December 5, 2025, 11:57 AM
26.3 C
Chennai

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் தனியாருக்கு விற்பனை செய்யும் அவலம்!

alankanallur paddy sell to private1 - 2025

அலங்காநல்லூர் மற்றும் குமாரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்:

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2000 திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாம்.

விரைவில், நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார் 2000 ஏக்கர் அளவில் விளைந்து தற்போது அறுவடை ஆகி வருகிறது .

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில நாட்களாக அறுவடை நடை பெறாமல் இருந்த நிலையில்,
தற்போது தீபாவளிக்கு பின்பாக ஆங்காங்கே வெயில் அடிக்கும் சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததாலும், தொடர்ந்து அவ்வப்போது ,
மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெற்களை காப்பாற்ற முடியாமல் தனியாருக்கு விற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிகப்படியான நெல் விளைந்துள்ள சூழ்நிலையில் தனியார் கமிஷன் கடைகளில் விவசாயிகள் அனுப்பும் நெல்லுக்கு மிக குறைவான விலையே கேட்கின்றனர். ஏற்கனவே
மிக அதிக அளவு செலவு செய்து விளைவித்த நெல்லை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் , விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

ஆகையால், அலங்காநல்லூர் பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் மேலும் நெல்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, அலங்காநல்லூர் குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெற்ப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில், தற்போது கொள்முதல் நிலை ம் திறக்காததால், நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தனியாருக்கு விற்கவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது. வேதனையை ஏற்படுத்துவதாக இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories