ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இரண்டாம் நாள் – சிறிய அணிகள் சிறப்பான ஆட்டம்
இன்று (08.02.2026) ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் சென்னையில் காலை 1100 மணிக்கும் இங்கிலாந்து நேபாள அணிகள் மும்பையில் மதியம் 0300 மணிக்கும் கடைசி ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் இரவு 0700 மணிக்கும் விளையாடின.
நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி
சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் பூவா தலையா வென்று ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. அந்த அணியின் குல்பதன் நயிப் 63 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 183 ரன் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டிம் செய்ஃபெர்ட் 65 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 42 ரன்னும் அடித்தனர்.
நேபாள அணியின் சிறப்பான ஆட்டம்
மும்பையில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்று இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. ஜாகப் பெத்தேல் (55 ரன்), ஹாரி ப்ரூக் (53 ரன்), வில் ஜேக்ஸ் (ஆட்டமிழக்காமல் 39 ரன்) சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 180 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் 10 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன் எடுக்கவேண்டிய நிலை; ஆட்டத்தை இந்த அளவிற்கு கொண்டு சென்றதற்காக நேபாள அணி பாராட்டப்படவேண்டும்.
அயர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்
இலங்கை கொழும்புவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் (56 ரன்), கமிந்து மெண்டிஸ் (44 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 143 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஸ் அடேர் (34 ரன்), ஹாரி டெக்டர் (40 ரன்), லார்கன் டக்கர் (21 ரன்) சிறப்பாக ஆடினர். ஒன்பதாவது ஓவர் முதல் 17ஆவது ஓவர் வரை அயர்லாந்து இந்த ஆட்டத்தை வென்றுவிடு என்றே தோன்றியது. ஆனால் இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களால் வெற்றி சாத்தியமானது.
நாளை (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொழும்புவில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அனிகள் விளையாடுகின்றன.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த மன்றத்தின் உயர்வான அவை, ஒருவகையிலே மாநிலங்களின் பிரதிநிதியாக விளங்குகிறது. இன்று நடந்த விவாதங்களை, நுணுக்கமாக, நான் பார்த்தபோது, இதன் நிலை இன்னும் சற்று உயர்வாக இருக்க வேண்டும் என்று என் மனம் அவாவியது. அவர்கள் தரப்பில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், அவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள். அவர்கள் தரப்பில் விவாதங்ளின் தரம் இன்னும்கூட அதிகம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள். தேசம் இனி அவர்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நான் நேற்று ஒரு, மாண்புமிகு உறுப்பினர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தன்னை அரசர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். ஆனால், அவர், பொருளாதார, சீரற்றத்தன்மை பற்றி விவாதம் செய்தார். சொல்லுங்கள். தன்னை அரசராகவே கருதுபவர், அவர் பொருளாதார சமச்சீரற்ற நிலை பற்றி பேசினால், என்ன துரதிர்ஷ்டம், இப்படிப்பட்ட நாட்களையும் தேசம் காண வேண்டியிருக்கிறதே?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நம்முடைய டிஎம்சியின் நண்பர்கள் நிறைய விஷயங்களைச் சொன்னார்கள். சற்று நீங்களே உங்களை, கண்ணாடியிலே பார்த்துக் கொள்ளுங்கள். கருணையே இல்லாத அரசாங்கம், அராஜகத்துக்கு எத்தனை அளவுருக்கள் இருக்குமோ, அந்த எல்லா அளவுருக்களிலும், புதியபுதிய சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீங்களா உபதேசம் செய்கிறீர்கள்? எந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? இப்படிப்பட்ட அரக்கத்தனமான அரசாங்கத்தால், அங்கே இருப்போரின் எதிர்காலம், இருளிலே மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதிகார சுகத்தைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் நீங்களா, இங்கே உபதேசம் செய்கிறீர்கள்? ஊடுறுவல்.
உலகின் எத்தனையோ வளமையான நாடாக இருந்தாலும், தங்கள் நாட்டிலிருந்து, குடிமக்கள் அல்லாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டிலே ஊடுறுவியிருப்பவர்களைக் காப்பாற்ற, நீதிமன்றங்களின் மீது அழுத்தம் அளிக்கப்படுகிறதே!! என்னுடைய தேசத்தின் இளைஞர்கள் எப்படி இப்படிப்பட்டவர்களை மன்னிப்பார்கள்? இவர்கள் ஊடுறுவல்காரர்களைக் காப்பாற்றுவதிலே முனைப்போடு இருக்கிறார்கள்!! இந்த ஊடுறுவல்காரர்கள், என்னுடைய தேசத்தின் இளைஞர்களின் உரிமைகளைக் களவாடுகிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் திருடுகிறார்கள். பழங்குடி மக்களின் நிலத்தைக் கவர்கிறார்கள். பெண்கள் சகோதரிகளின் வாழ்க்கையை அபாயம் சூழத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டால் அது பாட்டுக்கு நடக்கட்டும். அரசு இயந்திரங்கள் இதிலே ஒன்றும் செய்யாது.
இவர்களா நமக்கு இங்கே உபதேசம் செய்கிறார்கள்? இப்படிப்பட்ட கவலைதரும் அனைத்து விஷயங்களிலும், கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர்கள் தாம் இவர்கள். மதிப்புமிக்க இன்னுமொரு உறுப்பினர், நிறைய பேசிக் கொண்டிருந்தார். இவருடைய ஒட்டுமொத்த அரசும் சாராயத்தில் மூழ்கிப் போயிருக்கிறது. இவருடைய கண்ணாடி மாளிகை, வீடுகள்தோறும் வெறுப்பின் காரணமாகி இருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை கருப்பு என்ற சொல் பிடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் என்று உண்டல்லவா? கருப்புப் பொருட்களுடன் அவர்களுக்கு என்ன பழைய உறவு இருந்தது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்படிப்பட்ட அனைத்து நண்பர்களிடமும், நான் கண்டிப்பாக ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும். நீங்கள், எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும். கண்ணாடியைப் பார்த்துவிட்டால், அப்போது உங்கள் உண்மையை, எங்கே மறைப்பீர்கள்? காங்கிரஸாகட்டும், டிஎம்சியாகட்டும், டிஎம்கேயாகட்டும், இடதுசாரியாகட்டும், இவர்கள் பல பத்தாண்டுகளாக, மத்தியிலே அதிகாரத்திலே இருந்திருக்கிறாரகள். அதிகாரத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மாநிலங்களிலும் கூட ஆட்சி நடத்த அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அவர்களுடைய அடையாளம் என்னவாக இருந்தது? இன்று ஒப்பந்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம், நம்மால் பெருமையாகச் சொல்ல முடிகிறது. அப்போது ஒப்பந்தம் பற்றிப் பேசினால் போஃபோர்ஸ் ஒப்பந்தம் என்றானது. இந்த டீல்கள் தாம் நடந்தன. அவர்கள் தங்கள் பைகளை ரொப்பிக் கொள்ளும் வேலையைச் செய்தார்கள். குடிமக்களின் வாழ்க்கையிலே மாற்றங்கள் ஏற்படுத்துவது, அவர்களின் முதன்மையாக இருக்கவில்லை.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நேற்று அவையில் நடந்த சம்பவம், இதே அவையின் ஒரு மதிப்பிற்குரிய உறுப்பினர், காங்கிரசினுடைய, வஞ்சகமான புத்தியுடைய…. அருவருப்பான குணமுடைய, இளவரசன், அவரை துரோகி என்று சொல்லி விட்டாரே!? அகங்காரம் எந்த அளவுக்கு, வானை எட்டும் வகையில் வளர்ந்திருக்கிறது!! மேலும், காங்கிரசை விட்டு எத்தனையோர் பேர் வெளியேறி இருக்கின்றார்கள். அது எத்தனை துண்டுகள் ஆகியிருக்கிறது? பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.
மற்ற யாரையும் துரோகி என்று கூறியிருக்க மாட்டாரே? ஆனால், நேற்று அவரை ஏன் துரோகி என்றார் தெரியுமா? ஏனென்றால் அவர் சீக்கியர். இது சீக்கியர்களுக்கு அவமானம். இது குருமார்களின் அவமானம். மேலும் காங்கிரசினுடைய, ஒவ்வொரு அணுவிலும் சீக்கியர் மீதான வெறுப்பு இருக்கிறதே, அதனுடைய ஒரு….. வெளிப்பாடு தான். அவர் இதே அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர். ஆனால் இளவரசுக்கோ, கொஞ்சமும் பொருட்டல்ல. இல்லையென்றால் இன்று எழுந்து நின்று கூறியிருக்கலாமே.
நேற்று நடந்தவை, இதே அவையினுடைய, உறுப்பினருடைய கண்ணியத்துக்கு, உகந்ததாக இல்லை, அதற்கு வருந்துகிறேன், என்று ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாமே!! ஆனால், சீக்கியர்களுக்கு எதிராக அவர் மனதில் படிந்திருக்கும் வெறுப்புணர்வு, இதன் காரணமாகவே, அப்படி நடந்து கொண்டார். மேலும் அவருடைய குடும்பம், தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் உறுப்பினர். அவர் தன்னுடைய அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொண்டார் என்பதற்காக துரோகி என்றா அழைப்பீர்கள்? மேலும் இந்த துரோகி என்ற சொல் லேசான சொல் அல்ல. என்னுடைய நாட்டுமக்களை ஒருவர் துரோகி என்று அழைப்பதை, எப்படி தேசம் பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும் அவர் ஒரு சீக்கியர் என்பதால் துரோகி என்று அழைப்பீர்களா? மிகவும் அவமானகரமான விஷயம். இப்படிப்பட்டவர்கள், காங்கிரசை முட்டுசந்தில் தானே கொண்டு நிறுத்துவார்கள் ?
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிறு இன்று குரூப் -2 , குரூப் -2ஏ தேர்வுகள் நடைபெற இருந்தன. உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த சூழலில், இன்று சென்னையில் சில இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன . இதனால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்தார். இதனால் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கடைசி நேரம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு அரசியல் மட்டத்தில் பெரும் விமர்சனம் எழுந்தது.
இளைஞர் வாழ்வை வஞ்சிக்கும் திமுக.,
டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் திமுக அரசு..!லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்து வாழ்வை அழிக்கும் திமுக அரசு.. என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள
TNPSC நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில் தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், போலி திராவிட மாடல் திமுக அரசும் இருக்கிறது. திமுக அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு. அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் திமுக மன்னர் குடும்பமும் திமுக அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். – என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் திட்டமிட்ட சதி?
பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு – என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். – என்று, பாஜக., தலைவர்களில் ஒருவரான கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மாடல் அரசால் மாணவர் வாழ்க்கை கேள்விக்குறி
மீண்டும் மீண்டும் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் திராவிட மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் C.P. சண்முகம் அறிக்கை வெளியிட்டார். அதில்,
இன்று தமிழகமெங்கும் நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கிய நிலையில் சென்னையில் பிரசிடென்சி நந்தனம் மற்றும் வைஷ்ணவ் தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதாகக்கூறி ஒட்டுமொத்த தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் ஆண்டு கணக்கில் இதற்காக படித்து தேர்வு மையத்தில் வந்து அமர்ந்தபின் தேர்வு ரத்து என்று கூறுவது இளைஞர்களது மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாமல் நம்பிக்கையற்ற தன்மையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மூன்று மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக ஒட்டுமொத்தமாக தேர்வு ரத்து செய்திருப்பதை பார்க்கும் போது, இதில் டெக்னிக்கல் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளதா? அல்லது வினாத்தாள் முன்கூட்டியே கசிவது அல்லது சதி ஏதாவது நடந்திருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோல் குளறுபடிகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த முறை குரூப் 4 தேர்வு நடைபெற்ற போது வினா தாள்கள் முறையான பாதுகாப்பின்றி பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதை நாம் அறிவோம்.
ஒரு தேர்வினை ரத்து செய்வதென்பது ஏதோ ஒரு நாள் நிகழ்வை ரத்து செய்தது போல் கிடையாது. அத்தேர்விற்கான தயாரிப்புகளை கடந்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தேர்விற்காக அவர்கள் கட்டும் கட்டணமும் தேர்வு எழுதுவதற்காக அவர்கள் பயணம் செய்து செலவிடும் கட்டணங்களும் பல குடும்பங்களின் ஒரு சில நாள் வாழ்வாதாரத்தையே மாற்றும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதை ஆளும் திமுக அரசுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.
மேலும் இது போல் தேர்வுகளை ரத்து செய்யும்போது மாணவர்களின் மனநிலையையும் இது பெரிய அளவில் பாதிக்கும். இது மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாகும்.
எனவே தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதோடு,இன்று நடைபெற்ற இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து இளைஞர் முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது… – என்று குறிப்பிட்டார்.
வரலாற்றிலேயே முதல் முறை…
TNPSC Group 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை… திமுக ஆட்சியில் ‘நிர்வாகம்’ என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. – என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்குதுப்பு இல்லை!
அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 தேர்வுகள் ரத்து: போட்டித்தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை! என்று பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்
காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார்; நேரு அதிகாரத்தை அடைய பிரிவினைக்கு தயாரானார்!
— ராம் மாதவ் தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது.
நாதுராம் கோட்சே காந்தியை கொன்றது தவறு. அது மட்டுமல்ல அதற்கு அவன் முன்வைத்த காரணங்களும் தவறு என்று நான் எழுதியிருந்தேன்.
1947 இல் இந்திய பிரிவினைக்கு காந்தி தான் காரணமென கோட்சே நினைத்தான். காந்தியை விட மிக அதிக காரணம் காங்கிரஸ் உயர்த்தி பிடிக்கும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களே என்று என் கட்டுரையில் வாதிட்டிருந்தேன். செய்தி தொடர்பாளரின் கட்டுரை காங்கிரஸ் கட்சியின் விரக்தியை காட்டுகிறது. ஆத்திரத்தில் அவர் சுழற்றிய சாட்டை அவரையே அடித்திருக்கிறது.
பிரிவினையை தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்தார் நேரு.
நேருவின் கபட வேடத்தை முதலில் அம்பலப்படுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். 1939 மார்ச்சில் அவர் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், நேருவின் தவறான அரசியல் நடவடிக்கைகளையும் கொள்கை தெளிவின்மையையும் கபட தன்மையையும் விமர்சித்திருந்தார். அதற்கு கடிதம் மூலம் பதிலளித்த நேரு, போஸ் சுட்டிக்காட்டிய தன்னுடைய குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் காந்தியுடன் தனக்குள்ள உறவு கெடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக வலியுறுத்தி இருந்தார்.
காந்தியிடம் இருந்த விசுவாசம் கொள்கை சார்ந்தது அல்ல. மாறாக காங்கிரஸ் கட்சியில் தான் உயர்வதற்கு காந்தியின் ஆதரவு அவசியம் என்று நேரு நம்பியதை அந்த கடிதம் காட்டுகிறது.
1942 இல் வார்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ‘ ஜவஹர்லாலை என்னுடைய வாரிசாக கருத வேண்டும். நான் இப்போது செய்வதை நான் போன பிறகு அவர் தொடர்ந்து செய்வார். அப்போது என்னுடைய மொழியிலேயே அவர் பேசுவார்’, என்று காந்தி அறிவித்தார்.
ஆனால் வெகு விரைவிலேயே நேரு தன்னுடைய ஆதரவை விரும்புகிறாரே தவிர தன்னுடைய சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை என்பதை காந்தி புரிந்து கொண்டார். இந்த பரிதாபத்தை 1945 இல் அவர்கள் இருவரிடையே நடந்த கருத்து, கடித பரிமாற்றத்தில் தெரிந்து கொள்ளலாம்.
காந்தி எழுதிய கடிதத்தில், இருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு ‘அடிப்படையானது’ என்றால் ‘பொதுமக்களுக்கு அது பற்றி தெரிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நேரு, காந்தியின் ஹிந்து ஸ்வராஜ்யா கருத்துக்கள் ‘நடைமுறைக்கு பொருந்தாது’ என்றும் அதை காங்கிரஸ் ‘என்றும் பரிசீலனை செய்யவில்லை’ என்பது மட்டுமல்ல ‘ஏற்றுக்கொள்ளவும் இல்லை’ என்று எழுதினார். இந்த விஷயத்தை விடுதலை பெற்ற பிறகு நாடே தீர்மானிக்க விட்டுவிடலாம், என்று அந்த கடிதத்தில் சொல்லி விவாதத்தை தவிர்த்து விட்டார்.
நேருவின் நோக்கம் தெளிவாக இருந்தது. மக்கள் தன்னை காந்தியின் அரசியல் வாரிசாக நம்ப வேண்டும். அதேவேளையில் தான் அவரது கொள்கை வாரிசு அல்ல என்ற உண்மையை தெளிவு படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்.
பிறகு பிரிவினை சவால் வந்தது. அதை தவிர்க்க காந்தி உறுதி பூண்டார். ஆனால் நேருவும் மற்றவர்களும் அப்படியில்லை. 1946 கேபினட் மிஷன் திட்டம் போன்ற வாய்ப்புகள் வந்தன. அந்த திட்டத்தின்படி வட மேற்கில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள், இந்து பெரும்பான்மை உள்ள பகுதிகள், வங்காளம் அஸ்ஸாம் பகுதிகள் என மூன்று பிரிவுகளாக மாகாணங்களை பிரிக்கலாம். மத்திய அரசிடம் இராணுவம், அயலுறவு , தொலைதொடர்பு என்ற துறைகள் மட்டும் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இது மத ரீதியான பிரிவினை என்று காந்தி எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு இதை ஏற்றுக் கொண்டது. தேசப் பிரிவினையை இது தவிர்க்கும் என்றது.
ஆனால் நேரு தன்னிச்சையாக செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில், ‘பலவீனமான மத்திய அரசை காங்கிரஸ் விரும்பவில்லை. அது மட்டும் அல்ல இது அணி பிரிப்பதாக உள்ளது’, என்றார். ஆரம்பத்தில் இருந்தே இந்த திட்டம் ஜின்னாவுக்கு பிடிக்கவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் நேரு சொன்னதையே சாக்கிட்டு ஜின்னா இந்த திட்டத்திலிருந்து விலகினார்.
அதன் பிறகு ஜூன் 3 ம் தேதி திட்டம் என்ற பிரிவினை திட்டம் வந்தது. நேருவும் அவரது சகாக்களும் அவசர அவசரமாக அதை ஆதரித்தனர். அதனால் காந்தி தலையிட்டு அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.
காந்தி நாட்டை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்கும் நோக்கில் செயல்பட்டார். ஆனால் பிரிவினை ஏற்பட்டாலும் பரவாயில்லை பதவி அதிகாரம் வந்தால் போதும் என்ற நோக்கத்தில் நேரு செயல்பட்டார். இதைதான் நான் போன வாரம் எழுதிய கட்டுரையில் விளக்கியிருந்தேன்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் : இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி முதல் நாள் – இந்திய அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை என்பது ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் பத்தாவது பதிப்பாகும், இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆகியவற்றால் இணைந்து பிப்ரவரி 7, 2026 முதல் மார்ச் 8, 2026 வரை நடத்தப்படுகிறது. இலங்கை இதற்கு முன்பு 2012இல் போட்டியை நடத்தியது மற்றும் 2016இல் இந்தியா நடத்தியது. இந்தியாவில் ஐந்து இடங்களிலும் இலங்கையில் மூன்று இடங்களிலும் மொத்தம் இருபது அணிகள் 55 போட்டிகளில் போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டியில் இருபது அணிகள் போட்டியிடுகின்றன, இதில் இரண்டு போட்டியை நடத்தும் அணிகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள். முந்தைய பதிப்பின் முதல் ஏழு அணிகளில் ஆறு, டி20ஐ அணி தரவரிசையில் ஏற்கனவே தகுதி பெறாத நான்கு உயர் தரவரிசை அணிகள் மற்றும் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும் எட்டு அணிகள் அடங்கும். இத்தாலி முதல் முறையாக ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. முந்தைய பதிப்பை வென்ற இந்தியா நடப்பு சாம்பியன் ஆகும்.
ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலகக் கோப்பையாகும். இது முதன்முதலில் 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. 2024இல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஒன்பதாவது பதிப்பில் 20 அணிகள் போட்டியிட்டன, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா வென்றது.
இந்தப் போட்டியின் வடிவம் முந்தைய பதிப்பைப் போலவே இருக்கும். தகுதி பெறும் 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு நிலையில், ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் விளையாடும், மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்கு முன்னேறும். அங்கு அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக வைக்கப்படும். போட்டிக்கு முன்னதாக, ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் எட்டு தரவரிசைப்படுத்தப்பட்ட அணிகளை ஐசிசி அறிவித்தது. அவை குழு நிலையில் அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் சூப்பர் 8 கட்டத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும். ஒரு தரவரிசைப்படுத்தப்படாத அணி ஒரு தரவரிசைப்படுத்தப்பட்ட அணியின் இழப்பில் தகுதி பெற்றால், அது தங்கள் குழுவிலிருந்து தகுதி பெறத் தவறிய தொடர்புடைய தரவரிசைப்படுத்தப்பட்ட அணியின் நிலையை எடுக்கும். சூப்பர் 8 கட்டத்தில், ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற ஒவ்வொரு அணியுடனும் ஒரு முறை விளையாடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் நிலைக்கு முன்னேறும், இதில் இரண்டு அரையிறுதிகள் உள்ளன, அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
A, B, C, D என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள குழுக்களில் இடம் பெறும் அணிகள் பின்வருமஆறு.
குழு A – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா
குழு B – ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமான்
குழு C – இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி
குழு D – நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
07.02.2026 – இன்றைய ஆட்டங்கள்
டி20 உலகக் கோப்பையின் ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் ஆட்டம் இலங்கையில் கொழும்புவில் காலை 1100 மணிக்குத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் ஸ்காட்லாந்து அணிக்கும் இடையில் நடைபெற்றது. ஸ்காட்லாந்து அணி போட்டியில் இருந்து விலகிய வங்கதேச அணிக்குப் பதிலாக விளையாடுகிறது. முதலில் ஆடிய மே. இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 147 ரன் எடுத்தது. இதனால் மே.இ.தீவுகள் அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூன்றாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா, அமெரிக்கா அணிகளுக்கிடையே நந்தது. முதலில் ஆடிய இந்திய 20 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 132 ரன் எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் அடித்தார். அதற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நீண்டநாட்களுக்குப் பின்னர் ஆடிய முகம்மது சிராஜ் மூன்று விக்கட்டுகள் எடுத்தார்.
