December 5, 2025, 5:04 AM
24.5 C
Chennai

கோவாவில் நடந்த அயர்ன்மேன் போட்டியில் பங்கேற்று அண்ணாமலை அசத்தல்; பிரதமர் மோடி பாராட்டு!

annamalai in goa iron man event - 2025

கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று, இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளார். 

கோவாவில் அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு.சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது இந்தப் போட்டி.

இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். இதில் அவர், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் 55:20 நிமிடங்களில் கடந்தார். தொடர்ந்து 90 கி.மீ., தொலைவு சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களை எடுத்துக் கொண்டு, இலக்கை எட்டினார் அண்ணாமலை.

இந்தப் போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலை தனது சமூகத் தளப் பக்கங்களிலும் இவற்றைக் குறிப்பிட்டு, உடல் திறன் குறித்த தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். 

பாஜக எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ளார். இருவரும் இணைந்து இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளனர். அவர்கள் பங்கேற்ற படங்களையும் சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஃபிட் இண்டியா குறித்த தனது எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது கட்சியின் இளைய உறுப்பினர்கள் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இதில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். 

பிரதமரின் பதிவினைப் பகிர்ந்து அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவிக்கும் வ்கையில்,  என் அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐயா, #FitIndia இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. 

உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதத்திற்கான பகிரப்பட்ட நோக்கத்தில் அனைத்து தரப்பு குடிமக்களையும் ஒன்றிணைக்கிறது. உங்கள் நீடித்த உத்வேகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஐயா, இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்கு எங்கள் சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். – என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories