pinarayvijayan e1565532055750 - 2026

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதாவை நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை காட்டிலும் பன்மடங்கு அபராதத் தொகையை அதிகரித்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

bike 2 - 2026

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது முதல், நாடு முழுவதும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவதை அம்மாநில ஊடகங்கள் பெரியளவில் செய்தி வெளியிட்டன.

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.

பொதுமக்களிடம் போக்குவரத்துக் காவலர்கள் கெடுபிடி காட்டாமல் சந்தேகத்திற்குரிய நபர்களை மட்டும் பிடித்து விசாரிக்குமாறு பினராயி அறிவுறுத்தியுள்ளார். உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதை அறிந்த பினராயி, புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கேரளாவில் நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories