மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மக்கள் எச்சரித்த போது, அதுலாம் ஒண்ணும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாகச் சொல்லி நடந்து கொண்ட ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை ஏற்றியபடி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில் வைக்கப்பட்ட சிலிண்டர் ஒன்றில் கேஸ் லீக் ஆகி வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனத்தை ஓட்டிசென்ற ஓட்டுனரிடம் இது குறித்து கூறியபோதும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் லாரியை பின் தொடர்ந்து சென்று லாரியை நிறுத்தி தயவுசெய்து லீக் ஆகும் சிலிண்டரை தனியாக எடுத்து எதாவது செய்து லீக்கை தடுங்கள் எனவும், இல்லையென்றால் பெரிய விபத்தாகிவிடப் போகிறது என கூறினர்.
ஏன் நிறுத்துகிறீர்கள்? அதுலாம் ஒன்றும் ஆகாது என அலட்சியமாக கூறிவிட்டு லீக் ஆன சிலிண்டரை சாய்த்துவைத்துவிட்டு லாரியை ஓட்டுனர் எடுத்துசென்றார். இதனைப் பார்த்த பொதுமக்கள் கேஸ் லீக் ஆன நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்தக் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட வேண்டிய கேஸ் சிலிண்டர்களை லீக் ஆன நிலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் அலட்சியமாக செயல்பட்ட கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் சிலிண்டர்களை கையாளும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை இங்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது. அதன் படி , கடந்த வருடம் பாலாலய விழாவும் நடந்தது. அதன் பிறகு திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து முடிந்தது. பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்க முகூர்த்தக் கால் நடப்பட்டது அதன் படி பலவண்ணங்களுடன் யாகசாலை குண்டங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 1ந் தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து, 2ந் தேதி, 3ந் தேதி, 4ந் தேதி வரை 5 கால யாகசாலைபூஜைகள் நடந்து முடிந்தது.
தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையோடு நடந்தது.பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாஹீதி நிறைவு பெற்றது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணகுடை பரிவாரங்களுடன் தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி சன்னதி வித்தக,விநாயகர், ஆதிவேல் சன்னதி விமானம் மற்றும் ராஜ கோபுரத்தில் உள்ளகோபுர கலசங்களில் குடம் குடமாக புனித தீர்த்தம் 5.55 மணிக்கு ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது.இந்த விழாவில் பக்தர்கள் மீது அதற்கான கருவி மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூஜை மலர்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராணைகளும் நடந்தது. இந்த விழாவையொட்டி மதுரை திண்டுக்கல் சிவ கங்கை, தேனி, சென்னை நெல்லை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள்,அரசு உயர் அதிகாரிகள் கோவில் அலுவலர்கள்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த விழா ஏற்பாடுகளை ,கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட 600 போலீசார்கள் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை திருக்கோயிலின் வைகாசி விசாக குறடியில் மூன்று கலசங்கள் 7 சிறிய கலசங்கள் வைக்கப்பட்டு வருடாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதன் பின்பு இன்று மாலை 3.30 மணிக்கு கடம் புறப்பாடு ஆகி சிவபெருமானுக்கும் முருகபெருமானுக்கு கோவனத்தின அம்பிக்கைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது . விழா ஏற்பாடுகளை , நிர்வாகம் செய்து வருகிறது.
ரவுண்ட் 32 – அதாவது 32 அணிகள் சுற்றில் மொத்தம் 16 ஆட்டங்கள். 28 ஜூன் அன்று ஒரு ஆட்டமும் 29, 30 ஜூன், 01, 02,03 ஜூலை ஆகிய நாட்களில் தலா மூன்று ஆட்டங்களும்!
முதல் ஆட்டம் ஜூன் 28, 2026 – தென் ஆப்பிரிக்கா கனடா இடையேயான ஆட்டம். கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இரண்டாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – பிரேசில் ஜப்பான் இடையேயான ஆட்டம். பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
மூன்றாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – ஜெர்மனி பராகுவே இடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. பின்னர் 30 நிமிட நேர அதிக வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்ல. அதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை தொடங்கியது. அதில் பராகுவே 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது. கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருந்த ஜெர்மனி இந்த ஆட்டத்துடன் வெளியேறியது இந்தப் போட்டியின் மிகப் பெரிய அப்செட் ஆகும்.
நான்காவது ஆட்டம் ஜூன் 29, 2026 – நெதர்லாந்து மொராக்கோ இடையேயான ஆட்டம். இந்த ஆட்டமும் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. மொராக்கோ ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐந்தாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஐவரி கோஸ்ட் நார்வே அணிகளுக்கிடையேயான ஆட்டம். நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆறாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஃபிரான்சு, சுவீடன் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஃபிரான்சு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஏழாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – மெக்சிகோ, ஈக்வடார் அணிகளுக்கிடையேயான ஆட்டம். மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
எட்டாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – இங்கிலாந்து, டி ஆர் காங்கோ அணிகளுக்கிடையேயான ஆட்டம். இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஒன்பதாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – பெல்ஜியம், செனேகல் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தன. பின்னர் அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் பெல்ஜியம் அணி ஒரு பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
பத்தாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – அமெரிக்க, பொசானியா & ஹெர்சகோவினியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பதினோறாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்பெயின், ஆஸ்திரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பன்னிரெண்டாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – போர்ச்சுகல், க்ரோஷியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பதிமூன்றாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்விட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்விட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பதினான்காவது ஆட்டம் ஜூலை 3, 2026 – ஆஸ்திரேலியா, எகிப்து அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. எனவே ஆட்டம் மேம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 2 கோல்களும் எகிப்து 4 கோல்களும் போட்டன. இதனால் எகிப்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
பதினைந்தாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – அர்ஜெண்டைனா, கேப் வெர்டே அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. எனவே ஆட்டம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அந்த அரை மணி நேரத்தில் அர்ஜெண்டைனா ஒரு கோல் அடித்தது. இதனால் அர்ஜெண்டைனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
பதிநனாறாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – கொலம்பியா, கானா அணிகளுக்கிடையேயான ஆட்டம். கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப் படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ்., தெரிவித்துள்ளது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) தத்தாத்ரேய ஹோசபாலே புது தில்லியில் ஜூலை 3 அன்று வெளியிட்ட அறிக்கை:
பல தலைமுறைகளின் போராட்டங்கள், கோடிக்கணக்கான ராம்பக்தர்களின் (பக்தர்கள்) அர்ப்பணிப்பு, தியாகம், பலிதானம் ஆகியவை காரணமாக, அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது.
ராமர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம்.
ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.
மிகவும் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவத்தை ஒரு அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் செயல்பாடுகளிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்ய அறக்கட்டளை பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உட்பட ஒட்டுமொத்த இந்து சமூகமும் எதிர்பார்ப்பது இயல்பே.
அயோத்தி கோயில் மீது கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் தளராமல் உறுதியாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியம். தற்போதைய குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும். இது தொடர்பாக, கோயில் நிர்வாகமும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
முறையான நிதி மேலாண்மை, குறை இல்லாத, வெளிப்படையான செயல்பாட்டு அமைப்புகள், தூய்மை, புனிதம், உண்மையான தார்மிகம் நிறைந்த சூழல் ஆகியவற்றின் மூலம், ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்தக் கடினமான தருணத்தில் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி ஹிந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்த முயலும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்குமாறும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வழி : அம்பாசமுத்திரம் தென்காசி சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி கோயம்புத்தூர் …..
திருநெல்வேலி – தாம்பரம் வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் ….
திருநெல்வேலி -சென்னை எழும்பூர் வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை கொடைக்கானல்-ரோடு திண்டுக்கல் திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருத்தாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் .
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வழி : விழுப்புரம் விருதாச்சலம் திருச்சி மதுரை விருதுநகர் திருநெல்வேலி நாகர்கோவில் .
தூத்துக்குடி – தாம்பரம் வழி : கோவில்பட்டி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் விழுப்புரம்
ஆகிய சிறப்பு ரயில் சேவைகள் அனைத்தும் ஜூலை இறுதி வரை 4 வாரங்களுக்கு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
இதில் கன்னியாகுமரி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருநெல்வேலி தாம்பரம் மற்றும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியுள்ளது .
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
நேற்று (02.07.2026) தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்து, கோவில் இடங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள், நீண்ட நாள் வாடகைகார்கள், குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் வாடகை, குத்தகை என்பது சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவு. அந்த தொகையை கூட, ஆண்டு அனுபவிப்பவர்களில் பலர் பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.
மேலும் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் யாவும் சட்டப்படி மைனர் சொத்து. அதாவது ஆலயத்தில் இறைவன் என்றும் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கோவிலின் சொத்து என்பது அந்த கோவிலின் இறைவனின் பெயரில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கோவில் செலவுகளைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை ஆகும். எனவே இறைவனின் சொத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, கூடாது. அப்படி கொண்டாடினால் அது சட்ட விரோதம் ஆகும். மேலும் ஏழைகளுக்கு தருவதற்கு என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவார்களேயானால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் சொத்துக்களை ஏழைகளுக்குப் பிரித்து பட்டா தந்து முன்மாதிரியாக அக்கட்சி விளங்கலாமே!
கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் கார்ப்பரேட் மாளிகைகளாக பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றன. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜாதியைக் காரணம் காட்டி வாடகைக்குக் கூட இடம் தர மறுத்தவர்கள்தான் இந்த கம்யூனிஸ்ட்கள்.
நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் இருப்பது வக்ஃப் வாரியம் எனும் மசூதி சொத்தும், கிறித்துவ மிஷனரி எனும் சர்ச்சுக்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தான். எனவே அவற்றில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க கம்யூனிஸ்ட்கள் கோரலாமே? அதைப்பேச மாட்டார்கள். பேசினால் கம்யூனிஸ்ட்களின் கூட்டணி கட்சிகளான சிறுபான்மை மக்களிடம் ஓட்டு பிச்சையெடுக்கும் கட்சிகளே எதிர்க்கும்.
கோவில் சொத்து என்பது பணக்காரர்கள், மன்னர்கள் கொடுத்தது என்று பலரும் நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் பலரும் கோவிலுக்கு தங்களுக்கான சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார்கள். காரணம் இறைவன் மீதான பக்தி மற்றும் வேண்டுதல். உதாரணமாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்த ஒருவர் மனம் திருந்தி பின்னாளில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் சென்னை அடையாறில் சொத்து வாங்கி அதனை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு எழுதி வைத்த இடம் தான் இன்று ஆக்கிரமிப்பில் உள்ள அடையாறு அருணாசலபுரம் பகுதி.
இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். அந்த சொத்து முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே பக்தர்கள் கோவிலின் அன்றாட பூஜை, விசேஷ கால பூஜைகள், திருவிழாக்கள், அன்னதானம் என பலவற்றை நடத்துவதற்காக என்று குறிப்பிட்டே சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்கள். அந்த பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் கோவில் நிர்வாகத்தை ஏற்று இருக்கிற இந்து சமய அறநிலையத் துறைக்கும், அந்த கோவிலில் உள்ள இறைவனை வழிபடும் பக்தர்களாகிய நமக்கும் இருக்கிறது.
இதனை கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத பகல் கொள்ளைகாரர்கள் திருடி சுருட்டுவதை வேடிக்கை பார்த்தால் அந்தப் பாவம் நமக்கும் வந்து சேரும். எனவே மக்களிடையே பேராசையை வளர்த்து கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்திட தூண்டிவிடும் மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களிடம் தமிழக முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக, தர்மத்திற்கு எதிரான செயல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசத்தில் ஒன்றான, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வைணவ திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நடப்பாண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 25- ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தி, தீபாரதனையோடு,கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவுநின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்துடன் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம்,சேஷம், கருடன், அன்னம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்ட திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் அதி விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திரு தேரில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் செங்கமலத்தாயார் எழுந்தருள தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத்தில் பங்கேற்ற பெண் பக்தர்கள் ஆன்மீகப் பாடல்கள் பாடியபடியே கோலாட்டத்துடன் கும்மியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோபாலா! கோவிந்தா!! என்ற சரண கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
முதல் சுற்று முடிந்து 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. 32 அணிகள் விளையாடும் இரண்டாம் சுற்றும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை மிகப் பெரிய அப்செட் என்று சொல்வதானால் அது ஜெர்மனி இரண்டாம் சுற்றில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியதுதான்.
முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன. குரூப் பி பிரிவில் சுவிட்சர்லாந்து, கனடா, பொசானியா மற்றும் ஹெர்சகொவினியா ஆகிய மூன்று அணிகள் தேர்வுபெற்றிருக்கின்றன. குரூப் சி பிரிவில் பிரேசில், மொராக்கோ அணிகள் தேர்வுபெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே ஆகிய அணிகள் அடுத்த சுற்றிற்கு முனேறியுள்ளன.
குரூப் ஈ பிரிவில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈக்வடார் ஆகிய அணிகள் அடுத்த ரவுண்டிற்குச் சென்றுள்ளன. குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் ஸ்பெயின், கேப் வெர்டெ அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளன.
குரூப் ஐ பிரிவில் ப்ரான்சு, நார்வே, செனகல் ஆகிய அணிகள் ரவுண்ட் 32க்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜே பிரிவில் அர்ஜெண்டைனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் கே பிரிவில் கொலம்பியா, போர்ச்சுகல், டி ஆர் காங்கோ ஆகிய அனிகள் முன்னேறியுள்ளன. குரூப் எல் பிரிவில் இங்கிலாந்து, க்ரோஷியா, கானா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
சிதம்பரம்: பிரபல ஸ்ரீவைணவப் பேரறிஞரும். ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிறந்த கல்வியாளருமான உபய வேதாந்த முனைவர் ஏ.வி. ரங்காச்சாரி ஸ்வாமி (ஏவிஆர் ஸ்வாமி) ஜூலை 2, வியாழன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தினராலும், ஆன்மீக அன்பர்களாலும் “நடமாடும் ராமானுஜர்” என்று போற்றப்பட்ட அவரது மறைவு, ஆன்மீக மற்றும் கல்வி உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. சிதம்பரம் தில்லைத் திருச்சித்திரகூடத்துடன் எண்பது ஆண்டு பந்தம். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை பகவத் பாகவத கைங்கரியத்திற்காகவே அர்ப்பணித்தவர் . சிதம்பரத்தின் சைவர்களும் வைணவர்களும் ஒருசேர மதித்துப் போற்றிய மாமனிதராக அவர் திகழ்ந்தார்.
இளம் வயது அறங்காவலர்
தமது 13வது வயதிலேயே நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களைக் கற்று, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். சிதம்பரம் திவ்யதேசத்தின் உத்ஸவங்களைச் செம்மையாக நடத்துவதில் சிறு வயது முதலே பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இதன் காரணமாக, தனது 18வது வயதிலேயே அறங்காவலர் குழுவில் இணைந்து, மிக இளம் வயதில் இப்பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியவர் ஆனார். பின்னர் இக்கோவிலின் முதன்மை நிர்வாக அறங்காவலராக (Managing Trustee) சிறப்பாகப் பணியாற்றினார்.
இவர் ஆன்மீகத்துடன், அறங்காவலராகவும் பணியாற்றியது மட்டுமின்றி, கல்வித்துறையிலும் முத்திரை பதித்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பொருளாதாரத் துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
பாரம்பரிய ஆன்மீகக் கருத்துகளைத் தற்கால கல்வித் தத்துவத்தோடு இணைத்து வழங்குவதில் வல்லவரான அவர், Managerial Ability of Sri Ramanuja in Retrospection, Ramanuja: A Reality, Not a Myth உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
இவரது ராமாயண உபந்நியாசங்களும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்வழிப்படுத்தின. பாரம்பரியக் கல்வி மற்றும் வைணவ நெறிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காகப் புகழ்பெற்ற “ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.