மதுரையில் தள்ளு முள்ளு இல்லாத ‘தள்ளாட்ட’த்தில் மது விற்பனை!

madurai tasmac
madurai tasmac

மதுரை: மதுரை நகரில் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தள்ளு, முள்ளு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.

இருப்பினும், கொரோனாவுக்கு பயந்து கூட்டம் குறைந்து காணப்பட்டது. தமிழக அரசு சென்னை தவிர பிற மாவட்டங்களில் அரசு மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மக்கள் அச்ச உணர்வுடனே டாஸ்மாக் கடைகளுக்கு வந்திருந்ததைக் காண முடிந்தது.

மக்கள் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் நெருக்கமாக அமைக்கப் பட்டிருந்தன. மேலும் பாதுகாப்புக்கு போலீஸார் கடை முன்பாக குவிக்கப் பட்டிருந்தனர்.

madurai tasmac1

இருந்த போதிலும் இன்று அரசு மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். பல கடைகளில் கூட்டமானது குறைந்து காணப்பட்டது. மேலும், போலீஸார் கடையின் வாசலிலே, மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே, மதுபிரியர்களை கடைக்குள் கண்டிப்பாக அனுமதித்தனர்.

கடை முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. வரிசையாக வரும்படி ஓலி பெருக்கி மூலம் போலீஸார் எச்சரித்தனர்.

madurai tasmac2

இதேபோல் மதுரை கரும்பாலை, கே.கே. நகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், நோய் தாக்கம் காரணமாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்திருக்கலாம் என்றார், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரவி.

ஆதார் அட்டையின் பயன்பாடு மது விற்பனை வரை வந்துவிட்டதாகவும், வங்கி முதல் டாஸ்மாக் வரை ஆதார் தான் என்று கூறினர் சமூக ஆர்வலர்கள்!

  • செய்தியாளர், ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories