Home Blog Page 15

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

cm car inspect near tuticorin - 2026

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர் சோதனை சாவடி பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த கார் சோதனை.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுரை–தூத்துக்குடி நெடுஞ்சாலையின் ஆவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பயணித்த கார் திடீரென நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, முதல்வரின் அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டதுடன், காரில் இருந்த சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு உறுதி செய்யும் வகையில் எந்த வாகனமும் விலக்கு இல்லாமல் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்… என்ன நடக்குது இங்கே!

NIA arrested seven foriegn nationals in mizoram - 2026

அமெரிக்க சி ஐ ஏ ஏஜென்ட் இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் சிக்கியுள்ளான். கூட ஐந்தாறு உக்ரைன்காரர்கள் வேறு. அமெரிக்க நாட்டின் கெடுதலை நினைப்பவர்கள் பாரதத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் உலக நலனை விரும்புகிறவர்கள் அமெரிக்காவில் ஒருவர் கூட இல்லை.

நாம் நன்றாக இருக்கவேண்டுமென்றால் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதோடு அடுத்தவன் நன்றாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் உயிரோடு இருக்கவேண்டும், நாம் போடும் பிச்சைக்கு ஏங்க வேண்டும், நம்மையே முதலாளியாக எண்ணவேண்டும், நிரந்தர தாழ்வு மனப்பான்மையோடு நம்மை கடவுளுக்கு இணையாக பார்க்கவேண்டும். இந்த எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து வைத்துள்ளது அமேரிக்கா அவர்களது மக்கள் மனதில்.

இந்தியா தங்களுக்கு உதவவில்லை, போரையும் நிறுத்தவில்லை என்பதற்காக கூலிப்படைகளை அனுப்பியுள்ளது இரு நாடுகளும். இந்த இரண்டு நாடுகளிலும், பாரத நாட்டில் இருப்பது போல தங்கள் நாட்டை நேசிக்கும் தேசபக்தர்கள் எல்லாம் கிடையாது. தங்கள் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய சுகத்தை நாடு உத்தேசிப்பதால், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் கூட்டம் தங்களுக்கு பணம் தருகிறது என்பதால் நாட்டுக்காக வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான்.

சிவப்பு பயங்கரவாதத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்துவிட்டதால், மீறி வந்தால் பாரதம் உள்ளே வந்து தாக்கும் என்பதால் உள்ளே வராமல் இருக்கும் இடத்திலிருந்தே தாக்கும் டிரோன்களுக்கான பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உக்ரைன் டிரோன் விஷயத்தில் ரஷியா கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது. அதனால் இந்த பகுதியில் கிருஸ்தவ நாடு உருவாக்குவதை விட, கிறிஸ்தவம் என்ற பெயரில் சிகப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுதான் திட்டம். அங்குள்ள லூஷாய், ஹுமார், லாய், ரால்ட், மற்றும் சகமா இனங்களை தூண்டி விட்டு, போதை பொருளை ஊக்குவிப்பதே நோக்கம்.

ஏற்கனவே பாகிஸ்தானில் விளைந்துள்ள போதைப்பொருட்களை அரபிக்கடல் வழியாக கடத்த முடியவில்லை. கவனித்து பார்த்தீர்களென்றால் சமீப காலமாக கடலில் பெருமளவில் பொருள் எதுவும் சிக்கவில்லை. காரணம், இந்திய இராணுவம். மாட்டினால் தொலைந்தோம் என்று வரவில்லை. அதனால் சீனா வழியாக மியான்மார் வழியாக மிசோரம் பகுதியில் கால் பாதிக்க திட்டம்.

கில்கிட் பகுதியை பாகிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் வந்த வினை. அப்படியே நடந்து போகிறார்கள் திபெத், சீனா என்று. ஆனால் பலூச் புரட்சியாளர்கள் அடித்து நிமிர்த்துவதால், ஆப்கனிஸ்தான் இன்னொரு பக்கம் துளைத்து எடுப்பதால் நேரடியாக பாரதம் போர் என்று எதுவும் புரியாததால், பழியை பாரதத்தின் மீது போட்டுவிட்டு, பலூச்ச்சையும், ஆப்கானியர்களையும் எதுவும் செய்ய முடியாததால் இப்படி திருட்டு அடி அடிக்க வந்துவிட்டார்கள்.

இப்போது ஒரேயொரு வழி இருக்கிறது. வந்திருக்கும் அமெரிக்கனையும், உக்ரைன்காரனையும் நாம் கொல்லக்கூடாது. விசாரணை, விசாரணை என்று வைத்து அவனை வெறுப்பேற்றி, தூதரக உதவியை கோர முடியாதென்பதால், யாரையும் சந்திக்க முடியாமல் செய்து, ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரணையை பதிவு செய்து வெளியிட்டு எங்களை அனுப்பியது அமெரிக்க சி ஐ ஏ மற்றும் உக்ரைன் அரசுதான் என்று சொல்ல வைத்துவிட்டால் போதும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்துவிடலாம்.

உலக பயங்கரவாதி அமெரிக்காவுக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு மனமெல்லாம் கிடையாது என்பது ஒரு புறம். ஆனால், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் லாபி செய்து, என்ன காரணத்துக்காக உலக நன்மையை உத்தேசித்து, உழைத்து முன்னேற துடிக்கும் ஒரு நாட்டுக்கு எதிராக, பயங்கரவாதத்தை தூண்ட ஆட்களை அனுப்பினீர்கள் என்று கேட்டு இதற்கு நேரடி பொறுப்பேற்று அதிபரை ராஜினாமா செய்ய சொல்லி தூண்டலாம். அமேரிக்கா சென்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அல்லது பெரிய பத்திரிக்கைகளை இங்கு வரவழைத்து அவர்களுக்கு பேட்டி அளித்து தலைகுனிவை ஏற்படுத்தலாம்.

இதே வேலையை உக்ரைனுக்கும் செய்ய வேண்டும். நாட்டை ஒழுங்காக ஆண்டு, பக்கத்து நாடான ரஷியாவுடன் நட்பு பூணாமல் சண்டை போட்டு பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து வரும் பைத்தியம், சம்பந்தமே இல்லாத பாரதத்தில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது, போரை தூண்டுகிறது என்று கலகம் செய்யலாம்.

ஆனால், ஒன்று நிச்சயம். இவ்வளவு பலம் குறைந்த எதிரி என்று மியான்மாரை நினைக்கவே கூடாது. அப்படி நினைக்காமல் கவனமாக இருந்ததால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாமனிதர்களுக்கு நன்றி.

  • ஆனந்த் வெங்கட்

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

vilathikullam accust muneeswaran - 2026

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10ம் தேதி காணாமல் போனார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்த விவகாரத்தில் மாணவி மாயமானதாக புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்றும், மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்துப் போனதாகவும் போலீசார் கூறினர்.

கைதான தர்ம முனீஸ்வரன், 2020இல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தனது சந்தேகத்தை சமூகத் தளப் பதிவில் வெளியிட்டிருக்கிறார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவரது கேள்விகள்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.

குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin , இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

yugadhi wishes - 2026

சாந்திரமான ஸம்வத்ஸராதி- உகாதி (19-03-2026) வியாழன் இன்று தொடங்குகிறது.

பொதுவாக வருஷம் என்பது சாஸ்திரப்படி ஸாவனம், சௌரம், சாந்திரம், நக்ஷத்திரம், பார்ஹஸ்பத்யம் என்பதாக ஐந்து வகைப்படும். 30 நாள் கொண்டது ஒரு மாதம், 360 நாள் ஒரு வருஷம், என்று கணக்கிடுவது ஸாவன வருஷம்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது மாதப்பிறப்பு என்று 12 மாதங்களை கணக்கிடுவது சௌரமான வருஷம். தமிழகத்தில் வசிக்கும் நாம் சௌரமானத்தையே பெரும்பாலும் பின்பற்றுகிறோம். சந்திரனின் போக்கையொட்டி (அமாவாசைக்கு மறுநாள் முதல்) கணக்கிடுவது சாந்திரமான மாதம்- வருஷம்.

நக்ஷத்ரங்களில் முதன்மையான அசுவதி நக்ஷத்ரத்தை மாதப் பிறப்பாகக் கணக்கிட்டு 27 நாட்கள் ஒரு மாதம் என்று 12 மாதங்களை கணக்கிடுவது நாக்ஷத்ரமானம். ஜோதிஷ சாஸ்திரப்படி தசைகள், புக்திகளின் அளவுகளைக் கணக்கிட இது உபயோகப்படுகிறது.

பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தின் ராசி மாறுதலை வருஷப் பிறப்பாகக் கொள்வது பார்ஹஸ்பத்ய வருஷம். ஆக இவ்வாறு ஐந்து விதமாக வருஷ ஆரம்பம் கணக்கிடப்படுகிறது.

இவற்றில் கடைசியில் கூறப்பட்ட நாக்ஷத்ரம், பார்ஹஸ்பத்யம் ஆகியவை தர்ம சாஸ்திரத்தில் உபயோகமில்லை என்பதால் மூன்றுவித வருஷங்களே வழக்கத்தில் உள்ளது.

இவற்றில் சாந்திரமான ஸம்வத்ஸரம் என்னும் வருஷம் பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமையான இன்று தொடங்குகிறது. தெலுங்கு – கன்னட – மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் – சாந்திரமான வருஷத்தை பின்பற்றும் சிலருக்கும் இன்று புதிய வருஷம் ஆரம்பம்.

ஸ்ரீராமநவமி போன்ற விரதங்கள் சாந்திரமானத்தை ஒட்டியே வருகின்றன. புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல், பஞ்சாங்க படனம் போன்ற செயல்கள் அனைத்தும் இன்று நடக்கின்றன.

யுகாதி – உகாதி

புது வருடத்தின் முதல் நாளைக் குறிப்பிடுவதில், களிதெலுங்கில் ‘உகாதி’ என்றும், கன்னடத்தில் ‘யுகாதி’ என்றும் உச்சரிப்பில் சிறிய வேறுபாடு மட்டும் உண்டு. மஹாராஷ்டிரத்திலும் கொங்கணத்திலும் இந்நாளை ‘குடி பட்வா’ என்றழைப்பார்கள். சிந்தி வகுப்பனருக்கோ இந்நாள் ‘சேத்தி சந்த்’ ஆகும். வசந்தத்தை வரவேற்கும் விதமாய் அமைந்த பொன்னாள். வசந்த நவராத்திரியின் முதல் நாளும் இதுவே.

ஒரு யுகாதி நாளில் தான் நான்முகன் படைப்புத் தொழிலையும், மஹாவிஷ்ணு காலக் கணக்கையும் தொடங்கினார்கள் என்பது ஐதீகம். அன்றுதொட்டு காலமெனும் சக்கரம் சுழன்றபடியே இருக்கிறது. இலைகள் உதிர்வதும், பின் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்குவதும் , தகிக்கும் கோடையும், பெய்யெனப் பெய்யும் மழையும், நடுக்கும் குளிரும் மாறிமாறி வருகின்றன.

உகாதியின் பொருள்:

உகாதி= உ+க+ ஆதி
உ -என்பது நக்ஷத்திரம்
க- என்பது கமனம் (கதி, செல்லுதல்)
ஆதி என்பது நக்ஷத்திரத்தின் கதியைவைத்து கணிக்கத் தொடங்கிய நாள்
என்று அனுசரிக்கப் படுவது. (அல்லது)
யுகாதி=யுக+ஆதி .
யுகங்களின் ஆதி முதல் கணிக்கப்படும் காலம்.

யுகாதிக்குத் தயாராக வீட்டுக்கு வெள்ளையடித்து, அன்று மாலைகளும், தோரணங்களும் கொண்டு அலங்கரிப்பார்கள். தலைக்கு எண்ணை தேய்த்துக் குளித்தபின் புத்தாடை உடுத்தி வழிபாடு செய்வார்கள்.

இந்த நாளில் படைப்பு தொடங்கப் பட்டதால் பிரம்மனுக்கு வழிபாடு பிரதானம். வீட்டு வாசலில் கோலமிட்டு ஒரு கழியையோ கொம்பையோ நிறுத்துவார்கள்.
அதை பிரம்மனாக பாவித்து சந்தனம், குங்குமம். மலர்களால் அலங்கரித்து தூபதீபம் காட்டி நெய்வேத்தியம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன் பின்னரே பூஜையறையில் வழிபாடு.

பூஜைக்குப் பின் அனைவருக்கும் கொஞ்சம் யுகாதி பச்சடி வழங்கப் படும்.
புளி, வேப்பந்தளிர் மற்றும் பூ, வெல்லம், உப்பு, மாங்காய், பச்சை மிளகாய் இவற்றால் செய்யப் பட்டதே இந்தப் பச்சடி. இனிப்பு, கசப்பு என்று அனைத்தும் கொண்டதே நம் வாழ்க்கை என்று உணர்த்தும் பச்சடி.

இதை உட்கொள்வதற்கு முன், ஒரு சிறிய சுலோகம் சொல்வது மரபு. கீழ்க்கண்ட சுலோகமே அது :-

சதாயு வஜ்ர தேஹாய சர்வ சம்பத் கராய ச
சர்வாரிஸ்ட வினாசாய நிம்பகம் தள பக்ஷணம்

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

madurai communist campaign - 2026
#picture for representation

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து, அரசு ஊழியர்கள், தொழிலாளர் உரிமை என எதையும் பேசவிடாமல், கடந்த 5 வருடமாக கம்யூனிஸ்ட்களை அடக்கி வைத்ததுடன்,  தற்போது 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,வின் திறமைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக சமூகத் தளங்களில் கருத்துகள் ட்ரெண்ட் ஆனது. 

திமுக., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வார்த்தைப் போர், கூட்டணியில் இருக்குமா இருக்காதா, உன்னால் தான் நான் கெட்டேன், என்னால் தான் நீ வெற்றி பெற்றாய் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சண்டை சச்சரவுகள் வெளியில் இருந்த போதும், அனைவரும் எதிர்பார்த்தபடி, கடைசியில் சுமுகமாக  காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் என காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. 

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, மதிமுக.,வுக்கு 4, கொமதேக.,வுக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்னும் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு அறிவிக்க வேண்டிய நிலையில் இருந்தது. 

கூட்டணிக்குள் தேமுதிக., வந்ததால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவிலேயே விசிக., கம்யூனிஸ்ட்கள் எதிர்பார்த்தார்கள். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதன்படி,  திமுக., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தற்போது ஒன்று குறைத்துக் கொண்டு, 5 தொகுதிகளுக்கு சுருங்கி விட்டது.

தமிழக தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இடங்கள் எண்ணிக்கை

1989 – 13 – அதிமுக கூட்டணி
1991 – 10 – திமுக கூட்டணி
1996 – 13 – திமுக கூட்டணி
2001 – 8 – அதிமுக கூட்டணி
2006 – 10 – திமுக கூட்டணி
2011 – 10 – அதிமுக கூட்டணி
2016 – 25 – மக்கள் நலக்கூட்டணி
2021 – 6 – திமுக கூட்டணி
2026 – 5 – திமுக கூட்டணி

தற்போது திமுக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் மற்றும் 2021 தேர்தலுடன் ஒப்பீடு: 

காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)|
முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
கொமதேக – 2 தொகுதி (1 குறைப்பு)
இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)

இந்நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், “பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார். இதனால் தான் நாங்களும் 5 தொகுதிகளாக குறைத்துக் கொண்டோம். நாங்களும் இடங்களை குறைத்துதான் போட்டியிடப் போகிறோம் என முதல்வர் ஸ்டாலினும் கூறினார்” என்றார்.

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

1001322046 - 2026

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க நகைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரின் மற்றொரு பகுதியில் ₹1.25 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் இதேபோல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளன

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது, நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்கு உரிய ஆவணங்கள் காட்டப்படாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது

மதுரையில் இருந்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நகைகளுக்குத் தேவையான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், விருதுநகரின் மற்றொரு பகுதியில் ₹1.25 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் இதேபோல் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

1001321396 - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா நாளை புதன்கிழமை அமாவாசை திதியில் நடக்கிறது.

இக்கோயிலில் கடந்த ஏழாம் தேதி (7.3.2026)பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை தொடர்ந்து பெரிய மாரியம்மன் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு (தீமிதித்தல்) வ
நாளை புதன்கிழமை 18ஆம் தேதி மதியம் 1.35க்கு மேல் நடைபெறுகிறது .இந்த நிலையில் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு சீட்டும், கைப்பட்டையும் வழங்கப்படுகிறது.

1001321496 - 2026

இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறுகையில், கொடியேறிய நாளிலிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்புச்சீட்டும் கை பட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவிலில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் கோவிலில் பக்தர்கள் இடையே நெரிசல் குறையும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து, காப்புக்கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து, கோயிலுக்கு முன்புள்ள பூக்குழி குண்டத்தில் தீ மிதித்து அம்மன் அருள் பெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மன் அருள் பெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து பெரியமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வேளைகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெறும்.

புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள தீ குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் .முன்னதாக அதிகாலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.மதியம் 1.35க்கு மணிக்கு ல் பூக்குழித் திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெறும்.

இந்நிகழ்வில், ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பூக்குழி இறங்குவர்.மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்ச்சை செலுத்துவர்.ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தீச்சட்டி ஏந்தியும், உடம்பில் அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்து அங்கப்பிரதட்சணம் செய்தும் நகர்வலம் வருவர்.பூக்குழி நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வர்.

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

gnanapeet award - 2026
  • பி.ஆர்.மகாதேவன்

பிரச்னை, விருதைக் கேட்டு வாங்கிக்கொண்ட வயிரவ முத்து(ராமலிங்கம்) மீது அல்ல; கேட்டவருக்குக் கொடுத்த ஞானபீடம் மீதும் அல்ல. அது சமூகத்தில் இருக்கிறது.

‘ஞான பீட விருது’ தகுதிக்கு மீறிய அல்லது தவறான பெருமையைக் கொண்ட ஒரு விருது. தேசத்தின் விருதுபோல் தோற்றம் காட்டும் தனியார் விருது.

ஒருவகையில் தனக்கான பெருமையை பெருமளவுக்கு நிலைநிறுத்திக்கொண்ட விருதும்கூட. என்றாலும் தேசத்தின் விருதாக ஒரு தனியார் விருதைக் கருதுவது தேசத்துக்கும் நல்லதல்ல; தனியாருக்கும் சரியல்ல.

அரசு தரும் விருதுகளான சாஹித்ய அகாதமி விருது, கலை மாமணி போன்ற விருதுகள்தான் உண்மையில் தேச – பிராந்திய விருதாக, மக்கள் விருதாக மதிக்கப்படவேண்டியது. மக்கள் விருது என்று சொன்னால் எளிய மக்கள் திரள் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்த மக்களுடைய விருதும்கூட. என்றாலும் இலக்கிய நயத்துக்காகத் தரப்படக்கூடிய விருதுகளே அவை.

உன்னத இலக்கியங்கள் மக்கள் கலையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். லெளகிக, யதார்த்த விஷயங்கள் சார்ந்தும் அது இருக்கலாம். ஒட்டு மொத்த மானுட குலம் சார்ந்ததாக, கால, வெளிகளைக் கடந்த அறமும் ஆன்மிகமும் கொண்டதாகவும் அது இருக்கலாம்.

பொதுவாக, ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாக, ஒரு மக்கள் திரளின் ஆன்மாவாக அது திகழும். திகழவேண்டும்.

அந்த அளவுகோலின்படிப் பார்த்தால் இந்த ஞானபீடவிருது தகுதியானவருக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. விருதுக் குழு சரியான செயலைத்தான் செய்திருக்கிறது.

கண்ணாடியில் தெரியும் முகம் அசிங்கமாகத் தெரிகிறதென்றால் கண்ணாடியின் குறையில்லை. சமூகம் மலினப்பட்டுக் கிடக்கிறது. எனவே அதைப் பிரதிபலிக்கும் இந்த விருதும் மலினப்பட்டுவிட்டிருக்கிறது.

ஒருவேளை மிகவும் சிறப்பான வேறொரு படைப்பாளிக்கு இந்த விருது தரப்பட்டிருந்தால் கண்ணாடி, மாய பிம்பத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். சிதிலமடைந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு கொண்டு துலக்கிக் காட்டுவதுபோன்ற மாயத் தோற்றம்.

அப்படி ஒரு படைப்பாளி மிகச் சிறந்த படைப்பை உருவாக்கியிருந்தால் அவர் யதார்த்த உலகையோ வாழும் காலத்தையோ பிரதிபலிக்காமல் மாய உலகை சிருஷ்டித்திருக்கிறார் என்றே ஆகிறது. எனவே அவருக்கு விருது தராததும் சரியே.

ஒரு படைப்பாளி சமகால ஆன்மாவைப் பிரதிபலிக்கவேண்டும். அப்படியான எழுத்தைக் கண்டுபிடித்து விருது தரவேண்டும். அது அற்புதமான படைப்பாகவும் செயலாகவும் இருக்கவேண்டுமென்றால் சமூகம் அப்படி அற்புதமானதாக இருந்தாகவேண்டும்.

சமூகம் அற்பமானதாக இருந்துகொண்டு அற்புதமான கலையை எதிர்பார்க்க முடியாது.

கண்ணாடி பளபளப்பாக இருந்தாலும் முகத்தின் கறை மாறாது. அசிங்கமான முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி மிகவும் சரியான செயலையே செய்கிறது.

இதில் கல்லூரி – கல்விப்புல பேராசிரியர்கள் இதை விமர்சிப்பதெல்லாம் இழவு வீட்டுல கொன்னவனும் கூட உட்கார்ந்து அழுவதைப் போன்றது.

இலக்கியவாதிகளின் அறச்சீற்றங்கள் எல்லாம் வேறு பல விஷயங்களையெல்லாம் மறந்தாலே பொருட்படுத்தத் தகுந்தவையாக ஆகமுடியும்.

படைப்பாளிகளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் தனியாகப் பார்க்கப்படவேண்டியவையே. அவை ஒரு படைப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதிகம் பாதிக்க வேண்டிய ஒன்றே அல்ல.

கலை இலக்கியம் ஒழுக்கசீலர்களால் உருவாக்கப்படுவதல்ல. கலை இலக்கிய பிரபல்யத்தையும் அதிகாரத்தையும் ஒருவன் மலினமாக பயன்படுத்திக் கொண்டால் அது தனி மனித ஒழுங்கீனமாகத் தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம் மட்டுமே.

கலை சார்ந்தும் பெரிதாக எதையும் செய்யாத ஒருவன் லாபியிங் மற்றும் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் நெளிச்சிரிப்புடன் கூழைக் கும்பிடுகளுடன் சஞ்சரித்த வண்ணம் இருந்திருந்தால் இந்த ஒழுங்கீனத்தையும் சார்ஜ் ஷீட்டில் எழுதிச் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி கலைக்கும் தனி மனித மதிப்பீடுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்.

எதையும் பொதுமைப்படுத்துதல் கூடாது.
*

கலை, இலக்கியத்துறையில் மட்டுமல்ல; போலி திராவிட அதிகார மையத்தின் மலினம் அனைத்துத் துறைகளிலும் துலக்கமாகத் தெரியும்படியாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தின் அரசியல் இயக்கங்களையும் தலைவர்களையும்போல் ஆகக் கேடு கெட்ட கும்பல் உலகில் மிகவும் குறைவாகவே இருக்கும். மக்களும் நவீன கால விஷயங்களும் கொண்டுவந்த மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றுக்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே திராவிட இயக்கமும் ஆட்சியும் கட்சியும் செய்துவந்திருக்கிறது.

23-ம் புலிகேசியின் அப்பட்டமான அழுத்தமான வாழும் வரலாற்று உதாரணம் திராவிட இயக்கமே.

அந்த சிக்ஸ் பேக் உடம்புடன் இந்த டெரர் மரு முகத்தை ஒட்டி வருங்கால சந்ததிக்கு காட்டும் சாதனை மட்டுமே நடக்கிறது.

திரையுலகை எடுத்துக்கொண்டால் வதவதவென பன்றியைவிட அதிக குட்டிகளைப் பெற்றுப் போட்டு அதில் சாதனை படைத்துவருகிறது. உலகின் சிறந்த படங்களுக்குத் தரப்படும் விருதுகளைப் புறந்தள்ளிவிடலாம். தமிழ் வாழ்வை தமிழ் சினிமாக்கள் பிரதிபலிப்பதே இல்லை என்ற ஒற்றை காரணமே தமிழ் திரைப்படங்களின் இடத்தைச் சுட்டிக்காட்டிவிடுகின்றன. கற்பனைகளுமே கூட தமிழ்த் தன்மை கொண்டதாகவோ தமிழ் மண் சார்ந்ததாகவோ இல்லை என்பது அதையும் விடப் பெரிய பலவீனம்.

கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் திராவிட அரசுப் பள்ளிகள் உலகின் அடிமட்ட இடத்தைப் பிடிப்பதில் வேக வேகமாக முன்னேறிவருகின்றன. தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளிலும் பல குறைகள் உண்டு. ஆனால் அவை இன்றைய லெளகிகக் கல்வியின் தேவையை பெருமளவுக்குப் பூர்த்திசெய்பவையாகத் திகழ்கின்றன. அந்த ஒரு பெருமைகூட திராவிடக் கல்வித்துறைக்கு இல்லை.

மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் அதே விஷயம்தான். உலகின் முன்னணி மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருக்கிறார்கள் என தமிழர்களும் தமிழகமும் பெருமை கொள்ள முடியும். இவையும் திராவிட அரசுகளை மீறி நடந்த சாதனைகளே இவை.

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

ஆக,
உள்கட்டமைப்பு (மத்திய, அந்நிய நாடுகளின் உதவியால் மட்டுமே), அடிப்படைவசதிகள், குடிமை உரிமைகள் – மதிப்பீடுகள் என பல விஷயங்களில் இந்திய அளவில் தமிழகம் மேம்பட்ட நிலையில் இருப்பதன் முக்கிய காரணம் திராவிட இயக்கத்துக்கு முந்தைய வரலாறு மட்டுமே.

நாம் இன்று லட்சாதிபதியாக இருக்கிறோம். மறுக்கவே முடியாது. முன்பு கோடீஸ்வரராக இருந்தோம். இதையும் மறக்கவே கூடாது.

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்… தமிழக அரசு தரும் கலைமாமணி விருதுகளுக்கு தமிழகத்திலேயே என்ன மரியாதை இருக்கிறது?

இந்த விருதுகளைப் பெற்ற சில நல்ல கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த விருதை இந்தக் கைகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட தவறைத் தவிர அவர்களுடைய கலைத்துறையில் நிச்சயம் திறம்பட வெளிப்பட்டவர்கள் உண்டு. அவர்களுக்கு அந்தக் கலைத் திறமைக்கான மரியாதையை நிச்சயம் தரத்தான் வேண்டும். ஆனால், திராவிட மாடல் அரசின் விருதுக்கு தமிழர்களிடமே மரியாதை இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மையே.

முப்பது நாட்களில் சாஹித்ய அகாதமி விருது பெறுவது எப்படி? என்ற தொழில் நுணுக்கத்தை அதாவது இடது பக்கம் கெந்திக் கெந்தி நடக்கும் சப்பாணி நடையை ‘ராஜ நடை’யாகக் கருதி கற்றுத் தேர்ந்து கரை கண்ட கும்பலின் அடுத்த கட்டப் பாய்ச்சல் இப்போது நடந்தேறியிருக்கிறது. அல்லது அடுத்தகட்ட வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது.

ஒரு தனியார் அமைப்பு இதுவரை காப்பாற்றிய போலிப் பெருமையை இனியும் காப்பாற்றத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. திராவிட இயக்க ஆசுகவி (இவன் ராஜ பரம்பரையின் அந்தப்புரத் தோழனும்கூட) தன் வழக்கமான மலினத்தையே செய்திருக்கிறான்.

சாஹித்ய அகாதமி இந்தச் செயல்களை எப்போதோ செய்ய ஆரம்பித்துவிட்டது. திராவிட அரசின் விருதுகள் என்றைக்குமே இந்த கண்ணியம் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.

பன்றிகள் சாக்கடையில் வாழ்வதில்லை. தாம் வாழும் இடத்தை அவை சாக்கடை ஆக்கிக் கொள்கின்றன.

இதில் பெரிய வேதனை என்னவென்றால் இரண்டுக்கும் நம் வீட்டின் முன் வாசலில் இடம் ஏற்படுத்தித் தந்திருக்கும் நாம் தான் முக்கிய குற்றவாளிகள்.

‘சாக்கடையில் பன்றிகள் குதுகலமாக விளையாடிக் கொண்டிருக்குமே அந்த வீடு’ என்று நம் வீட்டுக்கு அற்புதமான அடையாளத்தை நாமே அரும்பாடுபட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இதில், பன்றிகளையும் சாக்கடையையும் நொந்துகொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

kizhadi kitaithathu enna - 2026
  • திருநின்றவூர் ரவிக்குமார்

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
சென்னை -31
89391 49466

விலை : ₹ 125/-

தொல்லியல் இன்று ஒரு அறிவியலாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் என்ற சொல்லுக்குள் பல துறைகள் இருப்பது போலவே இதிலும் பல துறைகள் , தளங்கள் உள்ளன.

ஒரு தொல்லியலாளரின் வேலை பாதுகாப்பாகத் தோண்டுவது, பொருட்களை மீட்பது, அவற்றை துல்லியமாக குறியிட்டு அறிக்கை அளிப்பது மட்டும்தான், என்கிறார் பி எஸ் ராமன் என்ற தொல்லியல் துறை அதிகாரி.

செராமிக் ஆய்வாளர்கள் களிமண்ணை அடையாளம் காண்பார்கள். கல்வெட்டியியல் அறிஞர்கள் எழுத்துக்களை படிப்பார்கள். கதிரியக்கக் கரிம ஆய்வகங்கள் வயதை கணக்கிடும். அதில் இருக்கும் கலாச்சார தன்மைகளை ஆராய்வார்கள். இதெல்லாம் அடிப்படை ஆய்வுகள். இதைச் செய்பவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகளை கொண்டு முடிவுகளை நோக்கி செல்பவர்கள், வரலாற்றின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்குபவர்கள் வரலாற்று ஆசிரியர்கள். அடிப்படை ஆய்வு தரவுகளையும் அதன் மூலம் கிடைத்த சித்திரத்தையும் கொண்டு வரலாற்றை தீர்மானிக்கும் கொள்கைகளை வகுப்பவர்கள் வரலாற்று கோட்பாட்டாளர்கள்.

ஒவ்வொரு கலாச்சாரமும் தான் மிகவும் பழமையானதாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. இந்த பெருமித கனவுக்கு தொல்லியலில் இடமில்லை. தொல்லியலில் காலக் கணிப்பு அனைத்தும் அறிவியல் அளவீட்டை பொறுத்தவை. கற்பனைக்கோ உற்சாகத்திற்கோ இதில் இடமில்லை . எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல பொறுமையாகவும் இருக்க வேண்டும். மண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பொறுமையாக இருந்துள்ளது. முடிவுகளை தீர்மானிக்க நாம் இன்னும் சில ஆண்டுகள் பொறுமையாக இருப்பதில் தவறில்லை. அவசரப்பட்டு தவறிழைத்தால் திருத்துவது மிகவும் கடினம்.

எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற தொல்லியலாளர்களில் ஒருவரான சர் மோர்டிமர் வீலர் சிந்து சமவெளி அகழ்வாராட்சியில் பணிபுரிந்த போது, அங்குள்ள கோட்டை சுவர்களையும் அம்பு முனைகளையும் கண்டார். உடனடியாக, ‘இங்கே போர் நடந்ததுள்ளது. ஆரியர்கள் ஹரப்பர்களை போரிட்டு விரட்டி இருக்க வேண்டும்’, என்று அறிவித்தார்.

அதற்கு போதிய ஆதாரம் இல்லை. அதொரு சாத்தியக்கூறு மட்டும்தான். ஆனால் அவர் அவசரப்பட்டு அறிவித்ததன் விளைவு பல தசாப்தங்களாக இனவாத கோட்பாட்டிற்கு வழிவகுத்தது . ஆரிய படையெடுப்புக் கோட்பாடு சமூக மற்றும் அரசியல் தளத்தையே மாற்றிவிட்டது.

பிற்கால ஆராய்ச்சிகள் அதுபோன்ற வன்முறை படையெடுப்புகளுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என்றது. காலநிலை மாற்றம், ஆற்றின் திசை மாற்றம், வர்த்தக காரணங்கள் என்று பல்வேறு காரணங்களை சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவிற்கு காரணம் காட்டினார்கள். ஆனால் வீலரின் ஆரம்பகால அவசரம் தேசத்தையே பிளக்கும் அரசியலுக்கு இன்று வரை அடிநாதமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியில் 1980 களில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் இரும்பு பயன்பாட்டை தொல்லியல் துறை கண்டறிந்தது. இது தமிழர்களின் தொழில் துறை திறனை பற்றி கூறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. இது கொடுமணல் கண்டுபிடிப்புகளில் இருந்து மாறுபட்ட, விரிவான சடங்கு மரபுகளை காட்டியது. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு அகழ்வாராய்ச்சிகள் சர்வதேச வர்த்தக இணைப்புகள், உள்நாட்டு வாழ்க்கை முறைக்கு மாறுபட்ட உலகளாவிய கடற்கரை வாழ்க்கையை காட்டிற்று. இதில் எல்லாம் விவாதம் எழுவில்லை. கீழடியில் விவாதம் எழுந்துள்ளது. அது ஏன் ?

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக குடி கொண்டிருக்கும் திராவிட அரசியல் கருத்தியலே அதற்கு காரணம். மதம் சாராத, பிராமண ஆதிக்கம் இல்லாத, தன்னாட்சி பெற்ற ஒரு தமிழ் சமுதாயத்தை நிறுவ வேண்டும் என்பது அதன் ஆசை. தமிழ் சமுதாயம் ஒரு தொன்மையான, பகுத்தறிவு மிக்க, சமத்துவமான, மதசார்பற்ற கடந்த காலத்தை கொண்டதாக இருந்தால் நிகழ்கால பிரிவினை அரசியலுக்கு ஒரு தார்மீக அடித்தளம் கிடைத்துவிடும். அவர்களது கருத்தியலின்படி தமிழ் சமுதாயம் நகர நாகரீகம் கொண்டதாக, எழுத்தறிவு பெற்றதாக, ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும்.

கீழடி இவற்றை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஆரம்பகால அகழ்வாய்வில் செங்கல் கட்டுமானங்கள், மட்பாண்டங்கள், மணிகள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் வெளிவந்தன. உடனே இது கோயில்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, சடங்குகள் இல்லாத ஒரு உலகம். இது மதத்தால் அல்லாமல், பகுத்தறிவாலும் , நகர திட்டமிடலாலும் வரையறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் என்று கருதப்பட்டது. உடனடியாக , கொண்டாட்டத்துடன் பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர் தரப்பு என்று எதுவும் எழவில்லை. கீழடி வேதகாலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ அல்லது சமஸ்கிருத கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றோ எந்த ஒரு பெரிய அரசியல் அல்லது பண்பாட்டுக் குழுவும் கோரவில்லை. எதிர்ப்பு இல்லாத நிலை ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. அதில் திராவிட இயக்கத்தின் விளக்கங்கள் நிலை பெற்றன.

கீழடியில் கோயில்கள் கண்டுபிடிக்கப்படாததால் தமிழ் சமுதாயம் மதச்சார்பற்றது என்று கூறப்பட்டது. இது திராவிட கற்பனைக்கு கச்சிதமாக பொருந்தியது. மதத்திற்கு முன்பே தமிழ் சமுதாயம் நுட்பமாக இருந்திருந்தால் மதமே வெளியில் இருந்து வந்த ஒரு ஊடுருவலாக மாறுகிறது.

ஒரு வடிகால் அமைப்பு பகுத்தறிவு திட்டமிடலுக்கு ஆதாரமாக மாறியது. கீறல்கள் கொண்ட ஒரு பானை பரவலான எழுத்தறிவுக்கு ஆதாரமாக மாறியது. சந்தேகம், கேள்விகள் எல்லாம் ‘தமிழ்த் துரோக’மாக ஆனது. நுட்பமான அறிவியல் விளக்கங்கள் ‘சதி’ என்று நிராகரிக்கப்பட்டன. தொல்லியலுக்கு இது மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது.

கடவுளர்கள், சடங்குகள், பலிகள், சகுனங்கள், ஆவேசம் மற்றும் நிலத்தின் புனிதத் தன்மை ஆகியவற்றை கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் ஒருபோதும் மதச்சார்பற்றதாகவோ நாத்திகமாகவோ இருந்ததில்லை. இந்த குணங்கள் அனைத்தும் நவீன அரசியல் கொள்கைகள். கீழடியில் இவை இருந்ததாக பாசாங்கு செய்வது கடந்த காலத்தை சிதைப்பதற்கு சமமாகும்.

சங்க கால தமிழ் இலக்கியங்களில் நாத்திகம் கொண்ட தமிழ் சமுதாயம் இல்லை. தனிமைப்பட்ட நாகரீகம் இல்லை. வெளியில் இருந்து கலாச்சார திணிப்பு இல்லை. ‘ஆரியர் திராவிடர்’ என்ற பிளவு இல்லை. வேத கடவுளர்களையும் ஏற்றுக் கொண்டதாக, வேள்வி தீ வளர்த்ததாக, மந்திரங்கள் ஓதியதாக, மூதாதையர்களை வழிபட்டதாக, அவர்களுக்கு நினைவு தூண்களை அமைப்பதாக, பலிமண்டபங்கள் கொண்டதாக, யாத்ரிக பாதைகள், புனிதமான நிலப்பரப்பு , அண்டவியல் அறிவு கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்ததென சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை. தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. தமிழக அரசு இதை ஒரு அடையாள போர்க்களம் ஆக்கிவிட்டது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற பல தளங்கள் ஒரு சங்கடமான உண்மையை காட்டுகின்றன. தமிழ் தொல்லியல் ஆய்வில் மண் மவுனமாக இருப்பதால் அது தோல்வி அடையவில்லை. மாறாக மாநில ஆட்சி அதிகாரம் அதன் பேச்சை பாதியிலேயே நிறுத்துகிறது. அதனால்தான் அவை தோல்வி அடைகின்றன.

அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். மண் அறிஞர்களிடம் பேசும். சினிமா நடிகர்களிடம் அல்ல. ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும். உண்மை வெளிப்படும்.

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

election commisioner annouced date of election - 2026

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தேர்தல் நடத்தை விதிகள் என்பது தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த தேர்தல் ஆணையத்தா அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரம், பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், சாதி, மத ரீதியான வெறுப்புப் பிரசாரம், மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுப்பதற்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்: 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொதுமக்களுக்கான மற்றும் அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, 

  • பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியைத் தொடங்கி உள்ளன.
  • கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
  • அரசியல்கட்சிகள்,
  • தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
  • அரசு விழாக்கள் நடத்த கூடாது,  அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
  • ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. 
  • வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம், மொழி அடிப்படையில் ஓட்டுக்களை கேட்கக் கூடாது .
  • வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் செய்யக்கூடாது.
  • பொதுமக்கள்,
  • உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல வேண்டும்.
  • அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.