December 6, 2025, 9:11 AM
26.8 C
Chennai

தில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு!

courtallam petition corona - 2025

தில்லியில் நடைபெற்ற தப்ளீக் இ ஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 7 பேர், குற்றாலத்தில் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று (கோவிட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் தில்லியியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் சுமாா் 8,000 போ் பங்கேற்றனா். வெளிநாட்டினரும் பல மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அவா்களில் சுமாா் 30 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 3-க்கும் அதிகமான நபா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்களைக் கண்டறிந்து அவா்களைப் பரிசோதிக்கும் பணியில் மாநில அரசுகள் தீவிரமுடன் செயல்பட்டன.

இந்தச் சூழலில் இந்த மத போதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலை தமிழக உளவுத்துறை தயாரித்து வருகிறது. மேலும், தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டுமென மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்களை அடையாளம் கண்டு சிகிச்சைக்கு சேர்த்து வருகின்றனர்.

தில்லியியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு திருவாரூர் திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் சளி, உமிழ்நீா், ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்திலிருந்து முடிவு உறுதி செய்யப்பட்டால்தான் கொரோனா தொற்று உறுதி என அறிவிக்க முடியும் என திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 26 பேரில் 13 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போல் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனோ தொற்று அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப் பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு, அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.

இதனிடையே நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, வல்லம் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதனிடையே குற்றாலம் பகுதிகளில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ள இடத்தை அடுத்து உள்ளவர்கள், அவர்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மனு கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories