February 11, 2025, 9:48 AM
27.5 C
Chennai

கூடுதல் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு! அமைச்சர் விஜயபாஸ்கர்!

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங் களில் 30 சிறப்பு கவுன்ட்டர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏற்கெனவே, திட்டமிட்டபடி, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, அடுத்த 3 நாட்களுக்கு 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.

பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 300 கி.மீ .தூரத்துக்கும் மேல் பயணம் செய்யவுள்ள பயணிகள் அரசு போக்குவரத்துக் கழக இணையதளங்களான (www.tnstc.in) மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.paytm.com ஆகியவற்றின் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் கோயம்பேடு – 26, தாம்பரம் சானடோரியம் – 2, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் பி.சந்திர மோகன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 286 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.6.81 கோடி வசூலாகியுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு என தனித் தனியாக சிறப்பு செயலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் வெளியூரில் இருந்து சென்னைக்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மொத்தம் 8 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறப்பு பேருந்துகளை 6 இடங்களில் பிரித்து இயக்கி வருகிறோம். இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர். நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் காவலர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை – திருச்சி இடையே நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனிப்பாதை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 18004256151 என்ற எண்ணுக்கு பயணிகள் புகார்அளிக்கலாம். அந்தப் புகார் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் மக்கள் திரும்பும் வகையில் 22,164 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories