சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.
அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.
முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை
மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.
உள்ளூர் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக., அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இன்னர் லைன் பர்மிட் என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.
அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.
முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை
மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.
உள்ளூர் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக., அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இன்னர் லைன் பர்மிட் என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் – டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை; அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும். எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பாஜக., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
“பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியில் ரூபாய் 10 குறைத்துள்ளது இந்திய அரசு. ஈரான் போரினால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும், அரசியல் செய்யலாம், மத்திய அரசை விமர்சிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு, விலை ஏற்றம் என்கிற சுமையை மக்களிடம் திணிக்காமல் மத்திய அரசே தாங்கிக் கொண்டுள்ளது.
இதுவே வல்லரசு! நரேந்திர மோடியின் நல்லரசு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கியது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் பத்து நாளும் சுவாமி அம்பாள் மயில், அன்னம் ,ஐவராதம் வாகனங்கள் வீதி உலா.
மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் வரும் ஏப்ரல் 4ல் திருக்கல்யாணமும், 5 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, பல்லக்கில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது.
காலை 6.30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது.
திருவிழா கோவில் நம்பியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து , தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தர்ப்பைப்புல், மா இலை, சந்தனம், குங்குமம், மலர் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.55 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் , தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 28 ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி கைபாரம் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு நக்கீர வீலை நிகழ்ச்சியும், நடைபெறும் .
விழாவின் முக்கிய, நிகழ்ச்சிகளாக ஏப்ரல் இரண்டாம் தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது, ஏப்ரல் மூன்றாம் தேதி பட்டாபிஷேகம், ஏப்ரல் நான்காம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது.
— சியாம்லால் யாதவ் — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
கடந்த வாரம் லக்னோவில் நடந்த அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார் என்று கூறினார்.
நேரு சுமார் 17 ஆண்டு காலம் பிரதமராக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய முடிவுகளை தீர்மானித்தார். அவர் காலத்தில் உ பி யில் நான்கு முதல்வர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி வகித்தனர். அவர்கள் அத்தனை பேரும் முற்பட்ட ஜாதியினர். 1989 வரை உ பி யில் காங்கிரஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
நேரு பிரதமராக 1947 லிருந்து 1964 வரை இருந்தபோது காங்கிரஸ் உபியில் நான்கு முதல்வர்களை நியமித்தது. அவர்கள் : கோவிந்த வல்லப் பந்த் (பிராமணர் 1954 -60), சம்பூர்ணானந்த் (காயஸ்தர்- 1954-60), சந்திர பானு குப்தா (வைசியர் – 1960-63,1967, 1969), சுசித்ரா கிருபளானி (சிந்தியை மணந்து கொண்ட காயஸ்தர் 1963-67) .
நேரு காலத்தில் உ பி யின் முதல்வராக முயற்சித்தவர்கள் புருஷோத்தமதாஸ் தாண்டன் , ஸ்ரீ பிரகாஷா , விஜயலட்சுமி பண்டிட், கமலாபதி திரிபாதி (இவர் 1971 முதல்வரானார்) . இவர்கள் எல்லோரும் கூட முற்பட்ட ஜாதியினர்.
காங்கிரஸ் தலைமை உபியில் அடிக்கடி முதல்வரை மாற்றியது. ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் சமூக நீதியை அல்லது அனைத்து சமூகத்தினருக்குமான பிரதிநிதித்துவத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியே வந்தனர். கட்சியில் குழு மோதல் நேருவுக்கு கவலையளித்த போதிலும் அவரும் கூட அரசின் உயர் பதவியில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடம் தர வேண்டுமென நினைத்தது இல்லை.
கான்ஷிராம் நேரு காலத்தைய அரசியலை கடுமையாக சாடியுள்ளார் . நாட்டில் உள்ள பகுஜன்களை உயர்த்தும், அதிகாரத்திற்கு இட்டு செல்லும் அவரது அரசியல் பயணத்தில் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேருவின் அரசியலை விமர்சித்து அவர் எழுதியுள்ள சம்ஸ்ச்சா காலம் (எடுபிடிகளின் காலம்) என்ற நூல் பூனா ஒப்பந்தத்தின் – பூனா ஒப்பந்தம் என்பது மகாத்மா காந்திக்கும் பி ஆர் அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். இதன் மூலம் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை மாறி தொகுதி இடம் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது – பொன்விழா காலத்தில் 1982 செப்டம்பர் 24 இல் வெளியானது.
கான்ஷிராமின் அரசியல் அம்பேத்கரின் கருத்துக்களை மையம் கொண்டதாகவும் அதே வேளையில் காந்தி , நேரு மற்றும் காங்கிரசை ஆட்டுவித்த உயர் ஜாதியினர் ஆதிக்கத்தை கூர்மையாக விமர்சிப்பதாகவும் இருந்தது . சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் திணித்த ஆட்சி அதிகார முறைமையில், கான்ஷிராம் பகுஜன்கள் என்று அழைத்த – பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் , சிறுபான்மையினர் – களுக்கு தலைவர்கள் உருவாகாதபடியும் உயர் ஜாதியினரின் எடுபிடிகளால் சுரண்டப்பட்டார்கள் என்றும் அவர் அதில் விமர்சித்துள்ளார்.
நேரு காலத்தில் அதிகார அமைப்பை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், ஆதிக்கம் செய்தனர் என்று கான்ஷிராம் வாதிடுகிறார். எடுபிடிகளின் காலம் நூலில், 1957 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர் பிராமணர்கள். எஸ்சி / எஸ்டி ஒதுக்கீடு செய்யப்பட்ட 22.5 சதவீதத்தில் நேருவின் பெருந்தன்மை’யால் அவரது ‘எடுபிடி’களே தேர்வாகினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
1980 பொதுத் தேர்தலை பற்றி அந்த நூலில் குறிப்பிடும் போது அவர் காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி இருந்த போது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 36 சதவீதத்தினர் பிராமணர்கள், 15 சதவீதத்தினர் சத்ரியர்கள். அப்போது காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜெகஜீவன் ராம் பிரதமராக விரும்பினார். ஆனால் அவரை இந்திரா காந்தி புறமொதுக்கினார் என்று எழுதியுள்ளார்.
கான்ஷி ராம் 1984 ஏப்ரல் 14 தேதி அம்பேத்கரின் பிறந்த நாளின் போது பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்தார். எஸ்சி, எஸ்டி, இதுல பிற்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் இடையே காங்கிரஸின் செல்வாக்கை வீழ்த்த அந்த கட்சி கவனத்தை செலுத்தியது. ஜிஸ்கி ஜித்னி சங்கியா பாரி , உஸ்கி உத்னி இஸ்செதாரி (மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் ) என்ற அவரது கோஷம் நாடெங்கிலும் எதிரொலித்தது.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அவர்களே அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகவும் இருந்தனர் , உ பி யின் முதல்வராக பதவியேற்ற ஆறு தலைவர்களும் முற்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் : கமலாபதி திரிபாதி (பிராமணர்) , எச் என் பகுகுணா (பிராமணர்) , என் டி திவாரி (பிராமணர்) , வி பி சிங் (தாக்கூர்) , ஸ்ரீபதி மிஸ்ரா (பிராமணர்) , வீர் பகதூர் சிங் (தாக்கூர்).
மேற்கண்ட பத்து காங்கிரஸ் முதல்வர்களில் ஒருவர் கூட தனது ஐந்தாண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தில்லிக்கும் லக்னோவுக்கும் இடையே ஏற்பட்ட உரசலில் உ பி அரசில் முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.
கடந்த தசாப்தங்களில் உ பி யில் முதல்வரான இதர பிற்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள் இல்லை. ராம் நரேஷ் சிங் (ஜனதா கட்சி) , முலாயம் சிங் (சமாஜ்வாடி) , கல்யாண் சிங் (பாஜக) , அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி) ஆகியோர் காங்கிரசால் முதல்வரானவர்கள் இல்லை.
உ பி முதல்வரான ஒரே ஒரு தலித் தலைவர் மாயாவதி மட்டுமே. அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தார். அவரை கான்ஷி ராம் தனது அரசியல் வாரிசாக ஆக்கியிருந்தார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் இந்தியன் எக்ஸ்பிரஸில் முத்த இணை ஆசிரியராக உள்ளார்.
Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication
An Innovative Indigenous Technological Leap for National Digital Security and Personal Data Protection
Today, with over 800 million Indian citizens tethered to foreign-managed digital communication platforms, the mandate for a secure, indigenous, and privacy-centric alternative has reached a critical tipping point. As our digital horizons expand, so do the shadows of complex challenges. From the terrifying rise of “Digital Arrests” and relentless spam to sophisticated financial frauds, fake banking calls, and predatory “Work from Home” scams, innocent citizens are increasingly facing mental and financial exploitation.
The proliferation of cybercrimes against women and senior citizens, the spread of anti-national activities, and the uncontrolled reach of objectionable content have become grave societal concerns. Perhaps the greatest challenge lies in the difficulty of tracking and controlling these digital threats on foreign servers, transforming personal safety issues into a broader risk to National Security.
In response to these burning issues, Anuvadini AI has taken a historic step toward building a trusted, sovereign digital ecosystem. We are proud to unveil Hyped Samvadini and the Desi AI GenZ Keyboard—cutting-edge applications designed not just with advanced technology, but with the safety, privacy, and linguistic pride of every Indian at their core.
Hyped Samvadini: India’s First SIM-Bound, Multilingual, and Spam-Free Super-Messenger
This platform is a fortress of digital sovereignty. By utilizing Dynamic Chat IDs, users can engage in personal chats, group discussions, and high-definition audio/video calls without ever needing to share their mobile numbers. Armed with End-to-End Encryption, Device-Binding, and advanced Anti-Spam mechanisms, it effectively neutralizes impersonation and cyber-fraud.
Category
Features & Pointers
End-to-end encrypted Chat & Calling
One-to-One & Groups: Secure messaging with role-based management.Broadcast: Send updates to many; recipients receive them individually.Video & Audio Calls: High-quality, encrypted calls with no number exposure.WhatsApp Import: Securely migrate chat history, media, and docs from WhatsApp Web.
Multilingual Support
Real-Time Translation: Voice and text translation across 55+ languages.Accessibility: Speech-to-text, text-to-speech, and multilingual UI.Status & Stories: Share media with privacy controls; viewable in preferred languages.
Make in India
India’s First Safety-First, Multilingual, Spam-Free Messenger.Built 100% in India for Bharat.Privacy-first architecture focused on diverse communities.
SIM & Device Binding
Ownership Verification: Ensures only the true owner can use the account.Swap Detection: Alerts if the SIM is switched to prevent hijacking.Removal Detection: Detects empty SIM slots or card removal.Device Binding: Locks the account to a specific recognized device.
Privacy & Anti-Spam
Guest Chat: Communicate without ever sharing your phone number.Hidden Numbers: Phone numbers remain invisible in chats and calls.Request Module: Strangers must send a request; you choose to accept or ignore.End-to-End Encryption: Applied to all messages, audio, video, and files.
Safety & SOS
One-Tap SOS: Immediate emergency alerts with live location sharing.Discreet Panic Trigger: Silent activation for women, students, and travelers.
Bharat-Centric Modules
Women & Seniors: Community support, parenting resources, and elder care guidance.Employment: Access to local jobs, internships, and apprenticeships.Farmers: Mandi price updates, Krishi news, and regional community groups.SMEs/Startups: Guidance on rules, resources, and government initiatives.
Productivity & Utilities
Event Planner: Automated reminders and auto-created event chat groups.Temporary Chats: Auto-expiring IDs for short-term interactions (deliveries/rentals).One View: Single-screen management for all shared media and files.Govt Schemes: Comprehensive details on benefits and how to apply.
Games
Diverse Multiplayer & Social Play: Enjoy real-time interaction with games like Antarakshari, Ludo, and Chess Master, allowing you to compete with friends or players worldwide.Indian Cultural Classics: Relive traditional favorites digitally with authentic mechanics for Gilli Danda, Carrom, and street-style Desi Bowling.Brain Training & Skill Building: Sharpen your mind with logic-based challenges like Crossword, Sentence Scramble, Number Sort, and Memory Games.Retro Arcade & Action: Experience fast-paced fun with classics like Snake, Block Game, Car Racing, and Bubble Shooter.Immersive Virtual Worlds: Explore creative spaces like the Music Studio or nurture virtual buddies in the Baby Boss & Friends World, which teaches responsibility through interactive care.Intuitive Controls: Games utilize modern hardware features, such as gyro-sensors for Maze Ball and tilt-steering for racing, ensuring a smooth and responsive experience.
Social Hub
LrN (Learn): Learn 22+ languages with interactive lessons and certificates.Fanhub: Event-based spaces, digital ticketing, global feeds, and organizer tools.
Desi AI GenZ Keyboard: Expression in Your Own Voice
The Desi AI GenZ Keyboard is a revolutionary AI-powered typing and expression platform. Supporting 22 Indian and over 70 global languages, it offers seamless typing, voice-to-text, and instantaneous translation, allowing users to communicate effortlessly in their mother tongue.
Category
Key Features & Technical Capabilities
GenZ Mode & Media
GenZ Key: Dedicated space-row button for trendy slang popups (Rizz, Aura, Delulu, Sus, Slay, NPC, etc.).Integrated Media: Full emoji palette; GIF search (Tenor API); Sticker search (Klipy API) with category chips.Media UX: In-panel search bar and grid layout optimized for thumb reach.
Languages & Localization
22+ Indian Keyboard Layouts: Includes Devanagari, Arabic, Bengali, Ol Chiki, and more for scripts like Maithili, Sanskrit, Assamese, Dogri, and Konkani.70+ International Languages: Global support including French, German, Japanese, Arabic, Russian, and Spanish.Localization Extras: Locale-aware punctuation/numerals and per-language quick reply phrases.
High-Speed Performance
Lightning-Fast Typing: Engineered for zero-lag input, ensuring every keystroke appears instantly as you type.Rapid AI Predictions: Provides near-instant word suggestions and autocorrect to boost your typing speed.Quick Language Switching: Seamlessly toggle between multiple Indian and global languages without any stutter or delay.Fast Gesture Controls: High-response swipe-to-type functionality for fluid, high-speed text entry.Snappy Performance: A lightweight, optimized interface that launches and responds immediately on any device.
Custom Typing & Layouts
Full Layouts: QWERTY, dedicated numbers, advanced numeric, and symbols (primary & secondary).Smart Input: Optimized Phone/OTP layouts; long-press for accents/variants.Automated Logic: Auto-capitalization and double-space period insertion.Smart Deletion: Swipe-left on delete key for “backspace slide” fast deletion; long-press to clear fields.
Gesture & Glide Typing
Glide Support: Swipe over letters to form words with fade-out trail visualization (0–500ms).General Gestures: Customizable Swipe Up/Down/Left/Right actions with adjustable velocity/distance thresholds.Spacebar Gestures: Swipe to move cursor or switch languages; long-press for settings/layouts.
Utility Panels & Tools
Calculator: Embedded in keyboard with history and “one-tap send result” function.Unit/Currency Converter: 8+ categories (Length, Weight, Temp, FX, etc.) for quick estimates.Calendar: Pick dates and insert in multiple formats (e.g., 18-03-2026).Text Editing: Helpers for bullets (•, ○, ▪), numbering styles (1., a), i)), and indents.
Smartbar & Quick Actions
Modes: Fully toggleable; layouts include Suggestions-only, Actions-only, Shared, or Extended.Quick Access: One-tap to Emoji, GIFs, Stickers, Clipboard, Floating mode, Translate, and Voice mic.Editor: Drag-and-drop reordering of actions into Sticky, Dynamic, or Hidden sections.Recent Emojis: Smartbar displays recent history when numeric/symbol keyboard is active.
NLP & Privacy
Privacy-First: 100% On-Device suggestions and processing. No AI/LLM cloud calls for typing.Smart Logic: Statistical glide typing classifier and NLP manager wired to glide paths.
Productivity Helpers
Translation: Inline translation panel powered by Anuvadini API.Quick Reply: Two-column panel for language-specific templates/canned responses.Clipboard: Local history of copied items with “Pin” and “Clear-all” support.Voice Input: Sticky mic button with a themed voice bar UI for real-time dictation.
Personalization & Settings
Snygg Engine: Advanced theming system with Material-You accent color support and Light/Dark transitions.Feedback: Granular control over Audio volume and Haptic vibration strength/duration per event.Modes: Toggle between Docked, Fullscreen, and Floating Keyboard with resize/drag handles.Developer Tools: Internal devtools for layout debugging and performance logging hooks.
The Vision: Aatmanirbhar Digital Bharat
These applications are more than just software; they are a declaration of India’s technological self-reliance. At a time when digital control often resides outside our borders, Anuvadini AI is providing a secure, reliable, and culturally resonant alternative.
“Videsi se Desi, communicate securely, in your own language, with your own nation.”
Through Hyped Samvadini and the Desi AI GenZ Keyboard, India marches toward a digital future where every citizen is secure, self-reliant, and truly empowered.
How to Download Hyped Samvadini & Desi AI GenZ Keyboard:
To use Hyped Samvadini, go to the Google Play Store (Android) or Apple App Store (iOS) and search for the keyword “Hyped Samvadini” or *”Hyped Messenger.”
To use Desi AI GenZ Keyboard, go to Google Play Store (Android) or Apple App Store (iOS) and search for the keyword “Desi AI GenZ Keyboard.”
For more information, contact Dr. Buddha Chandrasekhar (CEO, Anuvadini AI) at cconeat@aicte-india.org or +91 97401 69197.
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாகரிகத்திலும், பண்பாட்டிலும் சிறந்த தமிழகம் சீரழிந்து போனதற்கு திராவிட சித்தாந்தமும் மற்றும் திமுகவின் நிர்வாக திறனற்ற ஆட்சியும் தான் காரணம்.
இராமநாதபுரத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவிக்க சென்ற போது 7 மணி நேரம் அலைக்கழிக்கப் பட்டதாக வந்துள்ள செய்தியானது, திமுக ஆட்சியில் காவல்துறை மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதி படுத்துகிறது.
சமீபத்தில் விளாத்திகுளம் சிறுமி காணாமல் போனது குறித்த புகார் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டு தாமதப் படுத்தியதுதான் அந்த சிறுமியை நாசப்படுத்தி கொல்வதற்கு குற்றவாளிக்குத் தைரியம் கொடுத்துள்ளது.
பெண்கள், சிறுமிகள் மீதான குற்றங்களில் காவல்துறை மெத்தனம் போக்கிற்கு காரணம் அதில் ஈடுபடும் திமுகவினரைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்று மக்கள் பேசுகின்ற நிலை இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான வன்முறை முதல் நேற்று இராமாநாதபுரம் சிறுமி மீதான பாலியல் சீண்டல் வரை தமிழக காவல்துறை செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்க அளவில் இருக்கிறது.
ஆனால் திமுக முதல்வர் ஸ்டாலின் இவை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. சென்னை அண்ணா நகரில் நடந்த போக்சோ குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடந்தையாக உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாக சீரழிவுக்கு இதைவிட சாட்சி வேண்டுமா. கண்ணகி சிலைக்கு கண்ணீர் வடித்த திமுக ஆட்சியில் கண்ணகிக்கே நீதி கிடைக்காது என்று கூறும் அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது.
இந்த நவீன காலத்தில் இன்னமும் காவல்துறை விரைவாக செயல்படாமல் மெத்தனமாக இருப்பதும், மனிதாபிமானமற்ற முறையில் புகார் தெரிவிப்போரை அலைகழிக்கப்பதும் காவல்துறை மீதான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.
இனியும் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியம் செய்யுமேயானால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் அபாயம் உள்ளதை அரசு உணர வேண்டும்.
திமுக ஆட்சியில் சலுகைகளும், இலவசங்களும் தந்த போதிலும் பெண்களின் மீதான வன்முறை மீது தக்க நடவடிக்கை எடுக்கத் தவறி உள்ளது . அதே போல் தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் கூட போதை பொருள் பாதிப்பு இருக்கிறது. இவைகளை அடக்க முடியாமல் காவல்துறை திராணியற்று முதல்வரின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் காவல்துறையின் கைகளை கட்டி செயலற்று நிற்க வைத்த திமுக.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்பதை இந்துமுன்னணி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறது.
காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் பாமர மக்களின் புகார்களை உடன் விசாரித்து குற்றங்களைத் தடுக்க, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன நாய் இருந்தது. சொல்ல ஆரம்பித்தார்….
“என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது; நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை. நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். நான் அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றார்.
டாக்டர் நாயைக் கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு சொன்னார், “இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன்.”
அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து…அதை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல் பெல்ட்டால் அடிக்கச் சொன்னார். மருத்துவரின் உதவியாளர் இரவு முழுவதும், டாக்டர் சொன்னபடியே சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
மறுநாள் அந்த பெண்மணி வந்து கேட்டார்.
“ஐயா என் நாய்க்குட்டி எப்படி இருக்கு ?
டாக்டர் சொன்னார், “உங்கள் நாய்க்குட்டி நீங்கள் இல்லாத குறையை உணர்ந்து விட்டது என்று நம்புகிறேன்.”
டாக்டரின் உதவியாளர் நாயை அழைத்து வந்தார். நாய் அறைக்குள் வந்தவுடன்.. துள்ளிக் குதித்து மேடத்தின் மடியில் அமர்ந்து, வாலை அசைத்து, மேடத்தின் முகம், வாயை நக்க ஆரம்பித்தது.!! அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
மேடம் சொல்ல ஆரம்பித்தார்: திடீர்னு இந்த மாதிரி பாசக்காரனா மாறிட்டானே ? என்ன பண்ணீங்க சார்?
டாக்டர் கூறினார்: பெரிய ஏர் கண்டிஷனர் அறையில், தினமும் மிகவும் சுவையான உணவை சாப்பிட்டுவிட்டு, தன்னையே மாஸ்டர் என நினைத்து, தன் உரிமையாளரை மறந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும் உளவியல் மற்றும் உடல் சிகிச்சை தேவைப்பட்டது. கொடுத்தோம், இப்போது அது நலமாக உள்ளது.
சுருக்கம்:
நாட்டிற்குள்ளும் சிலருக்கு தேவை இந்த சிகிச்சை: 1) அன்னை பாரதத்தை அவமரியாதை செய்தல், 2) இந்தியாவை துண்டு துண்டுகளாக்குவோம் என்று மிரட்டுவது, 3) சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து சுதந்திரம் தேடுபவர்கள், 4) *எல்லை காக்கும் வீரர்களை அவமதிப்பு செய்தல், 5) எதிரி நாட்டை ஜிந்தாபாத் என்று அழைப்பவர்கள், அனைவருக்கும் இந்த வைத்தியம் தேவை. அப்போது தான் தில்லி மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதம், நக்சலிசம் ஒழியும்.
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களைக் காவல் துறையினர் ஒவ்வொருவராக பெயர் விவரம் கொடுத்த பிறகு தான் மலைக்கு செல்ல முடியும் என்று தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா அமைக்கப்பட்டுள்ளது. இன்று ரம்ஜானை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை செய்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் மலை மீது செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஆண்டுதோறும் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாள் அதுவும் நிறுத்தி ஒவ்வொருவராக அனுப்புவது சரியில்லை” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக, மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவே, ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் புனித ரமலான் நாள் அன்று அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மலை மேல் தொழுகைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் பதிவு செய்த பின், மலைக்கு தொழுகைக்குச் சென்றனர்.
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுவைக் கொலை செய்ய முயற்சித்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவை செக் நாட்டில் ஜுன் 30 2023 ல் அமெரிக்க FBI கைது செய்தது. மேலும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் பணி செய்யக்கூடிய விகாஸ் யாதவ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயர்களையும் அமெரிக்கா காட்சிக்குள் கொண்டு வந்தது.
உடனே இந்தியாவில் வாழக்கூடிய தேச விரோதிகள், ‘பாகிஸ்தான் என எண்ணி விட்டீர்களா, இது அமெரிக்கா! அவர்களிடம் உங்களுடைய பாச்சா பலிக்காது’ என அமெரிக்கா பற்றி பெருமை பேசிக் கொண்டார்கள். கூடவே இந்திய அரசுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வாரி வழங்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது வெளிநாட்டவர் ஏழுபேர் கைது என்ற செய்தி.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதனைச் சுற்றியுள்ள மலைப் பாங்கான இடங்களில் குக்கி இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குக்கி இன மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
மெய்தி இனம் நாங்களும் இந்த நாட்டுடைய குடிமக்கள் தான் எங்களுக்கும் சில சலுகைகள் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். பல கட்ட போராட்டங்களுக்கு பின் ஏப்ரல் 2023 உச்ச நீதிமன்றம் மெய்தி இன மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து குக்கி இன மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் குறைந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் மே 3 2023 மாபெரும் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கான மெய்தி இன மக்களைக் கொன்று குவித்தார்கள். பல ஆயிரம் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
மெய்தி இன மக்கள் கடுமையான உழைப்புடன் ஓரளவுக்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருவதால் அவர்களை கண்டு குக்கி இன மக்களுக்கு #பொறாமை ஏற்படுவதுண்டு. எனவேக் கலவரத்தை காரணமாக வைத்து மெய்தி இன மக்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.
ஒண்ட வந்த பிடாரி கதையாக இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்களை மியான்மர் நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்த மர்ம நபர்கள் கிறிஸ்தவராக மதம் மாற்றி உண்மையான மக்களை துரத்த ஆரம்பித்தார்கள். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு 40 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மணிப்பூரில் இறங்கியது.
இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசுக்கு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாக இது தெரிய ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனைக்கு பின்னால் மாபெரும் சக்திகளின் கைகள் இருக்கக் கூடும் என இந்திய அரசு உணரத் தொடங்கியது.
இந்த நேரத்தில் குக்கி இன மக்கள் 40க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்கள். சமகால சர்வதேச அரசியல் பற்றிய எதுவும் தெரியாமல் இருக்கக் கூடிய திராவிட ஸ்டாக்குகள் போன்று எந்த விதமான அறிவியல் பூர்வமான பொது அறிவும் இல்லாத மலைவாழ் மக்களிடம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன்கள் இருப்பது இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்திய அரசு இதனைப் பற்றி பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
2025 மார்ச் மாதம் மிசோரம் மாநில சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது தங்கள் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், அதில் பலர் எல்லை தாண்டி மியான்மர் நாட்டுக்குள் சென்றதாகவும் கருத்து தெரிவித்து இரூந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இரு தினம் முன் இந்திய அரசு ஒரு முக்கிய செய்தியை உலகத்திற்கு கொடுத்து இக்கின்றது. சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த சில வெளிநாட்டவர்கள் விதிமுறையை மீறியும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்றதாகவும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கைது செய்ய பட்டதாகவும் தெரிவித்தது.
சில நாடுகளிலிருந்து இந்தியா வந்த இவர்கள் பல இடங்களுக்கு தனித்தனியாக யாருக்கும் சந்தேகம் வராதபடி பிரிகின்றார்கள். பின்னர் ஒரே புள்ளியில் கூடுகின்றார்கள். தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று தங்கள் நாடுகளுக்கு புறப்பட தயாராகின்றார்கள்.
என்.ஐ.ஏ., சில திமிங்கலங்களை வேட்டையாட சரியான நேரம் பார்த்து வலை விரித்துக் காத்துக்கொண்டிருந்த அந்த வேளையும் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனை என் ஐ ஏ., கைது செய்தது. அதேபோன்று லக்னோ மற்றும் தில்லி விமான நிலையத்திலும் மொத்தம் 6 உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தது. பின்னர் தில்லியில் உள்ள #பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். இதில் முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏ உளவாளியும் son of Liberty அமைப்பின் தலைவருமான மேத்திவ் வாண்ட்கே.
இவர்கள் மொத்தமாக இந்தியாவுக்கு சுற்றுலா வந்து தனித்தனியாகப் பிரிந்து சென்று பின்னர் மிசோரம் மாநிலத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். மிசோரத்தில் உள்ள சமூக விரோதிகளின் துணையுடன் மியான்மர் நாட்டுக்கு தப்பிச் சென்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேலும் பல போர் தந்திர நெறிமுறைகளை நவீன ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிம் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து நவீன உபகரணங்கள் டிரோன்கள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இவர்களின் உரையாடல்கள் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்துமே எலன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார் லிங் செயற்கைக்கோள் இணையம் வழியாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்க உளவாளியான இவனை உளவாளி என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் உளவாளி என்பவன் உளவு மட்டுமே பார்ப்பான். ஆனால் இவன் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து அந்த அரசுகளுக்கு எதிராகவே ஆயுதம் தூக்கிப் போராடக் கூடியவன். லிபியாவில் புரட்சி நடைபெற்ற போது தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து ஆயுதம் எடுத்து லிபியா அரசுக்கு எதிராகப் போராடியவன். சிரியா நாட்டுக்குச் சென்று சிரிய நாட்டு தீவிரவாதக் குழுவுடன் இணைந்து அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராடியவன்.
தற்போது இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இப்போது கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய உளவுத்துறை இவன் முன் வைக்கக்கூடிய கேள்விகள்:
எங்கெல்லாம் சென்றார்கள் யாருடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள் என்ன திட்டத்துடன் வந்தார்கள் இவர்களுக்கு உதவி செய்த உள்ளூர் சமூக விரோதிகள் யார் இவர்களை அனுப்பி வைத்தது யார்
விஷயம் கொதிநிலையில் சென்று கொண்டிருக்கும்போது இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டு குடிமகன்களைப் பார்ப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என புகார் கூறியிருக்கிறது.
உங்கள் நாட்டு குடிமகன்களாக இருக்கலாம், தற்போது அவர்கள் இந்தியாவில் தீவிரவாதிகளாகச் செயல்பட்டுள்ளார்கள். இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எப்படி உடனடியாக அனுமதி கொடுக்க முடியும்?
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அவசரமாக இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசி இருக்கிறார். நிச்சயமாக இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிகில் குப்தா பற்றி பேசி இருக்கக்கூடும். இறுதியாக அமெரிக்கா என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவுடைய முடிவும் இருக்கும் என பேசி இருக்கக்கூடும். நாங்கள் தேடப்படும் ஒரு தீவிரவாதிக்கு எதிராக மட்டுமே செயல்பட்டோம். ஆனால் அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசி இருக்கலாம்.
RAW மீது தடை விதிக்க வேண்டும் என ஒரு தற்குறி ஆணையத்தை வைத்து அறிக்கை விட்டீர்கள். இப்பொழுது நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக CIA அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி தீர்மானம் கொண்டு வரட்டுமா? என இந்தியர்கள் கேட்கிறார்கள்.
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஏன் இந்தியாவிலுள்ள கேடுகெட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. ஆனால் அவர்கள் இந்தியத் திருநாட்டுக்கு எதிராக அந்நிய சக்திகளுடன் இணைந்து எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.
ஆயுதம் தூக்குபவன் மட்டும் தீவிரவாதி அல்ல அதற்கு துணை போகும் நபர்களும் தீவிரவாதிதான். அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . மேலும் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடம் எத்தகைய தாக்குதைலை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அன்று பஞ்சாயத்திற்காக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா அழைத்தார்கள். ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது .
இந்தியாவில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தை உலகமே ஆதரிக்கிறது என்றால் கண்டிப்பாக அதில் அந்நிய நாட்டின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் திருந்த வேண்டும். மிக நுட்பமான முறையில் சதி திட்டங்களில் ஈடுபட்ட இவர்களை கைது செய்து பல சதிகாரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இந்திய திருநாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
அனேகமாக துரந்தர் 3.0 படம் எடுக்கும் அளவிற்கு இந்த சம்பவம் இருக்கின்றது. கண்டிப்பாக இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட வேண்டும். இந்திய தேசத்திற்கு எப்படி எல்லாம் ஆபத்து வருகிறது என அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நொடியும் இந்திய தேசத்தைப் பாதுகாக்க காடுகளில் குகைகளில் பாதாள சுரங்கங்களில் அரசனாக ஆண்டியாக பிச்சைக்காரனாக பைத்தியக்காரனாக தங்கள் நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றி இந்த மண்ணைத் தங்கள் கண்களாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று கண்டிக்காத எங்களை போன்றவர்கள் மீது அவர்கள் எரிச்சல் திரும்பி உள்ளது.
அமெரிக்க சொல்லாடலில் இதை ‘வட்டமாக சுற்றி சுடுவது’ என்பார்கள். அதாவது தங்களை தாங்களே சுட்டுக் கொள்வது. இந்தியா உயர்ந்த தார்மீக பீடத்தில் ஏறிக்கொண்டு, இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவது என்று கூறி நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நான் முதலில் சில விஷயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன் : சர்வதேச சட்டங்களின்படி இந்த போரை நியாயப்படுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பிற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது ,இறையாண்மை மதிக்க வேண்டும், பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்தும் விஷயங்களுக்கு இது முரணானது . நான் ஏற்கனவே சொன்னது போல், தற்காப்பு நடவடிக்கையாக முன் கையெடுத்து தாக்குவது என்றும் இதை சொல்ல முடியாது.
ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது நாம் உடனடியாக இரங்கலை தெரிவித்தோம். அதேபோல் இப்போது ஈரானின் உச்சப்பட்ச தலைவர் கொல்லப்பட்டபோது உடனடியாக நமது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இதைச் சொல்ல எனக்கு சுதந்திரம் உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. ஆனால் , இந்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் அமைதி காப்பதை நான் கண்டனம் செய்ய மாட்டேன்.
எப்போதுமே இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் கொள்கைகளையும் நிதர்சனத்தையும் கருத்தில் கொண்டு, இரண்டையும் சமன்படுத்தும் விதமாகவே இருந்துள்ளன. ஜவஹர்லால் நேருவின் அணிசேரா கொள்கை என்பது தார்மீக நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் தவிர்த்தது அல்ல. மாறாக இரு துருவ பனிப்போரில் சிக்கிக் கொள்ளாமல் தவிப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் இருப்பையும் தக்க வைத்துக் கொண்ட சாதுர்யம்.
உலகம் இன்று பல அதிகார மையங்களை கொண்டதாக மாறியுள்ளது. எதிர் எதிரான சக்திகளுடன் ‘பல்முனை உறவை’ இந்தியா பேணி வருகிறது. நம் தேச நலனை முக்கியமாக கொண்டு சில நேரங்களில் கடுமையான நிலைப்பாட்டையும் மேற்கொள்கிறது.
குறிக்கோள் மாறாமல் இருக்கிறது :
உலகில் நீதி நியாயத்தை பேசும் அதே வேளையில் இந்தியாவின் இறையாண்மையை காத்துக் கொள்ள வேண்டும். தேசபக்தியை யாருக்கும் மொத்த குத்தகைக்கு விடவில்லை. காந்தி , நேரு சொல்லித்தந்த பண்புகளை விளக்கம் அளிக்கும் உரிமை எந்த ஒரு சாராருக்கு மட்டும் இல்லை. அவர்கள் சொன்ன குணங்களை நம் காலத்து சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தி செயல்படுவதே நாம் அவர்களது வாரிசுகள் என்பதற்கு உண்மையான அடையாளம். நம் நாட்டு நலன்களை காவு கொடுத்துவிட்டு சுயபரித்தியாகம் செய்ததாக சொல்லிக் கொள்வதில் இல்லை.
தேச நலனும் நெறி சார்ந்த விழுமியங்களும் முரண்படும்போதெல்லாம் இந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளதை இன்று விமர்சனம் செய்பவர்கள் வசதியாக மறந்து விட்டனர். 1956 இல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் அப்பட்டமான அத்துமீறலை நாம் கண்டனம் செய்யவில்லை. அதேபோல் 1968 ல் செக்கோஸ்லோவாகியாவிலும் 1979 இல் ஆப்கானிஸ்தானிலும் நடந்தபோது நாம் அமைதியாக இருந்தோம். அது ஏன் ?
ஏனெனில் நாம் தார்மீக நிலைப்பாட்டை மேற்கொண்டால் அது மாஸ்கோவுடன் நமக்கு இருக்கும் நல்லுறவை சிதைத்து விடும் என்று சரியாக கணித்தோம். சோவியத் யூனியன் நமக்கு முக்கியமான ஆயுத வியாபாரி. ராஜதந்திர நிலைப்பாடுகளில் நமக்கு கூட்டாளி. மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க சரியான மாற்று.
அமைதியாக இருந்ததன் மூலம் நாம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரித்ததாக அர்த்தம் இல்லை. எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதற்கான விலை என்ன என்பதை புரிந்து கொண்டோம். அதனால் ஆவேசமான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இன்று உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு , ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலிலும் அதே வாதத்தின் நீட்சியாக நம் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, ஈரானிய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள வளைகுடா நாடுகளிலும் நமக்கு ஏராளமான பணயம் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலருக்கு இந்த பகுதியில் நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். நமது எரிசக்தி தேவை வளைகுடா எண்ணெய் , இயற்கை எரிவாயுவை சார்ந்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் வசிக்கும் ஒன்பது மில்லியன் இந்தியர்களின் நலன் அந்த பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையது.
ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போரை தார்மீக அடிப்படையில் கண்டனம் செய்வதாக பாசாங்கு செய்தால் அவர்களுடனான நமது உறவு பாதிக்கப்படும். அது மட்டுமன்றி அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சம்பள பணம் – இதுதான் பல லட்சம் இந்திய குடும்பங்களுக்கு ஆதாரமாக உள்ளது, நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான எரிசக்தி, நம் வளர்ச்சிக்கு ஆதாரமான வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் அமைதியாக இருப்பது கோழைத்தனம் அல்ல. நம்முடைய தேச நலனும் அந்த பிராந்திய நிதர்சனங்களும் சிக்கல்களும் பின்னி பிணைந்துள்ளன என்பதை புரிந்து கொண்ட தெளிவை காட்டுகிறது.
வாஷிங்டனின் உள்ள அரசின் இயல்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா நாம் எதிர்பார்ப்பது போல சர்வதேச சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன் நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்களை விளாசத் தயங்குவதில்லை. போரானது இதுவரை நாம் மேற்கொண்ட நெறிகளுக்கு முரணாக இருக்கிறது என்றாலும் அமெரிக்காவுடன் நமக்கு இருக்கும் வேறு பல ஆதாயங்களை காவு கொடுப்பது அறிவார்ந்தது அல்ல.
சீனாவின் வளர்ச்சியினால் நமக்கு எழுந்துள்ள கவலைகள் எல்லாம் அமெரிக்காவின் ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்பக் கூட்டு, உறுதியான நட்புறவை பக்கபலமாக சார்ந்துள்ளோம். ஈரான் போரில் நெறி சார்ந்த நிலைப்பாட்டை மேற்கொண்டு அமெரிக்காவை முறைத்துக் கொண்டால் அது நம்முடைய முக்கியமான நலன்களை இழப்பதற்கு ஈடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அயலுறவு கொள்கை என்பது நம்முடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதும், நம் நலன்களை முன்னெடுத்துச் செல்வதும், அமைதியை நிலை பெற செய்வதற்குமானது.
இப்போது தார்மீக உயர்நிலைப்பாட்டை மேற்கொள்வது நம்முடைய நலன்களுக்கு உகந்தது அல்ல. அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள முடியும் என்றால் அந்த நிலையை மேற்கொள்ளலாம். ஆனால் இன்று நம்மால் அந்த நிலையை மேற்கொள்ள இயலாது.
யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடப்பது என்றால் வேறு எவரையோ பின்பற்றுவதாகாது. பல பன்னாட்டு அரங்குகளில் இந்தியா உலக நீதியை பலமுறை பேசியுள்ளது. ஆனால் எப்போது நம் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சமநிலையை பேணும் இந்த புரிதல் பொறுப்பான அரசியல் களமாடலில் அவசியம்.
ஆதாயம் அற்ற சூழ்நிலையில் அமைதியாக இருப்பது விவேகமானது. அது நம்முடைய நலன்களை பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி தேவைப்படும் போது அமைதியாக ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகும். தேவையற்ற மோதலை தவிர்த்து உரிய நேரத்தில் இரண்டு தரப்பினரிடையே பேசி அமைதி திரும்ப வழிவகை காண இயலும். அதற்கு நாம் ஊடகமாக இருக்க முடியும்.
போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று கேட்கும் இந்திய முற்போக்காளர்கள் நெறி சார்ந்த நிலைப்பாட்டை தார்மீக தைரியம் என்று தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். அயலுறவு கொள்கை என்பது வகுப்பறையில் பாடம் எடுப்பது அல்ல. இதை மறந்து விடக்கூடாது. அது அதிகாரமும் கொள்கைகளும் எதிரெதிரே நிற்கும் போட்டி அரங்கம். அந்த களத்தின் விளைவுகள் பல கோடி உயிர்களை, வாழ்க்கையை பாதிக்க கூடியவை. இதை கருத்தில் கொள்ளாமல், கண்டனம் செய் என்று அடுக்குமொழியில் அலற்றுவது பொறுப்பின்மையின் உச்சமாகும்.
நாம் தார்மீக சக்தியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று காந்தி சொல்லித் தந்துள்ளார். சர்வதேச சட்டங்கள்தான் அமைதியின் ஊற்றுக்கண் என்று நேரு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் நம் தேச நலன் முக்கியம் என்பதையும் புரிந்து கொண்டவர்கள். அவர்களது வாரிசுகள் இறுகிய பற்றாளர்கள் இல்லை. மாறாக , சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது கூற்றை நடைமுறைப்படுத்துபவர்கள்.
ஈரான் மீது நடக்கும் போரை சர்வதேச சட்டங்களால் நியாயப்படுத்த முடியாது. இந்தியா அமைதியாக இருப்பதால் போரை அது ஆதரிப்பதாக கருதக்கூடாது. நம் தேச நலனை பற்றி புரிந்து கொண்ட செயலறிவு முக்கியமே அன்றி நெறி சார்ந்த நிலைப்பாடல்ல.
இந்திய அரசுக்கு நான் ஆலோசனை கூற வேண்டுமென்றால், அது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், அடக்கி வாசியுங்கள் என்றுதான் கூறுவேன். நம்மை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருப்பதே பலம். கொள்கையையும் யதார்த்தத்தையும் சமன் செய்வதே வலிமை. நம்முடைய நலன்களை பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய விழுமியங்களை மதிப்புறச் செய்ய வேண்டும். ஆபத்தான உலகில் அறிவின் துணையுடன் பயணிக்க வேண்டுமே அன்றி போலி துணிச்சலுடன் தற்பெருமையோடு எதிர்கொள்ளக்கூடாது.
புவிசார் அரசியல் நிதர்சனங்களை புரிந்து கொண்டு , இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படும் விளைவுகளை எடை போட்ட பிறகு, விவேகமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அரசு ‘சரணாகதி அடைந்த’ அரசு அல்ல. பொறுப்பை உணர்ந்த சாதுரியமாக அரசு.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். அயலுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்.