ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது விழாவையொட்டி காலை சுவாமி மற்றும் அம்பாள் திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டது தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது
மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தொடர்ந்து மாலை விசேஷ அலங்காரத்தில் தீபாராதனை செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மின் அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தனர். இதில் திருவேடகம் சோழவந்தான் மேலக்கால் தேனூர் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை அறங்காவலர் சேவகன் செட்டியார் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் அவதரித்த ஜன்ம நட்சத்திரமான தை மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள:
மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு மஞ்சள் குங்குமம் மற்றும் இனிப்புகளை கோவிலுக்கு வந்த பெண்களுக்கு வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினமான இன்று அன்னை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் செய்து அழகு பார்த்த ஊர் இந்த மதுரை. இந்த ஊரில் மீனாட்சி அம்மனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ சிறப்பு வழிபாடு நடத்தினோம். கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு திருமாங்கல கயிறு புத்தாடை இனிப்பு வழங்கி நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்தோம் என்றார்.
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து நடைபெற்றது
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் முன்னதாக கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி பணியாளர்கள் நாகராஜ் மணி ஜனார்த்தனன் மற்றும் ஊராட்சி செயலாளர் மனோபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
50% என இருந்த அமெரிக்க வரிவிதிப்பு, இந்திய பொருள்களுக்கு இனி 18% என குறைக்கப்பட்டு, வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக நேற்று இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல் தனது சமூகத் தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடி இருவரும், நேற்று இரவு தொலைபேசியில் பேசி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததாக தகவல் வெளியானது. இதனால் இந்தியத் தரப்பிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஒரு முறை பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்,பாரதத்தின் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பலவீனபடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாது என்று உறுதியுடன் தெரிவித்தார். ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி, அதனால் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், ஏற்கெனவே இருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% சதவீதம் அபராத வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரிவிதிப்பு 50% என உயர்ந்தது.
இது இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எனினும், அவர்களின் வர்த்தகத்துக்கு மாற்று வழி தேடுவதாக அரசு அறிவித்தது. அதே நேரம், அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வந்தன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தனர். எனினும் பாரத அரசு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தங்களது நிலையை உறுதிப்படுத்தி மெதுவாகவே இழுத்துச் சென்றது. எனவே இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டது.
திடீரென அமெரிக்க நீதிமன்றத்தில் ட்ரம்பின் வரி விதிப்பு சட்ட பூர்வமானது அல்ல என்று தீர்ப்பெல்லாம் வெளிவந்தது. இது ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது. எனினும் பாரத அரசு நிதானமான போக்கையே கையாண்டது.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாரத அரசு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது. இது ட்ரம்பை பெரிதும் சஞ்சல படுத்தியது. இந்த ஒப்பந்தம் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே அறிவித்தார். சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகளால் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய இந்தியா, தற்போது ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் பெரிதும் சாய்ந்து வருவதாக அமெரிக்காவில் அரசியல் நோக்கர்கள் டிரம்பை எச்சரித்தனர் .
இந்த நிலையில் தான், தான் விதித்த வரிவிதிப்பைக் குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவும் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். நேற்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். பிரதமர் மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்த அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்
அதில், இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு 25%லிருந்து 18%ஆக குறைக்கப்படுவதாகவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார் இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரி விதிப்பு, 50%த்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து,அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 140 கோடி மக்கள் சார்பில் நன்றி என்று பிரதமர் மோடி அந்தப் பதிவில் தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கம் போல தான் வெற்றி பெற்றது போல காட்டி கொண்டு டிரம்ப் சோஷியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், பாரத நாட்டுக்கு கொஞ்சமாக வரியைக் குறைத்தேன் 25%ல் இருந்து 18 % ஆகக் குறைத்தேன். மோடி பயந்துகொண்டு நமது நாட்டுப் பொருள்களுக்கு 0% வரி என்று ஒப்புக்கொண்டார் என்றவாறு எழுதி இருக்கிறார். மேலும் அமெரிக்கா விற்கும் பொருள்கள் எல்லாவற்றையும் அப்படியே அதிகப்படியாக வாங்கிக் கொள்வேன் என்று மோடி சொல்லிவிட்டார் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் மோடி, வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக, வெறுமனே நன்றி என குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பால், தொழில் துறைக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை நிப்டி இன்டெக்ஸ், சராசரியாக இன்று 2.5% ஏற்றம் கண்டன. அதுபோல், அண்மைக் காலமாக சரிந்து கொண்டே வந்த இந்திய ரூபாய் மதிப்பு, வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சதவீதம் அதிகரித்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.21 என்ற அளவில் இருந்தது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 1948 ஜனவரி 30 தேதி நாதுராம் கோட்சே சுட்டு கொன்றான். தான் குற்றமென கருதியவற்றை அவர் செய்ததாக நம்பியதால் சுட்டான். ‘பிரிவினையை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் தேசத்துக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக’ காந்தி மீது அவன் குற்றம் சாட்டினான். பாகிஸ்தான் உருவாவதை அவர் உளப்பூர்வமாக எதிர்த்திருந்தால் ஜின்னாவோ பிரிட்டிஷாரோ அதை உருவாக்கி இருக்க முடியாது என்று அவன் வாதிட்டான்.
கோட்சே காந்தியை கொன்றது தவறு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் காந்தியை கொன்றதற்கு அவன் கூறிய காரணங்கள் தவறா ?
காந்தி தனது அமைதிக் கொள்கைக்கு புத்தர், இயேசு என்ற இருவரை ஆதர்சமாக கொண்டிருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த மூன்று பேர்களும் இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்தார்கள். குண்டாவை மறுக்க மனமின்றி அவன் கொடுத்த கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் புத்தர் மரணித்தார். ஆட்சியாளர்கள் இயேசுவை புரிந்து கொள்ளாததால் அவர் மரணத்தை ஏற்றார். காந்தி விஷயத்தில் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் இருந்தன. இந்தியா பிளவுபடுவதை காந்தி எப்போதும் ஏற்கவில்லை. ஆனால் 1947 ஜூன் மாதத்தில் பிரிவினையை ஏற்றுக் கொண்ட தன் சகாக்களை அவர் முழுமையாக ஆதரித்தார்.
1945 இல் ஜின்னாவிடம் பிரிவினை வேண்டாமென வாதிட்டு, வேண்டி, தோற்றுப் போனார். 1946 இல் நாட்டை மத அடிப்படையில் மூன்றாக பிரிக்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் அமைச்சரவை குழு வந்தது. அப்போதும் காந்தி தனது எதிர்ப்பை காங்கிரஸ் செயற்குழுவிடம் தெரிவித்தார். ஆனால் ஜவாஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், மௌலானா ஆசாத் போன்றோர் அடங்கிய காங்கிரஸ் தலைமை தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பிரிவினையுடன் வந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.
நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் அனுமதியுடன் இங்கிருந்து வெளியேறுகிறேன். உங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள், என்று துயரத்துடன் கூறியபடி காந்தி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதற்கு முன்பு இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டபோது தலைவர்கள் அவரை வெளியேற விடாமல் தடுத்து, அவர் கூறியபடியே நடந்து கொள்வதாக சொல்லுவார்கள். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை.
பியாரிலால் அங்கு நடந்ததை விவரமாக பதிவு செய்துள்ளார். “நீங்கள் விரும்புவது என்ன ? பாபுவை (காந்தியை) இன்னமும் இங்கு நிறுத்தி வைக்க என்ன தேவை இருக்கிறது? என்று மௌலானா சாஹிப் கேட்டார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களுக்கு பாபு தேவைப்படவில்லை. விமானியை தூக்கிப் போட அவர்கள் முடிவெடுத்தனர்.”
1947 மார்ச் மாதத்தில் வைஸ்ராய் மவுண்ட் பேட்டனின் பிரிவினை திட்டத்தை கேள்விப்பட்டதும் காந்தி திகைத்துப் போனார். தன்னுடைய கருத்தை கேட்டு, அதன்படி காங்கிரஸ் பிரிவினையை ஏற்க மறுக்கும் என அவர் நம்பினார். ஆனால் அப்படி நடக்கவில்லை. 1947 மார்ச் முதல் வாரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பஞ்சாப்பை மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர் மெட்ராஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜே. பி. கிருபளானி அதே கொள்கை வங்காளத்திற்கும் பொருந்தும் என்றார்.
பஞ்சாப்பை மதரீதியில் பிரிக்க வேண்டுமென காங்கிரஸின் தீர்மானத்தை கேட்ட காந்தி அதை எதிர்த்து நேருவுக்கும் பட்டேலுக்கும் கடிதம் எழுதினார். ‘விரிவான விவாதத்துக்கு பிறகே அந்த தீர்மானம் இயற்றப்பட்டது. அவசரகதியிலோ ஆழ்ந்து சிந்திக்காமல் எதுவும் செய்யவில்லை. இதை உங்களுக்கு விளக்குவது கடினம்’, என்று சொற் சிக்கனத்துடன் மார்ச் 24 தேதி சூடான பதில் கடிதம் வந்தது. முன்பெல்லாம் இது போன்ற விஷயத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது, என்று பியாரிலால் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி தில்லிக்கு அவசரமாக திரும்பி வந்தார். பிரிவினையை தடுக்கும் நோக்குடன் மவுண்ட்பேட்டனை மார்ச் 31 தேதி சந்தித்தார். தேசத்தை பிரிக்காமல் அதிகாரம் முழுவதையும் ஜின்னாவிடம் கொடுத்துவிடும்படி சொன்னார். நேருவும் பட்டேலும் இதை கடுமையாக எதிர்த்தனர். ‘காந்தியின் சூழ்ச்சிகரமான தந்திரம் இது’ என்று கூறி ஜின்னா அதை புறம் தள்ளினார்.
மவுண்ட்பேட்டன் இந்திய தலைவர்கள் – காங்கிரஸ் சார்பில் நேரு, பட்டேல், ஆச்சாரியார் கிருபளானி, லீக் சார்பாக ஜின்னா, லியாகத் அலி கான், ஏ. ஆர். நிஸ்தார் மற்றும் சர்தார் பல்தேவ் சிங் – முன்பு 1947 ஜூன் இரண்டாம் தேதி புதிய பிரிவினை திட்டத்தை முன் வைத்தார். தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டவுடன் மவுண்ட்பேட்டன் செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டி, ‘ஜூலை மூன்றாம் தேதி திட்டம்’ எனப்படும் பிரிவினை திட்டத்தை அறிவித்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தருக்கு ஏற்பட்ட அதே தடுமாற்றத்தை காந்தி எதிர்கொண்டார். தன்னுடைய இளம் சகாக்களின் முடிவை அவர் எதிர்த்தாலும் அவர்களை பொதுவெளியில் மறுக்க முடியாமல் ‘சூழ்நிலை’ மீது பழியை போட்டார். ‘சில நேரங்களில் கசப்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீமையிலிருந்தும் சில நேரங்களில் நன்மை வெளிப்படலாம்’ என்று கூறி பிரிவினையை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களை ஜூன் 1947 இல் அவர் சமாதானம் செய்தார்.
பிரிவினைக்கு வழிவகுத்த ‘சூழ்நிலைகளை’ உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா ?
கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை. ‘காந்தியின் மறைவுக்குப் பிறகு’ இந்திய அரசியல் நன்றாக இருக்குமென கோட்சே நினைத்தான். ஆனால் அவன் கருதியது தவறு என்று நிரூபணமாகி உள்ளது. இந்திய அரசியல் துடிப்பு உள்ளதாக ஆகிறது. ஆனால் காந்தி இல்லாததால் அல்ல, அவர் நிரந்தரமாக அதில் இருப்பதால்!
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.
செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை போகனும் என நினைக்கிறீங்களா இத படிங்க.
திங்கட்கிழமை முதல் செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மீண்டும் மாற்றுப்பாதையில் விருதுநகர் மானாமதுரை வழி இயங்கவுள்ளது .
புதன்கிழமை மட்டுமே இந்த மாதத்தில் மதுரை வழியாக செல்லும் .வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் மாற்று பாதையிலேயே இயங்க உள்ளது
திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு என ஆறு நாட்களும் இந்த ரயில் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை தேவகோட்டை ரோடு காரைக்குடி புதுக்கோட்டை கீரனூர் ஆகிய கூடுதல் நிலையங்களில் நின்று திருச்சி வழியாக மயிலாடுதுறை நோக்கி செல்லும்
மாற்றுப்பாதையில் அனைத்து நிலையங்களிலும் இந்த ரயிலுக்கு டிக்கெட் கிடைக்கும் . பகல் நேரத்தில் திருச்சி தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
மதுரை திண்டுக்கல் மார்க்கமாக இந்த ரயில் புதன்கிழமை மட்டுமே செல்லும் . கள்ளிக்குடி முதல் கொளத்தூர் வரை உள்ள நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும், இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1 ஞாயிறு இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் தெரிவிகப்பட்ட முக்க்ய அம்சங்கள்…
* பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. சீர்த்திருத்தங்களால் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
* பாஜ அரசின் நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
* நீண்ட கால தொழில்முதலீட்டு திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம்.
* வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.
* மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.
முக்கிய கடமைகள்
3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.
அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்.
எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.
அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.
நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.
மத்திய பட்ஜெட் 2026-27
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது.
அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர்.
சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது
மத்திய பட்ஜெட் – சில அறிவிப்புகள்
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உலகத்தரத்தில் பயிற்சி.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.
சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலையான வளர்ச்சி
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாகத்தில் நிலையானதாக உள்ளது.
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
உற்பத்தி துறையில் அக்கறை, வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிப்பு
இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி சதவீதம் 7ஆக எதிர்பார்க்கப்படுகிறது.
வறுமை பெரும் அளவு குறைப்பு
உயிரி மருத்துவத்துறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை!
₹4 லட்சம் வரை – 0 வரி
₹4-₹8 லட்சம் வரை – 5% வரி
₹8-₹12 லட்சம் வரை – 10% வரி
₹12-₹16 லட்சம் வரை – 15% வரி
₹16-₹20 லட்சம் வரை – 20% வரி
₹20-₹24 லட்சம் வரை – 25% வரி
₹24 லட்சத்துக்கும் மேல் – 30% வரி
எதற்கெல்லாம் வரி விலக்கு?
தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை
விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு.
தனி நபர்கள் வழக்கம் போல் ஜுலை 31ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
வரி சார்ந்த குற்றங்களுக்கான தண்டனைகளில் தளர்வு; வரி சார்ந்த அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு.
வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்படும்.
காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.
17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது
விபத்து இழப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு
நிதி பகிர்வில் மாற்றம் இல்லை!
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை; 41% அளவிலேயே தொடரும்.
சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்; புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE-மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2%ஆக குறைப்பு.
மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
மத்திய பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்
ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
தமிழ்நாட்டின் பொதிகை மலை, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.
2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.
2026-27 நிதியாண்டின் மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.
நீர் வழித்தடம்; அதிவேக ரயில்
இந்தியாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்க நீர்வழி முனையம் அமைக்கப்படும்.
நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
மும்பை – புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி
தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
நாட்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய விதிகளில் தளர்வு.
தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்; புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10% ஆக உள்ள முதலீடு வரம்பு, 24% ஆக அதிகரிக்கப்படுகிறது.
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.
செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.
பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்.
சென்னை – பெங்களூரு; சென்னை – ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்
இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும்.
பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், ‘கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும்.
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1026 ல் சோமநாதர் ஆலயம் முகம்மது கஜினியால் அழிக்கப்பட்டது. அதன் பிறகும் அது பல முறை தாக்கப்பட்டது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் பாரதிய ஆன்மீக, கலாசார நினைவுச் சின்னங்கள் பலமுறை அழிவுகளைச் சந்தித்தன. இருப்பினும் அந்த முழு வரலாற்றை அழிவின் வரலாறாகக் கருதுவதற்கு பதிலாக, பாரதிய ஹைந்தவ நம்பிக்கையின் உடைக்கமுடியாத வலிமையின் அடையாளமாக விவரிக்கலாம்.
சிதைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொண்ட பக்தர்கள் உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பினர். பக்ர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயங்கவில்லை. சோமநாத், அயோத்தி, காசி, மதுரா என்ற அழிக்கப்பட்ட நான்கு பண்டைய வழிபாட்டுத் தலங்களும் இந்திய கலாசாரத்தின் சின்னங்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, கோடிக்கணக்கான மக்கள் அந்த அழிக்கப்பட்ட இடங்களில் கோயில்களை மீண்டும் கட்ட முயன்றனர். மதத்தின் பெயரால் நாடு மோசமாகப் பிரிந்து போனதால் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர் முக்கிய ஆலயங்களையாவது மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காகக் காத்திருந்தனர்.
ஆனால் இந்தியாவிலேயே ஆட்சியாளர்களில் சிலர் ‘திருப்திபடுத்தும்’ அரசியலால் ஹிந்து மத எதிர்ப்புடன் இந்த மறுசீரமைப்புப் பணியை மிகப் பெரும் பாவமாகக் கருதி வரலாற்றுத் தவறை சரி செய்யவிடாமல் தடுத்துனர்.
ஆனால் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேலின் உறுதியாலும் அர்ப்பணிப்பாலும் சோமநாதர் கோவில் கட்டுமானம் அற்புதமாக முடிந்தது. அப்போதைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பல பெரியவர்களும் அதில் பங்கேற்றார்கள். அந்த ஊக்கத்தோடு அயோத்தி போன்ற ஆலயங்களும் ஒவ்வொன்றாகக் கட்டப்பட வேண்டியவையே. ஆனால் அது நடக்கவில்லை. காரணம், பட்டேல், எந்த கட்சியில் இருந்தாரோ அதே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அந்த முடிவுவை எதிர்த்தார்கள்.
பட்டேலின் மறைவுக்குப் பிறகு அந்த எதிர்ப்பும் திருப்திப்படுத்தும் அரசியலும் தொடர்ந்து மேலும் வலுவடைந்தது. அதனால்தான் அயோத்தியைப் புரனமைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. அந்த தாமதம் மேலும் சில சிக்கல்களை உருவாக்கிப் பகைமையை வளர்த்தது. ஆனால் இரும்பு மனிதரைப் போன்ற மற்றொரு வலிமையான தலைவரின் திறமையால் அயோத்தியைக் கைப்பற்ற முடிந்தது. காசியும், மதுராவும் இன்னும் அப்படியே உள்ளன.
ஆயிரக்கணக்கான பெரிய கோவில்களைச் சீரமைப்பு செய்துகொள்ள இயலாமல் போனாலும் குறைந்த பட்சம் இந்த முக்கிய கோவில்களையாவது கட்டமைத்துக் கொள்ள வேண்டும என்ற இன்றைய குறைந்தபட்ச கோரிக்கைகள் மத அரசியலால் தீர்க்கப்படாமல் உள்ளன.
இருப்பினும் நாசம் விளைந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தச் சூழலில் வரலாற்றைத் திரும்பப் பார்த்தால், அந்த இடங்களில் ஏதோ ஒரு வடிவில் கோவிலை கட்டிக் கொண்டு, அதனையும் இடித்தபோது, மற்றொரு பிரதிஷ்டையைச் செய்து கொண்டு, இடைவிடாமல் தொடர்ந்து நம்பிக்கையையும் பக்தியையும் வெளிபடுத்தி வரும் இந்துக்களின் உறுதியை கவனிக்க வேண்டும்.
பல அழிவுகளுக்குப் பிறகு சிறந்த அரசியான ராணி அகல்யாபாய் ஹோல்கர் கட்டிய விஸ்வநாதர் ஆலயமும் சோமநாதர் ஆலயமும் சிதையாமல் நிற்றன. ஆனால் வெளிநாட்டவரின் வழிபாட்டு இடங்களாக வன்முறையால் மாற்றப்பட்ட, உண்மையான கோவில்களை அதே தலத்தில் மீண்டும் புனரமைத்துக் கொள்ள இயலாமல் உள்ளோம், ஒரே ஒரு சோமநாதர் ஆலயத்தைத் தவிர.
1890 ல் கோவிலைப் பார்த்து வருந்தி, நெகிழ்ச்சியடைந்த சுவாமி விவேகானந்தர் 1897 ல் பேசுகையில், “சோமநாத் போன்ற தேவாயலங்கள் நமக்கு வரலாற்று புத்தகங்களை விட உண்மைகளை அதிகம் கற்பிக்கின்றன. தாக்குதலுக்கும் நாசத்திற்கும் உள்ளாகி, மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்ட இந்த கோவில்கள் பாரதத்தின் ஆத்மாவுக்கு வாழும் சாட்சிகள்” என்றார். பட்டேலுக்குத் துணையாக இருந்த கே.எம். முன்ஷி, ‘சோமநாத் தி ஷ்ரைன் எடர்னல்’ என்ற ஆதாரப்பூர்வமான நூலை அற்புதமாக எழுதினார்.
“வெறுப்பு அழிக்கிறது. நம்பிக்கை சாஸ்வதமாக உருவாக்குகிறது” என்று இந்த ஆயிரம் ஆண்டு வரலாற்றை, இடைவிடாத நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அண்மையில் வர்ணித்து, மாபெரும் தலைவர் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீநரேந்திர மோதி, சிறந்த ஊக்கமளிக்கும் செய்தியை வழங்கினார். சோமநாத் அறக்கட்டளையின் சேர்மனாகவும் இருக்கும் மோதிஜி, அன்றைய பட்டேலை நமக்கு நினைவூட்டினார்.
“வெறுப்போடு கூடிய கடந்த கால அழிவுகளின் வரலாற்றை அழித்து விட்டு, பக்தியின் வலிமையோடு தர்மத்தை சாதிக்கும் நம்பிக்கையின் வெற்றிகளையும், சிகரங்களோடும் கோபுரங்களோடும் உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோவில்களையும் நினைவூட்டினார்.
தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக்கும் புனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் அடையாளமான ஆலயங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நாட்டின் ஆத்மாவான ஆன்மீக சக்தியை நிலைநிறுத்திக் கொள்வோம்.
2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார்.
முன்னதாக, கடந்த ஜன.28 அன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார் இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத் தக்கது. 2024ல் இடைக்கால பட்ஜெட், வழக்கமான பட்ஜெட் என இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்ற வகையில் இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகிறது.இவ்வகையில், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.
முன்னர், மொரார்ஜி தேசாய் 11 முறையும், ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் நிர்மலா சீதாராமன் மட்டுமே, ஒரே பிரதமரின் ஆட்சியின் கீழ், தொடர்ச்சியான ஆண்டுகளில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது ஒரு சாதனைதான்!
முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கினார். அவருக்கு திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் .
பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றுதான் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .
பட்ஜெட் உருவாக்கக் குழு:
மத்திய பட்ஜெட் உருவாக்கக் குழுவின் தலைவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தக் குழுவில், முதலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினத்துறை செயலாளர் வும்லுன்மங் வுல்நம், நிதி சேவைத் துறை செயலாளர் நாகராஜூ, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோர் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இரவில் இருந்து பகலுக்கு!
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1999ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேர வசதிக்கு ஏற்ற வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பிரிட்டிஷ் அடிமைப் பழக்கம் முடிவுக்கு வந்ததுடன், பட்ஜெட் குறித்த செய்திகளை ஊடகங்களில் விவாதிக்கவும், பொது மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுடன் பேசவும் வசதியாக அமைந்தது
பிப்.1 தான் கணக்கு!
பட்ஜெட் தாக்கல் என்பது, பிப்ரவரி மாத கடைசியில் இருந்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதியன்று மாற்றப்பட்டது. 2016ம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது மாற்றப்பட்டு, பிப்.1 என மாற்றப்பட்டது. இதுவும் பொதுமக்களின் வசதி கருதியே நிகழ்ந்தது.
ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டு தொடங்கும். பட்ஜெட் தாக்கலான ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசின் புதிய கொள்கைகள், விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைக்காது. மேலும் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு தொடங்கிவிடும். இதனால் பட்ஜெட் அமல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. 2017ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார். இதனால் அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் பிப். 1 இன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதும், அந்த நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலானது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதி கோவிலானது வட பெருங்கோவில் உடையான் திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலில் பெருமாள் வடபத்ர சாயி எனும் பெயரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டாள் இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்குத்தான் திருப்பாவை எனும் பாமாலைபாடி பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்படுகிறார்.
பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஒருசேர மங்களாசாசனம் செய்த பெருமையுடைய இந்த பெருமாளின் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் உப சந்நிதி விமானம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேக பெருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பல்வேறு ஆகம பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு மீன லக்னத்தில் வைகாசன முறைப்படி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து விமான ராஜகோபுரம் பால பிம்ப பிரதிஷ்டை, ஆராதனம், தீர்த்த கோஷ்டி எஜமான மரியாதை செய்யப்பட்டு பாலாலயம் துவங்கியது.
நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உபயதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.
உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.
கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.
கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.
எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.
முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.
பாரதத்தின் 77வது குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த கையுடன், ஜன.27 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் பாரதத்துடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறது.
20 ஆண்டுகளாக இம்மாதிரி ஒரு ஒப்பந்தம் போட பாரதம் முயற்சித்து இந்த ஆண்டு தான் வெற்றி பெற்றிருப்பதாகவும், இந்த ஆண்டு இது நிறைவேற முக்கியக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் என்கிறார்கள் ஐரோப்பாவில். டிரம்ப்பு மேற்கொண்ட நெருக்குதல்களால், இங்கே ஓடி வந்து ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டிருக்கிறது. இவை, பாரதத்தை ஒரு காலத்தில் காலனி ஆக்கியவை என்பது குறிப்பிடத் தக்கது.
இரு சக்திவாய்ந்த தேசங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வெறும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; இரு தேச வளர்ச்சிக்கான ப்ளூபிரின்ட்; இருவருக்குமான உணர்வு உலக நன்மைக்கானது. 140 கோடி இந்தியர்களுக்கும், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். ஜவுளி, நகைகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்சார்ந்த பொருட்களை, ஐரோப்பிய ஒன்றிய சந்தை எளிதில் அணுக இன்று வகை செய்யப்பட்டு உள்ளது. – என்று, ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள தடையற்ற வணிக ஒப்பந்தமானது அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் தெரிவித்தார். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சாத்தியமாகியுள்ள இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல் என்றார் உா்சுலா. இதனால், ஆட்டோமொபைல், இயந்திர பாகங்கள், மருத்துப் பொருள்கள், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் 96% ஏற்றுமதி பொருள்களுக்கு வரி குறைப்பு சாத்தியமாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய – பாரத வர்த்தக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்றால், ‘இது அநியாயம். எங்களை விட்டு இந்தியாவோடு ஒப்பந்தம் போடுவதா?’ என்று அமெரிக்கர்கள் கதறுவதிலிருந்தும், ‘ஒழிந்தது அமெரிக்கா’ என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து குரல்கள் எழுவதிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மகத்தான வர்த்தக ஒப்பந்திற்கு நன்றி சொல்ல வேண்டியது அமெரிக்க அதிபர் டிரம்புக்குதான் என பலரும் குறிப்பிடுகிறார்கள். காரணம், ஐரோப்பிய நாடுகளும் பாரதத்தை சிரித்த முகத்துடன் காலனி ஆதிக்க அதிகாரப் பார்வையில்தான் பார்த்தன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் நரேந்திர மோடி எனும் தேசபக்தனின் உறுதியான தலைமையில், இந்தியாவின் அசுர வளர்ச்சி, பிற நாடுகளுடன் நட்பு, உலக அரசியலில் நிலையான உறுதியான முடிவுகள், ஸ்திரமான சிறப்பான ஆட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா காலத்தில் பாரதம் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கி காப்பாற்றியது, ராணுவ வலிமை, தொழில்நுட்பத்தில் அதீத வளர்ச்சி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா இந்தியாவை சமமாக பாவிக்க வைத்த தன்மை, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத தன்மை, சீனா தானாகவே முன்வந்து இந்தியாவிடம் நட்பு பாராட்டுவது, இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைப் போற்றுவது… இவைகள்தான் இன்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவை நாடி வந்ததன் காரணங்கள் என்று சொல்லலாம்.
இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒப்புதல் பெற இன்னும் 6 மாதங்களாகும் என்றாலும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பில்லை என்பதால், ஒப்புதல் நிச்சயம் என்று தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது எட்டாவது வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பாரத அமைச்சர் பியூஷ் கோயல்.
இந்த ஒப்பந்தங்கள் வெறும் ‘வர்த்தகம்’ சம்பந்தப்பட்டதில்லை என்பதே இதில் இருக்கும் முக்கியமான விஷயம்!
இந்த வர்த்தகம் அத்தனையும் யூரோ – ரூபாய் கரன்ஸிகளைக் கொண்டே நடக்கப் போகின்றன. டாலரில் இல்லை. எனவே, இது அமெரிக்க டாலருக்கு மிகப் பெரிய பின்னடைவு என்கிறார்கள். இதுகுறித்து, அமெரிக்காவில் ஏற்கெனவே புலம்பல் ஆரம்பித்து விட்டது.
ஐரோப்பிய ஒன்றியமும் பாரதத்தின் யுபிஐ-யும் இணைந்து செயலாற்றும் என்றும் தெரிகிறது. ரூபாய் உபயோகத்தால் ரூபாயின் மதிப்பு உயர்வதுடன், ஒப்பந்தம் செய்திருக்கும் நாடுகளில் இனி இந்தியா விரோத பயங்கரவாதிகள் (உதாரணத்துக்கு காலிஸ்தானிகள்) பாரத விரோத செயல்களில் ஈடுபட முடியாது. ஒப்பந்தம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா போன்றவற்றில் ஏற்கனவே காலிஸ்தானிகள் முன்பு போல பாரத விரோத வேலைகளில் ஈடுபட முடியவில்லை என்பதை கவனிக்கலாம். மேலும் இனி பாரதத்திலிருந்து குற்றவாளிகள் எவரும் இந்த நாடுகளில் சென்று ஒளிந்து கொள்ள முடியாது.
கனடாவும் ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அஜித் டோவல் அடுத்த மாதம் கனடா செல்லவுள்ளார். வெவ்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, பிரான்ஸின் ஜனாதிபதி மேக்ரோன், பிரேசில் லூலா, கனடாவின் கார்னி, இத்தாலி பிரதமர் மெலோனி, நெதர்லாந்து பிரதமர் என பலரும் அடுத்த சில நாட்களில் பாரதம் வருகிறார்கள்.
பாரதத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார் பிரதமர் மோதி. அவருக்கும், அவரது அணியின் ஜெய்ஷங்கர், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், அஜித் டோவல் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் செயல்பாடுகளில் பெரும் பங்கு உள்ளது.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைக்கும் பலன்கள் :
இந்தியாவுக்கும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை, மகத்தான ஓர் ஒப்பந்தம் என்று குறிப்பிடும் வகையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அப்படியெனில், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமா என்ற எண்ணம் எழுவது இயல்புதான். ! மேலும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பல்வேறு நலன்களை அளிக்கும் என்று கூறப்பட்டது.
முதலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது
அடுத்த 7 ஆண்டுகளில், 93% பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும்
இரு தரப்புக்கும் இடையிலான 99.5% வர்த்தகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும்
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் மற்றும் வேளாண் பொருட்கள் மீதான வரி விதிப்பு முற்றிலுமாக நீக்கப்படவில்லை
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரி விதிப்பு பூஜ்ஜியம் ஆக்கப்பட்ட துறைகள்: கடல் சார் பொருட்கள் ( தற்போதைய வரி 26% ), ரசாயனங்கள் ( தற்போதைய வரி 12.8% ), பிளாஸ்டிக்ஸ், ரப்பர் ( தற்போதைய வரி 6.5% ), தோல், காலணிகள் ( தற்போதைய வரி 17% ), ஜவுளி ( தற்போதைய வரி 12% ), ஆயத்த ஆடை ( தற்போதைய வரி 4% ), பேஸ் மெட்டல் ( தற்போதைய வரி 10% ), ஆபரணங்கள் ( தற்போதைய வரி 4% )
இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு வகிதம், 3.8 %த்தில் இருந்து 0.1 %மாகக் குறைந்துள்ளது
ஐரோப்பிய ஒயின், பீர், ஆலிவ் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவு, சில பழங்கள் மீதான வரி, இந்தியாவில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது
பிரீமியம் ஒயின் மீதான இந்திய வரி விதிப்பு, 150 %த்தில் இருந்து 20%மாக படிப்படியாகக் குறைக்கப்படும்.
ஐரோப்பிய தயாரிப்பு கார்கள் விலை 17,800 டாலர்களுக்கு குறைவு என்றால், இந்த ஒப்பந்த விதிமுறைகள் பொருந்தாது. அதற்கு மேல் விலை கொண்ட கார்கள் என்றால், 3 பிரிவாக ஆக்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் கோட்டா மற்றும் தனித்தனி வரி விதிப்பு இருக்கும் . பெரும்பாலான கார்களுக்கு 30 முதல் 35% வரி விதிப்பு இருக்கும் . (பிஎம்டபிள்யூ., வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ், ரெனால்ட் போன்ற ஐரோப்பிய இறக்குமதி கார்களின் மீதான வரி கணிசமாக குறையும்.)