மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட பேராசிரியரை விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதியா்..!

bady 1 - 2026

சென்னையில் கோயில் பிரசாதம் எனக் கூறி தந்த விஷப்பொடியைச் சாப்பிட்ட பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை.!

சென்னையை அடுத்துள்ள காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (35). இவரது மனைவி சரண்யா (30). பேராசிரியான கார்த்தி, வேலை செய்து வந்த தனியார் கல்லூரியில் எடுக்கப்பட்ட ஆள் குறைப்பு நடவடிக்கையின் காரணமாக சமீபத்தில் வேலையை இழந்துள்ளார்.

இதனையடுத்து கார்த்தி, எம்.கே.பி. நகர், முல்லை நகரைச் சேர்ந்த வேலாயுதம் (42) என்பவரிடம், அரசுக் கல்லூரியில் வேலைக்கு சேர்வதற்கு ரூ.3 லட்சம் கொடுத்தாக கூறப்படுகிறது. .

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலாயுதம் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கார்த்தி, தான் வேலைக்காக கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடுமாறு கேட்டு வேலாயுதத்தின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். .

கார்த்தியின் இந்த நடவடிக்கை வேலாயுதத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்தியும், அவரது மனைவி சரண்யாவும் பணம் கேட்டு வேலாயுதம் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை அன்று சென்றுள்ளனா்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

அங்கு வீட்டில் இருந்த வேலாயுதம் தான் சாய்பாபா கோயிலுக்குச் சென்று வந்ததாகக் கூறி, ஒரு பொடியை பிரசாதமாக இருவரிடமும் கொடுத்து அதை சாப்பிடும்படி கூறி உள்ளார்.

அந்தப் பொடியை சாப்பிட்ட கார்த்தி சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்து பதறிய கார்திக் மனைவி சரண்யா, அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கார்த்தியை கொண்டு சேர்த்தார்.

மருத்துவமனையில் கார்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டு சரண்யா அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்துள்ளார்.

அதேவேளையில் சரண்யாவும், அந்த பொடியை சிறிது சாப்பிட்டதால், அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வேலாயுதம் பிரசாதம் என கொடுத்த பொடியில் விஷம் கலந்துள்ளது.

இதனை கார்த்திக் சாப்பிட்டதால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார், வேலாயுதம், அவரது மனைவி ஆகியோரை தேடி வருகின்றனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories