்கர்கள்) கேட்டுக்கொண்டனர்”, என்று கூறியுள்ளார்.

நேர்காணலில் எம் பி எஸ் வெளிப்படுத்திய விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அது துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்களின் சிந்தனையை தூண்டியிருக்க வேண்டும். அவர்கள் ‘உண்மையான’ இஸ்லாம் என்று நம்பி பின்பற்றியது அமெரிக்கா தன் புவி அரசியலுக்கு வசதியாக தணிக்கை செய்தது. அமெரிக்காவினால் தூண்டப்பட்ட இந்த இஸ்லாமிய வலை பின்னல் எத்தனை தற்கொலை படையினரை உருவாக்கியது, அவர்கள் மூலம் எவ்வளவு அப்பாவி உயிர்களை பலி வாங்கியது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

இஸ்லாத்துக்காக தன்னை வெடிகுண்டாக்கி கொண்டதாக நம்பியவர்களும் இஸ்லாத்துக்காக திரல் படுகொலை செய்வதாக நம்பியவர்களும் – இவர்களில் பலரும் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் – உண்மையில் அமெரிக்காவின் நலனுக்காகவே செத்திருக்கிறார்கள்.

அதே வேளையில், அரபுலகம் மாறிக்கொண்டே வருகிறது. எம் பி எஸ் தலைமையில் சவுதி அரேபியா தன்னுடைய சமூக, பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்க சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு நேர்மாறாக, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பலரும் கடந்த காலத்திலேயே உறைந்து போய் காலனிய மனப்பான்மையை பற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த நாகரிகங்களை, பண்பாடுகளை தாழ்வாக கருதுகிறார்கள். துணைக்கண்டத்தில் உள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு முன்பிருந்த தொன்மையான நாகரீகங்களை மறுதலிப்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயம். இதற்கு தெளிவான எடுத்துக்காட்டு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகள்.

இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் அப்துல் பஷீத் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை சொன்னார். ‘ அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால் நாங்கள் இந்தியாவை, மும்பாய் , தில்லி நகரங்களை தயங்காமல் தாக்குவோம். நாங்கள் அத்துடன் விட மாட்டோம். அதற்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்வோம் ‘, என்று கூறினார். அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனர் துல்சி கப்பார்ட் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டங்களை பற்றிய எச்சரிக்கைக்கு பதிலாக மேற்கண்ட அறிக்கையை அப்துல் பஷீத் வெளியிட்டார்.

இதுபோன்ற பேச்சுக்கள் கடுமையான வெறுப்புணர்வு மற்றும் அறிவீனத்தை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களின் மனதில் இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகங்களை பற்றிய ஆழமான ஒவ்வாமையே இதற்கு காரணமாகும்.

இந்த வேறுபாடு மத கருத்தியலால் மட்டுமே ஏற்பட்டதல்ல. மாறாக பண்பாட்டு ரீதியானது. ஆழமான, அறிவார்ந்த குழப்பம் நிலவுகிறது. அது உறுதியாகவும் இல்லை, விலகியும் இல்லை. அந்த குழப்பம் கருத்தியல் ரீதியில் மட்டுமல்ல நடைமுறையிலும் தெளிவாக வெளிப்படுகிறது.

முஸ்லிம் இளைஞர்கள் கங்கை நதியில் படகில் ஒன்றாக கூடி பயணித்ததை யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவர்கள் படகில் மாமிசத்தை சாப்பிட்டதையும் அதன் எச்சங்களை நதியில் துப்பியதையும் தான் கண்டனம் செய்கிறார்கள்.

இந்த விஷயத்தை, அற்ப விஷயம் என புறம் ஒதுக்கும் அரசியல் கட்சிகளின் வேகம் இந்தியாவின் பண்பாடு இலக்கணத்தை தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளதையே காட்டுகிறது.

சில விமர்சகர் இதே வாதத்தின்படி, ஹஸ்தியை கரைப்பது, நதியோரம் உள்ள சுடுகாடுகள், நீர்வாழ் ஊணுண்ணிகளும் பிரச்சனைக்குரியவையா என்று கேட்கிறார்கள்.

