Home Blog Page 13

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

pm modi in ap meeting - 2026

பிஹார்: அமெரிக்க சிஐஏ துணையுடன் பாரதப் பிரதமர் மோதியை முடிக்கத் திட்டம் போட்ட 3 பேர் கைது!

பிஹாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு காவல்துறைக் குழு சிம்ரி காவல் நிலையப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, ஒரு இளைஞரைக் கைது செய்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்ரியில் உள்ள ஆஷா பத்ரி கிராமத்தைச் சேர்ந்த அமன் திவாரி என அடையாளம் காணப்பட்ட முக்கியக் குற்றவாளி, அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் ஷுபம் ஆர்யாவின் கூற்றுப்படி, குற்றவாளி பிரதமரைத் தாக்கத் திட்டமிட்டதாகவும், ஒரு வெளிநாட்டு அமைப்புடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி, இந்தத் திட்டம் தொடர்பாக பெரும் தொகையைக் கோரி மத்திய புலனாய்வு முகமைக்கு (சிஐஏ) ஒரு திட்ட அறிக்கையை அனுப்பியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், திட்டத்தைச் செயல்படுத்த 22 நாட்கள் அவகாசம் கோரியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கூற்றுகளின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் இல்லத்திலிருந்து மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை காவல்துறை மீட்டெடுத்தது. மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளை சரிபார்க்கவும் இவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியின் கூட்டாளிகள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. கூறப்படும் சதியின் இயல்பைத் தீர்மானிக்க மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறிப்பிட்ட நெட்வொர்க் அல்லது தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் காணும்போது மேலும் பல விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

school leave - 2026

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நிறைவடைகின்றன.

ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1–3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

– இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிஜேபி., உள்ள வந்துடும்!

kanimozhi karunanidhi maran - 2026
  • கே.எஸ். ராதாகிருஷ்ணன்

என்டிஏ கூட்டணி முற்றிலும் தமிழகத்திற்கு விரோதமானது. அவர்களுக்குத் தமிழ் மண்ணில் ஒரு சீட் கூடக்கிடைக்காது என்று அபத்தமாக பேசி வருகிறார் கனிமொழி .

உண்மையில் மோடி அரசு தமிழர்களுக்கு விரோதமானவரா?யார், நீங்கள்தான் தமிழர்கள் விரோதிகள் ? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு யார் காரணம்?

இத்தனை வருடம் ஆட்சி செய்தும் மத்திய அமைச்சரவையில் 18 வருடங்கள் பங்குபெற்றும் கூடத் தமிழை ஆட்சி மொழியாக ஏன் உங்களால் கொண்டு வர முடியவில்லை! இப்போது வந்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் மட்டும் என்ன பலன்?

ஆனால் உங்கள் குழந்தைகளை மட்டும் இந்திப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்! உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் டெல்லிக்கு எம்பி ஆகப் போக வேண்டும் என்கிற முறையில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறோம் என்று மக்களிடம் இரட்டை முகம் காட்டுகிறீர்கள்.

மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் திமுக வேட்பாளர்களுக்கான நேர்முகத்தில் உங்களுக்கு இந்தி தெரியுமா என்றும் கேட்கிறீர்கள்?! இந்த லட்சணத்தில் பாஜகவை எதிர்ப்பதாகவும் பாஜக வந்தால் இந்தி வந்துவிடும்! தமிழ் ஒழிந்து விடும் என்று இதே பொய்ப் பிரச்சாரத்தை எத்தனை வருடம் செய்வீர்கள்? எங்கே பிஜேபி தமிழருக்கு எதிராக இருந்தார்கள்.

கனிமொழி தொகுதியில் குலசேகரப்பட்டினத்திற்கு ராக்கெட்ஏவு நிலையம்
30, 000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுகம் , தூத்துக்குடி விமான நிலைய மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு எல்லாம் ஒரு சீட் கூட பிஜேபிக்கு கிடைக்கவில்லை! ஆனால் அவர்கள் தமிழகத்திற்கு இத்தனை வசதிகளையும் செய்திருக்கிறார்களா இல்லையா?

நீங்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி பேசுகிறீர்களே! நீங்கள் எத்தனை துரோகங்களை தமிழகத்திற்குச் செய்திருக்கிறீர்கள்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தோண்ட தோண்ட மண் சரியசரிய தோண்ட தோண்ட எவ்வளவு பணத்தை விரயம் பண்ணி அதில் எத்தனை ஊழல் செய்து நீங்கள் கொழுத்திருக்கிறீர்கள்.

அத்தனையும் தோல்வியில் முடிந்த பிறகும் உங்கள் தகப்பனார் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சவால் விட்டுவிட்டும் போய்விட்டார்.

அத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி அரசுப் பணம் வீணாகி விட்டது. ஒருபிடி மண்ணைக் கூட பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முட்டாள் தனமாகப் பேசினீர்களே! இன்றைக்கு இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்டு விட்டீர்களா?

திமுக போட்ட அத்தனை திட்டங்களிலும் ஊழல்! கேட்டால் பாஜக தமிழ்த்திற்கு துரோகம் செய்தது என்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டே நீங்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறைத்துக் கொண்டு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் பாஜகவை குற்றம் சாட்டுகிறீர்கள்.

எதிலும் ஒரு நியாயம் ஒரு அரசியல் எதார்த்தம் ஒரு அறநெறி எதுவுமே இல்லையே! எதற்கும் கட்டுப்படாமல் இவ்வளவு கேவலமாக உங்கள் குடும்ப அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போக உங்கள் மாவட்ட செயலர்கள் மந்திரிகள் என அவர்கள் குடும்பங்களையும் இந்த ஊழல்களின் மூலம் காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

write thoughts - 2026
#image_title

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

மெட்ரோ ரயில் என்பது ஒரு வெள்ளை யானை கோடிகளை கொட்டினாலும் அதிலிருந்து வரும் வருவாய் மிக குறைவு. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களிலேயே மெட்ரோ ரயில் தடுமாறுகிறது.

துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் இன்னமும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா…? கொஞ்சம் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் அறிக்கையை இணையத்தில் எடுத்துப் பாருங்கள்…

21–22ல் நிகர நஷ்டம் 85.79 கோடி. 22–23ல் இது 34 கோடி. படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர இன்னமும் பிரேக் ஈவன் எனப்படும் லாபம்–நஷ்டம் இல்லா நிலையை அடையவில்லை. அனேகமாக 27–28 ல் பிரேக் ஈவன் வரலாம். அதன்பின் லாபத்தை பார்க்க வேண்டும்.

பெங்களூரிலும் மெட்ரோ நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் ஆயிரம் கோடி வருவாயை எட்டியும் 623 கோடி நஷ்டம். இது முந்தைய ஆண்டை விட கூடுதல் நஷ்டமாம்.

சென்னை, பெங்களுருக்கே இந்த நிலைய என்றால் மதுரை, கோவை எம்மாத்திரம். மதுரை மக்கள் எண்ணித்தான் செலவழிப்பார்கள். தேவையில்லா செலவுகள் மதுரையில் மிகவும் குறைவு. திருமங்கலத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு பஸ்சை விட கட்டணம் குறைவாக இருந்தால் தான் மெட்ரோவை ஏற்பார்கள்.

அதிலும் நகருக்குள் மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கே அமையும், அதற்கும் செல்லும் இடத்திற்கும் எவ்வளவு துாரம், ஆட்டோ பிடிக்க வேண்டுமா போன்ற விஷயங்களை பொருத்து தான் பயணிப்பார்கள். ஆரம்பத்தில் மெட்ரோ மீதான மோகத்தால் வேண்டுமானால் சென்று வருவார்கள். அதன்பின் வரவேற்பு குறைந்து விடும்.

சென்னையில் திருமயிலை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தடுமாற்றத்தில் தான் இருந்தது. தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டபின் ஓரளவு மக்கள் பயணிக்கின்றனர்.

முதல்வரும் தி.மு.க.,வினரும் மீண்டும் மீண்டும் சொல்வது, ‘ஆக்ராவில் மெட்ரோ ரயில் வந்து விட்டது… உ.பி.,யில் வந்து விட்டது’ என்பது. ஆக்ரா, உ.பி., சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். அங்கு மெட்ரோ கண்டிப்பாக வரவேற்பை பெறும்.

மதுரையை அப்படியா வைத்திருக்கிறீர்கள். ஒருமுறை வந்து செல்லும் சுற்றுலா பயணி மீண்டும் வரவே மாட்டார்…. யாரும் மதுரைக்கு போகிறேன் என்றால் கூட போக விட மாட்டார். அவ்வளவு மோசமாக இருக்கிறது நிர்வாகம்.

வாகன நிறுத்துமிடம் துவங்கி சுற்றுலா பயணிகளை நம்மவர்கள் டீல் செய்யும் அழகு உலகப்பிரசித்தி.. அதை விட ரோடும், கோயிலும்… (அன்னை மீனாட்சி கோயிலும் அதை இவர்கள் நிர்வகிக்கும் அழகையும் பற்றி தனியாக எழுத உள்ளேன்)

என்னை பொறுத்தவரை மதுரைக்கு மெட்ரோ.. கிட்ரோவெல்லாம் தேவையே இல்லை. ரோடுகளை சரியாக அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரிப்பாளையத்தில் கட்டியுள்ளது போன்று தேவையான இடங்களில் பாலங்கள் அமைத்தாலே போதும். கோடிகளை கொட்டி மெட்ரோவை கொண்டு வந்து பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் என்னாகும்.

பயணிகளிடம் வரவேற்பு இருக்குமா, நிலம் கையகப்படுத்த எவ்வளவு செலவு வரும் போன்ற மத்திய அரசு கேட்கும் விபரங்களை தர வேண்டியது மாநில அரசின் கடமை. அதை விடுத்து அதில் அரசியல் செய்வது பொறுப்பின்மையின் உச்சம்.

  • எஸ்.சந்திரசேகர், மதுரை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

thirumavalavan - 2026

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசாதே என்று கோஷமிட்டு, விசிக.,வினர் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி, கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எல்.முருகன் கண்டனம்

ஏபிவிபி மாணவர்களை தாக்கிய விசிகவினரை கைது செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டார். அதில்,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்தில் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.- என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்து முன்னணி கண்டனம்

தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா? இந்தச் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று கடலூரில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். காவல்துறையினர் கண் முன்னே மிரட்டல் விடுத்த விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோல் நடந்தன.

மேலும் ஊடகங்கத்தினரும் மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் விடீயோ கலைஞர்கள், நிருபர்களை ஆகியோரை போலீஸ் தாக்குவது, விரட்டுவது தொடர்கிறது. இதற்கு காரணம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான்.

இன்னமும் திமுகவின் கண் அசைவுக்கே அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா? அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் சில இடங்களில் மாற்றப்பட்டனர். ஆனால் பல முக்கிய இடங்களில் அதிகாரிகள் மாற்றப்படவில்லை.

வன்முறையில் இறங்கும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்தி, நேர்மையற்ற தேர்தலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்து முன்னணி சார்பில் எச்சரிக்கிறோம்.

ஆகவே, இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு மாணவர்களை தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வத்தாமன், பாஜக.,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. அதில் விசிக குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசத்தை நேசிக்கிற மாணவர்கள் கூட்டம் என்பதால் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இந்த கொடூர தாக்குதல்களின் அடிப்படையில் விசிக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜக.,வின் எஸ்.ஜி. சூர்யா

சிதம்பரத்தில் ABVP கடலூர் சார்பாக நடைபெற்ற “மாணவர்களின் குரல் மாற்றத்திற்கான குரல்” தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், மது போதையில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்!

ABVP மாநில பொதுச் செயலாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, நாற்காலிகளை வீசி எறிந்து, பொறுப்பாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெறிச்செயலில் பன்னீர்செல்வம் மற்றும் பல அப்பாவி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், ABVP மத்திய செயற்குழு உறுப்பினர் செல்வி.வேதாஞ்சலி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்திருப்பது இவர்களின் கீழ்த்தரமான சிந்தனையை அப்பட்டமாக காட்டுகிறது. ஒரு பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளால் அசிங்கப்படுத்தும் இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகப்பெரிய கேலிக்கூத்து.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாமல், வன்முறையை கையில் எடுக்கும் இது போன்ற சமூக விரோதிகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக குரலை எந்த ரவுடித்தனத்தாலும் ஒடுக்கி விட முடியாது!

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

isreal iran war - 2026

மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு?

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்: ஈரான் தனது பிடிவாதத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் முழுமையாக மூடிவிட்டது. இது ட்ரம்ப் கொடுத்த 2 வார அவகாசத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது.

​ட்ரம்ப் & நெதன்யாகு அவசர ஆலோசனை: இந்தச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொலைபேசி வழியாகப் பேசியுள்ளனர்.

ட்ரம்ப்பின் ரியாக்ஷன்: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், “ஈரான் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று கூறியுள்ளார். 2 வார அவகாசம் முடிவதற்கு முன்பே ட்ரம்ப் தனது தாக்குதல் உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

​இஸ்ரேலின் அதிரடி: இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் அணுசக்தி மையங்களை நோக்கித் தங்கள் வான்வழித் தாக்குதலைத் தொடங்கத் தயாராகிவிட்டன.

லெபனான் பதற்றம்: லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகர் மீது 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இன்னும் கொடூரமான தாக்குதலை பெய்ரூட்டில் நடத்தி வருகிறது.

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கையும்… இஸ்ரேல், அமெரிக்காவின் அதிரடி பதிலும்…

ஹார்முஸ் நீரிணை: ஈரானின் IRGC கடற்படை நீர்சந்தியில் புதிய வழித்தடங்களை அறிவித்துள்ளது. “கடல் கண்ணி வெடிகள் இருப்பதால், எங்களின் அனுமதி இல்லாமல் வரும் கப்பல்கள் அழிக்கப்படும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.

​அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட “வெண்டிலேட்டரில்” இருக்கும் நிலையில், ட்ரம்ப், நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ வார்த்தைகள் உலகை அதிர வைத்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: தனது சமூக வலைதளத்தில் மற்றும் ஒரு குறுகிய வீடியோ உரையில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்: நான் பாகிஸ்தான் தலைவர்கள் மீது கொண்ட மரியாதையால் 2 வாரம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி விளையாடுகிறது.

இது ஒரு மிகப் பெரிய தவறு. இப்போதே நீரிணையைத் திறந்து, உங்களின் அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவில்லை என்றால், அந்த 2 வாரம் வரை நான் காத்திருக்கப் போவதில்லை. அடுத்த 24 மணிநேரத்தில் ‘Operation Fury’ மீண்டும் தொடங்கலாம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: ஈரான் உடனான இந்த தற்காலிகத் இடைவெளி லெபனானுக்குப் பொருந்தாது. ஹிஸ்புல்லா ஒழிக்கப்படும் வரை அங்கு குண்டுவீச்சு தொடரும்.

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

write thoughts - 2026
#image_title

பாஜகவுக்கு எது நடந்தாலும் நன்மையே.

அதிமுகவுடனான கூட்டணி வென்றால் தேர்தல் வியூகம் வெற்றி என்று ஆகும்.

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

திமுக வென்றால் நாடாளுமன்றத்தில் தேவைப்படும்போது பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொள்ளும்.

*

அதிமுகவுக்கு எது நடந்தாலும் நன்மையே.

கூட்டணி வென்றால் ஆட்சி கிடைக்கும்.

தோற்றால் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க உதவியதாக ஆகும்.

*

கிறிஸ்தவர்களுக்கு எது நடந்தாலும் நன்மையே

திமுக வென்றால் 100% பலம்.

அதிமுக வென்றால் 70-80% பலம்.

பாஜக வென்றால் 50% பலம்,

*

இந்துக்களுக்கு திமுக வென்றால் 100% கஷ்டம்.

அதிமுக வென்றால் 70-80% கஷ்டம்.

பாஜக வென்றால் 50% கஷ்டம்.

*

இந்துத்துவர்களுக்கு மட்டும் யார் வென்றாலும் கஷ்டம்.

இந்துத்துவம் பக்கம் இந்துக்களும் பாஜகவும் வந்தாலொழிய காலப்போக்கில், மூவருக்கும் எது நடந்தாலும் கஷ்டமே.

*

இந்துத்துவம் என்றால் என்ன என்பது பற்றி அடிக்கடி விளக்கம் தந்தபடியே இருக்கவேண்டியிருக்கிறது.

இந்துத்தன்மையே இந்துத்துவம்.

சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அது வெளிப்படவேண்டும்.

வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் அது வெளிப்படவேண்டும்.

ஓர் இந்து தன்னை மற்ற அனைவருக்கும் சமமாக நடத்தும்படித்தான் கேட்கிறார். கூடுதல் சலுகை எதையும் கேட்கவில்லை.

அனைவரையும் நடுநிலையாக நடந்துகொள்ளும்படித்தான் கேட்கிறார். தனக்கு சாதகமாக நடக்கும்படிக் கேட்கவில்லை.

எம்மதமும் சம்மதம் என்கிறார். அதையே மற்ற மதத்தினரிடமும் எதிர்பார்க்கிறார்.

தன்னிடம் குறைகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். தன்னிடம் மட்டுமே குறைகள் இருக்கின்றனவா என்பதே அவருடைய கேள்வி.

பெரும்பான்மை என்பதை பேராதிக்கமாக அவர் ஒருநாளும் முன்வைத்ததில்லை. பெரும் தண்டனையாக ஆக்கப்படுவதைத்தான் கேள்வி கேட்கிறார்.

பாகிஸ்தானுக்குப் போ என்று ஈ.வெ.ரா. சொன்னதுபோல் சொல்லவில்லை. பாகிஸ்தானைப் பார்; அங்கு சிறுபான்மைகள் நடத்தப்படும்விதத்தைவிட 100 மடங்கு மேலாக இங்கு உரிமைகளும், சலுகைகளும், அதிகாரங்களும், அதிகார துஷ்பிரயோக உரிமைகளுக்கும் கிடைத்திருப்பதைப் பார் என்று சொல்கிறார்.

தேசத்தே நேசி… தர்மத்தைப் பின்பற்று… கலாசாரத்தைக் கைவிடாதே என்கிறார்.

இந்துத்துவர் ஆயுதத்தை எப்போது எடுக்கிறார்; எப்போது கீழே போடுகிறார்; எதனால் எடுக்கிறார் என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கச் சொல்கிறார்.

ஜிஹாதிகளின் வன்முறை, சிலுவைப் போர் கொடூரங்கள், கம்யூனிஸ பயங்கரவாதம், புலிகளின் வன்முறை ஆகியவற்றின் முன்னால் இந்துத்துவத் தாக்குதல்கள் எண்ணிக்கையிலும் எண்ணத்திலும் மிகவும் குறைவானது. அதிகம் அவதூறு செய்யப்படுவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் உள்ளதிலேயே அதிகம் அப்பாவி அதுவே என்பது.

ஒரு துளி ரத்தம் என்றாலும் கண்டிக்கத் தகுந்ததுதான். ஒரு துளி கூட ரத்தம் சிந்த வைக்காதவராலேயே கண்டிக்கப்படவேண்டும். காட்டுக்குள் சுள்ளி பொறுக்கும் பூர்வகுடியை மர ஆலை வியாபாரி கண்டிக்கக்கூடாது.

மத மாற்றம் என்பதை பூர்வ கலாசாரப் படுகொலை என்று இந்தியா உலக அரங்கில் அறிவிக்கவேண்டும்.

மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை ஒரு பாவச் செயல்; மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை தண்டனைக்குரிய குற்றம் என்று பள்ளி நூல்களில் பொன் எழுத்துகளில் அச்சிடவேண்டும்.

தர்ம சாஸ்திரங்களில் தலித் என்ற பெயரே/அடையாளமே கிடையாது. தலித் ஒடுக்குமுறை என்பது தலித் என்ற பெயர் முன்வைக்கப்பட்ட நவீன காலத்தில்தான் ஆரம்பித்தது.

நாலாம் வர்ணத்தினரில் பட்டியல் ஜாதியினரும் அடக்கம். அவர்களுக்கென்று தனி விதிமுறைகள், ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லை. நாலாம் வர்ணத்தினருக்கு இருந்த அதே சலுகைகள், கட்டுப்பாடுகள் பட்டியல் ஜாதிகள் என்று பிரிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

இந்து தர்ம சமூகத் தொகுப்பில் பட்டியல் ஜாதி, பட்டியல் பழங்குடி, மலைவாசி, வனவாசி, நாடோடிகள், நரிக்குறவர்கள் என்ற நவீன காலப் பிரிவினைகள் எதுவுமே கிடையாது. அன்று இருந்த வாழ்வியல் நால் வர்ண தர்ம அடையாளம்; நாலாயிரம் ஜாதி குல அடையாளம்.

எல்லா ஜாதிகளில் இருக்கும் அர்ச்சகர்களும் புனிதச் சடங்குகள் செய்பவர்களும் வழிகாட்டிகளும் அந்தந்த ஜாதிகளின் பிராமண வர்ணத்தினரே.

பிராமண வர்ணத்திலும் கடைநிலை ஜாதிகள் உண்டு. நாலாம் வர்ண ஜாதிகளிலும் அவர்களுக்கான க்ஷத்ரியர், வைஸ்யர் உண்டு.

நவீன கால உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் மரபான காலத்துக்கு பொருத்திப் பார்ப்பது தவறு. அப்படியே பார்த்தால் உலகில் பிற எந்த சமூகமும் மதமும் நாடும் எவ்வளவு மோசமாக முன்பு இருந்ததோ அதைவிட பாரதம் அந்த விஷயங்கள் அனைத்திலும் மேலாகவே இருந்திருக்கிறது.

ஒரே நாட்டின் மரபான காலத்தையும் நவீன காலத்தையும் ஒப்பிடுவதைவிட ஒவ்வொரு நாட்டின் மரபான காலங்களை ஒப்பிடவேண்டும். ஒவ்வொரு நாட்டின் நவீன காலங்களை ஒப்பிடவேண்டும்.

உலகில் பிற மதங்களில் அடிமை முறை இருந்தபோது இந்து தர்மத்தில் வர்ணாஸ்ரமம் இருந்தது.

வர்ணாஸ்ரமம் ஒன்றாக இருந்தவர்களை நான்காகப் பிரிக்கவில்லை. நான்காக இருந்தவர்களை ஒன்றாகத் தொகுத்தது.

மனிதர்களை ஆயிரம் ஜாதிகளாகப் பிரிக்கவில்லை. ஆயிரம் ஜாதிகளாக இருந்த மனிதர்களை ஒரு நூலில் கோர்த்தது.

Dharmic Nation First. Offence is THE Best Defence.

ஐபிஎல் – 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஒன்பதாவது ஆட்டம் ராஜஸ்தான் vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 4

          முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (36 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), வைபவ் சூர்ய வன்ஷி (18 பந்துகளில் 31 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), துருவ் ஜுரல் (42 பந்துகளில் 75 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடியதால் ராஜஸ்தான் அணி  210 ரன் எடுத்தது. பின்னர் இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் (44 பந்துகளில் 73 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்), ஜாஸ் பட்லர் (14 பந்துகளில் 26 ரன்), ரஷீத் கான் (16 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரபாடா (16 பந்துகளில் 23 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியுற்றது. ராஜஸ்தான் அணியின் ரவி பிஷ்னோய் 4 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

பத்தாவது ஆட்டம் – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – ஏபரல் 5 – முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (7 ரன்), அபிஷேக் ஷர்மா (பூஜ்யம்), இஷான் கிஷன் (1 ரன்), லியம் லிவிங்க்ஸ்டோன் (14 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அதன் பின்னர் ஆட வந்த ஹென்றி கிளாசன் (41 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (33 பந்துகளில் 56 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். அதனால் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்க இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. லக்னோ அணியின் முகம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான் மூவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எய்டன் மர்க்ரம் (27 பந்துகளில் 45 ரன்), ரிஷப் பந்த் (ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 68 ரன், 9 ஃபோர்) எடுத்தனர். ஆட்டநாயகனாக முகம்மது ஷமி அறிவிக்கப்பட்டார்.

பதினோராவது ஆட்டம் – பெங்களூரு vs சென்னை – பெங்களூரு – ஏபரல் 5 இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 250 ரன் எடுத்தது. இந்த ஐபிஎல்லின் அதிக பட்ச ஸ்கோர் இது. ஐபிஎல்லில் அதிக பட்ச ஸ்கோர் 2024ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 287/3 ஆகும். பெங்களூரு அணியின் டிம் டேவிட் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன், 3 ஃபோர், 8 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவரைத்தவிர பில் சால்ட் (30 பந்துகளில் 46 ரன்), விராட் கோலி (18 பந்துகளில் 28 ரன்), தேவதத் படிக்கல் (29 பந்துகளில் 50 ரன்), ரஜத் படிதர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர் கூட சரியாகப் பந்துவீசவில்லை.

          251 என்றா மிகப் பெரிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை அணியின் சஞ்சு சாம்சன் (9 ரன்), கெய்க்வாட் (7 ரன்), ஆயுஷ் மாத்ரே (1 ரன்)  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் (25 பந்துகளில் 50 ரன்), பிரஷாந்த் வீர் (29 பந்துகளில் 43 ரன்), ஜமி ஓவர்டன் (16 பந்துகளில் 37 ரன்) சிறப்பாக ஆடினர். இருப்பினும் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு அணியின் புவனேஷ் குமார் 3 விக்கட், டஃப்ஃபி, அபிநந்தன் சிங், க்ருணால் பாண்ட்யா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். டிம் டேவிட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.

பன்னிரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs பஞ்சாப் – கொல்கொத்தா – ஏபரல் 6

          கொல்கொத்தாவில் ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழையால் தடைபட்டது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 3.4 ஓவர்கள் விளையாடி 2 விக்கட் இழப்பிற்கு 25 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இறுதியில் ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

1001763494 - 2026

சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்
ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினர் .

மதுரை மாவட்டத்தின், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்களை பல இடங்களில் உள்ள அரசின் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர்.


சில இடங்களில் மூடைகளாக பிடித்து கட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்தும்
உள்ளனர் ஒரு சில பகுதிகளில் நெல்லை கொள்முதல் செய்யாமலும் சில பகுதிகளில் மூடைகளாக கட்டி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்லாமல் இருப்பதால்,
மூடைகள் தேங்கியும் நெல் மணிகள் மலை போல் குவிந்தும் இருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக, சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் ராயபுரம் ,ரிஷபம், திருமால் நத்தம், திருவாலவாயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல் மணிகள் ராயபுரம் தேவாலயம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் , குடோன்களுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோன்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுவதால் தற்போது விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.


குடோன்களுக்கு, கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக,
ராயபுரம் கிராமத்தின் மந்தை பகுதி சர்ச் பகுதி தெருக்களில் நெல்கள் குவித்து வைக்கப்பட்டும் நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டும் இருப்பது விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது .


இது குறித்து, விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வரிசைப்படி தான் வாகனங்களை அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறுவதால் பல நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.


இதனால், திடீர் மழை பெய்யும் பட்சத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்படும் இதன் காரணமாக ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோன்று, சோழவந்தான்
அருகே முள்ளி பள்ளம், இரும்பாடி ,கருப்பட்டி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் நெல் மூட்டைகள் குவியல்களாகவும் நெல் மூட்டைகளாகவும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .


தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திமுகவின் உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பை திமுக அரசு அடாவடியாக செயல்படுத்தவில்லை. இதற்காக அரசியல் சாசனத்திற்கு எதிராக, அரசு அதிகாரிகளை செயல்பட வைத்தது திமுக செய்த தேச துரோகச் செயலாகும்.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளனர்.

ஆனால் அங்கு கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் யார்? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அங்கு கந்தூரி நடத்த ஆட்டை தோளில் போட்டு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் திமுக கூட்டணியினர். அதற்கு உடந்தையாக இருந்தவர் திமுகவின் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது.

அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் மலைமீது பிரியாணி கொண்டு போய் சாப்பிட்டு விட்டு எச்சிலை அங்கே போட்டதை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரிய சொத்து என்று பேட்டி அளித்தார்.

எம்பி கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரது கட்சியினரை கலவரம் செய்ய தூண்டி விட்டது உண்மை தானே.

முருக பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதற்கு 144 தடை உத்தரவு போட்டு தடுத்தது திமுக அரசு.

எல்லா தடைகளையும் சட்டரீதியாக உடைத்து முருக பக்தர்கள் மன உணர்வை வெளிப்படுத்தியது இந்து முன்னணி.அதன்பிறகு கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றபோது சட்டத்திற்கு புறம்பாக நடந்தது திமுக அரசு.

கோவிலுக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக வாதாட முருக பக்தர்களின் காணிக்கை நிதியை செலவு செய்தது எத்தகைய கொடுமை. இதனை வெட்கமே இல்லாமல் செய்தது திமுக அரசு.

இத்தனை சட்டவிரோதச் செயலுக்கும் காரணம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்.

திமுகவின் நயவஞ்சகச் செயலை தமிழர்கள் புரிந்து கொண்டு ஜனநாயக வழியில் தேர்தலில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .