“சார் துப்புறானுங்க…” டிவிட்டரில் புகார்! அதிரடி ஆக்சனில் மும்பை போலீஸ்!

Published:

spitting road - 2026

அஜித் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த நபர்கள் எங்கள் பகுதியில் துப்புகிறார்கள் என்று புகார் அளித்த சில நொடிகளில் மும்பை போலீஸார் உடனே அந்தப் பகுதிக்கு போலீஸாரை அனுப்பி வைக்கிறோம் என்று பதில் அளித்து, அதிரடி ஆக்சனில் இறங்கினர்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் பரவி வருகிறது. ஒருவரின் சளி, இருமல், எச்சில் இதன் மூலம் பரவும் வைரஸ் என்பதால், சுற்றுப் புற சுகாதாரத்துக்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சாலை ஓரங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து, மக்கள் புழங்கும் இடங்களை நோய்த் தொற்று இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால், பொதுமக்களில் சிலரோ சுகாதார எண்ணம் சிறிதுமின்றி, சாலையோரத்தில் துப்புதல், வேண்டுமென்றே எச்சிலை அங்கங்கே தடவிச் செல்லுதல் என்று, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் சந்தன்சர் விரார் கிழக்கு பகுதியில் தண்டுல் பசாரில் இளைஞர்கள் சிலர் புகையிலையை மென்று சாலை ஓரத்தில் துப்புகிறார்கள், அந்த மக்களிடம் ஒழுங்கு இல்லை, தயவுசெய்து போலீஸாரை அனுப்பி உதவுங்கள் என்று ஒருவர் வீடியோ பதிவு செய்து, மும்பை போலீசின் டிவிட்டர் பதிவில் புகாராக பதிவு செய்தார்.

இதை பார்த்த போலீசார், உங்களது புகாரை பல்ஹார் போலீஸுக்கு பார்வர்ட் செய்திருக்கிறோம். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அவர்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்களையும் டிவிட்டரிலேயே அளித்துள்ளனர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

அண்மைக் காலங்களில் போலீஸார் பகுதி வாரியாக டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அதில் எவராவது பொது நலன் விரும்பி புகார் பதிவு செய்தால் கூட, (புகாருக்கு உள்ளாகும் நபர்கள் ‘மர்ம’ நபர்களாக இல்லாத பட்சத்தில்) அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது டிஜிட்டல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img