December 6, 2025, 6:52 AM
23.8 C
Chennai

‘அமைதியாக இரு, கடிக்காதே’ என கன்னியாஸ்திரிக்கு கிஸ் அளித்த போப்!

pope - 2025

கன்னியாஸ்திரி ஒருவருக்கு போப் பிரான்சிஸ் முத்தமிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி, வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக வந்த போப், பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் நிலைகுலைந்து போன போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை உதறிவிட்டார். இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவியது.

pope 1 - 2025

இதையடுத்து, போப் பிரான்சிஸ் சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும், ஒரு மோசமான உதாரணத்தை நான் காண்பித்துவிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வாடிகன் நகரில் உள்ள அதே புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ்ஸிடம், பார்வையாளர் வரிசையில் நின்றுகொண்டிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் எனக்கு முத்தம் தருவீர்களா என கேட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத போப், நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்கக் கூடாது என கிண்டலாக கூறியவர் கன்னியாஸ்திரியின் வலது கன்னத்தில் முத்தமிட்டார்.

இந்த காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும் கூறி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போப் பிரான்சிஸ், தற்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு முத்தமிட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories