பாடகி சித்ராவின் மகள் இறப்பில் விலகாத மர்மங்கள்; மனம் திறந்த சித்ரா..!

Chithra 1 - 2026

தனது மகளின் மர்மமான மரணம் குறித்து பல விஷயங்களை போட்டுடைத்த பிரபல பாடகி சித்ரா

தமிழகம் மற்றும் கேரளா மற்றும் தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக புகழ் பெற்ற பாடகியாக இருந்து வருபவர் சித்ரா,

இவருக்கு பல ஆண்டுகள் காத்திருந்து பெற்றெடுத்த தமது மகளின் மர்ம மரணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார் .

Chithra 3 - 2026

புட்டர்பர்த்தியில் உள்ள சத்தியசாயிபாபாவிடம் தமது பிள்ளையில்லாத வாழ்க்கை தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டபோது, அடுத்தமுறை இங்கு வரும்போது குழந்தையுடன் வருவாய் என்ற ஆசியை அவர் வழங்கியுள்ளார்.

பின்னர் அது நிகழ்ந்தது எனவும் சித்ரா கூறியுள்ளார் .

தான் பாடிய பாடல்களில் மஞ்சாடி என்ற தனியார் பாடல் தொகுப்பு தமது மகளுக்கு கொள்ளை பிரியம் என சொல்லும் சித்ரா, அந்த பாடல்களை அவர் வீடியோவாக பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்

Chithra 2 - 2026

. சம்பவத்தன்று துபாயில் உள்ள ஓட்டலில், தமது மகள் மஞ்சாடி பாடல்களின் காணொளி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுகொண்டே தாம் குளிக்க சென்றதாக சொல்லும் சித்ரா அந்த சமயத்தில் சிறுமி நந்தனா ஏன் நீச்சல் குளம் குறித்து சிந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பும் பாடகி சித்ரா, தமது மகள் தம்முடன் எப்போதும் ஒரு பொம்மை வைத்திருப்பதாகவும், அன்று அந்த பொம்மை அவரிடம் இல்லை எனவும்,எப்போதும் காலணியுடன் இருக்கும் தனது மகள் ஏன் அன்று அதை மறுத்தார் என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது என்றார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

அது மட்டுமின்றி அந்த குடியிருப்பின் கதவுகளை திறந்து சிறுமி நந்தனாவால் எப்படி வெளியேற முடிந்தது? அந்த நீச்சல் குளத்தின் இரும்பு கதவை சிறுமியால் எப்படி திறக்க முடிந்தது உள்ளிட்ட பல கேட்விகளுக்கு இன்னமும் தமக்கு விடை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்

Chithra 4 - 2026

அவர். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, நீச்சல் குளத்தின் அருகில் வரை, தனது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும், போலீசார் வந்து அதை பதிவு செய்ததாகவும், இல்லையென்றால் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

அப்போது போலீசாரும் சிறப்பு அதிகாரிகளும் அந்த கால் அடையாளங்களை காணொளியாக பதிவு செய்த பின்னர் அந்த அடையாளங்கள் மாயமானதாகவும் சித்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories