April 28, 2025, 3:41 PM
32.9 C
Chennai

சிங்கப்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

singappattijameen
singappattijameen

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியின் ஜமீந்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி, தமது 89 ஆம் வயதில் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

மாஞ்சோலை உட்பட பல இடங்களுக்கு அதிபதியான #சிங்கம்பட்டிஜமீன், தென்னாட்டு புலி ராஜா #முருகதாஸ்தீர்த்தபதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு என்று தனித்துவ அடையாளமும் வரலாறும் உள்ளது. சுதந்திர இந்தியாவில் முடி சூட்டப்பட்ட ஒரே மாமன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் சிங்கம்பட்டி ஜமீன்.

singappattijameen
singappattijameen

நெல்லைச் சீமை என்று அழைக்கப் படுவதற்கும், சிங்கம்பட்டி சீமை என்று சொல்லப் படுவதற்கும் பெயர்ப் பொருத்தமாகத் திகழ்ந்தவர் சீமை ராஜா முருகதாஸ் தீர்த்தபதியார். தமிழின் மீதான பற்றும் தேசபக்தியும் , தெய்வ பக்தியும் பேச்சாற்றலும் பலராலும் இன்றளவும் நினைவு கூரப் படுகிறது.

தமிழின் மீது தணியாத தாகம் கொண்டவர். சிறந்த கவிஞர். தத்துவ தரிசனங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல்வேறு அறநெறிக் கருத்துகளைத் தொகுத்து அவ்வப்போது சிறு சிறு வெளியீடுகளாகவும் பதிப்பித்து அளிப்பார்.

murugadas theerthapathi
murugadas theerthapathi

இங்கிலாந்தில் கல்வி பயின்ற அனுபவங்களைக் கொண்டவர். முக்கியமாக, பசும்பொன் தேவர் திருமகனாருடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவர். மிகச் சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தவர். நெல்லைச் சீமையின் நல்ல ஆத்மா இன்று இறைநிழலில் ஐக்கியமாகியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!
murugadass theerthapathi
murugadass theerthapathi

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி இயற்கை எய்தினார்

உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டிலேயே உயிரிழந்தார்.
ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories