December 6, 2025, 1:36 PM
29 C
Chennai

பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி இல்ல.. மாணவியின் பேச்சு வைரல் ஆச்சு! இப்போ பஸ் வசதி வந்தாச்சு!

venkatesan - 2025

கிராம சபை கூட்டம் என்பது வலுப்பெற்ற ஒரு அமைப்பு.. கடந்த சில காலங்களில் தொய்வாக இருந்த கிராமசபை கூட்டம் இப்போது வீறு கொண்டு எழுந்து வருகிறது. சாங்கியமாக நடத்தப்பட்ட கூட்டம் இன்று கட்டாயமாக நடத்தப்பட்டு, மக்களிடம் நெருங்கி வருகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஒரு தீர்மானம் போட்டுவிட்டால் அதை எந்த சட்டத்தினாலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு ஸ்ட்டிராங் ஆனது. மக்கள் இதன் மகத்துவத்தையும் புரிந்து கொண்டு வருவதால், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை தட்டிக்கழிக்காமல் செய்ய முடிகிறது!

இந்நிலையில், மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் ஒரு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும்தான் இருக்கு. ஆனால் உயர்நிலை பள்ளி இல்லை. 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்கூலுக்கு போய்தான் மாணவர்கள் படிக்க வேண்டி இருக்கு. அதுவும் நடந்துதான் போகிறோம். பஸ் வசதி இல்லை.

venkatesh1 - 2025

ஊருக்கு 2 முறைதான் பஸ் வருது. ஆனால் ஸ்கூல் டைமுக்கு வர்றது இல்லை. 7 கிமீ நடந்து போறதால, நேரத்துக்கும் ஸ்கூலுக்கு போக முடியறது இல்லை. எங்க ஊர் அக்காங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பஸ் வசதி செய்து தந்தால் நல்லா இருக்கும். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா அக்காங்க 7 கிமீ தூரம் நடந்தே போய் வர்றாங்க. திரும்பி வர்ற வழியில் பிராந்தி கடை இருக்கு. அதனாலதான் பஸ் வசதி வேணும்” என்றார்.

கிராம சபை கூட்டமே சஹானாவை ஆச்சரியமாக பார்த்தது.. ஏனென்றால், பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பெரியவர்களே வாய் திறந்து கோரிக்கை வைக்க தயங்கும்போது, குட்டிப்பெண். அதுவும் எல்லோர் முன்னிலையிலும் பேசியது பாராட்டை பெற்றது. இந்த பேச்சு சோஷியல் மீடியாவிலும் வைரலானது. இந்த வீடியோவை மதுரை எம்பி சு.வெங்கடேசனின் பார்வைக்கும் போனது.

sahana - 2025

உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், வெங்கடேசன் பேசினார். சஹானாவின் கோரிக்கை குறித்து விவாதித்தார். பிறகென்ன சஹானா கேட்டபடி பஸ் வசதி வரப்போவது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை சொல்வதற்காக வெங்கடேசன் நேரடியாக சஹானாவை தேடி ஸ்கூலுக்கு வந்துவிட்டார். மீனாட்சிபுரத்தில் தான் சஹானா படிக்கும் பள்ளி உள்ளது. கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தவர் அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார்.

“என்ன படிக்கிறீங்க எல்லாரும். நல்லா படிக்கணும். நீங்க நிறைய கேள்விகளை கேட்கணும். படிக்கக்கூடிய வசதிகளை தயங்காமல் எதுவானாலும் கேட்கணும். சொன்னாதானே யாராவது செய்ய முன்வருவாங்க.. அதனால் தைரியமா சஹானா மாதிரி கேள்வி கேட்க முன் வரணும், சரியா” என்றவர். சஹானாவை அழைத்து பேசினார். “நல்லா பேசினே..ம்மா” என்று பாராட்டி ஒரு பரிசையும் தந்தார். அந்த பரிசை பெறும்போது சஹானா கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தபடியே இருந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories