December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

கூடுதல் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு! அமைச்சர் விஜயபாஸ்கர்!

bus - 2025

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங் களில் 30 சிறப்பு கவுன்ட்டர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏற்கெனவே, திட்டமிட்டபடி, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, அடுத்த 3 நாட்களுக்கு 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.

bus 1 - 2025

பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 300 கி.மீ .தூரத்துக்கும் மேல் பயணம் செய்யவுள்ள பயணிகள் அரசு போக்குவரத்துக் கழக இணையதளங்களான (www.tnstc.in) மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.paytm.com ஆகியவற்றின் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் கோயம்பேடு – 26, தாம்பரம் சானடோரியம் – 2, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் பி.சந்திர மோகன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 286 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.6.81 கோடி வசூலாகியுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு என தனித் தனியாக சிறப்பு செயலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் வெளியூரில் இருந்து சென்னைக்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மொத்தம் 8 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறப்பு பேருந்துகளை 6 இடங்களில் பிரித்து இயக்கி வருகிறோம். இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர். நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் காவலர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை – திருச்சி இடையே நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனிப்பாதை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 18004256151 என்ற எண்ணுக்கு பயணிகள் புகார்அளிக்கலாம். அந்தப் புகார் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் மக்கள் திரும்பும் வகையில் 22,164 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories