ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி.

I A S I P S - 2026

.

தங்குமிடம், உணவு ஊக்கத்தொகையுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமி பயிற்சி இயக்குனர் மூக்கையா வெளியிட்ட அறிவிப்பு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலப்படிப்பியல் துறையினரால் தமிழக அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.8.2020ல் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தெரிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் 100 பேர் தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இவர்களுக்கான பயிற்சி டிசம்பர் 2ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடத்தப்படும்.

இந்த காலங்களில் இவர்களுக்கு பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும்.

வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத்தொகை ரூ.2000 வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வலைதளமான www.mkuniversity.orgலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் படிப்பு, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கலை மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் கவர்களின் மேல் upsc-prelims2020க்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு,” பயிற்சி இயக்குனர், ஒருங்கிணைப்பாளர், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 625021″

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories