களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.

Published:

களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்….!

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத் மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் அதாரிட்டி மேற்பார்வையில் நடந்து வரும் இந்த மண் பிள்ளையார் விநியோகத்திற்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. ஹெச்எம்டிஎ கமிஷனர் அரவிந்த் குமார் இந்த வேலைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஹை கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் ராகவேந்திரசிங் களிமண் கணபதி சிலைகளை கோர்ட் சிப்பந்திகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் விநியோகித்தார்.

மேலும் தெலுங்காணா மாநில பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு டிஎஸ்பிசிபி இயற்கை நிறங்கள் பூசிய களிமண் பிள்ளையார் சிலைகளை கிரேடர் ஹைதராபாத் முனிசிபல் கார்பொரேஷன் ஜிஹெச்எம்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 80,000 பிள்ளையார் சிலைகளை 31 மாவட்டங்களில் போர்டின் ரீஜனல் அலுவலகங்கள் மூலம் மாவட்ட அதிகாரிகளை கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக இன்று அளித்துள்ளது. அதோடுகூட டிஎஸ்பிசிபி பல ஆயிரக்கணக்கான களிமண் கணபதி சிலைகளை ஹைதராபாத் நகரின் பல இடங்களுக்கும் விநியோகத்திற்கு அனுப்பியுள்ளது.

பொதுமக்களிடம் களிமண் சிலைகள் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது பற்றிய விழிப்பு உணர்வு வரவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை செயர்க்கை வண்ணங்களோடு தயாரிப்பதால் ஏற்படும் நீர்நிலை சீரழிவு பற்றியும் பொது மக்களிடம் விளக்கப்படுகிறது. பல தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இதில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img