December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

மதுரையில் தள்ளு முள்ளு இல்லாத ‘தள்ளாட்ட’த்தில் மது விற்பனை!

madurai tasmac
madurai tasmac

மதுரை: மதுரை நகரில் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தள்ளு, முள்ளு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.

இருப்பினும், கொரோனாவுக்கு பயந்து கூட்டம் குறைந்து காணப்பட்டது. தமிழக அரசு சென்னை தவிர பிற மாவட்டங்களில் அரசு மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மக்கள் அச்ச உணர்வுடனே டாஸ்மாக் கடைகளுக்கு வந்திருந்ததைக் காண முடிந்தது.

மக்கள் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் நெருக்கமாக அமைக்கப் பட்டிருந்தன. மேலும் பாதுகாப்புக்கு போலீஸார் கடை முன்பாக குவிக்கப் பட்டிருந்தனர்.

madurai tasmac1

இருந்த போதிலும் இன்று அரசு மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். பல கடைகளில் கூட்டமானது குறைந்து காணப்பட்டது. மேலும், போலீஸார் கடையின் வாசலிலே, மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே, மதுபிரியர்களை கடைக்குள் கண்டிப்பாக அனுமதித்தனர்.

கடை முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. வரிசையாக வரும்படி ஓலி பெருக்கி மூலம் போலீஸார் எச்சரித்தனர்.

madurai tasmac2

இதேபோல் மதுரை கரும்பாலை, கே.கே. நகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், நோய் தாக்கம் காரணமாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்திருக்கலாம் என்றார், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரவி.

ஆதார் அட்டையின் பயன்பாடு மது விற்பனை வரை வந்துவிட்டதாகவும், வங்கி முதல் டாஸ்மாக் வரை ஆதார் தான் என்று கூறினர் சமூக ஆர்வலர்கள்!

  • செய்தியாளர், ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories