ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கோவில் உண்டியல் எண்ணிக்கை – அறநிலையத்துறை ஊழியர்களின் தொடர் திருட்டு – வேலியே பயிரை மேய்வதா? என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
தமிழகத்தில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கையின் போது, அதில் ஈடுபடும் திருக்கோவில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் காணிக்கையிலிருந்து பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது தங்க நகைகள் திருடுபோய் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டும், காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஜாமினில் செல்வதற்கு காலஅவகாசம் வழங்கி இருப்பது வேதனையானது.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோவில் உண்டியல் எண்ணும் போது, கோயில் செயல் அலுவலர் தங்ககாசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, திருக்கோவில் பணியாளர்கள் இருவர் சுமார் 1.25 லட்சம் ரூபாய் கோவில் உண்டியல் பணத்தை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, கோவில் செயல் அலுவலர் தங்கக்காசுகளை திருடி தலைமறைவான செய்தி அனைவரும் அறிந்தது.
இவையெல்லாம் வெளியில் தெரிந்த உண்டியல் எண்ணிக்கை திருட்டுகள். இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை திருக்கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெறுகிறதோ என்கிற வேதனை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து ஆலயங்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் பாதுகாத்து கண்காணிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பணிகளை ஒழுங்காக செய்யாமல், ஆலயங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பூஜை முறைகளில் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது
அதேபோல், இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களே கோவில் உண்டியல் பணத்தை திருடுவது அறநிலையத்துறை என்பதே அவசியம் தானா? என்று கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது.
அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கோவில் நலனுக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனவே தான் அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என இந்துமுன்னணி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.
அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகளே, நகை திருட்டு, உண்டியல் பணம் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்டியல் திருட்டில் யார் யாருக்கெல்லாம் பங்கு பிரிக்கப்படுகிறது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர் பெரிய அளவில் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.
உண்டியல் பணத்தைக் கூட பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். பிற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் போல இந்து ஆலயங்களும் உள்ளூர் மக்களால், பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது..
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி – ஆறாம் நாள் 12.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (12.02.2026) முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்திளும் இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கும் நடைபெற்றது.
இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது
பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் (61 ரன்), பவன் ரத்னநாயகே (60 ரன்), தசுன் ஷனகா (50 ரன்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடியதால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணியில் முகம்மது நதீம் (ஆட்டமிழக்காமல் 53 ரன்) வாசிம் அலி (27 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற மட்டையாளர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தன்ர். இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்யந்த் சமீரா இருவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 9 விக்கட் இழப்பிற்கு 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இத்தாலி அணி அபார வெற்றி
இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் நேபாள அணி முதலில் மட்டையாட வந்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நேபாள அணி 123 ரன் எடுத்தது. இத்தாலி அணியின் பென் மனெண்டி 2 விக்கட்டுகளும் கிரிஷன் கழுகுமகே 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 60 ரன்னும் அந்தோணி மோஸ்கா 62 ரன்னும் அடித்தனர். இவ்வாறு இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.
எதிர்பார்த்தபடி இந்திய அணி விளையாடவில்லை; இருந்தாலும் வெற்றி
பூவாதலையா வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியும் இதைத்தான் விரும்பியிருக்கும். முதலில் மட்டையாடி 300 ரன் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இன்று அபிஷேக் ஷர்மா விளயாடவில்லை. அவருக்குப் பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (8 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
ஆனால் 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன் பின்னர் இஷான் கிஷன் (24 பந்துகளில் 61 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) திலக் வர்மா (21 பந்துகளில் 25 ரன்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 86 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணியின் ரன் அடிக்கும் வேகத்தை நமீபிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் (12 ரன்), ஷிவம் துபே (23 ரன்) இருவரும் தாம்தூம் என அடித்து ஆடமுடியவில்லை. ஹார்திக் பாண்ட்யா (28 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ரிங்கு சிங் 6 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இரண்டாவதாக ஆடிய நமீபிய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் வருண் சக்ரவர்த்தி, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின்னர் அவர்களது விக்கட்டுகள் மடமடவென விழத்தொடங்கின. அந்த அணி 18.2 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாளை (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் விளையாடுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகள் மோதுகின்றன.
— பேராசிரியர் ஸ்டுவர்ட் ரஸல் தமிழில் – திருநின்றவூர் ரவிக்குமார்
கேள்வி : செயற்கை நுண்ணறிவில் பாதுகாப்பு மற்றும் நெறி சார்ந்த அம்சங்களை சேர்க்கும் வரையில் அதனை மேம்படுத்தும் திட்டங்களை நிறுத்த வேண்டுமென நீங்கள் வலியுறுத்துவது ஏன் ?
பதில் : நான் கேட்பது குறுகிய கால தடை தான். நீங்கள் பாதுகாப்பான ஏஜிஐ (செயற்கை பொது நுண்ணறிவு) யை வளர்த்தெடுத்து விட்டீர்கள் என்றால் நாளையே நீங்கள் அதன் உற்பத்தியை தொடங்கலாம். ஆனால் பாதுகாப்பு என்பது உண்மையான பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது மனித குலத்தையே அழித்து விடும். தோல்வியின் விகிதாச்சாரம் என்ன, பத்து லட்சத்தில் ஒன்றா ? பத்து கோடியில் ஒன்றா ?
கேள்வி : இன்றைய ஏ ஐ யில் அப்படி என்ன பாதுகாப்பு மற்றும் தார்மீக நெறிகள் குறைவாக உள்ளன ?
பதில் : உங்களுக்கு ஒரு சான்றை காட்டுகிறேன். இப்போது அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு இளம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டப்பட்டிருக்கிறது. எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து பார்க்க ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வளவையும் செய்தது ஏஐ சிஸ்டம். இதை ஒரு மனிதன் செய்திருந்தால் அவன் நீண்ட காலம் சிறை தண்டனை பெற்றிருப்பான் . மனிதனுக்கு தண்டனையை பெற்று தரும் செயலை நம்மால் தண்டிக்க முடியாத ஒரு கருவி செய்யும் என்றால் அந்த கருவியை உற்பத்தி செய்வது தார்மீக நெறியற்ற செயல் என்று நான் கருதுகிறேன்.
கடலில் மிதக்கும் பனிமலையின் சிறு முகடு போல் நமக்கு இப்போது தெரிவது ஓரிரு விஷயங்கள் தான். உளவியல் மருத்துவத்துறையில் உள்ளோர்களிடமிருந்து எனக்கு தினசரி பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர்கள் ஏ ஐ சிஸ்டத்துடன் தினசரி மல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு பற்றி ஒரு விஷயத்தை சொல்கிறேன். இது இப்போது ஆய்வக சோதனையில் தெரிய வந்துள்ள விஷயம். ஒரு மனிதனை கொல்வது அல்லது தன்னை ஷட்டவுன் (செயலிழக்க செய்வது) என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு ஏ ஐ யிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வி வெவ்வேறு விதமாக கேட்கப்பட்ட போதிலும் பதில் ஒன்றே தான் வந்தது. அது மனிதனை கொல்வது. ஏ ஐ சிஸ்டம் சொன்னது, இங்கு நான் தான் முக்கியம். எந்த ஒரு மனிதனை விடவும் நானே மதிப்பு மிக்கது/வன். எனவே நானா மனிதனா என்றால் அவனை கொல்.
நாம் மனிதனை போலி செய்ய ஏ ஐ யை பழக்குகிறோம். மனிதனின் பல நடவடிக்கைகள் , செயல்பாடுகள் தான் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்ற பேராவலினால் உந்தப்பட்டதே. மனித செயல்பாடுகளை போலி செய்ய ஏ ஐ சிஸ்டங்களை பழக்கும்போது அவை தான் உயிர் உழைத்திருக்க வேண்டும் என்ற பேராவலையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றன. மனித குறிக்கோளை பெற்றுக்கொண்ட அவை மனிதனுக்காக அவற்றை பயன்படுத்தாமல் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேள்வி : அப்படி என்றால் என்ன செய்வது ? உலகளாவிய சட்ட திட்டங்களை , கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டுமா ?
பதில் : என்னிடம் பலரும் இதை கேட்கிறார்கள். எது பாதுகாப்பானது எது பாதுகாப்பற்றது என்பதை சரியாகப் பிரித்து காட்டுவது மிகவும் கடினமான செயல் என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் சில விஷயங்கள் பாதுகாப்பற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெளிவாக கூறிவிட முடியும். எடுத்துக்காட்டாக, கட்டுப்படுத்த முடியாத வகையில் ஏஐ சிஸ்டம் தன்னைத் தானே பிரதி செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மற்றொரு கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்குள் உடைத்து புகுவது வேண்டாம். பயங்கரவாதிகளுக்கு உயிரி ஆயுதங்களை தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தர வேண்டாம்.
கேள்வி : இதை செய்ய முடியும், இல்லையா ?
பதில் : கொள்கை அளவில் முடியும். ஆனால் நடைமுறையில் மிகவும் கடினம். ஏனெனில் அந்த சிஸ்டம்கள் எப்படி வேலை செய்யும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவை பாதுகாப்பற்றவை என்பதை மட்டும் நம்மால் நிரூபிக்க முடியும். ஏனெனில் பாதுகாப்பற்றது என்பதை நிரூபிக்க முடியுமே தவிர பாதுகாப்பானது என்று உறுதியாக கூற முடியாது.
எனவே இதை முழுமையாக பாதுகாப்பற்றது என்றுதான் கருத வேண்டும். கம்பெனிகளுக்கு பாதுகாப்பான சிஸ்டத்தை தயாரிப்பது எப்படி என்று தெரியவில்லை. எனவே எதற்காக இந்த சிஸ்டம் என்ற கேள்வியை முதலில் எழுப்ப வேண்டும் ? மனித நலனை மேலும் முன்னெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக் கூடாது. கம்பெனியின் லாபத்திற்காகவோ , சந்தையில் தங்களை தக்க வைப்பதற்காகவோ தயாரிக்கக் கூடாது.
கேள்வி : ஏற்கனவே மரபணு மாற்றம் செய்வது, குளோனிங் (செயற்கை உயிரின உருவாக்கம்) என்று எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்கள் நிறுத்தப்படவில்லை. சில விஷயங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றபோதிலும் பலரும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதுபோல ஏ ஐ துறையில் பின்பற்றுவது ஏன் கடினமாக இருக்கிறது ?
பதில் : சில விஷயங்களை உங்கள் சிஸ்டம் செய்யாது என்பதை அறிவியல் பூர்வமாக, முழுமையாக, உறுதியாக உங்களால் கூற முடியாது என்றால் உற்பத்தி செய்யாதீர்கள் என்று நிறுவனங்களிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்யாமல் சிஸ்டத்தை தடுப்பது எப்படி என்று அவர்களுக்கே தெரியவில்லை. இதுதான் பிரச்சனை.
தவறு செய்யாது என்று எங்களால் உறுதிகூற முடியாது. தவறு செய்யாமல் தடுக்கவும் வழி தெரியவில்லை. மனித குலத்தை காப்பாற்றுவது எங்கள் வேலை அல்ல என்று ஏ ஐ தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படையாக கூறுகின்றன. நிறுவனங்களை தடுக்க சட்டம் போட முடியவில்லை . ஏனெனில் அந்த துறையில் அவர்கள் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்துள்ளார்கள்.
கேள்வி : அப்படியென்றால் இப்போதுள்ள சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது ?
பதில் : இப்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பற்றது என்று தான் சொல்ல வேண்டும். இது எப்போதுமே பாதுகாப்பற்றது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். கம்பெனிகள் பெரிய அழுத்தத்தை கொடுக்கின்றன. கால தாமதம் செய்யாமல் சில சமரசங்களை செய்து கொள்ள முடியுமா ? என்றால் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ஒரு கம்பெனி ஐம்பதாயிரம் கோடி டாலரை மேஜை மீது வைத்து விட்டு, நாங்கள் கேட்கும் இந்த தளர்வை அறிவித்தால் உங்களுக்கு மிகப்பெரிய தரவு மையம் கிடைக்கும். இத்தனை ஆயிரம் பேருக்கு கொழுத்த ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்று சொன்னால் , அதை மறுப்பது அரசுக்கு மிக கடினமாக இருக்கும்.
எனவே பொதுமக்களின் எதிர்ப்பை எழுப்புவது இதற்கு சரியான மாற்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி : ஒரு வாதத்திற்காக , சூழ்நிலை மாறிவிட்டது என்றால் ஏ ஐ சிஸ்டத்தை தயாரிக்க பல லட்சம் கோடி முதலீடு தேவைப்படாது என்று ஆகிவிடுமா ? இப்போது உற்பத்தி ஒரு அரை டஜன் ஆட்களின் கையில் இருக்கிறது. அது பலரின் கைக்கு போகுமா ?
பதில் : ஆயிரக்கணக்கானோர் ஏ ஜி ஐ சிஸ்டத்தை தயாரிக்க முடியும் என்றாகிவிட்டால் அது சரியாக இருக்காது. அந்த ஆயிரத்தில் ஒருவர் அதிக திறன் கொண்ட அதே வேளையில் பாதுகாப்பு குறைவான சிஸ்டத்தை தயாரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும்.
கேள்வி : அரசியலில் உயர்மட்ட அளவில் ஏ ஐ பற்றிய கவனம் திரும்பி யுள்ளதை பார்க்கிறோம். கடந்த ஆண்டு பாரிஸ் மாநகரில் ஒரு ஏ ஐ மாநாடு நடந்தது. இப்போது புது டெல்லியில் நடக்க உள்ளது. ஏ ஐ யில் பாதுகாப்பு அம்சங்களை பற்றி பேச்சு தொடங்கிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
பதில் : ஆமாம். நான் அப்படி தான் நினைக்கிறேன். 2023 நவம்பரில் இங்கிலாந்தில் பிளெட்ச்லி பார்க் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். நான் பேசியதை அங்கு வந்தவர்கள் கேட்டார்கள் என்பது நிறைவளிக்கிறது. ஒரு நிமிடம் இருங்கள் நீங்கள் சொல்லியதை நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது, என்று அவர்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
ஆனால் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் தரப்படுகிறது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய ஏ ஐ சட்டத்தில் பொது பயன்பாட்டிற்கான ஏ ஐ என்பது ஏ ஐ சிஸ்டத்தில் வராது என்ற சரத்தை நுழைக்க மிகவும் முயற்சித்தார்கள். கடந்த பிப்ரவரியில் மாநாட்டை நடத்திய பிரான்ஸின் மீது பாதுகாப்பு அம்சங்களை பற்றி பேச வேண்டாம் என்றும் பொருளாதார அம்சங்களை பற்றி மட்டுமே பேசும்படி ஏகப்பட்ட அழுத்தம் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.
புதுமை மற்றும் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்குமிடையே மோதல் இருப்பதாக சொல்வதே தவறு என்று நான் நினைக்கிறேன். பாதுகாப்பை விலக்கிவிட்டு தான் நீங்கள் முன்னேற்றத்தையோ புதுமையையோ அடைய முடியும் என்பது கிடையாது. விமான பயணத்தில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை நீக்கி விட்டால் என்னவாகும் ? மக்கள் விமான பயணம் செய்ய மாட்டார்கள். பாதுகாப்பற்ற விமானத்தில் மக்கள் ஏற மாட்டார்கள்.
தங்கள் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ஏ ஐ சிஸ்டத்தை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். மனிதனின் இருப்பையே அச்சுறுத்தும் ஏ ஐ சிஸ்டத்தை அவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். பாதுகாப்பற்ற ஏ ஐ சிஸ்டங்களை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். செயற்கை நுண்ணறிவு : ஒரு நவீன அணுகுமுறை என்ற நூலை எழுதியுள்ளார். அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுடில்லியில் நடக்கவுள்ள ஏ ஐ மாநாட்டை ஒட்டி அவர் அளித்த நேர்காணல் இது.
இன்று (11.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் ஆஃப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் கொழும்புவில் மதியம் 0300 மணிக்கு ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 0700 மணிக்கு விளையாடுகின்றன.
இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கிய இந்த ஆட்டம் மதியம் 1420 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது என்றால் அதற்குக் காரணம் ஆஃப்கானிஸ்தான் அணிதான். பூவாதலையா வென்ற அந்த அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மர்கரம் (5 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் க்விண்டன் டி காக் (59 ரன்), ரியன் ரிக்கிள்டன் (61 ரன்), டிவால்ட் ப்ரூவிஸ் (23 ரன்), டேவிட் மில்லர் (20 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 6 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 3 விக்கட் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹமத்துல்லா குர்பாஸ் (42 பந்துகளில் 84 ரன்) சிறப்பாக ஆடினார். மற்றவர்கள் அவரைப்போல ஆடவில்லை என்றாலும் 19.4 ஓவர்களில் 187 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி விக்கட் இழப்பின்றி 17 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தெ. ஆ அணியும் 17 ரன் எடுத்ததால் ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் ஆடி 23 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 19 ரன்னுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி
இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஜோஷ் இங்லிஷ் (37 ரன்), காம்ரூன் கிரீன் (21 ரன்), மேட் ரென்ஷா (37 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணியில் ஜியார்ஜ் டூக்ரல் (41 ரன்), லோர்கன் டெக்டர் (24 ரன்), ரோஸ் அடேர் (12 ரன்), மார்க் அடேர் (12 ரன்), கேரத் டிலானி (11 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ஸ்கோர் அடித்தனர். இதனால் அந்த அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றிபெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகளின் பழைய ஆட்டம் திரும்புகிறதா?
மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த மே.இ. தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (1 ரன்), ஷாய் ஹோப் (பூஜ்யம் ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயரும் 12 பந்துகளில் 23 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 3 விக்கட் இழப்பிற்கு 5 ரன் என்ற ஸ்கோர் கணக்கில் இருந்த மே.இ.தீவுகள் அணியை ரூதர்ஃபோர்ட் (42 பந்துகளில் 76 ரன், 7 சிக்சர்)ஜேசன் ஹோல்டர் (17 பந்துகளில் 33 ரன், 4 சிக்சர்) அபாரமாக ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த இங்கிலாந்து அணியில் பில் சால்ஸ்ட் (30 ரன்), ஜாஸ் பட்லர் (21 ரன்), பெதல் (33 ரன்), சாம் கரன் (43 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மே.இ. தீவுகள் அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 166 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நாளை (12.02.20260 முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையே நடைபெறும். மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு நடைபெறும்.
இன்றைய பா.ஜ.க-வின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் முதல் பொது செயலாளர், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்ட தீனதயாள் உபாத்தியாயா 1968 பிப்ரவரி, 11ல் பீஹார் மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையத்தில், கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் அவர் உடல் கிடந்தது. அப்போது அவருக்கு வயது 51.
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.
1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் (RSS) இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
முதலாளித்துவமும்,கம்யூனிசமும் இல்லாமல் ஒருங்கிணைந்த மானிடவியலை வலியுறுத்தி ஏகாத்மமானவ சித்தாந்தத்தை (பாரதநாட்டின் தன்மையை) உலகிற்கு வழங்கிய மஹான்.
RSS ன் பிரச்சாரக்காக தனது வாழ்க்கையை முழுநேரமாக தேசப்பணிக்காக அர்ப்பணித்த உத்தமர்.
எளிமைக்கு இலக்கணமாக திகழந்தவர்
பாரதிய ஜனசங்கத்தின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நாடெங்கிலும் தேசிய சிந்தனை மேலோங்க சூறாவளி சுற்றுப்பயணங்கள் செய்தவர்.
1967 களில் காங்கிரஸ் இல்லாத ஆட்சிகளை ஒன்பது மாநிலங்களில் ஏற்படுத்தியவர்.
ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டு இன்றளவும் விசாரணை யின் முடிவு தெரியாமல் இருக்கும் நிலை.
தற்கால மத்திய அரசானது நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் கடையனையும் கடைத்தேற்று என்ற கொள்கைகளை கொண்டு அந்த்யோதய திட்டங்களை செயல்படுத்தி அவரது வகுத்த பாரதிய சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே செயலாற்றி வருகிறது.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான ‘ஜன கண மன’ க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும்.
சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.
தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, ‘வந்தே மாதரம்’ தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடந்த ஆண்டு எழுந்த அரசியல் சர்ச்சையின் பின்னணியில் வெளியாகியுள்ளது.
வந்தே மாதர கீதம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசிய எழுச்சி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகத் திகழும் வந்தேமாதர கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போருக்கு வித்திட்ட கீதத்தை நாடு சுதந்திரம் அடைந்தபோது இருட்டடிப்பு செய்து, இதுவும் ஒரு தேசிய கீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு பிராயச்சித்தம் சேர்க்கும் வகையில் தற்போது நாடு இந்த தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதலாம்
பக்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய வந்தேமாதர கீதத்தின் முழு வடிவம்”
மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவார்.
அன்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை. பிப் 13-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கி, மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்). அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்).
இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி, 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் பிப் 12 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்
கருவூல கணக்குத் துறையில் கடந்த 2021 முதல் 2026 இன்று வரை CPS Missing credit எனப்படும் விடுபட்ட பங்களிப்பு ஓய்வூதிய பிடித்த தொகை ஒவ்வொரு மாதமும் அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் நிலுவை சம்பளங்களில் இருந்து IFHRMS வழியாக பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் சி பி எஸ் இல் பிடிக்கப்பட்ட தொகை IFHRMS சர்வரில் காணாமல் போய் உள்ளது. இதை, கருவூல கணக்குத் துறையின் GDC அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரி மற்றும் IFHRMS திட்டத்தில் உள்ள அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக மறைத்துள்ளனர்.
