மோடி மீது பாம்புகளை ஊர்ந்துபோக விட்டு… கொன்னு… : பாகிஸ்தான் பாப் பாடகி மிரட்டல்!

Published:

pakistan pop singer rabi pirzada - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவை ரத்து செய்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது பாம்புகளை அவிழ்த்து விடுவதாக பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்சாடா மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைக் கண்டு பலரும் சிரிக்கிறார்கள்!

50 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், பாம்புகள் மற்றும் ஒரு முதலையுடன் சூழ்ந்திருக்கும் பிர்சாடா, தன்னை ஒரு காஷ்மீரப் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசும் போது, “மோடி, நீங்கள் காஷ்மீர் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்போது பாருங்கள், நான் உங்களுக்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று! எனவே நரகத்தில் இறக்கத் தயாராகுங்கள். சரிதானா? என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள். ” என்று கூறிய படி, பாம்புகளை கைகளில் எடுத்துக் காட்டுகிறார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

தொடர்ந்து, கையில் பாம்பு ஒன்றைப் பிடித்தபடி, பிர்சாதா காஷ்மீருக்காக பாடுகிறார்…

இந்த வீடியோ ரபி பிஸாடாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. அவரது வீடியோவைக் கண்டுவிட்டு, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் உள்ள டிவிட்டர் வாசிகள், ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகவாசிகள், இந்தப் பாடகியின் அச்சுறுத்தலைப் பார்த்து சிரிக்கின்றனர். “[உங்களுக்கு] சில தீவிர மன நல சிகிச்சை தேவைப் படுகிறது. உடனே மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கவும்! நாங்கள் உங்களுக்கு சிறந்த உதவியை வழங்குவோம்” என்று ஒரு இந்திய டிவிட்டர் பயனர் பதில் எழுதியுள்ளார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
https://twitter.com/AsliMunnaBhai/status/1169182596988686336

370 மற்றும் 35ஏ … நீங்கள் எல்லோரும் மெண்டல் ஆகிவிட்டீர்களா? முதலில் அணு ஆயுதம் என்று அச்சுறுத்தினீர்கள்.. இப்போது பாம்புகள்?!

80 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இப்போது உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img