2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சென்னையில், ஏதாவது ஒரு புயல் எச்சரிக்கை வந்தால் போதும், உடனே டப்பா டப்பாவாக பால் பாக்கெட்களை ஒரு சிலரே தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். நாளைக்கு காய்கறியே கிடைக்காது என்பது போலவும், காய்கறி இல்லாமல் மறுநாள் உயிரே வாழ முடியாது என்பது போலவும் கதறிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக காய்கறிகளை அள்ளிக் கொண்டு போவார்கள். கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும் ஒரே நேரத்தில் பலர் முட்டிமோதி பொருட்களை வாங்க அலைமோதுவதை வாடிக்கையாகப் பார்த்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம், சுய நலன் என்பது மட்டுமின்றி, அறியாமையும், வதந்திகளை அப்படியே நம்பிக் கொண்டு பதற்றம் அடைவதும் தான்!
எவரோ ஒருவர், ஒரு குறிப்பிட்ட பெட்ரோ பங்கில் பெட்ரோல் போடப் போன போது, ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டார்கள் எனச் சொல்லி, பெட்ரோலே இனி கிடைக்காது, தேவைப்படும் அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று வதந்தி கிளப்பி, தெருவில் உள்ள அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று பெட்ரோல் போட அலைவதையும், போதாக் குறைக்கு போன் போட்டு, ‘சீக்கிரம் போயி வாங்கிடு’ என்று பீதியைக் கிளப்புவதையும் இப்போது பார்த்து வருகிறோம்.
பால் ஓரிரு நாள் தான் கெடாமல் இருக்கும். பத்து பாக்கெட் வாங்கி வைத்து பத்து நாட்களுக்கு ஒருவரே பயன்படுத்த முடியுமா? புயல் வந்தால் மின் தடையும் கூடவே வருமென்பது தெரியாதா என்ன? கோவிட் போன்ற மிக மோசமான காலகட்டத்தையும் கடந்து வந்திருக்கிறது நம் நாடு. அப்போதெல்லாம் எப்படி நடந்து கொண்டு இன்றளவும் நாம் ஜீவித்திருக்கிறோம் என்பதை உணர்ந்து சிந்திக்கக் கூடவா தோன்றாது!?
ஒட்டுமொத்தமாக சிலிண்டர்களை பதுக்கி வைத்து பின்னாளில் அதிக விலைக்கு விற்கலாம் என்று கணக்குப் போட்டு சிலிண்டர்களைப் பதுக்கிய இருவரை மதுரை அருகே ‘அத்தியாவசியப் பொருள்கள் தடுப்புச் சட்ட’த்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். எத்தனை எத்தனை மக்கள் இப்போது கேன்களிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் பெட்ரோலை வாங்கிக் கொண்டு ஆலாய்ப் பறக்கிறார்கள். உண்மையில், பெட்ரோல் ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது. ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்தால் சில நாட்களில் அனைத்தும் ஆவியாகிவிடும், பிறகு எங்கே அதை பயன்படுத்த முடியும்?!
சாதாரணமாக கேன்களில் அவசரத் தேவைக்குக் கூட பெட்ரோலைத் தரமாட்டார்கள். ஆனால் தமிழகத்திலோ இப்போது லாரிகளிலும், டிரம்களிலும் 500 லிட்டர் பிடிக்கும் தண்ணீர் டின்களிலும் அல்லவா பெட்ரோலை வாங்கிக் கொண்டு செல்வதாக செய்திகள்!
இந்திய சட்டப்படி பெட்ரோல் பங்குகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது. இது 1934 ஆம் ஆண்டின் பெட்ரோலியச் சட்டம் (Petroleum Act, 1934) மற்றும் 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகள் (Petroleum Rules, 2002) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.
முக்கிய சட்டங்கள் மற்றும் தண்டனைகள் :
குற்றம்: அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் எரிபொருளை நிரப்புவது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தடையாகும்.
தண்டனை: விதிகளின்படி, இந்தத் தடையை மீறினால் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். கடுமையான விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை சுமார் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நிர்வாக நடவடிக்கை: விதிமீறலில் ஈடுபடும் பெட்ரோல் பங்கின் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது விற்பனை இடைநிறுத்தம் செய்யப்படலாம்.
ஏன் பெட்ரோல் பாட்டில்களில் தரப்படுவதில்லை?
தீ விபத்து அபாயம்: பிளாஸ்டிக் பாட்டில்கள் பெட்ரோலின் வேதியியல் தன்மையால் உருகலாம் அல்லது வெடிக்கலாம். இது மிக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் பொதுப் பாதுகாப்பிற்காக இந்தத் தடை உள்ளது.
சட்டம் ஒழுங்கு: குற்றச் செயல்களுக்கு (எடுத்துக்காட்டாக பெட்ரோல் குண்டு தயாரித்தல்) பெட்ரோல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது இத்தடையை கடுமையாக்குகிறது.
கள்ளச்சந்தை: பெட்ரோல் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் இது உதவுகிறது
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகப் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், வழக்கமாக வாங்குவது போல் மக்கள் இயல்பு வாழ்க்கையின் படி நடந்தாலே செயற்கை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது – அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்நிறுவனத்தில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IndianOil) தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன.
சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியஆயில் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு எரிபொருள் கிடைப்பதை வழக்கு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்தியஆயில் கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியஆயில் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக் கூடும்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்தியஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு M.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் (IOC, BPC & HPC) போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது; தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிராண்ட் கேனயான் என்ற ஒரு மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு மிகவும் பிரபலமானது. பூமி தோன்றியபோது இந்தப் பள்ளத்தாக்கு உருவாகத் தொடங்கியிருக்க வேண்டும். இது அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கொலராடோ நதியால் செதுக்கப்பட்ட ஒரு செங்குத்தான பக்கவாட்டு பள்ளத்தாக்கு ஆகும். கிராண்ட் கேன்யன் 446 கிமீ நீளம், 29 கிமீ அகலம் கொண்டது மற்றும் 1,857 மீட்டர் ஆழத்தைக் கொண்டது.
இந்த மாபெரும் செங்குத்துப் பாறை பள்ளத்தாக்கில் ஒரு இடத்திற்கு விஷ்ணுப் பாறைகள் அல்லது விஷ்ணு கோவில் என்று பெயர். இது அமெரிக்காவின் அரிசோனாவின் கோகோனினோ கவுண்டியில் உள்ள கிராண்ட் கேன்யன் எனப்படும் மாபெரும் செங்குத்துப் பாறை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 2,296 மீட்டர் உயர சிகரமாகும்.
விஷ்ணு கோயில், கேப் ராயல் அல்லது ராயல் முனையிலிருந்து சுமார் 3.2 கிலோமீட்டர் தெற்கே-தென்கிழக்கே, பள்ளத்தாக்கின் வடக்கு விளிம்பில், ஃப்ரேயா கோட்டைக்கு தெற்கே 2.4 கிலோமீட்டர் தொலைவிலும், அதன் அருகிலுள்ள உயரமான அண்டை நாடான வோட்டன்ஸ் சிம்மாசனத்திலிருந்து (Wottans Throne) 3.2 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கொலராடோ நதியிலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோப்பன் காலநிலை வகைப்பாடு அமைப்பின் படி, விஷ்ணு கோயில் குளிர்ந்த அரை வறண்ட காலநிலை மண்டலத்தில் அமைந்துள்ளது. ஆய்வாளர் ஃபிரடெரிக் சாமுவேல் டெல்லன்பாக்கின் கூற்றுப்படி, விஷ்ணு கோயில் “அறியப்பட்ட உலகில் இயற்கையால் செதுக்கப்பட்ட இடங்களில் மிகவும் அற்புதமான தொகுப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.”
விஷ்ணு கோயில் பிரபஞ்சத்தின் மீட்பரான இந்து தெய்வமான விஷ்ணுவின் பெயரிடப்பட்டது. இந்த இடப்பெயர் 1880ஆம் ஆண்டில் கிளாரன்ஸ் டட்டனால் பயன்படுத்தப்பட்டது, அவர் கிராண்ட் கேன்யனில் உள்ள புவியியல் அம்சங்களுக்கு புராண தெய்வங்களின் பெயரிடும் பாரம்பரியத்தைத் தொடங்கியபோது இந்த மலை ஒரு கிழக்கு நாடுகளில் உள்ள கோவிலை அல்லது பகோடாவை ஒத்திருப்பதாகக் கருதினார், இந்த புவியியல் அம்சத்தின் இடப்பெயர் 1906ஆம் ஆண்டில் அமெரிக்க புவியியல் பெயர்கள் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விஷ்ணு கோயிலின் சிகரம் கிரீம் நிற, பாறை வடிவ, பெர்மியன் கோகோனினோ மணற்கல்லால் கைபாப் சுண்ணாம்பு குபோலா கேப்ராக் கொண்டது. கிராண்ட் கேன்யனில் உள்ள அடுக்குகளில் மூன்றாவது இளைய மணற்கல், 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகளாக படிந்துள்ளது. கோகோனினோ மணற்கல்லுக்குக் கீழே சாய்வு வடிவ, பெர்மியன் ஹெர்மிட் உருவாக்கம் உள்ளது, இது பென்சில்வேனியன்-பெர்மியன் சுப்பாய் குழுவை மேலடுக்குகிறது. மேலும் கீழே மிசிசிப்பியன் ரெட்வால் சுண்ணாம்புக்கல், கேம்ப்ரியன் டோன்டோ குழு மற்றும் இறுதியாக சிற்றோடை மட்டத்தில் புரோட்டரோசோயிக் உன்கார் குழு ஆகியவற்றின் அடுக்குகள் உள்ளன. விஷ்ணு கோயிலிலிருந்து வரும் மழைப்பொழிவு அதன் மேற்குப் பக்கத்தில் விஷ்ணு க்ரீக் வழியாகவும், கிழக்குப் பக்கத்தில் உன்கார் க்ரீக் வழியாகவும் தெற்கே கொலராடோ நதியில் கலக்கிறது.
இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் விஷ்ணு, ப்ரும்மா, ராம் பெயரில் பாறைகள். சந்திரனில் சிவசக்தி தலம் – இஅவையெல்லாம் சனாதனத்தின் பெருமை அல்லவா!
மதிமுகவுக்கு 4 தொகுதி ஒதுக்கீடு! சட்டமன்ற தேர்தலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 4இல் வென்றது. – என்கிறது செய்தி!
வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், தனிச் சின்னத்தில் களம் காண வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மதிமுக விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால், திமுக கூட்டணியில் 4 தொகுதிகளே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல்களில் மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை:-
1996 – 177 (தனி அணி)
2001 – 211 (தனி அணி)
2006 – 35 (அதிமுக கூட்டணி)
2011 – தேர்தல் புறக்கணிப்பு
2016 – 28 (மக்கள் நலக்கூட்டணி)
2021 – 6 (திமுக கூட்டணி, திமுக சின்னம்)
2026 – 4 (திமுக கூட்டணி, 3ல் திமுக சின்னம், 1 தனிச்சின்னம்)
“எந்த சமரசமும் செய்து கொள்ளலில்லை – திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்கிறோம்!”- வை.கோ.
திமுக ஒதுக்கியது 4 தொகுதி! அதில் 3 ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி!
இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?
நான்கில் மூன்று தொகுதியில் – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் – நாளை ஒருவேளை வென்றாலும் – திமுக என்ன உத்தரவிடுகிறதோ அந்தக் “கொறடா” (WHIP) உத்தரவின்படிதான் உங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்குள் வோட்டளிக்க முடியும்.
அதாவது தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் -“உதயசூரியன்”- சின்னத்தில் நின்று வென்றதால் (அப்படி வெல்வார்கள் என்றால்) திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
நான்கில் மூன்றுபேர் திமுக சின்னத்தில் போட்டியிடுவதால் உங்கள் கட்சிப் பெயரையும் மதிமுக – என்பதில் இருந்து மு.தி.மு.க என்று மாற்றிவிடலாமே வை.கோ? அதாவது ‘முக்கால்’ திமுக!
ஆனால் ஒரு சந்தோஷமான விஷயம்…. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது நீங்கள் எகிறி எகிறிப் பேசியதற்கு – “கருணாநிதி வேறு தொழில் செய்யப் போகலாம் – உலகின் பழமையான தொழில்”-… என்றெல்லாம் பேசியதற்கு…
பத்து வருடம் ஆனாலும் பகையை மறக்காமல் வச்சி செய்துவிட்டது திமுக!
திமுகவிடமும் – கருணாநிதியிடமும் நான் பாராட்டும் ஒரே அம்சம் – இந்தப் “பகை மறவாமல் பழியெடுக்கும்” – அரசியல் போர்க்குணம்தான்.
2016 ல் அந்த எகிறு எகிறிய உங்களை – இன்று பெட்டிப் பாம்பாக 4 தொகுதிகள் மட்டும் கொடுத்து – அதிலும் 3 தொகுதிகளில் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட வைத்து ஆப்பு வைத்துவிட்டது பாருங்கள் திமுக!
அதுதான் திமுகவிடம் மற்ற கட்சிகள் கற்க வேண்டிய அற்புதமான அரசியல் பாடம்!
அரசியலில் – “பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே”- எல்லாம் வேலைக்கு ஆகாது.
“பகையை மறவாய் நெஞ்சே”- என்பதே சித்தாந்த அரசியலில் பாலபாடம்!
ஒரு கதை நினைவு வருகிறது:-
அதுவரை தான் காணாத அபூர்வமான பழத்தைக் கொண்டு வந்து காட்ட வேண்டும் – என்றான் ஒரு மன்னன்.
ஆனால் ஒரு நிபந்தனை! அந்தப் பழம் ஏற்கனவே தான் சுவைத்தறிந்த பழமாக இருந்தால் – அதைக் கொண்டு வந்தவனின் ஆசன வாயில் வைத்து ராஜா திணித்து விடுவான்!
ஒருவன் அன்னாசிப் பழத்தைக் கொண்டு வந்தான்! அது ராஜா ஏற்கனவே சுவை அறிந்த பழம்! எனவே மேலே முட்களுடன் அன்னாசிப் பழத்தை அப்படியே அதைக் கொண்டு வந்தவனின் ஆசனவாயில் வைத்துத் திணிக்கச் செய்தான் ராஜா!
கொண்டு வந்தவன் உடையின் பின்பகுதியில் ரத்தம் வழிய வழிய – அந்த நிலையிலும் பெருங்குரலில் சிரித்தான்!
“ஏனடா சிரிக்கிறாய்?”- என்றான் ராஜா.
“மகாராஜா! பின்னால் வரிசையில் பலாப்பழத்தை வைத்துக் கொண்டு ஒருவன் நிற்கிறான் – அவன் நிலைமையை நினைத்துச் சிரித்தேன்!”
அந்த நிலைதான் வை.கோ வுக்கு!
அதே மக்கள் நலக் கூட்டணியில் 2016ல் வை.கோ வுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட இரண்டு கம்யூனிஸ்டுகள், விசிக கதி என்னாகும்? ஆனானப்பட்ட வைகோ கட்சிக்கே வெறும் 4 சீட் – அதிலும் 3 உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்!
அநேகமாக CPI, CPM, விசிக இவைகளுக்கு தலா 4 சீட் கொடுத்தால் அதிகம் என்பது எனது கணிப்பு.
தேமுதிகவுக்கு 6 சீட் என்பது – 2016 ல் மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் “தருமன்” (விஜயகாந்த்) ஆக இருந்தார் என்பதால்!
மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு
திருச்சி தேஜகூ., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன. எந்தவொரு சூழலிலும் நாட்டு மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும்.
தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி திமுக அழைத்துச் செல்கிறது. – என்று பேசினார்.
தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் தொடர்ந்து பாடுபடுவோம்!
முன்னதாக, கேரளா மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணி அளவில் திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களை மோடி தொடக்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியது: அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இன்றைய நாள் முக்கியமானதாகும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் வழங்குவதை உறுதி செய்யும்.
பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்; 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையானதாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும்.
மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழகத்தின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்; தொடர்ந்து பாடுபடுவோம்.
திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. இன்று, 5,650 ரூபாய் கோடி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும். 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். இயற்கை எரிவாயு, இயற்கைக்கு உகந்தது. காற்று மாசினை குறைக்கும். இந்த திட்டம், 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையானது.
சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் , இந்த ஆலையானது தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றி வைக்கும். மசகு எண்ணெய் இறக்குமதி குறைப்பதோடு, நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும்.
370 கிமீ., தூரத்திற்கு ஊரக சாலையை துவக்கி வைத்துள்ளோம். பிரதமரின் ஊரக சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களால் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் சிரமமின்றி பயணிக்க முடியும். விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்கவும், மூலப்பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு சாலையும், ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தி எளிதாக வாழும் திறனை அதிகரிக்கிறது.
கடந்தாண்டு ஆடி திருவாதிரை விழாவிற்கு கங்கைகொண்ட சோழபுரம் வந்தது மகிழ்ச்சி. மன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவிலின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டை கொண்டாடினோம். இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
அங்கு நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தற்போதைய நெடுஞ்சாலை, கோவிலுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு குறித்த கவலை எழுப்பியது. புதிய புற வழிச்சாலை அமைப்பால் மற்ற வாகனங்கள் , கோவிலுக்கு அப்பால் திருப்பிவிடப்படும். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
மதுரை வந்த போது, அம்ரித் பாரத் திட்டத்தின்படி மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் துவக்கிவைக்கப்பட்டது. இன்று புதிய ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டது. இவை நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது. இந்த புதிய ரயில் சேவையால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு,உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம். மேலும் தொடர்ந்து பாடுபடுவோம். – இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய திட்டங்கள் :
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காடசியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்.
தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
நாகா்கோவில் – சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357)
கோவை போத்தனூா் – தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619)
ராமேசுவரம் – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621)
திருநெல்வேலி – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708)
மயிலாடுதுறை – காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835)
நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார்.
தேஜகூ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,
இன்று தமிழகத்தில் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. சமீபத்தில், ஒரு சிறுமியை கூட விட்டுவைக்காத ஒரு திமுக உறுப்பினரை பற்றிய கொடூரமான செய்தியை நாம் அனைவரும் பார்த்தோம். இன்று பெண்களை பலவந்தப்படுத்திவிட்டு குற்றவாளிகள் பயமின்றி அலைகிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், தமிழக பெண்கள் பயமின்றி வாழ்வதை NDA அரசு உறுதி செய்யும். நாம் சிறப்பான சட்டம் ஒழுங்கை உறுதி செய்வோம். மக்கள் அல்ல, குற்றவாளிகள் தான் இனி பயத்தில் வாழ வேண்டும்
ஒட்டுமொத்த தமிழகமும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்துவிட்டது. மக்களுக்கு அனைத்து குடும்பங்களுக்காகவும் பணியாற்றக்கூடிய அரசு தேவை, ஒரே குடும்பத்திற்கு வேலை செய்யும் அரசு தேவையில்லை. அதோடு அவர்களுக்கு தெரியும், NDA கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று – திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,
மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளம் என பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பது, மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.
மேற்காசியாவில் தற்போது நடப்பது குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நமது சகோதரர் மற்றும் சகோதரிகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் நமது நாட்டு மக்களுக்கு பிரச்னை வருகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்தியா, நாட்டு மக்களை பிரச்னையில் தள்ளாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அளித்துள்ளோம்.
வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. நமது தூதரகங்கள் 24 மணிநேரமும் அவர்களுக்கு உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டும் என்றே, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இதனால், நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் மோடியை திட்டுவார்கள். இது தான் அவர்களின் எண்ணம்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது, உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.
கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும். வளர்ச்சி அடைந்த கேரளத்தை உறுவாக்க வழிவகுக்கும். தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக மீனவர் சமூகத்தை புறக்கணித்தனர்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது – என்று பிரதமர் மோடி பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,
இதுதான் திமுகவுக்கு கடைசி தேர்தல்: இபிஎஸ்
திருச்சியில் என்டிஏ பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
”திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். இந்தத் தேர்தல்தான் கருணாநிதி குடும்பத்துக்கு கடைசித் தேர்தல். திமுக கூட்டணியில் வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள்தான் உள்ளன. கூட்டணி அமைக்கும் கட்சிகள் திமுகவிடம் அடிமையாக உள்ளன.
விவசாயிகள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.”
திருச்சி என்டி பொதுக் கூட்டம்: அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் பேசியது என்ன?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்; மதுவால் குற்றங்கள் அதிகரிப்பு; தமிழகத்தில் போதையால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.
அரசு மதுவை விற்கவில்லை; திணிக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கிறார்; 2 மாதங்களில் தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்பார்; என்.டி.ஏ. ஆட்சி தமிழகத்தில் மலரும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமான உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டோடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்புடைய பிரதேசம்; இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் சங்க காலத்திற்கு முன்பே நமது வேளிர்கள் ஆட்சி நடைபெற்றது.
திராவிட குஜராத் ஆக, திராவிடர்கள் ஆட்சி நடைபெற்ற அந்தப் பகுதியில் இருக்கும் துவாரகாவை தமிழ் பேசும் வேளிர்கள் ஆட்சி செய்தார்கள். நம் சங்க இலக்கியங்களிலே குறிப்பாக புறநானூற்றிலே துவரை என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.
அங்கிருந்து வந்து வேளிர்களாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தார்கள்; பாரி வள்ளல் வேள்பாரி வேளிர் மன்னர்தான்; தகடூரை ஆட்சி செய்த அதியமானும் வேளிர் வம்சம்தான்.
வேளிர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஆட்சி செய்தார்கள்; அந்தப் பகுதியில் இருந்து நம்முடைய பிரதமர் வந்திருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மோடி எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் தாய் மாமன் சீர் கொண்டு வருவது போல திட்டங்களை கொண்டு வருகிறார். இன்றைக்கும் ரூ.5,600 கோடிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்; மதுரைக்கு வரும் போது ரூ.4,400 கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்தார்.
தாய் மாமன் வீட்டு சீர் கூட லேட் ஆகத்தான் வரும்; ஆனால் பாரத பிரதமரின் சீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல்; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.
தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5:45க்கு திருச்சி வருகிறார். அங்கே, அரசு நிகழ்ச்சியில் ரூ. 5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை அடுத்த மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் கலவை ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ., நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்டசோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
மாலை, 6:30க்கு திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவு:
திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான…
திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும்.
திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன். தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, தி.மு.க., பதற்றம் அடைந்துள்ளது. தி.மு.க.,வின் தவறான நிர்வாகமும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து, தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தான் நம்பிக்கையும், முன்னேற்றமும் உடைய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் திறப்பு விழாவில் அது வேலை செய்யாமல் போகவே, மின் தூக்கி ஆபரேட்டரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதுகில் அடித்ததாகவும் செய்தி பரவியது. இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்தார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் ….
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ₹3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.
சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்க, உண்மையில் ₹3.55 கோடி செலவு ஆகுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த மின் தூக்கிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்க, அமைச்சர் திரு. சேகர்பாபு, அமைச்சர் திரு. கோவி. செழியன் ஆகியோர் முற்பட்ட நிலையில், மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை. மின்தூக்கி வேலை செய்யாததால், அதனை இயக்குபவரை, அமைச்சர் திரு. சேகர்பாபு, முதுகில் அறைந்திருக்கிறார். பக்தர்களின் காணிக்கை பணம் ₹3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?
வயதான பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்தூக்கிகளில் கூட, கமிஷன் அடித்திருக்கிறார்களா? 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்று கூறியிருந்த நிலையில், 10 பேரைக் கூட தாங்கும் சக்தி, அந்த மின்தூக்கிகளுக்கு இல்லை என்றால், இந்த மின்தூக்கிகளின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.
இவற்றில் எந்த நம்பிக்கையில், வயதான பக்தர்கள் பயணம் செய்வார்கள்? உடனடியாக, இந்த இரண்டு மின்தூக்கிகளையும் முறையாக தரப் பரிசோதனை செய்து, அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையில் 20 பேர் எடையைத் தாங்கும் சக்தி இந்த ஒவ்வொரு மின்தூக்கிகளுக்கும் இருக்கிறதா என்பது பக்தர்களுக்குத் தெரிய வேண்டும்.
மேலும், இதற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ₹3.55 கோடிக்கான முழு கணக்குகளையும், இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிட்டு, சேகர் பாபு பதில் கொடுத்தார்.
இறையன்பர்கள் போற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமான பதில்! https://t.co/Rgo1qcMD31pic.twitter.com/lqPejRt35Y
இதனை பகிர்ந்த அண்ணாமலை, செல்லத்தட்டு சேகர்பாபு என்ற விதத்தில் கிண்டல் செய்து இன்று ஒரு பதிவினை வெளியிட்டார் அதில்,
சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் திரு. சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம். ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது?
அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே? சரி. அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ₹2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துக்கள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது? இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் திரு. சேகர்பாபு.
இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார்.
அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்? – என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.
தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அன்புச் சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டுச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஒட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.
மகாகவி பாரதியாரையும், கவிச்சக்கரவர்த்தி கம்பரையும், அருட்பிரகாச வள்ளலாரையும், ஐயா வைகுண்டரையும், பொய்யாமொழிப் புலவராம் வள்ளுவப் பேராசானையும், கணியன் பூங்குன்றனாரையும். தமிழ்த் தாத்தா உ வே சாமிநாதய்யரையும், ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியாரையும், பூலித்தேவனையும், மருது சகோதரர்களையும், வீரமங்கை வேலுநாச்சியாரையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும், இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜிக்குப் பக்கபலமாக நின்ற தமிழ்வீரர்களையும், இன்னும் இன்னும் இன்னும் ……….. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல், பெயர்களும் நினைவுகளும் கருத்துகளும் புதையல்களாக என் உள்ளத்தில் மண்டுகின்றன. கடந்த 54 மாதங்களில், உங்களோடும் உங்கள் வழியாக இந்தப் பெருமக்களோடும் வாழ்ந்தேன். மகிழ்ந்தேன், செம்மாந்த நெறிகளில் திளைத்தேன், அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கலந்தேன்.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்தபோது, கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. யாரைச் சந்தித்தாலும், எங்கே போனாலும், புன்னகைகள்தாம் என்னைச் சூழ்ந்தன.
தெரிந்தவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிய மக்கள் எல்லோரும், குழந்தைகள் உட்பட, முகத்தில் முறுவலோடும், கண்களில் ஆர்வத்தோடும், நெஞ்சங்களில் நேசத்தோடும் பழகுகிற பாங்கினைக் கண்டேன். மனித நேய உறவினால் பொலியும் மாபெரும் தமிழ் குடும்பத்தில் ஒருவனாகவே உணர்ந்தேன், இன்றும் உணர்கிறேன்.
‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்னும் மகாகவியின் வரிகளின் மகத்துவத்தை முழுமையாக உணரமுடிந்தது. வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல். கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள், தக்க நிலையில் வெளிப்படுத்தவும் செய்கிறீர்கள். பாரத தேசத்தவர் யாரும் இராமனுடைய செல்வாக்கோ, கிருஷ்ணனுடைய செல்வாக்கோ இல்லாமல் இருக்கமுடியாது. மிகச் சிறிய வயதிலிருந்தே பகவத் கீதையையும் துளசிதாசரின் ராம சரித மானசத்தையும் பயின்று பழகிய எனக்கு, கம்பரின் காவியம் மேலும் விசாலமான பார்வையை அருளியது. ‘அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்’ என்னும் அவரின் வரிகளை, அவரின் கவித்துவத்திலும் காவிய நாடகத்திலும் அறவழி வாசகங்களிலுமே கண்டேன். அலகிலா விளையாட்டுடைய அந்த அருந்தமிழ்ப் பெருமகனார் மீதும், அவர் காட்டுகிற இராமன் மீதுமான காதல் தான்.
சென்னை மக்கள் மாளிகையில், கம்பர் வனம் அமைத்து, கவிச்சக்கரவர்த்திக்குச் சிலை வைத்துப் பணியச் செய்தது. திருவாசகத்தை முற்றோதல் செய்வது போல, கம்பராமாயணத்தை, குறைந்த பட்சம் சில பகுதிகளையாவது ஓதிக் களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய தலைமுறையையும் மாணவ சமுதாயத்தையும் இவ்வாறு செய்யச் செய்தால், அறம்- பொருள்-இன்பம் தழைக்கும் என்பதில் ஐயமில்லை.
சங்கப் புலவர்களின் சமுதாய நோக்கம், திருவள்ளுவரின் மாண்பு, தமிழின் சமகால இலக்கியங்கள், மரபு சார்ந்த தமிழ்ப் பழக்கங்கள் என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ் மக்களின் பரிமாணங்களையும் நேரடியாக அறிகிற பேறும், அறிஞர்களோடு கலந்து அளவளாவுகிற பேறும் நிறையவே எனக்குக் கிட்டியுள்ளன. உண்மையிலேயே ஆனந்தத்தில் திளைக்கச் செய்த தருணங்கள்.
‘கல்வி என்பது என்ன?’ என்றொரு கேள்வி எழுந்தது. சுவாமி விவேகானந்தர் அதற்கு விடை சொன்னார். ‘ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ள தெய்விகத்தை மலரச் செய்வதே கல்வி’ என்றார். தமிழையும், சங்க இலக்கியம் தொடங்கி சமய இலக்கியம் வரையான தமிழ்ப் புதையலையும் வாசித்தால், இத்தகைய கல்வியைப் பெறலாம்.
அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு – உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள் கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன். ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும், உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை. மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன். நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.
தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். ‘செயற்கை நுண்ணறிவை’ தொழில்நுட்ப இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண்டேன். மாணவர்களோடும் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களோடும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்குத் தயாராபவர்களோடும் உரையாடிய நிகழ்ச்சிகளில், அவர்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய உரையாடல் நிகழ்வுகள் எனக்குள் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தோற்றுவித்தன. ஆங்கிலத்தில், ‘என்ரிச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்’ என்பார்களே, அப்படிப்பட்ட மேம்பாட்டு அனுபவம்.
தமிழ்நாட்டின் மேன்மைகளில், ஆகச் சிறந்த மேன்மை, கோயில்கள்! தில்லைச் சிதம்பர நடராஜரும் திருவரங்க ரங்கராஜரும் தமிழன்னையின், தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்கள். தமிழ்கூறு நல்லுலகை எப்போதும் பாதுகாத்து அருள்பாலிப்பார்கள். திருக்கோயில்களில் சுவரோவியங்களும், அறவழிக் காட்சிகளும், கல்வெட்டுகளும் பாரதப் பண்பாட்டுக் காணப்படுகிற சிற்பங்களும், கருவூலங்கள். இவற்றையெல்லாம் பாதுகாப்பது மட்டுமில்லாமல், இளைஞர்களும் அறிஞர்களும் மேலும் மேலும் பயின்று, ஆராய்ந்து, பாரதத் திருமரபின் ஞானப் பெருக்கத்திற்கு உதவவேண்டும்.
தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள். பூலித்தேவனும் கட்டபொம்மனும் வீரமங்கை வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் எவ்வாறெல்லாம் பாடுபட்டனர், எப்படியெல்லாம் குரல் கொடுத்தனர் என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். 1857ஆம் ஆண்டின் சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, 1806ஆம் ஆண்டே வேலூர் புரட்சி எழுந்தது.
தமிழிலக்கியங்கள், பாரத நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘நாவலந்தீவு’ என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றன. நிலவியல் ஆய்வுகளின்படி, இந்திய தீபகற்பத்தை, இப்பெயரோடு பொருத்தலாம். மருது சகோதரர்கள், ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
செக்கிழுத்த செம்மல் வ உ சியும் பாரத மாதாவுக்குக் கோவில் கட்ட விழைந்த சுப்பிரமணிய சிவாவும், கொடி காத்த குமரனும், சமுதாய விலங்குகளையும் நோய்ப் பிணிகளையும் அகற்ற முற்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும், வானரப் படை வைத்து தேசியத்திற்குப் பணி செய்த ருக்மிணி லட்சுமிபதியும், காந்தியத்தையும் பெண்ணியத்தையும் பேணி வளர்த்த அம்புஜம்மாளும் இன்னும் பலரும் தேசிய நீரோட்டத்தில் நீந்தித் திளைத்தவர்கள்; நாமும் அவ்வாறே ஆனந்தப்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்.
அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டேபோகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா- என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா!
அன்பானவர்களே! அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன்.
மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…
இந்தியாவிலும் கடந்த வாரம் LPG விலை வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர் முறையே ₹60 மற்றும் ₹115 உயர்த்தப்பட்டது…
பெட்ரோல் டீசலை பொறுத்தவரை இந்தியாவில் 2014க்கு முன்பு 2 வாரங்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்படிருந்தது..
இந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி கிடங்குகள் பெருமளவில் கட்டப்பட்டு விசாகப்பட்டினம், மங்களூர், பாடூர் உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட 74 நாட்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது…
ரஷ்யாவில் இருந்து குரூட் வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால் பெட்ரோல் டீசலுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை… ஆனால் எரிவாயு தட்டுப்பாடு தலை தூக்கத் தொடங்கியுள்ளது…
கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தட்டுப்பாடு இன்றி பதிவு செய்யப்பட்டு அடுத்த நாளே விநியோகம் செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் தற்போது ஒரு வாரம் வரை தாமதமாகிறது…
போர் இன்னும் நீளும் வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது… ஆதலால் நாடு முழுவதும் LPG தட்டுப்பாடு வரும் நாட்களில் அதிகரிக்கலாம்…
அதற்காக உடனே பதட்டமடைந்து… “சென்னையில் மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்ட உடனேயே சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்து பிரட் பாக்கெட், பால் பாக்கெட், சேமியா பாக்கெட் எல்லாவற்றையும் காசு கொடுத்து மொத்தமாக சூரையாடி கொண்டு வந்து வீட்டுக்குள் சேர்த்து வைக்கும் சென்னையன்ஸ் போல.. உடனடியாக வீடுகளில் LPG சிலிண்டர்களை புக் பண்ணி குவிக்க வேண்டாம்…
வீடுகளில் கேன்களில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வாங்கி குவித்து வைக்க வேண்டாம்… கடுமையான வெயில் காலத்தில் அது ஆபத்தானது…
முடிந்தவரை இந்த போர் சூழ்நிலை மாறும் வரை கேஸ் பயன்பாட்டை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று யோசித்து செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது…
முடிந்தவரை கேஸ் அடுப்புக்கு பதில் இண்டக் ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் கெட்டில், மைக்ரோ வேவ் ஓவன், OTG போன்றவற்றை பயன்படுத்தி சமையல் வேலைகளை செய்யலாம்..
அதே போல பக்கத்தில் இருக்கும் கடைகள், டியூசன் செண்டர், வங்கி, வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றுக்கு போவதற்கு கார், பைக் எடுப்பதற்கு பதில் சைக்கிளில் போக தொடங்கலாம் அல்லது நடந்து போகலாம்… செலவு குறைவு.. உடல் ஆரோக்கியதுக்கும் நல்லது, காற்று மாசும் குறையும்…
வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களை பயன்படுத்து வதையும் அவசியம் குறைக்கலாம்…
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பல சந்தேகங்கள்.
இதுவரை எந்த அணியும் மூன்றாவது முறை டி20 கோப்பையை வென்றதில்லை.
சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.
அகமதாபாத் இந்தியாவிற்கு ஒரு ராசி இல்லாத மைதானம்; .ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை கோட்டை விட்ட மைதானம்
நடப்பு டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்ற ஒரே ஒரு ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.
டி20 உலக கோப்பைகளில் இதுவரை இந்திய அணி நியூசி., அணியை வென்றது இல்லை.
டி20 உலக கோப்பைகளில் இதுவரை தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை.
நடப்பு சாம்பியன் அணி தொடர்ந்து கோப்பையை வென்றதில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து ஐசிசி இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தான் சந்தித்தது
உலகக் கோப்பை டி20 ஆட்டங்களுக்கு முன்னர் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியை அடித்து துவைத்தது நியூசிலாந்து அணி. மேலும் அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோற்றது. எனவே கோப்பையை இந்திய அணி ஜெயிப்பது சந்தேகம் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்தது.
அதற்கு ஏற்றாற்போல இந்திய அணி தான் வழக்கமாகத் தங்கும் ஓட்டலை மாற்றியது. அபிஷேக ஷர்மாவை தொடக்க வீரராக இறக்கலாமா வேண்டாமா என சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள். வருண் சக்ரவர்த்தி என்ன விதமாக பந்துவீசவேண்டும் என பல ஆலோசனைகள்.
இந்தக் குழப்பமெல்லாம் முதல் ஆறு ஓவர் வரைகள் மட்டுமே. ஆட்டத்தின் 10ஆவது ஓவர் வீசப்படும்போது இந்திய அணி வெற்றி பெறும் என்பதில் இருந்த ஐயங்கள் பறந்தோடின.
பூவா – தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொல்வது என்ன விதமான லாஜிக் எனத் தெரியவில்லை.
ஒரு வேளை தனது பந்து வீச்சால் இந்திய அணியை 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என அந்த அணி எண்ணியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ அப்படியே தலைகீழாக.
இந்திய அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள். தொடக்க வீரர்கள் அபிஷேக ஷர்மா (21 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சஞ்சு சாம்சன் (46 பந்துகளில் 89 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் அதிரடியாக ஆடினர். நாலாவது ஓவர் முடிவில் இந்திய அணி 50 ரன்கள் அடித்திருந்தது. பவர்பிளே முடிவில், அதாவது 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது.
சாம்சனுடன் இணைந்த இஷான் கிஷன் (25 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தார். அணி 7.2 ஓவர்களில் 100 ரன், 11.3 ஓவர்களில் 150 ரன் சேர்த்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் பந்துவீ ச்சாளர்கள் அதிக ரன் கொடுக்காமல் பந்து வீசினர். கடைசி ஓவரில் ஷிவம் துபே முதல் பந்தில் ஃபோர், இரண்டாவது மூன்றாவது பந்துகளில் சிக்சர்கள், நாலாவது பந்திலும், ஆறாவது பந்திலும் ஃபோர்கள் அடித்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 25 5ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் (52 ரன்), டரில் மிட்சல் (17 ரன்) மற்றும் மிட்செல் சாண்ட்னர் (43 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ரன்கள் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ரா சிறப்பாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 15 ரன் கொடுத்து 4 விக்கட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல் (3 ஓவர்கள், 27 ரன், 3 விக்கட்டுகள்) சிறப்பாக பந்துவீசிய மற்றொரு பந்துவீச்சாளர்.
இஷான் கிஷன் மூன்று கேட்சுகளும் திலக் வர்மா இரண்டு கேட்சுகளும் பிடித்தனர். மொத்தத்தில் இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. ஜஸ்பிரீத் பும்ரா ஆட்ட நாயகனாகவும் சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.
உலகக்கோப்பை நாயகன் ஜஸ்ப்ரீத் பும்ரா!
டி 20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்பதாக மாற்றி விட்டார்கள். பிட்ச் அதற்கேற்ப அமைத்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்குமாறு கிரிக்கெட்டை குழப்பி வைத்திருக்கும் நிலையில் பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபம். போதாக்குறைக்கு பவர்பிளே ஓவர் என்று இரண்டு பேருக்கு மேல் வெளி வட்டத்தில் இல்லாத விதி வேறு. நோ பால் வீசினால் ஃப்ரீ ஹிட்!
பிட்ச்சும் சரி ஆட்ட விதிகளும் சரி, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த நிலையில் எந்த பிட்ச்சாக இருந்தாலும் சிறப்பாக பந்து வீசுகிறார் ஜஸ்ப்ரீத் பும்ரா! சரியான அளவில் ஆஃப் ஸ்டிக் நோக்கி வீசுவது, கொஞ்சம் திரும்ப வைத்து லெக் ஸ்டம்ப் நோக்கி தாக்குவது, சரியான அளவில் போட்டு பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கத்தூண்டி கேட்ச் ஆக வைப்பது, யார்க்கர் போட்டு ஸ்டம்ப்பை தகர்ப்பது, ஒரு பவுன்சர், அப்படியே ஒரு ஸ்லோ பவுன்சர், ஸ்லோ பால் யார்க்கர் இப்படி, விதவிதமாக பந்து வீசி, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறார்.
விக்கெட் இழக்காமல் இருந்தால் போதும் என்று பேட்ஸ்மேன் நினைத்தால், ரன்கள் வராமல் சிக்கனமாக பந்து வீச்சு இருக்கும். அதன் விளைவு விக்கெட் விழாவிட்டாலும் பிரஷரை ஏற்றி விட்டு அடுத்த பவுலரை அட்டாக் செய்யப் போய் விக்கெட் விழ உதவியாக இருப்பது என்று தனது பங்களிப்பை அசத்தலாகச் செய்கிறார் பும்ரா.
பந்து வீச்சில்தான் ஆக்ரோஷம், ஆனால் இவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்னகை. தன் பந்தில் யாராவது கேட்ச் மிஸ் செய்தாலும், பீல்டிங்கில் தவறு செய்தாலும், அதற்காக தன் கோபத்தையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தாமல் வெறும் ஒரு புன்னகையுடன் அடுத்த பந்தை வீச தயாராகிவிடுவார். இத்தகைய அவரது உறுதியான தன்மையே அவருக்கு மேன் ஆஃப் த மேட்ச், மேன் ஆஃப் த சீரிஸ் என்று பல விருதுகளை அள்ளித் தருகிறது.
இப்போதும் கூட, இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணம் இந்த புன்னகைப் புயல் ஜஸ்பிரிட் பூம்ரா தான்!