6 இந்திய ரயில் நிலையங்களைக் குறி வைத்துள்ள ஜெய்ஷ் இ முகமது! பாதுகாப்பு உஷார்!

bomb threat - 2026

அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் 6 இந்திய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் இந்துக் கோவில்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அனுப்பிய அச்சுறுத்தல் கடிதம் ரோடக் காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடிதத்தில் பல பிரபலமான ரயில் நிலையங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. போபால், மும்பை, ஜெய்ப்பூர், கோட்டா, சென்னை, ஹிசார் மற்றும் ரோஹ்தக் என ரயில் நிலையங்களைக் குறி வைத்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமது அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் ஆறு மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களையும் கோயில்களையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக அச்சுறுத்தி, ரோடக் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து முக்கியமான ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

chennai central railway station - 2026

இந்தக் கடிதம் ரோடக் சந்திப்பு ரயில் நிலைய கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிலைய மேலாளரால் சாதாரண தபால் மூலம் பெறப்பட்டதாகவும் ஹரியானா ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் மசூத் அகமது என்ற நபர் கடிதத்தில் அனுப்புநராகக் குறிப்பிடப்படுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரேவரி ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மற்ற முக்கிய இடங்கள் மற்றும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது,

இந்தியாவுடன் மரபு சார்ந்த போர் நடந்தால் பாகிஸ்தான் தோற்றுவிடும்… என்று இம்ரான் பேசியிருப்பதால், இந்தியாவுடனான மறைமுக பயங்கரவாதத் தாக்குதலையே பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அதற்கு ஏற்ப, பாகிஸ்தான் அச்சுறுத்தல் வெளியிட்டு வரும் இந்த நேரத்தில், அதிகாரிகள் இந்த குண்டு வைப்பு அச்சுறுத்தலை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கிழிந்த நோட்புக் தாளில் எழுதப்பட்டதாகத் தோன்றும் கடிதத்தின் நம்பகத்தன்மையை காவல்துறை இன்னும் உறுதி செய்ய வில்லை.

370 வது பிரிவை ரத்து செய்த பின்னர், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர்களின் நம்பகமான வட்டாரங்கள் தங்களுக்கு அறிவித்ததாக உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
கடற்படைத் தலைவர் கடந்த மாதம் நீருக்கடியில் தாக்குதல் நடத்துவதாக எச்சரித்திருந்தபோது, ​​குஜராத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள சர் க்ரீக்கில் கேட்பாரற்ற நிலையில் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தெற்கு பட்குதி ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே.செய்னி பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அறிவித்தார்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

குஜராத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று சில உளவு அறிக்கைகள் குறிப்பதாக தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories