வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்பதற்காக கருவேல மரங்களை அகற்றும் திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்
வேலூர் மக்களின் நீராதாரமாக விளங்குகிறது பாலாறு. கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து இந்தஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனுடன் 6 துணை ஆறுகளும் சேர்கின்றன. இந்த பாலாறால் வேலூர் பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
வேலூரை கடந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சுமார் 222 கிலோ மீட்டர் வரை இந்த பாலாறு செல்கிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 62.5 கிலோ மீட்டர் ஓடுகிறது. இந்த பாலாறால் மோர்தானாஅணை, பசளப்பள்ளிஅணை, ராஜாதோப்புஅணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்புகின்றன.
வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்
பட்டு உள்ளிட்ட ஆறு தாலுகாக்கள் மற்றும் 61 கிராமங்களில் இந்த பாலாறு ஓடுகிறது. கர்நாடகாவில் கட்டப் பட்டுள்ள தடுப்பணைகளால் பாலாற்றில் தண்ணீர்வரத்து குறைந்துள்ளது. அதிக மழை பெய்த காலத்தில் மட்டுமே இதில் தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருவேலமரம் இந்நிலையில் பாலாற்றை பாதுகாப்போம் என்ற திட்டத்தை வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாலாற்றை
ஒட்டியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 300 ஜே.சி. பி.க்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒட்டியுள்ள கால்வாய்க
ளும் தூர்வாரப்பட்டு, சுமார்ஒரு லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்குள் இந்த பணிகளைமுடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வெட்டப்படும் கருவேல மரங்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் வைத்து மொத்தமாக எரிக்கப்படும். இந்தத்
திட்டத்தால் மணல் கொள்ளை தடுக்கப்படும். நீர் வளம் அதிகரிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்
- சுரேஷ்குமார்