70 வயதில் பஞ்சாயத்து தலைவர்! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் சாதனை!

karur news panchayat leader - 2026

70 வயதில் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

கரூர் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்வு மிகவும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, தமிழக அளவில் அந்த கிராமத்தினை முன்மாதிரியான கிராமமாக மாற்ற முன்வருவேன் என்று கூறினார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இவரிடம் அப்பகுதியில் படித்த மாணவர்கள் இவருக்காக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இவரை 206 வாக்குகள் வித்யாசத்தில் 1174 வாக்குகள் பெற்று வெற்றி பெற வைத்தனர்.

இந்நிலையில், இவரது பதவி ஏற்பு விழா சுண்டுகுளிப்பட்டி பகுதியில் உள்ள வரவனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முருங்கை கன்றுகளையும் மரக்கன்றுகளையும் அனைவருக்கும் கொடுத்து வித்யாசமான முறையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.

தேர்தல் அதிகாரியும், வேளாண் துறை அதிகாரியுமான ராஜேஸ்குமார் இவருக்கு பதவி ஏற்பு நிகழ்த்தி வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் ஆர்.வீராசாமி, அப்பகுதி பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்து தலைவருமான எம்.கந்தசாமியை வாழ்த்தினர்!

வரும் காலத்தில் தமிழக அளவில் வரவனை கிராமத்தினை முன்மாதிரி கிராமமாக்குவது தான் தனது லட்சியம் என்ற அவர், ஆங்காங்கே வசிக்கும் கிராம மக்கள் வீடுகள் தோறும், முருங்கை மரங்களும், பழ மரங்களும் நட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் விவசாயியாக மாற்றுவது தான் லட்சியம் என்றார்.

ஆங்காங்கே வெடி வைத்தும், பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், கிடா விருந்து வைத்தும் பதவி ஏற்கும் பஞ்சாயத்து தலைவர்கள் மத்தியில், மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் கொடுத்து ஒவ்வொரு வீட்டிலும் விவசாய புரட்சிக்கு வித்திட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories