லட்சக் கணக்கான உயிர்களைக் காக்க… இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு!

modi 1 - 2026

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட உலக நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது, லட்சக் கணக்கான உயிர்களைக் காக்க இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி!

உலக நாடுகள் தங்களுக்குத் தேவை என கேட்டுக் கொண்ட ஹைட்ராக்ஸிக்ளோரோக்யுன் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு என்றும், அதை விட்டுவிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க, பிரேசில் அதிபர்கள் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹைட்ராக்சிகுளோரோக்யுன் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

கடந்த வாரம் சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலில் அமெரிக்காவின் பாதிப்புகளைச் சொல்லி, ஹைசிக்யு மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, உடனே மருந்தினை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவருக்கு பதிலளித்த மோடி, இந்தியா தங்களால் ஆன அனைத்து விதங்களிலும் இந்த விவகாரத்தில் உதவும் என்றார்.

இந்நிலையில், இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்து ஆலோசித்த மோடி, பின்னர் இந்த மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை, மனிதாபிமான அடிப்படையில் நீக்குவதாகக் கூறியது. தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில், காலத்தின் அவசரம் கருதி, முதற் கட்டமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்து அங்குச் சென்றடைந்துள்ளது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

உற்பத்தி, இருப்பு, எதிர்காலத் தேவை ஆகியவை குறித்து மருந்து நிறுவனத் தலைவர்களுடன் பேசி அறிந்த பின்னரே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு எனவும், அதை விட்டுவிட முடியாது எனவும் மோடி தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு கூறிய போது, உயிர்களையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதே தாரக மந்திரம் என்றது.

இந்நிலையில், வாகன வசதி பெற்ற அரசு அதிகாரிகள், பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிய நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த சில நிபந்தனைகளுடன் வா்த்தக, வேளாண் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அறுவடைக் காலம் நெருங்கி வருவதால் நிபந்தனைகளுடன் வேளாண் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும், கொரோனா பாதிக்காத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories