தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் சிற்பக் கலையின் தொன்மையையும், நேர்த்தியையும் உலகுக்குப் பறை சாற்றும், உலக அதிசயமாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு எனவும் தெரிவித்துள்ளார். பெருமை கொள்வோம் எனவும் இராஜ ராஜ சோழனின் சாதனை சொல்வது லேசா எனவும் ட்விட் செய்துள்ளார் நடிகர் விவேக்.
மேலும் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானது குறித்து, குழந்தைகளை சிறிது காலத்திற்கு குழந்தைகளாக இருக்க விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் சிற்பக் கலையின் தொன்மையையும், நேர்த்தியையும் உலகுக்குப் பறை சாற்றும், உலக அதிசயமாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு! பெருமை கொள்வோம் ! ராச ராசா! உன் சாதனைகள் சொல்வதென்ன லேசா?
— Vivekh actor (@Actor_Vivek) February 5, 2020