கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தேசத்துக்கு எதிரான திரிபுவாதங்களை, வரலாற்றை மழுங்கடிக்கும் புளுகுமூட்டைகளைத் திராவிட இயக்கங்களும் அவர்களுக்கு பக்கவாத்தியமாக கம்யூனிஸ இயக்கங்களும் தீவிரமாகக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு.
வந்தே மாதரம் என்பதன் பொருள் தாயை வணங்குகிறேன். நாட்டை, மொழியை, நதியைத் தாய்த் தெய்வமாக வணங்குதல் தமிழகம் உட்பட பாரதம் முழுவதிலுமான பண்பாடு. அதுவே இந்தியப் பண்பாடு எனப்படும் ஹிந்துப் பண்பாடு. இந்தப் பண்பாட்டு ஒற்றுமைதான் பாரத மாதா வந்தனம், தமிழ்த் தாய் வாழ்த்து என நம் முன்னோர்களைச் சிந்திக்க வைத்தது.
ஆனால் தமிழ் என்பதையே சிதைத்து இல்லாத திராவிட இனவாதத்தை முன்னிறுத்தும் பிரிவினைவாத அரசியல் அயோக்கியர்களும், தேசியத்தை மதிக்காமல் சர்வதேசியம் என்ற போர்வையில் அன்னியர்களுக்கு கால்பிடிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் இதர பிற சதிகாரர்களும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அது முஸ்லிம்களுக்கு எதிரானதாம்.
அடே மூடர்களே! தேச விடுதலை வேள்வியில் தியாக தீபங்களை உருவாக்கிய தெய்வீகப் பாடல், முழக்கமடா வந்தே மாதரம்! நீங்கள் அடிக்கடி புரட்டும் வரலாற்றின் பக்கங்களை வழக்கமான புரட்டு இல்லாமல், உண்மையாகவும் நேர்மையாகவும் புரட்டிப் பாருங்கள். அந்தப் புரட்சியின் வீரியம் புலப்படும்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதி, கடந்த 1882-இல் வெளியான ஆனந்த மடம் புதினத்தில் இடம்பெற்ற பாடல் இந்த வந்தே மாதரம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தை ஆண்ட அன்னிய நவாப் கொடூர ஆட்சிக்கு எதிராக இந்த மண்ணின் மைந்தர்களான ஹிந்து சன்யாசிகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட நாவல் ஆனந்த மடம்.
அதேநேரத்தில் மதம் மாற்றப்பட்ட வங்காள முஸ்லிம்களிடையேயும் செல்வாக்குப் பெற்ற பாடல் வந்தே மாதரம். அன்னிய ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களின்போது முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டது, முழங்கப்பட்டது வந்தே மாதரம்.
கடந்த 1905-இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் வைஸ்ராய் கர்ஸான் மத அடிப்படையில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதற்கு எதிராக ஹிந்துக்களோடு முஸ்லிம்களும் ஒற்றுமையாகத் திரண்டு எழுப்பிய கோஷம் வந்தே மாதரம். இந்தக் கடும் எதிர்ப்பின் விளைவாக, பிரிட்டன் மன்னர் ஜார்ஜால் கடந்த 1911-இல் வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்டது.
அத்தகைய சக்தி வாய்ந்த இந்த வந்தே மாதரம் பாடலுக்கு ஜாதுநாத் பட்டாசார்யா என்பவர் மெட்டமைக்க, கடந்த 1882-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாகவி ரவீந்திர நாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டு பொது வாழ்வில் அறிமுகமானது. அப்போது முதல் வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அதற்குச் சில காலம் பின்பு வரையில் முஸ்லிம்களும் பாசத்தோடு முழங்கிய கீதம் வந்தே மாதரம். பாரத மக்களை ஒன்றிணைக்கும் வீரிய மந்திரம் வந்தே மாநரம் என்பதால்தான், நமது மகாகவி சுப்ரமண்ய பாரதியார், இலக்கணச் சுத்தமாக ஒரு முறையும் பின்னர் பாமரர்களுக்கான எளிய நடையில் ஒரு முறையும் என இரு முறை அதனை மொழிபெயர்த்தார்.
ஆனால் 1921-இல் கிலாபத் இயக்கத்துக்கு காந்தியடிகள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரலாற்றில் அறிமுகமான முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல் அதாவது அப்பீஸ்மென்ட் கொள்கைக் கோளாறு காரணமாக முஸ்லிம்களிடையே வந்தே மாதரம் செல்வாக்கு இழந்தது.
அந்தக் கோளாறைச் சரிசெய்ய முயலாமல் அரசியல் சுயநலத்துக்காக கொம்புசீவ முயல்வது நாட்டுக்கு நல்லதல்ல. அதேநேரத்தில் – சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில் செல்வதை இந்த எதிர்ப்பு விரைவுபடுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர் அர்லேகர். அப்போது, ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் ஜோசப் விஜய். அவருடன் அமைச்சர்கள் ஒன்பது பேர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், தமிழ்நாடு முதல் அமைச்சராக இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் பதவி ஏற்றார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு விளையாட்டரங்கத்துக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டார். வழியில் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கருப்பு பேன்ட், கோட் வெள்ளை சட்டை அணிந்து பதவியேற்பு விழாவுக்கு வந்தார் விஜய். விஜய் பதவியேற்பு விழாவில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் சென்னை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் ஆதரவுக் கட்சி எனும் வகையில் ராகுல் பங்கேற்றார்.
13வது முதல் அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை 12 முதல் அமைச்சர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில் 13வது முதல் அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
பி.எஸ். குமாரசாமி ராஜா சி. ராஜகோபாலாசாரியார் கு.காமராஜ் எம். பக்தவத்சலம் சி.என். அண்ணாதுரை மு.கருணாநிதி எம்.ஜி.ராமசந்திரன் வி.என். ஜானகி ஜெ.ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மு.க. ஸ்டாலின் – ஆகிய 12 பேர் இதற்கு முன் முதல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள். என்.ஆர்.நெடுஞ்செழியன் மட்டும் இரண்டு முறை பொறுப்பு முதல் அமைச்சராக இருந்துள்ளார். அந்த வகையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
முதல் கையெழுத்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் (500 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு) உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும், பெண்கள் பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைபொருட்கள் குற்றம் தடுக்க அனைத்து மாநகரங்களில் போதைபொருள் தடுப்பு பிரிவு உருவாக்குதல் என ஆணையில் கையெழுத்திட்டார்.
முதல்வராக முதல் உரை
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் மரபுக்கு மாறாக உரை நிகழ்த்தினார் ஜோசப் விஜய். அவர் பேசியதாவது…
சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என்று இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமை, பசி என நல்லாவே தெரியும். நான் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் பிள்ளை மாதிரியாக, மகன் மாதிரி, அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி தான் உணர்கிறேன். நீங்களை என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் எனக்கு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள்.
அதை எல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விஜயை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் வா பாத்துகிறோம் என்று அவ்வளவு அன்பாக, உறவாக என்னை ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நேரத்தில் இதனை நான் சொல்ல வேண்டும்.
இந்த பயணத்தில் கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டேன். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் ஏற்பட்ட அவமானங்கள், கஷ்டங்களை பொருட்டாக எடுத்து கொள்ளாமல் என்னுடைய வேதனைகளை உங்களுடையதாக நினைத்து நின்றதால், ஜோசப் விஜய் எனும் நான் – அதனை உண்மையாக்கி இருக்கிறீர்கள்.
இதனை என்ன சொல்றது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய உறவுகளே, சொந்தங்களே, நான் ஒன்றும் தேவ தூதன் கிடையாது. நான் இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரண மனிதன் தான். நான் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். ஏது சாத்தியமோ அது மட்டும் தான் செய்வேன்.
சாத்தியமில்லாதவற்றை செய்யமாட்டார்களாக என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும் போது ஏது வந்தாலும் பார்த்து கொள்ளலாம். என்ன வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனது மனதில் இருக்கிறது.
இன்றைக்கு தமிழக அரசு இருக்கும் நிலைமையை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்து விட்டு போய் இருக்கும் போது, கஜானானை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டு போய் இருக்கும் போது, சுமையை ஏத்தி வைத்து விட்டு போய் இருக்கும் போது, அப்படிப்பட்ட சூழலில் தான் நாம் இந்த பொறுப்பை கையில் எடுத்து இருக்கிறோம். உள்ளே போய் பார்த்தால் தான் ஏது எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியும். அதனை எல்லாம் பார்த்து விட்டு உங்களுக்கு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.
யாரைவாவது சந்திக்க வேண்டும் என்றால் முகத்தை மூடி கொண்டு சந்திக்காமல், வெளிப்படையாக, ஒளி மறைவு இல்லாமல் வெளிப்படையாக தான் செய்வேன். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து இருக்கிறீர்கள்.
அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன். நான் சொன்னதை எல்லாம் படிபடியாக நிறைவேற்றுவேன். நீங்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும்.
இது உங்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை கண்டிப்புடன் வைத்து இருப்பேன். போதை பொருள் கலாசாரத்திற்கு தடுக்க இன்றைக்கு இருந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்பேன். நமது பசங்களை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கு, எல்லோருக்கும் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும் அவங்களும் என்னுடைய மக்கள் தான்.
நண்பர்களாக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே, அடிப்படை வசதிகளில் எனது முழு கவனத்தை செலுத்துவேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவிடவும் மாட்டான். ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் எல்லோரும் தவெக அரசில் நல்லாயிருப்போம்; சிறுபான்மையினருக்காக தவெக அரசு துணை நிற்கும். உங்களுக்கு அதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கான முகம் தான் இந்த விஜயின் முகம்.
அதில் 100 சதவீதம் இந்த விஜயை நம்பலாம், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு நன்றி. இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா, நண்பீஸ்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களாலதான் இது நடந்துருக்கு. உங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு எல்லா நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான்.
நம்பிக்கையுடன் இருங்கள், தமிழக வெற்றிக்கழக கட்சியினரை நான் எப்படி மறப்பேன். நீங்கள் இல்லை என்றால் எதுவுமே இல்லை. கட்சியினருக்கு, நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது புதிய தொடக்கம், புதிய சகாப்தம். சமூக நிதியை நிலைநாட்டு அரசு தொடங்கியது, நமது அரசுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி.
ஆதரவளித்த கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விசிக கட்சியினரை வருக..வருக என்று வரவேற்கிறேன். இந்த மாதிரியான நேரத்தில் குரல் கொடுத்ததுக்கு நன்றி. நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும். மீண்டும், மீண்டும் சந்திப்போம். – இவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசினார் விஜய்.
பின்னர் மேடையில் செல்பி வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது, மேடையில் இருந்த மேஜையை உதவியாளர்களுடன் சேர்ந்து தானும் தூக்கி நகர்த்தினார்.
பின்னர் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அரசுக் கோப்புகளை பார்வையிட்டார்.
காங்கிரஸ், விசிக., இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக் ஆகிய திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில், பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ.,க்களின் ஆதரவுக் கடிதங்கள் கிடைத்ததை அடுத்து, நாளை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். 120 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜோசப் விஜய்.
இதை அடுத்து, தமிழகத்தின் 18 வது முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான சி. ஜோசப் விஜய். நாளை காலை 10 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக நாளை காலை 10 மணிக்கு ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜோசப் விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
4வது முறையாக ஆளுநரை சந்தித்த ஜோசப் விஜய்!
ஆட்சியமைப்பதற்குப் போதிய ஆதரவில்லாததால் திணறி வந்தது ஜோசப் விஜய்யின் த.வெ.க., இந் நிலையில், பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, திருமாவளவனின் விசிக.,வும், முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்ததை அடுத்து, ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது.
இதை அடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோர ஜோசப் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன், ஆளுநர் அர்லேகரை சந்திக்க ஜோசப் விஜய் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் ஆளுனர் அர்லேகர் இன்று இரவு 7.10க்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், அதனால் ஜோசப் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்து, தனது கான்வாய் வாகனத்துடன் பாதியிலேயே காரை திருப்பிக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார்.
இந்நிலையில், ஆளுநர் அர்லேக்கரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மாலை 6.30க்கு ஜோசப் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது.
இதை அடுத்து மீண்டும் தன் ஆதரவாளர்கள் சூழ ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதங்களை ஒப்படைத்த ஜோசப் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை முதல்வர் நியமன உத்தரவை வெளியிட்டது. நாளை 10 – ஞாயிறு காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோசப் விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்கின்றனர்.
பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை – ஜோசப் விஜய் நகராட்சி நிர்வாகம் – என் .ஆனந்த் பொதுப்பணித்துறை செங்கோட்டையன் விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை ஆதவ் அர்ஜுனா பள்ளி கல்வித்துறை வெங்கட்ரமணன் மின்சாரத்துறை சிடி நிர்மல் குமார் ஆதி திராவிடர் நலத்துறை ராஜ்மோகன் சிறுபான்மை நலத்துறை முஸ்தபா பத்திரப்பதிவு வணிக துறை அருண் ராஜ்
ஜோசப் விஜய், பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர் அர்லேகர். இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பாஜக., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதை அடுத்து, பாஜக., ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்எம்ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதை அடுத்து பா.ஜ., சார்பில் ஆட்சி செய்யும் மேற்கு வங்க முதல் முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.
55 வயதாகும் சுவேந்து அதிகாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன். வங்காள பிராமணர் வகுப்பைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, அவ்வகையில் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர். தொடக்க காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணமுல் காங்கிரஸில் நடைபெறும் தில்லுமுல்லுகள், தேசியச் சூழலுக்கு எதிராக மம்தா நடந்து கொள்வது போன்றவற்றால் அதில் இருந்து வெளியேறி, 2020 டிசம்பரில் பாஜக.,வில் இணைந்தார். கடந்த 2021 தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து தேசிய அரசியலில் கவனம் பெற்றார்.
தற்போதைய 2026 தேர்தலில், தனது சொந்த தொகுதியான பவானிபூரிலேயே மம்தாவைத் தோற்கடித்துள்ளார் சுவேந்து அதிகாரி. மம்தா இங்கே தோற்றது திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக., மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதியது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பாஜக., தலைமை அலுவலகத்தில், புதிதாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சுவேந்து அதிகாரி, பாஜக., சட்டசபைக் குழு தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின், லோக்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருக்கு, ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் கோல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரிகேட் மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில், மேற்கு வங்கத்தின் ஒன்பதாவது முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பாஜக., மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் அமைச்சராக பதவியேற்றார். அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும், அன்றைய தினமே முதல் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக.,வின் வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு, விழா மேடையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நன்றி தெரிவித்தார். பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, பாஜக., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்கும் விதமாக மேடையில் மண்டியிட்டு வணங்கியபோது, பொதுமக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.
மேடையில் 90 வயது பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காருக்கு மரியாதை செய்த பிரதமர் மோதி:
பிரதமர் நரேந்திர மோதி, பிரிகேட் பரேட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் 90 வயதான மூத்த பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காரின் கால்களைத் தொட்டு வணங்கி நாட்டுக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். அவர் மக்கன்லால் சர்க்காரை அணைத்து, அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை உணர்வுப் பூர்வமாகக் கௌரவித்தார்.
மக்கன்லால் சர்க்கார் தனது வாழ்நாள் முழுவதும் பாஜகவுக்காகப் பாடுபட்டு வந்தவர். அவர் தடியடிகளையும், சிறை வாசத்தையும், மம்தா பானர்ஜியின் குண்டர்களின் பயங்கரவாதத்தையும் சகித்துக்கொண்டார். ஆனாலும் அவர் ஒருபோதும் தலைகுனியவில்லை.
அதிகார போதையில் மூழ்காமல், ஒரு தொண்டரின் கால்களைத் தொடும் தலைவர் இவர். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும் தொண்டர்களைத் தொடர்ந்து நசுக்கி, அடித்து, அச்சுறுத்தி வரும் வேளையில் இது போன்ற செயல்கள் தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. பாஜகவில் தொண்டரே உண்மையான ராஜா என்ற செய்தியை இது வெளிப்படுத்துகிறது. கட்சிக்காக இரவும் பகலும் அனைத்தை யும் தியாகம் செய்பவர்களை மோதியும் பாஜகவும் ஒருபோதும் மறப்பதில்லை. உண்மையான அரசியல் என்பது சேவை யையும் மரியாதையையும் பற்றியது என்பதை மோதி நிரூபித்து வருகிறார்.
மக்கன்லால் சர்க்கார் போன்ற கோடிக் கணக்கான தொண்டர்களின் தியாகங்க ளால்தான் இன்று வங்காளத்தில் தாமரை மலர்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக., அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதை அடுத்து மேற்கு வங்க புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க புதிய முதல்வராக பாஜக.,வின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அவர், மே 9 நாளை பதவி ஏற்கவுள்ளார். முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஒரு தொகுதியில் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மீதமுள்ள 293 தொகுதிகளில் பாஜக., 207 தொகுதிகளைக் கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.
எனினும் இந்தத் தேர்தல் முடிவை ஏற்காத மம்தா, முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்றார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், வழக்கமான நடைமுறைப்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையைக் கலைப்பதாக அறிவித்தார்.
பொதுவாக, சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்த பின்னரோ, பெரும்பான்மை ஆதரவை இழந்த பின்னரோ, முதல்வர் பதவியில் இருக்கும் நபர் தன் ராஜினாமாக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதம் அளிக்க மறுத்ததால், அவர் முறையாக பதவி விலகும் முன்னரே, தாமாகவே சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க புதிய முதல்வர் தேர்வு குறித்து, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பின் இன்று அறிவிக்கப்படும் என்று பாஜக., தெரிவித்தது. அதன்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், சட்டசபைக் கட்சிக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடந்தது. அதில் முதல்வர் யார் என்பது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சட்டசபைக் கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அவர் மே 9 சனிக்கிழமை நாளை பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் நிலையில், இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
விஜய் தலைமையிலான தவெக., கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று தலா 2 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள இந்திய கம்யூ., கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அதே முடிவை எடுத்துள்ள நிலையில், விஜய்க்கு ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிறைவு செய்யும் வகையில் ஆதரவு கூடியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், 118 உறுப்பினர் தேவை என்ற போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுனர் அழைக்கவில்லை.
இதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற, திமுக., கூட்டணியில் இருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக.,விடம் தவெக., சார்பில் ஆதரவு கோரி கடிதம் தரப்பட்டது. நேரிலும் சென்று நிர்வாகிகள் பேசினர்.
இதை அடுத்து, இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக., அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இதற்கான கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் இன்று அதிகாரபூர்வமாக வழங்கியது. இதே முடிவை மார்க்சிஸ்ட் கட்சியும் எடுத்துள்ளது. அதற்கான ஆதரவுக் கடிதத்தை இ-மெயில் மூலம் அக்கட்சி அனுப்பியது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பின்பற்றி திருமாவளவனின் விசிக.,வும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதை அடுத்து, விஜய் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்துடன், இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார்.
திமுக., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளில், தேமுதிக., ஐயுஎம்எல் தவிர மற்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. அதன்படி, திமுக., ஆட்சியை எதிர்த்து போட்டியிட்ட விஜய், திமுக.,வின் கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே தொடர்ந்து ஆட்சியை நடத்தப் போகிறார். ஏற்கெனவே காங்கிரஸ், விஜய்க்காக திமுக., கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தது. காங்கிரஸைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவையும் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
ஆளுநர் விஜய்யிடம் 118க்கு கடிதம் கேட்டுள்ளார். ஏன்?
ஹெச் அருண்பிரபு
1996ல் தேவகவுடாவை அழைத்த கே.ஆர்.நாராயணன் அத்தனை ஆதரவுக் கடிதங்களும் காட்டினால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு என்று சொல்லிவிட்டார்.
உச்சநீதிமன்றம் ஆளுநருக்கோ குடியரசுத் தலைவருக்கோ ஓர் ஆலோசனையாகச் சொல்லலாமே தவிர அவர்களது நடவடிக்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்க முடியாது.
தவெக.,வினர் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் நாங்கள் தனிப்பெரும் கட்சி, எனவே ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம் என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், “காங்கிரஸுடன் கூட்டணி, எங்களுக்கு 112 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு உள்ளது, எனவே ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம்” என்று கேட்டது சிக்கல் ஆகியிருக்கிறது. 112 பேர் ஆதரவு எனில், மீதமுள்ள 6 எம்எல்ஏ.,க்கள் எங்கே என்று கேட்கத்தானே செய்வார் ஆளுனர்.
பொம்மை வழக்கு, பொம்மை தீர்ப்பு என்று பலரும் பேசுகிறார்கள். அதன்படி மெஜாரிட்டியை அவையில் தான் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் அல்ல. அர்லேகர் எப்படி நம்பர் கேட்கலாம் என்கிறார்கள்.
1994ல் வந்த பொம்மை தீர்ப்பு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால் அந்தத் தீர்ப்பு ஏற்கெனவே இருக்கும் அரசுக்குச் சிக்கல் என்றால் பெரும்பான்மை நிரூபிப்பது பற்றியே பேசுகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை தொங்கினால் யார் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொம்மையில் ஒன்றும் சொல்லப்படவில்லை.
1983ல் நீதிபதி சர்க்காரியா கமிஷனும் 2007ல் நீதிபதி புஞ்சி கமிஷனும் தொங்கு சட்டமன்றம் வந்தால் ஆளுனர் புதிய அரசு பதவியேற்புக்குப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர்.
சொல்லியிருக்கும் வரிசைக் கிரமப்படி ஆளுநர் கட்சிகளை அழைப்பது சிறப்பு என்று இரு கமிட்டிகளும் பரிந்துரைத்துள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி: கூட்டுச் சேர்ரந்து தேர்தலில் போட்டியிட்டு தேவையான எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சிகளை ஒன்றாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
தனிப் பெரும் கட்சி: தேவையான ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்திம் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி: தேர்தலுக்குப் பிறகு ஒத்துப்போய் அரசில் பங்குபெற ஒப்புக்கொண்ட அத்தனை கட்சிகளையும் (சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட) ஆதரவுக்கான விவரங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
வெளியிலிருந்து ஆதரவு: தேர்தலுக்குப் பிறகு ஒத்துப்போய் அரசில் பங்குபெற ஒப்புக்கொண்ட, வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட அத்தனை கட்சிகளையும், (சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட) ஆதரவுக்கான விவரங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இதுதான் ஆளுநர் பின்பற்ற வேண்டிய நடைமுறை. சட்டசபையில் எண்ணிக்கையை நிரூபித்தால் போதும் என்று பொம்மை தீர்ப்பில் சொல்லி விட்டார்கள் என்று ஒற்றை வரியைப் பிடித்துக்கொண்டு “ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
தமிழக அரசியல், இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறது. அதற்குக் காரணமானவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். “தனிப்பெரும் கட்சிக்குத்தான் ஆட்சி அமைப்பதில் முன்னுரிமை” என்பது ஜனநாயக மரபு. அப்படித்தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முதல் முன்னுரிமை அடிப்படையில் அழைக்கப்பட்டிருக்கக் கூடும் ஆனால், விஜய் தரப்பு செய்த ஒரே ஒரு ‘நிர்வாகத் தவறு’ தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக., நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.
தன் 107 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 பேரைச் சேர்த்து மொத்தம் 112 பேர் எனச் சொல்லி, கூட்டணியாக அவர் கணக்குக் காட்டியது, அவராகவே தனது பலவீனத்தை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிட்டது. “உங்களிடம் 118 பேர் இல்லை என்பது உங்கள் கடிதத்திலேயே தெரிகிறது, பிறகு எப்படி உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்?” என்ற ஆளுநரின் கேள்விக்கு விஜய்யிடம் பதில் இல்லை.
ஒருவேளை விஜய் இவ்வாறு ஆதரவுக் கடிதமே தராமல் இருந்திருந்தால் கூட, ஆளுநர் அவரைத் தனிப்பெரும் கட்சித் தலைவராகப் பார்த்திருப்பார். ஆனால், விஜய் தானாகவே முன்வந்து கூட்டணிக் கணக்கைக் காட்டியதால், “ஏன் 118 வரவில்லை?” என்ற கேள்வியை ஆளுநர் எழுப்ப வழிவகை செய்துவிட்டார். 112 என்பது ஆட்சியமைக்கத் தேவையான 118-ஐ விட 6 இடங்கள் குறைவு என்பதால், “முழு பெரும்பான்மை இல்லாத ஒருவரை எப்படி அழைப்பது?” என்பது ஆளுநர் தரப்பு வாதமாக மாறிவிட்டது.
இதற்கு திடீரென்று எஸ்.ஆர். பொம்மை வழக்கைக் காரணம் கூறி சிலர் ஆளுநருக்கு எதிராக கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பொம்மை வழக்கின் தீர்ர்பு என்பது, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்துவது குறித்துப் பேசுவது. பொம்மை (1994) வழக்கின் தீர்ப்பு, “ஒரு அரசின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது, சட்டசபையில்தான் (Floor Test) தீர்மானிக்க வேண்டும்” என்கிறது.
இந்த பொம்மை வழக்கின் தீர்ப்பை வைத்துதான் விஜய் தரப்பு நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டது. ஆனால், பொம்மை வழக்கின் சாராம்சம், ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் பெரும்பான்மையைப் பற்றியது. அல்லது தனிப் பெரும் கட்சி பற்றியது. ஆனால், புதிய அரசு அமையாத நிலையில், ஒருவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்னரே அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பது ஆளுநருக்கு ஆவண பூர்வமாகத் தெரிந்துவிட்டால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழைக்க மறுக்கலாம். இங்கே அந்த ஆவணம், விஜய் தரப்பே அளித்த கூட்டணி ஆதரவுக் கடிதம்.
அவ்வகையில், விஜய் நீதிமன்றம் சென்றால், “நான் தனிப்பெரும் கட்சியின் தலைவர், என்னை ஏன் அழைக்கவில்லை?” எனக் கேட்கலாம். ஆனால், ஆளுநர் தரப்பு விஜய்யின் 112 பேர் ஆதரவு கடிதத்தைக் காட்டி, “மனுதாரரே தனக்கு 118 பேர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். நிலையற்ற ஒரு அரசை அமைக்க அனுமதிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்” என்று வாதிடலாம்.
கர்நாடகா, கோவா மாநில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி, ஒரு கூட்டணிக்குத் தெளிவான பெரும்பான்மை இருக்கும்போது, தனிப்பெரும் கட்சியை விட அந்தக் கூட்டணிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு. இங்கே விஜய் காட்டிய 112 என்ற எண்ணிக்கை, அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதால், ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது.
இப்போது விஜய்க்கு இருக்கும் ஒரே வழி, வி.சி.க, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ போன்ற கட்சிகளிடம் இருந்து அந்த மீதமுள்ள 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, புதிய கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிப்பதுதான். ஆனால், விசிக., ஐயுஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தாங்கள் திமுக., எடுக்கும் முடிவைப் பின்பற்றுவதாகக் கூறின. எனினும் கம்யூனிஸ்ட்களும், விடுதலைச் சிறுத்தைகளும் தவெக., தரப்பு தங்களிடம் ஆதரவு கேட்டு பேசியதாகவும் விரைவில் முடிவு எடுப்பதாகவும் கூறின. அதே நேரம், ஆளுநரை கைகாட்டி, விஜய் அரசமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும், அவர் இதைத் தடுக்கக் கூடாது என்று குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இதைச் சொல்லும் நீங்கள், விஜய்க்கு காங்கிரஸைப் போல் ஆதரவுக் கடிதத்தை அளிக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள் மக்கள்.
இப்படி பரபரப்பான சூழலில், விஜய்க்கு வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு கொடுத்து ஆளுநர் அவரிடம் மீண்டும் மீண்டும் அழைத்து விளக்கம் கேட்கிறார், கொடுக்கிறார். எனினும், ஆளுநரை வில்லனாக்கி, உண்மையில் வில்லன்களாகத் திகழும் விசிக., கம்யூனிஸ்ட்கள் போன்றவை மக்கள் பார்வையில் இருந்து தப்பிக்கவே பார்க்கின்றன.
