December 6, 2025, 3:14 PM
29.4 C
Chennai

தீவிரமடைகிறது கொரோனோ வைரஸ் தாக்கம்: சீனாவில் 170 பேர் மரணம்; 7,700 பேருக்கு பாதிப்பு!

coronavirus2 - 2025

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸால் 7,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் மிகப் பெரும் நகரங்களில் பரவியது. மேலும், அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது.

corono - 2025

சீனாவின் உயிரி தொழில்நுட்ப ஆயுதச் சோதனை முயற்சியால் இந்த வைரஸ் உருவாக்கப் பட்டு, முறிவு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில், அது வெளியே பரவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக சீனா தெரிவித்தது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 7,700ஐக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வைரஸ் பரவி வரும் வேகம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிறார்கள்.

coronavirus 759 4 - 2025

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவைக் கடந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. பாகிஸ்தானுக்கும் அதன் பாதிப்பு பரவி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் படித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு தென்பட்டுள்ளது. வூஹானில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு சென்று திரும்பிய சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்தியாவில் ஏற்கெனவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் எட்டு பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

coronavirus - 2025

இதனிடையே, பிரிட்டன் சௌத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையின் அடிப்படையில் ஆராய்ந்தபோது கொரோனா வைரஸால் 30 நாடுகள் அதிகம் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாகக் கூறப் படுகிறது.

இந்த 30 நாடுகள் பட்டியலில், தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான், ஹாங்காங்கும், அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 10வது இடத்திலும் பிரிட்டன் 17வது இடத்திலும் இந்தியா 23வது இடத்திலும் உள்ளன.

கொரோனோ வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் முக்கிய நகரங்கள் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. ஹாங்காங் தைவானின் தைபே, சிட்னி, நியூயார்க். லண்டன் என நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

coronavirus travel restrictions - 2025

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்.2ம் தேதி திருமண பதிவுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சீனர்கள் சாதகமான நாள் எனக் கருதும் பிப்.2ம் தேதி திருமணம் செய்வதற்கு பெருமளவில் மக்கள் திருமண பதிவுமையங்களை மொய்ப்பார்கள். அவர்களை வைத்து ஏராளமானவர்கள் கூடுவார்கள். இதனால் வைரஸ் தொற்று மேலும் பரவக் கூடும் என்பதால், இந்த வருடம் இந்தத் திருமணப் பதிவினையே ரத்து செய்துள்ளது பீஜிங் நகர் நிர்வாகம்.

மேலும், வருடந்தோறும் நடைபெறும் உள்நாட்டு கால்பந்து போட்டுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது சீனா.

அரசுத் துறைகள் கடந்து தனியார் மால்களுக்கும் இது போன்ற முடிவுகளை எடுத்து வருகின்றன. சீனாவின் மிகப் பெரும் ஃபர்னிசர் கடைகளான ஐகேஇஏ தனது 30 கடைகளை வைரஸ் அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories