Home Blog Page 13

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

த.வெ.க. இன்னுமொரு திமுக தானா? திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறை படுத்த தயங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

அதாவது நூறாண்டு வழக்கமா? நீதிமன்ற தீர்ப்பா? என்று யோசிப்பதாக கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தின் மாண்பை, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தான் கடமை. நீதிமன்றம் தீர விசாரணை நடத்தும்போது போது தனது கருத்தை தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஆனால் தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது மக்களை குழப்புவது போல நீதிமன்றத்தில் பதில் மனு தருவது த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிகாட்டுவதாக உள்ளது. மேலும் தவெக மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது.

த.வெ.க அரசானது திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுதான் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே திமுகவின் இந்து விரோத மக்கள் விரோத செயல்பாட்டை முதல்வர் திரு. ஜோசப் விஜய் தொடர நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களை மக்கள் தூக்கி எறிந்து திரு‌ ஜோசப் விஜய் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் இந்து விரோதமாக செயல்பட்டு மக்களின் வெறுப்பிற்கு ஆளானதுதான். அதை உணராமல் தவெக இன்னும் ஒரு திமுக வாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையை பொய்த்து போக வைக்கிறது.

நேற்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில், தமிழக அரசு பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வருகின்ற கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு கடந்த ஆட்சியைப் போல மதிக்காது, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் திரு‌ஜோசப் விஜய் அரசின் கருத்து தெரிவித்து இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு தனது நிலையை சட்டத்தின் மாட்சிமையை மதிக்க தனது கருத்தை, செயலை திருத்திக் கொள்ள வேண்டும் . நீதிமன்ற தீர்ப்பின்படி கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றிய நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

dr keshav baliram hedgewar rss - 2026

— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. எந்த இந்திய சட்டத்தின்படி ஆர் எஸ் எஸ் செயல்படுகிறது, அதன் சட்டபூர்வமான நிலை என்ன, பதிவு செய்யப்பட்டுள்ளதா, நிர்வாகிகள் யார், நிதி எப்படி வருகிறது, எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது, வரி கட்டப்படுகிறதா, அதன் செயல்பாடுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா, இதையெல்லாம் ஆர்எஸ்எஸ் விளக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

எதிர்பார்த்தபடியே, கார்கேவின் கடிதத்திற்கு பாகவத் ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறி அதற்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். ‘இது அரசியல். இதுபோன்ற கூத்துக்களை ஏற்கனவே முயற்சித்துள்ளார்கள். எங்களுக்கு இது பழகிப்போன விஷயம்’ , என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு கார்கே ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ஆர்எஸ்எஸ் இந்த மண்ணின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்று தாம் கேட்பதாக, வலியுறுத்தி பேசியுள்ளார். நேர்காணல் செய்தவர் ‘ஆர்எஸ்எஸ் எந்த சட்டத்தை மீறி இருக்கிறது’ என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. எந்த சட்டத்தின் படி ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது என்று தனக்குத் தெரியவில்லை என்று உளறி இருக்கிறார்.

‘ எல்லா குடிமக்களுக்கும் அமைப்பு அல்லது சங்கம் அல்லது கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 19 (1)(இ) தெளிவாக கூறுகிறது. இந்த சட்டமே ஆர் எஸ் எஸ் நாடு முழுக்கவும் தனது செயல்பாடுகளை சுதந்திரமாக நடத்த உரிமை வழங்கி உள்ளது. இது போன்ற அமைப்புகள் பதிவு செய்வது கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தவில்லை. அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் அமைப்புகள் அல்லது வர்த்தக செயல்பாடுகள் கொண்ட அமைப்புகள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கூறுகிறது. இதுவும் ஆர்எஸ்எஸ் க்கு பொருந்தாது.

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. காந்தி கொலையுடன் இணைத்து தவறாக குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டபோது ஜவஹர்லால் நேருவின் அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பு சாசனத்தை தருமாறு கேட்டது . அந்த இயக்கம் அதை காட்டியது. இது நடந்தது 1949 இல். அதை ஏற்றுக் கொண்ட நேருவின் அரசு தடையை நீக்கியது. இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமன்றி நிதி திரட்டும் முறைமையையும் அரசு ஏற்றுக் கொண்டது என்பதையே காட்டுகிறது.

அரசுக்கு சமர்ப்பித்த சாசனத்தின்படி ஆர் எஸ் எஸ் அதன் பிறகு இந்த நாட்டில் தொடர்ந்து செயல்படுகிறது. அதன் உறுப்பினர்கள் நேருவின் அரசில் 1963 இல் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 1965 இல் (இந்திய- பாகிஸ்தான்) யுத்தத்தின் போது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆர் எஸ் எஸ் தலைவர் எம் எஸ் கோல்வல்கரின் ஆலோசனையை கேட்டு பெற்றார். 1973 இல் கோல்வல்கர் காலமான போது பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய இரங்கல் உரையில், குரு கோல்வல்கர் என்ற புகழ் மிக்க ஆளுமையை நாம் இழந்து உள்ளோம். அவர் இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத போதிலும் தனது ஆளுமையாலும் இலட்சிய பற்றாலும் இந்த தேசத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார், என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தலைவர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று எப்போதும் கேட்டதில்லை.

வருமான வரி சட்டம் 1961 தின்படி ‘தனி மனிதர்களின் அமைப்பு’ என்று ஆர் எஸ் எஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கம்பெனியாகவோ பொது ட்ரஸ்ட் ஆகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாகவோ அல்ல. தனி நபர்களின் அமைப்பு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சாசனத்தில் நிதி திரட்டும் முறை விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘வியாச பௌர்ணமி’ அல்லது அதை ஒட்டி வரும் புனித நாள் ஒன்றில் ஒவ்வொரு கிளையிலும் ‘ தட்சணை தினம்’ கொண்டாடப்படும். அப்போது தன்னார்வத்துடன் அளிக்கப்படும் நிதி பெறப்படும். அவ்வாறு பெறப்படும் நிதி ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்யப்படும். குரு தட்சணை எனப்படும் தன்னார்வ முறையில் நிதி திரட்டுவது ‘பரஸ்பரம்’ என்ற வருமான வரி சட்டப் பிரிவில் அடங்கும்.

சில தனிநபர்கள் சேர்ந்து குழுவாக வர்த்தக நோக்கம் இல்லாமல் பொது காரியத்திற்காக நிதி திரட்டுவது பரஸ்பரம் என்ற வகையில் வரும். அவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு வரிவிதிப்பு கிடையாது. இந்த அடிப்படையில்தான் நேரடி வரிக்கான மத்திய ஆணையம் சுயம்சேவகர்களிடமிருந்து குரு தட்சிணையாக பெறப்படும் நிதி பரஸ்பரம் என்ற வகையில் திரட்டப்படுவதால் அதற்கு வரி விதிக்க முடியாது, என்று கூறியுள்ளது.

1994 ல் பாட்னா உயர்நீதி மன்றம் இது தொடர்பான வழக்கில் மேற்படி வருமான வரித்துறையின் ஆணையை சுட்டிக்காட்டி, உறுப்பினர்களிடமிருந்து குரு தட்சணை என்ற வகையில் பெறப்படும் நிதிக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்று கேட்டால், ஆம் வரிவிதிப்பு கூடாது , என்று ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளது.

pm modi with rss chief mohan bhagawat - 2026

மத அமைப்புகள் பலவும் வேறு பல அமைப்புகளும் பதிவு செய்யப்படாமல் அதேவேளையில் சுதந்திரமாக இந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆர் எஸ் எஸ் ஐ பொறுத்த வரையில், ‘தனி நபர்களின் அமைப்பு’ என்ற முக்கியமான அம்சத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் — அதன் அசையா சொத்துக்கள், பள்ளிகள், சகோதர அமைப்புகள் — எல்லாம் முறையாக சொசைட்டி, டிரஸ்ட் என்று பதிவு செய்யப்பட்டு விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றன.

1925 ல் ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது. இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால் அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார்.

நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

hindu munnani meeting in nellai - 2026

இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று, திருநெல்வேலி பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், பொதுக்குழு தீர்மானங்களை படித்தார். தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர்கள் ஜெ.எஸ். கிஷோர்குமார், செந்தில்குமார் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் நா. முருகானந்தம், டி. மனோகர், மாநில அமைப்பாளர் எஸ். இராஜேஷ், மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சதீஷ், கிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாசார்ய சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஆகியோர் ஆசியுரை ஆற்றினார்கள்.

பக்திப் பாடகர் வீரமணியின் நான்காவது தலைமுறை இளம் பாடகர் அபிஷேக் தேசபக்திப் பாடல் பாடினார். நிறைவாக மாநில துணைத் தலைவர் டாக்டர் அரசு ராஜா நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்தப் பொதுக்குழுவில் இந்து முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாயத் தலைவர்கள், ஆன்மீக அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பொதுக்குழுவில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…

தீர்மானம் 1: போதை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

திருச்சியில் கால் டாக்சி ஓட்டுனர், மதுபோதையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, சுயநினைவற்ற நிலையில் வீட்டின் அருகே வீசிச் சென்ற சம்பவம்… தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இரண்டு பேர், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம்… என, கடந்த திமுக ஆட்சியில் நிலவியது போல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. இப்படி அராஜகம் செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையை இந்து முன்னணியின் மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கடந்த திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு என்ற இளைஞர் போதைக் கும்பலால் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போதை ஆசாமிகளுக்குத் தெரிகிறது. போதைப்பொருட்களை எவரிடம் விற்க வேண்டும் என்பது போதை வியாபாரிகளுக்குத் தெரிகிறது. ஆனால் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒன்றுமே தெரியாது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

கஞ்சா, போதைப் பொருட்களால் தமிழகம் சீரழிந்து போவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: திருச்செந்தூரில் திண்டாடும் பக்தர்கள்-தமிழக அரசே நடவடிக்கை எடு !

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூரில் சமீப காலமாக பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் தற்போது சாதாரண நாட்களில் கூட பல மணி நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். திருச்செந்தூர் முருகனை தரிசிக்கவேண்டும் என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளும், பக்தர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்து வழக்கறிஞர் முன்னணி குழுவினர் ஆய்வு செய்ததில், தங்கும் விடுதியில் பக்தர்களுக்கு பல்வேறு இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படுவது தெரியவந்தது. விடுதிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டாலும் அதிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கடற்கரை, பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவறைகள், குளியலறைகள் வேண்டுமென்றே பூட்டி வைக்கப்பட்டும், பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது. கோவில் பணத்தில் ரூ 25 லட்சம் கையாடல் செய்ததாக சமீபத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் இந்தப் பிரச்சனை மூடிமறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கைவிடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சபரிமலை, திருப்பதி போன்ற திருக்கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தாலும் பக்தர்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகாமல் தரிசனம் செய்கின்றனர். ஆனால் திருச்செந்தூரில் பக்தர்கள் வேண்டுமென்றே பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பவர்கள் குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.

எனவே திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

தீர்மானம் 3: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இஸ்லாமியர்களின் தர்காவை காரணம் காட்டி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. முந்தைய திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அப்போதைய திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. தற்போது புதிய அரசு பதவி ஏற்று உள்ளது. தமிழகம் முழுவதும் இந்துக்கள் வாக்களித்து த.வெ.க அரசை ஆட்சி பீடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த வருடம் 2026 ல் வரக்கூடிய கார்த்திகை மாதம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படும் அரசாக த.வெ.க அரசு செயல்பட்டு இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற, புதிய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: தமிழகத்தில் உள்ள கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் த.வெ.க அரசுக்கு வேண்டுகோள்!

பாரத நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. 2000 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில், நிறைய கோவில்கள் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி, ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது. நம்முடைய முன்னோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் கோயிலுக்கு வழங்கிய பல லட்சக்கணக்கான நிலங்கள் அரசியல்வாதிகளின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான வாடகை, குத்தகை பாக்கி கூட வசூலிக்கப்படாமல் உள்ளது.

அதேபோல கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகளை கடந்த ஆட்சியில் உருக்குகிறோம் என்ற பெயரில் அதிலிருந்து வைரம், வைடூரியம், முத்துக்கள், நவரத்தினங்கள் களவாடப்பட்டுள்ளன. பழமையான கோவில்களில் இருந்த விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இதைப்பற்றி கோயில் நிர்வாகம் அதாவது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புகார் கூட கொடுக்கப்படவில்லை. பல கோவில்களில் கடவுளை தரிசனம் செய்யும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. காசு ஒன்றே குறிக்கோளாகச் செயல்படுகிறார்கள்.

தமிழக அரசு இந்த நிலையை மாற்றி கோயிலுக்கு தனி வாரியம் அமைத்து கோயில்கள் சுதந்திரமாக செயல்படவும் கோவில் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் எந்தவித சிரமம் இல்லாமலும், கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்யவும், பழமை மாறாமல் கோயிலை புதுப்பிக்கச் செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி மாநில பொதுக்குழு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: நெல்லையப்பர் திருக்கோவில் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும் !

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் கோவில் மதில் சுவரை ஒட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் மதில் சுவரை துளையிட்டும், சேதப்படுத்தியும், கோவில் மதில் சுவரை பராமரிக்க முடியாத வகையிலும் இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் மதில்சுவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மேலமாடவீதியில் இருந்த ஒரு சில கடைகள் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாட வீதிகளில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் தடைபட்டு நிற்கிறது.

எனவே கோவில் மதில் சுவரை காப்பாற்றும் வகையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் மதில்சுவரை ஒட்டி அமைந்துள்ள அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தி அந்த வியாபாரிகளுக்கு வேறு இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தையும், திருக்கோவில் நிர்வாகத்தையும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: மதசார்பற்ற நாட்டிலே மதத்துக்கு ஒரு சட்டமா? பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கோவா, உத்தரகாண்ட், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 44-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மதம், ஜாதி, மொழி, இன வேறுபாடுகளைத் தாண்டி சமமான சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நீதியை வலுப்படுத்தும் எனக் கருதுகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுப்பு, பராமரிப்பு போன்ற தனிநபர் சட்டங்களில் அனைவருக்கும் ஒரே சட்டம் அமல்படுத்தப்படுவது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் உதவும்.

தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை விரைவாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7: சாதியை காரணம் காட்டி பள்ளிகளில் சாமி கயிறுகளை தடை செய்வதற்கு கண்டனம்

சாதி பிரிவினைகளை தடுக்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வரக்கூடாது எனவும், எந்தவிதமான மத அடையாளங்களையும் அணிந்து வரக் கூடாது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். பள்ளிகளில் சாதி ரீதியாக பிரிவினை கூடாது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக மத அடையாளங்களை அணிந்து வரக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது. இதனை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

பள்ளிக் கூடங்களில் இந்து மாணவர்கள் தங்கள் நெற்றியில் திலகம் வைத்து வருவார்கள். குலதெய்வங்களின் கயிறுகள், உள்ளூர் கோயிலில் காப்பு கட்டும் கயிறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிந்து வருவார்கள். இது ஆன்மிகத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்த விஷயமாகும். கயிறு கட்டி வர வேண்டாம் என சொல்லும் அரசு, முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவது மற்றும் கிறிஸ்தவ மாணவ மாணவியர் சிலுவை அணிந்து வரக்கூடாது என சிறுபான்மை மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பல இந்து குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு அவர்களை தினமும் பைபிள் வாசகங்களை பாட வைக்கின்றனர். இது மதத்தை கட்டாயமாக திணிப்பது தானே. எனவே, கிறிஸ்தவ பள்ளியை பொது கல்வி பட்டியலில் இருந்து நீக்கி கிறிஸ்தவ பள்ளியாக அறிவிக்க அமைச்சர் தயாரா?

இது எல்லோருக்குமான ஆட்சி என்பதை உறுதி செய்யும் விதமாக மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக் கூடாது என்ற அறிவிப்பை கல்வித் துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 8 தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும்

நதிகளில் தாமிரபரணி தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதிகை மலையில் உற்பத்தியாகி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பயணித்து தென்தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,000 ஏக்கர் நிலங்கள் இந்த ஆற்றின் பாசனத்தை நம்பியே உள்ளன. இரு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கும் ஒரே நீராதாரம் தாமிரபரணி. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீருக்கு இதனையே சார்ந்துள்ளனர். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நதி, தமிழரின் பண்பாட்டுடனும் வழிபாட்டுடனும் பின்னிப்பிணைந்த புண்ணிய நதியாகும்.

மக்களின் வாழ்வாதாரமாகவும், தெய்வீகமாகவும் போற்றப்படும் இந்த ஜீவநதியின் தூய்மை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இது குடிநீரின் தரத்தையும், விவசாயத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் நேரடியாக பாதிக்கிறது. எனவே, தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளை முற்றிலும் தடுத்து, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமித்து வறண்ட பகுதிகளுக்கு வழங்கும் இந்த மக்கள் நலத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.

தென் தமிழக மக்களின் உயிர்நாடியான தாமிரபரணியை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

sabarimalai and pamba - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று திங்கட்கிழமை ஆனி மாத பிறப்பு பூஜை வழிபாடுகள் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கேரளாவில் பம்பை வனப்பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை கனமழையாகப் பெய்தது. அதனால், பம்பை நதி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை ஜூன் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது . கோவில் திருநடையை மேல்சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். நேற்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை.

இன்று ஜூன் 15-ஆம் தேதி ஆனி மாதம் பிறந்ததையொட்டி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கியது. ஜூன் 19 வரை காலை 4 மணிக்கு நடை திறந்து மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும். (இது 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும்). நெய் அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் நடைபெறும். காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 15முதல் 19தேதி வரை தினமும் நடைபெறும்).

இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி, 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் ஜூன் 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் சபரிமலை வரும் பக்தர்களுக்காக பத்தனம்திட்டா உட்பட முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பரிசுகள் இயக்கப்படுகின்றன

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

pakistanis and delhi terror links - 2026

அடுக்களையில் இருந்து அதிரடி படை

— ராகுல் பண்டிதா —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

அந்த காணொளியை முதலில் பார்த்தபோது சிறப்பாக எதுவும் தெரியவில்லை. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் டெலிகிராம் தளங்களில் வழக்கமாக வெளியாகும் காணொளி என்று புலனாய்வுத் துறையினரும் பயங்கரவாதத்தை பற்றி எழுதும் செய்தியாளர்களும் நினைத்தனர். பாகிஸ்தானில் தலை முதல் கால் வரை புர்கா அணிந்த பெண்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. அதன் பின்னணியில் இஸ்லாமிய சமய பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது அந்த காணொளியில்.

சில நிமிடங்களுக்கு பிறகு கேமரா ஒரு பெண்ணிடம் நின்றுள்ளது. அவள் கைவிரலில் இரண்டு மோதிரங்கள் போட்டிருந்ததை காட்டியது. அதுவரை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த புலனாய்வுத் துறையினர் கவனமாக பார்க்க தொடங்கினார். அவர்களிடையே ஒரு அமைதியின்மை , சலனம் ஏற்பட்டது.

இந்திய புலனாய்வுத் துறையினர் அந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லக்சர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஹாரிஸ் தார் – இன் மனைவிதான் அவள். பயங்கரவாத அமைப்புகளான லக்சர் இ தொய்பா , ஜெய் இ முகமத் ஆகியவற்றின் மூத்த தலைவர்களின் மனைவிமார்கள் இப்போது அந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்கள் என்பதை காஷ்மீர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அந்த அதிகாரியின் கூற்றுப்படி பெண்களின் தற்கொலை படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டு கிடங்குகள் , ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களை தாக்குவது, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளை செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்கு தருவது, ஆதரவாளர்களை திரட்டி அவர்களை பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்த பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஜெய்ஸ் , லக்சர் அமைப்பினர் பெண்கள் படைக்கு ஆள் சேர்க்க பாகிஸ்தான் முழுக்கவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சிகளை பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினரும் முன்னின்று நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத வலை பின்னலை உடைத்தெறிந்து வருகிறது இந்திய அரசு . அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பெண்கள் படை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் ஒப்பிட்டளவில் பாதுகாப்பு படையினரின் கண்ணுக்கு தெரியாதபடி மறைவாக உள்ளனர் . குறிப்பாக ஆசிரியர், மருத்துவர் போன்ற சமூகப் பணியாளர் போர்வையில் அவர்கள் பாதுகாப்பு படையினரின் கண்களில் மண்ணை தூவி விட்டு சுலபமாக நகர்கின்றனர்.

பெண்கள் என்ற சுலபமான போர்வையைப் பற்றி பயங்கரவாத அமைப்புகள் நீண்ட காலமாகவே நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எல் டி டி இ யின் பெண் புலிகள் படை தொடங்கிய பூக்கோ ஹராம் (நைஜீரியாவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு) வரை உள்ள பெண்கள் படை இதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் காஷ்மீரில் பழமைவாத சமூக அமைப்பு இதற்கு எதிராக இருந்தது. காஷ்மீரில் ஊடுருவல் செய்யும் பயங்கரவாதிகள் தொடங்கி கல்லெறிபவர்கள் வரை அனைவரும் ஆண்களே. அவர்கள் பயங்கரவாத அமைப்புகளின் வலைப்பின்னலில் வெளிப்படையான முகமாக இருப்பார்கள். பின்னர் ஒரு நாள் அவர்கள் திடீரென காணாமல் போவார்கள். பிறகு சமூக வலைதளங்களில் நீண்ட துப்பாக்கிகளை ஏந்திய படங்கள் வெளியாகும். அவர்கள் தீவிரவாதியாக திரும்பி வந்ததை அறிவிப்பார்கள்.

இதற்கு நேர் எதிராக பெண்கள் வன்முறைக்கு அருகில் ஆனால் அதில் ஈடுபடாமல் அவற்றின் ஆதரவாளராக, வன்முறையாளர்களுக்கு செய்தி தொடர்பாளராக இருப்பார்கள். காஷ்மீரில் நடக்கும் கிசுகிசுப்பில் அந்த வீட்டுக்கு அடிக்கடி வரும் காதலன், காதலனால் மனமுடைந்த பெண்கள், அவர்களது குமுறல்கள் பல நேரங்களில் பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இருந்து பயங்கரவாதிகளை கைது செய்யவும் சுட்டுக் கொள்ளவும் உதவி உள்ளன.

லக்சர் பயங்கரவாதி அபு தூஜானா , ஜெய்ஸ் உயர்மட்ட தலைவன் சாகித் சௌகத் போன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது அவர்களுடன் தொடர்பிலிருந்து பெண்கள் கொடுத்த துப்பால். 2019 ல் இஷ்ரத் முனீர் ஷா என்ற இளம் பெண்ணை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவளது துரோகத்தால்தான் ஜீனத்துல் இஸ்லாம் என்ற பயங்கரவாத தலைவன் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டான் என்பது அவர்களது குற்றச்சாட்டு.

புல்வாமா தாக்குதலை விசாரணை செய்த என் ஐ ஏ சம்பவ இடத்தில் உமர் பாரூக் இன் அலைபேசியை கண்டெடுத்தனர். அவன்தான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜெய்ஸ் பயங்கரவாத அமைப்பை ஆரம்பித்த மசூத் ஹசாரின் சகோதரி மகன். அலைபேசியில் இருந்த படங்களில் 22 வயதுள்ள ஒரு உள்ளூர் பெண்ணான இன்சா ஜான் என்பவளுடன் நெருக்கமாக இருக்கும் படமும் இருந்தது. அதை கொண்டு அவளை பிடித்தனர். அந்த பெண்ணின் சகோதரி மகளுடனும் அவன் நெருக்கமாக இருந்த படங்களை காட்டிய போது அவள் மனம் மாறி அவனைப் பற்றி பேச தொடங்கினாள்.

அவளுடன் உறவின் இருந்த போது பாரூக் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பாகிஸ்தானில் உள்ள தனது தாய் , மனைவி அபீரா பிவியை அறிமுகம் செய்தானாம் . அவளுக்கு இன்சா ஜானிடம் பொறாமை வருவதற்கு பதிலாக , பாரூக்கின் தேவைகள் எல்லாவற்றையும் அவன் விரும்பியபடி நிறைவேற்றித் தருவது உன் கடமை , என்று அபீரா கூறினாள் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலையும் சொன்னாள் . பின்னாளில் உமர் பாரூக் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டான்.

உமர் பாரூக்கின் மனைவி அபீரா பிவி , மசூத் ஹசாரின் சகோதரியண சதியா அசார் (இவளது கணவன் யூசுப் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டான் ) ஆகியோர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பெண்களுக்கு மூளை சலவை செய்யும் பணியில் முன்னணியில் உள்ளனர். ஜெய்ஸ் அமைப்பு 2025 அக்டோபரில் ஜமாத் உல் மோமினத் என்ற பெயரில் பெண்கள் பிரிவை அறிவித்தது. டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்ற லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் அபீரா பிவியுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவள் மேலும் பல பெண்களை அபீராவுக்கு அறிமுகம் செய்து பெண்கள் தற்கொலை படையை தயார் செய்துள்ளாள் . அவள் கைது செய்யப்பட்ட பின்பு இது தெரிய வந்துள்ளது. எத்தனை பெண்கள் என்பது தெரியவில்லை.

பாகிஸ்தானில் சுமார் 5000 பெண்களை தங்கள் படையில் ஜெய்ஸ் சேர்த்துள்ளதாக தெரிகிறது. தற்கொலை படையினராகவும் வெளிப்படையான பணியில் சந்தேகம் வராதபடி அவர்கள் செயல்படுகிறார்கள். கராச்சி, பாவால்பூர், முசாபராபாத், கோட்லி, மான்சீரா பகுதிகளில் பெண்கள் அமைப்பின் மையங்கள் உள்ளன என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஸியை போலவே லக்சரும் அதே பாணியில் பெண்கள் படையை ஆரம்பித்துள்ளது. தாயீபத் என்ற பெயரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் துவங்கப்பட்டுள்ளது. இபாத் சயீத் என்ற பெண்மணி அதன் உஸ்தாஹ – வாக ( தலைவர்) செயல்படுகிறார். முஸ்லிம் பெண்கள் லீக், முஸ்லிம் கேர்ள்ஸ் லீக் என்ற இரண்டும் லக்சரின் முன்னணி அமைப்புகள். மரியம் ரஹ்மான் என்றவள் பெண் கல்வி என்ற போர்வையில் இளம்பெண்களை குறி வைத்து செயல்படுகிறார் என்று உளவுத்துறையினர் கூறுகின்றனர். ஆன்லைனில் நடக்கும் இந்த வகுப்புகளில் பயங்கரவாத செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது , நேரடியாக பயங்கரவாத செயல்களில் பங்கேற்பது பற்றி பெண்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மோசமாக காட்டப்படுகின்றன.

முன்பு போல் ஆட்களை நேரடியாக தேர்வு செய்வது, கூட்டங்கள் கருத்தரங்குகளை நடத்துவது, ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை முகாம்களில் சொல்லித் தருவதெல்லாம் மாறிவிட்டது. தினசரி வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட டிஜிட்டல் கட்டமைப்பு , மறைமுக குறியீட்டு செய்தி பரிவர்த்தனை மூலம் இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய பயங்கரவாத கருத்தியலுக்கு ஆதரவாக மூளை செலவை செய்யப்படுகிறார்கள். மூடிய அல்லது அனுமதி வரையறுக்கப்பட்ட இறுகிய குழுவில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த குழுக்களில் ஊடுருவதும் கண்காணிப்பதும் கடினமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

புலனாய்வு துறையின் அறிக்கையில் மீண்டும் மீண்டும் இரண்டு பெயர்கள் தென்படுகின்றன. ஒருவன் அப்துல்லா எனப்படும் அபு ஹூரைரா. மற்றவன் கர்கோஸ் (முயல்) என்று சொல்லப்படும் உமர் ஹாரிஸ். உமர் ஹாரிஸ் லக்சர் பயங்கரவாதி என்பதால் மட்டுமல்ல சாதாரண சமுதாயத்தில் கலந்து மறைந்து விடுபவன். இவன் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா பகுதியை சேர்ந்தவன் . இவன் லக்சரில் சேர்ந்தது கருத்தியல் காரணத்தால் அல்ல. பல கலவரங்கள் , அடிதடி வழக்குகளில் பாகிஸ்தான் காவல்துறையினரால் தேடப்படுபவன். பாதுகாப்புக்காக லக்சரில் சேர்ந்தான் என்று சொல்லப்படுகிறது. தள்ள கடத்தல்காரர்களையும் , தனி வாழ்வில் தோல்வியுற்றவர்களையும் , தேடப்படும் கிரிமினல் குற்றவாளிகளையும், லக்சர் அமைப்பு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றங்களிலிருந்து மீட்பு தருவதாகவும் கூறி பயங்கரவாத கருத்தியலுக்குள் இழுத்துக் கொள்கிறது.

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் . காஷ்மீரின் இரண்டு பக்கங்களுக்கும் அடிக்கடி போய் வருவான். ஸ்ரீநகருக்கும் வருவான். ஆதரவாளர்களின் உதவியால் மறைவிடத்தில் தங்குவான். பாதுகாப்பு படையினரின் கண்களில் படுவதற்குள் வேறொரு இடத்துக்கும் முயல் போல் எகிறி விடுவான். எனவே அவனுக்கு கர்கோஸ் (முயல் )என்ற பட்டப் பெயர்.

அவன் இந்திய பகுதியில் நுழைந்த பிறகு இங்குள்ள லக்சர் ஆதரவாளரின் பெண்ணை மணந்து கொண்டான். இதன் மூலம் குடும்ப கட்டமைப்புக்குள் நுழைந்தான். அவனது செயல்கள் எல்லாம் மோசடியானவை மறைமுகமானவை. அவனது திருமணம் காஷ்மீரில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) நடந்தது. ‘சஜத்’ என்ற பெயரில் அவன் திருமணம் செய்து கொண்டான். பயங்கரவாதிகள் துப்பாக்கி , பயங்கரவாத கருத்தியல் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் உள்ளதாக திட்டமிட்ட ரீதியில் நாடகமாடுகின்றனர் என்பதற்கு உதாரணம் இது.

இவன் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் இந்தோனேஷியாவுக்கு போனான். 2004 – 25 இல் சவுதி அரேபியாவில் வெளிப்பட்டான். இதெல்லாம் உளவு அமைப்பினரின் தகவல்கள் மற்றும் விசாரணையில் பின்னால் தெரியவந்தது. பயங்கரவாதிகள் எப்படி சாதாரண சிவில் சமூகத்தின் ஊடாக புகுந்து போலி அடையாளங்கள், ஆதரவாளர்கள் மூலம் எல்லைகளை சுலபமாக கடந்து சென்று விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அபு ஹூரைரா பஞ்சாபில் பிடிபட்டான். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் , ராஜஸ்தான் அதற்கும் அப்பால் பல்வேறு மாநிலங்களில் அவனுக்கு ஆதரவாளர்களும் மறைவிடங்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இருப்பதால்தான் அவன் தன் அடையாளத்தை மறைத்து பயணிக்கவும், பயங்கரவாத வலை பின்னலை உருவாக்கவும் முடிந்துள்ளது. பிடிபட்ட அவனது கூட்டாளி ஒருவனால் அவன் 2010 ல் இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவன் காஷ்மீரில் செயல்பட்டதும், காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தவுடன் தப்பி சென்றதும், பல மாநிலங்களுக்கு பயணித்ததும், அங்கு அவனுக்கு தேவையான எல்லா விதமான வசதிகளையும் செய்தது முஸ்லிம் பெண்களின் உதவியால் நடந்துள்ளது.

காஷ்மீர் காடுகளில் ஆண் பயங்கரவாதிகளுக்கு பதிலாக துப்பாக்கியும் வெடிகுண்டும் ஏந்திய பெண் பயங்கரவாதிகள் தோன்றுவதும் பயங்கரவாதத்தின் முகம் இப்போது ஆண் முகத்திலிருந்து பெண் முகமாக மாறுவது கவலை அளிக்கும் விஷயம். ஆனால் அதைவிட கவலை அளிக்கும் விஷயம் பயங்கரவாத அமைப்புகளில் அமைதியான , சாதாரண வாழ்க்கையில் உள்ள பெண்கள் உள்ளிழுக்கப்படுவதால் மோதல் கடினமாகவும் சிக்கலாகவும் மாறி வருகிறது.

காஷ்மீர் காடுகளில், பூந்தோட்டங்களில், மலைகளில் மறைந்து இருந்து ஊடுருவல் மூலம் பயங்கரவாதம் வெளிப்பட்டது. இப்போது கிடைத்துள்ள கள நிலவரம் குறித்த தகவல்கள் மற்றும் காணொளிகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இனி சாதாரண சமூக வாழ்க்கையில் இருந்து பயங்கரவாத முகம் வெளிப்படும். டாக்டர் ஷாஹீன் சயத் , அபு ஹூரைரா போன்றவர்கள் இதை தான் சொல்கிறார்கள் . சாதாரண சமூக வாழ்க்கை அசாதாரணமாக மாறி வருகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இதுவரை பயங்கரவாதத்தின் முதுகெலுங்காக இருந்த (ஆண்) பயங்கரவாதிகள் என்ற நிலை மாறி, இவர்களை அடையாளம் காண்பதும் கண்காணிப்பதும் தடுப்பதும் ஓரளவுக்கு சுலபமானது , டாக்டர் சாஹின் சயத் போன்ற மருத்துவர்கள் ஆசிரியர்கள் பொறியாளர்கள் என்று சமூக அந்தஸ்துடன் கூடிய பெண்கள் வருவது மிகவும் ஆபத்தான விஷயம் என்று உளவுத்துறையினர் கூறுகிறார்கள்.


நன்றி : ஓப்பன் மேகசீன்


FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2026பகுதி 1

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கால்பந்துத் திருவிழா தொடங்கியுள்ளது.  இந்த 2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து கோப்பையின் 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியாகும்.

இந்தப் போட்டி 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி மூன்று நாடுகளால் நடத்தப்படும் முதல் பீஃபா உலகக் கோப்பையாகவும், முன்பு 32ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை இந்த முறை 48ஆக உயர்ந்து, தற்போது 48 அணிகளை உள்ளடக்கிய முதல் போட்டியாகவும் இருக்கும்.

2002 ஆண்டிற்குப் பிறகு பல நாடுகள் இணைந்து நடத்தும் முதல் ஆண்கள் உலகக் கோப்பை இதுவாகும். இதற்கு முன்னர் 1970, 1986 போட்டிகளை நடத்தியதன் மூலம், ஆண்கள் உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் அல்லது இணைந்து நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறும்.

இதற்கு முன்னர் 1994இல் அமெரிக்கா ஆண்கள் உலகக் கோப்பையை நடத்தியது. இதற்கு மாறாக, கனடா ஆண்கள் போட்டியை நடத்துவது அல்லது இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பை நவம்பர், திசம்பர் மாதங்களில் தனித்துவமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு அதன் பாரம்பரிய வட அரைக்கோள கோடைக்கால அட்டவணைக்குத் திரும்புகிறது.

போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால், கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அனைத்தும் தானாகவே தகுதி பெற்றன. கேப் வர்டி, குராசோ, ஜோர்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் தங்களது முதல் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கின்றன. 2022இல் தனது மூன்றாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற அணி அர்ஜென்டினா அணியாகும்.

இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து சிறப்புத் தன்மைகள்

இந்தஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பந்தின் பெயர் ‘ட்ரையோண்டா’ (Trionda) ஆகும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு (AI) சென்சார் – பந்தின் நடுவே 500 HZ மோஷன் சென்சார் சிப் (IMU) பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு நொடிக்கு 500 முறை துல்லியமான தகவல்களை (வேகம், சுழற்சி, உதைக்கப்பட்ட நேரம்) வழங்கி, ‘ஆஃப்சைட்’ மற்றும் கோல் தொடர்பான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

சார்ஜ் செய்யும் வசதி: இந்த பந்து ஒரு மின்னணு சாதனம் போல செயல்படுவதால், ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக இதற்கு சார்ஜ் செய்யப்பட வேண்டும்.

புதிய வடிவமைப்பு: உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக, 4 பேனல்கள் (Panels) மட்டுமே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பு அமைப்பு: பந்தில் உள்ள ஆழமான பள்ளங்கள், அது காற்றில் நிலையாகப் பறக்க உதவுகின்றன. மேலும், வீரர்கள் பந்தை அதிகளவில் சுழற்றவும் (Spin) இது வழிவகுக்கிறது.

வடிவமைப்பு கலாச்சாரம்: கனடா (மேப்பிள் இலை), மெக்சிகோ (கழுகு), அமெரிக்கா (நட்சத்திரம்) ஆகிய மூன்று நாடுகளைக் குறிக்கும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பந்தின் எடையை மாற்றாமல், அதன் கட்டுப்பாட்டை வீரர்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளது.

குழுநிலைப் போட்டிகள் 2026 ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நடைபெறுகின்றன. போட்டியிடும் அணிகள், நான்கு அணிகள் கொண்ட பன்னிரண்டு குழுக்களாக (குழுக்கள் A முதல் L வரை) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள், ஒன்றோடு ஒன்று தொடர் சுழல்முறையில் மோதுகின்றன. குழு நிலவரங்களின்படி, ஒரு வெற்றிக்கு மூன்று புள்ளிகளும், சமநிலைக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும்; தோல்விக்கு புள்ளிகள் ஏதும் இல்லை. குழுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளும், அனைத்துக் குழுக்களிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்த சிறந்த எட்டு அணிகளும் வெளியேற்றச் சுற்றிற்கு முன்னேறும்.

வெளியேற்றச்சுற்றில் 32 அணிகள் பங்கேற்கும். இதிலிருந்து 16 அணிகள் அடுத்த சுற்றிற்குத் தேர்வாகும். அதன் பின்னர் காலிறுதி; பின்னர் அரையிறுதி; அதன் பின்னர் மூன்றாம் இடத்தைத் தேர்வு செய்யும் ஆட்டம்; பின்னர் இறுதிப்போட்டி அமெரிக்காவில், நியூஜெர்சியில் உள்ள ரூதர்ஃபோர்ட், மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19, 2026 அமெரிக்க நேரப்படி மாலை 0300 மணிக்கு நடைபெறும்.

ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

pm narendra modi - 2026
#image_title

4398 நாட்கள் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை  ஜூன் 10 இன்று, பாரதப் பிரதமர் நரேந்திர  மோடி முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார். 

2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியான நாட்கள், அவர் பிரதமராக பொறுப்பில் இருக்கிறார். 

முன்னதாக, இந்திரா 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்தார். அப்படி, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று, நரேந்திர மோடி முறியடித்தார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, 1952 மே 13ம் தேதி முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். பிறகு தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். இந்நிலையில் இன்று நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்கிறார்.

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை தில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. தேஜ கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிற முக்கிய மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

பிரதமர் மோடி தனது 12 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை 4,399 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடர்கிறது…

இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை
32 சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 19 முறை உரையாற்றியுள்ளார்
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர்
தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு தேர்தலில் கூட தோல்வியடையாதவர்
மாநில முதலமைச்சராக முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்த ஒரே பிரதமர்

4,399 நாட்கள் : ஒரு நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாட்கள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து; அதன் மூலம் மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்தது!
500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
UPI – உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பு
GST – ஒரே நாடு, ஒரே வரி 
நக்ஸல் அச்சுறுத்தல் இல்லாத இந்தியா
வந்தே பாரத் – இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்
திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத இந்தியா
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம்

தலைமைத்துவம் – ஒரு வரலாற்றுச் சாதனைப் பயணம்!
மாற்றத்தை ஏற்படுத்திய 4,399 நாட்கள் 

இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்
சீர்திருத்தங்கள் முதல் சிறப்பான பலன்கள் வரை
58 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ (Jan Dhan) கணக்குகள்
44 கோடிக்கும் அதிகமான ‘ஆயுஷ்மான்’ (Ayushman) அட்டைகள்
74-லிருந்து 164-ஆக உயர்ந்த விமான நிலையங்கள்
102 கோடிக்கும் அதிகமான இணைய இணைப்புகள்
1,000 கி.மீ-லிருந்து 7,332 கி.மீ-க்கும் அதிகமான விரைவுச் சாலைகள் (Expressways)
1.4 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்கள்
21,801 கி.மீ-லிருந்து 69,873 கி.மீ-க்கும் அதிகமான ரயில்வே மின்மயமாக்கல்
6 கோடி -> 33 கோடிக்கும் அதிகமான மொபைல் உற்பத்தி அலகுகள்
₹86,647-லிருந்து ₹2,43,180-ஆக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
₹700 கோடி-லிருந்து ₹38,424 கோடியாக உயர்ந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி
நிதிச் சேர்க்கை முதல் டிஜிட்டல் அதிகாரமளித்தல் வரை; உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை.
இந்தியாவின் எழுச்சியை வேகப்படுத்திய 4,399 நாட்கள்

அமெரிக்கா வாழ்த்து!

நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்…
”இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மூன்று முறை மக்களாட்சி  ஆணையைப் பெற்று, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் மூலம் 4,399 நாட்கள் தலைமை தாங்கியுள்ளார். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது முதல் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக மாற்றியது வரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Dhinasari Home page

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 564/8 (கே.எல். ராகுல் 100, சாய் சுதர்ஷன் 81, ஷுப்மன் கில் 126, ரிஷப் பந்த் 81, வாஷிங்க்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 51, முகம்மது சலீம் 6/140) ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸ் 152 (ரஹ்மத் ஷா 60, மானவ் சுத்தர் 6/33, பிரசித் கிருஷ்னா 3/37( இரண்டாவது இன்னிங்க்ஸ் 112 (செதிகுல்லா அடல் 42, ரஹ்மானுல்லா குர்பாஸ் 24, வாஷிங்க்டன் சுந்தர் 4/36, குல்தீப் யாதவ் 3/30). இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          விராட் கோலி, ரோஹித் ஷர்மா, டெஸ்ட் ஆட்டங்களின் வல்லுநர்கள் புஜாரா, ரஹானே, சுழல் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜதேஜா, பும்ரா இல்லாத இந்திய அணி. தொடக்க வீரர்களாக யசஷ்வீ ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல்; மூன்றாவது இடத்தில் சாய் சுதர்ஷன்; ஷுப்மன் கில் அணித்தலைவராக நான்காவது இடத்தில்;  வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இன்று விளையாடினர். புதிய சுழப் பந்துவீச்சாளராக மானவ் சுத்தர் இந்த டெஸ்டில் களமிறங்கினார். அதிகாரபூர்வமற்ற இந்த டெஸ்டில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.

          ஜெய்ஸ்வால் 24 ரன்னிற்கு ஆட்டமிழக்க, கே. எல் ராகுல் (100 ரன்) மற்றும் சாய் சுதர்ஷன் (81 ரன்) சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பின்னர் வந்த கில் (126 ரன்) மாற்றும் ரிஷப் பந்த் (81 ரன்)இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கட் இழப்பிற்கு 368 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி 564 ரன்னிற்கு ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக் அறிவிக்க, ஆஃப்கானிஸ்தான் அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 113 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் அந்த அணி முதல் இன்னிங்க்சை 152 ரன்னிற்கு ஆட்டமிழந்தது. அதனால் ஃபாலோஆன் முறையில் இரண்டாம் இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடியது.

          இரண்டாம் இன்னிங்க்ஸில் வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த ஆஃப்கானிஸ்தான் அணி 112 ரன்னிற்கு ஆட்டமிழந்து, ஒரு இன்னிங்க்ஸ் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

          அடுத்து இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் ஆட்டங்களை ஆடவிருக்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் 13.06.2026 அன்று தர்மசாலாவிலும் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் 17.06.2026 அன்று லக்னோவிலும் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் 20.06.2026 அன்று சென்னையிலும் நடக்கவுள்ளது.

          ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:  ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சனாதன தர்மத்தை ஒழிப்பதையே  தங்கள் குறிக்கோளாகவும் செயல்பாடாகவும் கொண்ட சிலர் உள்ளனர்.

நிரந்தரப் பிரகாச வடிவமான சூரிய ஒளியை அழிப்பேன் என்பது எத்தனை     முட்டாள்தனமோ, இதுவும் அத்தகையதே. சனாதனம் என்றால் சாஸ்வதம், நித்தியம், காலத்தால் அழியாதது. தர்மம் என்றால் உலகளாவிய பிரபஞ்ச ஒழுங்கு.  இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. இருப்பினும் தம்முடைய மதங்களைப் பரப்புவதற்காக,  ஆழமாக வேரூன்றிய இந்து தர்மத்தை வேரறுக்க விரோத சக்திகள் இடைவிடாமல்  பணி செய்து வருகின்றன. தம் லட்சியத்தை நிறைவேற்ற சில நூறாண்டு காலமாக முயன்று வருகின்றன. ஆசை காட்டுதல், அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம், வன்முறை,   இயலாவிட்டால் கொன்றழிப்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் தம் குறிக்கோளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும் இழப்புகளைச் சந்தித்த போதிலும் சனாதன தர்மம் உறுதியுடனும் உயிர்ப்புடனும் நிலைத்திருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத அவர்கள்  திரிபுகளையும் தீய நோக்கிலான விளக்கங்களையும் பரப்பி நம் புத்தியைச் சிதைக்க முயன்றனர். நம்மிடையே சுய வெறுப்பை விதைக்கத் தந்திரமான கதைகளைக் கட்டிவிட்டு,  நம்முடைய புனித நூல்கள்,  மத நிறுவனங்கள், ஆன்மீக ஆசிரியர்கள், கோவில்கள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்துத் தவறான கருத்துக்களைப் பரப்பி அறிவாற்றலை அழிக்கத் திட்டம் தீட்டினர். 

தங்களைப் பகுத்தறிவாளர்கள், விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு  அதே சமயம் தீவிர மதச் சார்புடையவர்களாக வாழும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மேதாவிகள்  திட்டமிட்ட சதித்திட்டங்களை வகுத்தனர். சாதிப் பாகுபாடு  என்பதை நம்மிடம் உள்ள ஒரு அடிப்படைப் பிழையாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். அது உண்மைதானே?  என்று நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தித்  தொடர்ந்து நம்மைத் தவறான பாதையில் இட்டுச் செல்கிறார்கள். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே  சாதி அமைப்பு ஒரு குறைபாடு என்றும்,  நம் பெருமையை உண்மையாக வெளிப்படுத்த இந்தக் குறையைச் சரிசெய்ய வேண்டும் என்றும் நம்புவதைக் காண்கிறோம்.

சாதி என்ற குறிப்பிட்ட அடையாளம் இல்லாவிட்டாலும்  உலகம் முழுவதும் உள்ள சமூகங்களில் ஏதோ ஒரு வகையான பிரிவினை  இருக்கவே செய்கிறது. வரலாறு குறித்த கடந்த காலப் புரிதலும், நிகழ்காலப் புரிதலும் இல்லாத இளைஞர்கள் பெரும்பாலும் இந்த எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு மகத்தான மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உணரும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.  

பாரத தேசம் பல யுகங்களுக்கு முன்பே தர்க்கம், தத்துவம் போன்ற விசாரணைகள் மூலம் அற்புதமான சாஸ்திரங்களை வெளியிட்டு அறிவியல் உலகில் முன்னோடியாக விளங்கியது.  யோகா,  ஆயுர்வேதம்,  இல்லற தர்மம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  வேதாந்த சிந்தனை, நியாய, வைசேஷிக தரிசனம்,  மந்திர ரகசியம்,  கோவில் கட்டிடக்கலை, ஜோதிடம்,  கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று, அனைத்தையும் ஒருங்கிணைந்த சூத்திரத்தில் இணைத்து, ஹிந்து மதமாக உருவாக்கிய அற்புதப் பரம்பரை நமது. இவற்றை உணர  முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நம்மைத் தாக்கிய வெளிநாட்டு சக்திகள்  இந்தத் தொடர்பின்மைக்கு ஆரம்பக் காரணமாக இருந்தன.  அவர்களைப் பின்பற்றிய போலி தேசியவாதிகள் அதற்கு அடுத்தபடியாக அமைந்தனர்.

வாழ்க்கை முறைகள்,  ரசனைகள்,  ஆர்வங்கள்,  திறன்கள், கால நேரங்கள் ஆகியவை எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது. இந்த இயற்கையான உண்மையை முனிவர்கள் புரிந்து கொண்டிருந்தனர்.  ஒருவருடைய வாழ்க்கை முறை மற்றதை விட உயர்ந்தது என்று ஒருவர் கருதுவதால் மட்டுமே அனைவரும் அதே மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற யதார்த்தமற்ற கருத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. சமூகத்தில் பல்வேறு வாழ்க்கை முறைகள் இணைந்து இருக்க முடியும் என்பதையும்,  அவ்வாறு இருப்பது அவசியம் என்பதையும்,  அதன் மூலம் தனிநபர்கள் ஒருவருக்கொருவர் பயனடைய முடியும் என்பதையும் அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்த புரிதலின் அடிப்படையிலேயே பல்வேறு ‘வர்ணங்களும்’ சாதிகளும் உருவாயின. பலவிதமான மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மலர் மாலையைப் போலவே,  பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு அமைப்பாக சனாதன தர்மம்  திகழ்கிறது. இவை உயர்வு, தாழ்வு என்ற படிநிலையைக் குறிக்காமல்  வெவ்வேறு வகையிலான பணிகளையும் பொறுப்புகளையுமே குறிக்கின்றன. ஆனால்  வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளத் தவறி,  தங்கள் சொந்த மதத்தின் மீது கொண்ட மோகத்தாலும், பிறருடைய நற்பண்புகளையும் குறைகளாகக் காணும் வக்கிரமான மனப்பான்மையாலும் உந்தப்பட்டு சமத்துவமின்மை  குறித்த போலியான பிம்பங்களை உருவாக்கினர். தனிநபர்களின் தவறுகளை ஒட்டுமொத்த அமைப்பின் மீது சுமத்தினார்கள். தம் சொந்த மத தேசங்களில் உள்மோதல்களாலும், பரஸ்பர பகையாலும் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அழியும் உண்மையை மூடி மறைத்தார்கள்.

இந்தச் சூழலில்,  சுவாமி விவேகானந்தர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பியபோது கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வது அவசியம்: “உலகெங்கிலும் பல மதங்களையும்  கலாச்சாரங்களையும்,  நாடுகளையும் கண்டேன்.  ஆனால் இந்தியாவைப் போலச் சிறந்த நாடு வேறெதுவும் இல்லை. நம் மதத்தில் சில குறைகள் இருக்கலாம்.  ஆனால் பிற கலாச்சாரங்களுடன் ஒப்பிடுகையில் அவை மிகச் சிறியவையே.  மேலும் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன. இந்து மதம் மட்டுமே குறைபாடுகள் மிகக் குறைவாகவும்  அதே சமயம் உண்மையாகவே திருத்தக்கூடிய வகையிலும் உள்ள ஒரு மதம்”

உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவருக்கும் உள்ளே இருக்கும் ‘ஆத்ம சைதன்யம்’ ஒன்றே. உலகியல் நடத்தைகளில் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் பரமார்த்தமான இறுதி இலக்கில் ஒரே தத்துவமே நிலவுகிறது என்ற ஆழமான தத்துவ உண்மையை வெளியிட்ட அற்புதமான தெய்வீகப் பார்வை சநாதன தர்மத்திற்கு மட்டுமே உரித்தானது என்பதை மறக்கக்கூடாது.  

கடந்த காலங்களில் வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து,  இன்று தற்போதைய உடலில் வசித்து  எதிர்காலப் பிறவிகளில் என்ன வடிவத்தை எடுப்போம் என்பது தெரியாமல் இருப்பது என்ற உண்மையை விளக்கும் மறுபிறவிக் கொள்கை, சனாதன தர்மத்திற்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒன்று. இந்த வாழ்க்கையில் வழங்கப்பட்ட உடலையும் பரம்பரையையும் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஒரு மதத்தில்  பகைமைக்கு இடம் எங்கே?

சானாதன தர்மத்தை வெறுப்பவர்கள், எந்த மதத்தவரை திருப்திப்படுத்த தீய கருத்துக்களைப் பரப்ப முயல்கிறார்கள் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே உள்ளது. இந்துக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை உணராத ஒரு சமூகமாகவே பார்க்கப்படுகிறார்கள்.  சுயநலத்திற்காகத் தங்கள் சொந்த அழிவைக் கூடப் பொருட்படுத்தாத மக்களாக அவர்கள் கருதப்படுகிறார்கள். அதிகாரத்தை இழந்தவர்களும்,   புதிதாகப் பெற்றவர்களும் சட்டமன்றத்தில், ‘சநாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுப்பதும், வேறு சிலர் அதை ஆதரிப்பதும் இந்தப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

நம் புராதன கோவில்களின் வருவாயில் வசதியாக இயங்கி,  அவற்றைச் சூறையாடித் தவறாகப் பயன்படுத்தும் அரசுகள்  அந்தக் கோவில்களின் அடித்தளமாக விளங்கும் சனாதன தர்மத்தை அழிப்பதாக வெளிப்படையாகச் சபதம் செய்ய முடிகிறது என்றால்,  அது உறக்கத்தில் இருக்கும் இந்துக்களின் ஆழ்ந்த அலட்சியத்தையே காட்டுகிறது.

இலவசங்கள், தள்ளுபடிகள், மானியங்கள் போன்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு மாநிலத்தின் கூட்டு நலன்கள் சிதைக்கப்படுகின்றன என்ற உண்மையை உணராமல் இருப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே. ‘நாட்டின் வளங்கள் அழிந்தாலும் சரி, நாடு துண்டாடப்பட்டாலும் சரி,  நமது மதங்கள் மேலோங்கி நின்றால் போதும்’ என்று நம்புபவர்களின் ஆதரவுடன்  நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் சனாதன தர்மத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் அரசுகள் சில மாநிலங்களில் ஆட்சியில் நீடிக்கின்றன.

இத்தகைய கசப்பான உண்மைகளை இந்து சமூகம் எப்போது முழுமையாக உணரப்  போகிறது?

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் ஜூன் 2026)

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

annamalai k - 2026

–பத்மன்

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை என்று அதிமுகவில் இருந்து பாதிப்பின்றி விலகி, பாஜகவில் சேர்ந்து, பின்னர் அதன் தமிழகத் தலைவர் ஆகவே ஆகிவிட்ட நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். பாஜகவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேநேரத்தில் வேறு சில விஷயங்களையும் ஆராய வேண்டியுள்ளது. அண்ணாமலை பாஜகவில் சேராமல் நேரடியாக தனிக்கட்சி தொடங்கியிருந்தால் மக்களிடையே இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்க முடியாது. இப்போது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நடிகர் விஜய் தொடங்கிய தவெக பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில் அண்ணாமலையின் புதிய கட்சி அரசியல் களத்தில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே!

விஜய்யுடன் ஒப்பிட்டால் அவருக்குக் கிடைத்திருக்கும் கண்மூடித்தனமான மக்கள் செல்வாக்கு அதாவது பாபுலாரிட்டி, அண்ணாமலைக்கு கிடைக்காது. அவ்வாறின்றி கொள்கை ரீதியில் வழிநடத்தப்படும் கட்சி எனில் என்ன கொள்கை?

மேலும் தமிழகத்தில் திமுகவும் பின்னர் அதிமுகவும் வளர்ச்சி கண்டதற்கு கொள்கையைத் தாண்டிய கவர்ச்சி அரசியலே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கொள்கை அல்லது மக்கள் நலன் பேசும் எல்லோரையும் மக்கள் முழுமூச்சாக ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. உதாரணத்துக்கு சீமான், விஜயகாந்த்.

ஆகையால் தமிழகத்தைப் பொருத்தவரை கொள்கை வாதம் பேசும் பாஜகவுக்கு அண்ணாமலை போன்ற மக்கள் செல்வாக்கைப் பெற்று அதனை மேலும் வளர்க்கும் தலைவர்களும், அண்ணாமலை போன்ற அரசியலில் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு பாஜக போன்ற கருத்தியல் சார்ந்த, கடினங்களைத் தாண்டி வளரும் கட்சியும் பரஸ்பர அவசியம்.

நடந்தது நடந்துவிட்டது, இனி? என் வழி தனி வழி என்றுபோன அண்ணாமலை அவரது வழி என்ன என்பதைத் தெளிவாக வெட்டவெளிச்சமாக்கட்டும்.

தேசிய, தமிழக வளர்ச்சிக்கு அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம்/ கட்சி சிறப்பான பங்காற்ற வாழ்த்துகள். அதேநேரத்தில் தமிழுணர்வும், ஹிந்து சமுதாயச் சிந்தனையும் கொண்ட தேசியவாதியான என்போன்றோருக்கு, தமிழகத்தில் இனி பாரதிய ஜனதாவின் நிலைப்பாடும் செயல்பாடும் எவ்விதம் அமையும் என்பதுதான் அக்கறை செலுத்த வேண்டிய விஷயம்.

ரஜனிகாந்த் தனிக்கட்சி தொடங்காததால், தங்கள் கட்சியில் இணைந்த அண்ணாமலையை இந்த அளவுக்கு வளர்த்து, உயர்த்திய பாஜக அதன் பயன்களைச் சரியாக அறுவடை செய்யவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தோற்கடிக்க பாஜகவுக்கு கூட்டணி தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் அதிமுகவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலைக்கும் சீட் கொடுக்காமல், குறைந்த சீட்டுகளுக்கு பாஜக ஒப்புக்கொண்டது மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைத்தது.

தமிழக பாஜக, அண்ணாமலை தலைமையில் அதிமுக அல்லாத கூட்டணி அமைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். ஒருவேளை அது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிளந்து திமுகவுக்கே சாதமாகப் போயிருந்தாலும்கூட பாஜகவுக்கு இந்த அளவுக்குப் பாதகம் விளைந்திருக்காது. அவ்வாறின்றி, இதேபோல் மட்டமான தேர்தல் முடிவு கிடைத்திருந்தால், அப்போது அண்ணாமலையை மாற்றியிருக்கலாம். தவறில்லை.

அதிமுக கூட்டணிக்காக பாஜக நீர்த்துப் போகாது இருந்திருந்தால், தீய திராவிடத்துக்கு எதிரான ஹிந்து தேசியவாதத்துக்கான வலு எவ்வகையிலேனும் கூடியிருக்கும்.

போனது போகட்டும்! இனி… சித்தாந்தவாதிகள் என்போரில் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரையும், பதவி சுகத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டு கட்சி வளர்ச்சியையும், கட்சித் தொண்டர்கள் நலனையும் கண்டுகொள்ளாத சிலரையும், கட்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்காக அன்றி சுய வளர்ச்சி, சுய லாபத்துக்காக மட்டுமே கட்சியில் சேர்ந்து, அவ்வகையில் செயல்பட்டுவரும் கணிசமானோரையும், பலவிதமான லாபிகள் நடத்துவோரையும் தயவுதாட்சண்யமின்றி களையெடுக்க பாஜக முன்வர வேண்டும்.

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

தேசிய அளவில் வெறும் 2 சீட்டுகள் என்று கடும் பின்னடைவைக் கண்டு, பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி இந்த அளவுக்கு அசைக்க முடியாத ஆலமரமாக வளரந்துள்ளது பாரதீய ஜனதா. அதன் தமிழக விழுதைச் சற்று சரிசெய்ய வேண்டியுள்ளது. அந்தச் சற்று சாமான்யமானது அல்ல, ஆனால் சாத்தியமானதே!