நாளை (08.02.2026) ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து அணைகள் சென்னையில் காலை 1100 மணிக்கு ஆடுகின்றன. இங்கிலாந்து நேபாள அணிகள் மும்பையில் மதியம் 0300 மணிக்கு விளையாடுகின்றன. கடைசி ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் இரவு 0700 மணிக்கு விளையாடுகின்றன.
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டது.இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராத வரி விதிப்பதாகக் கூறி, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை, நீக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதை அடுத்து, இந்த வரி திரும்பப் பெறப்பட்டுள்ள்து.
அமெரிக்கா- இந்தியா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தயாராகியுள்ளது. இது தொடர்பான கூட்டறிக்கையை இறுதி செய்து இரு நாடுகளும் கையெழுத்திட்டது. இந்தக் கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள தகவல்கள்…
பரஸ்பர மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தத்திற்கான (இடைக்கால ஒப்பந்தம்) ஒரு கட்டமைப்பை எட்டியுள்ளதாக அமெரிக்காவும் (அமெரிக்காவும்) இந்தியாவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.
பிப்ரவரி 13, 2025 அன்று ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் தொடங்கப்பட்ட பரந்த அமெரிக்க-இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) பேச்சுவார்த்தைகளுக்கான நாடுகளின் உறுதிப்பாட்டை இன்றைய கட்டமைப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இதில் கூடுதல் சந்தை அணுகல் உறுதிப்பாடுகள் மற்றும் மிகவும் உறுதியான விநியோகச் சங்கிலிகளை ஆதரிக்கும். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தம் நமது நாடுகளின் கூட்டாண்மையில் ஒரு வரலாற்று மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்தும், இது பரஸ்பர நலன்கள் மற்றும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் பரஸ்பர மற்றும் சமநிலையான வர்த்தகத்திற்கான பொதுவான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
* அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகளில் பின்வருவன அடங்கும்:
இந்தியா அனைத்து அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் உலர்ந்த டிஸ்டில்லர்களின் தானியங்கள் (DDGs), விலங்கு தீவனத்திற்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் மற்றும் கூடுதல் தயாரிப்புகள் உள்ளிட்ட பரந்த அளவிலான அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை நீக்கும் அல்லது குறைக்கும்.
* அமெரிக்காவின் அனைத்து தொழில்துறைப் பொருட்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
ஏப்ரல் 2, 2025 தேதியிட்ட நிர்வாக ஆணை 14257 (பெரிய மற்றும் தொடர்ச்சியான வருடாந்திர அமெரிக்க பொருட்கள் வர்த்தக பற்றாக்குறைக்கு பங்களிக்கும் வர்த்தக நடைமுறைகளை சரிசெய்ய பரஸ்பர வரியுடன் இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துதல்) இன் கீழ், திருத்தப்பட்டபடி, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பிறப்பிடப் பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத பரஸ்பர வரி விகிதத்தைப் பயன்படுத்தும், மேலும் இடைக்கால ஒப்பந்தத்தின் வெற்றிகரமான முடிவுக்கு உட்பட்டு, செப்டம்பர் 5, 2025 தேதியிட்ட நிர்வாக ஆணை 14346 உடன் இணைக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட கூட்டாளர்களுக்கான சாத்தியமான கட்டண சரிசெய்தல்களில் (பரஸ்பர வரிகளின் நோக்கத்தை மாற்றியமைத்தல் மற்றும் வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை நிறுவுதல்) அடையாளம் காணப்பட்ட பரந்த அளவிலான பொருட்களின் மீதான பரஸ்பர வரியை நீக்கும்.
* விவசாயப் பொருட்களில் உலர்த்தப்பட்ட தானியங்கள், சிவப்பு சோளம், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் ஆகியவை அடங்கும்.
மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்ட பிரகடனம் 9704 (அமெரிக்காவிற்கு அலுமினிய இறக்குமதியை சரிசெய்தல்) திருத்தப்பட்டபடி; மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்ட பிரகடனம் 9705 (அமெரிக்காவிற்கு எஃகு இறக்குமதியை சரிசெய்தல்) திருத்தப்பட்டபடி; மற்றும் ஜூலை 30, 2025 அன்று வெளியிடப்பட்ட பிரகடனம் 10962 (அமெரிக்காவிற்கு செம்பு இறக்குமதியை சரிசெய்தல்) திருத்தப்பட்டபடி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை நீக்க விதிக்கப்பட்ட இந்தியாவின் சில விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் மீதான வரிகளையும் அமெரிக்கா நீக்கும். இதேபோல், அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க, மே 17, 2019 அன்று வெளியிடப்பட்ட பிரகடனம் 9888 (அமெரிக்காவிற்கு ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்களை இறக்குமதி செய்வதை சரிசெய்தல்) திருத்தப்பட்டபடி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை நீக்க விதிக்கப்பட்ட கட்டணத்திற்கு உட்பட்டு, வாகன பாகங்களுக்கான முன்னுரிமை கட்டண விகித ஒதுக்கீட்டை இந்தியா பெறும். மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் குறித்த அமெரிக்க பிரிவு 232 விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பொதுவான மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை மூலம் முடிவுகளைப் பெறும்.
அமெரிக்காவும் இந்தியாவும் அந்தந்த ஆர்வமுள்ள துறைகளில் நிலையான அடிப்படையில் ஒருவருக்கொருவர் முன்னுரிமை சந்தை அணுகலை வழங்க உறுதிபூண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள் முக்கியமாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் கிடைப்பதை உறுதி செய்யும் தோற்ற விதிகளை அமெரிக்காவும் இந்தியாவும் நிறுவும்.
இருதரப்பு வர்த்தகத்தை பாதிக்கும் வரி அல்லாத தடைகளை அமெரிக்காவும் இந்தியாவும் நிவர்த்தி செய்யும். அமெரிக்க மருத்துவ சாதனங்களின் வர்த்தகத்திற்கு நீண்டகாலமாக உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய இந்தியா ஒப்புக்கொள்கிறது; அமெரிக்க தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொருட்களுக்கான சந்தை அணுகலை தாமதப்படுத்தும் அல்லது அளவு கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி உரிம நடைமுறைகளை நீக்குகிறது; மற்றும் ஒப்பந்தம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அல்லது சோதனைத் தேவைகள் உட்பட சர்வதேச தரநிலைகள், அமெரிக்க ஏற்றுமதிகள் அடையாளம் காணப்பட்ட துறைகளில் இந்திய சந்தையில் நுழைவதற்கான நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை தீர்மானிக்கிறது. நீண்டகால கவலைகளைத் தீர்க்க இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தில் நீண்டகாலமாக நிலவும் வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்யவும் இந்தியா ஒப்புக்கொள்கிறது.
பொருந்தக்கூடிய தொழில்நுட்ப விதிமுறைகளுடன் இணங்குவதை எளிதாக்கும் நோக்கங்களுக்காக, அமெரிக்காவும் இந்தியாவும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட துறைகளுக்கான அந்தந்த தரநிலைகள் மற்றும் இணக்க மதிப்பீட்டு நடைமுறைகளைப் பற்றி விவாதிக்க விரும்புகின்றன.
இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட வரிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், மற்ற நாடு அதன் உறுதிப்பாடுகளை மாற்றியமைக்கலாம் என்று அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்புக்கொள்கின்றன.
BTA பேச்சுவார்த்தைகள் மூலம் சந்தை அணுகல் வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் பாடுபடும். BTA பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா கவனத்தில் கொள்ள விரும்புவதாக உறுதியளிக்கிறது.
பொருளாதார பாதுகாப்பு சீரமைப்பை வலுப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்புக்கொள்கின்றன.
இது குறித்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் , இந்தியா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மூலம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு முப்பது டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தை வாய்ப்பு கிடைக்க உள்ளது . ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை பதினெட்டு சதவீதம் ஆகக் குறைக்கும் . இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஜவுளி மற்றும் ஆடை , தோல் மற்றும் காலணிகள் , பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் , கரிம ரசாயனங்கள் , வீட்டு அலங்காரப் பொருட்கள் , கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் துறைகளில் ஒரு பெரிய சந்தை வாய்ப்பை வழங்கும் . கூடுதலாக , பொதுவான மருந்துகள் , ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் , மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்டவற்றிக்கு வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் . இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் ‘ மேக் இன் இந்தியா’ திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்
இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம் , கோதுமை , அரிசி , சோயா , கோழிப்பண்ணை , பால் , பாலாடைக்கட்டி , எத்தனால் ( எரிபொருள்) , புகையிலை பொருட்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் , கிராமப்புற வாழ்வாதாரங்களுக்காகவும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது . இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு வலுப்பெறும் . வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் இது நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும் .
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு மகத்தான செய்தி, இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகி உள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியா, அமெரிக்கா இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் ஆழப்படுத்தும். உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் நிலையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும். உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இளம் இந்திய அணி சாம்பியன் ஆனது. 14வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடைபெற்றது. ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்த பைனலில் இந்திய. இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடி காட்டி ஆடினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 80 பந்துகளில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் என எடுத்து, 175 ரன்னில் ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 , வேதாந்த் திரிவேதி 32, விஹான் மல்ஹோத்ரா 30, அபியான் குன்டு 40, அம்பரீஸ் 18 என ரன்களை சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன் எடுத்தது.
412 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் பென் டாவ்கின்ஸ் மற்றும் ஜோசப் மூர்ஸ் ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். மூர்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். டவ்கின்ஸ் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் மேயஸ் 45 ரன்னிலும், கேப்டன் தாமஸ் ரேவ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். முதல் 4 விக்கெட் வரை சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை மிகக் குறைந்த ரன் இடைவெளியில் இழக்க, இந்திய அணியின் வசம் வெற்றி சாதகமானது. காலேப் பால்கோனர் மட்டும் சிறப்பாக விளையாடி 115 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இதனால், 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி யு19 உலகக் கோப்பையை 6வது முறையாகக் கைப்பற்றியது. இதுவரை நடைபெற்ற 16 சீஸன்களில், இந்திய அணி 19 வயது உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு 10 வது முறையாக முன்னேறியது. இதில் 2000, 2008, 2012, 2018, 2022,2026 என ஆறு முறை சாம்பியன் ஆனது.
இதுவரை யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் : 2000: முகமது கைப் 2008: விராட் கோலி 2012: உன்முக்த் சந்த் 2018: பிரித்வி ஷா 2022: யாஷ் துல் 2026: ஆயுஷ் மாத்ரே
இந்தப் போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விளையாட்டு வித்தையை வெளிப்படுத்தியவர் 14 வயதே நிரம்பிய இளம் வைபவ் சூரியவன்ஷி.
இவர் ஒரு ஐபிஎல் பிளேயர். U19 போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் எல்லாம் ஒழுங்காக விளையாட மாட்டார் என்று விமர்சித்தார்கள். விஜய் ஹசாரே போட்டியில் 150+ ரன்கள் அடித்த போது இந்திய பவுலர்களிடம் மட்டும்தான் வீரத்தைக் காட்டுவான் என்றார்கள். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சரியா விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடினார். ஆக, இவர் ஐபிஎல் போட்டிக்கு தான் லாயக்கு, இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதியான ஆள் இல்லை என்று பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கிரிக்கெட்டர்களும் விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனாலும் உள்ளூரில் வைபவ்க்கு ரசிகர் படை பெரிதானது.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடியாக U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் செம காட்டு காட்டி விட்டார் சூரியவன்ஷி! 80 பந்தில் 175 ரன்கள். 15 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர். தன்னால் என்ன செய்யமுடியும் என்று இந்த உலகத்துக்குக் காட்டி விட்டார்! அடுத்து, U19 உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர் (15) அடித்து சாதனை படைத்தார்!
55 பந்தில் செஞ்சுரி, 71 பந்தில் 150 ரன்கள். அதாவது, அடுத்த 16 பந்தில் 50 ரன் சேர்த்து சாதனை.
இந்திய அணிக்கு முதல் 25 ஓவரில் 250-2 கிடைத்தது என்றால் காரணம் சூரியவன்ஷி! சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பின், அடுத்த 25 ஓவரில் 161 -7 எடுத்தது இந்திய அணி.
நான் அசாம் பற்றிப் பேசுகிறேன். அங்கே தேர்தல் என்பதால் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவங்க கொள்ளை பாவம் செஞ்சிருக்காங்க அதனால பேச வேண்டியிருக்கு. காங்கிரஸ் வாய்ப்பந்தல் மட்டும் போடும். அதை அமல் செய்வது பற்றி கொஞ்சமும் கவலை கிடையாது.
இப்போது அசாமின் போகிபீல் பாலத்தையே எடுத்துக் கொள்வோமே!! இந்த போகிபீல் பாலம், அசாமையும் அருணாச்சலையும் இணைக்கும் மிக முக்கியமான பாலம். பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொங்கலில் இருந்தது. நாங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி அதை பரிசீலனை செய்தோம். மேலும், அசாமுடன் சேர்ந்து ஒட்டுமொத்த வடகிழக்கிற்கும், மிகப்பெரிய வசதியளிக்கும் பணியை, நாங்கள் நிறைவேற்றினோம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அமலாக்க விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்றால் நாங்கள், நாங்கள் எப்போதும் ஆதாரங்களை முன்வைத்தே பேசுகிறோம். நாங்கள் திட்டங்களை நேரத்திற்குள்ளாக நிறைவேற்றுவதிலே, முன்னேறுகிறோம்…. இப்போதெல்லாம் நடக்கும் பணிகள், குறித்த காலம் முன்னேயே நடக்கிறது அதோடு, ஒட்டுமொத்த உலகும் வியந்து பார்த்தது….
நாங்கள் 2030க்குள்ளாக இந்த கட்டம் அடைவோம் என்ற போது, சூரியசக்தியிலே. ஆனால் அதை 2025லேயே அடைந்து விட்டோம். நாங்கள் எத்தனால் விஷயத்தில் தீர்மானம் செய்ததை, 2-3 ஆண்டுகள் முன்னதாகவே நிறைவேற்றி விட்டோம். முன்னதாகவே நாங்கள் நிறைவேற்றுகிறோம் அதைவிட அதிகம் எங்களுடைய அமலாக்க ஆற்றல்.
மதிப்பிற்குரிய முன்னவர் அவர்களே. பாஜகவாகட்டும் எண்டியேவாகட்டும், எங்களுடைய, அணுகுமுறை, விஷயங்களைப் பார்க்கும் எங்களுடைய பார்வை, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலே எங்களுடைய சிந்தனை, இதில் காங்கிரஸுக்கு இடையே வானுக்கும் பூமிக்குமான தொலைவு. பெரிய இடைவெளி.
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் அளிக்கிறேன். எங்களுடைய சிந்தனை என்னவென்றால், அதாவது 140 கோடி நாட்டுமக்கள், இவர்கள், எத்தனை திறமையுள்ளவர்கள், அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பார்கள். இதுதான் எங்களுடைய கருத்து. நாங்கள் நாட்டுமக்களிடம் இந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் வல்லமை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வல்லமையாகவும் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டுமக்களையே பிரச்சனையாகப் பார்க்கிறது. இதமட்டும் கூறிவிட்டு நான் சென்றால், இன்று இரவு அவர்களுக்கு தூக்கம் வராமல் போகலாம். எப்படி என்னை வையலாம் என்று திட்டம் போட்டுக்கிட்டு இருப்பார்கள்.
ஆனால் நான் உதாரணத்தோடு பேச விரும்புகிறேன், எந்த வகையிலே நாட்டுமக்களைப் பற்றி நினைக்கிறார்கள் பாருங்கள். நாட்டின் குடிமக்களைப் பற்றி, நேருஜி இந்திராஜியின் எண்ணம் எப்படி இருந்தது, நான் இந்த விஷயம் குறித்துப் பேச விரும்புகிறேன். இந்திரா அவர்கள், ஒருமுறை ஈரான் சென்றிருந்தார். அங்கே ஈரானிலே அவர் உரையாற்றி இருந்தார். அந்த உரையின் போது அவர், நேரு அவர்களுடனான தன்னுடைய உரையாடலைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரே கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கிறார், அவர்…. இந்திரா அவர்கள் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன். யாரோ ஒருவர், என்னுடைய தந்தையாரிடம் கேட்ட போது, அதாவது, நேருஜியிடம் கேட்டிருக்கிறார்கள், அதாவது அவர்முன்பாக எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன? அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? 35 கோடி.
நேருஜி என்ன பதில் கொடுத்தார்? அவர் முன்பாக இருந்த பிரச்சனை என்றால் 35 கோடி என்றார். அந்தக் காலத்திலே நமது தேசத்தின் மக்கட்தொகை 35 கோடி. அடுத்து இன்னும் கேளுங்கள்!! 35 கோடி நாட்டுமக்கள் நேரு அவர்களுக்கு பிரச்சனையாகத் தெரிந்தார்கள்.
அந்த மாதிரி ஒரு பிரதமர் சிந்திக்க முடியுமா ஐயா? மேலும், இந்த விஷயத்தை உதாரணமாக இந்திராஜி மேலும் கூறினார். இன்று நாட்டின் மக்கட்தொகை, 57 கோடியாகும். ஆகையால் என்னுடைய பிரச்சனைகளின் அளவும் அத்தனை மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது தந்தையாருக்கு 35 கோடி நாட்டுமக்கள் பிரச்சனையாகத் தெரிந்தார்கள்.
இவருக்கோ 57 கோடி, பிரச்சனையாக இருக்கிறது. இப்படியும் யாராவது இருக்க முடியுமா? தன்னுடைய நாட்டுமக்களையே பிரச்சனையாகக் கருதுவார்களா? இது தான் அவர்கள் எண்ணத்துக்கும் எங்களின் எண்ணத்துக்கும் இடையிலான வித்தியாசம். இது தான் எங்கள் அணுகுமுறைகளுக்கு இடையிலான வித்தியாசம். நேருஜியாகட்டும் இந்திராஜியாகட்டும் அல்லது ஒட்டுமொத்த காங்கிரஸ் நினைப்பாகட்டும், இவர்களெல்லாம், பாரத நாட்டுமக்களை, பிரச்சனையாகவே பார்க்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவை முன்னவர் அவர்களே, என்னுடைய பல மேற்கோள்கள் இருக்கின்றன. நான் உலகத்தின் முன்பாகவும் நாட்டின் முன்பாகவும் கூறியிருக்கிறேன். நான் என்ன கூறியிருக்கிறேனோ, அதுவே என்னுடைய உறுதிப்பாடு. எத்தனை தான் சவால்கள் முன்பாக இருக்கட்டுமே, அட 140 கோடிநாட்டுமக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.
திருட்டுத்தனம் செய்வது இவர்களுடைய பரம்பரைத்தொழில். இந்த நபர்கள், ஒரு குஜராத்தியின் குடும்பப் பெயரைக்கூட திருடி விட்டார்கள். காந்தியடிகளின் குடும்பப் பெயரைத் திருடி விட்டார்கள்.
இந்த நபர்களை, தேசத்தின் மக்கள் எத்தனை புத்திசாலிகள் என்றால், இவர்களை வெள்ளாவியில் வெளுத்துக் கட்டி விட்டார்கள் இவர்களை!
கேரளாவில் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த அங்கமாலி – சபரிமலை சபரி ரயில் திட்ட புதுப்பித்தல் பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலம் கையகப்படுத்துதல் தொடங்குகிறது. இந்த ரயில் பாதை திட்டத்தை புனலூர் வரை நீடித்திட தமிழக கேரளா ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
இந்தத் திட்டம் முதன்முதலில் 1997-98 இல் முன்மொழியப்பட்டது. பல தசாப்தங்களாக தாமதமாகி வந்த கேரளாவின் இரண்டு பெரிய ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களான அங்கமாலி – சபரிமலை (சபரி ரயில்) பாதை மற்றும் குருவாயூர் – திருநாவயா பாதை ஆகியவை ரயில்வே வாரியம் நீண்டகால முட்டுக்கட்டையை நீக்க முடிவு செய்த பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மத்திய கேரளா முழுவதும் இணைப்பு, சரக்கு மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தேங்கி நிற்கும் திட்டங்களை மீண்டும் தொடங்க கேரள மாநில அரசுடன் மத்திய அரசு சீராகவும் தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு திட்டங்களும் மீண்டும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் திருப்தி தெரிவித்தார்.
வரலாற்று பின்னணி மற்றும் மறுமலர்ச்சி
அங்கமாலி – சபரிமலை ரயில் திட்டத்திற்கு 1997–98 மத்திய ரயில்வே பட்ஜெட்டில் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தல் தடைகள் மற்றும் பிற நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அசல் விளம்பரத்திற்குப் பிறகு வெறும் 7 கி.மீ. ரயில் பாதை மற்றும் பாலம் மட்டுமே கட்டப்பட்டன.
இப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், புதுப்பிக்கப்பட்ட பின்தொடர்தல், நிதி ஆதரவு மற்றும் கொள்கை ஊக்கத்துடன் திட்டம் மீண்டும் வேகம் பெற்றுள்ளது. மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டது செயல்படுத்தும் செயல்முறையை மீண்டும் தொடங்க உதவியது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக ரயில்வே சுமார் ₹1,975 கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும், செயல்படுத்தலை விரைவுபடுத்த கேரள அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்த ரயில் திட்டங்களுக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட 105 ரயில் மேம்பாலங்களை முடிக்கவும் ஆதரவு கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் கேரளாவிற்கு ₹3,795 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
திட்ட செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தல் திட்டம்
அங்கமாலி – சபரிமலை பாதைக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ₹3,810 கோடி.
மாநில பங்கு (50%): ₹1,905 கோடி
மதிப்பிடப்பட்ட நிலம் கையகப்படுத்தல் செலவு: ~₹1,400 கோடி
தேவையான மொத்த நிலம்: சுமார் 416 ஹெக்டேர்
பாதுகாக்கப்பட்ட மாவட்டங்கள்:
எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம்
செலவுப் பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ், அதன் பங்கு நிதியைப் பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைப்பதற்கு மாநிலம் பொறுப்பாகும்.
சபரிமலை திட்டத்தின் செலவில் பாதியைப் பகிர்ந்து கொள்ளவும், நிலத்தை கையகப்படுத்தவும் மாநில அரசு அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கும். நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக அமைச்சர் வி. அப்துரஹ்மான் புதன்கிழமை எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
அங்கமாலி—சபரிமலை பாதை: 111 கி.மீ. 14 முன்மொழியப்பட்ட நிலையங்களுடன்.
111 கி.மீ. சபரிமலைக்கு அணுகலை மேம்படுத்தவும், பல உயர்நிலை மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு திறந்த ரயில் இணைப்பை வழங்கவும் சபரி ரயில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 14 நிலையங்கள்:
அங்கமாலி (0 கி.மீ)
தற்போதுள்ள நிலையத்தை ஒரு சந்திப்பாக மேம்படுத்த வேண்டும். இங்குள்ள சபரி பாதை எர்ணாகுளம் பாதையில் இருந்து இடதுபுறம் திரும்புகிறது.
காலடி (6.95 கி.மீ)
கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலடி – விமான நிலைய சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டன; இது வரையிலான பாதை கட்டுமானம் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாவூர் (16 கி.மீ)
வலுவான சரக்கு திறன் கொண்ட ஒரு பெரிய மர வர்த்தகம் மற்றும் அரிசி பதப்படுத்தும் மையம்.
ஓடக்காலி (26 கி.மீ)
இந்தப் பகுதி நெல், வாழை, ஜாதிக்காய் மற்றும் ரப்பர் சாகுபடியால் விவசாய ரீதியாக வளமாக உள்ளது.
கொத்தமங்கலம் (31 கி.மீ)
மலை சுற்றுலாவுக்கான நுழைவாயில் – மூணாறு (80 கி.மீ), அடிமாலி (50 கி.மீ) மற்றும் சீயப்பாரா நீர்வீழ்ச்சி (30 கி.மீ).
மூவாட்டுபுலா (40 கி.மீ)
வரவிருக்கும் கொச்சி – தேனி கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில்.
வாஜகுளம் (48 கி.மீ)
கேரளாவில் அன்னாசி நகரம்; இந்த நிலையம் தொடுபுலா சாலைக்கு அருகில் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடுபுலா (55 கி.மீ)
இடுக்கி மாவட்டத்தில் முதல் ரயில் நிலையம்; கோலானி பைபாஸ் அருகில் – ராமமங்கலம் சாலை சந்திப்பு.
கரிம்குன்னம் (62 கி.மீ)
துடங்கநாட்டில் உள்ள மூலமட்டம் மின் உற்பத்தி நிலையம், FCI கிடங்கு மற்றும் KINFRA மசாலா பூங்காவிற்கு அருகில்.
ராமாபுரம் (69 கி.மீ)
பிசாவில் முன்மொழியப்பட்டது; இந்த பாதை வரை நிலம் கையகப்படுத்தல் நிறைவடைந்துள்ளது.
பரனங்கானம் – பழகு (80 கி.மீ.)
திப்தி சந்திப்பில், பாலா நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
செம்மலமட்டம் (90 கி.மீ.)
ஈரட்டுப்பேட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ; உயரமான மலைத்தொடர்களுக்கு அருகில்.
எருமேலி நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் எம்.இ.எஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள டெர்மினல் ஸ்டேஷன். இது சபரிமலையில் இருந்து தோராயமாக 43 கிமீ தொலைவிலும், உத்தேச சபரிமலை விமான நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
குருவாயூர் – திருநாவாய வழித்தடமும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
சபரி ரயிலுடன் 35 கி.மீ. குருவாயூர் – திருநாவயா புதிய பாதைத் திட்டமும் இடைநிலை நீக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மாவட்டங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தும் மற்றும் முக்கிய புனித யாத்திரை மையங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னதாக, முடக்கத்தை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார், இந்த மறுமலர்ச்சி கேரளாவின் வளர்ச்சி மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கமாக வர்ணித்தார்.
நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல் செயல்முறை மற்றும் நிர்வாக அனுமதிகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றுடன், இந்த ரயில் பாதைகளின் மறுசீரமைப்பு ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. மத்திய-மாநில ஒருங்கிணைப்பின் தொடர்ச்சி, இந்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் எவ்வளவு விரைவாக செயல்பாட்டுக்கு வருகின்றன மற்றும் அவற்றின் நோக்கம் கொண்ட பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை வழங்குகின்றன என்பதை தீர்மானிக்கும்
1975 ஜூன் 25 தேதி இந்திரா காந்தியின் அரசு நெருக்கடி நிலையை அறிவித்தது. ஊழல் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றியதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு தங்களை ஒடுக்க முனையும் என்று ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கருதினர். பிஹாரில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆர் எஸ் எஸ் ஆதரவளித்ததால் அரசின் கோபத்திற்கு அது உள்ளாகி இருந்ததென அவர்கள் நினைத்தனர். ஆனால் அரசு அதைவிட அதிகமாக, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டம் தேசிய அளவில் பரவவும் பிரபலமடையவும் ஆர்எஸ்எஸ் தான் காரணமென கருதியது.
அதற்கு சில காலம் முன்புதான் மதுக்கர் தத்தாத்ரேயா தேவரஸ் (பாளாசாஹேப் ) ஆர் எஸ் எஸ் ஸின் மூன்றாவது தலைவராக (1973 – 1994) பொறுப்பேற்று இருந்தார். அவருக்கு முன் சமய சாய்வு கொண்டிருந்த மாதவ சதாசிவ கோல்வல்கரை (1940 -1973) விட அமைப்பை செயலூக்கம் கொண்ட பாதையில் வழி நடத்தி வந்தார். தேச விடுதலைக்கு பின்னான கலவரங்கள் , அது தொடர்பான தடை (1947 – 48) ஆகியவற்றிலிருந்து மீட்டு ஆர் எஸ் எஸ் ஸை வலுவாக கட்டமைப்பதில் கோல்வல்கர் கவனம் செலுத்தினார்.
தேவரஸ் தன் முதல் பொதுக்கூட்ட உரையிலேயே ஜாதி முறைமையை சாடினார். குறிப்பாக சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களை கீழ்த்தரமாக நடத்தும் விதத்தை கண்டித்தார். ஜெயபிரகாஷ் நாராயணனின் செயல்கள் அவருக்கு பிடித்திருந்தால் அவருடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார்.
அதேபோல் ஜெ பி யும் ஆர்எஸ்எஸ் மீது மதிப்பு கொண்டவரானார். குறிப்பாக தேவரஸின் தலைமையில் அது ஏழை எளியோருக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டினார். பிஹாரில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் உரையாற்றிய போது , ” ஆர்எஸ்எஸ் உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான இயக்கம். நாட்டில் உள்ள வேறெந்த இயக்கமும், ஒப்பிட , இதற்கு அருகில் கூட வர முடியாது. இதுமட்டுமே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வலிமை கொண்டுள்ளது. இதன் பெயரிலேயே ராஷ்டிரம் , தேசம் இருக்கிறது. நீங்கள் உங்கள் இயக்கத்தை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் என்றுதான் சொல்கிறீர்கள். ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் என்றல்ல,” என்று குறிப்பிட்டார்.
நெருக்கடி காலகட்டத்தில் காங்கிரஸ் செய்த அட்டூழியங்களை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் ஸூம் தேவரஸூம் ஆற்றிய பங்களிப்பு பற்றி மிகக் குறைவாகவே பதிவாகி உள்ளது. சர்சங்கசாலக்காக இருந்த பாளாசாஹேப் தேவரஸூம் அவருடைய மூத்த, இளைய சகாக்களும் அவருடன் நெருக்கடி காலகட்டத்தின் போது (1975 – 77) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் வெவ்வேறு கருத்து கொண்டவர்களுடன் கலந்துறவாடி , அவர்களுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் பணிபுரியகூடிய அம்சங்களை, களங்களை கண்டறிந்தனர். இந்த நல்லுறவு நெருக்கடி காலகட்டத்திற்கு பிறகும் தொடர்ந்தது.
நெருக்கடி நிலை காலகட்டமும் கைது நடவடிக்கைகளும் அரசியல் குறித்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சிந்தனையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வதில் கவனம் செலுத்தினர் . அரசியலிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தங்கள் தலைமையை வற்புறுத்தினர். சிலர் ஆர்எஸ்எஸ் ஸையே அரசியல் கட்சியாக வேண்டும் என்றனர். ஏற்கனவே இருந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களை போலவே தேவரஸூம் இந்த விஷயத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் அரசியல் உட்பட நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் செயலூக்கத்துடன் கூடிய நிலைப்பாட்டை மேற்கொண்டார்.
1978 மார்ச் 12 தேதி நடந்த அகில பாரத பிரதிநிதி சபாவில் தேவரஸ் , ‘ அரசியலில் ஈடுபட்ட சிலர் வழுக்கி விழுந்து விட்டதால் அந்த களத்தையே தேவையற்றது என்று கருதக்கூடாது. குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டதால் குளிப்பதையே நிறுத்தி விட முடியாது, ‘ என்று பேசினார். 1978 மார்ச் 15 தேதி உரையில் சங்கம் தனது பாதையை மாற்றிக் கொள்வதை பற்றி , ஹெட்கேவார் தலைமையில் ஆர் எஸ் எஸ் க்கு அரசியல் நோக்கம் இருந்தது. குருஜி (கோல்வல்கர்) தலைமையில் கலாச்சார முனைப்பு கொண்டது. இப்போது சமுதாய ஒருங்கிணைப்பை மையம் கொண்டதாக செயல்படும், என்று குறிப்பிட்டார்.
ஹிந்து என்ற சொல்லை தெளிவாக வரையறுத்து, ஹிந்து என்ற வார்த்தை சிறப்பு மிக்கது. அது தேசிய பண்பாடு , தேசிய பாரம்பரியம் ஆகியவற்றை குறிக்கும் சொல்லாகும். நம் நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் இல்லை , என்று குறிப்பிட்டார்.
மிக முக்கியமான கலாச்சார கூறுகளும் தத்துவங்களும் கொண்டதாக இந்து மதம் இருக்கிறது. அதுதான் இந்தியன் என்ற விரிவான அடையாளத்தை தருகிறது. என்றாலும் தேவரஸ் ‘ஹிந்து’ என்பதை மதம் சார்ந்த சொல்லாக அல்லாமல் பண்பாட்டுச் சொல்லாக, புவியியல் சார்ந்ததாக வரையறுத்தார்.
ஆனாலும் சங்கத்தை விமர்சிப்பவர்கள் ஹிந்து என்பதை பண்பாடு சார்ந்ததாக அல்லாமல் மதம் சார்ந்ததாகவே பொருள் கொண்டு சங்கம் முஸ்லிம்களுக்கு எதிரி கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்று மீண்டும் மீண்டும் குறை கூறி வருகின்றனர். உண்மையும் சான்றுகளும் அவர்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதை ஆர்எஸ்எஸ் தேவரஸ் காலத்தில் இருந்து இன்றுள்ள சர்சங்கசாலக் மோகன் பாகவத் (2009 முதல் இன்று வரை) வரை வலியுறுத்தி வருகிறது.
ஜம்முவில் சுமார் 1200 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்ட முகாமில் தேவரஸ் பேசும்போது , ஆர் எஸ் எஸ் கண்ணோட்டத்திலான ஹிந்துராஷ்டிரத்தில் எல்லா இந்தியர்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அடங்குவார்கள். இந்த நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம்களும் அனைத்து கிறிஸ்தவர்களும் கலாச்சார ரீதியிலும் , இனரீதியிலும் ஹிந்துக்களே. எல்லா இந்தியர்களும் ஒரு தாய் மக்கள். எனவே சங்கம் ஹிந்து என்பதையும் பாரதிய என்பதையும் ஒரே அர்த்தத்தில் தான் பார்க்கிறது. யாரோ சிலருக்கு ஹிந்து என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்பதற்காக சங்கம் அந்த வார்த்தையை விட்டு விடாது , என்று கூறினார்.
தேவரஸ் தனது உரையில் மூன்று விஷயங்களை பற்றி பேசினார். 1. மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான பொதுவான முன்னோர்கள், பொதுவான வரலாறு உள்ளது. 2. ‘ ஹிந்து ‘ என்ற சொல் அனைவரையும் உள்ளடக்கியது. 3. சங்கத்திற்கு வெளியில் இருக்கும் மக்களுக்கு ஆர்எஸ்எஸ் தன் நிலைப்பாட்டை, அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலம் தன் லட்சியத்தை அடைய முனைகிறது என்பதை, விளக்கிச் சொல்வது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் அரசியல் சகாக்களுடன் இணைந்து ஜனதா கட்சி அரசியல் அங்கம் வகித்த போதிலும், 1979 மார்ச் 11 தேதி தேவரஸ் தனது உரையில், ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என்ற தனது அடிப்படையான கட்டமைப்பு பணியை ஆர்எஸ்எஸ் விட்டு விடாது . அதற்கு எந்த தேவையும் எழவில்லை. நாம் தொடர்ந்து அதே வழியில் சமுதாயத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுவோம். அதிகார அரசியலில் ஈடுபடும் நோக்கம் நமக்கு இல்லை. புகழ், அதிகார மோகம் நமக்கு இல்லை, என்று முந்தைய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மேற்கொண்ட அதே நிலையை உறுதிப்பட தெரிவித்தார்.
ஜனதா அரசில் ஆர் எஸ் எஸ் காரர்கள் இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது, என்று பலரும் குற்றம் சுமத்திய நிலையில் மேற்கண்டவாறு தேவரஸ் தெளிவாக , உறுதியாக சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். ஆர் எஸ் எஸ் , ஜனசங்க உறுப்பினர்களிடையே இருக்கும் உறவு குறித்து மற்றவர்கள் இரட்டை உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி போட்டி பூசலை உருவாக்கியதால் ஜனதா கட்சி ஒன்றுபட்டதாக எழுச்சி பெற முடியாமல் போனது. இது பாரதிய ஜனதா கட்சி உருவாக வழி வகுத்தது. அந்த கட்சிதான் இன்று ஆர் எஸ் எஸ் முன்னாள் பிரசாரக்கான நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவை ஆண்டுக்கொண்டு இருக்கிறது.
ஆர் எஸ் எஸ் இன்று அனைத்து சமுகத்தைச் சேர்ந்தவர்களும், குறைந்தபட்சம் தலைவர்கள் நிலையில், சமமாகவும் தோழமையுடனும் பழகுவதை தங்கள் கிளை செயல்பாடுகள் மூலம் எட்டி உள்ளது. இது மிகப்பெரிய விஷயம்.
இந்தியர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் என்று பல்வேறு களங்களில் கிளை அமைப்புகளை ஆர் எஸ் எஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வஹிந்து பரிஷத்தை தவிர மற்ற எல்லா அமைப்புகளிலும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு சமூக படிநிலையில் உள்ளவர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
பெண்களுக்கான அமைப்பு (இது 1930 ஆரம்பிக்கப்பட்டது) ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கருத்தியல் குடும்ப அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் பெண்களும் அன்னையர்களும் இதுபோன்றே இணைந்து செயல்படுகின்றனர்.
அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது இப்போது ஆர்எஸ்எஸ் ஸின் சாரமான கொள்கையாக உள்ளது. இதை தீனதயாள் உபாத்யாயா வார்த்தையில் சொல்வதானால் ஒருங்கிணைந்த மனிதத்துவம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
நன்றி : சண்டே கார்டியன்
கட்டுரையாளர்கள் : ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வால்டர் ஆண்டர்சன். ஆர் எஸ் எஸ் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார். ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் ஐஸ்வர்யா பண்டிட்