கங்கை வெறும் நதி அல்ல. ஹிந்துவின் கண்ணோட்டத்தில் அது புனிதமானது . போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியது. வாழ்க்கையுடனும் மரணத்துடனும் மோக்ஷத்துடனும் தொடர்புடையது. எந்த ‘சட்டம்’ மீறப்பட்டுள்ளது ? என்று சிலர் கேட்கிறார்கள். இதை சற்றே நீட்டித்துப் பார்ப்போம். மசூதிக்கு அருகில் பன்றி இறைச்சி விருந்து நடத்தி, அதை சமூக ஊடகங்களின் யாராவது பகிர்வார்களா? அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறியதல்ல, சட்டத்திற்கு உட்பட்டதே. ஆனால் அது பண்பற்ற செயல். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் உள்நோக்கத்துடன், திட்டமிட்டு மத மோதலை தூண்டிவிடும் செயலாகும்.

இதை அழுத்தமாக கூறும் ஒரு வரலாற்றுச் சான்றைப் பார்ப்போம். 1980 ஆகஸ்ட் 13ம் தேதி முராதாபாத்தில் ஈத் பண்டிகை நேரத்தில் கலவரம் மூண்டது. ஈத்கார் மைதானத்தில் ஒரு பன்றி வழி தவறி அங்கு நுழைந்துவிட்டது. இதனால் மூண்ட கலவரம் எல்லா இடங்களுக்கும் பரவி எண்ணற்ற உயிர் சேதமும் மிகுந்த பொருட் சேதமும் ஏற்பட்டது. அங்கு அமைதி திரும்ப ஒன்பது மாதங்கள் ஆனது.

அந்த வெறியாட்டத்திற்கு காரணமான சம்பவத்தை யாரும் புறமொதுக்கவுமில்லை. நியாயப்படுத்தவுமில்லை. அண்மையில் நடந்த சம்பவத்திற்கு ஏற்பட்ட எதிர்வினையை – இது அற்ப விஷயம் என்று புறம் ஒதுக்குவதை – கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது கடினம். இந்த சமமற்ற அணுகுமுறையின் வேர்கள் ஏதோ சில சம்பவங்கள் என்பதால் அல்ல மாறாக வரலாற்று ரீதியிலான உணர்வினால் ஏற்படுகிறது.

இதை நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வி எஸ் நைபால் ” நம்முடைய உலகளாவிய நாகரீகம்” என்ற கட்டுரையில் கூரிய அவதானிப்புடன் படம் பிடித்து காட்டியுள்ளார்.

” எந்த காலனிய ஆதிக்கத்தையும் விட முற்றிலும் முழுமையான ஆதிக்கம் அரபு மத நம்பிக்கையுடன் வந்த காலனிய ஆதிக்கம் தான் என்பதை நான் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். தோற்கடிக்கப்பட்ட அல்லது காலனியாதிக்கத்திற்கு உள்ளான மக்கள் தங்கள் மீதே அவநம்பிக்கை கொள்ள தொடங்கினர். நான் பேசுகின்ற முஸ்லிம் நாடுகளில் எல்லாம் இந்த அவநம்பிக்கை மதத்தின் வலிமையான ஆதிக்கத்துடன் உள்ளது. அரபு மத நம்பிக்கையின்படி அதற்கு முன்பிருந்த எல்லா நம்பிக்கைகளும் தவறானவை, ஏற்புடையவை அல்ல. அரபு மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர்களின் மனதிலோ சிந்தனையிலோ முகம்மதுவின் காலத்துக்கு முன்பிருந்தவற்றிற்கு இடமே கிடையாது. “

நைபாலின் கூற்றை புறம் தள்ளுவது கடினம். அது உளவியல் ரீதியான பிளவை காட்டுகிறது. முன்பு இருந்த கலாச்சார நினைவுகளில் இருந்து விலகுவதை வலியுறுத்துகிறது. இதுதான் அரபு மத நம்பிக்கையின் ஆதிக்கத்திற்கு உள்ளான பின்பு உருவான சமுதாயங்களின் அடையாளம் . இந்திய துணைக் கண்டத்தில் இந்த உளவியல் பிளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ? அல்லது உம்மா – இஸ்லாமிய அகிலம் – என்ற கானல் கனவை பின் தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுசந்தில் மோதி நிற்பதா ? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.

நன்றி : பயோனியர் நாளேடு

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக (Commissioning) மேற்கொள்ளப்படும் ‘பாதை அடைப்பு’ (Line Block) காரணமாக, திருநெல்வேலி ரயில் இருந்து புறப்பட்டு செல்லும் பிலாஸ்பூர் ஜாம்நகர் இரு ரயில்கள் செங்கோட்டை புனலூர் வழியாக சிலரயில்கள் பின்வரும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 16729 மதுரை சந்திப்பு – புனலூர் விரைவு ரயில்: 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 16730 புனலூர் – மதுரை சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சில ரயில் சேவைகள் பகுதி ரத்து செய்யப்பட்டது.

ரயில் எண் 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி சந்திப்பு இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

  1. ரயில் எண் 22620 திருநெல்வேலி சந்திப்பு – பிலாஸ்பூர் சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களில் நின்று செல்லாது (நிறுத்தங்கள் தவிர்க்கப்படும்). இந்த ரயில் சேவைக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.
  2. 30.03.2026 அன்று தொடங்கும் ரயில் எண். 19577 திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் பயணம் தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக திருப்பி விடப்படும்.
    இந்த ரயில் சேவை வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலை, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.

முழு ரத்து
28.03.2026 அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்(1 நாள்)

  1. ரயில் எண். 16729 மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ்
    2026 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன (2 நாட்கள்)
  2. ரயில் எண். 56305 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
  3. ரயில் எண். 56310 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
  4. ரயில் எண். 56306 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
  5. ரயில் எண். 56309 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
  6. ரயில் எண். 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள்
  7. ரயில் எண். 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள்
  8. ரயில் எண். 66306 கொல்லம் – கன்னியாகுமரி மெமு
  9. ரயில் எண். 66305 கன்னியாகுமரி – கொல்லம் மெமு
  10. ரயில் எண். 16730 புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
  11. ரயில் எண். 56101 நாகர்கோவில் – கொல்லம் பயணிகள்
  12. ரயில் எண். 56102 கொல்லம் – நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகும்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

railway news - 2026
#image_title

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 13 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030):

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை புறப்படும்.

நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 5, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை நீடித்தது பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029):புறப்படும் நாள்: திங்கட்கிழமை

நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 6, 2026 முதல் ஜூன் 29, 2026 வரையாகும்.
பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாகும்.

இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை மற்றும் கோவை வழியாகச் செல்லும் இந்த ரயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம்.வளக்கமான கோச் வடிவிலேயே இயங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

petrol diesel price1 - 2026
  • கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவில் உயர்ந்து, ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை சென்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30%-50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்காவில் 50% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புச் சுமை குறைக்கப்படுவதுடன், நுகர்வோருக்கு நேரடி விலை உயர்வு தாக்கம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி குறிபிட்டுள்ள தகவல்: பிரதமர் மோடி அரசுக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. மற்ற நாடுகளைப் போலவே இந்திய மக்களுக்கான எரிபொருள் விலைகளை கடுமையாக உயர்த்துவது அல்லது சர்வதேச சந்தை மாற்றங்களிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசின் நிதியில் சுமையை ஏற்பது.

ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக அரசின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்திய மக்களை பாதுகாக்க அரசின் நிதியில் சுமையை ஏற்கும் முடிவை மீண்டும் எடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் விலை உயரும் நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பெரிய இழப்புகளை (பெட்ரோலுக்கு சுமார் லிட்டருக்கு ₹24 மற்றும் டீசலுக்கு ₹30) குறைக்கும் வகையில், அரசு தனது வரிவசூலில் பெரிய அளவில் இழப்பை ஏற்றுள்ளது.

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

valmiki ramayan lavan kusan - 2026

அகநானூறும் புறநானூறும் ராமனைப் பற்றிச் சொல்லும் செய்திகள்

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்


வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70

மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய “அகநானூறு” தொகுப்பில் இருக்கும் 70 வது பாடலின் பொருள் பின்வருமாறு:

பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த “தொன்முதுகோடி” என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் வேத மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வானது இலங்கையில் ராவணனை வெற்றி கொண்டபின் மேற்கொண்டது ஆகும். ராமபிரான் எழுப்பிய வேத ஒலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், ராமரது படைகளும் கொஞ்சம் கூட ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தனவாம்!!

இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு . புறநானூறு 378

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் அகநானூறில் பாடிய பாடலாகும். இப்பாடலின் பொருள் :

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினார்.புலவரின் உறவினர்கள் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணிய வேண்டியதைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவ வேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.

இது எப்படி இருந்தது? என்று கேட்டால் இராமனுடன் வனவாசம் வந்திருந்த சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு சென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் அந்த அணிகலன்களை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்!

இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

lord shri rama - 2026

உள்ளதொன்றும் உள்ளதில்லை
உள்ளதினும் நாசமில்லை
நாசமுள்ளது உள்ளதில்லை
ராம ராம பாஹிமாம்! – என்று அடிக்கடி கூறுவார் ஸற்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்தில் ‘ஞான’ ஸ்வரூபமாய் தெய்வ சந்நிதிகள் பல இருந்த போதும், ஸ்ரீராமபிரானுக்கு என்று தனி சந்நிதி எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஸ்ரீ ஞானவேணுகோபாலன் சந்நிதியின் பின் அந்நாளிலேயே ஸ்ரீராம பட்டாபிஷேகத்தை ஓவியமாக வரையச் செய்து, வேணுகோபாலர் சந்நிதி எதிரில் ஸ்ரீராமதாசனான ஆஞ்சநேயருக்கு சந்நிதி அமைத்தார். பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பூஜித்து பிரசாதம் வழங்கப்படுவதையும், ஸ்ரீராம நவமியின் போது பூஜைகளுடன், ராம நாம பஜனையுடன் பானகம் நீர்மோர் வழங்கலும் வழக்கமாக்கினார்!

தற்போது கடந்த வருட தபோவன கும்பாபிஷேகத்தின் போது, ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதி பின்புறம் வரையப்பட்டிருந்த ஓவியத்துக்குப் பதிலாக அதே அளவில் கல்லாலான ஸ்ரீராம பட்டாபிஷேக புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டது.
அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை பகவானிடம் சென்று வருந்தினவாம். அதற்கு அவர் “உங்களுக்கு ஏற்றம் தந்து, மக்களை கொண்டாடச் செய்கிறேன்’’ என்று உறுதி அளித்தாராம்.

அதன்படி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமியில் கிருஷ்ணனாகவும் அவதரித்தார் என்பர். ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளின் பின்னே அவதரித்தார் என்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாத புனர்பூசத்தில் அவதரித்தார். அதை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பதும், வெயிற்கால வெப்பம் தணிக்க பானகம், நீர்மோர், விசிறி அளித்தலும் வழக்கமாக உள்ளது.

ஸ்ரீராமர் என்றாலே சரணாகதி தத்துவம்தான் நம் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமன். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான்.

ஆரண்ய காண்டத்தில் தண்டக வனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராம பிரானைச் சரணடைந்தான். சுந்தர காண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராம பிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன். அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்’’ என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்வர்.

சரணாகதியை விளக்குவது சரம ஸ்லோகம். ராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா
விபீஷணோ வா ஸுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம்

விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ராமபிரான் கூறுகிறார்… “நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா, இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த ராவணனாகவேதான் இருக்கட்டும், இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது’’ என்றார்.

சரணாகதி சாஸ்த்ரமான ராமாயணத்தைப் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும். ராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போர் சிலர். ராமநவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு! ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பர்.

தசரதனுக்கு குழந்தைகள் பிறந்தவுடன், அவரது குலகுரு வசிஷ்டர் பெயர் வைக்கிறார்.

ராமன்– ரமையதீதி ராமஹா. காண்பவர் கண்ணையும், மனத்தையும் பறிக்கும்படி அழகை வழங்குவதால், ஆனந்தத்தைக் கொடுப்பதால், ராமன் என்று பெயர்!

லக்ஷ்மணன்– லக்ஷ்மணஹா – லக்ஷ்மி சம்பந்நஹா, லக்ஷ்மி வர்த்தநஹா. நற்செல்வம்- இங்கே அது, கைங்கர்ய லக்ஷ்மி.

பரதன் – பரதைதி ராஜ்ய பர்நாத். ராஜ்யத்தை பரிக்கப் போவதால் பரதன். அவன் ஒருவனே ராஜ்யத்தை பாரம் என்று நினைத்தான். அதனால் ராஜ்யத்தைப் பரித்தவன் பரதன்.

சத்ருக்ணன் – சத்ருக்களை ஜயித்தவன். ராம பக்தி என்ற பகவானுக்கு அடிமையாக இருப்பதைவிட, பரத பக்தி என பக்தனுக்கு அடிமையாக இருந்ததால், நித்ய சத்ருக்ணஹா என்று பெயர்!

பகவான் செய்தருளிய அவதாரங்களிலே சரணாகதி சாஸ்திரத்தை உலகோருக்குப் புரிய வைப்பதற்காகவே ஸ்ரீராமன் அவதரித்தான். ரகுகுல திலகன் என்பதால் ராகவன், ககுஸ்தனுடைய வம்சத்தில் அவதரித்ததால் காகுத்தன், தசரதனுக்கு குமாரன் என்பதால் தாசரதி. இஷ்வாகு வம்சத்தில் அவதரித்து, பாரத தேசத்தின் தர்ம சாஸ்திரங்களை எடுத்துரைத்து, நடத்திக் காட்டிய மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன். அண்ணனிடம் தம்பியும், தந்தையிடம் தமையனும், ஆசார்யனிடம் சிஷ்யனும், பெரியோர்களிடம் சிறியோரும் எப்படி நடக்க வேண்டும் என்பதை சரிப்படுத்தி, இதுதான் சரியான முறை என்று உணர்த்தவே ராமனின் அவதாரம் நிகழ்ந்ததாம்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

petrol diesel price1 - 2026

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் – டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை; அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும். எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பாஜக., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, 

“பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியில் ரூபாய் 10 குறைத்துள்ளது இந்திய அரசு. ஈரான் போரினால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும், அரசியல் செய்யலாம், மத்திய அரசை விமர்சிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு,  விலை ஏற்றம் என்கிற சுமையை மக்களிடம் திணிக்காமல் மத்திய அரசே தாங்கிக் கொண்டுள்ளது. 

இதுவே வல்லரசு! நரேந்திர மோடியின் நல்லரசு!” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

thiruparankundram panguni utsav kodiyetram - 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கியது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் பத்து நாளும் சுவாமி அம்பாள் மயில், அன்னம் ,ஐவராதம் வாகனங்கள் வீதி உலா.

மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்,
பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் வரும் ஏப்ரல் 4ல் திருக்கல்யாணமும், 5 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, பல்லக்கில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது.

காலை 6.30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது.

திருவிழா கோவில் நம்பியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து , தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தர்ப்பைப்புல், மா இலை, சந்தனம், குங்குமம், மலர் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.55 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் , தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 28 ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி கைபாரம் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு நக்கீர வீலை நிகழ்ச்சியும், நடைபெறும் .

விழாவின் முக்கிய, நிகழ்ச்சிகளாக ஏப்ரல் இரண்டாம் தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது, ஏப்ரல் மூன்றாம் தேதி பட்டாபிஷேகம், ஏப்ரல் நான்காம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது.

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

jugalbandi rahul yatra - 2026

— சியாம்லால் யாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

கடந்த வாரம் லக்னோவில் நடந்த அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார் என்று கூறினார்.

நேரு சுமார் 17 ஆண்டு காலம் பிரதமராக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய முடிவுகளை தீர்மானித்தார். அவர் காலத்தில் உ பி யில் நான்கு முதல்வர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி வகித்தனர். அவர்கள் அத்தனை பேரும் முற்பட்ட ஜாதியினர். 1989 வரை உ பி யில் காங்கிரஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

நேரு பிரதமராக 1947 லிருந்து 1964 வரை இருந்தபோது காங்கிரஸ் உபியில் நான்கு முதல்வர்களை நியமித்தது. அவர்கள் : கோவிந்த வல்லப் பந்த் (பிராமணர் 1954 -60), சம்பூர்ணானந்த் (காயஸ்தர்- 1954-60), சந்திர பானு குப்தா (வைசியர் – 1960-63,1967, 1969), சுசித்ரா கிருபளானி (சிந்தியை மணந்து கொண்ட காயஸ்தர் 1963-67) .

நேரு காலத்தில் உ பி யின் முதல்வராக முயற்சித்தவர்கள் புருஷோத்தமதாஸ் தாண்டன் , ஸ்ரீ பிரகாஷா , விஜயலட்சுமி பண்டிட், கமலாபதி திரிபாதி (இவர் 1971 முதல்வரானார்) . இவர்கள் எல்லோரும் கூட முற்பட்ட ஜாதியினர்.

காங்கிரஸ் தலைமை உபியில் அடிக்கடி முதல்வரை மாற்றியது. ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் சமூக நீதியை அல்லது அனைத்து சமூகத்தினருக்குமான பிரதிநிதித்துவத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியே வந்தனர். கட்சியில் குழு மோதல் நேருவுக்கு கவலையளித்த போதிலும் அவரும் கூட அரசின் உயர் பதவியில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடம் தர வேண்டுமென நினைத்தது இல்லை.

கான்ஷிராம் நேரு காலத்தைய அரசியலை கடுமையாக சாடியுள்ளார் . நாட்டில் உள்ள பகுஜன்களை உயர்த்தும், அதிகாரத்திற்கு இட்டு செல்லும் அவரது அரசியல் பயணத்தில் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேருவின் அரசியலை விமர்சித்து அவர் எழுதியுள்ள சம்ஸ்ச்சா காலம் (எடுபிடிகளின் காலம்) என்ற நூல் பூனா ஒப்பந்தத்தின் – பூனா ஒப்பந்தம் என்பது மகாத்மா காந்திக்கும் பி ஆர் அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். இதன் மூலம் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை மாறி தொகுதி இடம் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது – பொன்விழா காலத்தில் 1982 செப்டம்பர் 24 இல் வெளியானது.

கான்ஷிராமின் அரசியல் அம்பேத்கரின் கருத்துக்களை மையம் கொண்டதாகவும் அதே வேளையில் காந்தி , நேரு மற்றும் காங்கிரசை ஆட்டுவித்த உயர் ஜாதியினர் ஆதிக்கத்தை கூர்மையாக விமர்சிப்பதாகவும் இருந்தது . சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் திணித்த ஆட்சி அதிகார முறைமையில், கான்ஷிராம் பகுஜன்கள் என்று அழைத்த – பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் , சிறுபான்மையினர் – களுக்கு தலைவர்கள் உருவாகாதபடியும் உயர் ஜாதியினரின் எடுபிடிகளால் சுரண்டப்பட்டார்கள் என்றும் அவர் அதில் விமர்சித்துள்ளார்.

நேரு காலத்தில் அதிகார அமைப்பை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், ஆதிக்கம் செய்தனர் என்று கான்ஷிராம் வாதிடுகிறார். எடுபிடிகளின் காலம் நூலில், 1957 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர் பிராமணர்கள். எஸ்சி / எஸ்டி ஒதுக்கீடு செய்யப்பட்ட 22.5 சதவீதத்தில் நேருவின் பெருந்தன்மை’யால் அவரது ‘எடுபிடி’களே தேர்வாகினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

1980 பொதுத் தேர்தலை பற்றி அந்த நூலில் குறிப்பிடும் போது அவர் காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி இருந்த போது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 36 சதவீதத்தினர் பிராமணர்கள், 15 சதவீதத்தினர் சத்ரியர்கள். அப்போது காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜெகஜீவன் ராம் பிரதமராக விரும்பினார். ஆனால் அவரை இந்திரா காந்தி புறமொதுக்கினார் என்று எழுதியுள்ளார்.

கான்ஷி ராம் 1984 ஏப்ரல் 14 தேதி அம்பேத்கரின் பிறந்த நாளின் போது பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்தார். எஸ்சி, எஸ்டி, இதுல பிற்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் இடையே காங்கிரஸின் செல்வாக்கை வீழ்த்த அந்த கட்சி கவனத்தை செலுத்தியது. ஜிஸ்கி ஜித்னி சங்கியா பாரி , உஸ்கி உத்னி இஸ்செதாரி (மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் ) என்ற அவரது கோஷம் நாடெங்கிலும் எதிரொலித்தது.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அவர்களே அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகவும் இருந்தனர் , உ பி யின் முதல்வராக பதவியேற்ற ஆறு தலைவர்களும் முற்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் : கமலாபதி திரிபாதி (பிராமணர்) , எச் என் பகுகுணா (பிராமணர்) , என் டி திவாரி (பிராமணர்) , வி பி சிங் (தாக்கூர்) , ஸ்ரீபதி மிஸ்ரா (பிராமணர்) , வீர் பகதூர் சிங் (தாக்கூர்).

மேற்கண்ட பத்து காங்கிரஸ் முதல்வர்களில் ஒருவர் கூட தனது ஐந்தாண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தில்லிக்கும் லக்னோவுக்கும் இடையே ஏற்பட்ட உரசலில் உ பி அரசில் முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.

கடந்த தசாப்தங்களில் உ பி யில் முதல்வரான இதர பிற்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள் இல்லை. ராம் நரேஷ் சிங் (ஜனதா கட்சி) , முலாயம் சிங் (சமாஜ்வாடி) , கல்யாண் சிங் (பாஜக) , அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி) ஆகியோர் காங்கிரசால் முதல்வரானவர்கள் இல்லை.

உ பி முதல்வரான ஒரே ஒரு தலித் தலைவர் மாயாவதி மட்டுமே. அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தார். அவரை கான்ஷி ராம் தனது அரசியல் வாரிசாக ஆக்கியிருந்தார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் இந்தியன் எக்ஸ்பிரஸில் முத்த இணை ஆசிரியராக உள்ளார்.

Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

anuvadhi - 2026

Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication

An Innovative Indigenous Technological Leap for National Digital Security and Personal Data Protection

Today, with over 800 million Indian citizens tethered to foreign-managed digital communication platforms, the mandate for a secure, indigenous, and privacy-centric alternative has reached a critical tipping point. As our digital horizons expand, so do the shadows of complex challenges. From the terrifying rise of “Digital Arrests” and relentless spam to sophisticated financial frauds, fake banking calls, and predatory “Work from Home” scams, innocent citizens are increasingly facing mental and financial exploitation.

The proliferation of cybercrimes against women and senior citizens, the spread of anti-national activities, and the uncontrolled reach of objectionable content have become grave societal concerns. Perhaps the greatest challenge lies in the difficulty of tracking and controlling these digital threats on foreign servers, transforming personal safety issues into a broader risk to National Security.

In response to these burning issues, Anuvadini AI has taken a historic step toward building a trusted, sovereign digital ecosystem. We are proud to unveil Hyped Samvadini and the Desi AI GenZ Keyboard—cutting-edge applications designed not just with advanced technology, but with the safety, privacy, and linguistic pride of every Indian at their core.

Hyped Samvadini: India’s First SIM-Bound, Multilingual, and Spam-Free Super-Messenger

This platform is a fortress of digital sovereignty. By utilizing Dynamic Chat IDs, users can engage in personal chats, group discussions, and high-definition audio/video calls without ever needing to share their mobile numbers. Armed with End-to-End Encryption, Device-Binding, and advanced Anti-Spam mechanisms, it effectively neutralizes impersonation and cyber-fraud.

CategoryFeatures & Pointers
End-to-end encrypted Chat & CallingOne-to-One & Groups: Secure messaging with role-based management.Broadcast: Send updates to many; recipients receive them individually.Video & Audio Calls: High-quality, encrypted calls with no number exposure.WhatsApp Import: Securely migrate chat history, media, and docs from WhatsApp Web.
Multilingual SupportReal-Time Translation: Voice and text translation across 55+ languages.Accessibility: Speech-to-text, text-to-speech, and multilingual UI.Status & Stories: Share media with privacy controls; viewable in preferred languages.
Make in IndiaIndia’s First Safety-First, Multilingual, Spam-Free Messenger.Built 100% in India for Bharat.Privacy-first architecture focused on diverse communities.
SIM & Device BindingOwnership Verification: Ensures only the true owner can use the account.Swap Detection: Alerts if the SIM is switched to prevent hijacking.Removal Detection: Detects empty SIM slots or card removal.Device Binding: Locks the account to a specific recognized device.
Privacy & Anti-SpamGuest Chat: Communicate without ever sharing your phone number.Hidden Numbers: Phone numbers remain invisible in chats and calls.Request Module: Strangers must send a request; you choose to accept or ignore.End-to-End Encryption: Applied to all messages, audio, video, and files.
Safety & SOSOne-Tap SOS: Immediate emergency alerts with live location sharing.Discreet Panic Trigger: Silent activation for women, students, and travelers.
Bharat-Centric ModulesWomen & Seniors: Community support, parenting resources, and elder care guidance.Employment: Access to local jobs, internships, and apprenticeships.Farmers: Mandi price updates, Krishi news, and regional community groups.SMEs/Startups: Guidance on rules, resources, and government initiatives.
Productivity & UtilitiesEvent Planner: Automated reminders and auto-created event chat groups.Temporary Chats: Auto-expiring IDs for short-term interactions (deliveries/rentals).One View: Single-screen management for all shared media and files.Govt Schemes: Comprehensive details on benefits and how to apply.
GamesDiverse Multiplayer & Social Play: Enjoy real-time interaction with games like Antarakshari, Ludo, and Chess Master, allowing you to compete with friends or players worldwide.Indian Cultural Classics: Relive traditional favorites digitally with authentic mechanics for Gilli Danda, Carrom, and street-style Desi Bowling.Brain Training & Skill Building: Sharpen your mind with logic-based challenges like Crossword, Sentence Scramble, Number Sort, and Memory Games.Retro Arcade & Action: Experience fast-paced fun with classics like Snake, Block Game, Car Racing, and Bubble Shooter.Immersive Virtual Worlds: Explore creative spaces like the Music Studio or nurture virtual buddies in the Baby Boss & Friends World, which teaches responsibility through interactive care.Intuitive Controls: Games utilize modern hardware features, such as gyro-sensors for Maze Ball and tilt-steering for racing, ensuring a smooth and responsive experience.
Social HubLrN (Learn): Learn 22+ languages with interactive lessons and certificates.Fanhub: Event-based spaces, digital ticketing, global feeds, and organizer tools.

Desi AI GenZ Keyboard: Expression in Your Own Voice

The Desi AI GenZ Keyboard is a revolutionary AI-powered typing and expression platform. Supporting 22 Indian and over 70 global languages, it offers seamless typing, voice-to-text, and instantaneous translation, allowing users to communicate effortlessly in their mother tongue.

CategoryKey Features & Technical Capabilities
GenZ Mode & MediaGenZ Key: Dedicated space-row button for trendy slang popups (Rizz, Aura, Delulu, Sus, Slay, NPC, etc.).Integrated Media: Full emoji palette; GIF search (Tenor API); Sticker search (Klipy API) with category chips.Media UX: In-panel search bar and grid layout optimized for thumb reach.
Languages & Localization22+ Indian Keyboard Layouts: Includes Devanagari, Arabic, Bengali, Ol Chiki, and more for scripts like Maithili, Sanskrit, Assamese, Dogri, and Konkani.70+ International Languages: Global support including French, German, Japanese, Arabic, Russian, and Spanish.Localization Extras: Locale-aware punctuation/numerals and per-language quick reply phrases.
High-Speed PerformanceLightning-Fast Typing: Engineered for zero-lag input, ensuring every keystroke appears instantly as you type.Rapid AI Predictions: Provides near-instant word suggestions and autocorrect to boost your typing speed.Quick Language Switching: Seamlessly toggle between multiple Indian and global languages without any stutter or delay.Fast Gesture Controls: High-response swipe-to-type functionality for fluid, high-speed text entry.Snappy Performance: A lightweight, optimized interface that launches and responds immediately on any device.
Custom Typing & LayoutsFull Layouts: QWERTY, dedicated numbers, advanced numeric, and symbols (primary & secondary).Smart Input: Optimized Phone/OTP layouts; long-press for accents/variants.Automated Logic: Auto-capitalization and double-space period insertion.Smart Deletion: Swipe-left on delete key for “backspace slide” fast deletion; long-press to clear fields.
Gesture & Glide TypingGlide Support: Swipe over letters to form words with fade-out trail visualization (0–500ms).General Gestures: Customizable Swipe Up/Down/Left/Right actions with adjustable velocity/distance thresholds.Spacebar Gestures: Swipe to move cursor or switch languages; long-press for settings/layouts.
Utility Panels & ToolsCalculator: Embedded in keyboard with history and “one-tap send result” function.Unit/Currency Converter: 8+ categories (Length, Weight, Temp, FX, etc.) for quick estimates.Calendar: Pick dates and insert in multiple formats (e.g., 18-03-2026).Text Editing: Helpers for bullets (•, ○, ▪), numbering styles (1., a), i)), and indents.
Smartbar & Quick ActionsModes: Fully toggleable; layouts include Suggestions-only, Actions-only, Shared, or Extended.Quick Access: One-tap to Emoji, GIFs, Stickers, Clipboard, Floating mode, Translate, and Voice mic.Editor: Drag-and-drop reordering of actions into Sticky, Dynamic, or Hidden sections.Recent Emojis: Smartbar displays recent history when numeric/symbol keyboard is active.
NLP & PrivacyPrivacy-First: 100% On-Device suggestions and processing. No AI/LLM cloud calls for typing.Smart Logic: Statistical glide typing classifier and NLP manager wired to glide paths.
Productivity HelpersTranslation: Inline translation panel powered by Anuvadini API.Quick Reply: Two-column panel for language-specific templates/canned responses.Clipboard: Local history of copied items with “Pin” and “Clear-all” support.Voice Input: Sticky mic button with a themed voice bar UI for real-time dictation.
Personalization & SettingsSnygg Engine: Advanced theming system with Material-You accent color support and Light/Dark transitions.Feedback: Granular control over Audio volume and Haptic vibration strength/duration per event.Modes: Toggle between Docked, Fullscreen, and Floating Keyboard with resize/drag handles.Developer Tools: Internal devtools for layout debugging and performance logging hooks.

The Vision: Aatmanirbhar Digital Bharat

These applications are more than just software; they are a declaration of India’s technological self-reliance. At a time when digital control often resides outside our borders, Anuvadini AI is providing a secure, reliable, and culturally resonant alternative.

“Videsi se Desi, communicate securely, in your own language, with your own nation.”

Through Hyped Samvadini and the Desi AI GenZ Keyboard, India marches toward a digital future where every citizen is secure, self-reliant, and truly empowered.

How to Download Hyped Samvadini & Desi AI GenZ Keyboard:

  1. To use Hyped Samvadini, go to the Google Play Store (Android) or Apple App Store (iOS) and search for the keyword “Hyped Samvadini” or *”Hyped Messenger.”
  2. To use Desi AI GenZ Keyboard, go to Google Play Store (Android) or Apple App Store (iOS) and search for the keyword “Desi AI GenZ Keyboard.”

For more information, contact Dr. Buddha Chandrasekhar (CEO, Anuvadini AI) at cconeat@aicte-india.org or +91 97401 69197.