'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- “ஏப்ரல் 4 அன்று பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்!”
2) அதே பாலிமர் டிவியில் கீழே ஸ்க்ரோல்:- “ஏப்ரல் 3 பாண்டிச்சேரி பிரசாரத்துக்கு வரும் மோடி – சென்னையில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து – வேட்பாளர்கள், தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யப் போகிறார்.
3) அனைவரும் எதிர்பார்த்தபடி மத்திய பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை.
4) கோவையில் இருந்து அண்ணாமலை பாண்டிச்சேரி சென்று அங்கே ரோட் ஷோ – மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம்.
5) பிரசாரத்தின் இடையில் சென்னை வரச் சொல்லி அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அழைப்பு. அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை வருகை.
6) கமலாலயத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் பியூஷ் கோயல் கலந்தாலோசனை.
7) சில நாள்களில் பாஜக பட்டியல் வெளியாகும் – என்று பியூஷ் கோயல் அறிவிப்பு.
JUST I AM CONNECTING THE DOTS. நல்ல முடிவு வரும் என்று நம்புவோமாக.
1984 ல் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. பல பாஜக அபிமானிகள் காங்கிரஸ் மாதிரி பாஜக என்று வளரும் என்று ஏங்கினார்கள்.
பாஜக வளர்ந்தது – மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் மாதிரி மத்திய அதிகாரத்திலும் – பாரதம் முழுக்கப் பரவலாக ஆட்சி அதிகாரத்திலும் பாஜக வளரவேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுப் பிரார்த்தித்து இருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடம் மொட்டையாகக் காங்கிரஸ் மாதிரி பாஜக வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததன் பலன்…
இப்போது பாருங்கள்… கட்சிக்குள் உள் விளையாட்டு, தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல், வேட்பாளர் தேர்வில் இழுபறி… இப்படிப் பலவற்றிலும் காங்கிரஸ் மாதிரியே வளர்ந்து தொலைத்து இருக்கிறது!
சத்திய மூர்த்தி பவனுக்கும் கமலாலயத்துக்கும் என்ன வித்தியாசம்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி… ஒருவர் கட்சி போட்டியிட ஏதுவாக ஆண்டுக் கணக்கில் உழைத்து களத்தை தயார் செய்திருப்பார் – அவர் மீது உள்ள அசூயையில் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்து விடுவது…
மேலிடப் பார்வையாளரிடம் தங்கள் பார்வையில் என்ன படுகிறதோ அதையே கட்சியின் அடிமட்ட RANK AND FILE பார்வைபோல BRIEFING செய்வது… தனக்கு வேண்டாதவரைப் போட்டுக் கொடுப்பது, அல்லது அவருக்கு வாய்ப்பான தொகுதியை ஃப்யூஸ் பிடுங்கி விடுவது…
இப்படி பல விஷயங்களில் சத்திய மூர்த்தி பவனும் – கமலாலயமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றே ஒரு அரசியல் பார்வையாளனாகக் கருத வேண்டியுள்ளது. என்ன சத்தியமூர்த்தி பவன் என்றால் சேர்கள் பறப்பு, சட்டை கிழிப்பு, வேட்டி பறிப்பு என்றெல்லாம் நடக்கும் என்பார்கள்.
திமுக 1989 ல் காங்கிரஸ் பற்றி போஸ்டரே ஒட்டியது:- “ஊருக்கு ஊரு இருபது கோஷ்டி – ஊழியர் கூட்டத்தில் கிழியுது வேஷ்டி!”
கமலாலயத்தில் மரியாதையாக ஒருவரை ஒருவர் ஜி ஜி என்றழைத்து கும்பிட்டுக் கொள்வார்கள்!
— தவ்லீன் சிங் — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
இந்திய இடதுசாரிகளும் போரும்!
என்னைப் போலவே நீங்களும் துயர் மிகுந்த, நம்பிக்கை அற்ற, ஏழை இந்தியாவில் – அப்போது ராகுல் காந்தியின் பாட்டி பிரதமராக இருந்தார் – வளர்ந்து இருந்தால் நீங்களும் இடதுசாரிகள், போலி தாராளவாதிகள் மீது சந்தேகப்படக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அவர்களது மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை என்ற உணர்வெழுச்சிகளுக்கு பின் உள்ள அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை பிரித்தறிய கற்றுக் கொண்டிருப்பீர்கள்.
ஸ்டேட்ஸ்மேன் நாளேட்டில் நிருபராக நான் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பத்திரிக்கை தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அது உண்மையிலேயே நம் வரலாற்றில் மிகவும் இருண்ட, பயங்கரமான அத்தியாயமாகும். ஆனால் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனின் ஆதரவும் இருந்தது.
இந்திய இடதுசாரிகளின் கருத்தியலை அமெரிக்க எதிர்ப்புதான் வரையறை செய்தது. இது ஏன் என்று அப்போதே நான் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தேன். சீனாவிலும் சோவியத் ரஷ்யாவிலும் அவர்களது வழிபாட்டு நாயகர்களாக இருந்தவர்கள் செய்த கொடூரமான குற்றங்களை இவர்கள் எப்போதுமே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மாவோவும் ஸ்டாலினும் இந்திய இடதுசாரிகளின் நாயகர்களாகவே இருக்கிறார்கள், இன்றும் கூட.
தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்பும் போது இந்திய இடதுசாரிகள் பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதை பார்த்தேன். மேற்கத்திய நாடுகளை வெறுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதேபோல் தாங்கள் நோயுறும் போது சிகிச்சைக்காக மேற்கத்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளையே தேர்வு செய்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது என்றானது.
கடந்த வாரங்களில் தில்லி, மும்பாயின் பொதுவெளியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ‘ஆக்கிரமிப்பு’ செய்து வருவதாக இடதுசாரிகளின் குரல் மிக உரக்க எழுந்தது. போர் தொடங்கியவுடன் அப்துல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது அவர்களது குரல் ‘மதசார்பற்ற’ இடதுசாரிகளின் ஆதரவு குரலுடன் மேலும் வலுப்பெற்றுள்ளது. நமக்கு பக்கத்தில் தாலிபான்களின் இழிவான செயல்களையோ அல்லது அயதுல்லாக்களின் தீய செயல்களையோ கண்டனம் செய்யாதவர்கள் காசாவில் நடந்ததற்காக இஸ்ரேலை வீறிட்டு கண்டனம் செய்கிறார்கள். எல்லாவிதமான கொடூரங்களும் அரசியல் ஒடுக்குமுறையும் ஒரே மாதிரியாக கண்டனம் செய்யப்படாதது ஏன் ? என்ற குழப்பம் எனக்குள்ளது.
இந்திய இடதுசாரிகள், ஜிகாத்திகளின் குரலோடு குடும்ப ஆட்சியில் பல தசாப்தங்களாக அரசு பணியில் இருந்த ‘மதசார்பற்ற’ அதிகாரிகளின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது. அந்த அதிகாரிகள் பலரும் என்னைப் போன்றே உயர்குடியில் உரிமைகளோடு பிறந்து ஒட்டுமொத்தமாக ஆளும் வெளியை ஆக்கிரமித்து இருந்தவர்கள். இந்த அதிகாரிகள் போர் குறித்து மோடி அரசின் ‘மௌனத்தை’ வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். மோடி தனது மௌனத்தின் மூலம் உலக நாடுகள் இந்தியாவை ‘அலட்சியப்படுத்தும்’ இடத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்களால் தாக்கி வருகிறார்கள். ஈரான் மீது நடந்துள்ள தாக்குதலை பிரதமர் வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டுமென அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில், இந்திய அரசு மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சிகரமான சாலையில் ஆச்சரியப் படத்தக்க வேகத்தில் பயணிப்பதாகவே, நான் கருதுகிறேன். நாம் எந்த பக்கத்திலும் சேரக்கூடாது. நாம் சேர வேண்டிய ஒரே பக்கம் இந்திய நலன் தான். அமெரிக்கா, இஸ்ரேலை நாம் பகைத்துக் கொள்வது நம்முடைய நலனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு செய்தால் அது நம்முடைய பழைய பகையாளியான சீனாவின் பக்கத்தில் நம்மை சேர்த்துவிடும். நிச்சயமாக அது இந்திய நலனுக்கு எதிரானது. ரஷ்யா, வடகொரியா போன்றவர்கள் நம் அணிக்கு தேவையில்லாதவர்கள்.
நடுநிலை என்ற நம்முடைய கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். இரு தரப்பினரும் நம்முடன் பேசக்கூடிய நிலை வேண்டும். ஈரான் நம்மை நம்புகிறது. அதனால் தான் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளிக்கிறது.
என்னுடைய குழந்தைப் பருவம் ஒரு ராணுவ நகரத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக்கொண்டே இருப்பதாக இருந்தது. நான் சந்தித்த வீரர்கள் பலரும் போர் என்பதை மோசமான தேர்வாகவே கருதியதை தெரிந்து கொண்டேன். எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்த்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்தப் போர் எந்தத் தரப்புக்கும் தெளிவான வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லை.
இந்தப் போரின் முக்கியமான சாதனை எண்ணெய் விலையை உயர்த்தியதுதான். உலகில் நாம் இருக்கும் பகுதியில் உள்ள பொருளாதாரங்களை அது பாதித்துள்ளது. கடந்த வாரம் சமையல் எரிவாயு உருளைக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தது பீதி எங்கும் பரவுவதையே காட்டியது.
ஜனாதிபதி ட்ரம்ப் போரில் ‘வெற்றி’ பெற்று விட்டதாக அறிவித்துள்ளார். எனவே மிக விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நாம் நம்பலாம். சில விமர்சகர்கள் மோடி அமைதி ஏற்பட சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம், மோடியின் ‘மௌனம்’ இந்திய நலன்களை பாதிக்கவில்லை. மாறாக உதவியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
போரின் வெற்றி , தோல்விக்கு அப்பால் ஒரு பிரச்னை தீர்க்கப்படாமலேயே இருக்கப் போகிறது. ஈரானை சர்வதேச பயங்கரவாத முன்னெடுப்பாளராக மாற்றிய ஜிகாத் கருத்தியல். அதுதான் ஈரானிய பெண்கள் மீதான வன்முறையை, அவர்களின் உரிமைகளை நசுக்குவதில் மிகப்பெரிய – உலகில் இரண்டாவது பெரிய நாடாக – மாற்றியது. முதலிடம் தாலிபான்களுக்கு. கடந்த வாரத்துடன் ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, பணிக்கு செல்லும், தங்கள் சொந்த வாழ்வை தாங்களே நிர்மாணிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, சுருக்கமாக சொன்னால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு 1636 நாட்கள் ஆகிறது. கணவன்மார்கள் மனைவிகளின் எலும்பு உடையாமல் அவர்களை அடிக்க சட்டப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு மிக அருகில் உள்ள அண்டை நாட்டில் நடக்கிறது.
இடதுசாரி எழுத்தாளர்களும் அரசியல்வாதிகள் மனித உரிமை போராளிகளும் பெண்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற பழங்குடித்தனத்திற்கு எதிராக எப்போது பேசப் போகிறார்கள் ?
என் கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். அவர்கள் ஒரு போதும் பேசப் போவதில்லை. அவர்களது கோபமும் கண்ணீரும், உலகில் எது நடந்தாலும், அமெரிக்காவை பழி சுமத்த வழி கிடைத்தால் மட்டுமே வெளிப்படும். இது போன்ற அர்த்தமற்ற அமெரிக்க எதிர்ப்பு சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர்கள் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் உள்ளன.
இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.
தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 1 நாளை பாம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா விமரிசையாக நடைபெறும்.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடைபெறும். திருவிழா நிறைவாக நாளை ஏப்ரல் 1ம் தேதி பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறும்.
இதையொட்டி காலை 8.30 மணிக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடத்தி பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சாமி எழுந்தருளி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஆராட்டு ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் காலை 10.45 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்து தொடர்ந்து 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு களபம் சார்த்தி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஆராட்டு நடைபெறும்.
ஆராட்டு சடங்குகளுக்கு பின்னர் புத்தாடை அணிவிக்கப்பட்ட அய்யப்ப சாமி பக்தர்களின் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலிப்பார். பிற்பகல் 3 மணிக்கு சாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டு இந்த ஊர்வலம் சன்னிதானம் வந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர்.
தற்போது சபரிமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பம்பை நதியில் குறிப்பிடத்தக்க அளவு நீர்வரத்து உள்ளது.
பக்தர்களுக்கு எச்சரிக்கை: சமீபத்தில் கேரளாவில் நிலவிய “அமீபா மூளை காய்ச்சல்” அச்சுறுத்தல் காரணமாக, பம்பையில் நீராடும் போது மூக்கை இரண்டு விரல்களால் மூடிக்கொண்டு நீராடுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் பம்பை நதி வறண்டு விடாமல் இருக்க, அருகிலுள்ள சபரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது.
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான உள் எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சியை தாண்டி பொது விவாதமாக மாறியுள்ளது.
தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் திடுக்கிடும் குற்றச்சாட்டு, தி.மு.க.வையும் கலங்கடித்திருக்கிறது.
தேர்தல் வந்தாலே தமிழகத்தில் காங்கிரஸ் சுறுசுறுப்பாகும். தலைமைக்கு எதிரான அதிருப்தி, கூட்டணியை விமர்சிக்கும் பேச்சுகள், கோஷ்டி பூசல் – உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாக வெடிக்கும் காட்சிகள் புதிதல்ல. இந்த முறையும் அது விதிவிலக்கல்ல.
“காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை; கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பது வேதனையாக உள்ளது; இந்த அணுகுமுறை தொடர்ந்தால் காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கொந்தளித்திருக்கிறார் ஜோதிமணி. இந்த குற்றச்சாட்டே, காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியிருக்கும் சிக்கலின் தீவிரத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதிலிருந்து, அவரைச் சுற்றிய எதிர்ப்பு அடங்கவில்லை. தி.மு.க. ஆதரவாளர் என்ற அடையாளம், காங்கிரசின் தனித்துவத்தை மங்கச் செய்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே பின்னணியில், கடந்த சில மாதங்களில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முன்னணி தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், உள் முரண்பாட்டை வெளிப்படையாக காட்டியுள்ளன. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பு, காங்கிரசை தாண்டி தி.மு.க.வையும் கடுப்பேற்றியுள்ளது.
ஏகப்பட்ட அழுத்தங்களுக்குப் பிறகு கூடுதல் தொகுதிகளை பெற்றிருந்தாலும், இப்போது வெடித்திருக்கிறது தொகுதி தேர்வு முறை. “காங்கிரசின் நலனை தி.மு.க.விடம் சமரசம் செய்து விற்றுத் திண்பதா” என்று ஜோதிமணி எழுப்பிய கேள்வி, பணம் முக்கிய பாத்திரம் வகித்ததா என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது. தேர்தல் நேரத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் இந்த போக்கு, அரசியலில் இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.
நேர்மை, கட்சிப் பணி, மக்கள் சேவை ஆகியவற்றை விடுத்து, தலைமைக்கு இணக்கமும் தனிப்பட்ட நலன்களும் அடிப்படையாக கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறுமானால், இது எந்த வகையான அரசியல்? காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பும், தலைமையின் முடிவுகளும் நேருக்கு நேர் மோதும் நிலையில், காங்கிரஸ் அடித்தள அமைப்பாக செயல்படுகிறதா அல்லது தலைமை சார்ந்த அரசியலாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி வலுப்பெறுகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் மௌனமும் கவனிக்கத்தக்கது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னரும், அதை உறுதிப்படுத்தும் அரசியல் சைகைகள் வெளிப்படாதது குழப்பத்தை அதிகரிக்கிறது. தமிழகம் பக்கம் அவரது ஈடுபாடு குறைவாக இருப்பது, தேர்தல் களத்தில் காங்கிரஸ் எந்த அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
இதன் பின்னணியில், இப்போது எழுந்திருக்கும் ஜோதிமணி போன்றோரின் எதிர்ப்பு சத்தங்கள் வெறும் உள் மோதலாக அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தையும் எதிர்கால திசையையும் தீர்மானிக்கும் கட்டமாக இந்த தேர்தல் மாறியுள்ளது. இதன் தீர்ப்பு தான் காங்கிரஸின் அடுத்த பாதையை தீர்மானிக்கும்.
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக வாக்கு அறுவடையை மையப்படுத்தியதாக உள்ளன. அதில் குற்றம் சொல்லவில்லை என்றாலும், கடந்த கால வாக்குறுதிகளின் நிலையை பார்க்கும் போது இப்போது சொல்லியிருப்பது ஏமாற்று வேலையாக தோன்றுகிறது.
“ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளவோ அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ளவோ வழங்கப்படும்” என்பது தி.மு.க.வின் வாக்குறுதி.
இது பெண்களின் வாக்குகளை இலக்கு வைக்கும் முயற்சி. இந்த திட்டம் காகிதத்தில் கவர்ச்சியாக தோன்றினாலும், நடைமுறையில் இது குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையையே ஏற்படுத்தும். அதே ரூ.8,000-ஐ நேரடியாக பணமாக வழங்கினால், குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான செலவுகளுக்கு பயன்படுத்துவார்களே; ஏன் கட்டாயமாக குறிப்பிட்ட பொருட்களை வாங்க சொல்லப்படுகிறார்கள் என்ற விவாதமும் உருவாகிறது.
கூப்பன் இல்லத்தரசிகளுக்காக என்றாலும், அதன் பின்னணியில் வரும் செலவுச் சுமை குடும்பத் தலைவர்கள் மீதே விழும். ரூ.8,000 கூப்பனை வைத்து வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. வாங்கலாம் என கூறப்படுகிறதே தவிர, இப்போதைய சந்தை விலையில் இவற்றில் ஒன்றை வாங்கவே ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை செலவாகிறது. அதனால், கூப்பன் ஒரு சிறிய பங்காக மட்டுமே இருக்கும்; மீதி தொகையை மக்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், இந்த கூப்பன் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட விற்பனையகங்களுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், மக்களின் தேர்வு சுதந்திரம் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. “ரூ.8,000 குடுத்து ரூ.20,000 செலவு செய்ய வைக்கிற திட்டமா இது?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
“ரூ.8,000 கிடைக்கிறது” என்ற மனநிலை, தேவையில்லாத வாங்குதல்களையும் தூண்டும் அபாயம் உள்ளது. ஏற்கனவே நல்ல நிலையில் பயன்படுத்தி வரும் பொருட்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, தேவையற்ற செலவுகள் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இது உண்மையில் மக்கள் நலத்திட்டமா, அல்லது வீட்டு மின் சாதன சந்தையை ஊக்குவிக்கும் மறைமுக முயற்சியா என்ற விவாதமாகிறது.
இதற்கு மேலாக, அரசு எந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வது என்பது பற்றிய தெளிவும் இல்லாதது மற்றொரு கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கூப்பன் கொடுக்கும் போது ஸ்டார் (*) போட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லிவிட்டால் என்ன ஆகும்? தி.மு.க. வாக்குறுதியை எப்படி நம்ப முடியும்? ஒப்பந்தங்கள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்குமா, அல்லது தரம் மற்றும் விலை தொடர்பான விஷயங்களில் சந்தேகங்கள் எழுமா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
கூப்பன் தருவதற்காக, தரம் குறைந்த நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்தால், மக்கள் கூடுதல் பணம் செலவழித்தும் தரமற்ற பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகும். எனவே எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று விரிவான திட்டத்துடன் வாக்குறுதியை கொடுங்கள். முடிந்தால் எப்போதிலிருந்து செயல்படுத்தப் போகிறோம் என “தேதி போட்டு சொல்லுங்க!”
ஏனெனில், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன? “தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000” வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், “அனைவருக்கும் அல்ல… தகுதியுள்ள மகளிர்க்கு மட்டும்” என்ற வரையறை கொண்டு வரப்பட்டது. மகளிர்க்கு எப்படி தகுதி நிர்ணயம் செய்தார்கள் என்பது இப்போது வரை தெளிவாக இல்லை. ‘அனைவருக்கும்’ என்று சொன்ன சொல்லை நிறைவேற்றவில்லை.
மேலும், 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பல இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும், சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
மேலும், இந்த ரூ.1,000 உரிமைத்தொகை ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படவில்லை; 27 மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டது. அதுவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த காலகட்டத்தில், “வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும்?” என்ற கேள்விக்கு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “தேர்தல் அறிக்கையில் தேதி போட்டுக் கொடுத்தோமா?” என்று பதிலளித்தது நினைவில் கொள்ளத்தக்கது.
இப்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரூ.1,000 உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என்று புதிய வாக்குறுதி அளிக்கப்படுகிறது. இதனால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜூன் மாதத்திலிருந்து ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது மீண்டும் தகுதி என்ற அடிப்படையில் வடிகட்டல் செய்யப்படுமா? தற்போது ரூ.1,000 பெறுபவர்களில் சிலருக்கே ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது இந்தத் திட்டமும் 2029 தேர்தல் காலம் வரை தாமதப்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
முடிவாக, ரூ.8,000 கூப்பன் அல்லது ரூ.2,000 உரிமைத்தொகை என எந்தத் திட்டமாக இருந்தாலும், வாக்குறுதி மட்டும் போதாது; அது எப்போது நடைமுறைக்கு வரும் என்ற செயல் திட்டம் பற்றிய தெளிவே தி.மு.க.வின் நம்பிக்கையை நிர்ணயிக்கும். இதுபோன்ற இலவசங்களையெல்லாம் கடந்து, வாக்காளர்களும் பொதுமக்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
ஒருமுறை வழங்கப் போகிற ரூ.8,000 கூப்பனுக்காகவே உங்கள் வாக்கை செலுத்தப் போகிறீர்களா? அல்லது தொலைநோக்கு சிந்தனை பார்வையுடன் தேர்தலை அணுகப் போகிறீர்களா? “ரூ.8,000 சலுகை என்பது, சாதாரணமாகவே கடைகளிலும் இ-காமர்ஸிலும் கிடைக்கும் ஒன்றே! அதற்காகவே வாக்கு செலுத்த வேண்டுமா?”
சனாதன தர்மத்தில் நூல்களின் செழிப்பு அதிகம். மிகப் பெரிய அறிவுப் பெட்டகம் நமக்குள்ளது. முனிவர்கள் தம் தவ வலிமையால் கேட்டுணர்ந்த, ஆழ்ந்த, நுட்பமான மறை பொருளைக் கொண்ட கம்பீரமான வேத மந்திரங்களின் குவியல் அது. அடிப்படை அறிவின் சாராம்சம். அவை சாட்சாத் சப்த வடிவான இறைவன். ஒலி வடிவில் வெளிப்பட்ட இறைசக்தி. அவற்றின் பொருளை உலகியல் மொழியறிவு கொண்டோ, சமுதாயக் கோணத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்திற்கும், சாமானியரின் பார்வைக்கும் அப்பாற்பட்ட விஸ்வ ரகசியங்கள் பல அவற்றில் பொதிந்துள்ளன. அவற்றை மீண்டும் முனிவர்களே நமக்கு அளிக்க வேண்டும். அதனால்தான் புராணம், இதிகாசம், தர்ம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என்று பல வகைகளில் அவை தவ முனிவர்களின் வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டன.
அவற்றில் சில விஷயங்கள் நவீன காலத்திற்குப் பொருத்தமற்றவை என்றும், சமூகத்தில் பகைமையை வளர்ப்பவை என்றும், எவ்விதப் பொருளுமற்றவை என்றும் அவற்றை வக்கிரப் பார்வையோடு பார்த்து வாதிட்டவர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவற்றின் மேல் மதிப்பு கொண்டவர்களிடம் கூட அவற்றின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும் மனப்போக்கு காணப்படுகிறது. இவை உண்மைதானா என்று ஐயுறுவதாகத் தோன்றுகிறது. அதனால் புராணங்கள், தர்ம சாத்திரங்கள் போன்றவை ஆதாரமற்றவை என்றும், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டவை என்றும் முத்திரை குத்தும் கூற்றுகளையும் நாம் எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்குக் கட்டுப்பட்ட சிலர், தம் விருப்பத்திற்கு இணங்காத எதையும் பயனற்றது என்றும் ஆதாரமற்றது என்றும் வகைப்படுத்துகின்றனர். ஒத்திசைவு இன்மையாலும், ஆழமான உட்கருத்துகளை உள்வாங்க இயலாமல் போவதாலும், தாம் உருவாக்கிக் கொண்ட இறுக்கமான கட்டமைப்பிலிருந்து வெளியில் வரத் தயங்கும் மனப்பான்மையாலும் உருவான கருத்துகளே இவை.
இக்காரணத்தாலேயே நம் தர்ம நூல்களை ஏளனம் செய்வதற்கு, தம்மைத் தாமே அறிவுஜீவிகள் என்று அறிவித்துக் கொள்ளும் சிலர் சமுதாயத்தில் உலவுகின்றனர். ஆனால் முனிவர்கள் எழுதிய தொன்மையான நூல்களின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்கு, அவை இயற்றப்பட்ட காலத்தில் வழக்கத்திலிருந்த கலைச்சொற்களையும் மருபு சார்ந்த மொழி பற்றிய புரிதலையும் கொண்டிருப்பது இன்றியமையாதது. ஒரு சொல் உணர்த்தக் கூடிய பன்முகப் பொருள்களை இனங்கண்டு அறியும் திறன் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, “இந்திரன் (கோ) பசுக்களால் பாறையைத் தாக்கினான்” என்ற மத்திரத்திற்கு, “வேதத்தில் பசுக் கொலை உள்ளது” என்று பொருள் கூறியவர்கள் உள்ளனர். ஆனால் ‘கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒளிக்கதிர்’ என்று ‘வேத நிருக்தம்’ கூறும் பொருளும் உண்டு. சூரியனுக்கும் இந்திரன் என்ற பெயர் உண்டு. சூரியனின் ஒளிக்கதிர்களின் வலிமையால் பாறை சிதறும் நிகழ்வை விவரிக்கும் மந்திரத்திற்குப் புரிதல் இன்மையால், பசுவதை என்று பொருள் கூறுவது பெரும் பிழை அல்லவா?
