pinarayvijayan e1565532055750 - 2026

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதாவை நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை காட்டிலும் பன்மடங்கு அபராதத் தொகையை அதிகரித்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

bike 2 - 2026

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது முதல், நாடு முழுவதும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவதை அம்மாநில ஊடகங்கள் பெரியளவில் செய்தி வெளியிட்டன.

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.

பொதுமக்களிடம் போக்குவரத்துக் காவலர்கள் கெடுபிடி காட்டாமல் சந்தேகத்திற்குரிய நபர்களை மட்டும் பிடித்து விசாரிக்குமாறு பினராயி அறிவுறுத்தியுள்ளார். உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதை அறிந்த பினராயி, புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கேரளாவில் நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories