பாகுபலியாக தன்னை ரசித்த டிரம்ப்! டிவிட்டரில் போட்டு சாத்துகிறார்..!

Published:

trump bahubali style - 2026

பாகுபலியாக சாகசங்களில் தனது முகத்தை ஒட்ட வைத்து மார்பிங் செய்யப் பட்ட வீடியோக்களை டிவிட்டர் பக்கத்தில் பார்வர்ட் செய்து, தான் ரசித்ததை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

தன்னை பற்றி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் ரிட்வீட் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதனை வரவேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். நாளை மதியம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்துக்கு வரும் அவர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து உரை நிகழ்த்துகிறார். பின்னர், சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிடும் அவர் பின்னர் தில்லிக்கு வருகிறார்.

தில்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் டிரம்ப், அமெரிக்கதூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் நாடு திரும்புகிறார்.

இதனிடையே, டிரம்ப் வருகையை முன்னிட்டு, பாகுபலி படத்தை மார்பிங் செய்து டிரம்ப் தோன்றுவது போல் சில வீடியோக்களை உருவாக்கி, இந்திய அமெரிக்க நட்புறவு பலப்படட்டும் என்று கருத்துப் பதிவிட்டு, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இந்த வீடியோக்களை வெகுவாக ரசித்துள்ளார் டிரம்ப். இந்த வீடியோக்களில், டிரம்ப், அவரது மனைவி, மகள், மகன் என முகங்களை இணைத்து, வீரசாகசம் புரியும் நபராக டிரம்பை சித்திரித்துள்ளனர். இதனை வெகுவாக ரசித்து ரிட்வீட் செய்துள்ளார் டிரம்ப்.

மேலும், இந்தியாவில் உள்ள எனது நண்பர்களை காண ஆவலாக உள்ளேன் என அதில் கருத்தும் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1231345462793441280
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img