ஆகவே, சாதாரண மத நூலாக வேதங்களைப் பார்க்கக் கூடாது. அதேபோல் தெய்வங்களைக் குறித்த சில கதைகள் குறியீட்டு மொழியிலும், வேத மொழியிலும் கூறப்பட்டுள்ளன. இப்பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்த மாற்றங்களைச் சித்திரிக்கும் பலவகைக் குறியீட்டுக் கதைகள் உள்ளன. வானியல் அறிவியலின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இவற்றின் உண்மையான உட்பொருள் தெளிவாகப் புரியும்.
இது வெறும் சமூக அம்சங்களை மட்டும் உற்று நோக்கும் விஷயம் அல்ல. ஜோதிட விஞ்ஞானம், யோக விஞ்ஞானம், தத்துவ விஞ்ஞானம், மந்திர விஞ்ஞானம், யக்ஞ விஞ்ஞானம், மருத்துவக் கல்வி, உடற்கூறியல், வேதங்களின் பொருளை உணர்ததும் விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகள் கதைகளாகவும் போதனைகளாகவும், கவிதை வடிவிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் போது, அவற்றில் மறைத்துள்ள உட்பொருள் பற்றிய தெளிவு மேலும் அதிகமாகும்.
அதனால்தான், சிக்ஷா (உச்சரிப்பு, ஒலியியல்), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (யாப்பு), நிருக்தம் (சொற்பிறப்பியல்), ஜோதிடம் (வானியல், ஜோதிடம்), கல்பம் (சடங்குகள்) என்ற ஆறு (வேதங்களின் துணை நூல்கள்) வேதாங்க சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் வேதங்களின் பொருளை உண்மையாக அறிவார்கள் என்று சம்பிரதாய அறிஞர்கள் கூறுவர்.
சிலர் வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று துணையாக சனாதன தர்மமாக, நித்திய நூதனமாக பல யுகங்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறன்றன.
மனிதர்களின் உயிரியல் பண்புகள், விருப்பங்கள், உடல் நிலைகள், உள்ளத்தின் எண்ணங்கள், உணர்வுகள் போன்றவை ஒன்று போல் இருக்காது. இக்காரணத்தால் பல்வேறு இயல்புள்ளவர்களுக்கு ஏற்ப தனித்துவமான ஆன்மீகப் பாதைகளை முனிவர்களின் நூல்களான ஞான இலக்கியங்கள் வழங்கியுள்ளன.
தந்திர நூல்களின் அற்புதங்கள், யோக சாஸ்திரங்களில் ஹட யோகம், லய யோகம், நாத யோகம், ராஜ யோகம், மந்திர யோகம் என்று பலவேறு பிரிவுகள், ஸ்வரம் (இசை ஒலி) , பிரச்னம் (கேள்வி ஜோதிடம்), ஜோதிஷம் (வானியல் ஜோதிடம்) போன்ற அறிவியல்கள், அறநெறி ஒழுக்கத்தை போதிக்கும் நூலகள், தனிமனித ஆளுமையை மலரச் செய்யும் அறிவுரைகள் போன்றவை அவற்றில் ஏராளமாக உள்ளன. எண்ணற்ற கவிஞர்களும், உரையாசிரியர்களும், அறிஞர்களும் அவற்றை மேலும் செழுமையாக்கி விரிவுபடுத்தினர்.
எந்த நிலையில் இருப்பவரானாலும் அவரவருக்குப் பிடித்த வகையில் ஆன்மீக சாதனை செய்து, பக்குவத்தை அடையும் பலவேறு பாதைகளை நம் முன்னோர் அளித்துள்ளனர். அவற்றைக் கடைப்பிடித்து உய்வடைந்தவர் மிகப்பலர் உள்ளனர்.
“இத்தனை உயர்ந்த ஆன்மீக நிலைத் தத்துவத்தை போதிக்கும் நீங்கள் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்பமான விக்ரக வழிபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்?” என்று சிலர் சுவாமி விவேகானந்தரைக் கேட்டபோது, அவர் “எந்த வழிமுறையைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாதையைப் பின்பற்றுபவரின் தரத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் அற்பம் என்று புறக்கணிக்கும் விக்ரக வழிபாட்டு முறையில் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய தத்துவ ஞானிகள் உள்ளனர். அந்த வகையில் அந்த பாதையும் உயர்ந்ததே” என்றார்.
விக்ரகங்களின் வடிவமைப்பு, அளவுகள், பூஜை விதிமுறைகள் இவையனைத்தும் சிறந்த நுட்பமான அறிவியல் சாத்திரங்களாக விரிந்துள்ளன. அவற்றை ஆராயாமல் வெறும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து விமர்சிப்பது சரியல்ல.
அதனால் சம்பிரதாயமாக வரும் நம் முனிவர்கள் அளித்த ஞானத்தை, எண்ணற்ற மகான்களால் போற்றப்பட்ட கருத்துகளை அவசரப்பட்டு புறக்கணிப்பதோ தவறுதலாக விமர்சிப்பதோ சரியல்ல. நம் அனைத்து பாரம்பரிய வழிமுறைகளும் உயர்ந்தவையே. ஒரு குறிப்பிட்ட பாதைக்குக் கட்டுப்பட்டு பின்பற்றி மகிழ்வதும் நல்லதே. ஆனால் மீதியிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதோ இழிவுபடுத்துவதோ பொருந்தாது. ஒரு தவளைக்குத் தன் கிணற்றின் ஆழம் மட்டுமே தெரியும்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஒருவர் தனக்குத் தற்போது ஏற்புடையதல்ல என்று தோன்றிய கருத்தையோ, வழிமுறையையோ கடைபிடிக்காமல் ஒதுக்கி வைக்க நினைக்கலாம். நம் தொன்மையான நூல்களில் முக்காலத்திற்கும் பொருத்தமான நன்மை பயக்கும் விஷயங்களும் கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளலாம். எந்தக் காலத்திற்கும் எந்த மனிதருக்கும் பயன்படும் நல்ல கருத்துகள் செழுமையாக நம் நூல்களில் உள்ளன. காலத்திற்கேற்ப அப்போதைக்கப்போது மனித இனத்தைத் தொடர்ந்து வழிநடத்தும் மாபெரும் இலக்கியக் களஞ்சியமும், பாரம்பரிய ஒழுக்க விதிகளும் உறுதியாக நிலைத்து நின்கின்றன.
நமக்கு பிடிக்காதவற்றை நிராகரித்தாலும், பிடித்தவை பல எஞ்சியிருக்கும். மொத்தத்தில் அபாரமான இலக்கியச் செல்வத்தில் அத்தனை விதமான பயன்களையும் அற்புதமாக நிறைவேற்றும் காலத்தால் அழியாத கருத்துகள் பல உள்ளன. அவற்றை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். திறந்த மனத்தோடு, கபடமின்றி, நேர்மையாக அவற்றை ஆராய வேண்டும். அழகாக கருத்தொருமை காண வேண்டும். அதன் மூலம் வாழ்வின் முழுமையை சாதிக்க வேண்டும்.
(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஏப்ரல் 2026)
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில் இன்று 29.03.26 ஞாயிறு கிழமை மதியம் ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் திருமஞ்சனம் திவ்ய சேவை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வருகிற ஏப். 1-ஆம் தேதி ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் வைபவத்துடன் விழா நிகழ்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
மார்ச் 24 செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி விழா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
வருகிற ஏப். 1-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
‘மனதின் குரல் (132ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 29.03.2026 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
வளைகுடா நாடுகளுக்கு நன்றி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. கடந்த காலத்தில் உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலகட்டத்திற்கு பிரச்சினைகளை சந்தித்து வந்தது என்பது நம் நினைவினில் இன்னும் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று என்ற சங்கடத்தை நாம் கடந்துவந்த பிறகு உலகம் புதிய முறையிலே வளர்ச்சிப் பாதையிலே முன்னேறிச் செல்லும் என்பது நம்மனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், உலகின் பல்வேறு பாகங்களில் தொடர்ந்து போரும், பிணக்குமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. தற்போது நமது அண்டைப்புறத்திலே ஒரு மாதக்காலமாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. நமது இலட்சக்கணக்கான குடும்பங்களின் நெருங்கிய உறவுகள் இந்த நாடுகளில் வசிக்கின்றார்கள், குறிப்பாக பாரசீக வளைகுடா நாடுகளிலே பணியாற்றி வருகின்றார்கள். அங்கே இருக்கின்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்துவரும் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
பாரதம் உறுதியுடன் எதிர்கொள்கிறது
நண்பர்களே, இப்போது போர் நடைபெற்றுவரும் பகுதி, நமது எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்துவரும் பெரிய மையமாகும். இதன் காரணமாக உலகெங்கிலும் பெட்ரோல்-டீசல் தொடர்பாக சங்கடமான சூழ்நிலை நிலவி வருகிறது. நமது உலகளாவிய தொடர்புகள், பல்வேறு நாடுகள் நமக்கு அளித்துவரும் உதவிகள் மற்றும் கடந்த பத்தாண்டிலே நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கும் வல்லமை ஆகியவற்றின் காரணமாக பாரதம் இந்தச் சூழ்நிலைகளை உறுதியோடு எதிர்கொண்டு வருகின்றது.
புரளிகளை நம்பாதீர்கள்
நண்பர்களே, கண்டிப்பாக இது சவாலான காலகட்டம் தான் என்பதில் ஐயமில்லை. நாமனைவரும் ஒன்றாய் இணைந்து இந்த சவாலான காலகட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். அரசியல் செய்வோர் இந்த விஷயம் குறித்தும்கூட அப்படிச் செய்யக்கூடாது. இது தேசத்தின் 140 கோடி நாட்டுமக்களின் நலன்களோடு தொடர்புடையது, இதிலே சுயநலத்திற்கோ, அரசியலுக்கோ எந்த இடமும் கிடையாது. இந்தச் சூழலில் யாரெல்லாம் புரளிகளைப் பரப்புகிறார்களோ, அவர்கள் தேசத்திற்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்துகிறார்கள். விழிப்போடு இருங்கள், புரளிகள் உங்களை பாதிக்க அனுமதியாதீர்கள், அரசு தரப்பிலிருந்து உங்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் தகவல்களை மட்டுமே நம்புங்கள், அவற்றின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன். தேசத்தின் 140 கோடி மக்களின் வல்லமையால் எப்படி நாம் கடந்தகாலச் சங்கடங்களை முறியடித்தோமோ, அதே போல இந்த முறையும் கூட நாமனைவரும் இணைந்து, இந்தக் கடினமான சூழ்நிலையையும், மிகவும் சிறப்பான வகையிலே எதிர்கொண்டு மீண்டு வருவோம் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.
ஞானபாரதம் செயலி
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் சக்தி இங்கே இருக்கும் கோடானுகோடி மக்களிடம் பொதிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த முயற்சி பற்றியே நான் இன்று மனதின் குரலில் தெரிவிக்க இருக்கிறேன், இது நாட்டுமக்களின் பங்களிப்பு உணர்வினைப் பிரதிபலிக்கிறது. ஞான பாரதம் ஆய்வு என்ற இந்த முயற்சி நமது பெருமைக்குரிய கலாச்சாரம் மற்றும் வளமையான மரபோடு தொடர்புடைய ஒன்று. நாடெங்கிலும் இருக்கும் manuscripts அதாவது கையெழுத்துப் பிரதிகள் பற்றிய தகவல்களை ஒன்றுதிரட்டுவதுதான் இதன் நோக்கம். இந்த ஆய்வோடு இணைத்துக் கொள்ள ஒருவழி எது என்றால் அது ஞான பாரதம் செயலி தான்.
உங்களிடத்திலே ஏதும் கையெழுத்துப் பிரதி இருக்கிறதா அல்லது அதுபற்றிய தகவல் இருக்கிறதா, அப்படி என்றால் அதன் புகைப்படத்தை ஞானபாரதம் செயலியில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பதிவோடு தொடர்புடைய தகவலும் சரிபார்க்கவும்படுகின்றன. ஆயிரக்கணக்கான கையெழுத்துப்படிகளை மக்கள் இதுவரை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, அருணாச்சல் பிரதேசத்தின் நாம்சாயியைச் சேர்ந்த சாஓ நந்திசிந்த் லோகாங்க் அவர்கள், தாய் எழுத்தில் இருக்கும் கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார். அமிர்தசரசிலே பாய் அமித் சிங் ராணா, குருமுகீ எழுத்திலான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார். இது நமது மகத்தான சீக்கியப் பாரம்பரியம் மற்றும் பஞ்சாபி மொழியோடு தொடர்புடைய கையெழுத்துப் படிகளாகும். பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை சில அமைப்பினர் அளித்தார்கள். இராஜஸ்தானத்தின் அபய் ஜெயின் நூலகம், செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் மிகவும் பழமையான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதே போல லத்தாக்கைச் சேர்ந்த ஹேமிஸ் மடாலயமானது, திபத்திலே இருக்கும் மிகவும் மதிப்புமிக்க கையெழுத்துப்படிகள் பற்றிய தகவல்களை அளித்தது. இங்கே நான் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே அளித்திருக்கிறேன். இந்த ஆய்வு, ஜூன் மாத இடைப்பகுதி வரை நடைபெற இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடைய விஷயங்களை முன்னெடுத்துச் செல்வோம், பகிர்வோம் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசில்… இளைஞர்களின் ஆலோசனைகள் !
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதம் உலகின் மிகவும் இளமையான தேசம். தேசத்தின் இளையசக்தி தேச நிர்மாணத்தோடு தொடர்பு கொள்ளும் போது, மிகப்பெரிய உதவி கிடைக்கிறது. தேச நிர்மாணத்தின் இந்தப்பெரிய கடமையை ஆற்றுவதில் பெரும்பங்கு ஆற்றிவருவது என்னுடைய இளைய பாரதம் அதாவது ’மை பாரத்’ அமைப்பு. இந்த அமைப்பு, தேசத்தின் இளைஞர்களை பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளோடு இணைத்து வருகிறது. மை பாரத் வாயிலாக பட்ஜட் க்வஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு தற்போது தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாடெங்கிலும் இருக்கும் இளைஞர்களை, பட்ஜெட் செயல்பாடு மற்றும் கொள்கை வடிவமைப்போடு இணைப்பது தான் இதன் நோக்கம். இதோடு தொடர்புடைய வினாவிடைப் போட்டியிலே நாடெங்கிலுமிருந்தும் 12 இலட்சம் இளைஞர்கள் பங்கெடுத்தார்கள். இதற்குப் பிறகு சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பங்கெடுப்பாளர்கள் கட்டுரைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவற்றிலே சில கட்டுரைகளைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நாட்டின் என்னுடைய இளைய நண்பர்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த அளவுக்குத் தங்களுடைய பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருக்கிறார்கள் என்பது இவற்றிலிருந்து எனக்குத் தெரிய வந்தது.
தெலங்கானாவின் சூர்யாபேட்டிலிருந்து கோட்லா ரகுவீர் ரெட்டி, உத்தர பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த சௌரப் பேஸ்வார், பிஹாரின் கோபால்கஞ்ஜைச் சேர்ந்த சுமித் குமார் ஆகியோர், விவசாயிகள் நலனோடு தொடர்புடைய விஷயம் குறித்து எழுதி இருந்தார்கள். பஞ்சாபின் மொஹாலியைச் சேர்ந்த ஆஞ்சல், ஒடிஷாவின் கேந்த்ரபாடாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் ரத் ஆகியோர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்துத் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஹரியாணாவின் யமுனாநகரிலிருந்து பிரதம் பரார், பசுமையான, தூய்மையான பாரதமே வழமையான பாரதத்தை எட்டத் தேவையான வழி என்று எழுதியிருக்கிறார், இதிலிருந்து அவருடைய ஆழமான சிந்தனாசக்தி வெளிப்படுகிறது.
ஊரகப்பகுதிகளில் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காண அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தில்லியின் சங்க் குப்தா அளித்திருக்கும் ஆலோசனை. நமது இளைய நண்பர்கள், திறன் மேம்பாடு மற்றும் வணிகம் புரிவதில் சுலபத்தன்மை குறித்தும்கூட தம்முடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுவரும் அனைத்து இளைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தக் கருத்துக்கள் தாம் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல முக்கியமான தேவைகள்.
மகிழ்ச்சியான கிரிக்கெட் சீஸன்
என் கனிவான நாட்டுமக்களே, நாடெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் விசிறிகளுக்கு இந்த மாதம் உற்சாகம்-ஊக்கம் நிறைந்த மாதம். பாரதம் டி 20 உலகக்கோப்பை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிப் பதிவை ஏற்படுத்திய போது நாடெங்கிலும் ஒரே சந்தோஷமயம். நமது அணியின் பிரமாதமான இந்த வெற்றி நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுத்துகிறது. கடந்த மாதத்தின் நிறைவுப்பகுதியில் கர்நாடகத்தின் ஹுப்ளியில் மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி நடந்தது, இந்தப் போட்டியில் வென்ற ஜம்மு கஷ்மீரத்தின் கிரிக்கெட் அணி, ரஞ்ஜிக்கோப்பையைத் தன்னுடையதாக்கிக் கொண்டது.
மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீண்ட காலகட்டக் காத்திருப்புக்குப் பிறகு இந்த அணி தனது முதல் ரஞ்ஜிக் கோப்பை வெற்றி என்ற பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாறு காணாத இந்த வெற்றி, விளையாட்டு வீரர்களின் பல்லாண்டுக்கால தொடர் முயற்சிகளின் விளைவுதான். அணியின் தலைவர் பாரஸ் டோக்ரா, மிகச் சிறப்பாகத் தம் திறமைகளை வெளிப்படுத்தினார். தனது தலைமையால் இந்த வெற்றிக்கு அவர் முக்கியமான பங்களிப்பு அளித்தார். இன்று தேசத்திலே கஷ்மீரைச் சேர்ந்த இளைய பந்து வீச்சாளரான ஆகிப் நபியின் வெளிப்பாடு பற்றித் தான் பேச்சாக இருக்கிறது, இவர் இந்த ரஞ்ஜி காலத்தில் 60 விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். இந்த வெற்றியால் அணியின் வீரர்கள்-பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல், ஜம்மு கஷ்மீரத்தின் மக்களும் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் மைதானத்தின் இந்த அருமையான செயல்பாட்டிற்குப் பிறகு அங்கே இருக்கும் இளைஞர்களிடம் விளையாட்டுக்கள் மீதான உற்சாகம், மேலும் அதிகரித்துவிட்டது. வரவிருக்கின்ற காலத்திலே, பல இளைஞர்கள் விளையாட்டுக்களில் முனைப்பு காட்ட இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக இருக்கும். ஜம்மு கஷ்மீரத்தின் மக்களிடத்திலே விளையாட்டுக்கள் தொடர்பாக அலாதியான ஈர்ப்புணர்வு இருந்து வந்திருக்கிறது. இப்போது பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளைக்கூட நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கேலோ இண்டியா பனிக்கால விளையாட்டுப் போட்டிகள் விஷயத்திலே ஏற்கெனவே ’குல்மர்க்’ அடையாளமாக ஆகிவிட்டது. கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் கூட, இங்கே இளைஞர்களின் விருப்ப விளையாட்டாக இருக்கிறது. வரவிருக்கின்ற காலகட்டத்திலே, ஜம்முகஷ்மீரத்தின் விளையாட்டு வீரர்களின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
விளையாடுபவரே வளர்வர்
என் உளம்நிறை நாட்டுமக்களே, யார் விளையாடுகிறார்களோ, அவர்களே வளர்வார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த அளவுக்கு பிரபலமாக இல்லாத விளையாட்டுக்களைக் கூட நமது நாட்டு இளைஞர்கள் இப்போது சொந்தமாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. உத்தர பிரதேசத்தின் திறமைசாலியான தடகள வீரர் குல்வீர் சிங் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வாரங்கள் முன்பாக நடந்த Newyork City Half Marathon போட்டியில் கலந்துகொண்டு, 3ஆவது இடத்தைப் பிடித்து இவர் சாதனை படைத்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்திலே அரை மாரத்தான் போட்டியை நிறைவு செய்த முதல் பாரதநாட்டுத் தடகள வீரர் இவர் தான்.
ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அனாஹத் சிங் அவர்கள், Squash on Fire Open என்ற மிகப்பெரிய சர்வதேசப் போட்டியை வென்றிருக்கிறார். வெறும் 17 வயதே ஆன இவர் இந்தச் சாதனையை புரிந்திருக்கிறார். இதோடு கூடவே இவர் PSA உலக தரவரிசையிலே தலைசிறந்த 20 வீரர்கள் பட்டியலில், மிகக்குறைவான வயதிலே இடம்பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் ஆகியிருக்கிறார். அதே போல அஸ்மிதா ஆத்தலெடிக்ஸ் லீக் பற்றிய தகவலும் என்னிடத்தில் இருக்கிறது. இதிலே, மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று, பெண்கள் தினத்தன்று பல விளையாட்டு நிகழ்ச்சிகள் மிகப் பிரமாதமாக நடந்தன. இந்தப் போட்டியிலே சுமார் 2 இலட்சம் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதைக் காணும் போது, பாரதத்தின் பெண்சக்தி, தேசத்தின் விளையாட்டுக்கள் துறையை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்காற்றி வருகிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
உடலுறுதியில் கவனம் செலுத்துக
நண்பர்களே, நீங்கள் அனைவரும் உங்களுடைய உடலுறுதி மீது கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள் என்று நான் எப்போதுமே உங்களிடத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறேன். சர்வதேச யோகக்கலை தினத்துக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலமே இருக்கிறது, உலகம் முழுவதிலும் யோகக்கலை மீதான ஈர்ப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆப்பிரிக்காவின் ஜிபூத்தியிலே அல்மிஸ் அவர்கள் தன்னுடைய அரவிந்த யோகா மையம் வாயிலாக யோகக்கலையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று வருகிறார். அங்கே இருக்கும் மேலும் பல இடங்களிலும் கூட மக்களுக்கு யோகக்கலையைக் கற்பித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் கண்டெண்ட் கிரியேட்டரான யுவ்ராஜ் துவாவின் பதிவுக்கான எனது பதிலுக்கு உங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று அவருடைய தந்தையாருக்கு நான் கூற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். என்னுடைய வேண்டுகோள் அவருடைய தந்தையாரிடத்திலே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்கு உவகையை அளித்தது. அதே போல, நீங்களும் கூட நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், சமையல் எண்ணெய் அளவில் 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களனைவரிடத்திலும் கூட நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இத்தகைய சின்னச்சின்ன முயற்சிகளால் உடல்பருமன் மற்றும் வாழ்கைமுறையோடு தொடர்புடைய நோய்களிலிருந்து நாம் விலகி இருக்க முடியும்.
மாணவர் ஆய்வுத் திட்டங்கள்
என் இதயம்நிறை நாட்டுமக்களே, ஹிந்தி மொழியிலே ஒரு பழமொழி உண்டு, இதன் பொருள் என்னவென்றால் நாம் எத்தனைக்கெத்தனை பயில்கிறோமோ, அத்தனைக்கத்தனை புத்திசாலித்தனத்தை-திறமையை அடைகிறோம் என்பதே. அதே போல எப்போது ஒருவருடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கிறதோ, அப்போதுதான் அவரால் சிறப்பாகக் கற்க முடியும். பெங்களூரூவில் கல்வியோடு தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த ஒரு முயற்சி பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இங்கே ஒரு குழு, Prayog Institute of Education Research என்ற அமைப்பை நடத்தி வருகிறது. இந்தக் குழு ஆய்வுத் திட்டங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
இந்தக் குழு பள்ளிக்கூட மட்டத்தில் அறிவியல் கல்வியை விருப்பப் பொருளாக ஆக்குவதில் முனைந்திருக்கிறது. இவர்கள் அன்வேஷன் என்ற பெயரிலான ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள், இதன் வாயிலாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வேதியியல், பூமி பற்றிய அறிவியல் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகளில், புதுமைகளைப் புரிய சந்தர்ப்பங்களை அளிக்கிறார்கள். இதனால் ஆய்வுகள் மேற்கொளவது பற்றிய நல்ல அனுபவம் மாணவர்களுக்கு கிடைப்பதோடு கூடவே, செயல்திட்டங்களைப் பதிப்பிக்கவும் ஒரு தளம் கிடைக்கிறது.
அறிவியலை அச்சமின்றி அணுகுங்கள்
நண்பர்களே, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் போது, சில மாணவர்கள், அறிவியலைப் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம், ஆனால் அதனிடம் ஒருவகை பயமும் இருப்பதாக என்னிடம் கூறினார்கள். இந்த நோக்கிலே பிரயோக் குழுவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப்படி, மாணவர்களை அறிவியலோடு இணைப்பதோடு கூடவே, நடைமுறையிலே சிலவற்றைச் செய்து காட்டக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் நாமே செய்து பார்க்கும் போது தான், ஆர்வமும், நாட்டமும் உருவாகும். என்னுடைய இந்த இளைய நண்பர்களில் யார் வருங்காலத்திலே அருமையான விஞ்ஞானியாவார் என்பதை யாரறிவார்கள்?
பாரம்பரியத்தை மீட்டுருவாக்குங்கள்
நண்பர்களே, கல்வி வாயிலாக, கடந்த காலத்தைப் பராமரிக்கவும், வருங்காலத்தைத் தயார் செய்யும் ஒரு முயற்சியை நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள். இந்தச் சமுதாயத்தவர்கள் தங்களுடைய தொல்குடிப் பாரம்பரியங்களை மிகவும் போற்றுகிறார்கள். இவற்றின் மீது பெருமிதம் கொள்வதோடு, தங்களுடைய அணுகுமுறையை நவீனமானதாகவும் வைத்துக் கொள்கிறார்கள். நாகா பழங்குடிகளில் ’மோரூங்க் கற்றல்’ என்ற ஒரு பாரம்பரியமான வழிமுறை இருந்தது, இதிலே மூத்தகுடிமக்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக, இளைஞர்களுக்குப் பாரம்பரியமான ஞானம், வரலாறு மற்றும் வாழ்க்கைக்கல்வி பற்றிக் கூறுவார்கள்.
காலப்போக்கிலே இந்த முறை இப்போது மோரூங்க் கல்விக் கோட்பாடாக மாறிவிட்டது. இதன் வாயிலாக குழந்தைகளிடத்தில் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இதிலே சமுதாயத்தின் மூத்தவர்கள் அவர்களுக்குக் கதைகள், பழங்குடிப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களோடு வாழ்கைத்திறன்களைப் பற்றியும் கற்பிக்கிறார்கள். இந்த வகையிலே நமது நாகாலாந்து தன்னுடைய கலாச்சார மரபுகளைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், குழந்தைகளின் கல்வியை முன்னெடுத்தும் வருகிறது. உங்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் ஏதேனும் இருந்தால், கண்டிப்பாக என்னோடு பகிருங்கள்.
நீர் பராமரிப்பை பரவலாக்குக
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் பல்வேறு பாகங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது, அதாவது இந்த வேளை நீர்பாதுகாப்பு தொடர்பான நம்முடைய உறுதிப்பாடுகளை மீள் உறுதி செய்து கொள்வதற்கான வேளையாகும். கடந்த 11 ஆண்டுகளில் நீர் சேமிப்பு இயக்கம் காரணமாக மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த இயக்கம் காரணமாக, நாடெங்கிலும் சுமார் 50 இலட்சம் செயற்கை நீர் அறுவடை அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நீர் சங்கடங்களை சமாளிக்க கிராம அளவிலேயே சமூகரீதியான முயற்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன என்பது இதமாக இருக்கிறது.
சில இடங்களில் பழைய குளங்கள் தூய்மைப்படுத்தப் படுகின்றன என்றால், சில இடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமுத நீர்நிலைகள் இயக்கத்தின்படி சுமார் 70,000 அமுத நீர்நிலைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. மழைக்காலம் வரும் முன்னரே, இந்த நீர்நிலைகளை சுத்தம் செய்யும் வேலை தொடங்கிவிட்டது. இன்று நான் உங்களிடத்திலே சில உத்வேகமான எடுத்துக்காட்டுகளை முன்வைக்க விரும்புகிறேன். மக்களின் பங்களிப்பு வாயிலாக நீர் பராமரிப்பு எந்த அளவுக்குப் பரவலாகிறது என்பதையே இந்த எடுத்துக்காட்டுகள் தெரிவிக்கின்றன.
மழைநீர் அறுவடை
நண்பர்களே, திரிபுராவின் ஜம்புயி மலைகளில் இருக்கும் வாங்கமுன் கிராமம், 3000 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த கிராமம் தீவிரமான நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தது. கோடைக்காலத்தில் கிராமத்தவர்கள் நீருக்காக நீண்டநெடிய தொலைவுகளுக்குப் பயணிக்க வேண்டி இருந்தது. முடிவாக கிராமத்தவர்கள் மழைநீரின் ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாப்பது என்று தீர்மானித்தார்கள். இன்று வாங்கமுன் கிராமத்திலே கிட்டத்தட்ட அனைத்து இல்லங்களிலும் கூரை மீது அமைக்கப்பட்ட மழைநீர் அறுவடை முறை நிறுவப்பட்டிருக்கிறது. கிராமம் என்றைக்கும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக அவதிப்படக்கூடாது என்பதை உறுதிசெய்யும் இந்த நடவடிக்கை, நீர் சேமிப்பிற்கான உத்வேகம்தரும் எடுத்துக்காட்டாகிவிட்டது.
நண்பர்களே, இதைப் போலவே சத்தீஸ்கட்டின் கோரியா மாவட்டத்திலும் கூட ஒரு வித்தியாசமான முன்னெடுப்பைக் காணலாம். இங்கே இருக்கும் விவசாயிகள் ஒரு எளிமையான ஆனால் அருமையான உத்தியைக் கைக்கொண்டார்கள். இவர்கள் தங்களுடைய வயல்வெளிகளில் சின்னச்சின்ன ரீசார்ஜ் அதாவது மறு ஊட்டக் குளங்கள் மற்றும் soak pit – உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, இவை காரணமாக மழைநீர் வயல்களிலேயே தேங்கத் தொடங்கியது, நீர் மெல்லமெல்ல நிலத்தடிக்குள் செல்லத் தொடங்கியது.
இன்று இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள், கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பிரமாதமாகி விட்டது. இதைப் போலவே தெலங்காணாவின் மஞ்சேரியால் மாவட்டத்தின் முதிகுண்டா கிராமத்திலேயும் கூட மக்களனைவரும் இணைந்து நீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள். கிராமத்தின் 400 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் இத்தகைய soak pit -உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, நீர் பராமரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்கள். இதனால் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக ஆனதோடு, மாசடைந்த நீர் காரணமாக ஏற்படும் நோய்களும் குறைந்து போனது.
வெற்றிகரமான மீன் பதப்படுத்தும் தொழில்
எனதருமை நாட்டுமக்களே, நமது மீனவ சகோதர சகோதரிகள், கடல்வீரர்கள் மட்டுமல்ல, தற்சார்பு பாரதத்தின் பலமான அடித்தளங்களும் ஆவார்கள். அவர்கள் பொழுது புலரும் முன்பாகவே கடலின் அலைகளுக்கு இடையே பயணித்து, தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் தேசத்தின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தகைய கடும் உழைப்பாளிகளான மீனவர்களின் வாழ்க்கை இன்று பலவகைகளில் சுலபமானதாக ஆகிக் கொண்டு வருகிறது. துறைமுகங்களின் வளர்ச்சியாகட்டும், மீனவர்களுக்கான காப்புறுதியாகட்டும், இப்படி பல முன்னெடுப்புகள், அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக ஆகி வருகிறது. கடலிலே அவர்களுடைய செயல்பாடுகளை பருவநிலையின் போக்குத் தான் தீர்மானிக்கிறது என்பதை நாமறிவோம்.
இதைப் புரிந்து கொண்டு, தொழில்நுட்பம் வாயிலாகவும் அவர்களுக்கு முழுமையான உதவிகள் புரியப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது மீன்வளத்துறை தன்னிறைவு பெற்றதாக ஆவதோடு மட்டுமல்லாமல், புதியனவற்றை சாதிக்கும் குறிக்கோள் உணர்வு நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது. இன்று மீன்வளம் மற்றும் கடல்பாசித் துறைகளில் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, நமது மீனவ சகோதர சகோதரிகள் தற்சார்பு உடையவர்களாக ஆகி வருகிறார்கள்.
ஒடிஷாவின் சம்பல்பூரைச் சேர்ந்த சுஜாதா பூயான் அவர்களும் கூட இல்லத்தரசியாக இருந்தார் ஆனால் புதியதாக ஏதாவது சாதிக்க வேண்டும், குடும்பத்துக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஆகையால் சில ஆண்டுகள் முன்பாக அவர் ஹீராகுண்ட் நீர்த்தேக்கத்திலே மீன் பண்ணையைத் தொடங்கினார். தொடக்கக்கட்டத்தில் இது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை. பருவநிலை மாற்றம், மீன்களுக்கான உணவு ஏற்பாடு மற்றும் வீட்டின் பொறுப்புகள் ஆகியவற்றை சீராக வைத்திருக்க வேண்டிய சவால்கள் இருந்தன; ஆனால் மனதில் உறுதி இருந்தது. வெறும் 2-3 ஆண்டுகளிலேயே அவர் தனது முயற்சியை ஒரு வளமான வர்த்தகமாக ஆக்கினார். இன்று இவருடைய வெற்றியானது, சமுதாயத்தின் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருக்கிறது.
நண்பர்களே, லட்சத்தீவுகளின் மினிகாயைச் சேர்ந்த ஹாவ்வா குல்ஜார் அவர்களின் கதையானது நமது சகோதர சகோதரிகளின் அற்புதமான உறுதிப்பாட்டினை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. உள்ளபடியே இவர் ஒரு மீன் பதப்படுத்தும் அலகை நடத்தி வந்தார். ஆனால் தன்னிடத்தில் மட்டும் ஒரு நல்ல குளிர்சாதன சேமிப்பு அலகு இருந்தால் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியுமே என்று கருதினார். ஆகையால் குளிர்சாதன சேமிப்பு அலகை அமைக்க முடிவெடுத்தார். இன்று இதுவே இவருடைய பலமாகவும் ஆகியிருக்கிறது. இப்போது சிறப்பான திட்டமிடலோடு வியாபாரத்தைச் செய்து வருகிறார்.
நண்பர்களே, தேசத்திலே இன்று அனைத்து வகைகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தேறி வருகின்றன, கருத்தூக்கம் அளிக்கின்றன. பேல்காவியின் சிவலிங்க சத்தப்பா ஹுத்தார், பாரம்பரியமான முறை விவசாயத்தை விட்டு விலகி ஒரு தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். இதற்காக இவர் ஒரு Pond Farm – குளப் பண்ணையை ஏற்படுத்தினார். இதனைச் செய்ய இவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்போது தனது குளத்திலிருந்து மீன்களை விற்பனை செய்து நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறார். அதே போல கடல்பாசிக்கான தேவையைப் பார்த்து பலர் கடல்பாசி வளர்ப்பிலே ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு அதிக ஆதாயமும் கிடைத்து வருகின்றது. மீண்டுமொரு முறை மீன்வளத்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நமது பொருளாதாரத்தை மேலும் சக்தியடைந்ததாகச் செய்வதில் அவர்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
வித்தியாசமான கின்னஸ் சாதனை
எனதருமை நாட்டுமக்களே, சமுதாயம் தானே முன்னேறும் போது, சின்னச்சின்ன முயற்சிகளும்கூட பெரிய மாற்றங்களுக்கான அடித்தளங்களாகி விடுகின்றன. நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன, இவை எல்லாம் நமக்கு இந்தக் கற்றலைத் தான் அளிக்கின்றன. உத்தர பிரதேசத்தின் வாராணசியில் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சியை தற்போது தான் காண முடிந்தது. அங்கே ஒரே மணி நேரத்திலே 2 இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டு, ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
இந்த முயற்சியின் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இதிலே ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதுதான். மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பணியை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். மக்கள் பங்கெடுப்பின் இதே உணர்வு தான், அன்னையின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் போதும் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் மூலம் நாடெங்கிலும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டன.
சமுதாய விதை வங்கி
நண்பர்களே, நாகாலாந்தின் சிஜாமி கிராமத்திலும் கூட மிகவும் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சி பற்றித் தெரிய வந்திருக்கிறது. சிஜாமி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இணைந்து 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக விதைகளைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த விதைகளை ஒரு சமுதாய விதை வங்கியிலே சேமித்து வைத்திருக்கிறார்கள், இதை கிராமத்துப் பெண்கள் தாம் நடத்துகிறார்கள். இதிலே நெல், கம்பு, சோளம், பருப்பு வகைகள், காய்கறிகள், பலவகையான மூலிகைகள் ஆகியன அடங்கும். இது எப்படிப்பட்ட முயற்சி என்றால் இதிலே ஞானமும் பாதுகாக்கப்படுகிறது, பாரம்பரியமும் உயிர்ப்போடு இருக்கிறது, வரும் தலைமுறையினருக்கு ஒரு பலமான அஸ்திவாரமும் தயாராகிறது.
நண்பர்களே, இன்று உலகிலே நாம் சூழல்மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டுவரும் வேளையிலே, தீர்வுகள் எப்போதும் தொலைவில் இல்லை என்பதையே இப்படிப்பட்ட முயற்சிகள் எல்லாம் தெரிவிக்கின்றன. பல வேளைகளில் நம்முடைய பாரம்பரிய ஞானம் மற்றும் சமூக முயற்சிகள் தாம் பலமான பாதையை நமக்குக் காட்டுகின்றன.
வாய்ப்புகள் அளிக்கும் சூரிய மின்சக்தித் துறை
என் அன்பே வடிவான நாட்டுமக்களே, இன்று தேசத்தின் எந்த ஒரு சிறிய-பெரிய நகருக்குச் சென்றாலும் ஒரு மாற்றத்தை நீங்கள் கண்டிப்பாக கவனிக்கலாம். அதிக எண்ணிக்கையில் வீடுகளின் கூரைகளிலே சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில ஆண்டுகள் முன்பு வரை, இவை ஏதோ சில வீடுகளில் மட்டுமே இருந்தன; ஆனால் இன்றோ பிரதம மந்திரி சூரியசக்தி வீடுகள் திட்டத்தின் தாக்கத்தை தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலும் காணமுடிகிறது.
இந்தத் திட்டம் காரணமாக, குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தின் பாயல் முஞ்ஜ்பாராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவர் சூரிய முன்முயற்சி வாயிலாக சூரியசக்தி தொழில்நுட்பப் பயிற்சியை மேற்கொண்டு, நான்கு மாதங்களில் சோலார் பிவி டெக்னீசியன் – சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர் படிப்பையும் நிறைவு செய்தார். இப்போது இவர் ஒரு திறமைவாய்ந்த சூரியசக்தி தொழில்நுட்ப வல்லுநராக ஆகி வருகிறார். அக்கம்பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களில் சூரியசக்தி கூரைமீதான மின் அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.
நண்பர்களே, மீரட்டின் அருண் குமாரும் கூட தனது பகுதியிலே ஆற்றல் அளிப்பவராக இருக்கிறார். தற்போது தான் தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அருண் குமார் அவர்கள் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்போது மின்சாரத்துக்கு செலுத்தும் கட்டணத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் கூறினார்.
நண்பர்களே, ஜய்பூரின் முரளீதர் அவர்களின் வெற்றியும் கூட இப்படிப்பட்டது தான். முன்பெல்லாம் விவசாயத்திற்கு இவர் டீசல் பம்பைச் சார்ந்திருந்தார், இதனால் ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகிவந்தது. ஆனால் சூரியசக்தி பம்பைப் பொருத்தியவுடன், இவருடைய விவசாய வழிமுறையே மாறிப்போனது. இப்போது எரிபொருள் பற்றிய கவலையே இல்லை, நீர்பாசனம் காலாகாலத்தில் நடக்கிறது, ஆண்டு வருவாயும் அதிகரித்துவிட்டது. மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால், இப்போது இவருடைய குடும்பத்துக்கு தூய்மையான எரிசக்தி கிடைப்பதோடு கூடவே, அவர்கள் சிறப்பான வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.
நண்பர்களே, பிஎம் சூரியசக்தி வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தால் ஆதாயங்கள் வடகிழக்குப் பகுதிகளிலும் கூட கிடைத்து வருகின்றது. திரிபுராவின் ரியாங்க் பழங்குடிகளின் பல கிராமங்களில் மின்சாரம் ஒரு பிரச்சினையாக இருந்தது. இப்போது சூரியசக்தி மினி க்ரிட் வாயிலாக அங்கே வீடுகளில் ஒளிவெள்ளம் இருக்கிறது. அங்கே பொழுது சாய்ந்த பிறகு கூட குழந்தைகளால் படிக்க முடிகிறது. மக்கள் தங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது, கிராமத்தின் சமூக வாழ்க்கை மாறிவிட்டது.
நண்பர்களே, தேசத்தில் சூரியசக்திப் புரட்சிக்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நீங்களும் கூட இந்தப் புரட்சியிலே அங்கம் வகியுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள்.
மனங்களைக் கவர்ந்த மனதின் குரல்
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலுக்காக தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஏராளமான தகவல்கள்-செய்திகள் எனக்குக் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. தொலைவான பகுதிகளில் இருப்போர் கூட எத்தனை ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்கிறார்கள் என்பது இந்தத் தகவல்களாலும் தெரிய வருகிறது. நான் உங்களுடைய ஆலோசனைகளைப் படிக்கும்போது, இது வெறும் ஒரு நிகழ்ச்சியல்ல, இது நம்மனைவரின் ஒரு நேரடி கலந்துரையாடலாக ஆகிவிட்டது என்றே எனக்குப் படுகிறது. உங்களுடைய எண்ணங்கள், உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய அனுபவங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியைத் சிறப்பானதாக ஆக்க தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கின்றன.
நீங்கள் உங்கள் அருகே இருக்கும் உள்ளெழுச்சி அளிக்கும் சம்பவங்களை எப்போதும் போலவே பகிர்ந்து வாருங்கள். உங்களுடைய ஒரு சின்ன முயற்சி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தலாம், முன்னேற்றத்தின் மீதான புதியதொரு நம்பிக்கையை ஒருவரிடம் புகுத்தலாம் – இது தானே வானொலியின் மெய்யான பலம். இவை தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் இருக்கும் மக்களை ஒரே எண்ணம், ஒரே உணர்வு, ஒரே குறிக்கோள் என்ற வகையில் இணைக்கிறது.
அடுத்த மாதம் மீண்டும் நாம் சந்திப்போம், மேலும் சில உள்ளெழுச்சி அளிக்கும் ஆளுமைகளோடு, நம்மை முன்னேற்றக்கூடிய சக்தியளிக்கவல்ல முயற்சிகளோடு நாம் மீண்டும் இணைவோம். அதுவரை, நீங்கள் எல்லோரும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள். பலப்பல நன்றிகள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல் 1ல் பங்குனி உத்திர நாளில் நடைபெறும்.விழாவை முன்னிட்டு மார் 23 ல் கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 மாலை 5 மணியளவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23(இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாள்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நாளாக ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கம் அறைகள், முன்பதிவுக்கு sabarimala.org.in www.onlinetdb.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது கோடை காலம் என்பதால் கடுமையான வெயில் வறுத்தெடுத்து வருகிறது தினமும் 42 டிகிரிக்கு மேல் வெயில் பாட்டில் எடுத்து வருகிறது பம்பை நதியில் போதிய தண்ணீர் இல்லை ஆராட்டு விழா நடைபெறுவதை ஒட்டி பம்பை நதியில் தண்ணீர் சபரி அணையில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது