குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

Karur Dmk senthilbalaji jothimani photo - 2026

செந்தில் பாலாஜி ஓர் அரசியல் வியாபாரி என்று கொந்தளிக்கின்றனர் குளித்தலை மக்கள். அதாவது கருணாநிதியின் முதல் தொகுதியான குளித்தலையைச் சேர்ந்த தி.மு.க வினர்.

அண்மையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் பரபரப்பானது. இந்த ஒருத்தராவது உண்மையைச் சொல்லுறாரே… என்று அங்கலாய்த்தபடி பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டனர். அதில், செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., ஆகியோரை முன்னால் வைத்துக் கொண்டே, நாங்கள் எல்லாம் என்ன கொடிகட்டவும் கோஷம் போடவும்தானா என்று வறுத்து எடுக்கிறார் அந்த திமுக.,காரர்.

இந்த வீடியோவில், செந்தில் பாலாஜியையும், ஜோதிமணியையும் வைத்தே கலாய்க்கிறார். இந்த வீடியோவில் உள்ளபடிதான், இப்போது திமுக.,வினரின் மனப்போக்கு இங்கே உள்ளது என்கிறார்கள்.

அந்த வீடியோ பதிவு…

இன்னும் கரூர் மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இவை… அவர் வாங்கிப் போட்ட இடத்துக்காகத்தான் கரூர் பேருந்து நிலையமே! தவிர 50 ஆண்டுகால போராட்டத்தில் உள்ள குளித்தலை பேருந்து நிலையம் எப்போது என்று சொன்னாரா ?

குளித்தலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி 1957ஆம் ஆண்டு போட்டியிட்டு முதன்முதலில் ஜெயித்து சட்டசபை சென்றார் என்ற நன்றி கூட செந்தில் பாலாஜிக்கு இல்லை… குளித்தலையைப் புறக்கணிக்கிறார்கள் என்கின்றனர்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

குளித்தலை தொகுதிக்கு தி.மு.க எம்.எல்.ஏ இருந்தும் பயனில்லை! நகராட்சிக்கு என்று சொந்தமான பேருந்து நிலையம் இல்லை, இடியும் நிலையில் பெரியார் பாலம், எரியாத சிக்னல்கள், வழிகாட்டிகள் இல்லாத அவலநிலையுடன், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு இதுவரை போடப்படவில்லை என கோரிக்கை நீண்டு கொண்டே செல்கின்றது

தமிழகத்தில் முதன்முறையாக தி.மு.க தலைவர் கருணாநிதி 1957 ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். தற்போது ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சி இருந்தாலும், இன்றும் தி.மு.க வினை சார்ந்த ராமர் தான் எம்.எல்.ஏ வாக இருக்கின்றார்.

kulithalai2 - 2026

இந்த குளித்தலை சட்டமன்ற தொகுதியும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதுதான். இதில், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி.மு.க கூட்டணியினை சார்ந்த பாரிவேந்தர் தான் தற்போதைய எம்.பி.,!

இருந்தாலும், குளித்தலை தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் எம்.எல்.ஏ நிதியிலும், எம்.பி நிதியிலும் ஒதுக்கி செய்து கொடுக்கவில்லை. தற்போதைய தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை! ஆனால் கரூர் தொகுதிக்கு சில தினங்களுக்கு முன்னர் பேருந்து நிலையம் வேண்டுமென்று ஒரு விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருந்தார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இந்நிலையில் இளைஞர்களே, தங்களது ஊரான குளித்தலையின் தலையாய பிரச்னைகளைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இன்றியமையாத தேவைகளான பேருந்து நிலையம், புறவழிச் சாலைகளிலிருந்து பிரியும் சர்வீஸ் ரோடு எனப்படும் அணுகு சாலை, உழவர் சந்தை வழியாக செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது, சிக்னல்கள் எரிவதில்லை, மேலும், குளித்தலைக்கு மணப்பாறையிலிருந்தும், திருச்சியிலிருந்தும், கரூரிலிருந்தும், முசிறியிலிருந்தும் என்று நான்கு புறங்களில் வரும் வாகனங்களுக்கு எந்த ஊர் குளித்தலை, எந்த ஊருக்கு இந்த சாலை செல்கின்றது என்ற பெயர்பலகைகள் கூட வைக்கவில்லை.

stalin karunanidhi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று, குளித்தலையிலிருந்து முசிறிக்கு கடக்கும் காவிரி ஆற்றின் மேலே உள்ள உயர்மட்ட பாலம். 1971 ஆம் ஆண்டு அதே கருணாநிதி முதல்வரான நிலையில், அதே கருணாநிதி ஆட்சியிலேயே பாலமும் திறக்கப்பட்டது. ஆனால், இன்று ஆற்றில் மணல் எடுத்ததை அடுத்து அரிப்பு நிலையில் பாலம் எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.

பாலத்தில் உள்ள சாலையின் மேற்பரப்பில் சேதமடைந்தும், அடிப்பகுதி சேதமடைந்தும் உள்ளது. இந்நிலையில், ஊருக்குள் பேருந்துகள் இரவு நேரத்திலும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

குளித்தலை தொகுதியை மாநில அரசு தனி கவனம் செலுத்துவதோடு, தற்போதைய தி.மு.க வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்றபடி தந்தைக்காகவும், தந்தையின் முதல் தொகுதிக்காகவும் ஏதாவது செய்வாரா ? என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்.

இத்தகைய நிலையில் குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories