February 22, 2026, 8:15 PM
27.3 C
Chennai

மனநலம் குன்றிய மூதாட்டி.. உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

mayiladurai w s i
mayiladurai w s i

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் தெரிவித்தபோது…

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனலட்சுமி என்ற 65 வயதுடைய மூதாட்டி சாலையில் சுற்றித் திரிந்தார். அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து போது பனையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலட்சுமி என்பது தெரிய வந்தது.

அந்த மூதாட்டியை பிள்ளைகள் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதும் தெரியவந்தது . நீடூரில் மேற்படி தனலட்சுமியின் சகோதரி மற்றும் பிள்ளைகளை தொடர்புகொண்டு மூதாட்டி தனலட்சுமியை நல்லமுறையில் மூதாட்டியின் உறவினர்களிடம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி ஒப்படைத்தார்.

இந்த மனிதநேய செயலில் தனலட்சுமி மற்றும் அஸ்வினி ஆகிய இரு பெண் காவலர்களும் ஈடுபட்டனர். சாலையில் சுற்றித் திரிந்த மூதாட்டியை பத்திரமாக உறவினர்களிடம் ஒப்படைத்த பெண் காவல் ஆய்வாளர் மற்றும் இரு பெண் காவலர்களையும் மயிலாடுதுறை பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

பெண் காவலர்களின் இந்த மனிதநேய செயலை மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனதார பாராட்டுகிறது. மேலும் காவலர்களை நல்ல முறையில் வழி காட்டிக் கொண்டிருக்க கூடிய தஞ்சை சரக காவல் துணை தலைவர் டாக்டர் லோகநாதன், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோருக்கும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories