மதுரையில் தள்ளு முள்ளு இல்லாத ‘தள்ளாட்ட’த்தில் மது விற்பனை!

madurai tasmac
madurai tasmac

மதுரை: மதுரை நகரில் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தள்ளு, முள்ளு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.

இருப்பினும், கொரோனாவுக்கு பயந்து கூட்டம் குறைந்து காணப்பட்டது. தமிழக அரசு சென்னை தவிர பிற மாவட்டங்களில் அரசு மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மக்கள் அச்ச உணர்வுடனே டாஸ்மாக் கடைகளுக்கு வந்திருந்ததைக் காண முடிந்தது.

மக்கள் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் நெருக்கமாக அமைக்கப் பட்டிருந்தன. மேலும் பாதுகாப்புக்கு போலீஸார் கடை முன்பாக குவிக்கப் பட்டிருந்தனர்.

madurai tasmac1

இருந்த போதிலும் இன்று அரசு மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். பல கடைகளில் கூட்டமானது குறைந்து காணப்பட்டது. மேலும், போலீஸார் கடையின் வாசலிலே, மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே, மதுபிரியர்களை கடைக்குள் கண்டிப்பாக அனுமதித்தனர்.

கடை முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. வரிசையாக வரும்படி ஓலி பெருக்கி மூலம் போலீஸார் எச்சரித்தனர்.

madurai tasmac2

இதேபோல் மதுரை கரும்பாலை, கே.கே. நகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், நோய் தாக்கம் காரணமாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்திருக்கலாம் என்றார், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரவி.

ஆதார் அட்டையின் பயன்பாடு மது விற்பனை வரை வந்துவிட்டதாகவும், வங்கி முதல் டாஸ்மாக் வரை ஆதார் தான் என்று கூறினர் சமூக ஆர்வலர்கள்!

  • செய்தியாளர், ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories