பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த ‘முதல் பிரதமர்’ என்ற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. அவர், அங்கே 15 நிமிடங்களுக்கும் மேல், பக்திப் பரவசத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டதுடன், சந்நிதி முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
அண்மைக் காலமாக, திருப்பரங்குன்றம் தேசிய அளவில் கவனம் பெற்றது. அதற்குக் காரணம், தீபம் ஏற்றுதல் தொடர்பாகவும், நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்திலும் விவகாரத்தை முன்வைத்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள். அந்நேரம், தில்லியில் உள்ள பாஜக., தலைவர்களும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போதே பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதுரையில் தேஜ., கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தார். முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டார். அப்போது அவர், காவி சால்வை, வெள்ளை வேட்டி அணிந்து ஆலயத்துக்கு வந்திருந்தார். அவருக்கு மேளதாளம் பூர்ண கும்பத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் ராஜா, சந்திரசேகரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்பு அவர், கருவறைக்குச் சென்று குமரனை மனமுருகி வழிபட்டார். தரிசனம் செய்து திரும்பும்போது கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது, முக்கியமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. மதுரை மண்டேலா நகரில் கூட்டம் தொடங்கும் முன், பூர்ணசந்திரனின் தாய் காளீஸ்வரி, மனைவி இந்துமதி, மகன்கள் சிவனேஷ், இனியன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் பொதுக்கூட்ட மேடையில் பேசும் போதும், அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதை, மேடையில் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின. இதன்படி, அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெளியேறியது. முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வென்ற போதும், அரை இறுதியில் இருந்து வெளியேறியது.
இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலகக் கோப்பை 10வது சீசன் நடக்கிறது. ‘சூப்பர்-8’ சுற்றின் முடிவில், பிரிவு-1ல் தென் ஆப்ரிக்கா 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரிவு-2ல் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதை அடுத்து, கொல்கட்டாவில், வரும் மார்ச் 4ல் நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் மார்ச் 5ல் நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் அதிக முறை, அதாவது 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் பட்டியலில் இங்கிலாந்து (2010, 2016, 2021, 2022, 2024, 2026), பாகிஸ்தானுடன் (2007, 2009, 2010, 2012, 2021, 2022) இந்தியா (2007, 2014, 2016, 2022, 2024, 2026) இடம்பெற்றது.
அரையிறுதியில் இந்தியா:
பிரிவு-1ல், கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.
அதன்படி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த இணை 53 பந்தில் 68 ரன் சேர்த்த போது வருண் சக்ரவர்த்தி பந்தில் ஹோப் 32 ரன்னில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். முன்னதாக, அர்ஷ்தீப் ஓவரில் ஒரு ரன்னுக்காக சேஸ் ஓடினார். மறுமுனையில் ஹோப் தயங்கினார். பந்தை ‘பீல்டிங்’ செய்த வருண், கீப்பர் இருக்கும் திசையில் ‘த்ரோ’ செய்யாமல், பவுலர் திசையில் தவறாக ‘த்ரோ’ செய்ததால், சேஸ் ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இதை பயன்படுத்தி அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். இதே போல், பும்ரா ஓவரில் சேஸ் 14 ரன்னில் இருந்த போது கொடுத்த ‘கேட்ச்சை’ அபிஷேக் சர்மா தவற விட்டார். எனவே முதல் 6 ஓவர் ‘பவர் பிளே’யில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன் எடுத்தது குறிப்பிடத் தக்கது.
11 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 99/1 ரன் எடுத்து வலுவாக இருந்தபோது, 12வது ஓவரை வீசிய பும்ரா, 3வது பந்தில் ஹெட்மெயர் (27), மற்றும் 5வது பந்தில் சேஸ் (40) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். 12 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 103/3 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து பாண்ட்யா பந்தில் ஷெர்பேன் ரூதர்போர்டு (14) ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் பாவெல், ஹோல்டர் இணை அதிரடி காட்டி, 5வது விக்கெட்டுக்கு 35 பந்தில் 76 ரன் சேர்த்தது. 20 ஓவர் இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா 10 ரன்னிலும், இஷான் கிஷான் 10 ரன்னிலும் வெளியேறினர். பின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி, அரைசதம் கடந்து அசத்தினார். இவருக்கு இணையாக திலக் வர்மா அதிரடி காட்டினார். அவர் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின் பாண்ட்யா 17 ரன்னும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரிகளும் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன்களுக்கு அருகில் நிறுத்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் இரு பந்துகளில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் சாம்சன். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சாம்சன் பெற்றார்.
இந்தப் போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டன. ‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில், ‘சேஸ்’ செய்த போட்டியில் அதிக ரன் (97*) குவித்த இந்திய வீரராக சஞ்சு சாம்சன் சாதனை செய்தார். முன்னதாக, விராத் கோலி இரண்டு முறை (எதிர்: ஆஸ்திரேலியா- 2016, எதிர்: பாகிஸ்தான் – 2022) 82* ரன் எடுத்திருந்தார்.
‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன் (97*). முதலிடத்தில் ரெய்னா (101 ரன், எதிர்: தெ.ஆப்., 2010) உள்ளார்.
இருந்த போதும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் கவலைக்குரியதாக இருந்தது. இந்திய அணி வீரர்கள் 3 ‘கேட்ச்’, ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கினர். இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
பாகிஸ்தான் வெளியேற்றம்:
பிரிவு-2ல் இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. நல்ல ரன் எடுத்திருந்தாலும், அரையிறுதிக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற, இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான்.
எனினும், இலங்கை அணி 16வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புகு 148 ரன் எடுத்ததால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் சிறந்த ரன் ரேட் வைத்திருந்த நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் வெளியேறியது.
உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி வேத நாராயண முறைப்படி புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் தொடங்குகிறது.
சபரிமலை சபரீசன் ஆலயத்தின் உற்சவமான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது . இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அன்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
23-ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்யதரிசனம் உற்சவ பூஜை சடங்குகள் நடத்தி காலை 9.30 மணிக்கு தந்திரி கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பதோடு துவங்கும் உற்சவமானது 01-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது .
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி ஸ்ரீ பூபதி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மார்ச் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பகவான் ஐய்யப்பன் நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து அடியோர் புடைசூழ மேளதாளங்களுடன் சரம் குத்தி எழுந்தருளி உற்சவ பள்ளிவேட்டையானது நடைபெற உள்ளது . விழாவின் உட்ச நாளாகிய ஏப்ரல் 01-ஆம் தேதி அதிகாலை துவங்கி பல்வேறு பூஜைகளுடன் பகல் 11 மணிக்கு பம்பை நதி நோக்கி பகவான்யானையில் பயணித்து ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற உள்ளது
சபரிமலை ஆலயத்தின் கொடியேற்றி நிகழும் பெரு உற்சவமான பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பகவான் அருளினை பெற்றிட கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் மார்ச். 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து சனி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
சனி பகவான், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.20…மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4..ம் பாதத்தில் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
அதையொட்டி, மதுரை அருகே சோழவந்தான் சனீஸ்வரன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
அதோ போல, மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரளயநாத விசாக நட்சத்திர ஸ்தலத்தில், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5…மணிக்கு, இக் கோயிலில் வன்னி மரத்தடியில் அமைந்துள்ள சனீஸ்வர லிங்கம், சனி பகவான் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலில் ஸ்தல மூர்த்தி சனீஸ்வரன் ஆகும். சுவாமி, ராகுவுக்கு அதிபதி. நட்சத்திரம் விசாகம், குருவுக்கு அதிபதி ஆகும்.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் , சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 8…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம், அபிஷேகம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ராசி நேயர்களுக்கு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் துவங்கி வைக்கப்பட உள்ளது. நான்கு புதிய ரயில் சேவைகளும் துவங்கி வைக்கப்படும் என தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ரயில் சேவைகளாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் , கோயம்புத்தூர் தன்பாத் அம்ரித் பாரத் , மங்களூர் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் சார்லபள்ளி அம்ரித் பாரத் ஆகிய ரயில் இயக்கப் படுகிறது.
அம்ரித் பாரத் நிலையங்கள்
மொரப்பூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பொள்ளாச்சி சோழவந்தான் பொம்மிடி திருவாரூர் காரைக்குடி மணப்பாறை ஆகிய நிலையங்கள் முழு அளவில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது அது திறக்கப்பட உள்ளது. திறந்து வைக்கப்படும் திட்டங்களாக சென்னை கடற்கரை சென்னை எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்காவது ரயில் வழித்தடம் ரயில் சேவைகளுக்கு திறந்து வைக்கப்படுகிறது .
மதுரையில் மார்ச் 1ல் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோரிக்கைகள்
இதனிடையே பிரதமரின் வருகையை ஒட்டி, சில கோரிக்கைகளை பயணிகள் நலச் சங்கத்தினர் வெளியிட்டனர். அவை…
மத்திய அரசே, இரயில்வே அமைச்சகமே, இரயில்வே வாரியமே சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் இரயிலை விருதுநகர் சந்திப்புஇரயில் நிலையத்தில் நின்று செல்ல துரித நடவடிக்கை எடு.
மதுரை- திருநெல்வேலி , மதுரை- செங்கோட்டை, மதுரை- உசிலம்பட்டி, தேனி வழியாக போடி வரையிலும், மதுரை- இராமேஸ்வரம், மதுரை- திண்டுக்கல், திருச்சி. விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக காரைக்குடி வரையிலும் புதியதாக டெமு அல்லது மெமு ரயில்களை இயக்கிடுக. திருச்செந்தூர்-திருநெல்வேலி இரயிலை மதுரை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திடுக.
பிரதமரின் பயணத்திட்டம்
இந்நிலையில், மதுரைக்கு மார்ச் 1ல் வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ல் தேஜகூ., கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக. தலைவர் அன்புமணி, அமமுக., தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அன்று காலை, புதுச்சேரி அரசு சார்பிலான மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டரில் மதியம் 2:45க்கு தஞ்சாவூர் வரும் பிரதமர் பின்னர் அங்கிருந்து விமானத்தில் மதியம் 3:30க்கு மதுரை வருகிறார்.
விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி – ராமநாதபுரம் நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். பின் மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு மாலை 4:30க்குப் புறப்பட்டு மண்டலோ நகர் வருகிறார். அங்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 5:30 மணி அளவில் கிளம்பி, மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6:10க்கு தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழகத்தில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போதைய முதல் அமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்து திமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக.,வில் எப்படியாவது இணையலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்பதைத் தொடங்கி அதை பெயரளவுக்கு நடத்தி வந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். அதே நேரம், அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட எவரையும் அதிமுக.,வில் சேர்க்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்டத்தில் டிடிவி தினகரனின் அமமுக.,வை, அதிமுக.,இடம்பெறும் தேஜ.,கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். எனினும் நேரடியாக எவரையும் அதிமுக.,வில் சேர்க்க முன்வரவில்லை.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் திமுக.,வில் இணைந்தனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் போன்றோர் தவெக.,வுக்குத் தாவினர். தர்மர் எம்.பி., மீண்டும் அதிமுக., பக்கமே சென்று எடப்பாடியுடன் இணைந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். சசிகலா புதிய கட்சி தொடங்க முனைப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில் தனிமரமாக அரசியலில் ஆதரவற்ற நிலையில் தனித்துவிடப்பட்ட பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக.,வில் தன்னை இணைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததை உணர்ந்து, அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால், அவர் திமுக.,வில் சேர இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. குறிப்பாக, திமுக., தலைவர் ஸ்டாலினை அடிக்கடி சந்தித்தார். எனவே அவர் திமுக.,வில் இணைவது உறுதி என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அவருடன் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர். அங்கே அமைச்சர்கள் கேஎன் நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்ட திமுக.,வினர், தொனடர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக., உறுப்பினருக்கான படிவத்தில் கையெழுத்திட்ட ஓ.பன்னீர்செல்வம், தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டார்.
பன்னீர்செல்வத்துடன், அவரது மகனும், முன்னாள் எம்பி.,யுமான ரவிந்திரநாத் மற்றும் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுக.,வில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, தேனி போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.
வரவேற்று ஸ்டாலின் பதிவு:
ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு;
முன்னாள் முதல்வரும், அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் என்பது தமிழகத்திற்கும், பாசிச பாஜவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கட்சி கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
அழிவுகாலம் நெருங்கிவிட்டது
சசிகலா வெளியிட்ட அறிக்கை
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த முன்னோடியுமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில், தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் எனது தலைமையில் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களும், ஜெயலலிதாவின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.
மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். “மதிமுக என்பதற்கு அர்த்தம் “மறுபடியும் திமுக” என்பதுதான்” இப்ப… அதிமுகவுக்கு அர்த்தம் “அவங்களும் திமுகதான்”
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 25.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன. 24.02.2026 அன்று பல்லெகலேயில் நடந்த பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 164/9) இங்கிலாந்து அணி (19.1 ஓவர்களில் 166/8) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 25.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற மற்றொரு குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கஈ அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி (20 ஓவர்களில் 168/7) இலங்கை அணியை (20 ஓவர்களில் 107/8) 61 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று (26.02.2026) இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (20 ஓவர்களில் 176/8) தென் ஆப்பிரிக்க அணி (16.1 ஓவர்களில் 177/1) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றாது. முதலில் ஆடிய மே.இ. தீவுகள் அணி 90/7 என்ற நிலையில் திணறிக்கொண்டிருந்தபோது அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் (49 ரன்), ரோமாரியோ ஷெப்பர்ட் (52 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் எய்டன் மர்கரம் (82 ரன்), க்விண்டன் டி காக் (47 ரன்) மற்றும் ரியன் ரிக்கிள்டன் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்தனர்.
இரண்டாவது ஆட்டம் சென்னையில் இந்திய, ஜிம்பாபே அணிகளுக்கிடையே நடந்தது. பூவா தலையா வென்ற ஜிம்பாபே அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த இந்திய அணியின் சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அபிஷேக் ஷர்மா (30 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), இஷான் கிஷன் (24 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (13 பந்துகளில் 334 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (16 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய அனைவரும் மிகச்சிறப்பாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர் பிரியன் பென்னட் ஆட்டமிழக்காமல் 97 ரன் அடித்தார். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.
அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு நடைபெறும்.
காச்சிகுடா மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது .
07191/07192 || காச்சிகுடா மதுரை சிறப்பு நிரந்தர சேவையில் 17615/17616 || காச்சிகுடா தூத்துக்குடி EXP
கொரோனா காலகட்டத்திற்கு முன்பில் இருந்தே பல ஆண்டுகளாக இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத் மற்றும் மதுரை இணைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயிலாக திருவண்ணாமலை வழியே இயக்கப்பட்டு வருகிறது! ஆனால் நிரந்தரமாக்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது! இப்போது அதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
வண்டி எண் : 17615/17616 | காச்சிகுடா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், வழி : கர்னூல் சிட்டி தோன் கூட்டி அனந்தபூர் தர்மாவரம் பகாலா காட்பாடி வேலூர் காண்ட் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கோவில்பட்டி.
இந்த ரயில் திங்கள் இரவு காச்சிகுடாவில் புறப்பட்டு புதன் காலை தூத்துக்குடி வந்து சேரும் . மீண்டும் தூத்துக்குடியில் இருந்து புதன் காலை புறப்பட்டு வியாழன் மதியம் காச்சிகுடா சென்று சேரும் !
முதல் முறையாக தூத்துக்குடியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்வதற்கு ரயில் சேவை கிடைக்கிறது. இந்த ரயில் மூலம் வாரத்தில் ஒரு நாள் மதுரை தஞ்சாவூர் திருவண்ணாமலை திருப்பதி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவை தூத்துக்குடிக்கு கிடைக்கும் . மேலும் ஹைதராபாத்தில் இருந்து திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் தூத்துக்குடி வரை வந்து இந்த ரயிலை பயன்படுத்த முடியும்.
ஹைதராபாத் டூ திருவண்ணாமலை வரும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இப்போது இருந்து வருகிறது! இப்போது இது நிரந்தர ரயிலாக இது மாறி உள்ளது.
காச்சிகுடா மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது! அந்த சேவை முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் நிரந்தர சேவையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஹைதராபாத்தில் இருந்து நேரடியாக தூத்துக்குடி வரை ரயிலில் சொல்லலாம். மேலும் இந்த ரயிலுக்கு இனி ஒவ்வொரு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்! சிறப்பு ரயிலாக இயங்குவதால் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது; இனி அந்த சிக்கல் கிடையாது .
ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
(உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த புதிய திட்டங்கள் தொடங்கும் மற்றூம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸின் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்தார். அதில் அவர் பேசியவை….)
தேசத்திலேயே, சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன, இவற்றால் பாரதத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இப்போது தான் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது பாரதத்திலே, உலகத்திலேயே மிகப்பெரிய, ஏஐ உச்சிமாநாடு நடைபெற்றது.
உலகெங்கிலிருமிருந்தும், 80க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தில்லிக்கு வந்திருந்தார்கள். உலகத்தினுடைய சுமார், 20 குடியரசுத் தலைவர்கள் பாரதம் வந்திருந்தார்கள். இலட்சக்கணக்கான பேர்கள், இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும், தில்லியில் கூடியிருந்தார்கள். உலகின் வளர்ந்துவரும் நாடுகளிலே, இப்படிப்பட்ட மாநாடு, இதுவரை நடந்ததே இல்லை.
நான் இங்கே மீரட்வாசிகளிடம் கேட்க விரும்புகிறேன். இப்போது நடந்து முடிந்த ஏஐ மாநாடு இருக்கிறதே, இது உங்களுக்குப் பெருமையாக இருக்கிறதா இல்லையா? முழுச்சக்தியோடு கூறுங்கள் உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா இல்லையா?
உங்களைத் தலைநிமிரச் செய்கிறதா இல்லையா? உங்கள் நெஞ்சை விம்மச் செய்ததா இல்லையா? இந்தப் பணி பாரதத்திற்காக நடத்தப்பட்டதா இல்லையா? பாரதத்தின் இளைஞர்களுக்காக செய்யப்பட்டதா இல்லையா? பாரதத்தின் எதிர்காலத்தை மாற்ற அமைக்கப்பட்டதா இல்லையா?
21ஆம் நூற்றாண்டில் தலைமை தாங்கச் செய்யப்பட்டதா இல்லையா? நாடு முழுவதும், புளகாங்கிதம் அடைந்தது. ஆனால் காங்கிரஸும், அதனுடைய சூழலமைப்பும் என்ன செய்தார்கள்? நண்பர்களே காங்கிரஸ் கட்சி, பாரதத்தினுடைய, உலகளாவிய ஒரு ஏற்பாட்டினை, தன்னுடைய கேவலமான, மற்றும் அப்பட்டமான, அரசியலின் களமாக ஆக்கிவிட்டார்கள்.
மாநாடு நடந்த இடத்திலே, அயல்நாட்டு விருந்தினர்கள் முன்பாக, காங்கிரஸின் தலைவர்கள், உடைகளைக் கழற்றிப்போட்டு வந்தார்கள். நான் காங்கிரஸ்காரர்களைக் கேட்கிறேன்.
ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்?
காங்கிரஸின் தலைவர்கள், அங்கே செய்தவை எல்லாம், என்ன காட்டுகிறது என்றால், நம் தேசத்தீன் மிகப்பழமையான கட்சி, கருத்தியல் ரீதியாக, எந்த அளவுக்கு காலியாகி விட்டது என்றால், இத்தனை கேவலமாகி விட்டது என்றால், இதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
நாம் எல்லோரும் எப்படிப்பட்டவர்கள் என்றால், நம் கிராமங்களிலே, யார் வீட்டிலாவது திருமணம் நடக்கிறது என்றால், கிராமம் முழுவதும், அதை வெற்றிகரமாக நடத்திமுடிக்க, முழுமனதோடு ஈடுபடுகிறது.
அப்போது தான், விருந்தாளிகள், கிராமம் பற்றிய நல்ல எண்ணத்தோடு செல்வார்கள். ஆனால் காங்கிரசோ, தன்னுடைய தேசத்திற்கே, அவப்பெயர் ஏற்படுத்துவதிலே முனைந்திருக்கிறது.
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு,’ – என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் சொற்களிலேயே அத்துணை வலிமை உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்துள்ள நம் பாரத தேசமானது ‘ஆன்றோர்களின் செயற்கரிய செயல்கள்’ என்ற அற்புதமான சேவையினால் ஒரு பேரினமாக நிலைத்து நிற்கின்றது என்பதே காலம் காலமாய் நாம் காணும் பாரத தேசம்.
நம் நாட்டில் ஆன்றோர்கள் அனைத்து பகுதிகளையும், மொழிகளையும், கலாச்சாரங்களையும் மதித்து அதே சமயத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணித்து மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால், கொடுப்பதால் தான் இன்றும் உலக வரைப்படத்தில் பாரத நாடு பெருமிதம் கொண்டு உயர்ந்து நிற்கிறது. ஆன்றோர்கள் என்று குறிப்பிடும் போது ஆண்களுக்கு நிகரான பெண்களையும் கண்டறிந்த தேசமடி நம் பாரத கண்டம்.
அறிவியல் முதல் ஆன்மீகம் வரை, அரசாங்கம் முதல் ஆட்சி வரை, கல்வி முதல் கலை வரை, சரித்திரம் முதல் சமுதாய மேம்பாடு வரை என அனைத்து துறைச் சார்ந்த விஷயங்களிலும் நம் நாட்டு ஆன்றோரின் பங்களிப்பானது, உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ் மன்னன் அதியமானுக்கு அறிவுறுத்திய அவ்வையார் சமுதாயத்திற்கும் அருமையான ஆத்திச்சூடியை வழங்கினார். தன்னுடைய அருமையான நகைச்சுவை உணர்வினால் தெனாலிராமனும் நாட்டை ஆண்ட கிருஷ்ணதேவராயருக்கு கூறிய அறிவுரைகள் இன்றும் ஏற்புடையதாய் உள்ளது என்பதை மறுக்கவும் இயலுமோ? முகலாய மன்னன் அக்பர்-நகைச்சுவை சக்கரவர்த்தி பீர்பால் ஜோடியின் வாழ்வியல் தத்துவங்களால் ஈர்க்கப்படாதோர் உண்டோ? சாதுர்யமான சாணக்கியனின் நியதியால் பயனடைந்த சந்திரகுப்த மௌரியாவின் வெற்றியானது இன்றும் பேசப்படுகிறது.
மனித குல மாணிக்கங்களான கௌதம புத்தரையும், மகாவீரரையும், குருநானக்கையும் தன் பூமியிலே அவதரிக்க வைத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
வேத இலக்கியங்களை தொகுத்தளித்த வியாசரும், ரகு வம்சத்திற்கு வழிகாட்டிய வசிஷ்டரும், கட்டிடத் துறையில் பிதாமகரான விஷ்வகர்மாவும், தன் விரலை விட குருவின் கட்டளையை பெரிதாக நினைத்த ஏகலைவனும், இந்து மதச்சட்டங்களை அறிமுகப்படுத்திய மனு சக்கரவர்த்தியும், மருத்துவத்துறையில் மகானான தன்வந்திரியும் வழங்கிய கொடைகளினால் இன்றும் பார்ப்புகழ நிற்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
மகாயோகி கோரக்நாத், இலக்கணத்தை வகுத்த பாணினி, மஹாபாஷ்யத்தின் ஆசிரியர் பதஞ்சலி, இந்து மதத்தை நாடெங்கும் பரப்பிய ஸ்ரீ ஆதிசங்கரர், தத்துவ ஞானிகளான மாதவாச்சார்யா, நிம்பார்க்கர் ஆச்சாரியா, சிந்தி-இந்திய வம்சாவளியினர் போற்றும் ஜூலேலால், பக்தியை பரப்பிய சைத்தன்ய மகாபிரபு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், கவிச்சக்கரவர்த்தி கம்பர், கர்நாடகாவின் தத்துவ ஞானியும் சமுதாயப் புரட்சியாளராக பஸ்வேஷ்வர் ஆகியோரின் அரும் தொண்டை அருமையாய் அனுபவித்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
அஸ்ஸாமை சேர்ந்த வைணவ குரு சங்கர் தேவா, சகோதரர்களான சயனாச்சார்யா – மாதவாச்சார்யா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்த் ஞானேஷ்வர், துக்காராம், சமர்த்த குரு ராம்தாஸ், புரந்தரதாசர் போன்றோரின் ஆன்மீக வழிகாட்டலால் மிளிர்ந்த தேசமடி நம் பாரத கண்டம்.
வீரத்தின் மறு பெயராம் சத்ரபதி சிவாஜி மகாராஜை அவர்தம் வீரத்தாய் ஜீஜாபாய் பெற்றெடுத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். ஆங்கிலேயனை தன் கையில் குழந்தையுடன் குதிரையின் மேல் ஏறி போரிட்ட வீரமங்கை ஜான்சி ராணி பிறந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். வடக்கிலிருந்து நகர்ந்தால் தெற்கிலும் அரசாட்சி செய்த ஆங்கிலேயனை தன் வீரத்தினால் கதிகலங்க வைத்த நம் தமிழ் வீரப்பெண் வேலு நாச்சியார், முகலாய மன்னர்களை மத்திய இந்தியாவில் எதிர்த்துப் போரிட்ட காந்தாரத்தின் ராணியான துர்காவதி போன்ற பலரின் பாதங்கள் பதிந்த தேசமடி நம் பாரத கண்டம்.
வேத காலத்திலேயே கல்வியின் மகத்துவத்தை அறிந்து பயின்ற கார்க்கியும், எமதர்மனுக்கே சவால் விட்ட சாவித்திரியின் தைரியமும், பொறுமையை போதிக்கும் அன்னை சீதாவின் குணமும், துயரங்களை துச்சமாக நினைத்த திரௌபதியும், நியாயத்திற்காக மதுரையை எரித்த கண்ணகியின் துணிவும், பக்தியி ன் சாரத்தை விளக்கிய பக்த மீராவும், பிறந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
ஏழு வார்த்தைகளில் அதிகாரமாய் கருத்துக்களை கூறி உலகப் பொதுமுறை எனப்படும் திருக்குறளை அளித்த திருவள்ளுவரை கண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
கர்நாடகா கண்டெடுத்த அகல்யா பாய் ஹோல்கர், ஆணை போன்று உடையணிந்து ஆட்சிச் செய்த தெலுங்கானாவின் ருத்ரம்மா, கணவனின் தர்ம காரியங்களுக்கு துணைநின்ற சாரதா மாதா போன்றோரின் வாழ்வியல் நிகழ்வுகளை பொன்னெழுத்தில் பதிய வைத்துள்ள தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
உலகுக்கே பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்திய ஆன்றோரை கண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். கணித மேதை ராமானுஜரின் தியரிகளை ஆச்சரியத்தோடு இன்றும் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போற்றும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
உலகத்திற்கே சகோதரத்துவத்தை விளக்க சிகாகோவில் “சகோதர சகோதரிகளே’ என்ற வாழ்வியல் வாக்கியத்தை முதலில் பிரகடனப்படுத்திய அற்புத மனிதரை பெற்றெடுத்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.. விஞ்ஞானிகளுக்கு எல்லாம் முன்னோடியான சர் சி வி ராமனையும் ஜெகதீஸ் சந்திரபோஸையும் தனதாக்கிக் கொண்ட தேசமடி பாப்பா நம் பாரத கண்டம். பிற்படுத்தோர்களுக்காக குரல் கொடுத்த ராஞ்சியை சேர்ந்த பிர்ஸா முண்டா, புரட்சிக் கவிஞன் பாரதி, காளியின் வரம்பெற்ற காளிதாஸ், இந்தி கவிஞர் பக்த சுர்தாஸ், பக்தி பாடலினால் தெலுங்கு மொழியையும் வளர்த்த தியாகராஜ சுவாமி ஆகியோரின் சேவைகளினால் சாம்ராஜ்யமாய் விளங்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
தன் அற்புதமான ஓவியங்களால் உலகையே நம் நாட்டின் பக்கம் திருப்பிய ரவி வர்மாவும், மணிப்பூரை ஆண்ட பாக்கிய சந்திரா, பேரரசர்களான கௌண்டின்யா, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், அசோகச் சக்கரவர்த்தி, ஷங்க் பரம்பரையைச் சார்ந்த புஷ்யமித்ர, கலிங்கா பரம்பரையைச் சார்ந்த கரவேலா, விக்ரமாதித்யா, சமுத்திர குப்தா, ஹர்ஷவர்தன், சைலேந்திரன் போன்றோரின் வெண்குடையின் கீழ் பாதுகாப்பு அரண் என்ற அருமையை அறிந்த தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதா, அறிவியல் வல்லுநரான பாஸ்கராச்சாரியா, நாகார்ஜுனா, ஆரியபட்டா, மெஞ்ஞானத்தை மக்களுக்கு வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி, சுவாமி தயானந்தர், சுவாமி ராம் தீர்த, மஹரிஷி அரவிந்தர், ரமண மகரிஷி, நோபல் பரிசு பெற்ற வங்காள கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், சீர்திருத்தவாதிகள் ராஜாராம் மோகன்ராய், பால கங்காதர திலகர், மகாத்மா காந்தியடிகள், மதன் மோகன் மாளவியா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வினாயக் தாமோதர் சாவர்க்கர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், மகாத்மா ஃபூலே, ஜோதிபாய் ஃபூலே ஆகியோரின் சொற்களினால் சுழலும் தேசமடி நம் பாரத கண்டம்.
பிற்காலத்திலும் பல போற்றத்தக்க ஆன்றோர்கள் தங்கள் பங்கினை நம் நாட்டிற்காக பறைசாற்றிக் கொண்டிருந்தனர், கொண்டிருக்கின்றனர்.
பக்திமார்க்கத்தில் ‘காஞ்சிப் பெரியவா’ என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், மனித நேயத்திற்கு பாலமாய் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற பல ஆன்றோர்கள் நமக்கு வழிகாட்டிய தேசமிது பாப்பா நம் பாரத கண்டம்.
மதங்களை கடந்து இசை ரசிகர்களை பெற்றிருக்கும் புகழ்பெற்ற பாடகர் டாக்டர் கே ஜே ஜேசுதாஸ், இறைவனால் திருநங்கையாக ஆசீர்வதிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற நர்த்தகி நடராஜன் தன் ஆராய்ச்சியினால் பரதநாட்டியத்திற்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு, தள்ளாத வயதிலும் ஏழை மக்களுக்காக இன்றும் போராடும் பத்மபூஷன் விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அனாதை குழந்தைகளின் தாயாய் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சிந்துதாயீ சப்கால், காலில் செருப்பு கூட அணியாத, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான மரங்களை வளர்த்த பேரிளம்பெண்ணான கர்நாடகாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற துளஸி கௌடா, 66 வயதான ஆரஞ்சுப் பழ வியாபாரியின் மனதில் உதித்த கிராமப்புறத்திற்கு கல்வி என்னும் அட்சயப்பாத்திரத்திரமான சேவையை செய்து வரும் மங்களூரைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ஹரேகலா ஹஜபாபா போன்றோரும் நம் இன்றைய பாரதத்தின் ஆன்றோர்களே.
எவ்விதமான இடையூறுகளிலும் நம்மை இடைவிடாது நம்மை காத்துக் கொண்டிருக்கும் முப்படை வீரர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமங்களில் ஆரோக்கிய நாடியாய் இருக்கும் ‘ஆஷா வொர்கர்ஸ்’, மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், முதியோர் இல்லங்களில் முதியவர்களை கவனித்துக் கொள்ளும் தோழர்கள், அனாதை இல்லங்களில் குழந்தைகளுக்கு அரணாக இருக்கும் நேசர்கள், இறைவனுக்கு நெருக்கமாக கருதப்படும் மாற்றுத் திறனாளிகளை கையாளும் சிறப்பு பெற்றோர்கள், பணியாளர்கள் என இவர்களும் தங்கள் அயராத சேவைகளினால் ஆன்றோர்களாய் திகழ்வதாலேயே நம் பாரத அன்னையானவள் இன்றும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ – என்பது போல அனைத்து துறைகளிலும் இக்கட்டுரையில் குறிப்பிட்டவர்களின் வரலாறே அந்தந்த துறைகளில் சேவை செய்யும் அனைவருக்கும் ஒரு சான்றாகும்.
‘பாரத நாடு பழம்பெரும் நாடு!! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!!’ என்ற பாரதியின் வைர வரிகளை மனதில் ஏற்று நம் ஆன்றோர்களின் தேசமாம் பாரதத்தின் பெருமைகளை மெருகேற்ற வேண்டிய தலையாய கடமையை நாம் உணர வேண்டிய தருணமடி பாப்பா!
இளைஞர்கள் என்னும் அற்புதமான பொக்கிஷத்தை தனதாக்கி கொண்டுள்ள நம் பாரத அன்னை, தான் கண்ட ஆன்றோர்களின் அரிய சேவைகளை தக்க சமயத்தில் இளைய பாரதத்திற்குள் புகுத்தி தன்னுடைய வீர நடையினால் உலகை ஆள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை, ஏனென்றால் நம் தேசம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!!