April 21, 2025, 4:28 PM
34.3 C
Chennai

சிலையை மணந்த மணமகன்! ஏன் தெரியுமா?

kalyanam

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு மரத்தாலான உருவபொம்மையுடன் வினோத திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் குர்பூர் கிராமத்திலுள்ள பைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ மோகன்பால். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு 9 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் 8வது மகனான பஞ்ச் ராஜ்-ஐ தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையிலேயே அவர் தனது கடைசி மகனுக்கு மரத்தாலான பொம்மையுடன் வினோத திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

kalyanam

இந்த திருமணத்தில் மரத்தாலான உருவ பொம்மைக்கு மணப்பெண் போன்ற அலங்காரம் செய்யப்பட்டு, அதனருகில் மணமகன் அமர்ந்து சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பஞ்ச் ராஜ்-க்கு சற்று மனநிலை சரியில்லாததால், இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த மோகன்பால், வித்யாசமான முறையை பின்பற்றினார். அதாவது, சிலையுடன் மகனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

kalyanam

இது குறித்து மோகன்பால் கூறியதாவது: நான் இறப்பதற்கு முன்பு எனது 9 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எட்டு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடைசி மகனிடம் எந்த சொத்தும் இல்லை. மேலும் அவன் அறிவாளியாகவும் இல்லாமல் இருந்தான்.

kalyanam

எனது மகன் சற்று மனநிலை பாதித்ததால் அவனுடைய சின்ன சின்ன வேலைகளை செய்வதற்கு கூட பிற நபர்களின் உதவித் தேவைப்படுகிறது. அதனால் அவனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்வை நான் சீர்குலைக்க விரும்பவில்லை.

ALSO READ:  IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ஆனால் அதேசமயம் எனது குடும்பத்தில் இவன் மட்டும் திருமணமாகாதவனாக இருப்பதையும் நான் விரும்பவில்லை. பூசாரிகளின் அறிவுரைப்படி அவனுக்கு ஒரு சிலையுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.

kalyanam

முதலில் மறுத்த பஞ்ச்ராஜ், பின்னர் எனது மகிழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டான். மற்ற குழந்தைகளுக்கு எப்படி திருமணம் நடந்ததோ, அதே போல பஞ்ச் ராஜ்-க்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். எங்களது மதச் சடங்குகளின் படி பஞ்ச் ராஜ்ஜை வீட்டிலிருந்து அழைத்து, மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். திருமணத்தில் இசைக்கப்பட்ட பாடல்களுக்கு நடனமும் ஆடினான். மந்திரங்கள் ஓதப்பட்டு ராஜ்-க்கும் சிலைக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories