December 5, 2025, 9:47 PM
26.6 C
Chennai

ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

JALLIKATTU 1 - 2025

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

அதில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது.

மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும் அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

JALLIKATTU 4 - 2025

அலங்காநல்லூரில் நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இப்போதே தயார் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.

விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்குகளையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

JALLIKATTU 3 - 2025

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படும்.

இதனால் இந்த மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் அதிக ஆர்வம் காட்டுவர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை ஆயத்தப்படுத்தும் பயிற்சிகள் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

JALLIKATTU 5 - 2025

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்தயேக செல்லிடப்பேசி செயலியில் காளைகளின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் காளைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளின உரிமையாளர்கள் பெயர் ஊர் விவரம், காளை எந்த இனத்தைச் சேர்ந்தது. அதன் வயது எந்தெந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படும் போன்ற விவரங்களை கால்நடை மருத்துவர்கள் சேகரித்து அந்த செல்லிடப்பேசி செயலி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories