2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சனாதன தர்மத்தில் நூல்களின் செழிப்பு அதிகம். மிகப் பெரிய அறிவுப் பெட்டகம் நமக்குள்ளது. முனிவர்கள் தம் தவ வலிமையால் கேட்டுணர்ந்த, ஆழ்ந்த, நுட்பமான மறை பொருளைக் கொண்ட கம்பீரமான வேத மந்திரங்களின் குவியல் அது. அடிப்படை அறிவின் சாராம்சம். அவை சாட்சாத் சப்த வடிவான இறைவன். ஒலி வடிவில் வெளிப்பட்ட இறைசக்தி. அவற்றின் பொருளை உலகியல் மொழியறிவு கொண்டோ, சமுதாயக் கோணத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்திற்கும், சாமானியரின் பார்வைக்கும் அப்பாற்பட்ட விஸ்வ ரகசியங்கள் பல அவற்றில் பொதிந்துள்ளன. அவற்றை மீண்டும் முனிவர்களே நமக்கு அளிக்க வேண்டும். அதனால்தான் புராணம், இதிகாசம், தர்ம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என்று பல வகைகளில் அவை தவ முனிவர்களின் வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டன.
அவற்றில் சில விஷயங்கள் நவீன காலத்திற்குப் பொருத்தமற்றவை என்றும், சமூகத்தில் பகைமையை வளர்ப்பவை என்றும், எவ்விதப் பொருளுமற்றவை என்றும் அவற்றை வக்கிரப் பார்வையோடு பார்த்து வாதிட்டவர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவற்றின் மேல் மதிப்பு கொண்டவர்களிடம் கூட அவற்றின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும் மனப்போக்கு காணப்படுகிறது. இவை உண்மைதானா என்று ஐயுறுவதாகத் தோன்றுகிறது. அதனால் புராணங்கள், தர்ம சாத்திரங்கள் போன்றவை ஆதாரமற்றவை என்றும், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டவை என்றும் முத்திரை குத்தும் கூற்றுகளையும் நாம் எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்குக் கட்டுப்பட்ட சிலர், தம் விருப்பத்திற்கு இணங்காத எதையும் பயனற்றது என்றும் ஆதாரமற்றது என்றும் வகைப்படுத்துகின்றனர். ஒத்திசைவு இன்மையாலும், ஆழமான உட்கருத்துகளை உள்வாங்க இயலாமல் போவதாலும், தாம் உருவாக்கிக் கொண்ட இறுக்கமான கட்டமைப்பிலிருந்து வெளியில் வரத் தயங்கும் மனப்பான்மையாலும் உருவான கருத்துகளே இவை.
இக்காரணத்தாலேயே நம் தர்ம நூல்களை ஏளனம் செய்வதற்கு, தம்மைத் தாமே அறிவுஜீவிகள் என்று அறிவித்துக் கொள்ளும் சிலர் சமுதாயத்தில் உலவுகின்றனர். ஆனால் முனிவர்கள் எழுதிய தொன்மையான நூல்களின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்கு, அவை இயற்றப்பட்ட காலத்தில் வழக்கத்திலிருந்த கலைச்சொற்களையும் மருபு சார்ந்த மொழி பற்றிய புரிதலையும் கொண்டிருப்பது இன்றியமையாதது. ஒரு சொல் உணர்த்தக் கூடிய பன்முகப் பொருள்களை இனங்கண்டு அறியும் திறன் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, “இந்திரன் (கோ) பசுக்களால் பாறையைத் தாக்கினான்” என்ற மத்திரத்திற்கு, “வேதத்தில் பசுக் கொலை உள்ளது” என்று பொருள் கூறியவர்கள் உள்ளனர். ஆனால் ‘கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒளிக்கதிர்’ என்று ‘வேத நிருக்தம்’ கூறும் பொருளும் உண்டு. சூரியனுக்கும் இந்திரன் என்ற பெயர் உண்டு. சூரியனின் ஒளிக்கதிர்களின் வலிமையால் பாறை சிதறும் நிகழ்வை விவரிக்கும் மந்திரத்திற்குப் புரிதல் இன்மையால், பசுவதை என்று பொருள் கூறுவது பெரும் பிழை அல்லவா?
ஆகவே, சாதாரண மத நூலாக வேதங்களைப் பார்க்கக் கூடாது. அதேபோல் தெய்வங்களைக் குறித்த சில கதைகள் குறியீட்டு மொழியிலும், வேத மொழியிலும் கூறப்பட்டுள்ளன. இப்பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்த மாற்றங்களைச் சித்திரிக்கும் பலவகைக் குறியீட்டுக் கதைகள் உள்ளன. வானியல் அறிவியலின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இவற்றின் உண்மையான உட்பொருள் தெளிவாகப் புரியும்.
இது வெறும் சமூக அம்சங்களை மட்டும் உற்று நோக்கும் விஷயம் அல்ல. ஜோதிட விஞ்ஞானம், யோக விஞ்ஞானம், தத்துவ விஞ்ஞானம், மந்திர விஞ்ஞானம், யக்ஞ விஞ்ஞானம், மருத்துவக் கல்வி, உடற்கூறியல், வேதங்களின் பொருளை உணர்ததும் விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகள் கதைகளாகவும் போதனைகளாகவும், கவிதை வடிவிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் போது, அவற்றில் மறைத்துள்ள உட்பொருள் பற்றிய தெளிவு மேலும் அதிகமாகும்.
அதனால்தான், சிக்ஷா (உச்சரிப்பு, ஒலியியல்), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (யாப்பு), நிருக்தம் (சொற்பிறப்பியல்), ஜோதிடம் (வானியல், ஜோதிடம்), கல்பம் (சடங்குகள்) என்ற ஆறு (வேதங்களின் துணை நூல்கள்) வேதாங்க சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் வேதங்களின் பொருளை உண்மையாக அறிவார்கள் என்று சம்பிரதாய அறிஞர்கள் கூறுவர்.
சிலர் வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று துணையாக சனாதன தர்மமாக, நித்திய நூதனமாக பல யுகங்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறன்றன.
மனிதர்களின் உயிரியல் பண்புகள், விருப்பங்கள், உடல் நிலைகள், உள்ளத்தின் எண்ணங்கள், உணர்வுகள் போன்றவை ஒன்று போல் இருக்காது. இக்காரணத்தால் பல்வேறு இயல்புள்ளவர்களுக்கு ஏற்ப தனித்துவமான ஆன்மீகப் பாதைகளை முனிவர்களின் நூல்களான ஞான இலக்கியங்கள் வழங்கியுள்ளன.
தந்திர நூல்களின் அற்புதங்கள், யோக சாஸ்திரங்களில் ஹட யோகம், லய யோகம், நாத யோகம், ராஜ யோகம், மந்திர யோகம் என்று பலவேறு பிரிவுகள், ஸ்வரம் (இசை ஒலி) , பிரச்னம் (கேள்வி ஜோதிடம்), ஜோதிஷம் (வானியல் ஜோதிடம்) போன்ற அறிவியல்கள், அறநெறி ஒழுக்கத்தை போதிக்கும் நூலகள், தனிமனித ஆளுமையை மலரச் செய்யும் அறிவுரைகள் போன்றவை அவற்றில் ஏராளமாக உள்ளன. எண்ணற்ற கவிஞர்களும், உரையாசிரியர்களும், அறிஞர்களும் அவற்றை மேலும் செழுமையாக்கி விரிவுபடுத்தினர்.
எந்த நிலையில் இருப்பவரானாலும் அவரவருக்குப் பிடித்த வகையில் ஆன்மீக சாதனை செய்து, பக்குவத்தை அடையும் பலவேறு பாதைகளை நம் முன்னோர் அளித்துள்ளனர். அவற்றைக் கடைப்பிடித்து உய்வடைந்தவர் மிகப்பலர் உள்ளனர்.
“இத்தனை உயர்ந்த ஆன்மீக நிலைத் தத்துவத்தை போதிக்கும் நீங்கள் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்பமான விக்ரக வழிபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்?” என்று சிலர் சுவாமி விவேகானந்தரைக் கேட்டபோது, அவர் “எந்த வழிமுறையைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாதையைப் பின்பற்றுபவரின் தரத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் அற்பம் என்று புறக்கணிக்கும் விக்ரக வழிபாட்டு முறையில் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய தத்துவ ஞானிகள் உள்ளனர். அந்த வகையில் அந்த பாதையும் உயர்ந்ததே” என்றார்.
விக்ரகங்களின் வடிவமைப்பு, அளவுகள், பூஜை விதிமுறைகள் இவையனைத்தும் சிறந்த நுட்பமான அறிவியல் சாத்திரங்களாக விரிந்துள்ளன. அவற்றை ஆராயாமல் வெறும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து விமர்சிப்பது சரியல்ல.
அதனால் சம்பிரதாயமாக வரும் நம் முனிவர்கள் அளித்த ஞானத்தை, எண்ணற்ற மகான்களால் போற்றப்பட்ட கருத்துகளை அவசரப்பட்டு புறக்கணிப்பதோ தவறுதலாக விமர்சிப்பதோ சரியல்ல. நம் அனைத்து பாரம்பரிய வழிமுறைகளும் உயர்ந்தவையே. ஒரு குறிப்பிட்ட பாதைக்குக் கட்டுப்பட்டு பின்பற்றி மகிழ்வதும் நல்லதே. ஆனால் மீதியிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதோ இழிவுபடுத்துவதோ பொருந்தாது. ஒரு தவளைக்குத் தன் கிணற்றின் ஆழம் மட்டுமே தெரியும்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஒருவர் தனக்குத் தற்போது ஏற்புடையதல்ல என்று தோன்றிய கருத்தையோ, வழிமுறையையோ கடைபிடிக்காமல் ஒதுக்கி வைக்க நினைக்கலாம். நம் தொன்மையான நூல்களில் முக்காலத்திற்கும் பொருத்தமான நன்மை பயக்கும் விஷயங்களும் கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளலாம். எந்தக் காலத்திற்கும் எந்த மனிதருக்கும் பயன்படும் நல்ல கருத்துகள் செழுமையாக நம் நூல்களில் உள்ளன. காலத்திற்கேற்ப அப்போதைக்கப்போது மனித இனத்தைத் தொடர்ந்து வழிநடத்தும் மாபெரும் இலக்கியக் களஞ்சியமும், பாரம்பரிய ஒழுக்க விதிகளும் உறுதியாக நிலைத்து நின்கின்றன.
நமக்கு பிடிக்காதவற்றை நிராகரித்தாலும், பிடித்தவை பல எஞ்சியிருக்கும். மொத்தத்தில் அபாரமான இலக்கியச் செல்வத்தில் அத்தனை விதமான பயன்களையும் அற்புதமாக நிறைவேற்றும் காலத்தால் அழியாத கருத்துகள் பல உள்ளன. அவற்றை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். திறந்த மனத்தோடு, கபடமின்றி, நேர்மையாக அவற்றை ஆராய வேண்டும். அழகாக கருத்தொருமை காண வேண்டும். அதன் மூலம் வாழ்வின் முழுமையை சாதிக்க வேண்டும்.
(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஏப்ரல் 2026)
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில் இன்று 29.03.26 ஞாயிறு கிழமை மதியம் ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் திருமஞ்சனம் திவ்ய சேவை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வருகிற ஏப். 1-ஆம் தேதி ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் வைபவத்துடன் விழா நிகழ்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
மார்ச் 24 செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி விழா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
வருகிற ஏப். 1-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
‘மனதின் குரல் (132ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 29.03.2026 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
வளைகுடா நாடுகளுக்கு நன்றி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. கடந்த காலத்தில் உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலகட்டத்திற்கு பிரச்சினைகளை சந்தித்து வந்தது என்பது நம் நினைவினில் இன்னும் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று என்ற சங்கடத்தை நாம் கடந்துவந்த பிறகு உலகம் புதிய முறையிலே வளர்ச்சிப் பாதையிலே முன்னேறிச் செல்லும் என்பது நம்மனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், உலகின் பல்வேறு பாகங்களில் தொடர்ந்து போரும், பிணக்குமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. தற்போது நமது அண்டைப்புறத்திலே ஒரு மாதக்காலமாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. நமது இலட்சக்கணக்கான குடும்பங்களின் நெருங்கிய உறவுகள் இந்த நாடுகளில் வசிக்கின்றார்கள், குறிப்பாக பாரசீக வளைகுடா நாடுகளிலே பணியாற்றி வருகின்றார்கள். அங்கே இருக்கின்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்துவரும் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
பாரதம் உறுதியுடன் எதிர்கொள்கிறது
நண்பர்களே, இப்போது போர் நடைபெற்றுவரும் பகுதி, நமது எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்துவரும் பெரிய மையமாகும். இதன் காரணமாக உலகெங்கிலும் பெட்ரோல்-டீசல் தொடர்பாக சங்கடமான சூழ்நிலை நிலவி வருகிறது. நமது உலகளாவிய தொடர்புகள், பல்வேறு நாடுகள் நமக்கு அளித்துவரும் உதவிகள் மற்றும் கடந்த பத்தாண்டிலே நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கும் வல்லமை ஆகியவற்றின் காரணமாக பாரதம் இந்தச் சூழ்நிலைகளை உறுதியோடு எதிர்கொண்டு வருகின்றது.
புரளிகளை நம்பாதீர்கள்
நண்பர்களே, கண்டிப்பாக இது சவாலான காலகட்டம் தான் என்பதில் ஐயமில்லை. நாமனைவரும் ஒன்றாய் இணைந்து இந்த சவாலான காலகட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். அரசியல் செய்வோர் இந்த விஷயம் குறித்தும்கூட அப்படிச் செய்யக்கூடாது. இது தேசத்தின் 140 கோடி நாட்டுமக்களின் நலன்களோடு தொடர்புடையது, இதிலே சுயநலத்திற்கோ, அரசியலுக்கோ எந்த இடமும் கிடையாது. இந்தச் சூழலில் யாரெல்லாம் புரளிகளைப் பரப்புகிறார்களோ, அவர்கள் தேசத்திற்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்துகிறார்கள். விழிப்போடு இருங்கள், புரளிகள் உங்களை பாதிக்க அனுமதியாதீர்கள், அரசு தரப்பிலிருந்து உங்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் தகவல்களை மட்டுமே நம்புங்கள், அவற்றின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன். தேசத்தின் 140 கோடி மக்களின் வல்லமையால் எப்படி நாம் கடந்தகாலச் சங்கடங்களை முறியடித்தோமோ, அதே போல இந்த முறையும் கூட நாமனைவரும் இணைந்து, இந்தக் கடினமான சூழ்நிலையையும், மிகவும் சிறப்பான வகையிலே எதிர்கொண்டு மீண்டு வருவோம் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.
ஞானபாரதம் செயலி
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் சக்தி இங்கே இருக்கும் கோடானுகோடி மக்களிடம் பொதிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த முயற்சி பற்றியே நான் இன்று மனதின் குரலில் தெரிவிக்க இருக்கிறேன், இது நாட்டுமக்களின் பங்களிப்பு உணர்வினைப் பிரதிபலிக்கிறது. ஞான பாரதம் ஆய்வு என்ற இந்த முயற்சி நமது பெருமைக்குரிய கலாச்சாரம் மற்றும் வளமையான மரபோடு தொடர்புடைய ஒன்று. நாடெங்கிலும் இருக்கும் manuscripts அதாவது கையெழுத்துப் பிரதிகள் பற்றிய தகவல்களை ஒன்றுதிரட்டுவதுதான் இதன் நோக்கம். இந்த ஆய்வோடு இணைத்துக் கொள்ள ஒருவழி எது என்றால் அது ஞான பாரதம் செயலி தான்.
உங்களிடத்திலே ஏதும் கையெழுத்துப் பிரதி இருக்கிறதா அல்லது அதுபற்றிய தகவல் இருக்கிறதா, அப்படி என்றால் அதன் புகைப்படத்தை ஞானபாரதம் செயலியில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பதிவோடு தொடர்புடைய தகவலும் சரிபார்க்கவும்படுகின்றன. ஆயிரக்கணக்கான கையெழுத்துப்படிகளை மக்கள் இதுவரை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, அருணாச்சல் பிரதேசத்தின் நாம்சாயியைச் சேர்ந்த சாஓ நந்திசிந்த் லோகாங்க் அவர்கள், தாய் எழுத்தில் இருக்கும் கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார். அமிர்தசரசிலே பாய் அமித் சிங் ராணா, குருமுகீ எழுத்திலான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார். இது நமது மகத்தான சீக்கியப் பாரம்பரியம் மற்றும் பஞ்சாபி மொழியோடு தொடர்புடைய கையெழுத்துப் படிகளாகும். பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை சில அமைப்பினர் அளித்தார்கள். இராஜஸ்தானத்தின் அபய் ஜெயின் நூலகம், செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் மிகவும் பழமையான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதே போல லத்தாக்கைச் சேர்ந்த ஹேமிஸ் மடாலயமானது, திபத்திலே இருக்கும் மிகவும் மதிப்புமிக்க கையெழுத்துப்படிகள் பற்றிய தகவல்களை அளித்தது. இங்கே நான் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே அளித்திருக்கிறேன். இந்த ஆய்வு, ஜூன் மாத இடைப்பகுதி வரை நடைபெற இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடைய விஷயங்களை முன்னெடுத்துச் செல்வோம், பகிர்வோம் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசில்… இளைஞர்களின் ஆலோசனைகள் !
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதம் உலகின் மிகவும் இளமையான தேசம். தேசத்தின் இளையசக்தி தேச நிர்மாணத்தோடு தொடர்பு கொள்ளும் போது, மிகப்பெரிய உதவி கிடைக்கிறது. தேச நிர்மாணத்தின் இந்தப்பெரிய கடமையை ஆற்றுவதில் பெரும்பங்கு ஆற்றிவருவது என்னுடைய இளைய பாரதம் அதாவது ’மை பாரத்’ அமைப்பு. இந்த அமைப்பு, தேசத்தின் இளைஞர்களை பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளோடு இணைத்து வருகிறது. மை பாரத் வாயிலாக பட்ஜட் க்வஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு தற்போது தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாடெங்கிலும் இருக்கும் இளைஞர்களை, பட்ஜெட் செயல்பாடு மற்றும் கொள்கை வடிவமைப்போடு இணைப்பது தான் இதன் நோக்கம். இதோடு தொடர்புடைய வினாவிடைப் போட்டியிலே நாடெங்கிலுமிருந்தும் 12 இலட்சம் இளைஞர்கள் பங்கெடுத்தார்கள். இதற்குப் பிறகு சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பங்கெடுப்பாளர்கள் கட்டுரைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவற்றிலே சில கட்டுரைகளைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நாட்டின் என்னுடைய இளைய நண்பர்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த அளவுக்குத் தங்களுடைய பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருக்கிறார்கள் என்பது இவற்றிலிருந்து எனக்குத் தெரிய வந்தது.
தெலங்கானாவின் சூர்யாபேட்டிலிருந்து கோட்லா ரகுவீர் ரெட்டி, உத்தர பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த சௌரப் பேஸ்வார், பிஹாரின் கோபால்கஞ்ஜைச் சேர்ந்த சுமித் குமார் ஆகியோர், விவசாயிகள் நலனோடு தொடர்புடைய விஷயம் குறித்து எழுதி இருந்தார்கள். பஞ்சாபின் மொஹாலியைச் சேர்ந்த ஆஞ்சல், ஒடிஷாவின் கேந்த்ரபாடாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் ரத் ஆகியோர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்துத் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஹரியாணாவின் யமுனாநகரிலிருந்து பிரதம் பரார், பசுமையான, தூய்மையான பாரதமே வழமையான பாரதத்தை எட்டத் தேவையான வழி என்று எழுதியிருக்கிறார், இதிலிருந்து அவருடைய ஆழமான சிந்தனாசக்தி வெளிப்படுகிறது.
ஊரகப்பகுதிகளில் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காண அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தில்லியின் சங்க் குப்தா அளித்திருக்கும் ஆலோசனை. நமது இளைய நண்பர்கள், திறன் மேம்பாடு மற்றும் வணிகம் புரிவதில் சுலபத்தன்மை குறித்தும்கூட தம்முடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுவரும் அனைத்து இளைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தக் கருத்துக்கள் தாம் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல முக்கியமான தேவைகள்.
மகிழ்ச்சியான கிரிக்கெட் சீஸன்
என் கனிவான நாட்டுமக்களே, நாடெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் விசிறிகளுக்கு இந்த மாதம் உற்சாகம்-ஊக்கம் நிறைந்த மாதம். பாரதம் டி 20 உலகக்கோப்பை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிப் பதிவை ஏற்படுத்திய போது நாடெங்கிலும் ஒரே சந்தோஷமயம். நமது அணியின் பிரமாதமான இந்த வெற்றி நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுத்துகிறது. கடந்த மாதத்தின் நிறைவுப்பகுதியில் கர்நாடகத்தின் ஹுப்ளியில் மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி நடந்தது, இந்தப் போட்டியில் வென்ற ஜம்மு கஷ்மீரத்தின் கிரிக்கெட் அணி, ரஞ்ஜிக்கோப்பையைத் தன்னுடையதாக்கிக் கொண்டது.
மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீண்ட காலகட்டக் காத்திருப்புக்குப் பிறகு இந்த அணி தனது முதல் ரஞ்ஜிக் கோப்பை வெற்றி என்ற பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாறு காணாத இந்த வெற்றி, விளையாட்டு வீரர்களின் பல்லாண்டுக்கால தொடர் முயற்சிகளின் விளைவுதான். அணியின் தலைவர் பாரஸ் டோக்ரா, மிகச் சிறப்பாகத் தம் திறமைகளை வெளிப்படுத்தினார். தனது தலைமையால் இந்த வெற்றிக்கு அவர் முக்கியமான பங்களிப்பு அளித்தார். இன்று தேசத்திலே கஷ்மீரைச் சேர்ந்த இளைய பந்து வீச்சாளரான ஆகிப் நபியின் வெளிப்பாடு பற்றித் தான் பேச்சாக இருக்கிறது, இவர் இந்த ரஞ்ஜி காலத்தில் 60 விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். இந்த வெற்றியால் அணியின் வீரர்கள்-பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல், ஜம்மு கஷ்மீரத்தின் மக்களும் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் மைதானத்தின் இந்த அருமையான செயல்பாட்டிற்குப் பிறகு அங்கே இருக்கும் இளைஞர்களிடம் விளையாட்டுக்கள் மீதான உற்சாகம், மேலும் அதிகரித்துவிட்டது. வரவிருக்கின்ற காலத்திலே, பல இளைஞர்கள் விளையாட்டுக்களில் முனைப்பு காட்ட இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக இருக்கும். ஜம்மு கஷ்மீரத்தின் மக்களிடத்திலே விளையாட்டுக்கள் தொடர்பாக அலாதியான ஈர்ப்புணர்வு இருந்து வந்திருக்கிறது. இப்போது பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளைக்கூட நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கேலோ இண்டியா பனிக்கால விளையாட்டுப் போட்டிகள் விஷயத்திலே ஏற்கெனவே ’குல்மர்க்’ அடையாளமாக ஆகிவிட்டது. கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் கூட, இங்கே இளைஞர்களின் விருப்ப விளையாட்டாக இருக்கிறது. வரவிருக்கின்ற காலகட்டத்திலே, ஜம்முகஷ்மீரத்தின் விளையாட்டு வீரர்களின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
விளையாடுபவரே வளர்வர்
என் உளம்நிறை நாட்டுமக்களே, யார் விளையாடுகிறார்களோ, அவர்களே வளர்வார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த அளவுக்கு பிரபலமாக இல்லாத விளையாட்டுக்களைக் கூட நமது நாட்டு இளைஞர்கள் இப்போது சொந்தமாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. உத்தர பிரதேசத்தின் திறமைசாலியான தடகள வீரர் குல்வீர் சிங் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வாரங்கள் முன்பாக நடந்த Newyork City Half Marathon போட்டியில் கலந்துகொண்டு, 3ஆவது இடத்தைப் பிடித்து இவர் சாதனை படைத்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்திலே அரை மாரத்தான் போட்டியை நிறைவு செய்த முதல் பாரதநாட்டுத் தடகள வீரர் இவர் தான்.
ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அனாஹத் சிங் அவர்கள், Squash on Fire Open என்ற மிகப்பெரிய சர்வதேசப் போட்டியை வென்றிருக்கிறார். வெறும் 17 வயதே ஆன இவர் இந்தச் சாதனையை புரிந்திருக்கிறார். இதோடு கூடவே இவர் PSA உலக தரவரிசையிலே தலைசிறந்த 20 வீரர்கள் பட்டியலில், மிகக்குறைவான வயதிலே இடம்பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் ஆகியிருக்கிறார். அதே போல அஸ்மிதா ஆத்தலெடிக்ஸ் லீக் பற்றிய தகவலும் என்னிடத்தில் இருக்கிறது. இதிலே, மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று, பெண்கள் தினத்தன்று பல விளையாட்டு நிகழ்ச்சிகள் மிகப் பிரமாதமாக நடந்தன. இந்தப் போட்டியிலே சுமார் 2 இலட்சம் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதைக் காணும் போது, பாரதத்தின் பெண்சக்தி, தேசத்தின் விளையாட்டுக்கள் துறையை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்காற்றி வருகிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
உடலுறுதியில் கவனம் செலுத்துக
நண்பர்களே, நீங்கள் அனைவரும் உங்களுடைய உடலுறுதி மீது கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள் என்று நான் எப்போதுமே உங்களிடத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறேன். சர்வதேச யோகக்கலை தினத்துக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலமே இருக்கிறது, உலகம் முழுவதிலும் யோகக்கலை மீதான ஈர்ப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆப்பிரிக்காவின் ஜிபூத்தியிலே அல்மிஸ் அவர்கள் தன்னுடைய அரவிந்த யோகா மையம் வாயிலாக யோகக்கலையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று வருகிறார். அங்கே இருக்கும் மேலும் பல இடங்களிலும் கூட மக்களுக்கு யோகக்கலையைக் கற்பித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் கண்டெண்ட் கிரியேட்டரான யுவ்ராஜ் துவாவின் பதிவுக்கான எனது பதிலுக்கு உங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று அவருடைய தந்தையாருக்கு நான் கூற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். என்னுடைய வேண்டுகோள் அவருடைய தந்தையாரிடத்திலே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்கு உவகையை அளித்தது. அதே போல, நீங்களும் கூட நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், சமையல் எண்ணெய் அளவில் 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களனைவரிடத்திலும் கூட நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இத்தகைய சின்னச்சின்ன முயற்சிகளால் உடல்பருமன் மற்றும் வாழ்கைமுறையோடு தொடர்புடைய நோய்களிலிருந்து நாம் விலகி இருக்க முடியும்.
மாணவர் ஆய்வுத் திட்டங்கள்
என் இதயம்நிறை நாட்டுமக்களே, ஹிந்தி மொழியிலே ஒரு பழமொழி உண்டு, இதன் பொருள் என்னவென்றால் நாம் எத்தனைக்கெத்தனை பயில்கிறோமோ, அத்தனைக்கத்தனை புத்திசாலித்தனத்தை-திறமையை அடைகிறோம் என்பதே. அதே போல எப்போது ஒருவருடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கிறதோ, அப்போதுதான் அவரால் சிறப்பாகக் கற்க முடியும். பெங்களூரூவில் கல்வியோடு தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த ஒரு முயற்சி பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இங்கே ஒரு குழு, Prayog Institute of Education Research என்ற அமைப்பை நடத்தி வருகிறது. இந்தக் குழு ஆய்வுத் திட்டங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
இந்தக் குழு பள்ளிக்கூட மட்டத்தில் அறிவியல் கல்வியை விருப்பப் பொருளாக ஆக்குவதில் முனைந்திருக்கிறது. இவர்கள் அன்வேஷன் என்ற பெயரிலான ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள், இதன் வாயிலாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வேதியியல், பூமி பற்றிய அறிவியல் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகளில், புதுமைகளைப் புரிய சந்தர்ப்பங்களை அளிக்கிறார்கள். இதனால் ஆய்வுகள் மேற்கொளவது பற்றிய நல்ல அனுபவம் மாணவர்களுக்கு கிடைப்பதோடு கூடவே, செயல்திட்டங்களைப் பதிப்பிக்கவும் ஒரு தளம் கிடைக்கிறது.
அறிவியலை அச்சமின்றி அணுகுங்கள்
நண்பர்களே, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் போது, சில மாணவர்கள், அறிவியலைப் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம், ஆனால் அதனிடம் ஒருவகை பயமும் இருப்பதாக என்னிடம் கூறினார்கள். இந்த நோக்கிலே பிரயோக் குழுவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப்படி, மாணவர்களை அறிவியலோடு இணைப்பதோடு கூடவே, நடைமுறையிலே சிலவற்றைச் செய்து காட்டக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் நாமே செய்து பார்க்கும் போது தான், ஆர்வமும், நாட்டமும் உருவாகும். என்னுடைய இந்த இளைய நண்பர்களில் யார் வருங்காலத்திலே அருமையான விஞ்ஞானியாவார் என்பதை யாரறிவார்கள்?
பாரம்பரியத்தை மீட்டுருவாக்குங்கள்
நண்பர்களே, கல்வி வாயிலாக, கடந்த காலத்தைப் பராமரிக்கவும், வருங்காலத்தைத் தயார் செய்யும் ஒரு முயற்சியை நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள். இந்தச் சமுதாயத்தவர்கள் தங்களுடைய தொல்குடிப் பாரம்பரியங்களை மிகவும் போற்றுகிறார்கள். இவற்றின் மீது பெருமிதம் கொள்வதோடு, தங்களுடைய அணுகுமுறையை நவீனமானதாகவும் வைத்துக் கொள்கிறார்கள். நாகா பழங்குடிகளில் ’மோரூங்க் கற்றல்’ என்ற ஒரு பாரம்பரியமான வழிமுறை இருந்தது, இதிலே மூத்தகுடிமக்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக, இளைஞர்களுக்குப் பாரம்பரியமான ஞானம், வரலாறு மற்றும் வாழ்க்கைக்கல்வி பற்றிக் கூறுவார்கள்.
காலப்போக்கிலே இந்த முறை இப்போது மோரூங்க் கல்விக் கோட்பாடாக மாறிவிட்டது. இதன் வாயிலாக குழந்தைகளிடத்தில் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இதிலே சமுதாயத்தின் மூத்தவர்கள் அவர்களுக்குக் கதைகள், பழங்குடிப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களோடு வாழ்கைத்திறன்களைப் பற்றியும் கற்பிக்கிறார்கள். இந்த வகையிலே நமது நாகாலாந்து தன்னுடைய கலாச்சார மரபுகளைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், குழந்தைகளின் கல்வியை முன்னெடுத்தும் வருகிறது. உங்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் ஏதேனும் இருந்தால், கண்டிப்பாக என்னோடு பகிருங்கள்.
நீர் பராமரிப்பை பரவலாக்குக
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் பல்வேறு பாகங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது, அதாவது இந்த வேளை நீர்பாதுகாப்பு தொடர்பான நம்முடைய உறுதிப்பாடுகளை மீள் உறுதி செய்து கொள்வதற்கான வேளையாகும். கடந்த 11 ஆண்டுகளில் நீர் சேமிப்பு இயக்கம் காரணமாக மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த இயக்கம் காரணமாக, நாடெங்கிலும் சுமார் 50 இலட்சம் செயற்கை நீர் அறுவடை அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நீர் சங்கடங்களை சமாளிக்க கிராம அளவிலேயே சமூகரீதியான முயற்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன என்பது இதமாக இருக்கிறது.
சில இடங்களில் பழைய குளங்கள் தூய்மைப்படுத்தப் படுகின்றன என்றால், சில இடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமுத நீர்நிலைகள் இயக்கத்தின்படி சுமார் 70,000 அமுத நீர்நிலைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. மழைக்காலம் வரும் முன்னரே, இந்த நீர்நிலைகளை சுத்தம் செய்யும் வேலை தொடங்கிவிட்டது. இன்று நான் உங்களிடத்திலே சில உத்வேகமான எடுத்துக்காட்டுகளை முன்வைக்க விரும்புகிறேன். மக்களின் பங்களிப்பு வாயிலாக நீர் பராமரிப்பு எந்த அளவுக்குப் பரவலாகிறது என்பதையே இந்த எடுத்துக்காட்டுகள் தெரிவிக்கின்றன.
மழைநீர் அறுவடை
நண்பர்களே, திரிபுராவின் ஜம்புயி மலைகளில் இருக்கும் வாங்கமுன் கிராமம், 3000 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த கிராமம் தீவிரமான நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தது. கோடைக்காலத்தில் கிராமத்தவர்கள் நீருக்காக நீண்டநெடிய தொலைவுகளுக்குப் பயணிக்க வேண்டி இருந்தது. முடிவாக கிராமத்தவர்கள் மழைநீரின் ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாப்பது என்று தீர்மானித்தார்கள். இன்று வாங்கமுன் கிராமத்திலே கிட்டத்தட்ட அனைத்து இல்லங்களிலும் கூரை மீது அமைக்கப்பட்ட மழைநீர் அறுவடை முறை நிறுவப்பட்டிருக்கிறது. கிராமம் என்றைக்கும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக அவதிப்படக்கூடாது என்பதை உறுதிசெய்யும் இந்த நடவடிக்கை, நீர் சேமிப்பிற்கான உத்வேகம்தரும் எடுத்துக்காட்டாகிவிட்டது.
நண்பர்களே, இதைப் போலவே சத்தீஸ்கட்டின் கோரியா மாவட்டத்திலும் கூட ஒரு வித்தியாசமான முன்னெடுப்பைக் காணலாம். இங்கே இருக்கும் விவசாயிகள் ஒரு எளிமையான ஆனால் அருமையான உத்தியைக் கைக்கொண்டார்கள். இவர்கள் தங்களுடைய வயல்வெளிகளில் சின்னச்சின்ன ரீசார்ஜ் அதாவது மறு ஊட்டக் குளங்கள் மற்றும் soak pit – உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, இவை காரணமாக மழைநீர் வயல்களிலேயே தேங்கத் தொடங்கியது, நீர் மெல்லமெல்ல நிலத்தடிக்குள் செல்லத் தொடங்கியது.
இன்று இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள், கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பிரமாதமாகி விட்டது. இதைப் போலவே தெலங்காணாவின் மஞ்சேரியால் மாவட்டத்தின் முதிகுண்டா கிராமத்திலேயும் கூட மக்களனைவரும் இணைந்து நீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள். கிராமத்தின் 400 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் இத்தகைய soak pit -உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, நீர் பராமரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்கள். இதனால் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக ஆனதோடு, மாசடைந்த நீர் காரணமாக ஏற்படும் நோய்களும் குறைந்து போனது.
வெற்றிகரமான மீன் பதப்படுத்தும் தொழில்
எனதருமை நாட்டுமக்களே, நமது மீனவ சகோதர சகோதரிகள், கடல்வீரர்கள் மட்டுமல்ல, தற்சார்பு பாரதத்தின் பலமான அடித்தளங்களும் ஆவார்கள். அவர்கள் பொழுது புலரும் முன்பாகவே கடலின் அலைகளுக்கு இடையே பயணித்து, தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் தேசத்தின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தகைய கடும் உழைப்பாளிகளான மீனவர்களின் வாழ்க்கை இன்று பலவகைகளில் சுலபமானதாக ஆகிக் கொண்டு வருகிறது. துறைமுகங்களின் வளர்ச்சியாகட்டும், மீனவர்களுக்கான காப்புறுதியாகட்டும், இப்படி பல முன்னெடுப்புகள், அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக ஆகி வருகிறது. கடலிலே அவர்களுடைய செயல்பாடுகளை பருவநிலையின் போக்குத் தான் தீர்மானிக்கிறது என்பதை நாமறிவோம்.
இதைப் புரிந்து கொண்டு, தொழில்நுட்பம் வாயிலாகவும் அவர்களுக்கு முழுமையான உதவிகள் புரியப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது மீன்வளத்துறை தன்னிறைவு பெற்றதாக ஆவதோடு மட்டுமல்லாமல், புதியனவற்றை சாதிக்கும் குறிக்கோள் உணர்வு நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது. இன்று மீன்வளம் மற்றும் கடல்பாசித் துறைகளில் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, நமது மீனவ சகோதர சகோதரிகள் தற்சார்பு உடையவர்களாக ஆகி வருகிறார்கள்.
ஒடிஷாவின் சம்பல்பூரைச் சேர்ந்த சுஜாதா பூயான் அவர்களும் கூட இல்லத்தரசியாக இருந்தார் ஆனால் புதியதாக ஏதாவது சாதிக்க வேண்டும், குடும்பத்துக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஆகையால் சில ஆண்டுகள் முன்பாக அவர் ஹீராகுண்ட் நீர்த்தேக்கத்திலே மீன் பண்ணையைத் தொடங்கினார். தொடக்கக்கட்டத்தில் இது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை. பருவநிலை மாற்றம், மீன்களுக்கான உணவு ஏற்பாடு மற்றும் வீட்டின் பொறுப்புகள் ஆகியவற்றை சீராக வைத்திருக்க வேண்டிய சவால்கள் இருந்தன; ஆனால் மனதில் உறுதி இருந்தது. வெறும் 2-3 ஆண்டுகளிலேயே அவர் தனது முயற்சியை ஒரு வளமான வர்த்தகமாக ஆக்கினார். இன்று இவருடைய வெற்றியானது, சமுதாயத்தின் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருக்கிறது.
நண்பர்களே, லட்சத்தீவுகளின் மினிகாயைச் சேர்ந்த ஹாவ்வா குல்ஜார் அவர்களின் கதையானது நமது சகோதர சகோதரிகளின் அற்புதமான உறுதிப்பாட்டினை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. உள்ளபடியே இவர் ஒரு மீன் பதப்படுத்தும் அலகை நடத்தி வந்தார். ஆனால் தன்னிடத்தில் மட்டும் ஒரு நல்ல குளிர்சாதன சேமிப்பு அலகு இருந்தால் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியுமே என்று கருதினார். ஆகையால் குளிர்சாதன சேமிப்பு அலகை அமைக்க முடிவெடுத்தார். இன்று இதுவே இவருடைய பலமாகவும் ஆகியிருக்கிறது. இப்போது சிறப்பான திட்டமிடலோடு வியாபாரத்தைச் செய்து வருகிறார்.
நண்பர்களே, தேசத்திலே இன்று அனைத்து வகைகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தேறி வருகின்றன, கருத்தூக்கம் அளிக்கின்றன. பேல்காவியின் சிவலிங்க சத்தப்பா ஹுத்தார், பாரம்பரியமான முறை விவசாயத்தை விட்டு விலகி ஒரு தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். இதற்காக இவர் ஒரு Pond Farm – குளப் பண்ணையை ஏற்படுத்தினார். இதனைச் செய்ய இவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்போது தனது குளத்திலிருந்து மீன்களை விற்பனை செய்து நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறார். அதே போல கடல்பாசிக்கான தேவையைப் பார்த்து பலர் கடல்பாசி வளர்ப்பிலே ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு அதிக ஆதாயமும் கிடைத்து வருகின்றது. மீண்டுமொரு முறை மீன்வளத்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நமது பொருளாதாரத்தை மேலும் சக்தியடைந்ததாகச் செய்வதில் அவர்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
வித்தியாசமான கின்னஸ் சாதனை
எனதருமை நாட்டுமக்களே, சமுதாயம் தானே முன்னேறும் போது, சின்னச்சின்ன முயற்சிகளும்கூட பெரிய மாற்றங்களுக்கான அடித்தளங்களாகி விடுகின்றன. நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன, இவை எல்லாம் நமக்கு இந்தக் கற்றலைத் தான் அளிக்கின்றன. உத்தர பிரதேசத்தின் வாராணசியில் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சியை தற்போது தான் காண முடிந்தது. அங்கே ஒரே மணி நேரத்திலே 2 இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டு, ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
இந்த முயற்சியின் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இதிலே ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதுதான். மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பணியை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். மக்கள் பங்கெடுப்பின் இதே உணர்வு தான், அன்னையின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் போதும் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் மூலம் நாடெங்கிலும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டன.
சமுதாய விதை வங்கி
நண்பர்களே, நாகாலாந்தின் சிஜாமி கிராமத்திலும் கூட மிகவும் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சி பற்றித் தெரிய வந்திருக்கிறது. சிஜாமி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இணைந்து 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக விதைகளைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த விதைகளை ஒரு சமுதாய விதை வங்கியிலே சேமித்து வைத்திருக்கிறார்கள், இதை கிராமத்துப் பெண்கள் தாம் நடத்துகிறார்கள். இதிலே நெல், கம்பு, சோளம், பருப்பு வகைகள், காய்கறிகள், பலவகையான மூலிகைகள் ஆகியன அடங்கும். இது எப்படிப்பட்ட முயற்சி என்றால் இதிலே ஞானமும் பாதுகாக்கப்படுகிறது, பாரம்பரியமும் உயிர்ப்போடு இருக்கிறது, வரும் தலைமுறையினருக்கு ஒரு பலமான அஸ்திவாரமும் தயாராகிறது.
நண்பர்களே, இன்று உலகிலே நாம் சூழல்மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டுவரும் வேளையிலே, தீர்வுகள் எப்போதும் தொலைவில் இல்லை என்பதையே இப்படிப்பட்ட முயற்சிகள் எல்லாம் தெரிவிக்கின்றன. பல வேளைகளில் நம்முடைய பாரம்பரிய ஞானம் மற்றும் சமூக முயற்சிகள் தாம் பலமான பாதையை நமக்குக் காட்டுகின்றன.
வாய்ப்புகள் அளிக்கும் சூரிய மின்சக்தித் துறை
என் அன்பே வடிவான நாட்டுமக்களே, இன்று தேசத்தின் எந்த ஒரு சிறிய-பெரிய நகருக்குச் சென்றாலும் ஒரு மாற்றத்தை நீங்கள் கண்டிப்பாக கவனிக்கலாம். அதிக எண்ணிக்கையில் வீடுகளின் கூரைகளிலே சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில ஆண்டுகள் முன்பு வரை, இவை ஏதோ சில வீடுகளில் மட்டுமே இருந்தன; ஆனால் இன்றோ பிரதம மந்திரி சூரியசக்தி வீடுகள் திட்டத்தின் தாக்கத்தை தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலும் காணமுடிகிறது.
இந்தத் திட்டம் காரணமாக, குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தின் பாயல் முஞ்ஜ்பாராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவர் சூரிய முன்முயற்சி வாயிலாக சூரியசக்தி தொழில்நுட்பப் பயிற்சியை மேற்கொண்டு, நான்கு மாதங்களில் சோலார் பிவி டெக்னீசியன் – சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர் படிப்பையும் நிறைவு செய்தார். இப்போது இவர் ஒரு திறமைவாய்ந்த சூரியசக்தி தொழில்நுட்ப வல்லுநராக ஆகி வருகிறார். அக்கம்பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களில் சூரியசக்தி கூரைமீதான மின் அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.
நண்பர்களே, மீரட்டின் அருண் குமாரும் கூட தனது பகுதியிலே ஆற்றல் அளிப்பவராக இருக்கிறார். தற்போது தான் தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அருண் குமார் அவர்கள் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்போது மின்சாரத்துக்கு செலுத்தும் கட்டணத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் கூறினார்.
நண்பர்களே, ஜய்பூரின் முரளீதர் அவர்களின் வெற்றியும் கூட இப்படிப்பட்டது தான். முன்பெல்லாம் விவசாயத்திற்கு இவர் டீசல் பம்பைச் சார்ந்திருந்தார், இதனால் ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகிவந்தது. ஆனால் சூரியசக்தி பம்பைப் பொருத்தியவுடன், இவருடைய விவசாய வழிமுறையே மாறிப்போனது. இப்போது எரிபொருள் பற்றிய கவலையே இல்லை, நீர்பாசனம் காலாகாலத்தில் நடக்கிறது, ஆண்டு வருவாயும் அதிகரித்துவிட்டது. மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால், இப்போது இவருடைய குடும்பத்துக்கு தூய்மையான எரிசக்தி கிடைப்பதோடு கூடவே, அவர்கள் சிறப்பான வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.
நண்பர்களே, பிஎம் சூரியசக்தி வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தால் ஆதாயங்கள் வடகிழக்குப் பகுதிகளிலும் கூட கிடைத்து வருகின்றது. திரிபுராவின் ரியாங்க் பழங்குடிகளின் பல கிராமங்களில் மின்சாரம் ஒரு பிரச்சினையாக இருந்தது. இப்போது சூரியசக்தி மினி க்ரிட் வாயிலாக அங்கே வீடுகளில் ஒளிவெள்ளம் இருக்கிறது. அங்கே பொழுது சாய்ந்த பிறகு கூட குழந்தைகளால் படிக்க முடிகிறது. மக்கள் தங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது, கிராமத்தின் சமூக வாழ்க்கை மாறிவிட்டது.
நண்பர்களே, தேசத்தில் சூரியசக்திப் புரட்சிக்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நீங்களும் கூட இந்தப் புரட்சியிலே அங்கம் வகியுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள்.
மனங்களைக் கவர்ந்த மனதின் குரல்
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலுக்காக தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஏராளமான தகவல்கள்-செய்திகள் எனக்குக் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. தொலைவான பகுதிகளில் இருப்போர் கூட எத்தனை ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்கிறார்கள் என்பது இந்தத் தகவல்களாலும் தெரிய வருகிறது. நான் உங்களுடைய ஆலோசனைகளைப் படிக்கும்போது, இது வெறும் ஒரு நிகழ்ச்சியல்ல, இது நம்மனைவரின் ஒரு நேரடி கலந்துரையாடலாக ஆகிவிட்டது என்றே எனக்குப் படுகிறது. உங்களுடைய எண்ணங்கள், உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய அனுபவங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியைத் சிறப்பானதாக ஆக்க தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கின்றன.
நீங்கள் உங்கள் அருகே இருக்கும் உள்ளெழுச்சி அளிக்கும் சம்பவங்களை எப்போதும் போலவே பகிர்ந்து வாருங்கள். உங்களுடைய ஒரு சின்ன முயற்சி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தலாம், முன்னேற்றத்தின் மீதான புதியதொரு நம்பிக்கையை ஒருவரிடம் புகுத்தலாம் – இது தானே வானொலியின் மெய்யான பலம். இவை தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் இருக்கும் மக்களை ஒரே எண்ணம், ஒரே உணர்வு, ஒரே குறிக்கோள் என்ற வகையில் இணைக்கிறது.
அடுத்த மாதம் மீண்டும் நாம் சந்திப்போம், மேலும் சில உள்ளெழுச்சி அளிக்கும் ஆளுமைகளோடு, நம்மை முன்னேற்றக்கூடிய சக்தியளிக்கவல்ல முயற்சிகளோடு நாம் மீண்டும் இணைவோம். அதுவரை, நீங்கள் எல்லோரும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள். பலப்பல நன்றிகள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல் 1ல் பங்குனி உத்திர நாளில் நடைபெறும்.விழாவை முன்னிட்டு மார் 23 ல் கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 மாலை 5 மணியளவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23(இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாள்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நாளாக ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கம் அறைகள், முன்பதிவுக்கு sabarimala.org.in www.onlinetdb.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது கோடை காலம் என்பதால் கடுமையான வெயில் வறுத்தெடுத்து வருகிறது தினமும் 42 டிகிரிக்கு மேல் வெயில் பாட்டில் எடுத்து வருகிறது பம்பை நதியில் போதிய தண்ணீர் இல்லை ஆராட்டு விழா நடைபெறுவதை ஒட்டி பம்பை நதியில் தண்ணீர் சபரி அணையில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏப்1ல் திருக்கல்யாணம் நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் பிறந்த புண்ணிய பூமியாக ஸ்ரீவில்லிபுத்தூர் போற்றப்படுகிறது. இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழ்நாடு அரசின் சின்னமாக விளங்குகிறது.
இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24 ல் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு பூஜைகள் செய்து, தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த திருக்கல்யாண உற்சவ கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் தினமும் காலை ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.இன்று 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1) அன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
அண்மைய வரலாற்றில் இந்திய துணை கண்டத்தில் வாழும் முஸ்லிம்கள் முதல்முறையாக தங்கள் உண்மையான எதிரி யார் என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல். பலரும் வெள்ளை மாளிகையால் – காபீர்களான அமெரிக்கா, இஸ்ரேலால் – இஸ்லாமிய ஈரான் தாக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.
ஆனால் சூழ்நிலை மிகவும் சிக்கலாகி விட்டது. ஈரான் இஸ்ரேலை மட்டும் தாக்கவில்லை அமெரிக்காவின் கூட்டாளிகளான வளைகுடா நாடுகளையும் தாக்குகிறது. வளைகுடா நாடுகளில் பலவும் இஸ்லாமிய நாடுகள் என்பது மட்டுமல்ல அங்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இந்த குழப்பத்திற்கு மூல காரணமாக அமெரிக்கா வெகு தூரத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. சண்டை இப்போது ஷியா, சன்னி என்ற இரண்டு முஸ்லிம் பிரிவினர் இடையே நடப்பதாக மாறிவிட்டது. அந்த இரண்டு பிரிவினரும் பாரம்பரியமாகவே வன்முறையில் நாட்டம் கொண்டவர்கள். இரண்டு பக்கத்திலும், பாதிக்கப்பட்டவர்களும் செத்துப்போனவர்களும் முஸ்லிம்கள்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளும் இந்த மோதலினால் வெவ்வேறு அளவுகளின் பாதிக்கப்பட்டுள்ளன.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு குழப்பமும் ஊசலாட்டமும் ஏற்பட்டுள்ளது. யாருக்கு எதிராக தங்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் எப்படி வெளிப்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படும்போது எல்லாம் அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் ஹிந்துக்கள் மீது அதை காட்டுவார்கள். (துருக்கியில்) ஓட்டமான் கலீபா முறை (கிலாபத்) சரிந்த போது இந்திய முஸ்லிம்கள் நாதியற்ற ஹிந்துக்களை தாக்கினார்கள். ஹிந்துக்களை படுகொலை செய்தனர். ஹிந்து பெண்களை கற்பழித்தனர். வீடுகளையும் உடைமைகளையும் கொளுத்தினர். அந்த வெறியாட்டத்தை மாப்ளா கலவரம் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
அந்த (கிலாபத்) இயக்கத்தின் போது மௌலானா அபுல் கலாம் ஆசாத், 1920ல் , ‘ஹிஜ்ரத் கா பத்வா’ கொடுத்தார். அதாவது இஸ்லாமிய நாடாக இல்லாத இந்தியாவிலிருந்து வெளியேறி இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு குடியேறுவது என்பது அந்த பத்வா. ஆனால் அது நடக்கவில்லை. காரணம் ஆப்கானிஸ்தான் இவர்களை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியது. துணை கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்களில் உண்மையான விசுவாசம் தேச எல்லையை கடந்து இருப்பதை அது வெளிக் கொணர்ந்தது. தேச எல்லைகளைக் கடந்து இஸ்லாமிய அகிலம் என்ற உம்மாவை பின்பற்ற முனைவது பொருளற்றது என்பதும் தெரிய வந்தது.
காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இளைஞர்கள் வீடு வீடாக சென்று ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பொன்னும் பொருளும் சேகரித்தார்கள். இது அன்பின் வெளிப்பாடு என்று போற்றப்படுகிறது. உணர்ச்சிகளை ஓரம் வைத்து விட்டு பார்க்கும் போது நம்மை சங்கடமான கேள்வி முறைத்துப் பார்க்கிறது. இந்த பரிவுணர்ச்சி ஏன் எப்பொழுதும் குறிப்பிட்ட புவியியல் , கருத்தியல் சார்ந்ததாக இருக்கிறது ?
நம் வீட்டிற்கு அருகில் இதுபோன்ற கொடூரங்கள் நிகழும் போது இந்த உத்வேகம் எப்படி காணாமல் போகிறது ? பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது இதுபோன்ற திரள் நிதி திரட்டப்படவில்லையே ? வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்ட போது இப்படி வீடுதோறும் இவர்கள் யாரும் சென்று நிதி திரட்டி அனுப்பவில்லையே, ஏன்?
அண்மையில், தருண் என்ற ஹிந்து தலித் இளைஞன் டில்லி உத்தம் நகரில் ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடியை தூவியதற்காக முஸ்லிம்கள் கும்பலாக கூடி அவனை அடித்தே கொன்றார்கள். இதற்கு எந்த எதிர்ப்பு குரலும் இவர்கள் எழுப்பவில்லையே? இவர்களது வசதியான விவரிப்புக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே அது வலியாக, வேதனையாக தெரியும் இல்லையென்றால் கிடையாதா ?
துணைக் கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மேற்கு ஆசிய இஸ்லாமிய நாடுகளை குறிப்பாக சவுதி அரேபியாவை வழிகாட்டுதலுக்காக, குறிப்பாக மதம் சார்ந்த விஷயங்களில், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சவுதி அரேபியாவின் மன்னராக இருக்கும் மொஹம்மத் பின் சல்மான் (எம் பி எஸ்) 2018ல் அளித்த நேர்காணலில், “வெளிநாடுகளில் உள்ள மசூதி மற்றும் மதரசாக்களில் நாங்கள் முதலீடு (நிதிவுதவி) செய்வது பனிப்போர் காலத்தில் வேர் கொண்டதொரு விஷயம். முஸ்லிம் நாடுகளில் சோவியத் யூனியன் ஊடுருவாமல் தடுக்க சவுதி அரேபியாவின் செல்வாக்கை (வஹாபியிசம்) பயன்படுத்தும்படி நமது கூட்டாளிகள் (அமெரிக்கர்கள்) கேட்டுக்கொண்டனர்”, என்று கூறியுள்ளார்.
நேர்காணலில் எம் பி எஸ் வெளிப்படுத்திய விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அது துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்களின் சிந்தனையை தூண்டியிருக்க வேண்டும். அவர்கள் ‘உண்மையான’ இஸ்லாம் என்று நம்பி பின்பற்றியது அமெரிக்கா தன் புவி அரசியலுக்கு வசதியாக தணிக்கை செய்தது. அமெரிக்காவினால் தூண்டப்பட்ட இந்த இஸ்லாமிய வலை பின்னல் எத்தனை தற்கொலை படையினரை உருவாக்கியது, அவர்கள் மூலம் எவ்வளவு அப்பாவி உயிர்களை பலி வாங்கியது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இஸ்லாத்துக்காக தன்னை வெடிகுண்டாக்கி கொண்டதாக நம்பியவர்களும் இஸ்லாத்துக்காக திரல் படுகொலை செய்வதாக நம்பியவர்களும் – இவர்களில் பலரும் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் – உண்மையில் அமெரிக்காவின் நலனுக்காகவே செத்திருக்கிறார்கள்.
அதே வேளையில், அரபுலகம் மாறிக்கொண்டே வருகிறது. எம் பி எஸ் தலைமையில் சவுதி அரேபியா தன்னுடைய சமூக, பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்க சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு நேர்மாறாக, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பலரும் கடந்த காலத்திலேயே உறைந்து போய் காலனிய மனப்பான்மையை பற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த நாகரிகங்களை, பண்பாடுகளை தாழ்வாக கருதுகிறார்கள். துணைக்கண்டத்தில் உள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு முன்பிருந்த தொன்மையான நாகரீகங்களை மறுதலிப்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயம். இதற்கு தெளிவான எடுத்துக்காட்டு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகள்.
இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் அப்துல் பஷீத் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை சொன்னார். ‘ அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால் நாங்கள் இந்தியாவை, மும்பாய் , தில்லி நகரங்களை தயங்காமல் தாக்குவோம். நாங்கள் அத்துடன் விட மாட்டோம். அதற்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்வோம் ‘, என்று கூறினார். அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனர் துல்சி கப்பார்ட் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டங்களை பற்றிய எச்சரிக்கைக்கு பதிலாக மேற்கண்ட அறிக்கையை அப்துல் பஷீத் வெளியிட்டார்.
இதுபோன்ற பேச்சுக்கள் கடுமையான வெறுப்புணர்வு மற்றும் அறிவீனத்தை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களின் மனதில் இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகங்களை பற்றிய ஆழமான ஒவ்வாமையே இதற்கு காரணமாகும்.
இந்த வேறுபாடு மத கருத்தியலால் மட்டுமே ஏற்பட்டதல்ல. மாறாக பண்பாட்டு ரீதியானது. ஆழமான, அறிவார்ந்த குழப்பம் நிலவுகிறது. அது உறுதியாகவும் இல்லை, விலகியும் இல்லை. அந்த குழப்பம் கருத்தியல் ரீதியில் மட்டுமல்ல நடைமுறையிலும் தெளிவாக வெளிப்படுகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் கங்கை நதியில் படகில் ஒன்றாக கூடி பயணித்ததை யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவர்கள் படகில் மாமிசத்தை சாப்பிட்டதையும் அதன் எச்சங்களை நதியில் துப்பியதையும் தான் கண்டனம் செய்கிறார்கள்.
இந்த விஷயத்தை, அற்ப விஷயம் என புறம் ஒதுக்கும் அரசியல் கட்சிகளின் வேகம் இந்தியாவின் பண்பாடு இலக்கணத்தை தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளதையே காட்டுகிறது.
சில விமர்சகர் இதே வாதத்தின்படி, ஹஸ்தியை கரைப்பது, நதியோரம் உள்ள சுடுகாடுகள், நீர்வாழ் ஊணுண்ணிகளும் பிரச்சனைக்குரியவையா என்று கேட்கிறார்கள்.
கங்கை வெறும் நதி அல்ல. ஹிந்துவின் கண்ணோட்டத்தில் அது புனிதமானது . போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியது. வாழ்க்கையுடனும் மரணத்துடனும் மோக்ஷத்துடனும் தொடர்புடையது. எந்த ‘சட்டம்’ மீறப்பட்டுள்ளது ? என்று சிலர் கேட்கிறார்கள். இதை சற்றே நீட்டித்துப் பார்ப்போம். மசூதிக்கு அருகில் பன்றி இறைச்சி விருந்து நடத்தி, அதை சமூக ஊடகங்களின் யாராவது பகிர்வார்களா? அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறியதல்ல, சட்டத்திற்கு உட்பட்டதே. ஆனால் அது பண்பற்ற செயல். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் உள்நோக்கத்துடன், திட்டமிட்டு மத மோதலை தூண்டிவிடும் செயலாகும்.
இதை அழுத்தமாக கூறும் ஒரு வரலாற்றுச் சான்றைப் பார்ப்போம். 1980 ஆகஸ்ட் 13ம் தேதி முராதாபாத்தில் ஈத் பண்டிகை நேரத்தில் கலவரம் மூண்டது. ஈத்கார் மைதானத்தில் ஒரு பன்றி வழி தவறி அங்கு நுழைந்துவிட்டது. இதனால் மூண்ட கலவரம் எல்லா இடங்களுக்கும் பரவி எண்ணற்ற உயிர் சேதமும் மிகுந்த பொருட் சேதமும் ஏற்பட்டது. அங்கு அமைதி திரும்ப ஒன்பது மாதங்கள் ஆனது.
அந்த வெறியாட்டத்திற்கு காரணமான சம்பவத்தை யாரும் புறமொதுக்கவுமில்லை. நியாயப்படுத்தவுமில்லை. அண்மையில் நடந்த சம்பவத்திற்கு ஏற்பட்ட எதிர்வினையை – இது அற்ப விஷயம் என்று புறம் ஒதுக்குவதை – கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது கடினம். இந்த சமமற்ற அணுகுமுறையின் வேர்கள் ஏதோ சில சம்பவங்கள் என்பதால் அல்ல மாறாக வரலாற்று ரீதியிலான உணர்வினால் ஏற்படுகிறது.
இதை நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வி எஸ் நைபால் ” நம்முடைய உலகளாவிய நாகரீகம்” என்ற கட்டுரையில் கூரிய அவதானிப்புடன் படம் பிடித்து காட்டியுள்ளார்.
” எந்த காலனிய ஆதிக்கத்தையும் விட முற்றிலும் முழுமையான ஆதிக்கம் அரபு மத நம்பிக்கையுடன் வந்த காலனிய ஆதிக்கம் தான் என்பதை நான் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். தோற்கடிக்கப்பட்ட அல்லது காலனியாதிக்கத்திற்கு உள்ளான மக்கள் தங்கள் மீதே அவநம்பிக்கை கொள்ள தொடங்கினர். நான் பேசுகின்ற முஸ்லிம் நாடுகளில் எல்லாம் இந்த அவநம்பிக்கை மதத்தின் வலிமையான ஆதிக்கத்துடன் உள்ளது. அரபு மத நம்பிக்கையின்படி அதற்கு முன்பிருந்த எல்லா நம்பிக்கைகளும் தவறானவை, ஏற்புடையவை அல்ல. அரபு மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர்களின் மனதிலோ சிந்தனையிலோ முகம்மதுவின் காலத்துக்கு முன்பிருந்தவற்றிற்கு இடமே கிடையாது. “
நைபாலின் கூற்றை புறம் தள்ளுவது கடினம். அது உளவியல் ரீதியான பிளவை காட்டுகிறது. முன்பு இருந்த கலாச்சார நினைவுகளில் இருந்து விலகுவதை வலியுறுத்துகிறது. இதுதான் அரபு மத நம்பிக்கையின் ஆதிக்கத்திற்கு உள்ளான பின்பு உருவான சமுதாயங்களின் அடையாளம் . இந்திய துணைக் கண்டத்தில் இந்த உளவியல் பிளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ? அல்லது உம்மா – இஸ்லாமிய அகிலம் – என்ற கானல் கனவை பின் தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுசந்தில் மோதி நிற்பதா ? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக (Commissioning) மேற்கொள்ளப்படும் ‘பாதை அடைப்பு’ (Line Block) காரணமாக, திருநெல்வேலி ரயில் இருந்து புறப்பட்டு செல்லும் பிலாஸ்பூர் ஜாம்நகர் இரு ரயில்கள் செங்கோட்டை புனலூர் வழியாக சிலரயில்கள் பின்வரும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண் 16729 மதுரை சந்திப்பு – புனலூர் விரைவு ரயில்: 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 16730 புனலூர் – மதுரை சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்: 29.03.2026 மற்றும் 30.03.2026 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சில ரயில் சேவைகள் பகுதி ரத்து செய்யப்பட்டது.
ரயில் எண் 22627 திருச்சி சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி சந்திப்பு இன்டர்சிட்டி விரைவு ரயில்: 30.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 22620 திருநெல்வேலி சந்திப்பு – பிலாஸ்பூர் சந்திப்பு விரைவு ரயில்: 29.03.2026 அன்று புறப்படும் இந்த ரயில் சேவை, தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களில் நின்று செல்லாது (நிறுத்தங்கள் தவிர்க்கப்படும்). இந்த ரயில் சேவைக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.
30.03.2026 அன்று தொடங்கும் ரயில் எண். 19577 திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் பயணம் தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் சேவை வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலை, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கு தென்காசி, செங்கோட்டை, புனலூர் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும்.
முழு ரத்து 28.03.2026 அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்(1 நாள்)
ரயில் எண். 16729 மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் 2026 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன (2 நாட்கள்)
ரயில் எண். 56305 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
ரயில் எண். 56310 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
ரயில் எண். 56306 திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் பயணிகள்
ரயில் எண். 56309 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள்
ரயில் எண். 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள்
ரயில் எண். 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள்
ரயில் எண். 66306 கொல்லம் – கன்னியாகுமரி மெமு
ரயில் எண். 66305 கன்னியாகுமரி – கொல்லம் மெமு
ரயில் எண். 16730 புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
ரயில் எண். 56101 நாகர்கோவில் – கொல்லம் பயணிகள்
ரயில் எண். 56102 கொல்லம் – நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகும்.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 13 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030):
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை புறப்படும்.
நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 5, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை நீடித்தது பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029):புறப்படும் நாள்: திங்கட்கிழமை
நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 6, 2026 முதல் ஜூன் 29, 2026 வரையாகும். பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாகும்.
இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை மற்றும் கோவை வழியாகச் செல்லும் இந்த ரயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம்.வளக்கமான கோச் வடிவிலேயே இயங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில் ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில் ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவில் உயர்ந்து, ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை சென்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30%-50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்காவில் 50% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புச் சுமை குறைக்கப்படுவதுடன், நுகர்வோருக்கு நேரடி விலை உயர்வு தாக்கம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி குறிபிட்டுள்ள தகவல்: பிரதமர் மோடி அரசுக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. மற்ற நாடுகளைப் போலவே இந்திய மக்களுக்கான எரிபொருள் விலைகளை கடுமையாக உயர்த்துவது அல்லது சர்வதேச சந்தை மாற்றங்களிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசின் நிதியில் சுமையை ஏற்பது.
ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக அரசின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்திய மக்களை பாதுகாக்க அரசின் நிதியில் சுமையை ஏற்கும் முடிவை மீண்டும் எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் விலை உயரும் நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பெரிய இழப்புகளை (பெட்ரோலுக்கு சுமார் லிட்டருக்கு ₹24 மற்றும் டீசலுக்கு ₹30) குறைக்கும் வகையில், அரசு தனது வரிவசூலில் பெரிய அளவில் இழப்பை ஏற்றுள்ளது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
அகநானூறும் புறநானூறும் ராமனைப் பற்றிச் சொல்லும் செய்திகள்
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆசிரியர், கலைமகள்
வென்வேல் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த, பல்வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70
மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய “அகநானூறு” தொகுப்பில் இருக்கும் 70 வது பாடலின் பொருள் பின்வருமாறு:
பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த “தொன்முதுகோடி” என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் வேத மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வானது இலங்கையில் ராவணனை வெற்றி கொண்டபின் மேற்கொண்டது ஆகும். ராமபிரான் எழுப்பிய வேத ஒலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், ராமரது படைகளும் கொஞ்சம் கூட ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தனவாம்!!
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் அகநானூறில் பாடிய பாடலாகும். இப்பாடலின் பொருள் :
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினார்.புலவரின் உறவினர்கள் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணிய வேண்டியதைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவ வேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.
இது எப்படி இருந்தது? என்று கேட்டால் இராமனுடன் வனவாசம் வந்திருந்த சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு சென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் அந்த அணிகலன்களை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்!
இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.