ஒரு மாநிலத்தில் கவர்னருக்கு உரிய அதிகாரங்களும் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்
ஆளுநர் (Governor) என்றால் ஆட்சி செய்பவர் என்றுஸபொருள் கொள்ள வேண்டும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, மத்திய அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
கவர்னராக ஒருவர் நியமனம் பெற 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது.5 ஆண்டுகள் பதவி வைக்கலாம். குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் இன்னொரு மாநிலத்திற்கு பொறுப்பு கவுனராகவும் செயல்பட முடியும். பொதுவாக எந்த மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படுகிறாரோ அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது! அதேபோல ஆதாயம் தரக்கூடிய எந்த ஒரு பதவியும் வகிக்க கூடாது!
குடியரசுத் தலைவரின் விருப்பப்படி ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கவர்னர் நீக்கப்படவும் வாய்ப்புண்டு. ஒரு கவர்னர் தான் பதவி வகிக்கும் மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் பொழுது அல்லது தன் சொந்த (பிறந்த) மாநிலத்திற்குச் செல்லும் பொழுது உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) மாநிலத்தின் பெயரளவு நிர்வாகத் தலைவராகவும், மத்திய அரசின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார். அவர் சட்டப் பேரவை நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், முதலமைச்சரை நியமித்தல் மற்றும் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்ய வேண்டும் .
மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநரின் பெயரிலேயே மேற்கொள்ள வேண்டும். மாநிலத் தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை நியமிப்பது ஆளுநரின் கடமை.ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தராகச்(Chancellor) செயல்படுவார்
சட்டப்பேரவையைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் கலைத்தல் (முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில்) ஆகியவற்றையும் கவர்னர் தான் செய்ய முடியும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அல்லது சில மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைப்பது (Article 200, 201). மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை (Budget) பேரவையில் தாக்கல் செய்ய வைப்பது மற்றும் ஆளுநரின் பரிந்துரையின்றி மானியக் கோரிக்கைகளைச் சட்டப்பேரவையில் முன்வைக்க முடியாது.
மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே!ஆளுநர் பணமசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில், எந்தக் கட்சி ஆட்சியமைக்கலாம் என்பதை முடிவெடுத்தல், மற்றும் மாநில அரசைக் கலைக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தல் (Article 356) போன்ற சிறப்பு அதிகாரங்களும் கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (Majority) கிடைக்காத நிலையில், அது தொங்கு சட்டசபை (Hung Assembly) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 163 மற்றும் 164-ன்படி, ஆளுநர் தனது சூழ்நிலை விருப்புரிமை அதிகாரத்தைப் (Situational Discretion) பயன்படுத்தி, ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்(தனியாக ஒரு கட்சியை மெஜாரிட்டி பெறாத நிலையில்) எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அப்படி ஆட்சி அமைக்க கூடியவர்கள் இரண்டு வாரத்திற்குள் தங்களுடைய பெரும்பான்மையை,நம்பகத் தன்மையை சட்டமன்றத்தில்(Floor Test) காட்ட வேண்டும்.
எண்ணிக்கையில் அதிகம் ஒரு கட்சிக்கு உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களால் ஆட்சி அமைக்க வேண்டிய உறுப்பினர்களை பெற முடியாது என்று கவர்னர் எண்ணினால் முழுமையான பலத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு பின்னரே ஆட்சி அமைக்க அழைப்பார். கவர்னரின் விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது!
தனிப்பட்ட முறையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சி அமைக்காமல் போனால் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து தங்களிடம் மெஜாரிட்டி பலம் இருப்பதை நிரூபித்தால் அவரையும் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கலாம். இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கவர்னருக்கு கட்டளை இட முடியாது! அதுபோன்ற நிலையில் சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசித்து கவர்னர் ஒரு முடிவை எடுப்பார்!
இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலை தொங்கு சட்டமன்ற நிலை தான்! எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் அறுதிப் பெரும்பான்மை இல்லை. விஜய் கட்சியான த.வெ.கவிற்கு 108 உறுப்பினர்கள் தான் உள்ளார்கள். ஆட்சி கட்டிலில் ஏற 118 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.10 உறுப்பினர்கள் ஆதரவை வெளி கட்சியினரிடமிருந்து பெற வேண்டிய நிலை தான் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக (Post-poll alliance) இணைந்து பெரும்பான்மை இடங்களை (எ.கா., தமிழ்நாட்டில் 118-க்கும் அதிகமான இடங்கள்) நிரூபிக்க விஜய் முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். கூட்டணி சர்க்கார் என்று அவர் சொன்னதால் அந்த கூட்டணிக்கு உரிய நபர்கள் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது!!
நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test): ஆட்சி அமைக்க அழைக்கப்படுபவர், சட்டசபையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க (Floor Test) ஆளுநர் உத்தரவிடுவார். ஒருவேளை யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி (President’s Rule) நடைமுறைக்கு வரும்.எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவானதாகக் கருதி, பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைக்கப்படும்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக., ஆட்சி அமைக்கிறது. அஸ்ஸாமில், பாஜக., ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான பாஜக. அங்கம் வகிக்கும் தேஜ.,கூட்டணி அரசு தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவி ஏற்கிறது. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் ஆணைய தரவுகளில் இருந்து, இரவு 8 மணி நிலவரப்படி,
அஸ்ஸாம் :
மொத்த இடங்கள் – 126 ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 64
ஆளும் பாஜக., கூட்டணியில், பாஜக., தனித்து 81 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. எனவே 82 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. போடோலாண்ட் மக்கள் கட்சி (பிஓபிஎஃப்) 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று 4ல் முன்னிலை பெற்று 19 இடங்களைப் பெற்றது.
அசாம் கண பரிஷத் (ஏஜிபி) 10 இடங்களில் வெற்றி பெற்றது. ஏஐயுடிஎஃப், ரெய்ஜர் தள் தலா இரு இடங்களிலும் திரிணமுல் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது.
இதை அடுத்து, அஸ்ஸாமில் பாஜக.,வின் ஆட்சி தொடர்கிறது.
கேரளம்:
மொத்த இடங்கள் – 140 ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 71
கேரளத்தில் காங்கிரஸ் – 63, சிபிஎம் – 26, ஐயுஎம்எல் – 22 சிபிஐ – 8 கேரள காங்கிரஸ் – 7 ஆர்எஸ்பி – 3 , பாஜக., – 3 சுயேட்சைகள் – 4 மற்ற கட்சிகள் 4 என வெற்றி பெற்றன.
பாஜக.,வின்கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும், வி முரளிதரன் கழக்கூட்டம் தொகுதியிலும், பிபி கோபகுமார் சத்தனூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
இதை அடுத்து கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
புதுச்சேரி :
மொத்த இடங்கள் – 30 ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 16
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் – 11 இடங்களில் வெற்றி பெற்று ஓர் இடத்தில் முன்னிலை பெற்று 12 இடங்களைப் பெற்றது. பாஜக., 4 அதிமுக., – 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் வரிசையில், திமுக., – 5, தவெக., 2, காங்கிரஸ் – 1, லட்சிய ஜனநாயக கட்சி – 1, நேயம் மக்கள் கழகம் – 1 சுயேச்சைகள் -3 என வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே புதுவையில் என்.ரங்கசாமி தலைமையிலான ஆளும் தேஜகூ., ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மேற்கு வங்கம் :
மொத்த இடங்கள் – 294 ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 148
மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் 79 இடங்களைப் பெற்று தோல்வியைச் சந்தித்தது. கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
பாஜக., 176 இடங்களில் வெற்றி பெற்றும், 32 இடங்களில் முன்னிலை பெற்றும் 208 இடங்களை வசமாக்கியது. திரிணமுல் காங்கிரஸ் 61 இடங்களில் வென்றும் 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் 79 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ், ஏஜேயுபி தலா 2 இடங்களிலும், சிபிஎம், ஏஐஎஸ்எஃப் கட்சிகள் தலா 1 இடத்தையும் பெற்றன.
இதன் மூலம் முதல் முறையாக பாஜக., மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.
தமிழ் நாடு:
மொத்த இடங்கள் – 234 ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 118
தமிழ்நாட்டில் ஆளும் திமுக., பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சியின் எதிர்த்தரப்பாக செயல்பட்டு இதுவரை மாறி மாறி ஆட்சி செய்து வந்த அதிமுக.,வும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதிதாக தோற்றம் பெற்று முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், எவரும் எதிர்பாராத வகையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும், முன்னிலை பெற்றும் வருகிறது. அக்கட்சி தமிழக அரசியல் களத்தில் தனிப்பெரும் கட்சியாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.
தவெக., – 95 இடங்களில் வென்றும், 12 இடங்களில் முன்னிலை பெற்றும் 107 இடங்களைப் பெற்றுள்ளது. திமுக., 51 இடங்களில் வென்றும் 9ல் முன்னிலை பெற்றும் 60 இடங்களைப் பெற்றது. அதிமுக., 42ல் வென்றும், 5ல் முன்னிலை பெற்றும் 47 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் – 5, பாமக.,- 4, ஐயுஎம்எல்-2, சிபிஐ -2 சிபிஎம் -2 விசிக-2, பாஜக.,-1, தேமுதிக-1, அமமுக-1 ஆகிய இடங்களைப் பெற்றன.
இதனால் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாத நிலையில், தொங்கு சட்டசபை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தவெக., ஆட்சியமைக்க அழைக்கப்படக்கூடும்.