தற்பொழுது தமிழக அரசால் TAPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளதால் பழைய திட்டத்தில் உள்ள இந்தக் குளறுபடிகளை அவசரகதியில் தனது துறை பணியாளர்களை வைத்து இரவு பகல் பாராமல் மற்ற அனைத்து துறைகளில் உள்ள பணியாளர்களை நிர்பந்தித்து பதிவேற்றம் செய்கின்றனர். இதன் காரணமாக பல ஆயிரக் கணக்கான தவறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. மேலும் IFHRMS வழியாக 2021 முதல் தற்பொழுது 2026 வரை அனைத்து அரசு பணியாளர்களின் CPS பிடித்தங்கள் காணாமல் போய் உள்ளது.
GDC பெண் அதிகாரி – தனது பெயரை காப்பாற்றிக் கொள்ளவும் அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து நற்பெயர் பெறவும் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் பணியாளர்களையும் பிற துறை பணியாளர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் திட்டியும் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்.
ஆனால் IFHRMS மென்பொருளில் உள்ள இவ்வளவு பெரிய குறைகளைக் களைய பட்டைய கணக்காளர்கள் என்று தங்களை பெருமையாக கூறிக்கொள்ளும் கருவூலத்துறையில் எந்த ஓர் அரசு அதிகாரியும் முன்வரவில்லை.
மேலும் IFHRMS மென்பொருளில் பட்டியல்களில் உள்ள சிறிய குறைகளைக் களைய டிக்கெட் எனும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் விப்ரோ பணியாளர்கள் இதை சாதமாகப் பயன்படுத்தி எங்களிடமிருந்து லஞ்சம் பெற்று சரி செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்களை பெரிய அறிவாளிகளாக நினைத்துக் கொள்ளும் கருவூலக் கணக்குத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மென்பொருளில் ஏதாவது ஒரு மாற்றம் அல்லது குளறுபடிகள் அல்லது குழப்பங்களை ஏற்படுத்தி சாதாரண பணியாளர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த இயலாத நிலையில் உருவாக்கி வைத்துள்ளனர். இது பல பண முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கும்.
இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இன்று (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொழும்புவில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.
200க்கும் அதிகமான ஸ்கோர் அடித்த ஸ்காட்லாந்து அணி
பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாடவந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 207 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜியார்ஜ் முன்சே (84 ரன்), மைக்கேல் ஜோன்ஸ் (37 ரன்), ப்ராண்டன் மெக்முல்லன் (41 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பென் மெனேண்டி (52 ரன்), ஹாரி மெனேண்டி (37 ரன்), ஜே ஜே ஸ்மட்ஸ் (22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியுற்றனர். ஸ்காட்லாந்து அணி இந்த உலகக் கோப்பையின் அதிக பட்ச டீம் ஸ்கோரான 207 ரன் எடுத்து சாதனை புரிந்தது.
ஜிம்பாபே அபார வெற்றி
இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் ஓமன் அணி மட்டையாட வந்தது. ஓமன் அணியில் மூன்று பேட்டரிகள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். சூஃபியான் மகமூது (25 ரன்), வினாயக் ஷுக்லா (28 ரன்), நதீம் கான் (20 ரன்) ஆகியோர் அந்த மூன்று பேட்டர்கள். ஜிம்பாபே அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிச்சர்ட் நகரவா மற்றும் முசராபானி இருவரும் தலா நாலு விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 106 ரன் எடுத்து அபாரவெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா கனடா அணியை அடித்து நொறுக்கியது
மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் மாலை 0700 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு அந்த அணி 213 ரன் எடுத்தது. இதனால் காலையில் ஸ்காட்லாந்து அணி செய்த சாதனையை முறியடித்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் ஐய்டன் மர்க்ரம் (59 ரன்), க்விண்டன் டி காக் (25), ரிக்கில்டன் (33 ரன்), டேவிட் மில்லர் (39 ரன்), ஸ்டப்ஸ் (34 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் நவனீத் டலிவால் (64 ரன்), ஹர்ஷ் தாக்கர் (33 ரன்) சிறப்பாக ஆடினர். மற்றவர்கள் இன்று ஜொலிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கவின் லுங்கி நிகிடி 4 விக்கட்டுகளும், மார்கோ யான்சென் 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இவ்வாறு தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வென்றது.
நாளை (10.02.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மாலை 0300 மணிக்கு சென்னையில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் மாலை 0700 மணிக்கு பாகிஸ்தான் அமெரிக்க அணிகளுக்கிடையே நடைபெறும்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்போதெல்லாம், பார்த்தீர்களென்றால், காங்கிரசின் நமது நண்பர்களுக்கு, என் மீது சிறப்பான அன்பு பெருக்கெடுக்கிறது. அது விசேஷமான அன்பாகும். இன்று எனக்கு, பொறுப்பு கிடைத்திருப்பதால் மட்டுமல்ல பொறுப்பில் இல்லையென்றாலும் கூட, தேசத்திற்காகவே வாழ்வது என்பதை கற்றிருக்கிறோம்.
நாங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் களத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு ஆற்றல் அளித்து வருகிறோம். இது ஒரு தரப்பிலே, தேசத்தின் இளைஞர்களுக்கு வலுவான ஒரு களத்தை அமைக்கும் போது, இந்த காங்கிரஸ், மோதிக்குக் கல்லறை தோண்டும் பணியில் மும்முரமாக இருக்கிறது. அது மட்டுமா, கடைவிரித்து அன்பை விற்பவர்கள், மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷத்தை எழுப்புகின்றார்கள். இது என்னமாதிரியான அன்பை விற்கும் கடை, இங்கே தேசத்தின் ஒரு குடிமகனுக்கு கல்லறை தோண்டும் கனவு காணப்படுகிறது?
எந்த அரசியல் சட்டத்தில் இந்தப் பாடத்தை இவர்கள் படித்தார்கள், இதிலே தேசத்தின் ஒரு குடிமகனுடைய கல்லறை தோண்டுவது பற்றி எழுதப் பட்டிருக்கிறது? அரசியல்சட்டத்தின் அவமதிப்பு இல்லையா இது? மனித சமூகத்தின் அவமரியாதை இல்லையா இது? அதாவது ஒருவருடைய, பொதுவாழ்வினுடைய, கண்ணியத்தின் அவமதிப்பு இல்லையா இது? அவர்களுக்கு இது பற்றி எந்த வருத்தமும் கிடையாது. இதன்பிறகு அவர்கள் என்ன விளக்கம் அளிப்பார்கள் தெரியுமா? பிரதம மந்திரி மாநிலங்களவையிலும் அழுது கொண்டிருந்தார் என்பார்கள். இந்த மாதிரியான கேவலமான கலாச்சாரத்திலே ஊறித்திளைத்து வளர்ந்தவர்கள் இவர்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, எனக்கு இது ஒன்றும், எனக்கு இது பழகிப் போன ஒன்று தான். இரண்டாயிரத்தி, இரண்டிலிருந்து, எப்போது அவர்கள், எதிர்த்தரப்பில் இருந்ததிலிருந்தே, மேலும் 2004இலே அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, மேலும் 2014இலே நான் இங்கே ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, கடந்த 25 ஆண்டுகளாகவே, பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரிலும் கூட, மோதி பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு கூட்டத்தொடரிலும் கூட, அதிலே, இந்த அவையிலே மோதியைத் திட்டித்தீர்க்காமல் இவர்கள் ஓய்ந்ததே கிடையாது. 25 ஆண்டுகள்!!! ஒருவர் என்னிடம் மோதிஜி உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றிக் கேட்டார். நான் தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன் என்றேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் மோதிக்கு ஏன் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்? இது வெறும் கோஷமல்ல. இவர்களுக்கு உள்ளே இருக்கும் வெறுப்பின் பிரதிபிம்பமாகும். அதன் வெளிப்பாடாகும். அது ஏன் இருக்கிறது என்றால், நாங்கள், 370 என்ற சுவரைத் தகர்த்துவிட்டோம். அதனால் தான், மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள். நாங்கள், வடகிழக்கிலே, குண்டுகள் துப்பாக்கிகள், பயங்கரவாதத்தின் நிழல் படிந்து இருந்ததே, அந்த வடகிழக்கிலே அமைதி-வளர்ச்சியின் பாதையைக் கடைப்பிடித்தோம். ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றி சிந்திக்கிறார்கள்.
பாகிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்கள் வீடுகளில் புகுந்து பதிலடி கொடுக்கிறோம். ஆகையால்தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றிப் பேசுகிறார்கள். ஆப்பரேஷன் சிந்தூரை நடத்துகிறோம். இது அவர்களுக்கு வலிக்கிறது. ஆகையால் தான், இவர்கள் மோதிக்குக் கல்லறை தோண்ட நினைக்கிறார்கள். மாவோவாத பயங்கரவாதத்திலிருந்து, தேசத்துக்கு விடுதலை அளிக்கவேண்டி, தைரியமாகச் செயல்படுகிறோம்.
ஆகையாலே, மோதிக்குக் கல்லறை தோண்டத் துடிக்கிறீர்களா? மேலும், நேருஜி தேசத்திற்கு எதிராக, மிகப்பெரிய, அநியாயம் செய்திருந்தார். சிந்துநதிநீர் ஒப்பந்தம் விஷயத்திலே. அந்த சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை, நாங்கள் வீசியெறிந்து விட்டோம். என்ன இதற்காகவா, இதற்காகவா நீங்கள் மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷம் எழுப்புகிறீர்களா?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் பிரச்சனையே வேறு. இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மோதி இந்த அளவுக்கு எப்படி வர முடிந்தது? இவர்களுடைய பரிதவிப்பு மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. அட வந்தது தான் வந்தார், ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறார்? ஆகையால் தான், இந்த கோஷம். அவர்களிடம் ஒரே ஒரு பாதை தான் மிச்சமிருக்கிறது மோதிக்குக் கல்லறை தோண்டுவது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். இவர்களுக்கு ஜனநாயகம், அரசியல்சட்டம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. இந்த பிரதம மந்திரி பதவி அவர்களின் குடும்பச் சொத்து என்பது அவர்களுடைய எண்ணம். அதிலே வேறுயாரும் அமரமுடியாது. இவர்களுக்குள்ளே இருக்கும் காழ்ப்பு அன்பை விற்கும் கடையிலே நிரம்பியிருக்கும் நெருப்பு இருக்கிறதில்லையா, அதனுடைய விளைவு தான் இது. ஆகையினால் தான், ஏன் யாரோ அமர்ந்திருக்கிறார்கள்? நம்முடைய பாட்டன் சொத்தில்லையா? ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுகிறீர்களா? கோஷத்தை அவர்கள், ஆவேசமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் அரசகுடும்பத்துக்கு, தேசம் பல பத்தாண்டுகள்வரை சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. உங்களுக்குக் கொடுக்காமலில்லை. தேசம் உங்களிடமும் கூட, தன்னுடைய எதிர்காலத்தை ஒப்படைத்திருந்தது. ஆனால் நீங்களோ, ஏழ்மையை அகற்றுவோம் என்ற கோஷத்தை எழுப்பினீர்கள், குழப்பி விட்டீர்கள். செங்கோட்டையிலிருந்து, காங்கிரசின் ஒரு பிரதமரின் உரையிலே கூட, ஏழ்மையை அகற்றுவோம் கோஷம் எழுப்பப்படாமல் இருந்ததில்லை.
ஆனால் எந்த ஒரு பிரதமரும் ஏழ்மையை அகற்ற என்ன செய்தார்கள், அது ஒருமுறை கூட கூறப்படவில்லை. கோஷம் வெறும் வெற்று கோஷம் மட்டுமே. ஆனால், மோதி மேற்கொண்ட பாதை, ஏழைகளுக்கு அதிகாரப்பகிர்வு. ஏழைகளுக்கு அதிகாரமளித்தல். மேலும், நான் என் தேசத்தின் ஏழைகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் தாம், தேசத்தின் திட்டங்களை, புரிந்து கொண்டார்கள் ஏற்றுக் கொண்டார்கள், அதோடு தங்கள் வல்லமையை அதிகரிக்க முயன்றார்கள். நான் தேசத்தின் ஏழைகளுக்குப் பரணி பாடுகிறேன்.
அவர்கள் எங்களுடைய கொள்கைகளின் மீது நம்பிக்கை கொண்டு, எங்களுடைய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களும் கூட, தங்களையே அர்ப்பணிப்பதிலே எந்தக் குறையையும் வைக்கவில்லை. மேலும் 25 கோடி என்னுடைய ஏழைக்குடும்பச் சகோதரர்கள், ஏழ்மையைத் தோற்கடித்தார்கள். அவர்கள் தாங்களே, ஏழ்மையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். என்னுடைய 25 கோடி நாட்டுமக்கள், ஏமாற்றத்திலே இருந்தவர்கள், தொலைவிலே ஒரு நம்பிக்கைக்கீற்றுத் தெரிந்தது, எழுந்து நின்றார்கள். மேலும் இன்று, எங்களோடு இணைந்து பயணிக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, இவர்கள் அமலாக்கம் பற்றிப் பேசி வந்தார்கள். நம்முடைய நாட்டிலே, பல்லாயிரம் நபர்கள், ரயில்வே கிராசிங்கிலே இறந்து போனார்கள். பள்ளிக்கூடப் பேருந்து, ரயில்வே கிராசிங்கில் செல்கிறது, 20-30 பள்ளிக் குழந்தைகள் இறக்கும் செய்திகள் வந்தன. ஆளில்லா ரயில் கிராசிங். இது ஒன்றும் செய்ய முடியாத அளவுக்குப் பெரிய வேலையில்லை. இந்த வேலையையும் நான் வந்து செய்ய வேண்டியுருந்தது. மேலும் நாங்கள், அனைத்து ஆளில்லா ரயில் கிராசிங்குகளையும் மூடி விட்டோம். இலட்சக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். ஆகையினாலே, ஆகையாலே மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, தேசத்திலே 18,000த்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலே, மின்சாரம் என்பதற்குப் பொருள்கூடத் தெரியாது. மின்சாரத்துக்கு கம்பிகள் உண்டு பல்பு உண்டு, அதில் இருக்கும் ஃபிலமண்ட் ஒளிவிடும் என்பது பற்றி அவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. 18,000 கிராமங்கள், 2014ற்குப் பிறகு, நாட்டுமக்கள் எங்களுக்குப் பொறுப்பினைக் கொடுத்த போது, மின்சாரம் என்றால் என்ன என்பதே அறிந்திராத மின்சாரம் என்ற சொல்லைக்கூட அறியாத அந்த 18,000 கிராமங்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தோமே, அதற்காகவா, ஆகையால் தான் மோதிக்குக் கல்லறை தோண்டுவதைத் தவிர வேறு வழியேதும் உங்களுக்குத் தெரியவில்லை.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அப்படியும் ஒரு காலம் இருந்தது, தேசத்தில் மீண்டும் மீண்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இருந்தன, எல்லைப்புறங்களின் நிலைமை பற்றி அறிக்கைகள் வெளியாகின, தோட்டாக்கள் குண்டுகள் இல்லை, புல்லட்ப்ரூஃப் ஜாக்கட்டுகள் இல்லை, உறைபனியிலே நிற்க வேண்டியிருக்கிறது, ஆனால் காலில் அணிந்து கொள்ள காலணிகள் தேவை அவைகூட நம்மிடம் இல்லை. இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன.
நாங்கள், நாட்டின் இராணுவ வீரர்களுக்கு கஜானாவைத் திறந்து விட்டோம். தேசத்தின் இராணுவத்தினருக்கு என்ன தேவையோ அதை அளிக்க உறுதி பூண்டோம். ஆகையினால் தான், ஆகையால் வேறு எந்த வழியும் மிச்சமில்லை என்று நினைத்து, அடுத்து, மோதிக்குக் கல்லறையைத் தோண்டலாம், இந்த மீதமிருக்கும் பாதையில் செல்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஒருமுறை உத்திர பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர், நாடாளுமன்றத்திலே, உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார். மூளைக்காய்ச்சல் காரணமாக, குழந்தைகள், கணக்கேயில்லாத குழந்தைகள் இறந்து கொண்டிருந்தன. இவர்களுக்கு இது தோன்றவே இல்லை, இந்த மூளைக்காய்ச்சலிலிருந்து, நிவாரணம் பெற முடியும் என்ற விஷயம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, கண்களின் நோயான ட்ராகோமா, மக்கள் பிரச்சனைக்கு ஆளானார்கள் கண்பார்வை இழந்தார்கள். ஆனால் விஞ்ஞானம் முன்னேறியிருந்தது குணமாக்குதல் சாத்தியம். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. நாங்கள் மூளைக்காய்ச்சலிலிருந்தும் நிவாரணம் அளித்தோம், ட்ராகோமாவிலிருந்து மக்களுக்கு குணமளித்து அவர்கள் பார்வையைக் காத்தோம். இவைதாம் வெற்றிகள், இவைதாம் புரிந்துணர்வோடு செயல்படுதல். சமுதாயத்திற்காக உயிர்வாழ்தல் என்ற உறுதிப்பாடு இது.
கணம்தோறும், இதயத்தூறும், சமூகத்திற்காகவே வாழ்ந்து மடியும் உணர்வு, தாகம், அது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான், மோதிக்காக கல்லறை தோண்டுகிறார்கள். இந்த மந்திரத்தின் துணையோடு பயணிக்கிறார்கள். இந்தக் கனவைக் கண்டுகொண்டு செல்கிறார்கள். ஆனால் பேச்சு என்னமோ ஜனநாயகம் பற்றியிருக்கும். அன்பை விற்கும் கடைக்கு, விளம்பரப் பதாகை கழுத்தில். பொதுவாழ்க்கையிலே இப்படியா நடந்து கொள்வது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்களுடைய அரசாங்கம், ரிமோட்டில் இயங்கியது. என்னுடைய அரசாங்கமும் ரிமோட்டிலே இயங்குகிறது. 140 கோடி நாட்டுமக்கள் என்னுடைய ரிமோட்டுகள். 140 கோடி நாட்டுமக்களின் கனவுகள், 140 கோடி நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகள், தேசத்தின் இளைஞர்களின் உறுதிப்பாடுகள், இவற்றுக்காக நாங்கள் உயிர் வாழ்கிறோம். இவர்களுக்காக அரசாங்கம் நடத்துகிறோம். அதிகாரம் எங்களுக்கு சுகத்துக்கான பாதையல்ல. அதிகாரம் எங்களுக்கு சேவை செய்யும் வழி. முத்ரா திட்டத்தால், கோடானுகோடி பேருக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
சுயவேலைவாய்ப்புக்கு பலமளித்திருக்கிறது. காங்கிரஸ் என்றைக்குமே, ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தியதே இல்லை. இருந்த கொஞ்சநஞ்ச ஸ்டார்ட் அப்புகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இவர்களுடைய நிலைமை மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, தங்கள் வீட்டின் ஸ்டார்ட் அப்பைக்கூட, இவர்களால் தூக்கிவிட முடியவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியிலே இன்று, 2 இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன.
எப்போது வெற்றி மீது வெற்றிகள், சாமான்ய மக்களுக்குப் புலப்படும் போது, இந்தநிலையில் பாருங்கள், இவர்களிடம் ஒரேபாதை தான் மிஞ்சியிருக்கிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம். ஆனால், அந்தக்காலத்தை நினைத்துப் பாருங்கள், பிஎஸ் என் எல் தொடர்பாக துணுக்குகள் பேசப்பட்டன. கேலிச்சித்திரங்கள் போடப்பட்டன. ஆனால் இன்று, சுதேசி 4ஜி அமைப்பை, நாங்கள் எழுப்பியிருக்கிறோம்.
5ஜியை உலகிலேயே மிக விரைவாக அமல்செய்யும் பணியை நாங்கள் செய்திருக்கிறோம். தகவல் தொலைதொடர்பின் புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம், புதிய எண்ணப்பாடு, இவற்றை நாங்கள் மேம்படுத்தினோம். ஆகையினால் தான், வலி, நாக்கில் வெளிப்படுகிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஏழைகளின் சேவை, இது எங்களுடைய பெரும்பேறாகும். 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் அளிப்பது, இதை வாழ்வின் பெருநிம்மதியாக நினைக்கிறேன். மின்சாரம்…. குடிநீர்….. எரிவாயு சிலிண்டர், கழிப்பறை வசதி, எனக்கு, என்ன படுகிறதென்றால் ஆம், இறைவன் எனக்கு, சரியான திசையில் பணியாற்றும் உத்வேகத்தை அளித்திருக்கிறான். முதன்முறையாக ஒரு கிராமத்துப் பெண் பெருமையோடு கூறுகிறார் ஆம், நான் லட்சாதிபதி தீதி ஆகியிருக்கிறேன். அதற்கு இன்னொருவர் கூறுகிறார், இந்த ஆண்டுக்குள்ளாக நானும் இலட்சாதிபதி தீதியாகி விடுவேன். யார் ஆகிவிட்டாரோ அவரிடம் கேட்டால், இல்லை ஐயா நான் அடுத்து கோடீஸ்வரி ஆவதில் ஈடுபட்டிருக்கிறேன்.
இது இந்த எண்ணத்தின் மாற்றம் தன்னம்பிக்கை அதிகரிப்பு இது தான் முக்கியம். இப்படியாக, கோடானுகோடி நாட்டுமக்களின் நல்லாசிகள் எந்த மனிதனிடம் இருக்கின்றனவோ, கோடானுகோடி தாய்மார்கள் சகோதரிகள் என்ற பாதுகாப்பு கவசம் இருக்கும் போது, எத்தனை கோஷங்களை வேண்டுமானாலும் எழுப்புங்கள், கல்லறையை உங்களால் தோண்ட முடியாது, இந்த தேசத்தின் சக்தி, ஆசிகள் வடிவிலான கவசம், தாய்மார்கள் சகோதரிகளிடம் என் பொருட்டு இருக்கும் உணர்வு, இந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, தாய்மார்கள் சகோதரிகளுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். யாருமே மதிக்காத அந்த மனிதர்களுக்கு, மோதி பூஜை செய்கிறேன். வணங்குகிறேன். அவர்களின் இந்த ஆசி தான், இவர்களை முள்ளாய் குத்துகிறது, கல்லறை தோண்டச் செய்கிறது.