புரோட்டாவை பங்கு பிரிப்பதில் தகராறு; இளைஞர் தற்கொலை..!

Thukku 5 1 - 2026

புரோட்ட பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54). இவருக்கு இரண்டு மகன்கள்.

சதீஷ் (24), லிங்கராஜா (22). இவர்கள் அனைவரும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வருகின்றனா்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக சந்திரசேகர் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள கடையில் இருந்து புரோட்டா வாங்கி வந்தார்.

அப்போது, புரோட்டாவை பங்கு வைத்து சாப்பிடுவதில் சதீசுக்கும், லிங்கராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவா் மாறி, மாறி அடிக்க துவங்கினா்.

இதில் சதீஷ் அணிந்திருந்த தங்கச்சங்கிலி அறுந்து விழுந்தது.

இதனால் மனமுடைந்த சதீஷ் கோபித்து கொண்டு வீட்டில் உள்ள ஒரு வேறு ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டு பூட்டி கொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்

அப்போது, அங்கு சதீஷ் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பதறியபடி

அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

dead bady - 2026

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சதீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புரோட்டா பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories