ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

JALLIKATTU 1 - 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

அதில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது.

மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும் அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

JALLIKATTU 4 - 2026

அலங்காநல்லூரில் நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இப்போதே தயார் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.

விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்குகளையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
JALLIKATTU 3 - 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படும்.

இதனால் இந்த மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் அதிக ஆர்வம் காட்டுவர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை ஆயத்தப்படுத்தும் பயிற்சிகள் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

JALLIKATTU 5 - 2026

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்தயேக செல்லிடப்பேசி செயலியில் காளைகளின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் காளைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளின உரிமையாளர்கள் பெயர் ஊர் விவரம், காளை எந்த இனத்தைச் சேர்ந்தது. அதன் வயது எந்தெந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படும் போன்ற விவரங்களை கால்நடை மருத்துவர்கள் சேகரித்து அந்த செல்லிடப்பேசி செயலி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories