
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை வரும் வி.கே. சசிகலாவை வரவேற்று மதுரை அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் இடம் படி பழனிசாமிக்கு எதிராக சசிகலா ஆதரவாளர்களால் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் .
2026- இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் . திக்கின்றி தவிக்கும் அதிமுக தொண்டர்களின் “ஒளிவிளக்கே”
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் 118 வது பிறந்த தின விழாவும் 63 வது குருபூஜை விழாவும் நடைபெறுகிறது.
இதில், அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா பசும்பொனில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக , மதுரை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன .
தற்போது, அதிமுக எடப்பாடியின் கட்டுப்பாடில் உள்ள நிலையில் வி கே சசிகலா ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டரால் மேலும் சர்ச்சை எழும்பியுள்ளது .
மதுரை சேர்ந்த உமாபதி என்ற அதிமுக பிரமுகர் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
மதுரை விமான நிலையம் பெருங்குடி மண்டல நகர் சிந்தாமணி சந்திப்பு சாலை விரகனூர் சாலை சிவகங்கை சந்திப்பு சாலைபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் !!
2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் !!. சமீப காலமாக அதிமுகவில் அமைதியாக இருந்த நிலையில் சசிகலா ஆதரவுகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .





