ரோட்ல வண்டில போறீங்களா.?! உங்க வேலை அதோ கதிதான்!

Published:

road - 2026

சாலை மீது வண்டிகளில் செல்கிறீர்களா…? உங்கள் வேலை அதோ கதிதான்…!

வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறினால் யாருமே கண்டுகொள்வதில்லை. வண்டியில் அமர்ந்து சாலை மீது அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்தாலும் கூட சாலை மீது அலைவதை மட்டும் யாரும் விடுவதில்லை.

இதனால் காரணமின்றி சாலை மீது வந்தால் இனி அபராதம், அடி கட்டாயம் விழும் என்கின்றனர் ஹைதராபாத் போலீசார். பைக் சீஸ் செய்கிறார்கள். அந்த வாகனங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

லாக்டௌன் நேரத்தில் நீங்கள் சாலையில் திரிகிறீர்களா? என்னை யாரும் பார்க்கவில்லை என்று அலட்சியமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இனி ஜாக்கிரதையாக இருங்கள். கவனம்…!

ஒரு லட்சம் கேமராக்கள் உங்கள் வாகனத்தை ஸ்கேன் செய்கின்றன என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பியதிலிருந்து திரும்ப வீட்டுக்கு வரும் வரை நீங்கள் எங்கு எங்கு அலைந்தீர்கள் என்று கேமராக்கள் உங்களை பதிவு செய்கின்றன. அதுமட்டுமின்றி டே டு டே உங்கள் வண்டியின் டிராக் ரெக்கார்டு பதிவு செய்து உங்கள் வண்டி நம்பர் மீது லிஸ்டை தயார் செய்கிறார்கள் போலீசார். பிறகு அனைவருக்கும் கஷ்டங்கள் தான்… இதிலிருந்து யாரும் மீறமுடியாது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சைபராபாத் கமிஷனரேட் எல்லையிலேயே ஒரு லட்சத்து 15 ஆயிரம் கேமராக்கள் சாலையில் அலையும் ஒவ்வொரு வாகனத்தையும் டிராக் செய்கின்றன என்கிறனர் ஹைதராபாத் போலீசார்.

லாக்டௌன் வயொலேஷன் டிராகிங் சிஸ்டம் மூலம் ஒவ்வொரு வாகனத்திற்கும் மிக அதிக அளவில் செலான்கள் வரப்போகின்றன என்கின்றனர் போலீசார். இனி யாரும் என்னைப் பார்க்கவில்லை என்று சாலை மீது அலைந்தால் அடி பலமாக விழும் என்கிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img