சபரிமலை சிறப்பு ரயில்கள்; நாந்தெட் – கொல்லத்துக்கு ராஜபாளையம் வழியாக!

railway news - 2026
#image_title

மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் முதல் ஜனவரி வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மகரஜோதி விழாவுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சபரிமலை சீசனை முன்னிஷட்டு கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தென்காசி வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு அறிவித்துள்ளது.இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி நடந்து வருகிறது.

அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் – கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கமாக கொல்லம் – H.S. நாந்தேட் இடையே வருகின்ற 22, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரு மார்க்கமாகவும் 9 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கேரளா ஆந்திரா மஹாராஷ்டிரா வழியாக ஆன்மீக பெருநகரங்களை இணைத்து HSநான்டெட் மஹாராஷ்டிரா-கொல்லம்(கேரளா) சபரிமலை சிறப்பு இரயில்(07111/07112) அறிவித்துள்ளது சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வைகுண்ட ஏகாதேசி, திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் மற்றும் தேர்வு விடுமுறை பயணங்களுக்கு இந்த வண்டியைப் பயன்படுத்தலாம்.

புனலூர் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை இரயில் வழித்தடத்தில் முதன்முறையாக மஹாராஷ்டிரா, திருப்பதி மற்றும் தெலங்கானா உட்புற மாநகரங்களை இணைத்து இயக்கப்படுகிறது.

நான்டெட்-கொல்லம்(07111):
இயக்க தேதி
20,27.11.25,
04,11,18,25.12.25 &
01,08,15.01.26 – 9 நடைகள்

நான்டெட் புறப்பாடு: 10.00
காச்சிகுடா(ஹைதெராபாத்) புறப்பாடு: 16.00
திருப்பதி புறப்பாடு: 08.35
திருவண்ணாமலைபுறப்பாடு: 12.42
கொல்லம் வருகை: 03.00

கொல்லம்-நான்டெட்(07112)இயக்க தேதி
22,29.11.25,
06,13,20,27.12.25 &
03,10,17.01.26 – 9 நடைகள்

கொல்லம் புறப்பாடு: 05.40,
திருவண்ணாமலை வருகை: 22.20
திருப்பதி வருகை: 02.40*
காச்சிகுடா(ஹைதெராபாத்) வருகை: 14.30
நான்டெட் வருகை: 21.30

வகுப்புகள்:
ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏ/சி, General ஆன்மீக நகரங்கள் இணைப்பாக
புனலூர்(சபரிமலை) திருவண்ணாமலை, திருப்பதி, கர்னூல்(ஸ்ரீசைலம் மற்றும் அஹோபிலம் மேடம்), நான்டெட்(ஹஸுர் சாஹிப் குருத்வாரா)

முழு வழித்தடம்: கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, ராஸம்பேட்டா, கடப்பா, ஏர்றகுண்ட்ல, தாடிபத்ரி, குத்தி, தோன், கர்னூல், கடவால், வன்பற்றி ரோடு, மெஹபூப் நகர், ஜாட்செர்லா, ஷாத் நகர், காச்சிகுடா(ஹைதராபாத்), போலாரம், மெட்ச்சல், கம்மாரெட்டி, நிஜாமாபாத், பாசர், தர்மாபாத், முட்கெட், HS நான்டெட். ஆகும்.

இந்த ரயிலுக்கு நல்ல முன்பதிவு இருந்தால் மேலும் பெங்களூர் சென்னையில் இருந்து சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories