நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை: சிவன்

Published:

isro sivan - 2026

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கூறினார் இஸ்ரோ தலைவர் சிவன்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ சிவன், சந்திரயான்-3 திட்டம் நிச்சயம் உண்டு; செயல்படுத்தப்படும் முறை குறித்து பேசிவருகிறோம்; இன்னும் முடிவாகவில்லை.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது… என்று கூறினார்.

மேலும், அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img